09/06/2017

பணத்தின் கவர்ச்சி...


ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

அவர்கள் பரவாயில்லை.

இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.

பணம் என்பது எதிர்காலம்.
எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.
அதிகாரத்தின் அடையாளம்.

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.

ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது.

ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.

மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.

ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.

அது பணமாக இருக்கலாம், அதிகாரமாக இருக்கலாம், தன்  மதிப்பாக இருக்கலாம், மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம், நல்ல குண நலன்களாக இருக்கலாம்.

இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.

இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.

இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு.

அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்...

பாஜக மோடியின் ஆட்சியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அம்பலம்...


மத்திய அரசின் புள்ளி விபரத்தின் மூலம் உறுதியானது...

பணத்தை கொடத்த பிறகும் நகையை திருப்பி தராத வங்கி முன் விசம் குடிக்கும் போராட்டம் நடத்தியவரை குண்டுகட்டாக கைது செய்த போலிசார்...


ஓமலூரை அடுத்து பெரியபட்டியை சேர்ந்த காந்தி மன்னன் விவசாய பணிகளுக்கு நகையை அடைமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். கடனை கட்டவில்லை எனக் கூறி நகையை ஏலம் விடப்போவதாக கனரா வங்கி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

உடனே அக்கம் பக்கத்தில் கடனை வாங்கி பணத்தை வங்கியில் கட்டியுள்ளார். பணத்தை கொடுத்த பிறகும் வங்கி நகையை திரும்ப கொடுக்கவில்லை.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் காந்தி மன்னன் இன்று கனரா வங்கி வாசலில் விசம் குடிக்கும் போராட்டம் நடத்தியுள்ளார்.

உடனே அங்கு வந்த போலிசார் அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்துள்ளனர்.

என்னைய ஏன் சார் பிடிக்கிறீங்க நகையை வாங்கி தாங்க என காந்தி மன்னன் கூறியும் அவரை போலிசார் கைது செய்தனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றம் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு...


நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்குகளில் வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

ஜல்லிக்கட்டு மாட்டை காணவில்லை, கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம், தனது பாசமிகு மாட்டை போஸ்டர் ஓட்டி தேடிய மதுரை காரர், மாடும் கிடைத்து சொன்னபடி சன்மானமும் வழங்கினார்...


மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தான் பாசமாக வளர்த்த ஜல்லிகட்டு மாடு காணாமல் போய் வேதனை அடைந்து பல இடங்களில் தேடியுள்ளார்.

கிடைக்காததால் மதுரை முழுவதும் மாட்டின் புகைப்படத்துடன் போஸ்டர் ஓட்டியுள்ளார். மாட்டை இன்ன இடத்தில் பார்த்தாக ஒருவர் போன் செய்தவுடன் அந்த இடத்திற்கு நண்பர்களுடன் சென்று மாட்டை மீட்டு வந்துள்ளார் தினேஷ்.

அவர் சொன்னபடி போன் செய்தவருக்கு சன்மானமும் வழங்கியுள்ளார்...

தனியார் பாலில் சோப்பு ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிப்பு...


மதுரை மாவட்டத்தில் பால் பரிசோதனை நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனையின் போது மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாலில் சோப்பு ஆயில் கலந்துள்ளது மதுரை கலெக்டர்  வீரராகவ ராவ்  முன்னிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாலை முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்...

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்...


மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...

சீனாவில் சோழன் வரலாறு...


கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டு வரப்படுகின்றன..

Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:

This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters...

திமுக கருணாநிதியின் கபட நாடகம் - பழ. நெடுமாறன்...


தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்தின் முற்பகுதியில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழ்நாட்டில் ஈழப்போராளிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கு தங்கியிருக்கவும் மக்களிடையே தங்கள் போராட்டத்தைக் குறித்துப் பிரசாரம் செய்யவும் நிதி திரட்டவும் தாராளமாக அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும். ஆட்சியும், அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக்கூட அசைக்க அவர் தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-73 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, போராட்டத்துக்கு ஆதரவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

அதேயாண்டில் தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்ட "டெலோ' இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிமருந்துகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது. குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை அதிகாரிகள் வந்து கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். இதன் விளைவாக, ஈழப்போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவர்களல்ல. நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்.

1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை. ஆனால், அப்போது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய வி.பி. சிங் அந்த உடன்பாட்டை மிகக்கடுமையாகக் கண்டித்தார். அது மட்டுமல்ல, அன்னிய நாடு ஒன்றின் உள்பிரச்னையை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பியதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

1989-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் ராஜீவ் பதவி விலக நேர்ந்தது. அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார். இலங்கையில் இனப்பிரச்னை தொடர்பாக ஈழத் தமிழர் தரப்பினர் அனைவரையும் அழைத்துப் பேசி அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டார். அவர் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். அதாவது, ஈழத் தமிழர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருணாநிதியின் அழைப்பை மதித்து, ஏற்று அவருடன் பேசுவதற்காக பாலசிங்கம், யோகி ஆகியோரை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன தெரியுமா?
இந்திய ராணுவத்தினால் இலங்கையின் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறினார் கருணாநிதி.

இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்களையும் வரதராசப் பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களையும் விரிவாக பாலசிங்கம் எடுத்துக்கூறினார். புதிய தேர்தல் நடத்தி அந்தத் தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வர புலிகள் தயாராக இருப்பதாக பாலசிங்கம் கூறினார். அதைக் கருணாநிதி ஏற்கவில்லை என்பதுடன் நிற்கவில்லை. தில்லி சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்துப் பேசி, புலிகள் தனது யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி நழுவி விட்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமது பணி முடிவடைந்துவிட்டதாகவும் இனி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும் கூறி இப்பிரச்னையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி.
தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த போராளிகள் சிகிச்சை பெறவும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பணத்தைப் பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து 23-7-1997 அன்று எனக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தில் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி வந்தவர்களுக்கு கருணாநிதி செய்த கைம்மாறு இதுதான். 24-8-1990-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் ஈழப்பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் ""தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம்'' என்று கூறினார். ஆனால், அதில் உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. இவ்வாறு கூறியதையே பிற்காலத்தில் மறுத்தார்.

மீண்டும் அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்தபோது 14-5-2000 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார்: ""தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறியதற்கு அவ்வாறு தனி ஈழத்தை அமைக்கக் குரல் கொடுப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. தனி ஈழத்தை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வேறுவிஷயம். தனி ஈழம் அமையத் தமிழ்நாட்டின் சார்பில் குரல் கொடுப்பேன் என்ற பொருளில் அல்ல நான் பேசியது. அங்குள்ள தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன்'' என்று கூறினேன் என்றார்.

இரண்டே நாட்களில், 16-5-2000 அன்று அவருடைய உள்ளக் கிடக்கையையும் புலிகள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக வெளியிட்டார். ""விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது'' என்றார். தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கானத் தமிழர்களைச் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்தபோது தமிழக மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்திய அரசிற்கு எதிரான உணர்வு வெடித்து வெளிப்பட்டது.

இந்திய அரசையும் தனது அரசையும் மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி, "அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதை வரவேற்றனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் உலகமெலாம் இருந்த தமிழர்களின் மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.

ஆனால், 12 நாள்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலையெடுத்தார். 26-10-2008 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை எனக் கருணாநிதி அறிவித்தார்.

அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சியான பிறகு மீண்டும் தமிழீழப் பிரச்னையைப் பேசத் தொடங்கி இருக்கிறார். 18-4-2012 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ""இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தரவேண்டும்'' என வற்புறுத்தினார்.

இப்போது ""ஈழத்தை உருவாக்கும் பணியில் மீண்டும் ஈடுபடப்போவதாகவும் அதை விரைவில் காண்பதற்காகவே தான் உயிரை விட விரும்புவதாகவும்'' உருக்கமான வசனம் பேசியிருக்கிறார்.
கடந்த மூன்று முறை இவர் பதவி வகித்த காலகட்டத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை. இவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட்ட வேளையில் கூட அதை நிர்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க இவர் எதுவும் செய்ததில்லை. மாறாக, ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தவர் கருணாநிதி.

தமிழ் ஈழம் அமைவதற்குக் கருணாநிதி சமீபகாலமாகக் காட்டி வரும் ஆர்வமும், ஈழத் தமிழர்கள்மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பாசமும் புல்லரிக்க வைக்கிறது. ஆட்சியையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டதைத் தவிர, ஈழப் பிரச்னையில் அவர் எப்போதாவது உள்ளார்ந்த அக்கறை காட்டியிருக்கிறாரா என்பதை அவரது மனசாட்சியிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு அவர் பேசட்டும். ""எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என நாமக்கல் கவிஞர் பாடிய திரைப்படப் பாடல் கருணாநிதிக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.

1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை...

இலுமினாட்டி எலிசபெத் தாவீதின் வாரிசு...


இங்கிலந்து அரசி இவள் தாவீதின் வாரிசு சாலமோனின் வாரிசு..

பரம்பரை அட்டவணை..

GENERATIONS..

1. Adam m. Eve
2. Seth
3. Enosh
4. Canaan
5. Mahalaleel
6. Jared
7. Enoch
8. Methusaleh
9. Lamech
10. Noah m. Naamah
11. Shem
12. Arphaxad
13. Salah
14. Heber
15. Peleg
16. Reu
17. Serug
18. Nahor
19. Terah m. Amtheta
20. Abraham m. Sarah
21. Isaac m. Rebekah
22. Jacob m. Leah
23. Judah m. Tamar
24. Hezron
25. Aram
26. Aminadab
27. Naasson
28. Salmon
29. Boaz m. Ruth
30. Obed
31. Jcsse

KINGS IN PALESTINE..

32. K. David m. Bathsheba
33. K. Soloman m. Naamah
34. K. Rehoboam m. Maacah
35. K. Abijah
36. K. Asa m. Azubah
37. K. Jehoshaphat
38. K. Jehoram m. Athaliah
39. K. Ahaziah m. Zibiah
40. K. Joash m. Jehoaddan
41. K. Amaziah m. Jecholiah
42. K. Uzziah m. Jerusha
43. K. Jotham
44. K. Ahaz m. Abi
45. K. Hezekiah m. Hephzibah
46. K. Manasseh m. Meshullemeth
47. K. Amon m. Jedidiah
48. K. Josiah m. Mamutah
49. K. Zedekiah

KINGS OF IRELAND..

(Number in parenthesis denotes length of reign)

50. Q. Tea Tephi m. Herremon, a Prince of the scarlet thread.
51. K. Irial Faidh (10)
52. K. Eithriall (20)
53. Follain
54. K. Tighemmas (50)
55. Eanbotha
56. Smiorguil
57. K. Fiachadh Labhriane (24)
58. K. Aongus Ollmuchaidh (21)
59. Maoin
60. K. Rotheachta (25)
61. Dein
62. K. Siorna Saoghalach (21)
63. Oholla Olchaoin
64. K. Giallchacih (9)
65. K. Aodhain Glas (20)
66. K. Simeon Breac (7)
67. K. Muirteadach Boigrach (4)
68. K. Fiachadh Toigrach (7)
69. K. Duach Laidhrach (10)
70. Eochaidh Buailgllerg
71. K. Ugaine More the Great (30)
72. K. Cobhthach Coalbreag (30)
73. Meilage Aminadab
74. K. Jaran Gleofathach (7)
75. K. Coula Cruaidh Cealgach (25)
76. K. Olliolla Caisfhaichach (28)
77. K. Eochaidh Foitleathan (11)
78. K. Aongus Tuirmheach Teamharch (30)
79. K. Eara Aighneach (28)
80. Labhra Suire
81. Blathucha
82. Easmhuin Eamhua
83. Roighnein Ruadh
84. Finlogha
85. Fian
86. K. Eodchaidh Feidhlioch (12)
87. Finearrihuas
88. K. Lughaidh Raidhdearg
89. K. Criomhthan Niadhnar (16)
90. Fearaidhach Fion Feachtnuigh
91. K. Fiachadh Fionoluidh (20)
92. K. Tuathal Teachtmar (40)
93. K. Coun Ceadchathach (20)
94. K. Arb Aonflier (30)
95. K. Cormae Usada (40)
96. K. Caibre Liffeachair (27)
97. K. Fiachadh Sreabthuine (30)
98. K. Muireadhach Tireach (30)
99. K. Eochaidh Moigmeodhin (7)
100. K. Nail of the Nine Hostages
101. Eogan
102. K. Murireadhach
103. Earca

KINGS OF ARGYLESHIRE..

104. K. Fergus More (A.D. 487)
105. K. Dongard (d. 457)
106.K. Conran (d. 535)
107. K. Aidan (d. 604)
108. K. Eugene IV (d.622)
109. K. Donald IV (d. 650)
110. Dongard
111. K. Eugene V (d. 692)
112. Findan
113. K. Eugene VII (d. A.D. 721) m. Spondan
114. K. Etfinus (d. A.D. 761) m. Fergina
115. K. Achajus (d. A.D.819) m. Fergusia
116. K. Alpin (d. A.D. 834)
SOVEREIGNS OF SCOTLAND
117. K. Kenneth II (d. A.D. 854)
118. K. Constantin II (d. A.D. 874)
119. K. Donald VI (d. A.D. 903)
120. K Malcolm I (d. A.D. 958)
121. K Kenneth III (d. A.D.994 )
122. K. Malcolm II (d. A.D.1033 )
123. Beatrix m. Thane Albanach
124. K. Duncan I (d. A.D.1040 )
125. K.Malcolm II Canmore (d. A.D.1055-1093) m. Margret of England
126. K.David I (d. A.D.1153 ) m. Maud of Northcumberland
127. K. Prince Henry (d. A.D.1152 ) m. Adama of Surrey
128. K. Earl David (d. A.D.1219 ) m. Maud of Chester
129. Isobel m. Robert Bruce III
130. Robert Bruce IV m. Isobel of Gloucester
131. Robert Bruce V m. Martha of Carrick
132. K. Robert I Bruce (d. A.D.1306-1329 ) m. Mary of Burke
133. Margary Bruce m. Walter Stewart III
134. K. Robert II (d. A.D. 1390) m. Euphemia of Ross (d. A.D. 1376)
135. K. Robert III (d. A.D. 1406) m. Arabella Drummond (d. A.D. 1401)
136. K James I (A.D. 1424-1437) m. Joan Beaufort
137. K. James II (d. A.D. 1460) m. Margaret of Gueldres (d. A.D 1463)
138. K. James III (d. A.D. 1488) m. Margaret of Denmark (d. A.D. 1484)
139. K. James IV (d. A.D. 1543) m. Margaret of England (d. A.D. 1539)
140. K. James V. (d. A.D. 1542) m. Mary of Lorraine (d. A.D. 1560)
141. Q. Mary (d. A.D. 1587) m. Lord Henry Darnley
SOVEREIGNS OF GREAT BRITAIN
142. K. James VI and I (A.D. 1603-1625) m. Ann of Denmark
143. Princess Elizabeth (1596-1613) m. K. Frederick of Bohemia (1632)
144. Princess Sophia m. Duke Ernest of Brunswick
145. K. George I (1698-1727) Sophia Dorothea of Zelle (1667-1726)
146. K. George II (1727-1760) m. Princess Caroline of Anspach (1683-1737)
147. Prince Frederick of Wales (1707-1751) m. Princess Augusta of Saxe-Gotha K.
148. George III (1760-1820) m. Princess Sophia of Mecklenburgh-Strelitz (1744-1818)
149. Duke Edward of Kent (1757-1820) m. Princess Victoria of Leiningen
150. Q. Victoria (b. 1819, crowned 1838, d. 1901) m. Prince Albert of Saxe-Coburg-Gotha
151. K. Edward VII
152. K. George V
153. K. George VI
154. Q. Elizabeth II...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது,

நடு விரல் உங்களை குறிக்கிறது,

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது,

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.

பெருவிரல் உங்களின் பெற்றோரைக் குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,

நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்.

இது போல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

கம்யூனிஸ்டுகளைக் கண்டு ஏன் ஆர்.எஸ்.எஸ் ( பாஜக ) நடுங்குகிறது?


அந்தக் கோழைகள் அச்சப்படவும் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.......

வளர்ச்சி பற்றி வாய் கிழியப் பேசிய திருவாளர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாதித்திருப்பதோ, அனைத்துத் துறைகளிலும் தோல்வி. அந்தத் தோல்வியை அங்குலம் அங்குலமாக எடுத்துரைத்து வருபவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

உங்களுக்கு நினைவிருக்கிறதா ‘செல்லா நோட்டு நடவடிக்கையை’ ?? ... பழைய ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கும் முன்னமே - அதற்கான உண்மைக் காரணத்தை வெளிக்கொண்டுவந்தார் சீத்தாராம் யெச்சூரி.

12 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வங்கி சேமிப்பை, கடனாக பெற்ற பல கார்பரேட்டுகள் திரும்ப செலுத்தவில்லை. விஜய் மல்லய்யா என்ற ஒரு நபரைத்தான் நமக்கு தெரியும். இன்னும் எத்தனை கொள்ளையர்கள், சுதந்திரமாய் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ?? மக்கள் சேமிப்பை, திரும்ப வசூலிக்காமல் ‘ரைட் ஆப்’ செய்த போது - அதையும் அம்பலப்படுத்தினார் தோழர் யெச்சூரி.

’செல்லா நோட்டு’ அறிவிப்பு வங்கிகளுக்குள் மக்கள் பணம் பல லட்சம் கோடியை உறிஞ்சி சேர்த்தது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று வாய்கிழிய பலரும் பேசியபோது, கருப்புப் பண முதலைகளை தப்பவிடும் சூட்சுமத்தை அம்பலப்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை, வேலைவாய்ப்பை அழிக்கும் ‘பேரழிவு’ முயற்சி என்று புள்ளி விபரங்களோடு அம்பலப்படுத்தினார் தோழர் யெச்சூரி. அரசு வெளியிட மறுக்கும் பணம் அச்சிடுதல் பற்றிய விபரங்களை தொடர்ந்து மறுப்பதை கேள்விகேட்டு வருபவரும் அவதான்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று வாய்ப்பந்தல் போட்டதோடு மோடியின் வேலை முடிந்துவிட்டது. உலக பொருளாதார சூழல் மந்தமாக உள்ள நிலையில், இந்திய உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கேற்ற பட்ஜெட் செலவினம் செய்ய வேண்டும் என்று சொன்னவர்கள் இடதுசாரிகள். இடதுசாரிகளின் விமர்சனம் எதற்கும் காதுகொடுக்காத மோடி அரசாங்கம், இப்போது பல துறைகளில் இருக்கும் வேலையையும் பறித்து, நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது இளைஞர்களை.

கிராமப்புற மக்களை நெருக்கடியில் தள்ளும் ‘நிலமெடுத்தல் அவசர சட்டம்’ - தொழிலாளர்களின் நலன்களை பறிக்கும் சட்டத் திருத்தங்கள், ஆதார் என்ற பெயரால் இந்திய மக்களின் தனி நபர் விபரங்களை சிக்கலுக்கு ஆளாக்கும் முயற்சி என ஒவ்வொன்றையும் தொடர்ந்து அம்பலம் செய்வதும் தோழர்களே.

ராஜ்யசபா விவாதத்திற்கே வராமல் தவிர்த்துவந்த பிரதமரை விமர்சிப்பதும். ராஜ்யசபாவுக்கே செல்லாமல் சட்ட விரோதமாக சட்டங்களை நிறைவேற்றுவதையும் வெளிப்படுத்தியது என்று, செயல்படுபவர்கள் தோழர்கள்.

ரோஹித் வெமுலா என்ற மாணாவன், பல்கலைக் கழக நிர்வாகத்தால் ஒதுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டதும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விச் சூழல் சிதைக்கப்பட்டு பாசிச தாக்குதலுக்கு அவர்களின் சிந்தனைகள் குறிவைக்கப்பட்டதும் நடக்கும்போது - களத்தில் நின்று எதிர்கொள்கிறார்கள் தோழர்கள்.

காஷ்மீரில் பாஜக இழைத்துவரும் தவறான உத்திகளை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் செய்த சில நல்ல நகர்வுகளைக் கூட இந்த ஆட்சியில் செய்யத் தயாரில்லை என்பதையும், சொந்த நாட்டிலேயே - சொந்தக் குடிமக்களை அந்நியராக்கும் பாஜகவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது இடதுசாரிகள்.

3 ஆண்டுகள் முடிவில் எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்ததை மறைக்க முயலும் பாஜக, மாட்டுக்கறிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை என அறிவித்தது. சிறுபான்மை மக்களை மட்டுமல்லாமல் - இந்திய விவசாயிகளையும் சேர்த்தே குறிவைக்கும் இந்த நடவடிக்கையால், அழியப்போவது கால்நடை வளர்ப்புத் தொழில்தான் என்று பட்டவர்த்தனமாக்கியவர்கள் தோழர்கள்.

எத்தனைதான் திசைதிருப்பினாலும், எந்தெந்தத் துறைகளில் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று மிகத் தெளிவாக கேள்வியெழுப்பி வருவது தோழர் யெச்சூரி என்பதை அவரின் இணையப் பக்கத்தில் சில நிமிடங்கள் செலவிட்டாலே அறிந்துகொள்ளலாம்.

கேரளம், திரிபுரா என்ற முன்மாதிரிகள் அவர்கள் முகத்துக்கு நேரே எழுந்து நிற்கின்றன. அனைத்துத் துறைகளிலும் பாஜக அரசு தோல்விகாணும்போது - கேரளமோ இந்தியாவிலேயே 100 சதவீத கல்வி, 100 சதவீத கழிப்பறை கட்டிய மாநிலம், 100 சதவீத வீடுகளுக்கு மின் வசதி, மாணவியருக்கு ‘நாப்கின்’, மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார் என சிந்தித்து - மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் பினராயி விஜயன் என்ற முதல்வரையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சிம்ப சொப்பனமான கேரள கம்யூனிஸ்டுகளின் தீரமும் அவர்களை அச்சப்படுத்துகின்றன.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் செய்த சாவர்க்கரையும், வாஜ்பாயையையும் மறந்துவிட முடியுமா? ... தன் இளமையிலேயே நாட்டை காட்டிக் கொடுத்த அந்த அமைப்பும் அதன் சித்தாந்தமும் உருவாக்கியவர்கள் - இத்தாலியின் முசோலினியை சந்தித்து, பாசிசத்திலிருந்தும், ஹிட்லரின் நாசிசத்திலிருந்தும் கற்றவர்கள். கொடும் கொலைகளை அறங்கேற்றிய, பாதகர்களுக்கு இரண்டாம் உலகப்போரின் இறுதியில், செங்கொடி ஏந்திய வீரர்கள்தான் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்தார்கள்.

இந்திய தேசத்தின் சுதந்திரப் போரில் என்னற்ற தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள், பாஜக பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டம் - இந்திய விடுதலையின் இரண்டாம் போராட்டம் என முன்னணியில் நின்று, சம்மட்டி அடிப்பதால்தான் இந்த நடுக்கம் அவர்களுக்கு.

இருக்காதா.. திருட்டுத் தனம் அம்பலத்தில் ஏற்றப்பட்டால், திருடன் விழி பிதுங்கத்தானே செய்வான்? அவன் சலசலப்புக்கெல்லாம் மக்கள் தீர்க்கமான பதிலை கொடுக்கத்தான் போகிறார்கள்...

பதிவு - Sindhan R

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


இந்தியாவின் கடல் சார் உணவு ஏற்றுமதி 23 சதவிகிதம் உயர்வு - மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்...


2016-17 நிதியாண்டில் இந்தியாவின் கடல் சார் உணவு ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது...

நெல்லை ராமாபுரத்தில் குழாய் உடைந்து சாலையில் வீணடிக்கப்படும் குடிநீர், கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்...


பல்வேறு ஊர்களில் ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்காமல் தாய்மார்கள் வீதி வீதியாய் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர இப்படி வீணாக்குவது கண்டிக்கதக்கது...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...


உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்...

வாழைப்பழம்- 1

ஆரஞ்சு- 1

பட்டைபொடி- அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.

ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...

மராட்டிய கன்னட ரஜினி எப்போ தொண்டர் படையோடு கதிராமங்கலம் போக போற...


திராவிடம் என்று சொல்லிட்டு திரிகின்ற மானங்கெட்ட தமிழன் எல்லாம் கர்நாடகம் சென்று இதை கேட்கவும்...


பாஜக வால் உபி யே நாறுகிறது...


பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


நான் இப்பத்தான் எம்எல்ஏ ஆகியிருக்கேன்... ஆட்சியை கலைச்சிராதீங்க - கருணாஸ் கெஞ்சல்...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்.. எது அதிசியம்...


பாஜக வும் போட்டோஷாப் டூபாக்கூர் வேலையும்...


தினத்தந்தி எனும் கேடுகெட்ட வியாபாரி ஊடகம்...


திமுக ஸ்டாலினும் பகுத்தறிவும்...


ஸ்டாலின் மாட்டு இறைச்சி தின்னும் போராட்டம்..

ஸ்டாலின் வீட்டம்மா மாட்டுக்கு பூசை போட்டு வழிபாடு...

திராவிடத்தின் பகுத்தறிவு... என்பது எப்போதும் முட்டாள் தமிழனக்கு மட்டும் தான்...