29/04/2018

கண்ணகி விண்ணகம்.. யார் இந்த கண்ணகி.?


பேருந்து டயர் வெடித்து பயணிகள் படுகாயம்...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செந்தநாடு to பண்ருட்டி சென்ற தனியார் பேருந்தின் மேல்புறம் இருந்த பேருந்தின் கூடுதல் டயர் வெயிலின் வெப்பம் தாங்காமல் வெடித்து விபத்து பேருந்தில் பயணம் செய்த 20.வதிர்க்கும் மேற்பட்டோர் படுகாயம் புதுப்பேட்டை போலீசார் விசாரணை...

சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் தீ விபத்து -20 கடைகள் எரிந்து சாம்பல்...


சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் நடைபாதைக் கடைகள் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகி நாசமாகின. சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் எனுமிடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்தக் கடைகள் யாவும் தீயில் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சாம்பலாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

திருட்டு திராவிடம் 2.0 தயாராகிறது தமிழா... விழித்துக்கொள்...


மே 1ந் தேதி கூடும் கிராம சபைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் ஒற்றைத் தீர்மானத்தினை ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்...


உண்மையிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அக்கறை இருக்குமென்றால் தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க வேண்டும்...

மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 28.04.2018 விடுத்துள்ள அறிக்கையில் ...

காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற மீளாய்வுத் தீர்ப்பு என எந்தத் தீர்ப்பையுமே நிறைவேற்றவில்லை.

காரணம் அதனை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசே இதில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும் செய்வது தான்.

கடைசியாக ஆறு வார கெடு கொடுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. மேலும் தற்போது மீண்டும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளது மத்திய அரசு இது  தமிழகத்திற்கு செய்கிற  மாபெரும் துரோகம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தினர் அதிமுக எம்பிக்கள்.

முதல்வர், துணை முதல்வர் உட்பட தமிழக அமைச்சரவை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், அமைப்புகள் என தமிழகமே இன்றுவரை போராட்டக் களத்திலேயே உள்ளது.

ஆனால் ஸ்கீம் என்ற வார்த்தையை திட்டமிட்டே உருவாக்கி வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கும் நீதித்துறைக்குமே புறம்பாகவே நடந்து வருகிறது மத்திய அரசு . மோடி இன்றைய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என்று சொல்வதற்கில்லை.

இப்போது கர்நாடகத் தேர்தலை வைத்து தான் இப்படி நடந்துகொள்கிறார் என்று சொல்வதாயிருந்தாலும், அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் வர இருக்கிறதே, அதற்கு என்ன சொல்வது?

ஆக, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!

எனவே நாம் போராடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் வேறு வழிமுறைகளிலும் நாம் போராட்டத்தை முன்னெக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் மேலும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் குரல் எழ வேண்டும்.

ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரல் டெல்லி செங்கோட்டையை எட்ட வேண்டும்.

அந்தக் குரல் கண்டனக் குரலாக, குறிப்பாக மோடி அரசை எச்சரிக்கும் குரலாக இருக்க வேண்டும்.

மே 1ந் தேதி கூடும் கிராம சபைக் கூட்டத்தில் உள்ளாட்சி அதிகாரிகளிடம் நாம் கோரும் ஒற்றைக் கோரிக்கையாக காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டும்.

அனைத்து கிராம சபைகளிலும் இந்த ஒற்றைத் தீர்மானத்தினை ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.

மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

மருத்துவ மாப்பியாவின் உண்மைகள்...


அழிவிற்கு தயாராகும் பெருந்துறை... பூமிக்குள் புதையும் கொடூர விஷம்: செத்து மடியும் ஈரோடு மக்கள்...


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, சிப்காட் அமைந்துள்ளது.

இங்கு 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு எந்த ஒரு தொழிற்சாலையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை.

ஆழ்துளை கிணறு அமைத்து சாய கழிவு நீரை பூமிக்குள் நேரடியாக விடுகின்றன. விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீக்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை.

சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர வயிறு உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர்.

ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என வேதிப்பொருட்கள் பன்மடங்கு அதிகம் உள்ளன.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது.

சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இரண்டு கால்களிலும் அணியப்பட்ட சிலம்பு...


சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும்.

கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும்.

இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும் பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...

மூன்றாம் உலகப் போரும் அமெரிக்காவும்...


தொட்டாற் சுருங்கி செடி...


சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...

இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...

மருத்துவ குணங்கள்...

தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..

இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.

உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.

ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.

இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.

இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.

தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.

இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...

சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் தொடர்ந்து பெண்கள் மாயம். அரசு என்ன செய்கிறது?


மரணத்திற்குப் பின் என்ன?


ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியைக் குறிப்பிட்டு இருந்தோம்.

அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.

ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது.

இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான்.

இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி.

இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது.

ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை.

இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான்.

காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள்.

கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே.

ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது...

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

ஒவ்வொரு முறையும் இங்கே இருக்கும் இரண்டு கட்சிகளை மாற்றம் வேண்டும் என கூறி ஒன்று தேர்ந்தெடுத்து, மற்றொன்டை புறக்கணிக்கிறார்கள் வாக்களித்த மக்கள்...


எப்போதும் இதே போல்தான்..

மக்கள் புத்தி இதுதான் போல என்று கட்சிகளும் கருதி, அவர்கள் ஒன்றிணைந்து மக்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறார்கள்..

அவ்வளவே இங்குள்ள அரசியல்..

மாற்றம் வேண்டுமென ஒவ்வொரு தேர்தலின் ஆரம்பித்தில் மக்கள் மனதில் எழுகிறது,

தேர்தலுக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகள் கழித்து புறக்கணித்த மாற்றத்தையே மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கிறார்கள்...

தமிழன் வீழ்வது துரோகத்தால் மட்டுமே...


கற்கள் நகரும் அதிசயம் – மரணப் பள்ளத்தாக்கின் மர்மம்...


நம்ப முடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம் பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்..

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.

டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.

தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.

சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.

குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948 லேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.

இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.

கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.

ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது கூடவே கற்களும் தான்...

கேன்சர் திட்டமிட்டு நம் மீது பரப்பப்படும் நோய்...


முடக்கத்தான் கீரை...


Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது...

சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை...

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச் சென்று விடும். இதுபோல் எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்...

நீரின்றி அமையாது உலகு...


சித்தர் ஆவது எப்படி ? - 16...


வேறு ஒன்றும் தோன்றா நிலை...

தோன்றா நிலையில் அனுபவப் பட்ட நாம், அந்த தோன்றா நிலையில் நாம் நம் கடமைகளை செய்ய வில்லையென்றால் அந்த தோன்றா நிலை பெற்றதின் மூலம் எந்த பயனையும் அடைவதில்லை..

அந்த தோன்றா நிலையில் ஒரு காரியத்தை செய்தால், அந்த தோன்றா நிலை கெட்டுதானே போகும் என்ற ஒரு கேள்வி எழலாம்.. ஒரு காரியத்தை செய்ய மனம் தேவைப் படுகிறது..

தோன்றும் நிலையில் உள்ள மனம், நிச்சயமாக தோன்றா நிலையை பாதிக்கவே செய்யும்.. உண்மை தான்..

ஆனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது..

உணவு உண்டு கொண்டு இருக்கிறோம்.. அது மனம் தன்னை ஈடுபடுத்தி அந்த காரியத்தை செய்ய தொடங்குகிறது.. இப்பொழுது அந்த மனம் அந்த உணவு உண்ணும் காலத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தால் அந்த உணவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை...

அதனால் அந்த உணவில் உள்ள உணர்வு மிக மிக குறைந்து, அந்த உணர்வின் மூலம் பெற வேண்டிய கனலை பெற முடியாமல் போய் உண்கின்ற அந்த உணவு நாசம் ஆகிறது..

ஒரு தோராயமான கணக்கில் பார்த்தால் அந்த உணவில் நூறில் ஒரு பங்கே நாம் கனலை பெறுகிறோம் என்பது மிக மிக ஆச்சரியமான விசயம் மட்டும் அல்ல, மிக மிக உண்மையான விசயமும் கூட...

நாம் வாழ்வில் பாடுபட்டு சேர்த்ததை எப்படி யெல்லாம் விரையம் செய்கிறோம் என்பதை அந்த தோன்றா நிலை அனுபவத்தின் மூலம் நமக்கு நன்கு விளங்க வரும்...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை பெற்றபின், நாம் உணவு உட்கொள்ளும் போது, அந்த ஒரு செயலை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில், அந்த உணவினை உட்கொள்ள வேண்டும்..

வேறு ஒன்றும் தோன்றா நிலையில் நாம் அந்த உணவினை உட் கொள்ளும் போது, அந்த உணவில் நூற்றுக்கு நூறு பங்கு கனலை பெற்று, நாம் வலிமை உடையவர்கள் ஆகிறோம்..

இதை விட மிக உயர்ந்த சிறப்பு எங்கு இருக்கிறது ?

நாம் கடினப் பட்டு ஈட்டிய பொருள்களில் உச்ச கட்ட பயனை பெறுகிறோம்..

மேலும் மேலும் பொருள் ஈட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.. ஒரு எளிமையான வாழ்க்கையில் ஒரு பெரிய சக்கரவர்த்தியை விட மிக அதிகமான பயன் தூய்ப்பை பெற்று நமது தேடுதல்கள் அறவே நின்று போய் விடுகிறது...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலை ஒன்றில் இணைத்து அந்த தோன்றும் நிலை ஒன்றை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செயல் படும் போது அந்த செயல் சித்தி பெறுகிறது..

சித்தி என்பது பூரணத்துவம் என்பதாகும்..

இப்படியாக செய்கின்ற காரியங்கள் எல்லாம் சித்தி பெறுவதால், ஒரு மனிதன் சித்தர் ஆகிறான்..

சித்தர்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பூரணத்துவமாக இருக்கும்.. சகலமும் சித்தி பெறும் என்பது இப்படி வேறு ஒன்றும் தோன்றாநிலையில் செய்யும் போது மட்டுமே..

இப்படி தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலையோடு பொருத்தி வேறு ஒன்றும் தோன்றா நிலையோடு செயல் படுவதையே அன்பு என்கிறோம்..

தோன்றா நிலையாகிய அருள் சக்தியான அகரமும், தோன்றும் நிலையான புவியின் உலகியல் ஒரு செயலும் பு என்ற எழுத்தும் வேறு ஒன்றும் தோன்றா நிலையாகியாகிய ஒரே முடிவான ஒன்றான ன் என்ற கடைசி மெய் எழுத்தானது இணைந்து அன்பு ஆனது..

இதில் பதினெட்டாம் மெய் எழுத்தான "ன்" என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்..

அதுவே வேறு ஒன்றும் தோன்றா நிலையில் ஒரு செயலை ஒரே முடிவாக வைத்துக் கொண்டு அந்த செயலை சித்தி அதாவது பூரணத்துவம் அடையும் வண்ணம் ஆற்றலை தரவல்லது..

சகலமும் சித்தி பெற ஒரு தகுந்த உபாயத்தை அறிந்த நாம் தோன்றா நிலை அனுபவத்தின் அவசியத்தை உணர்ந்து வாசிப் பயிற்சியிலே கற்றுக் கொண்டதை நடை முறைக்கு கொண்டு வந்து சகலத்தையும் சித்தி பெற செய்து சித்தராவோமாக...

இப்படி தான் மற்ற கைதிகளுக்கு விளக்கம் கொடுப்பிங்களா சிபிஐ...


தமிழனின் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' கண்டு பிடிப்பு...


காலம் காட்டி - ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சவுக்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது...

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இந்த "சவுக்கை' கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர்.

தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் இருக்கும். சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை கீழிறங்கும் காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை கதிரவன் மேலேறும் காலம் என்றும் கணித்துள்ளனர்.

இந்தாண்டு கீழிறங்கும் துவக்க நாளான அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடியும். மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம்.

இதைப்போல் கதிரவன் மேலேறும் உத்தராயணகால, அதாவது சூரியன் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன...

இம்பூட்டு தான் நீதிமன்றம்...


சிகிச்சைக்கு சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது...


சென்னையில் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து  பாலியல் தொல்லை செய்ததோடு, அவற்றை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நாட்டுசுப்பராயன் வீதியில் உள்ள ஆர்.எம்.கிளினிக்குக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் பரிசோதனை என்று கூறி மருத்துவர் சிவகுருநாதன் அத்துமீறியுள்ளார்.

மேலும் பெண்ணின் ஆடைகளை களையச் செய்து, தனது செல்போனில் மருத்துவர் சிவகுருநாதன் படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பெண் மிரட்சியுடன் வெளியே வந்த போது, சிகிச்சைக்காக காத்திருந்த உமாபதி என்பவர் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது மருத்துவர் சிவகுருநாதன், பரிசோதனை என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார்.

இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட மருத்துவர், செல்போனில் பதிவு வீடியோவை அழித்து விட்டு மெமரி கார்டையும் எடுத்து உடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் மருத்துவர் சிவகுருநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடம் மற்றொரு செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் சிகிச்சைக்கு வந்த பெண்களின் ஆடைகளை களைந்து பரிசோதிக்கும் காட்சிகள் இருந்தன.

இவற்றின்பேரில், மருத்துவர் சிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பெண்களிடம் அத்துமீறியது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை! போராடு தமிழினமே இல்லையேல் இவ்வுலகம் நம்மை புதைத்துவிடும்...


சுருளிமலை அதிசயம்...


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில் தான் அமைந்துள்ளது.

இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலை தான் "சுருளி மலை" ஆகும்.

இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம்...

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்...

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்னதானம் செய்தனர்.

அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.

கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்து தான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை  பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்...

இயற்கை அழிக்கும் அனைத்து செயல்களில் நமது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது...


மரமும் மனிதனும்...


இந்தியாவின் மிகப் பழமையான மரம்...

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.

பழங்களே பிரதானம்...

Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.

இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.

பழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.

சுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது

இந்தியாவின் மரம்...

‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.

ஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை – திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.

வடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி..

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை

விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.

நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.

ஆக்சிஜன் அமுதசுரபி...

சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது..

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது.

எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்..

பெருசங்கர்.. ஈரோடு  மாவட்டம்...

கேளிக்கையாக இருக்கலாம் ஆனால் நம்மை எப்படி நம்ப வைத்து இருக்கிறார்கள் என்று பாருங்கள் இந்த அடிமை பாடத்திட்டத்தில்...


ஆன்மா...


உடலை விட்டு வெளியேறும் ஆன்மா...

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன.

அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள்.

மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது.

தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும்.

தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

உனது சிந்தனைகளை மழுங்கடிக்கவே ஊடகங்கள்...


மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிற்பகலில் உத்தரவு...


உடனடியாக தமிழக அரசு இதனை எதிர்த்து  மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அய்யாக்கண்ணுவுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை உத்தரவு...

The God must be crazy...


இப்படம் உண்மையான மனிதனை காட்டும் மனிதனிடம் செயற்கையாக திணிக்கப்பட்ட வார்த்தை, உணர்ச்சி முதல் கொண்டு எந்த மண்ணில் ஒரு மனிதன் பிறந்தானோ அந்த இடத்தில் அவன் வாழ்வதற்கான சூழ்நிலை உண்டு எனவும் அவன் அந்நிலத்திற்கான படைப்பு எனவும் எளிமையை சொல்லப்பட்டிருக்கும்...

மொத்தத்தில் உண்மையான மனிதன் எப்படி இருப்பான் என அழகாக சொல்லிருப்பார்கள்.... 

கடைசி வாய்ப்பு களம் இறங்குவோம் தோழர்களே.. மெரினா புரட்சி தொடங்கட்டும்...


மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று...


வங்கிகளின் உண்மை நிலை...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா...

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?

அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல்.

கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?

இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை.

நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது.  தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.

இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India.

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை...

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது. 

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி யின் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.

முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.

வங்கிகளின் மோசடி...

ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது..

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.

புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.

நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...