12/02/2018

திமுக செய்த தாமிரபரணி படுகொலை...


கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்பட முடியாத தினமாக நிலைபெற்று விட்டது, கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணி புரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர்.

இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க. கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர்.

ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.

தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.

அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.

தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.

03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது.

மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர்.

127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது.

பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர்.

சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது.

பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.

ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர்.

தலைவர்களின் உயிருக்கும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

காவல்துறையின் காட்டு மிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள்.

உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர்.
(இதற்காகவே தாமிரபரணியின் நீர்மட்டம் அன்று மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது)
தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை.

இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர்.

நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.

இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி. குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள்.

அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு.

பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார்.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி.

தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது...

இது தான் திமுகவின் லட்சனம்...

தமிழா விழித்துக்கொள்...


விவசாயிகளின் போராட்டத்தையும், அவர்களின் கண்ணீரையும் சாதாரணமாக கடப்பவரா நீங்கள்..?


அப்படியென்றால் இந்த பதிவையும் சாதாரணமாக கடந்து செல்லுங்கள்...

தஞ்சை பெரிய கோயில் : ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்...


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு...

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது.

விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு...

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன.

இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது.

முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள், நேர்ச்சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது...

பாஜக மோடியின் கார்ப்பரேட் அரசியல்...


திருவாரூர் கடம்மங்குடியில் மீத்தேன் திட்ட வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பள்ளி மாணவிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைப்பு...


எதிர்ப்பு தெரிவித்த எங்களை கைது செய்து அடைத்து வைத்து விட்டு ஓஎன்ஜிசி தனது வேலைகளை துவங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் நேற்று மாலை கிராம மக்கள் விடுவிக்கப்பட்டனர்...

உலகம் கொண்டாடும் தமிழனை நாம் என்று கொண்டாட போகிறோம்...


ஓசூரில் உள்ள பிக் பஜாரில் வறுத்த முந்திரியில் புழு...


வறுத்த முந்திரி வாங்கி வைத்திருப்பவர்கள் அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...

அணைத்து பிக் பஜார் களுக்கும் ஒரே இடத்தில் இருந்து தான் வினியோகம் செய்வார்கள்.

எனவே எந்த பிக் பஜாரில் வாங்கிறுந்தாலும் அதை சாப்பிட வேண்டாம் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம்...

புதிய வீடு கட்டினால் அம்மியையும் ஆட்டுகல்லையும் பயன்படுத்தாத மக்கள் மத்தியில் ஒரு தோழியின் வீட்டில் இந்த காட்சியை காண நேர்ந்தது. இவர்கள் வீட்டில் மிக்சிக்கும், கிரைண்டருக்கும் இடம் இல்லை...


அவர்கள் அனைத்தையும் முடிவு செய்த பிறகே உங்களிடம் போராட்டத்தை தருகிறார்கள்...


நாமும் போராட்டங்கள் முடிவை தரும் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம்..

ஆனால் இதுவரை எத்தனை போராட்டங்களுக்கு அவர்களிடம் நாம் கேட்டது கிடைத்துள்ளது..?

உனக்கான தமிழ் தேசிய அரசியலை நீங்கள் முன்னெடுக்காத வரை அவர்கள் வெற்றிப்பெற்று கொண்டே இருப்பார்கள்...

ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு...


அரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு கொண்டு வராத காரணத்தினால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த டாக்டர் மற்றும் நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அனுமதிக்க மறுப்பு அரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண் கேவாட். இவரது மனைவி முன்னிகேவாட்(25). கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவரும், உறவினரும் அழைத்து வந்தனர்.

பொது சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரை, அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அவர்கள் அங்கு சென்ற போது, ஆதார் அட்டை கையில் இல்லாத காரணத்தினால், உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், பிரசவ வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.
உறவினர்களிடம் உதவி இது குறித்து அருண் கேவட் கூறுகையில், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்ற போது ஊழியர்கள் ஆதார் அட்டையை கேட்டனர். கையில் அட்டை இல்லாத காரணத்தினால், ஆதார் எண்ணை வழங்கினேன்.

அட்டையை பிறகு கொண்டு வருவதாக கூறினேன். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரும், நர்சும் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் எனக்கூறினர். இதனால், எனது மனைவியை பார்த்து கொள்ளுமாறு உறவினர்களிடம் கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுக்க சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டை செய்யாத ஊழியர்கள் ராம் சிங் என்ற உறவினர் கூறுகையில், முன்னியுடன் பிரசவ பிரிவு அறைக்கு சென்ற போது,எங்களை அங்கு அனுமதிக்கவில்லை. வெளியில் அனுப்பிவிட்டனர். அப்போது அதிக வலி ஏற்பட்டதால் வளாகத்திலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது கூட ஊழியர்கள் ஒருவர் கூட உதவி செய்யவில்லை.

அங்கு நடந்ததை அங்கிருந்தவர்கள் படம் பிடித்த போதுகூட யாரும் உதவி செய்யவில்லை. குழந்தை பிறந்த பிறகு வளாகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், ஊழியர்கள் உதவிக்கு வந்ததாக கூறினார். சஸ்பெண்ட் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தலைமை மருத்துவர் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பாக டாக்டர் மற்றும் நர்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்...

தமிழா விழித்துக்கொள்...


பஞ்சவன் மாதேவி கோவில். பட்டீஸ்வரம். கும்பக்கோணம்...


ஷாஜகானின் 7 மனைவியில் 4வது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் இது...

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்.... வழி.... என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு, அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர்.

பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

பட்டீஸ்வரம். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம்.

இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்...

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்".

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான்.

ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?

பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை.

இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர்.

தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும்.

இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம்.

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்து விட்டு வாருங்கள், அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள்...

பாஜக மோடியின் ஆட்சிக்கு.. தரமான கருத்துக் கணிப்பு...


இலுமினாட்டி கமலும் தமிழின அழிப்பு திட்டமும்...


ஏற்கனவே செய்தியில் விவசாயத்தை தொழில்துறையாக மாற்றுவேன் என கூறியவர்..

தற்போது கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்றுவேன் என்கிறார்..

கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்..

என்ன கணக்கு ? கிராமங்களை கார்ப்பரேட் கைக்கு விற்கும் திட்டம் தான்...

பழ மருத்துவம்...


திராட்சை...

உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.
மலச்சிக்கலை நீக்கும்.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தை சீர் செய்யும்.
குடல் கோளாறுகள், நாக்குப் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

ஆப்பிள்...

உடல் குளிர்ச்சியாகும்.
இதயத்திற்கு வலிவைத் தரும்.
உணவை ஜீரணிக்கச் செய்யும்.
இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை பலத்தைக் கொடுக்கும்.

கொய்யா...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
பற்களுக்கு வலுவூட்டும்.
எலும்புகளுக்கு வலுவூட்டும்.
விஷக்கிருமிகளைக் கொல்லும்.

ஆரஞ்சு...

தோல்நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மேனியை அழகாக்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
வாய் துர்நாற்றம், குடல் வறட்சி, அஜீரணம், மலக்கட்டு, கணைச்சூடு, பித்த மயக்கம், தலைச்சுற்றல், உடல் மெலிதல் முதலியவற்றை நீக்கும்.

சப்போட்டா...

தொண்டைப் புண்ணை ஆற்றும்.
இருமலைத் தடுக்கும்.
குடல்புண்ணை ஆற்றும்.
பெண்களின் கர்ப்பப் பை கோளாறுகளை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகள் உண்ணத் தகுந்தது.
சீறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
மூல நோயைத் தணிக்கும்.

பேரிக்காய்...

எலும்புகளை உறுதிப்படுத்தும்.
பற்களை பலப்படுத்தும்.
இரைப்பை, குடலைப் பலப்படுத்தும்.
பசியைத் தூண்டும்.
குழந்தை பெற்றவர்கள் இதனை உட்கொண்டால் தேவையான பால் சுரக்கும்.

மாதுளை...

நினைவாற்றலை அதிகரிக்கும்.
மயக்கம், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, சீதபேதி, ஆஸ்துமா ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.
மூலம், முடக்குவாதத்திற்கு நல்ல மருந்தாகும்.

பலா...

நரம்புகள் பலப்படும்.
ரத்தத்தை விருத்தி செய்யும்.
பற்களை கெட்டிப்படுத்தும்.
பற்கள் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.

அன்னாசி...

அன்னாசிப்பழச் சாறு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
ரத்தத்தைச் சுத்தி செய்து, ரத்த விருத்தியை உண்டாக்கும்.
ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி, மலக்குடலை சுத்தப்படுத்தும்.

விளாம்பழம்...

நோய்க்கிருமிகளை அழிக்கும்.
எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
இளைஞர்களின் ஞாபக மறதியைப் போக்கும்.
வயோதிகர்களின் ஜீரணத்தை செம்மைப் படுத்தும்.
மூல நோய்க்குச் சிறந்த மருந்து.
இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கும்.

பப்பாளி...

வைட்டமின் "சி' சத்து அதிகமாக உள்ளது.
குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.
காதில் நோய்த்தொற்று, சளி, காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும்.
பப்பாளியின் விதை மற்றும் இலைகள் குடலில் புழுக்களை நீக்குவதற்கான மருந்தாகச் செயல்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று...

Sbi வங்கியின் ஏமாற்று வேலை...


மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பவர்கள்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள். அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

மலிவு விலை பிரியாணி...


தாலியும் தமிழரும்...


ஆரியத்துக்கும் பெரியாரியத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது..

தமிழ்நாட்டில் ஆரியமும் பெரியாரியமும் போடும் பங்காளிச் சண்டையில் தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் பணயம்  வைக்கப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்.

ஆரியம் ஒருபோதும்  தமிழினத்தின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டதில்லை. அதன் வாதமெல்லாம் தமிழர்களுக்கென்று தனித்துவமான பாரம்பரியமோ, பண்பாடோ எதுவும் கிடையாது. எல்லாமே இந்திய உபகண்டத்தில், இந்துக் கலாச்சாரத்திலிருந்து இரவல் வாங்கியவை தான் என்பது தான். 

தமிழ் மொழியின் தொன்மையையும், தனித்துவத்தையும் கூட அவர்களில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, தமிழை விட உயர்வாக  சமக்கிருதத்தை தூக்குவது தான் ஆரியத்தின் வழக்கம்.

தமிழர்கள் தாலி அணிவதும், இந்துக் கலாச்சாரத்தின்  ஒரு அங்கம் தான், அதுவும் ஆரியத்தின் தொடர்ச்சி என்கிறார்கள். இந்துத்துவா பார்ப்பனீயவாதிகள் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

திருமணத்தில் தாலியணியும் வழக்கம் இன்று இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழ்ப்பெண்கள்  சங்க காலத்திலேயே  ‘ஈகை அரிய இழையணி’ அணிந்திருந்தனர் என்பதற்கு புறநானூற்றிலேயே ஆதாரமுண்டு.

ஆரியப் பார்ப்பனீயம் தமிழர்களிடமிருந்து தாலி அணியும் பாரம்பரியத்தை இரவல் வாங்கியிருக்கலாமே தவிர, அது தமிழர்களின் பாரம்பரியம், அது பெண்ணடிமைச் சின்னம் அல்ல என வாதாடுவதற்குப் பதிலாக..

புறநானூற்றுக் காலம் தொட்டு, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக, ஒருவனுக்கொருத்தி என்ற தமிழர்களின் கொள்கைக்கு அடையாளமாக  இருந்த  தாலியணியும் வழக்கத்தை, ஆரியப் பார்ப்பனீயத்திடமிருந்து  தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறி தாலி அறுக்கும் போராட்டமும் நடத்தும் பெரியாரியத்துக்கும், பார்ப்பனீயத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, என்று தான் எண்ணத் தோன்றுகிறது..

ஏனென்றால் இரண்டு குழுவினரது நோக்கமுமே தமிழர்களைத் தனித்துவமான கலை, கலாச்சாரம் அற்றவர்களாக்குவதும். அவர்களைத் தமிழர்களாக, தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபடாமல் தடுப்பதும் தான். 

இந்த விடயத்தில் பார்ப்பனீயத்துக்கும், பெரியாரியத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இந்துப் பெண்கள்  மட்டும் தாலியணிவதில்லை. மாறாக சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது வாழ்க்கைத் துணைவிக்கு தமிழ்க் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக, தமது அன்பைக் காட்டும், தமது  மணவாழ்க்கையின் அடையாளமாகத் தான்  தாலியை அணிவிக்கிறார்களே தவிர, எந்த தமிழனும் மணவறையில்  தனது எதிர்கால வாழ்க்கைத் துணைவிக்கு, தனது வருங்கால வாரிசுகளின் தாய்க்கு, தாலியைக் கட்டும்போது, இந்தப் பெண் எனது அடிமை அந்த அடிமைத்தனத்தின் சின்னமாக இந்த தாலியைக் கட்டி, இவளை இன்று முதல் நான் அடிமையாக்கிக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டு தாலி கட்டுவதில்லை.

தாலியை அணிந்து கொள்ளும் எந்த தமிழ்பெண்ணும் இன்றைக்கு முதல் நான் இவனுக்கு அடிமை, இது அடிமைத்தனத்தின் சின்னம் என்று நினைத்துக் கொண்டும் தாலியை அணிவதுமில்லை.

தாலி அணிவது தமிழர்களின் மரபே தவிர இந்துக்களுக்கு மட்டும் உரிய வழக்கமல்ல.

இன்றும் ஈழத்தமிழர்களில் இந்துக்களும், கிறித்தவர்களும் தாலியணிகின்றனர்..

அது மட்டுமன்றி, தீவிரவாத இஸ்லாமிய வஹாபிசம் வேரூன்றும் வரை தமிழ் முஸ்லீம்கள் கூட திருமணத்தில் பிறை வடிவிலான பதக்கத்தை சங்கிலியில் கோர்த்து பெண்ணுக்கு தாலியாக அணிந்தனர். அவ்வாறு சாதி, மத வேறுபாடின்றி, தமிழர்கள் அனைவரினதும் பாரம்பரியங்களில் ஒன்றாகிய தாலியணியும் வழக்கத்தை, பெண்ணுரிமை என்ற போர்வையில்,  இந்துக்களின் சடங்காக, பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்கள் இரவல் வாங்கிய வழக்கமென எண்ணி, அது விட்டொழிக்கப்பட வேண்டுமென்று போராடும் பெரியாரியமும், பார்ப்பனீயமும்  ஒன்றிணைந்து தமிழர்களுக்கெதிராக சதி செய்கின்றனவோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக, இக்காலத்தில் சாதாரண தொழில் செய்கிற தமிழ் ஆண்கள் கூட, தமது திருமணத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செய்து காசைச் சேர்த்து அதிகளவு தங்கத்தில்  தனது எதிர்கால மனைவிக்குத் தனது அன்பின் அடையாளமாக அணிவிக்கும் பொற்தாலிக் கொடியை, அடிமைச் சின்னமாக்கி, அவன் தனது மனைவியை  அடிமையாக்கத் தான் ஓடியோடி உழைத்தான் என்று கருத்துப்படும் படி  கூறுவது எவ்வளவு இரக்கமற்ற செயல் என்பதை பெரியாரிஸ்டுகள் நினைத்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது..

அவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்களின், பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் அழித்து.. திராவிடனின் தாசி கலாச்சாரத்தை தமிழனிடம் திணிப்பது மட்டும் தான்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேர் நாசா பயணம்...


சென்னை மாநகராட்சிப்பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் அமெரிக்காவில் உள்ள விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செல்கிறார்கள்.

இதற்காக இவர்களுக்குச் சென்னையில் அறிவியல் போட்டிகள் நடத்தப் பட்டன.

இதில் பள்ளி மாணவர்கள் வைத்திருந்த அறிவியல் காட்சியில் சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறந்த படைப்புகளை வைத்திருந்த 8 மாணவர்கள் அமெரிக்கா சென்று நாசா விண்வெளி ஆய்வு மையத் தைப் பார்வையிட உள்ளனர்.

இதற்காகச் சென்னையில் நடைபெற்ற விழாவில் இம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன் பாராட்டிப் பேசினார்...

தமிழினமே உலகின் மூத்தகுடி...


முதன்முதலில் இங்கு 1863-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கற்கால மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கிடைத்தன. அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கற்கால மனிதன் இருந்ததையே உலகம் நம்பியது...

Proof: https://goo.gl/ov2o84
https://goo.gl/3yHcuj

தமிழர்களும் செவ்விந்தியர்களும்...


தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே மாயன் (Mayan) என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன்(Mayan) Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது.

2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

Omlec, Aztec, மாயன் (Mayan), Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கொலம்பஸ் (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டு பிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கொலம்பஸ்(Columbus)-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டு பிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே.

வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டு பிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்பு தானே..

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப் போகின்றன.

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள்.

தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு.

தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது.

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன.. இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன் (Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பது போல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான். உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...

அந்தெந்த மொழிவாரி மாநிலத்தை அந்த மொழிக்கு சொந்தகாரனே ஆள வேண்டும் என்ற தேவை ஏன் வருகிறது என்பதை இந்த படத்தை பார்த்துப் புரிந்துக் கொள்ளலாம்...


தியானம்...


தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை..

தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று..

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா?

தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள்.

கண்களை மூடுங்கள். பிறகு தெரியும்..

உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்..

எவ்வளவு உங்களை பிடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை..

தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரிய வேண்டும்.

பிறகு தியானம் பழக வேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது..

ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல்
ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர்.

அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது மன ஒருமைப்பாடு (concentration) ஆகும்.

அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும்.. உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சி தான் உள்ளது.

அது, நீங்கள் எந்த செயல் செய்யும் போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும்போது,
தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல், தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு அளிக்கப்பட
உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா..

தியானமும் நீங்கள் முச்சு விடுவதைப் போன்றதே..

யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத் தான் அதை அடைய வேண்டும்.

அதாவது உங்கள் தீவிர முயற்சியால் தியானம் என்பது "விழிப்பாக இருப்பது" அவ்வளவே.

வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம்.

வேலை செய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிர்கலாம்.

சும்மா இருக்கும் போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள்.

ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள்.

சிந்தனைகளை கவனியுங்கள்.

இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும்...