03/01/2018

இலுமினாட்டி மராட்டிய கன்னட ரஜினி...



அறிவோம் Devil Horn Symbol இது...


சாத்தானை (satan)   வழிபடும் இல்லுமினாட்டிகளின் அடையாளம்.


தாமரையிலிருந்து சாத்தான் முளைக்குதாம்..


சாத்தானுக்கும், ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு? 


மராட்டியனே உனக்கு இன்னும் இருக்கு...

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்...


நம் வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல்  செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து...

பித்தத்தைப் போக்கும்...
உடலுக்குத் தென்பூட்டும்...
இதயத்திற்கு நல்லது...
மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்...
கல்லீரலுக்கும் ஏற்றது...

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்...

கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்...

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்....

இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்...

மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது...

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்...

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது...

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது...

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்...

உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது...

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்...

ஆண்டிபயாடிக் மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்...

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்...

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது....

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்...

மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்...

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்...

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது...

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

பாஜக வின் மாமா பத்திரிகையான தினமலர் மராட்டிய கன்னட ரஜினி க்கு தன் மாமா பணியை தொடங்கிடுச்சு...


தேமலா கவலை வேண்டாம்.. எளிய வீட்டு வைத்தியம் இருக்கு...



1.கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

2.கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

3.மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

4.வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

5.கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

6.முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

7.சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.

8.நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தட‌வி வ‌ர‌ தேமல் குறையும்.

9.ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்...

எந்த சாலைக்கு எந்த மைல்கல்...


ஆதார் அட்டை தொலைக்காமல் இருக்க ஆண்ட்ராய்டு ஆப் - இந்திய அரசு அறிவிப்பு...


ஆதார் கார்டு அட்டையை நீங்கள் இனி எங்கும் எடுத்து செல்ல வேண்டாம். இந்த ஆப் போதும்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகார பூர்வ ஆண்ட்ராய்ட் ஆப்.--> https://goo.gl/TXyGE8

நா. போகிற இடமெல்லாம் ஆதார் கார்டு கேக்குறாங்க. இப்போ கூட பாருங்க, அடுத்து ஓட்டுநர் உரிமத்திலயும் ஆதார் கார்டு இணைக்கணுமாம்.

ஆதார் அட்டையை தொலைச்சுராதீங்க, அதுக்காகதான் இந்த ஆப் இந்திய அரசு வெளியிட்டருக்கு, ஆதார் அட்டை தொலைஞ்சா, திரும்ப வாங்குறது என்ன லேசுபட்ட காரியமா?

ஆப் -ஐ  பயன் படுத்துங்க, நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


தலை குளிர்ச்சி...


காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.

3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.

மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.

பின்பு அதை வடிகட்டவும்..

வடிக்கட்டின சாரை. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர...

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் Sbi வங்கியின் நூதனக் கொள்ளை...


மக்களின் கவர்னராம் சொல்கிறார் அதிமுக மா. பாண்டியராஜன்...


மக்களுக்கு இந்த ஆளு பெயர் என்னவென்று கூட தெரியாது.. குப்பை இல்லாத இடத்தில் நீங்களே குப்பை  போட்டு அதை அள்ளிப் கூட்டினால் மக்களின் கவர்னராம். போங்கய்யா போங்க அடுத்த தேர்தல் வரட்டும்...

தமிழா விழித்துக்கொள்...


தென் கேரளாவில் தமிழர் பகுதிகள்...


ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார்.

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்க வேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது...

ஊடகங்கள் சொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்கள் தான்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு...

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா...

தமிழா விழித்துக்கொள்...


கோரக்கச் சித்தரின் எதிர்காலத் தீர்க்கம்...


முருகப்பெருமானின் சீடர்களான தமிழ்ச் சித்தர்கள் உலகை ஆழ்வர்..

சித்தபெருமானார் போகரின் சீடரான கோரக்கச் சித்தர் அருளிய சந்திரரேகை 200 என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது..

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…

யோகி பர மானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதி மத பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்..

மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர்.

உலகோருக்கு கலியுகத் தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன்..

நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.

பெண் மக்களே நிறைய பிறப்பார்கள்.

ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.

பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள்.

இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப் போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன் பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா.. சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன்.. கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே– கோரக்கர்..

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.

நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.

மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள்.

மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு ஐயா யிரம்பின்
கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின் கொட்டம் போகும்.. வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி.. வழுவாது மனுக்கள் ஞானி யாமே. — கோரக்கர்..

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும்.

சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும்.

பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும்.

தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும்.

தாரணியில் மாந்தர் பல வருண மாவர்
ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார்.

நாடு முகமினிய நவரத் தின விளைவுண்டாகும்.. போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே — கோரக்கர்..

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும்.

இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர்.

ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும்.

நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள் உண்டாகும். குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி.. வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி.. மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்.. மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே..

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன்.

ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம்.

மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும்.

அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும்.

சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக் கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில் மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல.. மகாரூப ரூப வெளி மதி மேற் காணும் துதியாக நாழி இரு இருபத் தைந்தில் தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்.. சதியாக வடதேசம் தன்னி லோர்பால் கடல் போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே..

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும்.

கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும்.

சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும்.

யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும்.

கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும்.

வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும்.

மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்.. பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி.. மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி.. மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்.. சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்..

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக் கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.

அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக் கொள்வான்.

பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள்.

பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள்.

சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்...

சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும் - ஆம் ஆத்மி கட்சி...


ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்கிறது : அதிர்ச்சியில் பொதுமக்கள்...


பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு செலவு ‘கையை கடிப்பதால்’ ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்கிறது.

பண மதிப்பு நீக்கத்தால் இயந்திரத்தை மாற்றியமைக்க செலவு அதிகரிப்பு.

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறையும், பிற வங்கிகளில் 3 முறையும் இலவசமாக பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும். பிற வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தால், அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி, பரிவர்த்தனை கட்டணத்தை வழங்க வேண்டி வரும்.

தேசிய பண பரிவர்த்தனை கழகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சில தனியார் வங்கிகள் இந்த பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்த எண்ணிக்கையில் ஏடிஎம் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள், வேறு வழியின்றி பிற ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். இந்த வங்கிகள்தான் பரிவர்த்தனை கட்டண முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய கோரிக்கைப்படி கட்டணத்தை உயர்த்தினால், வங்கிகளின் மீதுதான் இந்த சுமை கூடும். அல்லது இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை குறைக்க வேண்டிவரும்.

இதுகுறித்து தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளை விட, அவற்றுக்கு முன்னதாகவே அதிக ஏடிஎம்களை நாங்கள் நிறுவியுள்ளோம். இவற்றை பராமரிக்க அதிகம் செலவாகிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு புதிய அளவிலான ரூபாய் நோட்டுக்காக இயந்திரங்களை மாற்றி அமைக்க கூடுதல் செலவாகியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாலும் ஏடிஎம் பயன்பாடு குறைந்து, இதன்மூலமான வருவாயும் சரிந்து விட்டது. எனவே வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது, என்றார்.

ஆனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இது வழி வகுக்கும். வங்கிகளுக்கும் நிதிச்சுமை கூடும். ஏற்கெனவே பாதுகாப்புக்காக ஏடிஎம் காவலாளிக்கு சம்பளம், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான செலவு அதிகரித்து விட்டது என பொதுத்துறை வங்கிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் நிதிச்சுமையை குறைக்க வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணம் அதிகரித்தால், இவற்றை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும், ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

பாஜக பினாமி மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


இலுமினாட்டி யும் ஜல்லிகட்டு தடையும்...



அமேரிக்க இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக புகுந்து அமேரிக்க anonymous ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா ?

கேன்சர் என்ற ஒரே ஒரு உயிர் கொல்லியை உலகம் முழுக்க பரப்புவதினால் அமேரிக்காவிற்கு ஆண்டு வருமானமாக 90 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது..

அக்கேன்சரை வளர்ந்து வரும் நம்மைப் போன்ற நாடுகளில் பரப்ப நாட்டு மாடுகள் தடையாக இருக்கிறது..

புரியும் படிக் கூற வேண்டுமானால் நாட்டு மாட்டுப் பாலில் கேன்சரை அழிக்கும் சக்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

நம்பவில்லை என்றால் கிராமப்புரங்களில் நாட்டு மாட்டுப் பாலை பருகும் நபர்களிடம் சோதனை நடத்துங்கள் அவர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்..

கேன்சர் என்பது சிட்டியில் வாழும் மக்களை மட்டுமே தாக்கும்.. ஏனெனில் அவர்கள் தான் பாக்கெட் பால்களை குடிக்கிறார்கள்..

இதற்காகத் தான் இத்தனை ஆட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறது பீட்டா எச்சக்கலை நாய்கள்..

அதற்க்கு ஒத்து ஊதும் நம் நாட்டு (ஊழல்)  அரசியல் வாதி சனியன்கள்..

இப்பொழுது கூறுங்கள் எவ்வளவு பெரிய ராப்பெரி இது ?

சாரணர் இயக்கத் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத ஹெச் ராஜா மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் அரசில்வாதி மாதிரியா பேசுகின்றார் - டிடிவி தினகரன்...


கோயபல்ஸ் பிரச்சாரத்தில் பிஜேபி கை தேர்ந்தது - பாஜகவிற்கு எதிராக டிடிவி தினகரன் கடும் விமர்சனம்...

லஞ்சம் தவிர்ப்போம்...


நோக்குவர்மம் சாத்தியமா.?


நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திலும் மின்காந்த சக்தி உண்டு.

அந்த சக்தி குறையும் போது உடலில் எந்த பகுதி பலவீனமாக உள்ளதோ அந்த பகுதியில் இருக்கும் இணைப்பு இயக்க சங்கிளிகளின் கன்னிகளை தெரிக்க வைக்கிறது.

அதன் மூலம் உடலில் நோய் ஊடுருவுகிறது.

முதுகு தண்டின் கீழ்பகுதி தான் நம் உடலின் சக்தி மையமாக செயல்படுகிறது.

இங்கிருந்து தான் உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் சக்தி பாய்கிறது.

புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த சக்தி முதுகுதண்டின் அடியிலேயே உறைந்துள்ளது.

நோக்குவர்மம் என்பது அந்த சக்தியை கண்களுக்கு ஏற்றி அதன் வழியாக எதிராலியின் உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் எதிலேனும் குவித்து பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியும்.

நமது உடலில் 6000 கோடி செல்கள் 72000 நாடிகளால் பிணைக்கபட்டுள்ளது.

அந்த நாடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடங்களே 108 வர்ம புள்ளிகள் ஆகும்.

இந்த வர்ம புள்ளிகள் 7 ஆதார சக்கரங்களில் இணைக்கபட்டுள்ளது.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகியவையே அந்த சக்கரங்கள்.

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை கண்களுக்கு ஏற்றி எதிராலியின் பிராண சக்தியை உறிஞ்சி மயக்கத்தையோ அல்லது மரணத்தையோ நிகழ்த்துவதே நோக்கு வர்மம்.

நாம் சுவாசிக்கும் போது பிரபஞ்ச சக்தியான பிராண சக்தியையும் சேர்த்துதான் உட்கொள்கிறோம்.

இதை பிராணாயாம்ம் எனும் மூச்சு பயிற்சியால் சக்தியை அதிகமாக்கி கொள்ளலாம்.

நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றவனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று அகத்தியர் கூறுகிறார்.

எனவே தான் இது சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே சொல்லபட்டுள்ளது.

அடுத்து ஒரு வித்தியாசமான தலைப்பின் அறிவியலை ஆழமாக அலசுவோம்...

MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் அடிமை கூட்டம்...


திண்டுக்கல்லில் MGR நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட செட்..
இது அமைக்க எப்படியும் பல கோடி கணக்கில் செலவாயிருக்கும்...

சீரகம் பற்றி சித்தர் தேரையர் சொன்ன இரகசியம்...


சீரகம் = சீர்+அகம்..

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
- ஆசான் தேரையர்.

தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர்.

சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர்.

இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச் சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது.

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது.

குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.

தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது.

திருவண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக் கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae..

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர்.

இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும்.

இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய் விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.

பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

பொதுவாக சீரகம்...

வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை...

உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை...

இந்த ஒரு கேள்விய தான் கேனதனமா கேக்குறானுங்க ரஜினியின் முட்டா ரசிகன்கள்...


பேய்கள் ஜாக்கிரதை...


நாம் வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது.

இவ்வாறு தான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது.

அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை.

உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே.

அதே போல் நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது.

நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை.

ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல்.

மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித் திரிகிறது.

பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது.

ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது.

பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றி சுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது.

அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது.

அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது.

பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும்.

சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

இந்தியாவின் அணு சக்தி ஆய்வங்களின் இரகசியம்...


காலப் போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


ஏற்கனவே சுமேரியர்களின் ஆப்பெழுத்து முறைகள் என்ற ஒன்றை பற்றி பதிவுபதிந்து இருந்தேன் அல்லவா..

அதே கட்டத்தில் அதற்கும் முன்பு அதாவது இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை..

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது].

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்கிறது. இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்..

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது..

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து...

பாஜக மோடியின் கோட்டை என்று சொல்ற குஜராத்துல இருந்துகிட்டு சுயேட்சையா ஜெயிச்சதே பெருசு.... ஜெயிச்சிட்டு இப்படி டெய்லி பாஜக வுக்கு செருப்படி கொடுக்குறது அதைவிட பெருசு...



தமிழா விழித்துக்கொள்...


நாட்டு மாடு பசும்பால் விலை 100 ரூபாய்..
ஹரிடேஜ் பாக்கெட் பால் 40 ரூபாய்..

பிராய்லர் கோழி கிலோ 160ரூபாய்..
நாட்டு கோழி விலை கிலோ 280 ரூபாய்..

பாக்கெட் சமையல் எண்ணெய் 90 ரூபாய்..
செக்கு எண்ணெய் விலை 200 ரூவாலிருந்து 380 ரூபாய்வரை..

பிஸ்கட் பாக்கெட் விலை 25 ரூபாய்..
கடலைமிட்டாய் பாக்கெட் 35 ரூபாய்..

கெமிக்கல் ஷாம்ப் 1 ரூபாய்..
புலி மார்க் சியாக்காய் தூள் 20 ரூபாய்..

ஆக அன்பான உறவுகளே நம்மிடம் விஷத்தை கெமிக்கல தள்ளிவிட்டு.. நாம் புரிந்து கொள்ள முடியாதா ஒரு வித சூழ்ச்சிய உண்டு செய்கிறார்கள்..

அதுமட்டும்மல்லாமல் நம் இயற்கைய நாம் வாங்கி சாப்பிட முடியாத நிலைய உருவாக்கி... 80 சதவீதம் ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் விஷ உணவுகளை உற்பத்தி செய்து அவர்களிடம் வியாபாரம் செய்து...

விஷம் இல்லாத உணவுகளை பணம் இருப்பவன் மட்டும் வாங்கி சாப்பிடும் நிலையில் தள்ளிவிட்டு..

ஏழைகளை இன படுகொலை செய்ய துணிந்து விட்டார்கள்...

இது வளர்ச்சி என்ற மோகத்தில் வாழும் மக்களுக்கு புரியாது.. நாம் தான் புரிய வைக்க வேண்டும்..

உறவுகளே விவசாயத்தை மட்டும் விட்டு விடாதீர்கள்...