15/08/2018

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் அறிந்திடாத தமிழர்கள்...


லூசிபர் யார்.?


சமீபத்தில் 4 ஆஸ்கார் விருதையும் மேலும் பல இதர விருதுகளையும் வென்ற the shape of water படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்...


"இது ஒரு விசித்திரமான காதல் கதை"
இதன் கதையை கேட்ட பின் "அதுக்குன்னு இவ்ளோ விசித்திரமான காதல் கதையா " என்று கேட்கும் தோன்றும் அளவு விசித்திர காதல் கதை.

1960 களில் நடக்கிறது கதை..
ஒரு உயர் பாதுகாப்பு செய்ய பட்ட அரசின் ரகசிய லேப்பில் வைத்து ஒரு விசித்திர உயிரினத்தை ஆராய்ச்சி செய்கிறார்கள். அது மனித சாயலில் இருக்கும் 'மெர்மெய்ட் ' மாதிரியான
amphibious வகையை சார்ந்த ஒரு மீன் மனிதன்.

அதை மனித தன்மை அற்ற முறையில் (அது ஒன்னும் மனிதன் இல்லையே என்ற சமாதானதுடன்) கொடூரமாக அடித்து டார்ச்சர் செய்து ஆராய்கிறீர்கள்.

அங்கே லேபில் சாதாரணமாக பெருக்கும் வேலை செய்யும் கதாநாயகி எலிசா ஒரு ஊமை பெண். அந்த விசித்திர உயிரினத்தின் மேல் பரிதாபம் கொள்கிறாள்.

யாரும் பார்க்காத போது அதற்க்கு சாப்பிட முட்டை கொண்டு வந்து தருகிறாள்.

ஊமை என்பதால் தனக்கு தெரிந்த சைகை மொழியை அதற்க்கு கற்று கொடுக்கிறாள்.

இருவரும் சைகையால் பேசி கொள்ள அவர்களுக்குள் நட்பு வளர்கிறது.
தனது குறையை பார்க்காமல் தன்னை சக உயிரினமாக பார்க்கும் அந்த விசித்திர ஐந்து மேல் இருந்த
நட்பு முத்தி போய் " இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல " என்று அந்த உயிரினத்தின் மேல் காதல் கொள்கிறாள் எலிசா

பிறகு ஒரு கட்டத்தில் அதை ஆராய்ச்சி செய்தவர்கள் அதை கொன்று விட முடிவு செய்யும் போது எலிசா அதை லேபில் இருந்து கடத்தி காப்பாற்ற திட்டமிடுகிறாள்.

அரசாங்கத்தின் ஹை டெக் செக்கியுரிட்டி மீறி சாதாரண பெருக்கும் வேலை செய்யும் எலிசா அதை கடத்த முடிந்ததா.? அவர்கள் காதல் என்ன ஆச்சு சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.

பசிபிக் ரிம் மற்றும் hell boy படங்களை எடுத்த இயக்குனர் தான் இந்த படத்தை எடுத்தவர் (hell boy இல் கூட இப்படி ஒரு மீன் மனித கேரக்டரை வைத்து இருந்தார் இல்ல ??)

அப்புறம் படத்தில் 3..4.. இடத்தில அடல்ட் ஒன்லி கண்டெண்ட் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க நினைப்பவர்களுக்கு இப்போவே எச்சரித்து விடுகிறேன்.

படத்தில் டைரக்டர் சொல்லாமல் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் சிலர் கவனிக்க தவறி இருக்கலாம்
(எச்சரிக்கை spoiler alart ..)

உதாரணமாக அந்த பெண்ணே ஒரு மீன் மனுஷியாக இருந்து மாறியவளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வைத்து இருக்கிறார்.

அவள் flash back இல் அவளை குழந்தையில் நீர் நிலை அருகே கண்டு எடுத்ததாக சொல்கிறார்கள்.
படம் முழுக்க அவளுக்கு நீர் உடனான ஈர்ப்பை மறைமுகமாக காட்டி இருக்கின்றார்.

அவள் கழுத்தில் உள்ள 3 கீரல்கள் எப்படி வந்தது என சரியாக சொல்ல படவில்லை. பிற்பாடு அந்த உயிரினம் அந்த கீரல்களை தடவி செதில்களாக்கி அவளை நீரில் சுவாசிக்க வைக்கிறது .

கொஞ்ச விபரீதமான காதல் கற்பனை கதை தான் என்றாலும் சாதா காதல் கதை பார்த்து சலித்து போனவர்கள் இந்த மீன் மனித காதல் கதையை கண்டு ரசிக்கலாம்..

பங்கம்டா டேய் வீரமணி...


"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" அப்படினு தானே உன் தலைவர் பெரியார் சொன்னார் ?

அப்புறம் ஏன்டா இப்படி மானரோஷமே இல்லாம வாழ்ந்துட்டு இருக்க?

இதுல இவரு பெயர மானமிகு.வீரமணினு தான் குறிப்பிடனுமாம்.

மானங்கெட்ட பயலே இப்படி ஓசிசோறு தின்றதுக்கு நாண்டுக்கிட்டு சாவலாம்...

பி.பி.சி காரன் இந்த கார்ட்டூனை போட்டு இந்தியாவின் மானத்தை வாங்குறான்......


இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது யார்?


பிரிட்டன் ராணியிடமிருந்து அதிகாரம் எப்படி மாறியது?

அதில் கையெழுத்து போட்டவர்கள் யார்?

பாகிஸ்தானை பிரித்ததில் உத்தரவு போட்டவர் யார்?

என்ற சுதந்திரம், குடியரசு பற்றிய தகவல்கள் இந்திய அரசிடம் இல்லையாம். அது இங்கிலாந்திடம் தான் உள்ளதாம். அதை கேட்டால் சர்ச்சைகள் வரும் என கேட்கவில்லையாம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய சுதந்திரம்...


கண்ணதாசன் ஆவிகளைப் பற்றித் தனது அனுபவங்களைக் கூறுகிறார் ...


இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்...

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்.

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால் தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார்.

தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே என்று பார்த்தார்.

உருது ஒரு வார்த்தையும் தெரியாத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில் பதில் வரவே ஆபீசரும்  மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபீசரும்  விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்று  அறிவித்து விட்டாள். அதன்படி அவர்கள்  வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.

ஆதலால்  நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாம் என்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல முடியாது என்பதும் பெறப்படுகின்றதல்லவா?

பாஜக மோடி இந்தியர்களை சோதனை எலிகளாக கேட்ஸ் பவுண்டேஷனிற்கு விற்றார்..


இது என்ன என்று பார்க்கிறீர்களா?


இதுதான் நமது ஊரில் மழைக்காலங்களில் களையாக வளர்ந்து காய்க்கும் சொடக்குதக்காளி என்று கூறுவார்கள்.

இதன் விலை 100 கிராம்  இந்திய ரூபாயில் 150.

நமக்குத்தான் எதில் என்ன சத்து இருக்கிறது எதற்க்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாம தானே சாப்பிடுகிறோம்.

வெள்ளைக்காரனுக்குத்தான் எதை சாப்பிடுவது எப்படி சந்தை படுத்துவது எதை எப்போது உற்பத்தி செய்வது என்று தெரிந்து இருக்கிறது.

நமது அரசாங்க விவசாய ஆராய்ச்சி துறை அந்த அளவிற்க்கு இருக்கிறது...

கமிஷன் கம்யூனிஸ்ட் களும் - சர்வதேச சிலை கடத்தலும்...


குயின்ஸ்லேண்ட் குழந்தை - 1946...


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது.

தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த தாயை தவிர வேறு யாருமேயில்லை.

ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது...

குடிகார மராட்டிய ரஜினியின் டூபாக்கூர் வேலை...


வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம் - பாவலர் அறிவுமதி...


1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்தி விட்டனர்.

அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை.

விடிந்ததும் விழித்துப் பார்த்தோம்.

போர்வை இருந்தது கோவணத்தைக் காணவில்லை.

தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம் விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.

வாருங்கள் தேசியக்கொடியை கிழிப்போம்.

அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக்கொள்வோம்.

மேற்கண்ட இந்தப்பாடல் பாவலர் அறிவுமதி அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். இந்தப் பாடல் எழுதப்பட்டதற்குப் பின்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்லாடல் எழுப்பப்பட்டது. அதன் பெயர் தமிழ்த்தேசியம்.

இன்றைக்கு தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஒரு மாநாடொன்று காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டில் தான் தமிழ்த்தேசிய உரிமை முழக்கம் ஓங்கி ஒலித்தது. 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் பெரியார் திடலில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டின் பெயர் தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாடு .

தோழர் பெ.மணியரசன், பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர் முன்னின்று இந்த மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன், கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச்செல்வன், பாவலர் அறிவுமதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன் (உரை வாசிக்கப்பட்டது) பேரா.தீரன், சாலய் இளந்திரையன், சேலம் அருள்மொழி, ஈழ வேந்தன், இயக்குநர் வி.சி.குகநாதன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

இந்த மாநாட்டில் முதன்மையானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பின்வருமாறு:  "தமிழர்கள் ஒரு தனித்தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்களுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with rights to secede) என்று பெயர்.

தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ்வுரிமை வேண்டும். இந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.

தேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.

குடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ்நாட்டைத் தமிழ்த்தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்."

இந்த மாநாட்டின் தீர்மானத்தை  எதிரொலிக்கும் வகையில் பாவலர் அறிவுமதி இந்திய  தேசியக் கொடி கவிதையை வாசித்த போது அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். அவரோடு சேர்ந்து ஈரோடு தமிழன்பன் அவர்களும் "அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்" என்று கோபக்கனல் வீசப் பாடினார்.

அன்றைக்கு மாநாட்டை கொச்சைப்படுத்தும் நோக்கில் பார்ப்பன 'துக்ளக்' ஏடு செயல்பட்டது. மாநாட்டில் பேசிய பலரது பேச்சுகளையும், கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டதோடு பிரிவினை கோரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு  கருணாநிதி அரசை கேட்டுக்கொண்டது.

துக்ளக் சோவின் ஆள்காட்டித்தனத்திற்கு கருணாநிதி அரசு உடனடியாக அடிபணிந்தது. பெ.மணியரசன் அவர்கள் பிரிவினைத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பாவலர் அறிவுமதி மீது இந்திய அரசுக் கொடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தூதர்சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்  ஈரோடு தமிழன் அப்பணியிருந்து நீக்கப்பட்டார்.

வழக்கு விசாரணைக்காக  தோழர் பெ.மணியரசனும், அறிவுமதியும் எழும்பூர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கினர். எட்டாண்டுகள் கழிந்த பின்னர் வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாடு நடத்தப்பட்டப்போது தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு ஆதரவாக திராவிட இயக்கச் சார்பாளர்கள் சுப.வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி உள்ளிட்ட பலர் துணை நின்றனர்.

ஆனால் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் அண்டைய தேசிய இனங்களின் தமிழர் விரோதப் போக்கு ஆகியவற்றுக்கு திராவிட க் கருத்தியல் உடன்பட்டு  நிற்பதால் அவற்றை பகைத்துக் கொள்ள சுப.வீ., பாவலர் அறிவுமதி போன்றவர்களால் இயல வில்லை. குறிப்பாக சுப.வீ. அவர்கள் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் படைவரிசையில் முதல் நபராக விளங்குகிறார்.

இந்தியத்தை நம்பி ஏமாளியானது போதும், திராவிடத்தை நம்பி அனாதையானது போதும் என்ற நிலைக்கு தமிழக இளைஞர்கள் தற்போது வந்து விட்டனர்.  தமிழ்த்தேசிய விடுதலை இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் தமிழர்நலன் காக்கும் கொள்கையென்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்.

தமிழ்நாட்டை அடிமைமுறி நாடாக  இந்திய அரசு வைத்திருப்பதன் அடையாளம் தான் இந்திய விடுதலை நாள் கொண்டாட்டாமாகும். தமிழர்கள் இந்திய விடுதலை நாளைக் கொண்டாடுவது  தங்களுக்குத் தாங்களே விலங்குபூட்டிக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்.

இந்திய விடுதலைத் திருநாளைப் புறக்கணிப்போம்.

தமிழ்த் தேசிய விடுதலைக்குப் போராடுவோம்...

குடிகார மராட்டிய ரஜினியின் டூபாக்கூர் வேலை...


மாநில சுயாட்சி முழக்கத்தை உருவாக்கியது திராவிட இயக்கமா?


"இந்து"  சமசுக்கு மறுப்பு...

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழ் "இந்து" ஏடு முரசொலி ஏட்டை மிஞ்சும் வகையில் நாள்தோறும்  அவருக்கு புகழ்  மாலை சூட்டி எழுதி வருகிறது . இன்றைய தமிழ் "இந்து" (13.8.2018) ஏட்டில் எழுத்தாளர் சமஸ் "கருணாநிதி சகாப்தம்" என்ற தலைப்பில் அவர் புகழ் பாடும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதிலே, திராவிட இயக்கத்தின் "திராவிட நாடு" கோரிக்கையானது  இந்திய விடுதலைக்குப் பிறகு, அது சாத்தியமற்றுப் போனதால் மாநில சுயாட்சி கோரிக்கையை  தாமே உருவாக்கி கொண்டதைப் போல எழுதியுள்ளார். இது உண்மைதானா? என்பதை விளக்குவதே நமது நோக்கமாகும்.

சமஸ் எழுதுகிறார்...

பிரிட்டிஷ் காலனியாதிக்க இந்தியாவில் திராவிட நாடு வேட்கையோடு அரசியல் களம் புகுந்த பெரியார், அண்ணா வழிவந்தவர் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தோடு தனி நாடு கனவு இற்றுப்போனபோது தமிழ் மக்களை ரத்தக்களறியில் திருப்பிவிடாமல் இந்திய ஒன்றியம் எனும் அமைப்புக்குள் சாத்வீக வழியில் தேசிய இனங்கள் தம் உரிமைகள், அதிகாரங்களை வென்றெடுக்கும் வழிமுறையைக் கண்டதும், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை விரிவாகப் பயிற்றுவித்ததும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனை.

பிரித்தானியருக்கு கட்டுப்பட்டு, அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் "திராவிடநாடு" அமைக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள் தான் பெரியாரும், அண்ணாவும்.

பிரித்தானியர் திராவிடநாட்டைப் பிரித்துக் கொடுக்காமலே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடுதலை தந்த போது, அதற்கு எதிராக திராவிட மக்களை அணி திரட்டி அகிம்சை வழியிலே கூட  போராடுவதற்கு திராவிட இயக்கம் அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை.

திராவிட இயக்கம் ஏதோ,  துப்பாக்கி ஏந்திப் போராடியதைப் போலவும்,  இரத்த களறியில் தமிழ் மக்களை திருப்பி விட அவற்றிற்கு விருப்பம் இல்லாததைப் போலவும், தாம் எடுத்துக் கொண்ட கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார் சமஸ்.

தேசிய இனம் என்ற சொல்லாடலை மருந்துக்கு கூட பயன்படுத்தாத இயக்கம் தான் திராவிட இயக்கம். மொழிவழி பிரிந்து இன வழி கூடுவதுதான் திராவிட நாடு என்றார் அண்ணா. தமிழ்த் தேசிய இனம்  என்ற ஒன்று இருப்பதைச் சொல்லாமலே, தமிழ் மொழி வேறு, திராவிட இனம் வேறு என்று தவறாக விளக்கம் கூறி தமிழின அடையாளத்தைக் குழப்பி விட்டார்.

மேலும், தமிழ்நாடு நீங்கலாக ஏனைய ஆந்திரா, கேரளா, கர்நாடகப் பகுதிகளுக்குச் சென்று "திராவிட நாடு" கருத்துப் பரப்பலை அண்ணா மேற் கொள்ளவும் வில்லை. பின்னர்
திராவிட நாடு கனவு இற்றுப் போகாமல், நாற்று போல வளருமா என்ன?  சமசு "தனி நாடு கனவு" எதற்காக இற்றுப் போனது என்பதைச் சொல்லாமல் தவிர்த்து விட்டார்.

அடுத்து, சமஸ் எழுதுகிறார்..

அவர்கள் உருவாக்கிய ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கமானது இந்தியா என்கிற சிந்தனையையும் விஸ்தரிப்பதானது. நாட்டின் பாதுகாப்பு நீங்கலாக எல்லா அதிகாரங்களையும் மாநிலங்கள் சிந்திப்போம் என்ற அண்ணாவின் கனவு பல விஷயங்களில் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது.

அண்ணா வழியில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி, நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

மத்தியில் கூட்டாட்சி -மாநில சுயாட்சி என்பது அவர்கள் உருவாக்கினார்கள் என்கிறாரே சமசு? இது உண்மைதானா? மாநில சுயாட்சி பற்றி தி.மு.க. பேசியது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதன் கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்கிற உண்மையை சொல்வதற்கு சமசுக்கு மனமில்லை போலும்!

1945 சூன் 26 இல் திருச்சி மலைக்கோட்டையில் நடந்த இலக்கிய கூட்டத்தில் முதன்முதலில் "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் சமஷ்டி" என்று பிரகடனம் செய்தவர் ம.பொ.சி‌ . தான் .

1946இல் தமிழரசுக் கழகம் உருவான பிறகு "புதிய தமிழகம்" என்ற பெயரிலே, (அப்போது ஆந்திரர்கள் "விசாலாந்திரம், கேரளர்கள் "ஐக்கிய கேரளம்" என்று கூறி வந்தனர்) மூன்று அதிகாரங்களை மட்டுமே தானே விரும்பி மத்திய அரசிடம் விட்டு விட்டு, எஞ்சிய அதிகாரங்கள் உள்ளிட்ட இதர எல்லா அதிகாரங்களையும் கொண்ட சுயாட்சி பிரதேசமாக தமிழகம் விளங்க வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார்.

மாநில சுயாட்சி கேட்டதற்கு எதிர்ப்பு காட்டிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகியதோடு பல்வேறு காலங்களில் மாநில சுயாட்சி குரலை எழுப்பி வந்த ம.பொ.சி. அண்ணா காலத்திலும் சரி, கருணாநிதி காலத்திலும் சரி அந்தக் குரலை தாழ்த்த வில்லை.

நாட்டிலேயே மாநில சுயாட்சி தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றியவர் கருணாநிதி என்பது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னதாக அந்த தீர்மானத்தை தமிழக சட்ட மன்ற வரலாற்றிலே முன் மொழிந்து  பேசியவர் ம.பொ.சி. தான்.

21. 8.1870இல் மாநில சுயாட்சி வழங்க கோரும் தீர்மானத்தை சட்ட மன்றத்தில் ம.பொ.சி. கொண்டு வந்ததோடு,  மத்தியில் போக்குவரத்து, அயல்நாட்டு உறவு, பாதுகாப்பு ஆகிய மூன்று அதிகாரங்களை வைத்தக் கொண்டு மீதமிருக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டம் இதற்கு ஏதுவாக திருத்தப்பட வேண்டும் என்றும் பேசினார்.

ம.பொ.சி. முன்மொழிந்த தீர்மானத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்த முதல்வர் கருணாநிதி அவர்கள் டாக்டர் இராஜமன்னார் குழு பரிந்துரை கிடைத்தவுடன் சுயாட்சி கோரும்  தீர்மானம் கொண்டு வரப்படும் என்று உறுதி கூறினார்.

நான்கு ஆண்டுகள் கழித்து, இராஜமன்னார் குழு பரிந்துரை வெளியிடப்பட்டது.   24. 4. 1974இல் சட்ட மன்ற மேலவையில் முன்வைத்து, மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன் மொழிந்தார்.

அந்த தீர்மானம் பற்றி 27. 4. 74இல் சட்ட மன்ற மேலவையில் விவாதம் நடத்தப்பட்ட போது, ம.பொ.சி‌. வரவேற்றும், அதன் குறைகளை சுட்டிக் காட்டியும் பேசினார்.

அதிலே, "தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி முன் பகுதி அதிக சுயாட்சி கோருகிகிறது. பின்பகுதி குறைந்த பட்ச சுயாட்சி கோருகிறது. அதாவது, கொள்கை அளவில் அதிக பட்ச சுயாட்சி , கோரிக்கையாக வைக்குமிடத்தில் குறைந்த பட்ச சுயாட்சியை முதல்வர் கேட்டுருக்கிறார். மொத்தத்தில் சொன்னால், "டீசென்ரலைசேஷன்" என்ற அளவிற்கு தான் தமிழக அரசு கோருகிறது. குறைந்த பட்ச சுயாட்சியோடு ஆறுதல் அடைகிறது" என்றார்.

விவாதத்தை முடித்து, வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு பேசினார். அது வருமாறு...

அண்ணா எழுதிய உயிலிலே கூட அதிக அதிகாரம் தானே கேட்டார். மாநில சுயாட்சி கேட்டாரா? இல்லை. இந்தக் கருணாநிதி தான் வெட்கங்கெட்டுப் போய் மாநில சுயாட்சிக் கொள்கையை ம.பொ.சி.யிடம் கடன் வாங்கிக் கொண்டார் என்றார்கள். நான் அதற்கு வெட்கப்படவில்லை. நல்லவற்றை கடன் வாங்குவது தவறல்ல. மாநில சுயாட்சி சிலம்புச் செல்வர் அவர்களால் நீண்ட நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற- வலியுறுத்தப்பட்டு வருகின்ற உன்னதமான கொள்கையாகும்.

மாநில சுயாட்சி முழக்கத்தை ம.பொ.சி.யிடம் வாங்கியதற்கு கருணாநிதியே வெட்கப்படாத போது, இந்த முழக்கத்தை எழுப்பிய ம.பொ.சி. பெயரைச்  சொல்வதற்கு சமசு மட்டும் வெட்கப்படுவதேன்?

நன்றி: பெ.சு. மணி எழுதிய "ம.பொ.சிவஞானம்" நூலிலிருந்து...

இயற்கையை நோக்கி பயணிப்போம்...


ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன...


ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

மூலநோய் குணமாகும்...

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.

சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

மலடு நீங்கும்...

ஆண்கள், பெண்களின் மலட்டுத் தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது.

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலர வைக்க வேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்க வேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.

தசை வலி நீங்கும்...

ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும்.

இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது..

பல்வலி போக்கும்...

பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்...

தடுப்பூசி மர்மங்கள்...


இத்தடுப்பூசியின் மிகக் கொடூரமான விளைவு, இது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். 

ஆனால் ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகள் இத்தடுப்பூசியின் பின்விளைவுகளால் இறந்த/தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் கேட்ஸ் ஃபவுண்டேஷனை தப்பிக்க வைத்தன. 

அரசு நிறுவனங்களான ICMR & DCGI ஆகியவை இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் விரோதமாக இந்த சோதனைகளுக்கு ஒப்புதலை வழங்கி, நடைமுறைப்படுத்தவும் உதவி செய்ததோடு, அரசு நிதியை தகாத வழியில் உபயோகித்தது.

தனியார் நிறுவனத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களையும் அரசாங்க உட்கட்டமைப்பையும் (infrastructure) வழங்கி இக்குற்றத்தில் கூட்டு பங்காளிகளாகவும் செயல்பட்டுள்ளன...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தை மர்ம நபர் துப்பாக்கியால் சுட முயற்சி; டெல்லியில் பரபரப்பு...


உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி அரசியல் சாசன சபையில் வைத்து மர்மநபர் சுட முயற்சித்துள்ளார்...

சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கில், வரும் 20ல் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...


ஆபத்தான கோரிக்கை எனவும், இதனால் அந்தரங்க உரிமை பாதிக்கும் எனவும் நீதிபதி கருத்து.

சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ல் நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

தடுப்பூசி மர்மங்கள்...


ஈர்ப்பு விதி...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது.

நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள் தான். நாம் எதைக் குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.

நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான் என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே. யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள். இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?

ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது.

 அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று.

திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும். ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு - (குறள் எண் 595)

நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?
ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்றவேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.

ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்...

கேளுங்கள்: 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி. 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்ற பழமொழி நினைவு வருகிறதா? நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்துகொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.

நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா? கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.
அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.

ஆம்...... நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில் தான்...... இல்லை இல்லை.... உங்கள் மனத்தில் தான் இருக்கிறது....

நானும் இந்த அடிமை பொருளாதாரத்தில் தினமும் போராடி கொண்டிருப்பவனே...


மீள்வதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்..

சந்திப்போம், பயணத்தின் பாதையில்...

மோயாற்றில் வெள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்...


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மோயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மோயாறு அருகே ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கியதை தொடர்ந்து சுஜில்குட்டை வழித்தடத்தில் மோயாற்றை கடக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மோயாற்று கரை பகுதிகளில் ரோந்து மேற்கொள்ள வனத்துறைக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவிடப்பட்டுள்ளது...

புரோக்கர் வைகோ நாயுடு கலாட்டா...


சிவவாக்கியர் சித்தர் பாடல்...


சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?

ஓம் என்னும் ஒலி வழியாக மழை நீராக வந்ததில் மூழ்கி வினை தீர்ந்தது, சுத்தம் ஆகிவிடோம் என்று எண்ணும் மூடரே, சுத்தம் எது? அக சுத்தமா? புற சுத்தமா? தீயாக சுட்டது எது ? என்பதை அறிந்து எது பேதம் இல்லாத மெய்பொருள் என்று உணர்ந்து திளைத்திடுங்கள்...

தற்சார்புக்கு திரும்புங்க... மரபுவழி வாழ்க்கைக்கு பழகுங்க... அதுவே நம்மை காப்பாற்றும்...


16 குழந்தைகள் இலக்கு.. 12 வது குழந்தையுடன் மாயமான கர்ப்பிணியை தேடும் சுகாதார துறை...


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். அவரது மனைவி ஆராயி (52). இவர்களைத் தான் போலிசாரும் சுகாதார துறையிரும் தேடி வருகிறார்கள். ஆனந்தன் - ஆராயி தம்பதிக்கு இதுவரை விஜயா, கலா, போதும்பொண்ணு, ஹரிகரன், மாதவன், காளிதாஸ், கரிகாலன், முனீஸ்ரன் உள்பட 9 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகள் இறந்துவிட்டனர். 12 வது குழந்தையாக தற்போது கர்ப்பமாக உள்ளார். இதில் மாதவன் உள்ளிட்ட 4 பேருக்கு திருமணம் நடந்துவிட்டது. இத்தனைக்கு 10 அடி நீளம், 6 அடி அகலத்தில் உள்ள சின்னஞ்சிறிய பாதி மண் சுவர் வைக்கப்பட்ட கூரை வீடு. இதில் தான் அத்தனைபேரும் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த மாதவனும் அந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர்களின் தொழில் பறவைகள் வேட்டையாடுவது, பன்றி வளர்ப்பது தான். இத்தனை குழந்தைகளும் மருத்துவமனை துணையின்றி சுயபிரசவமாக தான் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் 12 வதாக வயிற்றில் உள்ள குழந்தைக்காக கடந்த 4 ந் தேதி சிங்கவனம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சென்ற ஆராயிக்கு ரத்தம் குறைவாக உள்ளது, தொடர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். பிரசவம் மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் அதனால் தங்க வேண்டும் என்று சொன்னதால் சில நாட்கள் அங்கு தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கும் செல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டனர். 12 வது குழந்தையுடன் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் பிரசவம் பிரச்சனையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக சுகாதார நிலைய மருத்துவர் குழு அவரை பல நாட்கள் இரவு பகல் வீட்டில் தங்கி இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் நாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து ஆராயியின் அம்மா.. எனக்கு 5 புள்ளைங்க தான் என் மகளுக்கு தான் 10 க்கும் மேல. இப்ப அவளுக்கு பிரசவம் நடந்த ஆபத்துன்னு ஆஸ்பத்திரியில சொன்னாகலாம். அன்னையில இருந்து எங்கே போனாங்கன்னு தெரியல என்றார்.
அவரது உறவினர்களோ.. ஆனந்தன் – ஆராயி தம்பதிக்கு 16 புள்ளை பெத்துக்க ஆசை. அதில் 12 வது குழந்தை தான் வயிற்றில் இருக்கிறது. 11 வது குழந்தைக்கு ஆஸ்பத்திரிக்கு பிரசவம் பார்க்க போனாங்க. அங்கே ரொம்ப சிக்கலா இருக்கு ஆபரேசன் செய்யனும் என்று சொன்னதால அங்கிருந்து வீட்டுக்கு வந்து சுயபிரசவம் நடந்துச்சு. 11 குழந்தைகளும் சுயபிரசவம் தான். அதில் 2 குழந்தை இறந்துடுச்சு. 4 பேருக்கு மேல கல்யாணம் நடந்துருச்சு.

இப்ப 12 வது குழந்தைக்காக சும்மா செக்கப் போனாங்களாம். டாக்டர் உடம்பு தாங்காது. ரத்தம் பத்தாதுன்னு சொல்லி தங்க சொல்லி இருக்கிறார். அதை கேட்டதும் ஆபரேசன் செஞ்சுடுவாங்கன்னு நினைச்சு தப்பி வந்து ஊரைவிட்டே போயிட்டாங்க. இனி குழந்தை பிறந்த பிறகு தான் வரப் போறாங்க. 18 ந் தேதி குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார். தினமும் போலிசும், ஆஸ்பத்திரிகாரங்களும் வந்து தேடுறாங்க. ஒரு நர்சு இரவுல தங்கி இருந்து தேடினாங்க கிடைக்கல என்றனர்.

மேலும்.. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தனுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனை வரை அழைத்துச் சென்ற நிலையில் அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இத்தனை குழந்தைகள் பிறக்கும் வரை வேடிக்கை பார்த்த சுகாதாரதுறை தற்போது சுயப்பிரசவம் பற்றிய பிரச்சனை எழுந்த்தும் ஆராயியை தேடுகிறது. இந்த முறையும் சுயமா குழந்தை பெத்துக்கும் தான் வருவாங்க. ஆனால் 16 குழந்தை பிறக்கும் வரை கருத்தடை செய்ய ஒத்துக்கமாட்டாங்க என்றனர்...

எச்சை உடகங்களின் மாமா வேலை ஆரம்பம்...


அரச மரத்தில் மின் ஆற்றல்கள் உண்டு...


அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்  என்றொரு பழமொழி இருக்கிறது.

அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக் கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

நமது முன்னோர்கள் அதனால் தான் பிள்ளையாரை அரச மரத்தின் கீழ் வைத்தனர்...

யார் இந்த கவி...


உங்க வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கூட உற்பத்தி செய்யாம, ஏன் பணத்தை நோக்கி ஓடுறீங்க ?


உங்ககிட்ட அடிப்படை தேவைகள்னா தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, போன்ற ஆடம்பரங்கள்னு நம்பவெச்சது வணிகம்...

கள்ள பணத்தில் பாஜக மோடியின் குஜராத் முதலிடம்...


வெளிநாட்டிலிருந்து வரும் இந்திய கள்ளப் பணத்தில் 42.89% குஜராத் வழியாக வருகிறதாம்...

தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது ஆகாஷ் மனோஜ், மெளனமாக ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார்...


சைலண்ட் ஹார்ட் அட்டாக் பலருக்கு ஏற்படுவதால் அதைப் பற்றி தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டால் பலரது உயிர் காக்கப்படும், அதன் முதல் அடியே ஆகாஷ் கண்டுபிடித்துள்ள கருவி.

பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார் வலி, மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படும். ஆனால் சைலண்ட் ஹார்ட் அடாக் ஏற்படுவோருக்கு இதுபோன்று எதுவும் வருவதில்லை. அதுபோன்ற சமயத்தில் பலரும் அதை சாதரண ஜுரம், உடல்வலி என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வரவிருக்கும் ஆபத்தை உணராமல் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பலரும் ஏமாந்து போகின்றனர்.

ஆகாஷின் தாத்தாவிற்கு இதுபோன்று ஒருமுறை சைலண்ட் மாரடைப்பு ஏற்பட்டது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இதை கண்டுபிடிக்க ஒரு கருவி தேவை என யோசித்த ஆகாஷ் ஆய்வில் இறங்கினார்.

என் தாத்தா ஒரு சர்க்கரை நோயாளி, அதிக ரத்த அழுத்தமும் உடையவர். ஆனால் ஆரோக்கியமாக இருந்தார். ஒருமுறை உள்ளுக்குள்ளே ஏற்பட்ட மாரடைப்பில் நிலைகுலைந்து இறந்து போனார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறினார் ஆகாஷ். ஆகாஷுக்கு மருத்துவ ஆய்வுகள் என்றால் அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே மருத்துவம் சம்மந்தமான ஆராய்ச்சிகளை படிப்பார்.

பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் மையத்தின் நூலகத்துக்கு சென்று அவ்வப்போது படித்து தன் அறிவை பெருக்கிக் கொள்வார் ஆகாஷ். ஹோசூரில் வாழும் ஆகாஷுக்கு அந்த மையம் ஒரு மணி நேர தூரத்தில் இருப்பதால் அந்த நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

ஆய்வுக் கட்டுரைகள் எடுத்து படிக்க அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. அதனால் நூலகங்கள் சென்று படிக்கத்தொடங்கினார் ஆகாஷ்.

நான் படித்துள்ள ஆய்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டி இருந்தால் அது கோடிகளை தாண்டி இருக்கும் என்கிறார். மருத்துவ அறிவியலில் ஆர்வம் மிகுதியால் அது சம்மந்த ஜர்னல்களை எடுத்து படிப்பது எனக்கு பிடிக்கும் என்கிறார்.

துளையில்லா தொழில்நுட்ப முறையைக் கொண்டு ஆகாஷ் இந்த கருவியை உருவாக்கினார். இது ரத்தத்தில் ப்ரோடீன், FABP3 இருப்பதை கண்டுபிடிக்கும். ஒருவரின் மணிக்கட்டு அல்லது காதுப் பகுதியில் பின்னால் பொருத்திடவேண்டும். ஹஃப்பிங்க்டன் போஸ்ட் பேட்டியில் கூறிய ஆகாஷ்,

“ப்ரோடீன் வகைகளில் மிகச்சிறிய வகை FABP3 ஆகும். ரத்தத்தில் இருக்கும் இது பொதுவாக நெகட்டிவாக சார்ஜ் ஆகியிருக்கும். அதனால் பாசிட்டிவ் சார்ஜ் நோக்கி இது ஈர்க்கப்படும். இந்த தன்மையை நான் என் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தினேன்,” என்றார். 

அண்மையில் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவர் ப்ரனாப் முகர்ஜி, ஆகாஷை தனது விருந்தினராக அழைத்து பாராட்டினார். Innovation Scholars In-Residence திட்டத்தின் கீழ் அவர் அழைக்கப்பட்டார். தனது கருவி பல உயிர்களை காக்க உதவும் குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கையாக உள்ளார் ஆகாஷ். இக்கருவிக்கான காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். பொது மக்களின் நலனுக்காக இந்த கருவியை இந்திய அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் கார்டியாலஜி துறையில் படிக்க விழைகிறார். டெல்லி ஏய்ம்ஸ் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறார் இவர். இந்த இளம் வயதில் தனது ஆர்வத்தை ஒரு பயனுக்காக பயன்படுத்தி எல்லாருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் இச்சிறுவன் நம்நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். இவருக்கு நமது வாழ்த்துக்கள்...

திமுக வில் உட்கட்சி சலசலப்பு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 8...


நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள் அவருடைய இளமையில் ரஷியாவில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே இராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.

1964ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுது போக்கிற்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். டாக்டர்கள் அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும் பையிலிருந்து பார்க்காமல் வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒத்துக் கொண்டார். அப்போது செய்த ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.

அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி அல்லது தம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்த சமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் ந்¢னா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.

ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அறுபதிற்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால் ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.

நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.

அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்திற்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில் சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை மேல் வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக அதை நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.

1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத்துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.

நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப் பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.

ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத்தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?

மேலும் பயணிப்போம்...

சீனா வில் வெளியாகும் முதல் தமிழ் படம் மெர்சல்...


உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி...


தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை  பன்னிரண்டு  கோடியாகும்...

அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன..

அதை விட இரண்டு மடங்கு எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை.

ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை.

இது பற்றி சிந்தித்துப் பார் தமிழா..

பிறகு புரியும் ஏன் தனித் தமிழ்நாடு கேட்கிறோம் என்று...

இந்தியமும் - திராவிடமும் என்றால் என்ன.?


தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு....


இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்..

உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.

இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..

தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்..

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா) நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகு வைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசை திருப்பியும் வந்ததே இன்றைய  தமிழனின் நிலைக்கு காரணம்...

விவசாயம் என்பது வியாபாரம் அல்ல...


எட்டு வழிச்சாலையை எதிர்க்க ரோட்டில் இறங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை...


கிராம சபாவில் ஒட்டு மொத்த மக்களின் குரலாக ஒலித்தாலே போதும்...

சுதந்திர தினம் கொண்டாடும் இந்திய அடிமைகளே பதில் சொல்லுங்கள்...


தினம் தினம் தற்கொலை செய்துக் கொள்ளும் ஏழை விவசாயிகள் சார்பாக...

குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் சார்பாக...

சிங்கள ராணுவத்தால் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள் சார்பாக...

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட மூன்று லட்சம் தமிழர்கள் சார்பாக...

கேள்விகளின்றி கொள்ளப்படும் தலித் மக்கள் சார்பாக...

மாவோஸ்டுகள் என்று கொள்ளப்படும் பழங்குடிகள் சார்பாக...

ஆந்திராவில் போலீசால் சுட்டுக் கொள்ளப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சார்பாக...

உங்கள் அனைவருக்கு என் கேள்விகள்..

இதற்க்காகத் தான் நீங்கள் இந்திய சுதந்திர தினம் கொண்டாடுகிறீர்களா?