09/06/2017

பணத்தை கொடத்த பிறகும் நகையை திருப்பி தராத வங்கி முன் விசம் குடிக்கும் போராட்டம் நடத்தியவரை குண்டுகட்டாக கைது செய்த போலிசார்...


ஓமலூரை அடுத்து பெரியபட்டியை சேர்ந்த காந்தி மன்னன் விவசாய பணிகளுக்கு நகையை அடைமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். கடனை கட்டவில்லை எனக் கூறி நகையை ஏலம் விடப்போவதாக கனரா வங்கி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

உடனே அக்கம் பக்கத்தில் கடனை வாங்கி பணத்தை வங்கியில் கட்டியுள்ளார். பணத்தை கொடுத்த பிறகும் வங்கி நகையை திரும்ப கொடுக்கவில்லை.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் காந்தி மன்னன் இன்று கனரா வங்கி வாசலில் விசம் குடிக்கும் போராட்டம் நடத்தியுள்ளார்.

உடனே அங்கு வந்த போலிசார் அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்துள்ளனர்.

என்னைய ஏன் சார் பிடிக்கிறீங்க நகையை வாங்கி தாங்க என காந்தி மன்னன் கூறியும் அவரை போலிசார் கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.