20/05/2018

தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரனின் மகன் பாலாவின் பள்ளித் தோழனின் பதிவு....


அந்த பதுங்கு குழிக்குள் இருக்கும் படம் வெளியான அன்று (2013 மாசி) Independent ஊடகத்தில் வந்த அந்த செய்தியின் இணைப்பை சித்திதான் முகநூலிற்கு அனுப்பியிருந்தார். அதற்கு முன்னரே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருக்கும் படத்தை இணையம் மூலம் பாத்திருந்தேன். அப்படத்தை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட தாக்கத்தை விட பதுங்கு குழிக்குள் இருக்கும் படத்தை பார்த்தபோது ஏற்பட்டத்தை சீரணிக்க முடியவில்லை. நான் அவரை கண்டு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதே முகம் ஆனால் சற்று மெலிந்திருந்தார். கணினி திரையில் பார்க்கும்போது ஏனோ தெரியவில்லை ஒரு முறை நேரே காண்பது போல இருந்தது.

2008 இரண்டாம் தவணை பரீட்சையின் போதுதான் அவரை இறுதியாக கண்டேன். இடப்பெயர்வுகள் காரணமாக அந்த தவணை பரீட்சை இடையே நிறுத்தப்பட்டிருந்தது. அன்று ஏதோ ஒரு பாடத்தின் பரீட்சை முடிந்த கையோடு துடுப்பாட்டம் ஆடுவதற்காக மைதானம் வந்தபோதுதான் யாரோ சொன்னார்கள் நாளையில் இருந்து பரீட்சை இல்லை என்று. மனதில் பெரும் சந்தோசத்துடன் வகுப்பறை நோக்கி கணினி ஆய்வு கூடத்துக்கும் பழைய பின்வாசலுக்கும் இடையிருந்த ஒடுக்கமான பாதையால் ஓடி வந்தேன். அப்பொழுது மெய்ப்பாதுகாவலர் அண்ணா பாலாவை கூட்டிக்கொண்டு வந்தபடி இருந்தார். அன்றுதான் நான் அவரை இறுதியாக கண்டது. என்னோடு படித்த சில நண்பர்கள் 2008 ஒக்டோபர் அளவில் இடம்பெயர்ந்த நிலையில் தர்மபுரம் மகாவித்தியாலையத்தில் நடந்த போட்டி ஒன்றுக்கு பாலா வந்திருந்த நிலையில் அவரை கண்டு கதைத்திருந்தனர். அந்த நண்பர்கள் எல்லாம் பாக்கிய சாலிகள்.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கள் சனி ஞாயிறுகளில் காலையில் இருந்து மதியம் வரை நடக்கும். இடையில் கிடைக்கும் இடைவேளையில் நாங்கள் அனைவரும் ஓடி பிடித்து விளையாடுவோம். நண்பர்கள் அனைவரும் ஒரு அணியாகவும் நண்பிகள் ஒரு அணியாகவும் விளையாடுவோம். பாலா வேகமாக ஓடமாட்டார் என்பதால் வேறு வகுப்பறைகளுக்குள் ஒழிந்துவிடுவார். மிகவும் ரகசியமாக பதுங்கி இருக்கும் அவரது நிலையத்தை கண்டுபிடிக்க நணிபிகள் எல்லாம் தேடித்திரிவார்கள். சிலவேளைகளில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே பிடிபட்டு வட்டத்திற்குள் சிறைவைக்கப்படுவார். நண்பிகள் எதிர்பார்க்காத திசையில் இருந்து ஓடி வந்து சிறையுடைப்பும் செய்திருக்கிறார்.

வைகாசி மாதம் என்றவுடன் இந்த நினைவுகள் எல்லாம் கண்ணுக்குள் நிறைந்து கண்ணீராக வழிந்தபடி இருக்கும்.

'பிரபாகரனின் மகன்' என்ற ஒற்றை காரணத்துக்காக எம்மிடமிருந்து எமது பள்ளித்தோழனை, எமது வகுப்பு சகபாடியை பிரித்தெடுத்த உங்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்க போவதுமில்லை, உங்களை ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை. எமது சாவுக்கு பின்னாலும் எமது பிள்ளைகளும் உம்மை பழித்துரைத்துக் கொண்டுதான் இருப்பர். கொல்லத்தான் போகிறீர்கள் என்று முடிவெடுத்திருந்தால் கண்டவுடன் சுட்டிருக்கலாமே? இல்லையென்றால் உங்கள் வீணாய்போன விசாரணைகளை முடித்துவிட்டேனும் கொன்றிருக்கலாமே? உண்ணக்கொடுத்து பசியாறவைத்து கொன்று தள்ளும் உங்கள் கோர மனநிலையை என்னவென்று கூறுவது.

இந்த உலக வரலாற்றில் உங்கள் கோர முகத்தை, சிந்தனையை பதிவு செய்யாமல் நான் உறங்க போவதில்லை. அதுவும் ஒருவருக்கு நன்கு தெரிந்து இந்த படுகொலை நிகழ்ந்ததாக கூறுகிறார்கள். அப்படியாக அது நடந்திருந்தால், திரௌபதைக்கு துகிலுக்கையில் நிறைந்த சபையில் அதை பார்த்துக்கொண்டிருந்த துரோணரின் முடிவைத்தான் அவர் எட்டுவார். தனது மூத்த மகளிற்கு சம வயதானவனை, தனது மகளின் சிறு வயது நண்பனை, தனது பிள்ளையாக பார்த்த ஒருவனை இரக்கமின்றி கொல்லப்போகிறார்கள் என்று தெரிந்தும் அதற்கு எதிர்ப்பிடாமல் அவர் இருந்திருப்பாரே ஆனால் இந்த வரலாற்றின் தண்டனையில் இருந்து அவர் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள மாட்டார். அவரது கடந்த கால நல்ல செயல்களும் வரலாற்றில் இருந்து மறைந்து சென்றுவிடும்.

தரம் ஒன்றிலிருந்து படித்த மோகனதாஸ் தனுசனை (சுள்ளி) பறித்தெடுத்தீர்கள். தரம் மூன்றிலிருந்து படித்த பாலாவையும் பறித்தெடுத்தீர்கள். தரம் ஒன்றில் அறிமுகமான துவாரகனையும் எங்கோ கொண்டு சென்று மறைத்து வைத்திருக்கிறீர்கள். இப்படி எம்மிடமிருந்த எல்லாவற்றையுமே கொண்டு சென்றுவிட்டீர்கள். அன்று நாம் வாழ்ந்த மகிழ்வான வாழ்வெல்லாம் இனி எமக்கு இல்லவே இல்லை என்றாகிவிட்டது. எரிந்து முடிந்து எஞ்சிய சாம்பல்களாக அந்த வாழ்வின் நினைவுக்கள் தான் எம்மிடம் எஞ்சிக்கிடக்கின்றன. தயவோடு அவற்றையும் எம்மிடமிருந்து பறித்தெடுத்துச்சென்று எம்மை சித்தம் தளர்ந்தவராக ஆக்கிவிடாதீர்கள். அந்த நினைவுகளுடனாவது நாம் வாழ்ந்துவிட்டு செத்துப்போகிறோம்.

- சுவர்ணமயூரன்...

வெட்கங்கெட்ட ஜனநாயகம்...



இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு குவளை தண்ணீர் விட்டு, ஒரு குவளை அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை குவளை வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது...

திமுக தெலுங்கு ஸ்டாலின் கலாட்டா...


பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்...


தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும்.

இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.

இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும்.

இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும்.

இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
 
நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது.

எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

போலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்...

திராவிட தெலுங்கு மொழிக்கு வேலை செய்யும் அதிமுக செங்கோட்டையன்...


S.S வாட்டர் டவுண் முகங்கள் – 1924...


இந்த புகைப்படம் 1924ம் ஆண்டு SS வாட்டர் டவுன் என்ற வணிகக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கடல் அலைகள்.

புகைப்படத்தை டெவலப் செய்தபோது அலைகளில் தெரிந்த இரண்டு முகங்களைக்கண்டு அனைவருமே அதிர்ந்து போயினர்.

அது வெகுசில நாட்களுக்கு முன்னர் அந்தக்கப்பலிலேயே ஒரு விபத்தில் ஒரே நேரத்தில் செத்துப்போன இரண்டு பணியாட்களின் முகங்கள்.

இந்தப்புகைப்படமும் பல்வேறு ஆராய்ச்சிக்களுக்குப்பிறகும் எவ்வித முடிவும் கிட்டாத ஒரு படமாகிப்போனது...

சீனா மின்காந்த தொழில் நுட்பத்திலும் கரம் வைத்து விட்டது...


பவர்கிரிட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் மாபெரும் சவால்...


போட்டியில் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை...

நிபந்தனைகள்...

1.உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளுக்கு அடியில், அருகில் வசிப்பதால் எந்த பாதிப்புகளும் இல்லையென்றும்.

2.உயர்மின் கோபுரங்களை விவசாய பூமிகளில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும்.

3.இது போன்ற உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலை ஓரமாக கேபிள்களாக அமைக்க முடியாது என்றும்.

நிரூபிப்பவர்களுக்கு கூட்டு இயக்கத்தின் சார்பில் ரூ.1 கோடி பரிசலிக்கப்படும்.

‍சவாலே... சமாளி...

நாங்க ரெடி நீங்க ரெடியா ?

இவன்,
உயர்மின் கோபுரங்கள்க்கு எதிரான விவசாயசங்களின் கூட்டு இயக்கம்...

தென் இந்தியா உருவாக்கம் சிறப்பாக நடக்கிறது...


இந்த வலிமை மிகுந்த அடிமை கட்டமைப்பின் அடிப்படையை இந்த வங்கிகளும் , அடிமை பொருளாதாரமும் தான்...


இதை நீங்கள் பேசமால், அரசியல் ரீதியாக தற்சார்பு என்பது மாயை..

ஒருவேளை தற்சார்பை அரசியல் ரீதியாக நீங்கள் நிறைவேற்றுவீர்களேயானால் அதை முதலில் எதிர்ப்பது இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையாக தான் இருக்கும் என்பது தான் நிதர்சனம்..

அதற்கான மாற்றுவழி இருக்கிறதா..

பயங்கர விமான விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்...


கியூபா நாட்டில் ஜெட்லைலன் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்ட்டி இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 பயணிகள் ஜெட் விமானம், மேலெழுந்த சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், காவல்துறையினரும் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஹவானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

மின்சாரத்திற்கு ஆப்பு வைக்க போறானுங்க.. உஷார் மக்களே...


சர்வமும் பிரம்மமயம்...


ஒரு சக்தியின் வேகத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ அது வேறொரு சக்தியாக மாறி செயல்படும்.

கடவுள் அலை வடிவமானவர். அவரின் வேகம் குறைய குறைய அது வேறொரு சக்தியாகவும், மிகவும் குறையும் போது பௌதீக பொருட்களாகவும் காட்சியளிக்கிறார்.

இதைத்தான் வேதம் சமுத்ராதர்ணவாததி  சம்வத் சரோ அஜாயத என கூறுகிறது.

அதாவது சப்திக்கும் அலைகடலில் இருந்து சுற்றுவேகம் உருவாகிறது என அர்த்தம்.

ஸோ அமன்யத அதாவது கடவுள் நினைத்தார். கடவுள் தன் மனதில் செய்துகொள்ளும் கற்பணைதான் பிரபஞ்சம்.

நமது உறக்கத்தின்போது புலன்கள் ஒடுங்கினாலும் கனவில் நாம் தத்ரூபமாக காணும் காட்சிகள் நம் சித்தத்தில் பதிகின்றன.

கண்விழித்தபின் எப்படி கனவென நினைத்து அதன் உண்மைத் தன்மையை உணர்கிறோமோ அதேபோல் நாம் இறந்தபின் நாம் வாழ்ந்த வாழ்க்கை கனவென்பதை அறிந்து கொள்கிறோம்.

கனவோ நிஜமோ அதில் நடக்கும் சம்பவங்களின் தகவல்கள் நம் சித்தத்தில் பதிந்து மறுபிறவிக்கு வித்திடுகிறது.

ஆம் நாம் நிஜமென நினைத்து வாழும் இந்த வாழ்க்கையும் நம் மனதால் நாம் காணும் கனவே. உறக்கத்தில் இருந்து விழித்தபின் எப்படி உண்மையை உணர்கிறோமோ அதேபோல இறந்தபின்பு இதை உணர்வோம்.

உன் மனதால் சூட்சம ஸ்தூல உலகங்களை உருவாக்கி கற்பணை கனவு காண்கிறாய். எல்லாம் மாயை என்ற கோட்பாடு புரிந்திருக்கும் என நம்புகிறேன்...

ரீபப்ளிக் ஆஃப் தமிழ்நாடு... ஜாயிண்ட் கவர்னன்ஸ் கவுன்சில்...


காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க பா.ஜ.க புதிய திட்டம்...


எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வர அவர்களது மனைவியை மூளைச்சலவை செய்வதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது...

அளவில்லாமல் நடக்கும் மணல் கொள்ளை...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் ஆம்பூர் வட்டம் பாலாற்று பகுதிகளில் கொள்ளை போகும் மணல் இவை அனைத்தும் கொத்தகுப்பம், அகரம் சேரி பட்டு போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

இரவு நேரங்களில் தட்டாங்குட்டை கல் மடுகு காகா தோப்பு குடியாத்தம்  கிராமத்திலிருந்து வரும் மினி டிப்பர் லாரிகளில் பல்வேறு சாலை விபத்துகள் அவ்வப்போது நடந்து வருகிறது.

பாலற்றில் இருந்து மாட்டு வண்டிகள் முலம் மணல் கொண்டுவரப்பட்டு மினி டிப்பர் லாரிகளில் நம் பகுதியில் இருந்து பக்கத்து ஊர்களில் சட்டவிரோதமாக திருடி சென்று பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது கொள்ளை கும்பல் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களை மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களை பயன்படுத்தி அவர்களுக்கு மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற அனைத்து விதமான தீய பழக்கங்களை கற்றுத்தருகிறார்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகமாக மணல் திருடுவதில் ஈடுபடுகிறார்கள் இவர்களின் எதிர்கால கல்வியை மணல் கொள்ளை கும்பல் சீரழித்து வருகிறது.

அனைவரும் ஒன்று திரண்டு இவற்றை தடுக்க நினைத்தாலும் அவர்களை அவரது வீட்டிற்கே சென்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் மிரட்டுகின்றார்கள் மற்றும் வெளியில் நடமாட முடியாது போன்ற தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். லாரி வைத்து உன்னை அடிச்சு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்...

மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி...


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்...


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது...

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவது தான் கெளரவம்..

ஆனால் இப்போது டைனிங் டேபிள்....

இது சரியா தவறா ?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன...

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகி விடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது...

தெளிவா செல்லிடுங்க..


மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும்
என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண
ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க
ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி
குறுந்தொகை 392

இன்னாது அம்ம தோன்றல்
புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம்
அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல்
அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் - சாகர்மாலா திட்டத்தின் இரகசியம்...


தேன் நிலவு உருவான வரலாறு...


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

ஸ்டெர்லைட் எதிர்த்து மீண்டும் மக்கள் புரட்சி...


சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும்...


சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்...

சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது. சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும்.

மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.

அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளாக மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும்.

குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்" - (அகம் ‍164 : 1-3)

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும்.

மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்போல வளமற்று விளங்கும் என்பதை,

"கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு" - (அகம் - 143 : 1 - 5)

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

"உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்" - (அகம் - 141 : 5 -6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை.

அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது.

இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

"வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" - (குறுந் 382 : 4-6)

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும்.

புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது.

தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க்கில் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது.

புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும். தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


மன வேகத்தை அளந்தன் தமிழன்...


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்..

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.

இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன்.

அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / மணித்தியாலம் என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / மணித்தியாலம் = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

கொடுத்த பணம் என்னானது.? நிலக்கரி மின் உற்பத்தி...


பிரம்மத்தை நோக்கி...


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய்விடுவோம் என்கிற அறியாமைதான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்குபின் இல்லாமல் போவது இவை இரண்டும்தான். உண்மையில் இல்லாமல் இருப்பவைதான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் உடலை எரித்து சாம்பலாக்கியபின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்துவிட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்தபின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே. அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதேபோல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வுதான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ...

பெட்ரோல் விலை உயரம்...


இலுமினாட்டி சாமியார்கள்...


உலகத்தை பலவருடங்களாக ஆண்டு வரும் 13 குடும்பங்களின் இயக்கமான இலுமினாட்டிகள்.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் லட்சியமான புதிய உலக கட்டமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்...

இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு போராட்ட இயக்கங்கள் தடை செய்யப் பட்டு, இன்று பல அழிக்கவும் பட்டுவிட்டன..

அதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்..

இவர்கள் மக்களை முன்பு போல வெளிப்படையாக அடிமைப்படுத்தாமல், அடிமையாக இருப்பதையே உணராமல் மக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள்.

அதற்காக அவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.

அவற்றில் சில...

1) பணம் மற்றும் பொருளாதார தேடல்.

2) போதைக்கு அடிமை.

3) செய்திகளின் மூலம் மக்களின் சிந்தையை மடைமாற்றுவது.

4) பொழுதுப்போக்கு ஊடகத்திற்கு மக்களை அடிமையாக்குதல்.

5) போலி ஆன்மீகம்..

இதில் ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பிருந்தாலும், இந்தியா குறிப்பாக தமிழக மக்களை கவருவதில் ஆன்மீகம் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது.

மனிதருக்கு அப்பாற்பற்ற இயற்கை இயக்கங்களை வியந்து ஒரு தனி மனிதன் புரிந்து கொண்டு, அதை மக்களிடம் பரப்பினால் அது ஆன்மீகம்,

நான் தான் அந்த இயற்கையையே இயக்குபவன் என்று மக்களிடத்தில் சொன்னால் அதுதான் போலி ஆன்மீகம்.

இந்த போலி ஆன்மீகவாதிகளில் முக்கியமான ஒருவரான ஜக்கி வாசுதேவ் என்பவர், இலுமினாட்டிகளால் இயக்கப்படுபவர்.

கடவுளின் பெயரில் இவர்கள் மக்களை சுரண்டுவதை இந்த அரசாங்கம் அனுமதிப்பது என்பதே விந்தை தான்.

வாருங்கள் முலிகை பெட்ரோல் தருகிறேன் என்பவர்களை எல்லாம் கைது செய்யும் அரசாங்கம், வாருங்கள் கடவுளை காட்டுகிறேன் என்பவர்களை கைது செய்வதில்லை..


இந்த ஜக்கி வாசுதேவ், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வண பகுதிகளை , வளைத்து வைத்துள்ளார். மக்கள் கார்ப்ரேட் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்திற்கும் ஆசைப்படு என்ற ஆன்மீக கோட்பாட்டை கொண்டுள்ளார் இவர்..

ஆசைதான் அணைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமியில், அதற்கு நேரெதிரான கோட்பாடுகளை திட்ட மிட்டே இவரும் இவர்களின் சகாக்களும் பரப்புறை செய்துவருகின்றனர்.

இவர்கள் எல்லாம் யார்?

இவர்களை எதற்காக நாம் நம்ப வேண்டும்?

என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மையை எடுத்துறைக்கும்.

உண்மையில் இந்த ஒற்றைக் கண் ஜக்கி ஒரு இலுமினாட்டி... ஏற்கனவே அந்த ஆதாரப் புகைப்படம் வெளியிட்டுள்ளோம்...