12/01/2019

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...


நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

இந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது...


இசைக்கருவி மிருதங்கம்...


மிருதங்கம் (தண்ணுமை) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும்.

மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும்.

மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது.

இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன.

வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கிட்டாங் கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது.

அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதர்க்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது. இதில் முத்திரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களின் பகுதியில் குச்சிப்புல்லைத் தட்டி சுருதியைச் சேர்த்துக் கொள்வர்.

தம்புராவைப் போல் இதுவும் பாடுவோருக்குச் சிறந்த துணையாக அமைகின்றது. தம்புராவானது பாடுவோரின் சுருதி சுத்தத்தையும், சுரத்தானங்களுக்கு அப்பாலாய் விளங்கும் அந்தர அலகு நுட்பத்தின் அறிவையும் விளக்க, மிருதங்கமானது பாட்டின் லய சுத்தத்தையும் லய வின்னியாச நுட்பங்களையும் எடுத்து விளக்க உதவுகின்றது. பாடிவரும் பாட்டுக்களின் தாள அமைப்புகளை லயவிரிவுகள் எடுத்து உணர்த்தி வரும். எடுத்துக் கொண்ட கால பிரமாணம் தவறி வேகமாய் விடாமலும், விளம்பமாய் விடாமலும் தடுத்து வருவது இம்மிருதங்கத்தின் முக்கிய பயன் எனலாம்...

ஒரு மனிதனின் அனைத்து தகவல்களும் மறைமுகமாக சேமிக்கும் கூகுள்...


எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?


எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு...

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்..

1. தியானம்...

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை...

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்...

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்...

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்...

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்...

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்...

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்...

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்...

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.

உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.

உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.

உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.

உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...

திருடர் கூட்டம்...


மிரட்டி பணிய வைத்து குடும்பத்தை சீரழித்த அதிகாரிகள்.. மனைவியின் தாலியுடன் காவலர்...


விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜா. இவரது மனைவி சவிதா. இவரும் அதே பகுதியில் ஆயுதப்படை பெண் காவலராக உள்ளார்.

இந்நிலையில் பதவியை பயன்படுத்தி தனது மனைவி சவிதாவுடன் அதிகாரிகள் தகாத உறவில் ஈடுபட்டதாக ராஜ் குற்றம்சாட்டுகிறார்.

 முன்னாள் ஆயுதப்படை ஆய்வாளர் செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், மேலும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கண்ட நபர்களால் என்னுடைய வாழ்க்கையும் தன் குழந்தையின் வாழ்க்கையும் சீரழித்துவிட்டனர் என மனைவியின் தாலியை கையில் வைத்து கொண்டு ராஜா வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காவலர் ராஜா கடலூர் மாவட்டத்துக்கும் இவரது மனைவி சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்...

பாமக அன்புமணியால் வந்த மாற்றம் இது..


நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
ரசிகர்களுக்கு...

விசுவாசம் படத்தில் வரும் காட்சி இது..

சூரியனில் என்ன நடக்கிறது ?


மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 98.8 சதம் நிறை சூரியனின் நிறை தான்.

இந்த அபரிமிதமான நிறை காரணமாக ஏற்படும் ஈர்ப்பின் விளைவாக சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் ஹீலியம் அணுக்கள் ஒன்றை ஒன்று இனைந்து புது புது கனமான தனிமங்களை உண்டாக்கி கொண்டு அணு கரு இணைவு காரணமாக ஏற்படும் பெரும் வெப்பத்தை வெளியிடுகின்றன.

சூரியன் ஒரு மெகா சைஸ் ஹைட்ரஜன் பாம்...

காவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா? போராட்டம் வெடிக்கும் - பாமக அறிக்கை...


தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும். அதன்படி மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஒரு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் எந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் என்பது இப்போது வரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் மீத்தேன் மற்றும் பாறை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிப்பது காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.

தமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த   தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது. அடுத்தக்கட்டமாக, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், கடலில் 170 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான இரு உரிமங்கள் வேதாந்தா குழுமத்திற்கும் வழங்கப் பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களைச் சீர்குலைக்கும் மத்திய அரசின் சதி இத்துடன் ஓயவில்லை. இந்த ஆண்டு இறுதியில் காவிரி டெல்டாவில் 1863.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இரு உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 5000  சதுர கிலோ மீட்டருக்கும் அதிகப் பரப்பளவில்  ஆறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அப்பகுதியில் நடைபெற்று வரும் விவசாயத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.

காவிரி பாசன மாவட்டங்கள் முப்போகம் விளையும் பூமியாகும். அங்கு வாழும் ஒன்றரைக் கோடிக்கும் கூடுதலான மக்களில் பெரும்பான்மையினருக்கு விவசாயம் தான் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு, உழவை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

அதனால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த வகையான  ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதற்கு மாறாக, மீண்டும், மீண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தையும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள இரு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை பாமக நடத்தும்...

1970ல் காளைகளுடன் நம் தமிழர்கள்...


தலைக்கு டை அடித்து கொண்டு மாறுவேடத்தில் சபரி மலைக்கு சென்ற இளம்பெண்.. வீடியோ வெளியிட்டு பரபரப்பு...


கடந்த ஜனவரி 4-ம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். 

இந்தநிலையில் மஞ்சு என்ற இளம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். வயது 36 ஆகிறது. இவர் அய்யப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்ததாக அம்மாநிலத்தின் ஒரு தனியார் டிவிக்கு பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார்.

சாமி தரிசனம் செய்தபோது எடுத்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை கலர் டை வெள்ளை கலர் டை அந்த வீடியோவில் மஞ்சு வயதானவர் போல காணப்படுகிறார்.

தலைமுடிக்கு வெள்ளை கலர் டை அடித்து, மாறு வேடம் அணிந்து, வயசான தோற்றத்துடன் சாமி கும்பிட்டு வந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மஞ்சு பேசும்போது சொன்னதாவது: மஞ்சு செய்த காரியம் மஞ்சு செய்த காரியம் "கடந்த 8-ம் தேதி சபரிலைக்கு சென்றேன். வயதான தோற்றத்துடன், கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு இருந்தேன். கோயிலுக்குள் செல்ல போலீசாரின் அனுமதி எதையும் பெறவில்லை.

போலீசாரின் பாதுகாப்பின்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். எனக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார். மகர விளக்குக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மஞ்சு செய்த காரியம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகிஓடும் இரத்த அழுத்தம்., நீரிளிவுநோய்...


'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது...இரத்த அழுத்தம், நீரிளிவுநோய், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம்தானே.

இது யப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளையில்  நான்கு குவளைகள் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்.

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே...

பாஜக மோடியும் மக்கள் வரிப் பணமும்...


திராவிடர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக்கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?

தெலுங்கு பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள்?

உளவியல் உண்மைகள்...


கர்மா என்றால் என்ன..?


கர்மா என்றால் செயல் என்று பொருள்...

நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும்.

நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, அதாவது கர்மாவின் கணக்கு.

இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.

நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.

ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.

நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.

நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…

எதிர்பார்ப்புகள் அற்ற உதவி...

கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை.

யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.

கர்மா வகைகள்...

கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை...

சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா.

சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.

ஆகாம்ய கர்மா: இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.

பிராரப்த கர்மா: ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.

பாவப்பதை ஒழிப்பது: நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.

கர்ம யோகா: எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.

ஆசை துறக்க வேண்டும்: கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசை தான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மகிழ்ச்சி அகங்காரம் இன்றி நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது. இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது...

இயற்கையை காப்போம்...


இது தமிழனின் தாய்நாடா?


என் தாய்மொழி தமிழையும் என் தமிழ் இனத்தையும் அடிமைபடுத்தி அழிக்க துடிக்கும் வந்தேறிகள்..

தமிழர்கள் மேல் வடமொழியை திணிப்பதும் ஆதிக்கதின் உச்சம்.

தமிழர்கள் வரிபணத்தில் உண்டு கொழுத்து வாழும் இந்திய அரசு தமிழர்களுக்கான நம் தமிழ்மொழியில் வழங்காமல் இருப்பது அடிமையில் உச்சம்..

கட்டாயம் இருக்க வேண்டியது தமிழ்..
இருக்க கூடாதது இந்தி..

இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம்..

திரிந்து தோன்றிய மொழியை கொண்ட இனங்களுக்கு வேண்டுமானால் இந்தி மொழி திணிப்பை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்..

ஆனால் தான் தோன்றிய தமிழ் மொழிக்கு அது ஏற்புடையதல்ல..

தொட்டதுக்கு எல்லாம் இந்தியை தமிழகத்தில் திணிக்க துடிக்கும் இந்த இந்திய அரசியல் அமைப்பையும், இந்திய நாட்டையும் அடியோடு வெறுக்கிறேன்...

பனை - இது வெறும் மரம் அல்ல.. பல மக்களின் வாழ்வாதாரம்...


திருமூலர் சொல்லிய - ஹிக்க்ஸ் போசோன்...


இன்று உலகம் தேடி கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்..

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்.

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை (மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு...

0 .000000212 mm - ஹைட்ரோஜென்.

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்து கொள்வோம்...

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்.
(size of an hair = 50 micron ).

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்.
(100 micron = 0.1 millimeter).

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்.

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்..

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்.

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்..

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)..

அகவே இவர் கடவுளின் (சிவனின்) அளவாக குறிபிடுவது சராசரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளானது.

சரி அதை விட சிறியதாக என்ன இருக்க முடியும் என்கிறிர்களா..

அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள்.

நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று.

இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை. அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்?

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்...

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்.

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில்...

அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன், சடையான், என்று கூறுவோம், அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார்.

இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில்.

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அனுவலவிற்கு..

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று...

இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால், அதை கண்டு விட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே...

ஆதார் கார்டும் உண்மைகளும்...


பாமக vs திமுக...


கிராம சபையில் மக்களோடு மக்களாக அமர்ந்து குறைகளை கேட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...

கேமரா சபையில் மக்களிடையே நாடகத்தை அரங்கேற்றிய ஸ்டாலின்...

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர்...


கி மு 320 ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல் நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் சொத்துகளை தமது நாட்டுக்கு எடுத்து சென்று சுகமாக வாழுதல் என்னும் கொள் கை யில் குமரி கன்னடம் என்று சொல்லப்பட்ட இன்றைய இந்தியாவில் இருந்து செல்வங்களை அள்ளி வரக் கனவு கண்டார் பிலிப்.. ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன் சுவீகரித்துக் கொண்டிருந்தான். ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை என்பது போல மண் ஆசையும் பொன் ஆசையும் பெண் ஆசையும் இவர்களையும் விட்டு வைக்கவில்லை.

அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு வரைசெய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல் நதிகள் அடர்ந்த காடுகள் அந்த நாட்டின் காப்பரணாக இருப்பதைக் கண்டான். இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். எங்கே, எப்படிக் கடப்பது. இதுதான் அளச்சன்டரின் மிக பெரிய கேள்வி . அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். ஆம் அவைதான் இலகுவான வழி.

இந்தியா நோக்கி படை எடுத்து வரும் வழியில் உள்ள பலநாடுகள் அலெக்ஸ்சண்டருடன் போரிட்டு மடிந்தன மீதம் உள்ள நாடுகள் பலவும் யுத்தமின்றி அலெக்ஸ்சண்டருக்கு வழி விட்டன.

இமைய மலைத் தொடரைக் கடக்கும் முயற்சியில் அவருடைய படைகள் ஈடுபட்டன. அவரிடம் இருந்த மாசிடோனிய வீரர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் மட்டுமே.

அலெக்ஸ்சன்டரின் உளவாளிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து திரட்டிய தவல்கள் அலெக்ஸ்சண்டருக்கு பெரும் வியப்பாக இருந்தது. சோழர் படைகள் வலுவாக் இருந்தன.

மாமன்னன் புருசோத்தமன் அலெக்ஸ்சாண்டர் படைகளை சந்திக்க தயாராக உள்ளார் என்ற செய்தியும் அலேச்சண்டரை மேலும் சீற்றம் கொள்ளவே செய்தது தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட பெர்ஸிய நாட்டு மன்னனருடன் இளைஞர்களில் 30 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய படையில் அவர் சேர்த்துக் கொண்டார். தற்போது படை பலமுடையதாகி விட்டது.

ஆனாலும் சோழர்கள் 2 லட்சம் காலால் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய யானை படை 3000 இருந்தது.

சோழர்கள் தமது யானை படைகளை மிக இரகசியமாக் வைத்து இருந்தார்கள் அதனை அலெக்ஸ்சாண்டர் முழுமையாக் அறிந்து இருக்கவில்லை. சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற கணிப்பே அலேச்சண்டரிடம் இருந்தது.

இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர்.

அப்போது அப்பகுதியில் இருந்து சோழர் படை தந்திரோபாய பின் வங்களை செய்து இந்து நதியின் தென் கிழக்காகா ஒரு இடத்தில் தாமது படைகள் குவிந்து இருப்பது போல பவனை செய்து இரவு வேளைகளில் மிக பலம்மான யானை அணிகளை வடக்காக் நகர்த்தி இருந்தார்கள். அலெக்ஸ்சண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழ படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் கண்பிக்க பட்டது.

அலெக்ஸாண்டரின் படை, ஆற்றல் மிக்கது; முறையான பயற்சியே அவர்களுடைய ஆற்றலுக்குக் காரணம்.
மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் அலெக்ஸாண்டர் அழைத்தார்.

பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றி ஆசை காட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். பயிற்சி இல்லாமல் அவர்களை பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர். இதனால் அவருடைய படை முழுமையான போர்வீரர்கள் கொண்ட படையாகி விட்டது.

அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒரு பிரிவைத் தனது நன்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார். அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதிப் தென் பிராந்தியம் பிரதேசத்தை நோக்கிச் சென்றது. மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்கு பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உல் நுழைந்தது மலை சாதியினரை எதிர் கொண்டது.

மலைச் சாதியினர் பலசாலிகள், முரட்டுத் தன மான தாக்குதல்களை செய்தார்கள் அவர்களுடன் புருசோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலிமையில் அங்குதான் சோழரின் குதிரைபடைகளும் நின்றன. மிகவும் பயற்சி பெற்ற மலைச்சாதி இளைஞர்கள் தாய்மண் காக்க சோழன் படையில் இணைந்து இருந்தார்கள். குளக்கோட்டன் படயின் ஒரு தபதியாக மாகதன் என்னும் தளபதி அலெக்ஸ்சன்டரின் படைகளை ஓரளவு உல் நுழையவிட்டு இடையில் குருகருத்து தாக்கினார். அத்தாக்குதலே முதல் முறையாக அலேச்சண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது.

இன்னும் ஒரு பகுதியில் "ஹஸ்தி' என்கிற மலைச் சாதித் தலைவன் பெருவீரம் காட்டி அலெக்ஸாண்டரை எதிர்த்தான். அவன் புஷ்ப கலாவதி என்கிற தலைநகரைக் கொண்ட சிறுநில பகுதிக்கு மன்னன். மாசிடோனிய படை தொடர்ந்து இருபது நாட்கள் போர் செய்ய வேண்டியிருந்தது. கடுமையான போருக்குப் பிறகு மசொடோநியர்கள் பெரும் அழிவை சந்தித்து இருந்தார்கள் . இதுவராய் தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் புதுமையான உத்திகள் தமிழனின் வீரம் அலெக்ஸ்சண்டருக்கு வியப்பாக் இருந்தது.

இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சந்தர் மிக பயிற்றுரவித்த நாய்களை பயன் படுத்தினான் . அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராக இருந்தன .

இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலேச்சண்டரை கவர்ந்தது. இந்தியாவை வென்று இங்கேயே இருந்து விட வேண்டும் என்று எண்ணினான். இந்தியாவை வளமான நாடு என்பதையும், அது தமிழரின் வீரத்தின் விளைநிலம் என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்வி பட்டிருந்தான். ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும்தான் தெரிந்து கொண்டார்.

தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அலெக்ஸ் சந்தர் சில மன்னர்களை இரகசியமாக சந்திக்க தனது ஒற்றர்களை அனுப்பி வைத்தான். போராடி வெல்வதில் சிரமங்கள் நிகழும் நிலை தோன்றியது. தென் கிழக்கு படையுடன் இணையும் நாள் தாமதம் ஆகியது. தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறினான் அலெக்ஸாண்டர். பாகிச்தனம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர் தலைமயில் இருக்கும் இந்திய படைகளை கொடுக்க தொடங்கியது .

அடுத்து, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்கும் இடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, "அம்பி' என்கிற மன்னன் ஆண்டுவந்தார். அவன் மன்னன் புருசோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டு இருந்தான். அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது புருசொத்தனை அடிமை கொள்வான். அலேச்சனடருக்கு உதவினால் தான் வரும் களத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம என்று கனவு கண்டான். அவனது எல்லை தாண்டினால் புருசோத்தமன் படைகள் தயாராக இருந்தன. அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக் இருந்தன. அந்த யானை படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதி சோழன் தயாராக இருந்தார்.

அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் போரஸ் என்ற புருசோத்தமன் ஆட்சி செய்துவந்தார். சற்று தள்ளி ரவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர் களின் தேசம் இருந்தது. காமரூபம், வங்கம், மகதம் என்று வட இந்தியாவிலேயே பல ராஜ்யங்கள் சோழ மண்டல கொடியின் குடைக்குல் ஆண்டு வந்தன .

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டரை தங்கள் பொது எதிரியாக பாவித்து, வட இந்திய மன்னர்கள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், அலெக்ஸாண்டரின் கதை ஒரே நாளில் முடிந்து விட்டிருக்கும். ஆனால், அவர்களோ யார் வந்தால் என்ன? எது நடந்தால் என்ன? என்று அக்கறை யில்லாமல் இருந்துவிட்டனர். வந்த வேலை எளிதாக முடியும் என எண்ணி மகிழ்ந்தார் அலெக்ஸாண்டர்.

அன்று தமிழர் படையே மிகவும் உக்கிரமான போரை தொடுத்தது. தட்சசீல மன்னர் அம்பிக்கும், அரசர் புருசோத்தமர பிடிக்காது அவரது வீரமும், நிர்வாகத் திறமையும் அவர்மீது பொறாமையை ஏற்படுத்தியிருந்தன.
அலெக்ஸாண்டர் பெரும்படையுடன் அம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்து இருந்தார். கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், வந்திருப்பவர் பெரிய வீரனாகத்தான் இருக்க வேண்டும். பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார் என்று புரிந்துக் கொண்டார்.

அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, போரஸின் மீது நமக்குள்ள பகையை தீர்த்துக் கொள்ளக் கூடாது? என்று திட்டமிட்டார் அம்பி. தனது எல்லை நாட்டில் காலடி வைத்த அலெக்ஸாண்டரை அவர் இரு கை நீட்டி வரவேற்றார். அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார்.

நான் உங்கள் நண்பன், உங்களை இந்நாட்டின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி. என்று கூறிக்கொண்டார்.

அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை அம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.

அலெக்ஸாண்டர் அம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். அம்பி தன் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரண் அடையச் செய்தார்.

அலெக்ஸாண்டர் அம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. ஆதாயம் கருதிய கூட்டு அது. அம்பி மூலம் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டர் மூலம் போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடம் இருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது அம்பியின் எண்ணம்.
நம்முடைய படையெடுப்பு தட்சசீலத் தோடு நின்றுவிடலாம். இங்கே நாம் வெற்றி கொள்ள வேண்டிய மாநிலங்கள் இன்னும் பல இருக்கின்றன என்று எண்ணினார் அலெக்ஸாண்டர். எல்லாருமே அம்பி மாதிரி சரணடைந்து விட மாட்டார்கள். வீரத்துடன் எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்களும் இங்கே இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிந்தார்.

காட்டிக் கொடுத்த அம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டு எழுந்த புருசொத்தமர் தமிழரின் மனம் காத்த மறவர் தமிழர் வரலாற்றின் பெருமிதம். அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டு இருந்தது ஆகும். புருசொத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. அம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். அத்துடன் புருசொத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்து விட்டார்.

அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருசொத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று தூதன் மூலம் தெரிவித்தார்.

புருசொத்தமர், அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார் என்று தெரிவித்து விட்டார்.

அம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் அலெக்ஸாண்டர். சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.

போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர். அந்த அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளில் இருந்தும் படைகள் வந்து இணைந்தன.

போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர்.

ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.

அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை புருசொத்தமர் அறிந்து இருந்தார் . அவர்களது தாக்குதல் முறைகள் பற்றி ஏற்க்கனவே போர்காலங்களில் இருந்து தப்பிவந்த மன்னர் பலரும் புருசொத்தமரிடம் தஞ்சம் அடைந்து இருந்தார்கள்.

புருசொத்தமர் மிக தந்திரமாக தனது படை பிரிவு ஒன்றை அம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த நாட்டு விசுவாசிகளை திரட்டி வைத்து இருந்தார் சரியான் நேரத்தில் அவர்கள் அம்பியின் அரண் மனை மீது தகுத்த நடத்தி அம்ம்பியை சிறைபிடிக்க தயாராக இருந்தார்கள்.

அலெக்ஸ்சாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று புருசோத்தமன் படைகளுக்கு பின்வலம்மாக நிலை எடுக்க பணித்தான். ஆற்றை கடப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை புருசோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிக அவதானமாக காத்து வந்தார். அங்காங்கே சில் குடியிருப்புகள் இருந்தன அவற்றை கடந்து படைகளை உள் நுழைவது கடினம். ஆற்றை கடக்க இலகுவான் இடமாக ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது.

முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர் எல்லைக்குள் நுழைவது. மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயத்தங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது. ஆனாலும் சோழர்கள் எந்த சவாலையும் சந்திக்க படைகளை எங்கும் பல தளபதிகள் தலைமையில் தயாராக வைத்து இருந்தார்கள். எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழரின் ஒற்றர்கள் கண்களில் தப்பவில்லை.

யுத்தம் தொடங்கியது குதிர படைகள் காடுகளை மிக வேகமாக ஊடறுத்து அம்புகளை சென்றன காடுகளை உடைத்தபடி யானைகள் பிளிறி கொண்டு நலாபுறமும் இருந்து வந்தன அலேச்சண்டர் படை செய்வது அறியாது சிதறி ஓட அம்பியின் அரண்மனையும் சோழர் வசம் ஆனது. 3000 யானைகளின் சீற்றத்துள் அலெக்ஸாண்டரின் குதிரைபடைகள் பாதிக்கு மேல் அழிந்தன. மனுநிதி சோழன் படைதளபதி எறிந்த வேல் அலெக்ஸ்சண்டரின் பாதி உயிரை குடித்தது விசம் தடவிய வேல் பட்டது அலெக்ஸ்சாண்டர் வீழ்ந்தான் ....

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது. போர் நிருத்தபடுகின்றது. அலெக்ஸ்சண்டரின் தெற்கு நோக்கிய படைபிரிவின் தலைவன் அலெக்ஸ்சன்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்படுகின்றான். அவனது வாளை புருசோத்தமன் அலேச்சண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான். விஷம் அழமாக அலேச்சண்டரின் உடலில் பாய்ந்து இருந்தது. அவன் மிகவும் துன்பபடுகின்றான்.... நாடு அவனது பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது...

ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர்... அலெக்ஸ்சாண்டர் மீளமுடியாத விளுபுண் உவதையில் வீரசொர்க்கம் அடைகின்றான்.....