05/12/2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ.தீபா வேட்பு மனு நிராகரிப்பு...

         
படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.  என தெரியவந்து உள்ளது.

ஏற்கனவே நேற்று பேட்டி அளித்து தீபா  தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் என கூறி இருந்தார்.

இது குறித்து இன்று பேட்டி அளித்த தீபா..

நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன் எனக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதீர்கள் செய்தாலும் நிராகரிக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்னரே என்னிடம் கூறினார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது என கூறினார்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தெலுங்கர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு...


வேட்பு மனுவில் முன்மொழிந்த மூவரின் கையெழுத்தில் 2 பேரின் கையெழுத்து தவறாக இருந்ததால் நிராகரிப்பு...

அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர். ஜெ. ஜெயலலிதாவின்.. முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...


ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?


ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம்.

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்...

நான் பல வருடம் தொந்தரவிலும்.. வேதனையிலும் இருக்க இவனே காரணம்...


சின்னம் ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் அதிகாரிக்கு தான் உள்ளது - தொப்பி சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்...


அதே நேரத்தில் தேர்தல் அதிகாரி சுதந்திரமாக செயல்பட்டு முடிவு செய்ய  வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக தினகரன் வக்கீல் பேட்டி அளித்துள்ளார்...

ஊடக நண்பர்களே மீனவ மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்...


குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் மகாராஷ்டிர மாநிலத்தில் அனாதையாக நிற்கும் 849 - தமிழக மீனவர்கள்...


மேலே உள்ள படங்களில் உங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள் இருந்தால், அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் சொல்லுங்கள்.

மேலும் இவர்களை பற்றிய விபரங்களுக்கு இந்த நபருக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: பிரசாந்த் துமீன்-8309714613, 9287541883...

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டத்துக்கு வாங்கிய 200 ரூபாய்... உடனேயே டாஸ்மாக் கடைக்கு திருப்பி கொடுத்த கோவை குடிமகன்கள்...



நடிகர் விஷால் டெபாசிட் இழப்பார். சாபம் இடும் தமிழக அமைச்சர்...


ரஜினி, போல் அரசியலுக்கு வருவேன் என்று இழுத்து கொண்டே போகாமல், கமல் போல் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து கொண்டிராமல் அதிரடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நடிகர் விஷால் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

விஷாலின் இந்த அதிரடி முடிவு குறித்து பெரும்பாலான திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

விஷால் போட்டி குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய போது...

விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல, விஷால் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பது மட்டுமின்றி தனது திரையுலக வாழ்வையும் இழப்பார் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சாபம் பலிக்குமா? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்...

இலுமினாட்டி யும் 666 இரகசியமும்...


கிறிஸ்த்துவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை முதலிலே பார்த்தோம்..

கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்..

ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப் பட்டுவிட்டது..

கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே..

யார் இந்தப் பவுல்?

வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர்..

இவரின் உண்மையான பெயர் Saul of tasus..

இது கிரேக்க மொழிப் பெயராகும்.

கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார்.

இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது.

திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்.

ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.

தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார்.

கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார்.

இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.

இதுதான் அவரது வாக்குமூலம்..

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.

யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன்.

அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன்.

பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன்.

எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர் 9:19-23).

கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே.

இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும்.

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும்.

புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.

லூசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது..

1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்தத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.

2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.

3. அப்படியே குப்ருக்கள் (இறை மறுப்பு) கொண்டு செல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்து விடும்.

இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான்.

இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள்.

வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.

தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?

மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும்.

அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும்.

ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல்.

ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார்.

இதன் காரணம் பின்னர் விளங்கும்.

ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே.

ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.

இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?

வரலாற்றில் சைத்தானியர்கள் (லூசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம் தான்.

ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார்.

ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது.

தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.

அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லாஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.

கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது.

முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.

பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்று விக்கப்பட்டது..

திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.

உதாரணமாக..

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய (புத்தரின் 3 உடம்பு).

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு.

இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாடிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.

ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான்.

ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்..

இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே.

இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருதவேண்டும்.

பவுல் இலுமினாட்டி என்பதற்கு இது தவிர வேறு ஆதாரங்களைத் தேடுமாறு வாசகர்களைப் பணிக்கிறேன்..

நீங்கள் தேடும் போது தான் இன்னும் நிறைய படிப்பீர்கள்...

சாதி எதிர்பாளாராக காட்டிக் கொண்டு.. மறைமுகமாக சாதி அரசியலில் ஈடுபடும் நாடார்கள்...


தமிழ் தேசிய அடையாளத்தில் செயல்படும் நாடார் சாதி அரசியலை முன்னெடுக்கும் நாதக வின் வேட்பாளராக சீமான் நாடார் கன்னியாகுமரி கலைகொட்டுதயம் நாடாரை அறிவித்தார்...

இந்திய தேசிய கட்சி என்ற அடையாளத்தில் தமிழ்நாட்டில் நாடார் கட்சியான  பாஜகவில்  தலைவர் தமிழிசை நாடார்.. கரு. நாகராஜன் நாடரை வேட்பாளராக  அறிவித்தார்...

நாடார் அரசியல் வெற்றி பெற வாழ்த்துகள்...

நம்புங்கள்.. இவை சாதி அரசியல் இல்லை...

9ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னை நகரமே மின்சாரம் இன்றி 4 நாட்கள் வெள்ளத்தில் மிதக்குமாம்.? கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் கடும் எச்சரிக்கை...


சென்னையில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரைக்கும் சூறாவளி காற்று மழை மின்னல், இடி என புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார்.

இந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது..

இந்த வருடம் அதிகமான சூறாவளி காற்று -மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறுகள் தண்ணீரால் நிரம்பி ஓடும்.

அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கடுமையாக பாதிக்கப் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் வீசும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது புதிய புயல் உருவாகி உள்ளது.

கடலூர், ராமேஸ்வரம் பாதிக்கும் என்றும் எழுதப்பட்டு உள்ளது.

எனவே அந்த 2 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

இது பற்றி ஜோதிடர் கே.என் நாராயண மூர்த்தியை செய்தியாளர்கள் கேட்டபோது, அப்போது அவர் கூறியதாவது...

9ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னை பாதிக்கும், உலுக்கும், மிதக்கும்.

இதன் அர்த்தம் என்னவென்றால் 4 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து சென்னை நகரம் பாதிக்கப்படும், வெள்ளத்தில் மிதக்கும். மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்...

அவினாசி to அன்னூர் செல்லும் டவுன் பஸ் A11/32 ஆட்டையாம்பாளையம் நவகிரீன் மஹால் அருகில் சென்றபோது சைக்கிளில் சென்ற நபர் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...


இதில் இருவர் உயிரிழப்பு, 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம். அவினாசி மற்றும் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

மத்தியில் ஆட்சி பன்றோம் என சொல்றாங்க ஆனா தமிழகத்தில் சரத்குமார் கட்சியில் இருந்து வந்தவரை வேட்பாளராக போடும் அவல நிலையில் பாஜக உள்ளது - டிடிவி தினகரன் கிண்டல்...


இதயத்திற்கு ஏற்ற சமையல் எண்ணெய்...


நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.

சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.

சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.

கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.

உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.

மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம். நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும். வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள்.

இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும். இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை.

ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).

அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து விடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.

செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat) கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.

ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

பியூஃபா கொழுப்பு..

கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid என்பதன் சுருக்கம்).

பியூஃபா எண்ணெய்யை ஒமேகா 3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.

ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.

ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா கொழுப்பு..

கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa) என்பதாகும்.

மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது. மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.

எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.

எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1: என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர்  ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான்.

ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும்.

சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்
காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார்.

பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன் படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள்.

முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே
நன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான்.

இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும்.

இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும்.

அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம்.

ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.

கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே
உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள்.

வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்...

அதிமுக வில் தேர்தல் அணையம் எந்த அணியை ஆதரிக்கின்றது ? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி...


இலுமினாட்டி யும் கிருஸ்துவ அரசியல் இரகசியமும்...


இந்த லூசிபெரியனிசக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது..

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது.

ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். ( Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்)..

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்..

இன்றைய காலத்தில் பெயர் பெற்று விளங்கும் இயக்கம் தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும்.

வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே..

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை.

அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது.

ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கைதான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது..

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்..

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர்.

ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது.

சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது..

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது.

பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை.

இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306)..

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார்..

இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார்.

கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்..

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்..

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்தத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும்.

இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது.

ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது.

தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன.

சிலை வழிபாடு புகுத்தப்பட்டது.

உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.

இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். (இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )..

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிறிஸ்த்துவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்..

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம் அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

தெலுங்கர் வைகோ நாயூடு அவர்களே...


இதுவும் தங்கள் திருவாயில் மலர்ந்ததே, உங்களை போன்றவொரு சந்தர்ப்பவாதியை இவ்வுலகமே கண்டிருக்காது...

டால்பின் கரை ஒதுங்கல், பாம்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


கம்யூனிசம் என்றால் என்ன?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டுபோய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.


இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான், தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

சூலூர் MLA கனகராஜ் பண பட்டுவாடா படு ஜோர் ...



பணம் தண்ணி சாப்பாடு..... வளம் வளர்ச்சி......

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்..

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும்.

அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது.

அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு.

அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.

இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.

நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது..

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்..

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது.

பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள்..

இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி..

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது..

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா?

இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தானே...

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...



திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை..

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்..

அவர் எழுதிய நூல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இல்லை..

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" என்பதே..

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

குஜராத் தேர்தல் : இதுவரை 22.19 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ள தேர்தல் ஆணையம்...


பாஜக பக்தாள்களுக்கு இன்னும் பயிற்சி தேவை. கொண்டைய மறைங்கடா...


தீர்க்க தரிசனம் : யோனாவின் அடையாளம் யுக முடிவின் அடையாளம்...


ஆய்விற்காக அலைந்து கொண்டிருக்கும் மார்க்க அறிஞர்கள் மலரவைக்கும் கருத்துக்கள் முழுமையுடையதா, முனைந்து பார்ப்போம்.

நியாயத்தீர்ப்பு நாளின் அடையாளம் கேட்ட பரிசேயர்க்கு, இயேசு அளித்த பதில்கள்  அடையாளங்களாக அங்கே இடம் பெற்று நிற்கின்றபோது, விளக்கம் சொல்லும் போதகர்கள் இன்று தவறான விளக்கத்தை தரணியிலே பரப்புகிறார்கள்.

யோனாவின் அடையாளத்தை காட்டிநின்ற இயேசுவின் வார்த்தைக்கு விளக்கம் இடும் அறிஞர்கள், யோனாவை போல் அவர் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தார் என தவறான விளக்கத்தைத் தந்துநிற்கிறார்கள்.

அந்த தவறான விளக்கத்தை உண்மை ஆதாரம் என எடுத்துக்கொண்ட மற்ற மார்க்க அறிஞர்கள் அதை விமர்சனம் செய்து இயேசுவின் இறப்பைப் பற்றி பல கருத்துகளை எடுத்து வைக்கிறார்கள்.

இவர்கள் இயேசு சொன்ன வார்த்தையின் உட்பொருளை, உண்மைப்பொருளை கண்டு உணராமல் மார்க்க அறிஞர்களின் தவறான கருத்துகளுக்கு துணைபோய் நின்று தரமில்லா கருத்துகளை தரணியில் முன் வைக்கின்றனர்.

இதற்கான விளக்கத்தை நாம் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதோ...

இயேசு கூறியதையும் அதற்கு கிறிஸ்துவர்கள் கொடுக்கின்ற விளக்கத்தையும் பல காலமாக விவாதித்து வருகின்ற சூழலில் யோனாவின் அடையாளத்தை பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் முகமதுநபியையும், முகமதுநபியால் மிகவும் மதிக்கப்பட்ட இயேசுநபி பற்றி பார்ப்போம்.

இறைதூதர்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானவைகள் அல்ல. அதை அவர்களுக்கு கொடுத்தது வானதூதர்களே.. இப்படியிருக்க முகமதுநபி தந்தவைகள் உண்மை என்றால் இயேசுநபி சொன்னவைகளும் உண்மையே.


இயேசுநபியும்   "ஏகஇறைவனை "பற்றிதான் மக்களுக்கு போதித்தார் என்பது உண்மையே, ஏனென்றால் இயேசுவும் தன்னை இறைவன் என்று சொல்லவில்லை. இறைவனை உரிமையோடு பிதா என்று தான் சொன்னார்.

இறைதூதர்கள் தந்த சான்றுகள் அனைத்தும்  வானதூதர்களால் தரப்படும்போது வானதூதர்களுள் பொய்மை உண்டோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க இறைதூதர்கள் சொன்னவைகளும் பொய்யாய் போவதில்லை. அதை பற்றி தெளிவான விளக்கங்கள் தெரியாததால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தனது சொந்த கருத்தை திணித்து தனக்கு தோன்றியவைகளையே அதற்கு விளக்கமாக தருகின்றனர்.

முதலில் இயேசு அவருடைய சீடர்களிடத்தில் உவமையாக பேசுவது போல் உண்மையையே பேசியுள்ளார். அனைத்து உவமைகளும் இறுதியைப் பற்றிய உண்மைகளே. சாதாரண மானுடர்களான நாமே இவ்வளவு  தெளிவாய் சிந்திக்கும்போது இறைதூதர் தன்னுடைய முடிவின் கணக்கைப் பற்றி அறியாமல் இருந்திருப்பாரா?

யோனாவின் அடையாளத்தை இயேசு  கூறியதும்,  அதற்கு அவருடைய சீடர்முதல் இன்றுவரை கூறுகின்ற அனைத்து கருத்துகளும் வெவ்வேறானவை. இயேசுவிடம் பரிசேயர் நியாயத்தீர்ப்புக்கு முன் நிகழும் அடையாளம் சொல்லுங்கள் என கேட்டதற்கு சொன்ன அடையாளம் தான் யோனாவின் அடையாளம்.(மத்தேயு .12 :40) .

இதனை இயேசு தன்னுடைய முடிவை பற்றிய அடையாளமாக குறிப்பிடவில்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.உலக முடிவைப் பற்றிய அதாவது தீர்ப்பு நாளை பற்றியதெளிவான, சரியான அடையாளமே இந்த அடையாளம்.

இதே போல் யோவான் (3:13-21)ல் சொன்ன. மூன்று நாட்களும் இறுதியைப் பற்றிய அடையாளமே தவிர அவருடைய காலத்தில் நடந்தவைகள் அல்ல.இயேசு தெளிவாக மூன்று பகல், மூன்று இரவு என்று சொன்னதற்கு காரணம், தன்னுடைய மரணத்தை பற்றிய அடையாளம் என தவறாக எடுத்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான்.

எனவே யோனாவின் அடையாளம் இறுதிநாளின் தீர்ப்புநாளின் அடையாளம் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். யோனாவின் அடையாளம் முதலாம் இயேசுவின் மரணத்திற்கான அடையாளம் அல்ல.இது முழுக்க முழுக்க மறுமைநாளின் இரண்டாம் வருகையின் வருகையின் அடையாளமே.

ஏதோ கிருஸ்துவர்கள் மட்டும்தான் வேதத்திற்கான தவறான விளக்கங்களை தருகிறார்கள் என்பது இல்லை. முஸ்லீம் சகோதரர்களும்தான். இறைதூதர்களுக்கே சில அடையாளத்தின் உண்மைகள் தெரியாத போது நம்மை பற்றி என்ன சொல்வது? காரணம் குரானில் பல இடத்தில் உள்ள வசனங்களுக்கு இன்று உங்களை போன்றவர்கள் தவறான விளக்கத்தையே தருகிறார்கள்.


அனைத்து இறைதூதர்களும் இறுதியை பற்றி தீர்பப்புநாளின் நெருக்கத்தை பற்றிய விளக்கங்களையே தந்துள்ளனர்.

இயேசு 2000ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, முகமது நபி 1400ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, அனைத்தும் இறுதியைப் பற்றிய, மறுமையைப் பற்றி, அடையாளங்களே.

யோனாவின் அடையாளம் என்பது யூதர்களுக்கு மட்டும் சொன்னது அல்ல.  ஒட்டு மொத்த உலகத்திற்கே சொன்ன அடையாளம்.

நம் முன்னோர்கள் தெளிவாக தந்தவைகளின் தெளிவு நமக்கு தெரியவில்லை. ஆனால் ஞானம் உள்ளவர்களுக்கு  தெளிவாக தெரியும் என்ற கூற்றிற்கு இணங்க இறுதி ஞானகூட்டம் அனைத்தையும் அறியும் காலத்தில் உலகிற்கே ஓர் தெளிவு கிடைக்கும்.

அப்பொழுது குரான் மட்டும் அல்ல, பைபிள் மட்டும் அல்ல, மண்ணுலகில் உள்ள அனைத்து வேதங்களும் மண்ணுக்குள் மறையும் காலம் வரும் விரைவில். மேலும் இயேசுவே இறுதி நாளில் இரண்டாம் வருகையில் நான் அந்நியராய் வருகிறேன் என்றும், முகமது நபியும் இறுதி நாளில்  வேறொறு கூட்டமே சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளனர்.

இறுதி நாளில் இவ்விரண்டு மார்க்கங்களும் இல்லாமல் "ஏக இறை கொள்கை" கொண்ட இறைவனுக்கு பந்தமான, ஓர் புதிய மார்க்கமே உலகை நடுதீர்ப்பு செய்து, சொர்க்கச்சோலையில் வாழப்போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

காரணம் உலகை நல்வழிப்படுத்த ஏக இறைவன் தந்த மார்க்கவழி சான்று குரான் என்றால் இறுதியில் (மறுமையில்) இறைவன் வரும்போது இந்த இறைமறை மறையவேண்டிய அவசியம் என்ன? இறைவன் தந்த மறை இறைவன் வரும்போது மறையக் காரணம் என்ன?             


ஏப்ரல் 1-2016 ஸ்பெயின் நாட்டில் மீனவர் ஒருவர் கடலில் பயணம் செய்தபோது, சூறாவளியால் படகு சிதறுண்டுபோய், கடலில் கவிழ்ந்தது. அந்த மீனவர் கடலுக்குள் விழுந்து மூழ்கிய போது இராட்சத திமிங்கலத்தால் விழுங்கபட்டு மூன்று நாள் அதாவது 3பகல் 3இரவு 72 மணி நேரம் மீனின் வயிற்றிலிருந்து கழிவுடன் வெளியேற்றபட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார் என்ற செய்தி.

நியாயதீர்ப்பு நடக்கும் நேரத்திற்கு சற்று முன்பாக, உலகில் யோனாவின் அடையாளம் தோன்றும் என்ற இயேசு சொன்ன வார்த்தை மெய்பட்டுவிட்டன.

இப்படி இறுதி நாளின் அடையாளமாய் காட்டபட்ட 72மணி நேரம் கொண்ட 3நாளை அடையாளமாக்கி தந்த இயேசுவினுடைய சான்று அவருடைய முடிவு நாளுக்கு அறிவிக்கப்பட்டது  இல்லை என்பது புலனாகிறது.

இன்னும் சொல்லப்போனால், அவர் சொல்லும் "மனுஷகுமாரன், மனுஷகுமாரனை ஒத்த" என்ற பதங்கள் எல்லாம் இறுதிகாலத்தில் நீயாயத்தீர்ப்பபிற்கு முன்பு ஏற்படுகின்ற காட்சிகளை குறித்த சொற்களாகும்.

இயேசு முதல் வருகையில் தேவகுமாரன் ,இரண்டாம் வருகையில் மனுஷகுமாரன் .இந்த தேவகுமாரன் என்ற வார்த்தையை மற்றைய மார்க்கங்கள் வரிந்து கட்டிகொண்டு இறைவன் பெற்றெடுத்த பிள்ளை என்பது போல ஒரு முகாந்தரத்தை முன்வைக்கின்றனர்.

அந்த பதம் எதற்கு சொல்லபட்டது என்றால் ஒரு தீர்க்கதரிசியோ, இறையாளனோ, தீர்க்கதரிசன காட்சிகளை  காணவேண்டும் என்றால் இறைவனால் சிருஷ்டிக்கட்ட உடம்பு தேவதன்மை பெற்றிருக்கிறது என்பது பொருள்.

அதே ஆன்மா இறுதிகாலத்தில் வந்து பூமியில் வாழ்கின்றபோதும் மற்றவர்களால்  இரண்டாம் வருகை என அழைக்கப்படும் அந்த வருகை மனுஷகுமாரன் என குறிப்பிடபடும்.

இரண்டாம் வருகை இயேசு தீர்க்கதரிசன காட்சிகளை பார்க்க வாய்ப்பு அற்றவர் என்பது புலனாகிறது.

இதை இயேசுவே தன்னுடைய வார்த்தையில், தான் தேவனிடத்தில் சென்றால்த்தான், பிரிதொரு "தேற்றரவாளனை "பூமிக்கு அனுப்புவார்.

அப்படி வரும் அவர் தாமாக, எதையும் சொல்லாமல் நான் சொல்லியவற்றை தன் சபையிலே எடுத்துக்கூறி, என்னை மகிமைப்படுத்துவார் (யோவான்.16 :7-15). இறுதியில் சூட்சம ஒளிரூபமான, அரூபமான. இதுவரை யாருடைய கண்ணிற்கும் புலப்பட்டிராத "இறைவன் பூமிக்கு வரும்போது "சாதரண மனிதனை, அந்த இறையாளனை உச்ச தேவப்பதவிக்கு, உயர்த்திக்காட்டுவது தான் இறுதிகட்ட காட்சிகளின் நிலை.

எனவே மகன் என்ற வார்த்தையை எடுத்து கொண்டு மதங்களுக்குள் கருத்து பேதமோ, விவாதமோ தேவையற்றது.


இப்படி மானிட மகனாய் மலர்ந்து நிற்கும், இறுதி காட்சியில் மலர்ந்து நிற்கும் இரண்டாம் வருகை இயேசு, கிருஸ்துவ மக்களோடு தொடர்பு கொண்டு நேரடியாக பேசிக் கொண்டிருக்கிறார் என பிதற்றி திரியும் பேதமையை என்னவென்று சொல்வது?

மானுட குமாரனாய் மண்ணுக்கு வரும் அவரையே சர்வ வல்லமை பொருந்தியவராய், தேவனாய் இறைவன் ஆக்கி காட்டுவதற்கு முன், யோனாவின் அடையாளத்தை  ஒத்த காட்சி ஒரு வழியாய் பூமியில் அரங்கேற்றம் ஆகும் போதுதான் என சொல்லும்போது, அவரோடு பேசி பல நோய்களை குணபடுத்துவதாக சொல்லிதிரிகின்றனர் போதகர்கள்.

இயேசுவே தீர்க்கதரிசனம் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றபோது தீர்க்கதரிசனம் சொல்லிதிரியும் போதகர்களை இயேசு "கள்ளதீர்க்கதரசிகள் "என சாடுவது சிறப்பாய் தானே இருக்கிறது.

இறையாளர்களை  பற்றி  பேசும்போது (குறையாய்) நாம் ஒன்றை முடிவு கொள்ள வேண்டும். நம்மைவிட அதிக வல்லமை கொண்டவர்கள் அவர்கள். எனவே இறுதியில் வருபவர் மீனோடு வருபர்.

நபி கூட குரானில் அவருடைய தெய்வம் அவர்களை புகழேணியில் தூக்கி வைக்கிறார் என யோனாவின் அடையாளத்தை அவரும் அடையாளபடுத்திசொல்கிறார் . (அத்தியாயம் 68:48-50)  இயேசுவின் கூற்றுபடி இறுதி அடையாளம் யோனாவின் அடையாளம் என்று தெரிகிறது அல்லவா?

ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் ஆணித்தரமாய் நம்பிக்கை கொண்ட இவரின் சொற்கள் அதிலிருந்து நழுவப்பட்டதாக சொல்ல முடியுமா? ஒரு இடத்தில் மட்டுமின்றி பல இடத்திலும் அவர்கள் தெய்வம் என்று பிரித்து பேசியது ஏன் என்று யோசிக்க வேண்டுமேயொழிய ஏகாதிபத்திய இறைகொள்கையிலிருந்து இறங்கினார் என்று என்னக்கூடாது. அப்படி என்றால் அந்த காரணம் தான் என்ன?

உலகமே அதிசியிக்க போகின்ற அந்த நிகழ்ச்சி மீனோடு வருபவரை மீண்டும் நினைவுபடுத்தி நிற்க வேண்டிய சூழ்நிலையில் ஏக இறைவன் தத்துவத்தை உயர் பிடியாய் கொண்ட இரண்டாம் வருகை இயேசு அறிமுகம் செய்யும் வழிபாட்டிற்குரிய வழி, கடந்தகால வரலாற்றில் பதித்திருக்கும், எல்லா மார்க்க மற்றும் சிலைவழிபாட்டு வழிமுறைகள் உட்பட அனைத்தையும் அழித்து, அனைத்து மார்க்க "மறைகளை மறையவைத்து, புதிய ஆக்கம் பெற்று ஏகாதிபத்திய இறைகொள்கையை உலகத்தில்  இறக்கி வைக்கும் போது புத்தம் புதுமையாய் இந்த அடையாளம் புதுமுகவரி தந்து நிற்பதால் இறைவன் அதே இறைவன் என்றாலும் வந்தவிதம், முகவரி தந்த விதம், இவையெல்லாம் பழைய மார்க்கங்களில்  ஒன்றிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத பாதையாய் இருப்பதால், நபி அவர்கள்  "அவர்களின் தெய்வம்" எனக்குறிப்பிட்டது புதிய முகவரியில் இறுதிக்காட்சி புலப்பட்டு நிற்பதால்தான் என உணரவேண்டும்.

இதோ சீக்கிரமே வருகிறேன், என்ற பதம் நிறைய தீர்க்கதரசிகள், எடுத்தாண்டுள்ளனர், ஏன்? இயேசுவும், நபியும் கூட எடுத்தாண்டுள்ளனர்.

இயேசுவின்படி 2000ஆண்டுகளாகியும், நபியின்ப்படி 1400ஆண்டுகளாகியும், இன்னும் மறுமை வரவில்லையே என கேட்போருக்கு, மார்க்கவாதிகள் மட்டமான விளக்கங்களை மலர வைக்கின்றனர்.

காலம் என்பது இலட்சோப லட்சம் ஆண்டுகள் போல சித்தரித்து அதில் 1000ஆண்டுகள் என்பது, சிறியக் காலமே என ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களை முன் வைத்து நிற்கின்றனர். மறுமைக்கான அடையாளங்களை, நியாயத்தீர்ப்பிற்கான அடையாளங்களை சொல்லிக் கொண்டுவரும் தீர்க்கதரசிகள், அந்த அடையாளங்களில் இருந்துதான், சீக்கிரம் என்ற வார்த்தையைச் சொல்லி வைத்தார்களே ஒழிய தன்னுடைய காலத்திலிருந்து என்று சொல்லவில்லை.

படிப்பவர்கள் அத்தனைப் பேரும்  தீர்க்கதரசிகள் அனேகர் சீக்கரமே வருகிறேன் என்ற பதத்தில் பேசும்போது உதாரணமாய் இயேசுவிற்கும் , நபிக்குமே 600 ஆண்டுக் காலகட்ட இடைவெளி  இருக்கும்போது இயேசு சொன்ன பதம் அவர் காலத்திற்கு அருகில் என்றால், நபியின் தோற்றம் பூமியில் வருவதற்கு முன்பே மறுமை நடந்து முடிந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. அப்போதாவது சிந்தித்திருக்க வேண்டும்.

"நபிகள் நாயகம்  "சீக்கிரம் என்ற வார்த்தையை விரைவு என்ற பதத்தில் பயன்படுத்தும்போது அவர் காலத்திற்குப் பிறகு 1400 ஆண்டுகளுக்குள் எப்போதே நடந்து முடிந்திருக்கவேண்டும் நியாயத்தீர்ப்பு. எனவே சீக்கிரம் என்ற பதம் அவர்கள் வாழ்ந்தக் காலத்தைப்பற்றிது அல்ல.

யோவானின் திருவெளிப்பாட்டு  தீர்க்கத்தரிசனம், முழுக்க முழுக்கக் காட்சிகள் அத்தனையும் இறுதி நேரத்தில் வரும் இறையாளனையும்,  அவருடைய மிகச்சிறிய கூட்டத்தையும், அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் வாழம் நாட்டின் அமைப்பையும், அப்போது நிகழும் உலக அரசியல்  அமைப்புக் காட்சிகளையும் சொல்லி செல்கிறது. அதன் முடிவிலும் இதோ சீக்கரமே வருகிறேன்.தாகமுள்ளவன்  என்னிடம் வரட்டும், விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய் குடிக்கட்டும் என்று கூறுவது இன்றையக் கிருஸ்த்துவர்கள் , கொடுத்துக் கொண்டிருக்கின்ற அப்பமோ, திராட்சைரசமோ குறித்துச் சொன்னது அல்ல.

இறுதியில் வருகின்றவர், இறுதி நாளில் தன் கூட்டத்திற்க்கு தாகத்திற்க்கு (நித்திய வாழ்விற்க்கு) தருபவை என்ற காட்சியை விளக்குவதாகவே அமைய வேண்டும்.                       
                                       
இன்னும் சிலத் தமிழ் முனிவர்களின்,  தீர்க்கதரிசனங்கள் திவ்வியமாய், திடமாய், இறுதிக்காட்சிகள் அறுதியாய், உறுதியாய் சொல்லப்பட்டு நிற்கின்ற போது  இதே விரைவு என்ற பதத்தை, சீக்கிரம் என்ற பதத்தை சிறப்பாய் சொல்லி நிற்கின்றபோது தாங்கள் சொல்லும் அடையாளத்திலிருந்தே நாட்கள் எண்ணப்படுவதை சுட்டிக்காட்டி தெளிவாய் உபதேசித்து நிற்கிறார்கள்.

ஒரு வகையில் அனைவரும் "ஏக இறைவனைப் பற்றி " சொல்லிநிற்கின்ற அதேநேரத்தில் ஒன்றை ஊன்றி கவனித்துப் பார்த்தால் பிதா என்றும், "அல்லா "என்றும் "பரம்ப்பொருள் "என்றும் " பரப்பிரம்பம் "என்றும் "சிவன் "என்றும் "குரு "என்றும்,  சொல்லி நிற்க்கும் பதங்கள் "ஏக இறைவனை " குறிப்பனவாய் இருக்கின்றன.

யோவான் திருவெளிப்பாட்டில் சொல்லியிருக்கும் அத்தனை காட்சிகளும் இரண்டாம் வருகை  இறையாளனை சார்ந்ததே ஒழிய முதலாம் வருகை இயேசுவை சார்ந்தது அல்ல.

முதல் வருகையில் வந்த ஆன்மா  இரண்டாம் வருகையில் வருகிறது என்பது மட்டும் திண்ணமான உண்மை.

முதல் வருகையை ஆராதிக்கும், எந்த "கிருஸ்த்துவ மக்களுக்கும் "இரண்டாம் வருகை காட்சிகள் சொந்தமானது அல்ல. சொந்தமாயிருந்தால் இறுதியில் வருபவர், ஏன் சிலுவையை முறிக்க வேண்டும். அத்தோடு "அல்லா "என்றப்பதத்தையும் நீக்குகின்றார். சிலைவழிப்பாடு செய்யும் அத்தனை கோயில்க்களையும்  மூடுக்கினறார். 4வேதங்களையும், 32 புராணங்களையும், புனித நூலாய்க் கருதும், பகவத்கீதையையும், பைபிளையும், குரானையும், மற்றும் இருக்கின்ற பழையது அத்தனையும் ஒழித்து "புதியஞானத்தை", புதிய வழியை தடம் பதிக்கிறார் என்று எண்ணும்ப்போது இப்படி இறுதியில் வருபவர் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு சொந்தமானவர் அல்ல. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்.

எந்த மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரட்சித்து ஆட்க்கொள்கிறார் என்றால் அவர் எந்த மதமும், எந்த மார்க்கமும் சாராத, விரும்பாத தனிவழிப்பபாதையை தடம்பதித்து நிற்பவர் என்பதை எண்ணும் போது மனம் கடந்து வந்தப் பாதையை, காலத்தைப் பார்க்கின்றப்போது மனக்கசப்பாய் பார்த்தாலும், இறைவன் இறுதி நேரத்தில் அனைத்துலக இரட்சகராய் நிற்க்கப்போகிறார், என எண்ணும்போது மனம், அந்நாளை நோக்கி வேகமாய் நடைபோடுகிறது.

உலகில் உள்ள இதுகாறும் வந்த அத்தனை தீர்க்கத்தரசிகளையும் அலசி ஆராயும்போது கிடைக்காத பெரும் விளக்கம்  "தமிழ்நாட்டு முனிவர்களின் "தீர்க்காத்தரிசனங்களை பார்க்கின்றப் பொழுது மற்றைய மதங்களில்  உரைக்கப்பட்ட தீர்க்கத் தரிசனங்களே இவர்கள் தீர்க்கத் தரிசனத்திலும் அப்படியே அடங்கியிருக்கிறது என்றாலும் இதையெல்லாம் தாண்டி எந்த நாட்டில் நிகழும் எந்த மாநிலத்தில் நிகழும் என்ற விளக்கம் தமிழ்நாட்டு முனிவர்களின் தீர்க்கத்தரிசனத்தில் மட்டும் தான் திடமாய் சொல்லப் பட்டிருக்கின்றது.

இடத்தை சொல்லும், மாநிலத்தை சொல்லும், மாவட்டத்தை சொல்லும் தீர்க்கத்தரிசனம் உலகில் பைபிளாகட்டும், குரானாகட்டும் எதிலும் உரைத்திடாத அரிய விளக்கம் தமிழ்ழொழியில் எழுதிய முனிவர்களின் தீர்க்கத்தரிசன கூற்றுகளில் அடங்கியிருப்பதை பார்க்கின்றப்போது வியப்பிலும் , வியப்பாய்த்தான் இருக்கிறது.

எனவே இறுதிக்காட்சிகள், இடம் பெறும் இடம் "தமிழ்நாடு"  என சொல்லும்போது , இறைவன் நீயாயத்தீர்ப்பை நடத்துவதற்க்கு தேர்ந்தெடுத்த மண் "தமிழ்நாடு "எனநினைக்கும்போது  இறைவருகையால்  ஏற்படும் சொர்க்கப்படைப்பு தமிழ்நாடு என எண்ணும்போது தமிழ்நாடு உலகளவில் உயரிய. முதலிடத்தைப் பிடித்து "இறை மாநிலம் அது  நிறை மாநிலம்" என்ற அந்தஸ்த்தோடு நிற்க்கப்போகும் காட்சியை எண்ணும்போது தமிழன் என்ற அளவில், மனம் பெருமைப்பட்டு தலைநிமிர்ந்து நிற்கிறது.

தமிழினம் உலகெங்கும் தலைநிமிரும் காலம் இதோ விரைவில். நாட்கள் எண்ணப்படுகிறது .இறைவனின் பாதத்தை அடைவதற்க்கு, சிரம்தாழ்ந்து பணிவதற்க்கு தயராவோம். நம்மிடையே இருக்கும் பேதத்தை அகற்றி இறைவன்  பாதம் ஒன்றே பணிவோம். இறைவனே எல்லாம் வல்லவர். அவரை மிஞ்சிய வல்லமை உலகில் யாருக்கும்மில்லை. அவர் கரம் பற்றப்போகும் மக்களுக்கு இனி மூப்பு ஏது? நோய் ஏது? ஊனம் ஏது? மரணம் ஏது? பயம் ஏது? அதர்மம் ஏது? தர்மத்தின் தலைவன் பாதம் பற்றி பணிவோம். வாழ்க இறைவன் புகழ்...

இந்த பதிவு யாருடைய மனதையும் துன்புறுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே....