20/05/2018

பயங்கர விமான விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்...


கியூபா நாட்டில் ஜெட்லைலன் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்ட்டி இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 பயணிகள் ஜெட் விமானம், மேலெழுந்த சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், காவல்துறையினரும் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஹவானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.