16/12/2018

கூவத்தில் செத்து மிதந்த நாய்கள்...


சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பின்புறம் கூவம் ஆறு ஓடுகிறது. இந்த கூவம் ஆற்று பகுதியில் நூற்றுக்கணக்கில் நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கூவம் ஆற்றிலும் அதன் கரை பகுதிகளிலும் 25க்கும் மேற்ப்பட்ட நாய்கள் இறந்து கிடந்துள்ளது. அதே போல் சில காகங்களும் இறந்து கிடந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில்  நாய்களால் தொல்லைக்குள்ளான சில மர்ம நபர்கள் அவற்றிற்கு விஷம் கலந்த உணவை அளித்துள்ளனர் என்பதும் அதனை சாப்பிட்ட நாய்களும் மற்றும் சில காகங்களும் பரிதாபமாக இறந்துள்ளன என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து ”விலங்குகளை கொல்லுதல் மற்றும் கூவம் நதியை மாசுபடுத்தி கிருமிகளை பரவ வைத்தல் ” உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும், நாய்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமெனவும்  கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.