09/04/2018

Ipl ஆட்டத்தை தடுக்க நினைக்கும் போராளிகளே...


உங்கள் வேலை எளிமையாக
எந்தன் பரிந்துரை...

இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆட்டச்சீட்டு வாங்கி உள்நுழைய வேண்டாம்...

அந்த மைதானத்தை சுற்றி வலம் வாருங்கள்..

தொடர்வண்டி தண்டவாளம் மைதானத்திற்கு வாட்டமாக தான் உள்ளது..

அதிலும் வலம் வாருங்கள்...

தங்களுக்கான செலவு வெறும் 30உரூவாய் மட்டுமே...

நல்ல தரமான கவட்டாவில் வாங்கி கொள்ளுங்கள்..

சாலையில் கிடக்கும் பொடிக்கற்களை பொறுக்கிக்கொள்ளுங்கள்...

வேண்டுமானால் அந்த கல்லை சுற்றி
ஒரு காகிதத்தை சுற்றுக்கொள்ளுங்கள்

அதில் தமக்கு என்ன இலக்கோ
அதை எழுதி நன்கு சுருட்டிக்கொண்டு
எவ்வளவு சுமக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்...

மைதானத்தை சுற்றி வலம் வரும் சாலைக்கும்,மைதானத்தின் மையத்திற்கும்
200மீ இடைவெளி தான் இருக்கும்...

கவட்டை வில்லை பயன்படுத்தி 300மீ வரை எளிமையாக அடிக்கலாம்....

கவட்டை வில்லை வைத்து சரமாரியாக கல்மழையை பொழியுங்கள்...

ஆட்டமும் நிற்கும் நமக்கான செய்தியும் வெளியே கொண்டு செல்ல முடியும்...


என்னத்தான் காவாளிகள் தங்களை பிடிக்க வந்தாலும்...

மைதானத்தில் வீசப்பட்ட கற்களை பொறுக்குவதற்கு அரைநாள் மேலே ஆகும்...

ஆக ஆட்டம் தடைபடும்...

இதையும் தங்கள் புத்திக்குள் செலுத்திக்கொள்ளுங்கள்...

இதே கூற்றை
கூத்தாடிங்கபோடும் மாநாட்டிற்கும் பயன்படுத்துங்கள்...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

சூரப்புலிகளே நம் ஆயுதம்
கவட்டை வில்...

உள்ள போனாதான கவட்டைல ஏதும் இருக்கானு முழு சோதனை செய்வானுங்க...

நம்ம வெளிய விளையாடுவோம்....

எவன் வந்து கோமணத்தை உறுவுறானு பாத்துருவோம்...

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் பாஜக பினாமி அதிமுக...


சிவகாசியில் ஸ்டெர்லைட் எதிர்த்து போராட்டம்...


சிவகாசியில் ஊர் பொங்கல் திருவிழாவில் தூத்துக்குடி நெல்லை மக்களுக்காக  ஸ்டெர்லைட் எதிர்ப்பை வெடிமருந்துகளால் உடல் முழுவதும் பூசி ஸ்டெர்லைட் எதிர்ப்பை வெளிப்படுத்திய உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

தூரத்தில் இருக்கும் சிவகாசிக்கும் இருக்கும் உணர்வு பிற்காலத்தில் எங்களுடனே பாதிப்பை பயன்பெறும் நெல்லைமாவட்டம் எதிர்ப்பை காட்டாதது   வருத்தமளிக்கிறது..

ஒன்றுசேருவோம் வெற்றி பெருவோம் நம் சந்ததிகள் வாழ மண்ணை காப்போம்...

அருமை ஜி.வி.பிரகாஷ்...


IPL சூதாட்ட களம் பற்றி சிறிய விழிப்புணர்வு...






கிரிக்கெட் பைத்தியங்களுக்காக...

சென்னை சேப்பாக்கத்திற்கு கட்டுபாடு...


அட முட்டாள் தமிழா.. நீ உன் பணத்தை கொடுத்து அவர்கள் சொல்வதை போல் அடிமையாக செயல்பட போகிறாயா..?

உள்ள பேனர் எடுத்துனு போவதான்  கட்டுப்பாடு  உள்ள போறதுக்கு கட்டுப்பாடு இல்லை...

இதயாவது செய்ங்க மக்கா.. கிரிக்கெட் கிருக்கர்களே இல்லன்னா உன் சந்ததி சோறு சாப்பிடாம மாத்திரை சாப்பிடும்...

மக்களாட்சி என்றால் என்ன.?



இரத்தம் சிந்தும் ட்ராகன் மரங்கள்...


ஆப்பிரிக்க காட்டுப் பகுதியில் வளரும் ஒருவகை மரங்கள் இரத்த சிவப்பு பிசின்களை சிந்துகின்றது. மரத்தின் பட்டைகளுக்கிடையில் கசியும் சிவப்பு நிறத்திலான பிசின் காய்ந்து மரத்தை வெட்டியதும் சிவப்பு நிற திரவமான வழிகிறது.

இது பார்ப்பதற்கு ரத்தம் போன்று இருப்பதால் பலரும் இதனை டிராகன் மரம் என அழைக்கின்றார்கள்.

பல்வேறு மருத்துவக்குணங்கள் கொண்ட இந்த மரத்தின் பல தேவைகளுக்காக வெட்டப்படுவதோடு நிறப்பூச்சுக்களுக்கும் பயன்படுகிறதாம்...

மனித மிருக சங்கிலிப் போராட்டம்...


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் டி பழூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி மாவட்டம் கல்லணை முதல் தஞ்சை மாவட்டம் கீழணை வரை மணல் குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி இலை தளைகளைக் கட்டிக் கொண்டும், கழுத்தில் தூக்கு கயிறு கட்டி கொண்டும், ஆடு மாடுகள் நிறுத்தி மனித மிருக கால்நடைகள் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள்  மேலும் விவசாயிகளை காப்பாற்ற நீராதாரம் முக்கியம் நீராதாரத்தைக் காப்பாற்ற மணல் குவாரிகள் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடன் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மூ.மணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் பிச்சைப்பிள்ளை மற்றும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தனர். நெப்போலியன் லூர்து சாமி காணிக்காபுரம் மு.ஊ.ம.தலைவர், கனகராஜ் தி.மு.க ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர், சாம்பசிவம் பூண்டி மு.ஊ.ம.தலைவர், ஆரோக்கியசாமி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் ,  லூர்து சாமி ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் காணிக்காபுரம், இமானுவேல், ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர், கிராம நாட்டாண்மைகள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்...

தமிழகத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விற்பனை செய்ய திட்டடுகிறது பாஜக மோடி வியாபார அரசு...


சென்னை வரும் பாஜக மோடிக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு , பேனரை கிழித்த நபர்களுக்கு போலிசார் வலைவீச்சு...


கிழிக்கப்பட்ட பேனரில் காவிரி எங்கே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. வரும் 12 ஆம் தேதி பாதுகாப்புதுறை கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகின்றார்.

கிழிக்கப்பட்ட பேனர்களை அகற்றி புதிய பேனர்கள் வைக்கும் பணிகள் தீவிரம்...

மராட்டிய ரஜினியின் திருட்டு அரசியல் கலாட்டா...


நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித் தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின் கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில் தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...

மராட்டிய ரஜினி கலாட்டா...


தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?


தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்)..

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை. எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன. விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே..

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.. அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக் கொள்கிறார்கள்?

தெலுங்கர்கள் தான் தமிழக விவசாயிகளை ஒன்று சேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக் கொள்ளலாம்...

பாஜக வும் தமிழின அழிப்பும்...


மிளகாயை பலர் விரும்புவதில்லை...


காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள்.

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை.

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும்.

உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.

இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

அழற்சி குறையும்...

மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும்.

முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள பாலேடு (cream) சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.

மேம்பட்ட செரிமானம்...

வயிற்றில் சீழ் வடியும் புண் (ulcer) அல்லது அமில எதிர்பாயலால் அவதிப்படுபவர்கள் மிளகாயை தவிர்க்க வேண்டும் என்று காலாகாலமாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் உடல்நல வல்லுனர்களும் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஏற்படும் சீழ் வடியும் புண் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது கயேன்.

அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். மேலும் வாய்வு மற்றும் வயிற்று பொருமலை குறைக்கவும் கயேன் பெரிதும் உதவி புரிகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்...

மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து (Calcium) உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும்.

சிலருக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமையாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக சுண்ணாம்புச்சத்து உள்ள மிளகாயை உண்ணலாம்.

பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

வாதத்திலிருந்து பாதுகாப்பு...

உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் என்னவோ, இது மிகப்பெரிய இரத்த ஓட்ட செயலூக்கியாக பார்க்கப்படுகிறது. அதற்கு தினமும் உங்கள் உணவோடு சேர்த்து மிளகாயை உட்கொண்டாலே போதுமானது, உங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளும் உடல்நல பயன்களும் கிடைத்துவிடும்.

வலி நிவாரணி மற்றும் அழற்சி குறைதல்...

காப்சைசினில் நியூரோபெப்டைட் என்ற அழற்சியை குறைக்கும் பொருள் உள்ளது. அதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற அழற்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகாய் பெரிய நிவாரணியாக விளங்குகிறது.

அதிலும் அது உடலில் உள்ள குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் (plasma) புரதத்தில், அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கொழுப்பை குறைக்கவும் உதவும்...

மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

அடேய் தந்தி டிவி மாமா பையனே ஓடாதடா...


அறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டி புறக்கணிப்பு.. சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம் - நாம் தமிழர் கட்சி...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகள் இருக்கும் என்பதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட பிறகும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் IPL நிர்வாகத்தினர் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வலைகளை உலகறியச் செய்யும்விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 6 மணிக்கு மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி
இடம்: சென்னை, சேப்பாக்கம் மைதானம் முன்பு.

கூடுமிடம்: மாலை 4 மணிக்கு, அண்ணா சிலை அருகில், புதிய தலைமை செயலகம் பின்புறம்.

அவ்வயம் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி...

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது?



நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.

கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம் பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்...

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு...


செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.

செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.

செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) வைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள நுண்ணுயிரிக்கள் செத்து மடிகின்றன. துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், நுண்ணுயிரிக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.

ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், கலங்களால் உறிஞ்சப்படுகிறது.

உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது...

இதெல்லாம் எம்ஜிஆர் காலத்து டெக்னிக்டா...


பாஜக வின் பினாமி தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா என்பது வெளிவந்து விட்டது...


தமிழக முன்னால் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நீதிபதிகள் R.K.அகர்வால், நரிமன் அமர்விலிருந்து, என்னுடைய கடும் எதிர்ப்புக்கு பின்பும் எந்த நீதிபதிகள் அமர்விற்க்கு வழக்கு போக கூடாது என எதிர்த்தேனோ அதே நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் அமர்விற்க்கு வழக்கை ஒதுக்கீடு செய்ததிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம்..

வழக்கு முடிந்து ஓராண்டு ஆகியும் தீர்ப்பு வழங்கபடாமல் தாமதிக்கபட்டு திருமதி VK. சசிகலா தமிழக முதல்வராவதை தடுக்கும் நோக்கோடு அவசர அவசரமாக தீர்ப்பை வழங்கியதில் மத்திய பாஜக மோடி அரசின் தலையீடு உள்ளது - உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் ஊடகத்திற்கு பேட்டி...

காங்கிரஸ் இந்திரா காந்தியும் உண்மைகளும்...


3000 ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டா ரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது.

சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர்.

‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது.

குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது.

வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது.

மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார்.

அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது.

தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார்.

அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள்.

இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண்.

அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர்.

ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார்.

அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.

அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.

உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும் என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது.

அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார்.

அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர்.

குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது.

பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை.

இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர்.

இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.

கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது.

இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள்.

சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.

தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல.

இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது.

எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.

இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது.

அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.

இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை...

நான் என்றுமே தமிழர்களின் பக்கம் - சத்யராஜ்...



தமிழ் உணர்வுகளின் பக்கம் தான்.. ராணுவம்-காவல்துறை எது வந்தாலும் பயப்படமாட்டோம். தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னாடி வாங்க இல்லனா ஓடி ஒளிந்துகொள்ளுங்க - சத்யராஜ்...

பாஜக மோடி தமிழகத்தை விற்பனை செய்யும் நாள் ஏப்ரல் 12...


இலக்கு அடையும் இயந்திரம்...


தனி மனிதன் – தனி மனித கூட்டு பங்களிப்பு கொண்ட சமுதாயம் என பல தளங்களிலும் இந்த கேள்வி மிக எளிதாகவே எழுந்து பிரதிபலிக்கும்.

நாம் நம் மனதில் உருவாக்கியிருக்கும் நம் சுய மதிப்பு உயரம் ( DETERMINATION OF SELF ESTEEM ) அதே அளவில் நாம் எதிர் நோக்கும் இடங்களில் கிடைத்து விடுவதில்லை.

அப்போது நம் மனதில் இந்த கேள்வி எழும்.

பொதுவாகவே மனித மன அமைப்பை இது போன்ற கேள்விகள் ஆக்கிரமித்தால் தொடர்ந்து ஊக்கமுடன்  முன்னேறும் தன்மையை மனம் இழக்கும் என்பதால் இதை உளவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.

முதலில், முன்னேற்ற இலக்கு என எதை குறிப்பிடுகிறோம் ? என்பதை நாம் தெளிவுற நிர்ணயிக்கவேண்டும்.

ஏனென்றால், புற ஆசைகளால் உந்தப் பெற்று தானாகவே நம் மனதில் உருவாகும் கவர்ச்சி இலக்குகள் ( ARTIFICIAL ATTRACTED TARGET ) நோக்கி முயற்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை.

நம் திறன்களை சுமந்து சென்று சரியான இலக்கு நோக்கி பயணிக்கும் மனம் நமக்கு வசமானால் நம் இலக்கு எய்வது நமக்கு சுலபமாகும்.

வழக்கமான நம் தன்னம்பிக்கை புத்தகங்கள் இலக்கு நிர்ணயிப்பது  – செயலாக்க விதிகள் – இறுதி இலக்கு அடையும் வழிகள் என நம்மை இலக்கு அடையும் இயந்திரம் போல பாவித்து கருத்து வடிவம் கொண்டு புத்தகங்கள் தயாரிப்பார்கள்.

அவர்கள் கூறும் விதிகள் படி நாம் பின்பற்ற ஆரம்பமாகும்போது நம் குடும்பத்திலிருந்தும் / சமூகத்திலிருந்தும் அந்நியப்படுவது போல் தோன்றும்.

காரணம், நம் தன்னம்பிக்கை புத்தக எழுத்தாளர்கள் அனைவரும் ஐரோப்பிய வாழ்வியல் அடிப்படை கொண்டு எழுதப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை நமக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

நம் சமூக / அரசியல் / தனிநபர் ஒழுக்க கள யதார்த்த அடிப்படைகளில் அந்த நூல்கள் அமைவதில்லை.

ஆனால், நம் இணைய கட்டுரைகள், நம் இலக்கு நோக்கி செல்லும் பாதையில் எங்கெல்லாம் கடும் சவால்கள் எதிர்கொள்ளும் என்பதை அடையாளம் காண உதவும்.

நகரின் சிறு கடையில் வேலை செய்வோருக்கும் – இந்த தேசத்தின் விஞ்ஞானிகளுக்கும் இலட்சியம் வெவ்வேறு திசைநோக்கி இருக்கலாம்.

ஆனால் அவைகளின் உயிர் மதிப்பீடு ஒன்று தான்...

காவிரி பிரச்சனை...


தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...


இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக் காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டு பிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது தான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன.

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது...

தினகரன் ஆட்கள் நல்லா வச்சு செய்யுறானுங்க எடுபுடியை...


தண்ணீருக்கு எதற்கு கணக்கு பார்க்கிறீர்கள் என சிலர் கேட்கலாம்...


ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியது தானே?

அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை.

ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்...

வெல்க புரட்சி ஆரம்பம் சென்னையில் விரைவில் உலகெங்கும்...


மக்கள் போராட்டங்களை கண்டுக் கொள்ளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர் திரு.அக்ரி பரமசிவன் கோரிக்கை...


முதலமைச்சர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம்...

1 மாநகராட்சி , 2 நகராட்சிகள், 3 வருவாய் கோட்டங்கள் , 9 தாலுகாக்கள் , 12 ஊராட்சி ஒன்றியங்கள் , 19 பேரூராட்சிகள், 437 கிராம நிர்வாக அலகுகளை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 05.06.2017அன்று 24வது மாவட்ட ஆட்சியராக திரு.வெங்கடேஷ் ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முதன்மையாகவும் முழுவதுமாகவும் தீர்ப்பேன் என உறுதியளித்தார்.

ஆனால் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்(328 கிராமங்களில் ) குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பயிர்க்காப்பீடு தொகைக்காக கோவில்பட்டி மற்றும் பிற பகுதி விவசாய பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கிடைக்க வேண்டி போராடி வருகின்றனர்.

திங்கள் குறைத்தீர் கூட்ட மனு நாளில் தினசரி பல நூறு வயதான முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் உதவித்தொகை கேட்டு மனு வழங்கி வருகின்றனர்.

கிடைப்பது என்னவோ அலைச்சலும் அலைகழிப்பும் தான்.

அதுமட்டுமன்றி கடந்த 2017அக்டோபர் மாதம் முதல் பல்வேறு தாலூகா அலுவலர்களின் நிர்வாக தவறுகளால் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

விவசாய நீர் தேவைகளை கொள்ளையடித்து நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபார நோக்கத்தில் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டுமென கடந்த 2017 ஜூலை மாதம் முதல் பல மனுக்கள் அளித்தும் சமூக ஆர்வலர்களின் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டுக்கொள்ளாமல் தொழிற்நிறுவனங்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசாணை நிலை எண்:233 எம்எம்சி2 ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 625 குளங்களில் கரம்பை மண்/சவுடு மண் எடுக்க விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மண் திருட்டு நடைப்பெற்றது இதனை எதையும் பெரிதுப்படுத்தாமல் ஊமையாகிவிட்டது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களின்  கோரிக்கை மனுக்களை ஜனநாயக வழியின் அகிம்சை போராட்ட வடிவில் மனு கொடுக்க வரும் நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுவதாக உள்ளது மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டுக் கொள்ளாததால் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மையப்பகுதியான விவிடி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி செய்துகொடுக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டும் பலனில்லை.

நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தும்,கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பது மட்டுமே பணியாக உள்ளது.

 ஒவ்வொரு மனுநீதிநாள் முகாம் ,அம்மா முகாம் ,கிராம சபை கூட்டம்,மற்றும் பொதுமக்களின் போராட்ட களங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை  களைய  நடவடிக்கை மேற்க்கொண்டதில்லை.

சட்டம்ஒழுங்கு மற்றும் குற்றவியல் நிகழ்வுகளை நேர்முக உதவியாளர் (குற்றம்) மூலம் அறியும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் தினசரி நிகழ்கின்ற செயின்பறிப்புகள்,வீடு புகுந்து கொள்ளை ,கொலைக்குற்ற சம்பவங்கள் இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்க்கொண்ட நடவடிக்கைகள் என்னவாக உள்ளது.

வருவாய் கோட்டாச்சியர் , கலால் உதவி ஆணையர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான லஞ்ச முறைகேடு  பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியதில் பல கோடி முறைகேடு ,குளம் பராமரிப்பில் பல கோடி மோசடி இவை யாவும் அறிந்தும் விசாரணை மேற்கொள்ளாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1730க்கும் மேற்பட்ட தொழிற்சாலை இருக்கின்றன.இதில் மக்களுக்கும், கால்நடை உயிரினங்களுக்கும்,நீர் நிலம் காற்று மற்றும் வளிமண்டலங்களை சீர்கெடுக்கும் 8 அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய சிகப்பு வகையிலான தொழிற்சாலைகளை அகற்ற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்முயற்சியும் எடுக்க வில்லை.

நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அத்தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல மாதங்களாக தன்னெழுச்சியுடன் போராடி வரும் பொது மக்களை நேரிடையாக சென்று சந்திக்காமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தனது போக்கை கடைபிடித்து வருகிறார்.

மேலும் பல்வேறு நிர்வாக திறமையின்மை காரணமாக பல மாதங்களாக தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல நலத்திட்ட உதவிகள் கிடைக்காமலும் பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைககளுக்காக போராடி வரும் சூழலை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உடனடியாக பணி மாறுதல் (இட மாற்றம்) செய்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அக்ரி.எஸ்.பரமசிவன்.
(சமூக ஆர்வலர்)
தூத்துக்குடி. செல்:9787305625...

காங்கிரஸ் சோனியா காந்தி ரஷ்யா பயணம்...


RGBஅல்ல... தவறு KGB...

நாசக்கார ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக தூத்துக்குடியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது...


தற்போது  தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு மக்களும் ஸ்டெர்லைட் க்கு எதிராக போராட ஆரம்பித்தது விட்டார்கள் இதனால் ஸ்டெர்லைட் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டு இருக்கிறது..

இதிலிருந்து மக்களை திசை திருப்ப பல்வேறு விளம்பரங்கள், கைது நடவடிக்கைகள் எல்லாம் செய்தும் மக்கள் போராட்டம் குறைந்த பாடில்லை நாலுக்கு நாள் வலுவாகி கொண்டே போகிறது.

இவ்வாறு நீடித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய உத்தரவு வந்துவிடும் என்ற காரணத்தினால், மக்களை ஒட்டுமொத்தமாக திசை திருப்ப புது முயற்சியே இந்த செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு உருவாக்கிறார்கள்..

3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது எந்த வித காரணமும் இல்லாமல் 8 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகம் செய்ய படவில்லை.

கோடை காலத்தின் ஆரம்பத்தில் இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடு செய்து மக்களை திசை திருப்பி ஸ்டெர்லைட் போராட்டத்தை மூழ்கடிக்க துடிக்கிறது.

நம் போராட்டம் சரியான முறையில் செல்கிறது இதனால் கலங்கிய ஸ்டெர்லைடின் பயமே நமது வெற்றி. அதனால் எந்த வித திசைமாற்றமும் இல்லாமல் நமது போராட்டத்தை வெற்றி பெற செய்து நாசக்கார ஸ்டெர்லைடை ஒழிப்போம்..

 நாம் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியமே..

இப்படிக்கு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு...

தமிழனுக்கு சோதனை காலம் - இந்த அடிமை ராவுக் காலங்களால்...


அமானுஷ்யம் - மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா?


நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்.

ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’...

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர்.

ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிகிறது. என்கிறார்.

சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை...

இந்த இரண்டு செய்திகளையும் ஒப்பிட்டு பாருங்ள் உங்களுக்கே அரசியல் புரியும்...


குடகு...


62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.

செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி...

கார்பரேட்களின் அடிமை இந்தியா...


தறிகெட்டு ஓடிய அரசு பஸ் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் 40 பேர் உயிர் தப்பினர்...


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை 6 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர்.

மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில், டிரான்ஸ்பார்மாரில் இருந்து கம்பிகள் உருகுலைந்த மொத்தமாக பஸ்சின் மீது விழுந்தது.

நல்ல நேரமாக அப்போது அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும் விபத்தில் இருந்து 40 பேர் உயிர் தப்பினர்.

டிரான்ஸ்பார்மர் மீது பஸ் பயங்கரமாக மோதியதில் 2 பெண்கள், டிரைவர் உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...

தலைப்பு "விழுந்தாரு எழுந்தாரு" னு வைய்யிங்கடா...


அதிக நேரமில்லை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்...


மேலும் தகவலறிய நமது தோழரை தொடர்பு கொள்ளுங்கள்.. 99629-82016...

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?


ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம்.

ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது.

தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பிராமணர்களின் மனக்கோணல், இந்தப் பொது வரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் திராவிட என்று அழைத்தனர்.

தமிழ் என்பதை ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள் என்று உச்சரித்து அதுவே பின்னர் த்ரமிள, த்ராவிட என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.

சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
         
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார்.

அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான த்ராவிட என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு திராவிடம் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.

ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும்.

அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
தனித்தன்மை எதுவுமில்லை.

அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் திராவிட என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை ஐரோப்பியர் என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை இந்தியர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல.. இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் (Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர்.

இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியர்  என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை.

ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை  (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன.

இந்தியாவின் குடிமகன் (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள்.

இந்தியர் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள்.

இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்.. கவரிங் தங்க நகை போல..

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு இந்தியர்  என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

தமிழர், தெலுங்கர், வங்காளி என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. இந்தியக் குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.

தமிழர் போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...