16/12/2018

பாஜக மோடியின் வெளிநாடு பயணத்துக்கான விமான கட்டண செலவு 2000 கோடி ரூபாய்...


பிரதமர் மோடி தான் பதவி ஏற்றதிலிருந்து அதிகமான சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக மக்களின் பணம் அதிகளவில் வீணக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., பினோய் விஸ்வம்,”மோடி எத்தனை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவருடன் எந்தெந்த அமைச்சர்கள் உடன் சென்றனர், அதற்காக எவ்வளவு ரூபாய் இதுவரை செலவாகியுள்ளது” எனநாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் பதிலளித்தார். அதில்,”2014 ஆம் ஆண்டு ஜீன் 15ஆம் தேதி முதல் 2018 டிசம்பர் 3ஆம் தேதி வரை 90 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக 2 ஆயிரத்து 12 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும்” கூறினார்...

பாஜக வும் மத வியாபாரமும்...


வட இந்தியர்கள்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: மாநில ஒதுக்கீடு தேவை - பாமக மருத்துவர் அய்யா...


தமிழ்நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில்  தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆள்தேர்வுக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் எப்படி 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனரோ, அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் நிலைக்கு கீழ் உள்ள பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்பது மரபாகும். ஆனால், மரபை உடைத்து  வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்ப்பாதை அமைக்க ஒத்துழைத்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னை பெட்ரோலிய நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றாமல் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. தெற்கு ரயில்வே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பெல் நிறுவனம் உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் இதே நிலை தான் நிலவுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் அதை அமைப்பதற்கான நிலங்களை தமிழக மக்களோ, அரசோ தான் கொடுத்திருப்பார்கள். தொடக்கக்காலத்தில் இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் தான் கடுமையாக உழைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் செய்து  விட்டு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆட்சியாளர்களின் துணையுடன் பணியில் அமர்த்தப் பட்டால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியாவின் அங்கம் தானா... இல்லையா? என்ற வினா எழுகிறது. இந்த வினாவுக்கு மத்திய அரசு  அதன் சமூகநீதி செயல்பாடுகளால் பதிலளிக்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்...

2020 கலாம் கண்ட கனவு...


தியானத்தின் நன்மைகள்...


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.

உடலளவில் ஏற்படும் நன்மைகள்...

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன...

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை... பொதுமக்கள் அதிர்ச்சி...


ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சுமார் 5 நாட்களே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பாடல் நினைவுக்கூறத்தக்கது...


ஒட்டை விற்க்கும் ஒவ்வொருவரும் இங்கு திருடன் தான்...

யார் எங்கு போனாலும் மாற்றம்  நிகழப்போவதில்லை..

நாம் ஒவ்வொருவரும் மாறாத வரை மாற்றம் என்பது சாத்தியமில்லை...

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்...


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

அதன் பலன்களை இங்கே பார்ப்போம்...

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்...

அரசுகள் அம்பலம் - 4...


ஆழ்மனத்தின் அரியசக்தி...


நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.

அப்படியெனில் காரை ஓட்டுவது எது?

அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?

அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும் போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.

தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.

எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவகவே நீ மாறுவாய்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால்  காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.

நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...

இன்றைய கால சாமியார்கள் போலிகளே.. எல்லாம் சுய லாபத்திற்காகவே...


அகோரிகள் என்பவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் எளிதாக...

பற்கள் கூச்சம்...


புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்..

அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்...

வாழ்க்கை...


உங்கள் வாழ்க்கையில் வரும்...

துன்பம்,
இன்பம்,
துக்கம்,
பிரிவு,
சோகம்,
சந்தோஷம் 
எதிர்பார்ப்பு,
ஆசை,
பேராசை,
தலைமை,
அரசியல்,
மதங்கள்,
ஜாதிகள்,
துயரம்,
நட்டம்,
புகழ்,
காழ்புணர்ச்சி,
எதிரி,
தோழன்,
தோழிகள்,
பாசம்,
நேசம்,
பன்பு,
அன்பு,
சொந்தம்,
ஏழை,
பணக்காரன்,
சுயநலம்,
பொதுநலம்,
கல்வி,
காமம்,
நேற்று,
நாளை,
தற்பெருமை,
இன்னும் பிற..

முக்கியமாக கடவுள்..

இதை அனைத்தையும் அந்த கடல் அலைகள் போல ரசித்து எதையும் ஈர்க்காமல்..

உங்கள் வாழ்வை இன்று மட்டுமே  வாழுங்கள்...

உங்களை யாராலும் உங்கள் இயற்கை தன்மையில் இருந்து விடுவிக்க முடியாது...

அரசுகள் அம்பலம் - 3...


இசை அறிவியல்...


மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா?

உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது.

உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம்.

ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இதே போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும்.

அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…?

நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விடவில்லை.

போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது.

பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான்.

72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.

உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன...

உளவியல் உண்மைகள்...


உங்கள் மூளையை திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறுவதன் மூலம் ஒற்றுக் கொள்ள வைக்க முடியுமாம்...

தாம்பரம் ஏரியில் 3 முதலைகள் – அச்சத்தில் பொதுமக்கள்...


தாம்பரம் வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் உள்ள  நெடுங்குன்றம் ஏரியில் 3 முதலைகள் நீந்துவதை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஏரியில் இறங்குவதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் அந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

காங்கிரஸ் சோனியா காந்தியே தமிழகத்தில் நுழையாதே...


புரட்சி...


சில எண்ணங்களும், பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.

அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள், சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?

பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.

ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

மக்கள் எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.

தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள்.

கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.

ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.

ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும் போது தான் உண்மையான புரட்சி ஏற்படும்.

இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி...

திமுக மீண்டும் வெல்லவே கூடாது...


தமிழகத்தில் 1ஏக்கரில் 127கோடி ரூபாய் கனிமவளம்...


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலியில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 2990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இரு நிலக்கரி சுரங்கங்கள், முதலாவது சுரங்கத்தின் விரிவாக்கம் என மொத்தம் மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் ‘மூன்றாவது சுரங்கம்’ என்ற பெயரில் புதிய சுரங்கத்தை அமைக்க நிலம் எடுக்கும் பணிகளை என்.எல்.சி தொடங்கியுள்ளது. ஆனால், என்.எல்.சி திட்டப்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் ஆபத்தும், இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளன.

மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது சென்னை& சேலம் எட்டு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை விட இரு மடங்கு ஆகும். எட்டு வழிச்சாலைக்கான நிலங்கள் மொத்தம் 277 கி.மீ நீளத்திற்கு கையகப்படுத்தப்படவுள்ளன. ஆனால், மூன்றாவது சுரங்கத்திற்காக 20 கி.மீ சுற்றளவில் 12,125 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமானதாக இருக்கும்.


ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய்க்கு கனிம வளம் இருக்கிறது.

நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் பொன் விளையும் பூமியாகும். அந்தப் பகுதிகளில் கேரட் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. இத்தகைய தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஒரு விவசாயி ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இத்தகைய வளமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த என்.எல்.சியும், தமிழக அரசும் துடிப்பது மிகப்பெரிய துரோகமாகும்.

அதுமட்டுமின்றி, கையகப்படுத்தப்படும் நிலங்களில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆறுகளை அவற்றின் இயற்கையான பாதையிலிருந்து செயற்கையாகத் திருப்பினால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும்.
 விவசாயத்தை அழித்து, ஆறுகளைத் தடுத்து மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை.

1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவில்லை. ஜெயங்கொண்டம் அனல் மின்நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களும் பயனின்றி கிடக்கின்றன. இப்போது கையகப் படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தேவையான பழுப்பு நிலக்கரியை தோண்டி எடுக்கப் போதுமானவை. அதனால், புதிய நிலங்களை கையகப்படுத்தத் தேவையே இல்லை.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனச் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான ஒப்பந்தம் ஆந்திரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அதிநவீன எந்திரங்களின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் தேவையை விட 10 மடங்கு கூடுதலாக நிலக்கரியை வெட்டி எடுக்கிறது. அந்த நிலக்கரியை தனியாருக்கு விற்பனை செய்து என்.எல்.சி கூடுதல் லாபம் ஈட்டி வருகிறது. அதனால், மகாலட்சுமி நிறுவனத்திற்கு கூடுதல் பணி வழங்க வேண்டும் என்பதற்காகவே அதிக நிலங்களை கையகப்படுத்தி, புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைக்க என்.எல்.சி துடிக்கிறது.

1950-ஆவது ஆண்டுகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு தியாகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக 26 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, யாருக்கும் தேவையில்லாத, இயற்கைக்கு எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அரசும் என்.எல்.சியும் கைவிட வேண்டும்.

அதையும் மீறி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முயன்றால், அதை எதிர்த்து மக்களே போராடுவார்கள்

தமிழர் ஆய்வுக் கூடம்...

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை - ஆதாரத்தை வெளியிட்டார் - முகிலன்...


சொத்துக்குவிப்பு : இன்ஸ்., மீது வழக்கு பதிவு...


நாகர்கோவில்: நாகர்கோவில், கோட்டார் இன்ஸ்பெக்டர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் இன்ஸ்பெக்டர், அன்பு பிரகாஷ். இவர், குமரி மாவட்டத் தில் ராஜாக்கமங்கலம், களியக்காவிளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.

கடந்த, 1999ம் ஆண்டு, எஸ்.ஐ.,யாக பணியை துவக்கி, 2012ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். குமரி தவிர்த்து, நெல்லை மாவட்டத்திலும் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக, 31 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலக உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசின் சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்...

பாஜக - அதிமுக - காங்கிரஸ் - திமுக - நீதிமன்றம் அனைத்துமே கார்ப்பரேட் கைகூலிகள் தான்...


நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: பாமக கண்டனம்...


குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற பெரும் கொள்ளை என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் அவர்கள்  இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.

ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும்.

இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான்.

ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து விவசாயிகளும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே.

அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இதற்காக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில், விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு  இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும்.

நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...

ஸ்டெர்லைட் திறக்கலாம்... பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு...


ஸ்டெர்லைட் - பாஜக - அதிமுக - நீதிமன்றம் சதிகள்...





தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் NGTயின் சின்னம்(watermark) இருக்கும்.

NGTஇணையதளத்தில் தீர்ப்பின் PDF  அப்லோட் ஆவதற்கு முன்பே ஸ்டெர்லைட் தரப்பால் ஒரு Wordfile பகிரப்படுகிறது.

அதில் தலைப்பு VEDANTA DRAFT என்றும் NGT EMBLEM இல்லாமலும் இருக்கிறது.

தீர்ப்பு முன்கூட்டியே பகிரப்பட்டது எப்படி? 

தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே தூத்துக்குடியில் இன்று காலையில் இருந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அரசும் அறிக்கை விடுகிறது.

தருண் அகர்வாலா கமிட்டியின் அறிக்கையை மனுதாரர்களுக்கு தரமறுத்த தீர்ப்பாயம், இறுதித் தீர்ப்பின் DRAFT-ஐ மட்டும் பகிர்ந்ததா?

நம் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த ஒற்றுமை போதும்டா நண்பா...


ஒரு உண்மையான மனிதன், ஒரு போதும் நம்புவதில்லை. அவன் கற்கிறான்...


ஒரு உண்மையான மனிதன்,
ஒரு போதும் எல்லாம் தெரிந்தவனாக ஆகிவிடுவதில்லை...
அவன் எப்போதும் வெளிப்படையாக இருக்கிறான்.

நம்புகிறவன்,
அவனுக்குத் தகுந்தாற் போல்...
உண்மையை ஒத்துப்போகச்
செய்ய நினைக்கிறான்...

தேடுகிறவன்,
உண்மைக்குத் தகுந்தாற்போல்...
தன்னை மாற்றிக் கொள்கிறான்...

உண்மையான மனிதன்,
கடைசி வரை வளர்கிறான்...
அவன் இறக்கும்போது கூட
வளர்ந்து கொண்டிருக்கிறான்...

அவனுடைய வாழ்வின்
கடைசிக் கணம் கூட...
விசாரித்தாலாக இருக்கும்...
தேடலாக இருக்கும்...
கற்றலாக இருக்கும்...

ஒருவனின், சுய பரிசோதனையே...

அவனின், அனுபவம், அகநிலை மாற்றம்...

ஸ்டெர்லைட் - பாஜக - அதிமுக சதிகள்...



பாகிஸ்தானின் தெற்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் கரையோர நெடுஞ்சாலையில், பல நூற்றாண்டுகளாக கவனிக்கப்படாத மற்றும் அறிய முடியாத ஒரு கட்டிடக்கலை. பாலைவனமான பாறை நிலப்பகுதிக்குள் மறைந்து கிடக்கிறது.

அது பலூசிஸ்தான் ஸ்பிங்க்ஸ் என்ற அழைக்கப்படுகிறது. பொதுவாக பத்திரிகைகளால் இது ஒரு இயற்கையான உருவாக்கம் என கூறப்படுகிறது, அதனால் தொல்பொருள் கணக்கெடுப்புகள், அந்த பகுதியில் எந்த தளத்திலும் நடத்தப்படவில்லை என தோன்றுகிறது. ஏனென்றால் கட்டமைப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள சிக்கலான அம்சங்களை ஆராயும்போது, அது இயற்கையான சக்திகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பலமுறை மீண்டும் கூறப்பட்டது. ஆனால் நமது சதி ஆய்வாளர்களால் தளம் ஒரு மகத்தான, புராண கல்வெட்டு, கட்டடக்கலை போல் தோன்றுவதாக கூறுகின்றனர்.

சுருக்கமாக சொல்வதென்றால் அந்த கட்டமைப்பு, எகிப்திய ஸ்பின்ஸ் சிற்பத்தில் உள்ள கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை போன்று தெளிவான முகபாவங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, மேலும் இவைகளை ஒப்பிடுகையில் வெளித்தோற்றத்தில் சரியான விகிதத்தில் உள்ளதையே காட்டுகிறது.

எகிப்திய ஸ்பின்ஸ் தலை-கவசம் போலவே இந்த  தலை கவசம் தோற்றமளிக்கிறது. மற்றும் பின்புறம் உள்ளடக்கிய ஒரு தலைமுடி, இரண்டு பெரிய, வெளிப்படையான, மடிப்புகளைக் கொண்டிருக்கிறது, காதுகளுக்கு பின்னால் மற்றும் தோள்களுக்கு முன்னால் கீழே தொங்கும். காது மடிப்பு அதே போல் சில பட்டவடிவம். மற்றும் எகிப்திய ஸ்பின்ஸ் அதன் நெற்றியில் குறுக்காக ஒரு கிடைமட்ட பள்ளம் உள்ளது போன்று பலூசிஸ்தானின் ஸ்பின்ஸ் தலையிலும் காணப்படுகிறது. படத்தில்  அந்த தலைகளின் ஒற்றுமையை நீங்களும் காணலாம்.

ஒப்பிட்டளவில் இது மிகவும் நன்கு வரையறுக்கப்பட்ட கல்வெட்டு போலவே முடிவடைகிறது. ஒரு வியத்தகு துல்லியமான நன்கு அறியப்பட்ட புராண கலைப் படைப்பை ஒத்திருக்கும் ஒரு சிலையை எவ்வாறு இயற்கைப் படைத்திருக்க முடியும்?.

மேலும் பலூசிஸ்தான் ஸ்பிங்க்ஸ் உள்ள பகுதியின் சிறிது தூரத்தில், ஒரு கட்டமைப்பு காணப்படுகிறது.
அது இந்திய கோவில் மண்டபம் மற்றும் நுழைவாயில் போன்றும்,
சில இந்திய கடவுள் சிலைகள் போன்றும் காட்சியளிக்கிறது. அதை பற்றி ஆச்சரியம் என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஸ்டெர்லைட் - பாஜக - அதிமுக சதிகள்...


கூவத்தில் செத்து மிதந்த நாய்கள்...


சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பின்புறம் கூவம் ஆறு ஓடுகிறது. இந்த கூவம் ஆற்று பகுதியில் நூற்றுக்கணக்கில் நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கூவம் ஆற்றிலும் அதன் கரை பகுதிகளிலும் 25க்கும் மேற்ப்பட்ட நாய்கள் இறந்து கிடந்துள்ளது. அதே போல் சில காகங்களும் இறந்து கிடந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில்  நாய்களால் தொல்லைக்குள்ளான சில மர்ம நபர்கள் அவற்றிற்கு விஷம் கலந்த உணவை அளித்துள்ளனர் என்பதும் அதனை சாப்பிட்ட நாய்களும் மற்றும் சில காகங்களும் பரிதாபமாக இறந்துள்ளன என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து ”விலங்குகளை கொல்லுதல் மற்றும் கூவம் நதியை மாசுபடுத்தி கிருமிகளை பரவ வைத்தல் ” உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும், நாய்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமெனவும்  கூறியுள்ளார்...

ஸ்டெர்லைட் - பாஜக - அதிமுக - நீதிமன்றம் சதி ஆரம்பம்...


போராட்டம் துடங்க கூடாது என்பதின் முன் ஏற்பாடு...

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் போராட்டம்...


குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில்  பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக அதிக தொகை  வசூலிக்கப்படுவதை இரத்து செய்ய கோரியும், முன்னாள் மாணவர் கழகம் சார்பில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்...