07/04/2019

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள்...


ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பில் அமைந்த இடுகாட்டில் கிடைத்த பொருள்கள் சுமார் 100 ஆண்டுகளாக 4 கட்டங்களாக அகழப்பட்டு, ஆய்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தன.

எழுத்தாளர் காமராஜ் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுமாறு வழக்குத் தொடுத்தார். நேற்று இரண்டு சாம்பிள் முடிவுகளைச் சொல்லி தமிழர் வயிற்றில் பால் வார்த்தார்கள். ஆனால்... அதன் பின்னால் பல கேள்விகள் எழுகின்றன.
ஆதிச்சநல்லூர் புதைபொருளில் ஒன்று 905 ஆண்டுகள் பழைமையானது என்பதை ஃபுளோரிடாவுக்கு அனுப்பி நிரூபித்திருக்கிறார்கள். 'பாரத நாடு பழம் பெரும் நாடு' ஆயினும் பழம்பொருளை ஆராய ஃபுளோரிடாவுக்குத்தான் போக வேண்டுமா? இது முதல் கேள்வி.

இரண்டாவது, 1920 முதல் ஆதிச்சநல்லூரில் புதைபொருள் ஆவணங்கள் திரட்டப்பட்டன. சுமார் 8,000 பொருள்கள் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அதில் இரண்டு பொருளை மட்டும் தேர்வு செய்து அதன் வயதைக் குறிப்பிடுவது ஏன்?

மூன்றாவது, அங்கிருந்த எழுத்துகள் சுமார் 2,300 ஆண்டுகள் பழைய பிராமி எனச் சொல்லியிருக்கிறார்கள். கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லா இடத்திலும் காணக்கிடைக்கும் எழுத்துக்கள் 2,300 ஆண்டுகளுக்கு முட்பட்டவை என நிறுத்திவிடுகிறார்கள்.

சமஸ்கிருத இலக்கணத்தை பாமினி 2,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார் என்பது பலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. தமிழ் எழுத்துக்கள் அதற்கு 100 வயசு கம்மி என்பதைத் தொடர்ந்து சொல்வது நோக்கம். கடந்த 30 ஆண்டுகளாக நானறிந்த செய்தியிலே... எங்கு பானை கிடைத்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முட்பட்ட பானை கண்டுபிடிப்பு என்றுதான் சொல்வார்கள். எங்கு கல்வெட்டு கிடைத்தாலும் அதே கதைதான். அதற்கே ஒருவர் தொல்லியல் துறை மீது கேஸ் போட்டு இவற்றைச் சொல்ல வைக்க வேண்டியிருக்கிறது.

செம்பியூர் கண்டிகையில் கிடைத்த தமிழ் எழுத்துகள் சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்தது என நிரூபிக்கப்பட்டும் சிந்துவெளியோடு தமிழர்களைத் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்கும் நோக்கமும் இதில் இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆதிச்ச நல்லூர் நாகரிகமும் அதே காலகட்டத்தில் தெற்கில் இருந்த நாகரிகம். அது நிரூபணம் ஆவது வேத மரபுக்குச் சிக்கலாகிவிடும். இந்தியாவின் தொன்மையை தமிழர் வரலாற்றில் இருந்து  ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இப்போது கவனமாக  கி.மு.905 ஆவணத்தை வெளியிடுகிறார்கள்.
இத்தனை கோடி பழைய ஆவணங்கள் உள்ள நாட்டில் அதை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையங்களைத் தொடங்குவதில் என்ன தயக்கம்? அதைத் தொடங்கினால் தமிழர் பெருமை உலகுக்குத் தெரிந்துவிடும் என்ற தயக்கம்தான் காரணம்.

100 வருசத்துக்கு முன் தோண்டியெடுக்கப்பட்ட ஆதிச்ச நல்லூர் பானை ஒன்றுக்கு இன்றுதான் விடிவுகாலம் கிடைத்திருக்கிறது. நாம் சட்டப்படி போராட வேண்டிய விவகாரம் நிறைய இருக்கின்றன. சட்டப்படி போராடி வெல்வோம்.

-  தமிழ்மகன்...

பாமக அன்புமணிக்கு எதிர் சாவாலை விடுத்த திமுக ஸ்டாலின் மகன் உதயநிதி.. நான் ரெடி.. நீங்க ரெடியா..?


https://youtu.be/NnH-Tq1_9qQ

Subscribe The Channel For More News...

நமக்குள் இருக்கும் சக்தி...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும் கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டை மட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுட குலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல் திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்து கொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக் கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓட விடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம் என்கிறது பைபிள். நம் ஊரிலும் நம்பினோர் கெடுவதில்லை என்று ஒரு வாசகம் உண்டு.

மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று உங்களுக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...

பாஜக மோடி சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்....


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

- பாரதி தமிழ்: பக்.403...

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து சுமார் 2 ஏக்கர் பருத்தி வயல் முற்றிலும் சேதம்...


நம் விதியும் மாறக் கூடியது...


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது..

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...

திமுக கனவு ஒரு போதும் பலிக்காது, பிரச்சாரத்தில் வெளிப்படையாக சொன்ன ஒபிஎஸ், கலக்கத்தில் ஸ்டாலின்...


https://youtu.be/Y8y5PBJe49o

Subscribe The Channel For More News...

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத் தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதி தான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10. வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத் தான் நடக்கிறது...

அதிமுக எடப்பாடி பழனிசாமியின் தொடர் வெற்றி பின்னணி இதுதானா.. வெளியான சுவாரசியமான தகவல்...


https://youtu.be/3LagOWwNKRg

Subscribe The Channel For More News...

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2018- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுக்கும் உ.பி.கள்.. கட்டு கட்டாக சிக்கும் திமுக கூட்டணி பணம்...


https://youtu.be/9uBMA1WyBMs

Subscribe The Channel For More News...

திருமணத்திற்கு மறுத்த காதலி.. கத்தியால் குத்தி எரித்து கொன்ற கொடூர காதலன்...


கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நிதிஷ்.  இவர் திருச்சூரை சேர்ந்த நீத்து என்கிற இளம் பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நீத்து, நிதிஷை விட்டு விலகி வேறு ஒரு நபருடன் பழகி வந்துள்ளார்.

ஆனால் நிதிஷ் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீத்துவை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, நீத்துவை சமாதான படுத்துவதற்காக நிதிஷ், நீதுவின் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் அமர்ந்து சிறிது நேரம் பேசியுள்ளனர்.  திருமணம் செய்து கொள்ளுமாறு நிதிஷ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் தொடர்ந்து திருமணத்தை மறுத்து வந்த, நீத்து மீது ஆத்திரம் அடைந்த நிதிஷ் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கினார்.  மேலும் அருகில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

நீத்துவின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து பார்க்கையில், நீத்து தீயில் கருகி கொண்டிருந்தார். உடனடியாக தீயை அணைத்து,  நிதிஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் நீத்துவை காதலித்து வந்ததையும்,  நீத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

மேலும் தீக்காயமடைந்த நீத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தனியார் பள்ளி கல்வி கௌரவத்திலிருந்து வெளியே வாருங்கள்...


பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் மனரீதியான உளவியல் தாக்குதலை விதைக்காதீர்கள்...

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...



மூலிகை மருந்துகள்...

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப் பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

சட்டம் அப்பாவிகளிடமே கடமையை செய்யும்...


தகாத உறவின் போது தகராறு.. கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்ற காதலி...


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கும் சிறுவலையத்தைச் சேர்ந்த சிட்டி பாபு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்களாம். இந்நிலையில் நேற்று மதியம் பிரம்மதேசத்தில் உள்ள பாலாற்றில் இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனராம். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மஞ்சுளாவை சிட்டிபாபு தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா சிட்டிபாவுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாராம்.

இதன்பின்னர் அவரே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இவ்வளவு நன்மைகள் இருக்கா..? சக்கரைவள்ளி கிழங்கில்...


https://youtu.be/3f-8MI4hfgQ

Subscribe The Channel For More News...

அரசாங்கத்தின் வேலைகள்...


குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?


குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.

பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.

நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.

எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...

வீட்டிலே ஹைதராபாத் பிரியாணி செய்வது எப்படி.? வீடியோ பாருங்க...


https://youtu.be/JqCVuXXJVPA

Subscribe The Channel For More News...

டிடிவி அணியை நினைத்து கலக்கம்.. தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்...


https://youtu.be/hedLUqYXifw

Subscribe The Channel For More News...

கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...


முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன  ஈ.வே. ராமசாமி நாயக்கர்...

கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.

காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.

நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.

இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...