06/02/2018

வங்காளிகள் மிகை நுழைவை தடுத்து நிறுத்திட 14.8.1985இல் அன்றைய பிரதமர் இராசீவ் காந்திக்கும் , மாணவர் அமைப்புக்கும் இடையே அசாம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது...


இதுபோல, தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்திட திராவிடக் கட்சிகள் ஒரு ஒப்பந்தம் கண்டதுண்டா?

இல்லை.. ஏனென்றால் திராவிடம் என்ற போர்வையில் இருப்பதே வந்தேறிகள் தானே...

சிந்தியுங்கள் மக்களே.. இங்கு எதுவுமே மானியம் இலவசம் அல்ல.. எல்லாம் ஏமாற்று அரசியல்...


தமிழர்களே இன்னமும் மௌனமாக இருந்து எதை சாதித்து எதற்காக வாழப் போகிறீர்கள் ?


எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் தமிழன் என்று உரக்கச் சொல்லுவீர்கள்..

உங்களுக்கு பணம் தான் வாழ்க்கை, கொஞ்சம் சாராயம், திண்பதற்கு உணவு இருந்தால் போதும் எவனுக்கு வேண்டுமென்றாலும் காவடி தூக்குவீர்கள், அடி வருடியாய் வாழ்வீர்கள், இந்த வாழ்க்கை உங்களால் தேர்ந்துடுக்கப்ட்டதா? அல்லது திணிக்கப்பட்டதா?

அதுகூட உங்களுக்கு அடுத்த நாட்டுக்காரன் வந்து சொன்னால்தான் தெரியும்..

இதோ உங்கள் கண்முன் நீங்களே செத்துக் கொண்டு இருக்கிறீர்கள் . ஆம் உங்கள் உயிர் போகவில்லை ஆயினும் நடைபிணமாக வாழப் பழக்கப் படுத்தி இருக்கிறார்கள்.

உங்களுக்கு தேசியம், சர்வதேசியம், இந்தியம், எல்லாம் தெரியும் உங்கள் இனம் எது என்று மட்டும் தெரியாது. சொன்னாலும் விளங்கிக் கொள்ளும் நிலையில்லா இந்த ஆளும் வர்க்கம் உங்களை வைத்துள்ளது, எப்படியாயினும் வாழ்ந்து நொந்து சாகத்தான் போகிறீர்கள் கடைசியாக ஒருமுறை இந்த காட்சியை கண்டுவிட்டு சாகுங்கள்...

எங்கள் தலைமுறை வரை அடிமையாக வாழ்ந்துவிட்டீர்கள்.. அடுத்த தலைமுறையாவது தமிழினத்திற்காக சிந்தித்து வாழட்டும், உங்களின் இயலாமையை அடுத்த தலைமுறை மீது திணிக்காதீர்கள், அவனாவது போராடி இனத்திற்கு விடுதலை தேடி தர வழிவிடுங்கள்..

நீங்கள் உங்கள் திராவிட தேசியம், இந்திய இறையாண்மை தேசியம், என்ற மண்ணாங்கட்டி தேசியங்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடுங்கள்,  எங்களையாவது தமிழனாக வாழவிடுங்கள், போராடி சாகவாவது விடுங்கள். எங்களை உங்களைப் போன்ற அடிமையாக்கி விடாதீர்கள்..

நான் தமிழன். திராவிடன்அல்ல..

தமிழா...
பள்ளனாய்,
பறையனாய்,
நாடானாய்,
தேவனாய்,
வன்னியனாய்,
பரவனாய்,
பிள்ளையாய்,
கவுண்டனாய்,
மள்ளனாய்,
பார்பனாய்,
குயவனாய்......
வாழ்ந்தது போதும்..

வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்..

தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி..

தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள்...

பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்...

வெளியாரை வெளியேற்று...


ஞானம்...


பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும் போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே.. ஏன் இந்த தாமதம்....?

ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.

ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.

அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.

ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.

ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்று கொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.

மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.

ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக் கொண்டிருக்கிறது.

பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.

அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.

எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.

அந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.

இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.

அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.

இது யார் தவறு.....?

மனதின் தவறா....?

இல்லை ஞானத்தின் தவறா...

சோற்றுக் கற்றாழை...


திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்? திராவிடத்துக்கும், தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?


பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே? , ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

தமிழா விழித்துக்கொள்...


இந்த சுவரொட்டியில் ஆதிக்க தலித்துகள் என்று குறிக்கப்படுவது தமிழர்களான பறையர்களை...


அதாவது தமிழர்களான பறையர்களை தலித்துகள் என்பது. அடையாளப்படுத்தியது ஆதி ஆந்திரர்கள்.

ஆனால் ஆதிஆந்திரர்களான தங்களை தமிழ்ப்புலிகள் என்றும் ஆதித்தமிழர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தலித்தியம் பேசும் தமிழர்களின் கவனத்திற்கு... அதுவும் குறிப்பாக தலித்தியம் பேசும் தமிழர்களான பறையர்களின் கவனத்திற்கு...

கொங்கு மண்டல வெள்ளாளக் கவுண்டர்கள் மூவரோடு நான் தனித்தனியாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மூவருமே...

திருமாவளவனின் ஆட்கள் கொங்குப் பகுதியில் கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு என்றும் ஒவ்வொரு கவுண்டச்சி வயிற்றிலும் தலித்து வாரிசு வளரனும் என்று பேசியதாகவும் அதனால் கொங்குப்பகுதியில் அது பெரிய சிக்கல் ஆனது என்றும் சொன்னார்கள்.

அதிர்ச்சி அடைந்த நான் திருமாவளவனோ விசிகவில் இருக்கும் தமிழரோ அப்படி எங்கும் பேசியதில்லை என்றும் அவ்வாறு பேசியது ஆதிஆந்திரர் அமைப்புகளே என்றும் அவர்களை தூண்டிவிட்டது திக ராமகிருஷ்ணநாயுடு என்றும் அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆதிஆந்திர அமைப்புகள் கொங்கு வெள்ளாளக்கவுண்டரை எதிர்த்து பேசிய காணொளிகளை அனுப்பி வைத்தேன். அவர்களும் அதிர்ச்சி அடைந்தே போனார்கள்.

அந்த மூவரிடமும் நான் தனித்தனியாக வெவ்வேறு தருணங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் ஆதிஆந்திரர் பேசியது திருமாவளவன் பேசியதாக கொங்கு வெள்ளாளக் கவுண்டரிடம் திரித்து திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

நாயுடுக்கள் வழக்கமாக கொங்கு வெள்ளாளக்கவுண்டரிடம் நேரடியாக மோத மாட்டார்கள். உதாரணத்துக்கு நாயுடுக்களின் நிறுவனங்ளுகக்கு போட்டியாக இருக்கும் கொங்கு வெள்ளாளக்கவுண்டர் நிறுவனங்களை மூட அங்குள்ள பணியாளர்களை திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் பேச வைத்து பல சிக்கல்களை உருவாக்கி மூட வைப்பார்கள்.

திராவிடத்தின் மூலம் கோபால்சாமி நாயுடுவும் தலித்தியம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் கம்யூனிசம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் இதை செய்து வைப்பார்கள். அதுக்கு ஆதி ஆந்திரர் துணை போவார்கள்.

இதன் மூலம் தமிழர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன என்றால்...

தமிழ்ச் சமூகங்கள் ஒன்றோடு ஒன்ற சண்டை இடாதீர்கள். அதிலும் குறிப்பாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுக்கும் கொங்குப் பறையர்களுக்கும் திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் மதவெறி போன்றவற்றை பேசி பல கலவரங்களை வடுக நாயுடுக்களும் வட இந்திய பிராமண பணியாக்களும் தூண்டி விடுவார்கள்.

மிகவும் கவனமாக அதை எதிர்கொள்ள வேண்டிய தருணமிது...

தகவல் : Rajasubramanian Sundaram Muthiah

தமிழா நமது பலம் நமக்கு இன்னும் புரியவில்லை...


ஆனால் எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்..

அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விடக்கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் நமக்குள் இருக்கும் சாதி மதம் என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயல்படுகிறார்கள்..

நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்...

பாஜக பினாமி அதிமுக அரசு எப்படி சொல்லும்...


வரலாறு என்பது வெற்றி பெற்றவர்கள் வரலாறாகத் தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது...


தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

இதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர் மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்..

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றி பெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது..

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்..

இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை. இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல்.

எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே..

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்...

பழக்கத்தின் வலிமை...


தனியாக வாழ்வது..
மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.
ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,

பிறகு நாட்கள் ஆக, ஆக
அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.
பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.
கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகி விடுகிறீா்கள்...

இந்தியம் திராவிடம் இரண்டுமே தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமே...


தனியார் நிறுவனத்தில் வேலை கொடுக்கவே தன் இனமா பாத்து எடுக்குறான்.. ஆனால் இங்கு இந்த கேடு கெட்ட அரசு அடிச்சவுனுக்கு அரசு வேலை கொடுக்கும்...

நெடுங்குன்றம் அருகே பள்ளி அருகாமையில் அமைந்துள்ள கண்ணாடி பாட்டில் சுத்தம் செய்யும் கம்பெனியில் இருந்து வெளியேற்றபடும் ரசாயனம் கலந்த தண்ணீர் நெடுங்குன்றம் ஏரியின் கால்வாயில் கலக்கிறது...


இதனால் தண்ணீர் மாசடைகிறது. மீன்களும் செத்து மிதக்கின்றன.இந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் அவலம்...

சந்தை பொருளாதாரத்தில் என்றைக்கும் உற்பத்தி இருக்காது, அது ஒரு நாடு மலடு ஆவதற்கான அறிகுறி...


நினைவு கொள், உலக உற்பத்தி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது, ஆனால் அதை அவர்கள் சந்தை பொருளாதாரமாக மாற்றி விட்டனர்.. விழித்துக்கொள் தமிழா...

பொதுவான நோய் அறிகுறிகளும் மூலிகை மருத்துவமும்...


காய்ச்சல்...

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா...

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்...

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி...

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு...

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்...

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்...

கீத, வாத்திய, நிருத்தியம்...


கீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்...

கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.

சிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் செவ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.

மேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக்கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்...

இன்னுமா இவர்களை நம்பி ஏமாற போகிறீர்கள்?


திருட்டு திராவிடம்...


களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்...

அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்...

வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே...

பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்...

பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..

அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?

பாஜக வில் இருப்பவர்கள் தமிழ் தேசத் துரோகிகளே...


அதிமுக ஊழல் அரசின் அடுத்த சாதனை...


ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் விடுதலை செய்ய தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது...

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் நிரந்தர ரத்து : மம்தா அரசு அதிரடி...


லெவி ஸ்டாரஸ் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்...


ஒவ்வொரு லோகோவுக்குப் பின்னால் வரலாறே இருக்கும். இன்றைக்கு ஜீன்ஸ் பேண்ட் என்றாலே லெவி ஸ்டாரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும்...

அந்த லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸின் பின் பக்கமிருக்கும் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள் தான் இது.

எண் 1 சுட்டிக்காட்டுவது,  லெவி ஸ்டாரஸ் அண்ட் கோ என்கிற பெயரை. 

1829-ல் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்டாரஸ், தன்னுடைய குடும்பத்துடன் 1847-ல் 18 வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அங்கு உலர் பொருட்கள் விற்கும் கடையை இவர் குடும்பம் நடத்தியது. அமெரிக்கா முழுவதும் தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டிக் கொண்டிருந்த போது இவர் சான் பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு சுரங்கம் அருகே தையல் கடை போட்டார். அப்போது  சுரங்கம் தோண்டுபவர்களுக்காக எளிதில் கிழியாத கூடாரத் துணியில் பேண்ட் தைத்து கொடுத்தார். இவரே ஜீன்ஸை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இவருடைய பெயரிலான கம்பெனி ஜீன்ஸே லெவி ஸ்டாரஸ் அண்ட்  கோ.

எண் 2 சுட்டிக்காட்டுவது, லெவி ஸ்டாரஸ் நிறுவன முகவரியை, ஏனெனில் அமெரிக்காவில் நிறைய லெவி ஸ்டாரஸ் என்கிற பெயரில் ஜீன்ஸ்கள் பவனி வரவே, லெவி ஸ்டாரஸ் தனது நிறுவனத்தின் பெயரை பேடன்ட் வாங்க முற்பட்டார்.

அப்போது தான் அதே பெயரில் வேறொருவர் வாங்கியிருப்பது தெரியவரவே தனது ஊரான சான் பிரான்சிஸ்கோவையும், மாநிலமான கலிஃபோர்னியாவின் ஆங்கில எழுத்தான சி.ஏ-வையும் லெவி ஸ்டாரஸ் பெயருக்கு கீழ் இணைத்து காப்புரிமை வாங்கியுள்ளார்.

எண்  3  சுட்டிக்காட்டுவது, இரண்டு குதிரைகளைக் கொண்டு இழுத்தாலும் லெவிஸ் ஜீன்ஸ் கிழியாது என்பதை உணர்த்துவதற்காக.

எண் 4 குறிப்பிடுவது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் பிரபல மில்லான அமோஸ்கெக்லிருந்தே லெவிஸ் ஜீன்ஸுக்கான துணிகள் வாங்கப்படுகிறது. அந்த மில்லில் லெவிஸ் நிறுவனத்துக்கான துணி பண்டல் எண் 501 என்றே குறிப்பிடப்படுமாம். 501 எண் கொண்ட துணி வகை வேறு யாருக்கும் விற்பனையில்லையாம்.

எண் 5 குறிப்பிடுவது, கடுமையான துணியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பேண்டை அணிவதற்கு எளிமைபடுத்த காப்பரில் ரிவிட் அடிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

எண் 6 குறிப்பிடுவது, அந்த மான்செஸ்டர் மில்லில் வாங்கப்பட்ட துணி என்பதைக் குறிக்க அந்த மில்லின் காப்புரிமை குறியீடான XX என்பதை குறிக்கிறது.

எண் 7 குறிப்பது, முதல் முதலில் லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு காப்புரிமை வாங்கப்பட்ட தேதியான மே 20, 1873  ஆகும்.

ஒரு லோகோ லேபிளில் இவ்வளவு மேட்டர் இருக்கிறது...

280 கோடி வங்கிக் கடன் மோசடி , பிரபல கோடிஸ்வரர் நீரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு...


தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் , வேலூர் திருபத்தூரில் பரபரப்பு...


பாபு என்ற தலைமை ஆசிரியரை 11 ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் கத்தியால் இன்று குத்தியுள்ளான்.

சக மாணவருடன் சண்டையிடுவதாக அடிக்கடி தலைமை ஆசிரியர் கண்டித்து வந்ததாகவும் இன்று அவ்வாறு கண்டிக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாக கூறப்படுகின்றது...