16/12/2018

சொத்துக்குவிப்பு : இன்ஸ்., மீது வழக்கு பதிவு...


நாகர்கோவில்: நாகர்கோவில், கோட்டார் இன்ஸ்பெக்டர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் இன்ஸ்பெக்டர், அன்பு பிரகாஷ். இவர், குமரி மாவட்டத் தில் ராஜாக்கமங்கலம், களியக்காவிளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.

கடந்த, 1999ம் ஆண்டு, எஸ்.ஐ.,யாக பணியை துவக்கி, 2012ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். குமரி தவிர்த்து, நெல்லை மாவட்டத்திலும் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக, 31 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலக உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசின் சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.