31/10/2018

மாவீரன் பண்டார வன்னியன்...


216 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம் - மேதகு வே.பிரபாகரன்..

முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்...

விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் பண்டார வன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.

வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி...

தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை..

பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!

பண்டார வன்னியன் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள்  (அக்டோபர் 31)  என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்.

அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்...

இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.

தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.

இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.

ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.

வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.

இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்...

துரோகத்தால் வீழ்ந்த குலசேகர வைரமுத்து பண்டார வன்னியனின் நினைவு நாள் இன்று...


தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி..

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் - மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் - பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் - நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் - நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் - பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் - உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் - நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் - நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் - ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் - கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் - வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் - முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்...

1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.

1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்த போதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.

1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

(அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5 ஆண்டுகள் முன்பே).

1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%,

BC 14%,

Non Brahmin 44%,

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7%

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டு வந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே).

தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்.

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்.

தமிழகத்தில் மட்டும்தான்..

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

(இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்).

2. அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்..

அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.

(தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன).

3. அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்..

அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்...

தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்..

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்.

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

4. அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்...

நிச்சயமாக இல்லை.

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக் கொண்டாலும்.

இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

அது இன்றும் உள்ளது.

5. அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்...

இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

6. அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்...

இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார் தான்.

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

7. அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்...

அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்பு தான்.

8. அம்பேத்கர் ஒழுக்கமானவர்...

அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார்.

9. அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி...

முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்து வைத்தது.

எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து.

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.

இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து..

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.

நகலெடுத்து தமது பெயரில் போட்டுக் கொண்டது கூட பரவாயில்லை.

அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

10. அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்...

வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்,

1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

11. அம்பேத்கர் வந்த பிறகு தான் பறையர் முன்னேறினர்...

நிச்சயமாக இல்லை.

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

சொல்லப் போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர் தான்.

12. அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார்...

அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

13. அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்...

அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக் கொடுத்து போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவிய போது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை.

அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து..

தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு..

வரலாறும் உண்மையும் தெரியாமல்..

மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே..

இனியாவது திருத்துங்கள்..
இதிலுமா வடக்கத்திய மோகம்..

1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states

3. Maharashtra as linguistic

4. Who were the untouchables?

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143)...

ஆவிகள் பற்றிய அமானுசிய உண்மைகள்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்.. எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். 

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.  பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். 

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது.. எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். 

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது..

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல.. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) O + அல்லது O - ஆக இருக்கும்..

மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்...

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....


பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

திமுக வும் திருட்டு அரசியலும்...


பதஞ்சலி இந்தி வணிகத்தை புறக்கணிப்போம். தமிழர் வணிகத்தை கட்டி எழுப்புவோம்...


பதஞ்சலி நிறுவனம் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 'சுதேசி' என்னும் உள்நாட்டு தயாரிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து அசுர வேகத்தில் தன்னுடையே பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது பதஞ்சலி நிறுவனம்.

பத்தாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள நிறுவனமாக இப்போது இந்நிறுவனம் இந்தி பாஜக அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் கட்டாயம் இந்தி எழுத்துக்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறது பதஞ்சலி நிறுவனம். இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியும் வருகிறது இந்நிறுவனம்.

உள்நாட்டு தயாரிப்பு என்று கூறிவிட்டு உள்நாட்டு மொழிகளுக்கு பதஞ்சலி நிறுவனம் இடமளிப்பதில்லை.

மேலும் இவர்களுக்கு வரும் இலாபத்தை  சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஆரிய வேத மத வளர்ச்சிக்கும்  பயன்படுத்துவோம் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை நேரடியாக சொல்லாமல் ஆன்மிகம், மதம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் செய்வோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது இந்நிறுவனம்.

இதில் வேடிக்கை என்னவெனில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்த பன்னாட்டு ஆதரவு நிறுவனமான 'futura group' என்ற நிறுவனத்தை தான் பொறுப்பில் அமர்த்தியுள்ளது பதஞ்சலி நிறுவனம்.

இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இத்தாலி நிறுவனங்களுடன் ஏற்கனவே கைகோர்த்து வணிகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது .

http://economictimes.indiatimes.com/industry/cons-products/fmcg/patanjali-enters-big-retail-with-future-group-tie-up/articleshow/49285002.cms

http://www.futuregroup.in/about-us/milestones.aspx

பதஞ்சலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே போட்டியல்ல.

பல உள்நாட்டு நிறுவனங்களுக்கும் இது போட்டி நிறுவனமாக அமைந்துள்ளது தான் வேதனை. 

பதஞ்சலி நிறுவனம் கொடுக்கும் விலையில் உள்நாட்டு நிறுவனங்களால் பொருட்களை கொடுக்க முடிவதில்லை. இதற்கு காரணம்  பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்துத்வா அரசின் முழு ஆதரவும் உள்ளது .

பாஜக அரசு பதஞ்சலி நிறுவனத்திற்கு பல நூறு ஏக்கர் நிலங்களை வழங்கி உள்ளது.

http://www.hindustantimes.com/india/maha-govt-allots-over-600-acres-of-land-for-baba-ramdev-s-patanjali/story-MDaQ0KAQIZ6v5LYjjBaFLJ.html

மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் ஒரு 'பெருநிறுவன' சாமியார்.

இவர் சாமியாராக இருந்து சம்பாதித்தது பல்லாயிரம் கோடிகள். இந்த கறுப்புப் பணத்தையும் வெள்ளைப் பணமாக மாற்ற இந்நிறுவனத்தை பயன் படுத்தியுள்ளார் பாபா ராம்தேவ்.

அதிக அளவில் கறுப்பு பணம் முதலீடு செய்வதால் இவர்கள் சந்தை விலையை விட குறைவான விலையில் பொருட்களை கொடுக்க முடிகிறது.

ஆனால் மற்ற உள்நாட்டு நிறுவனங்களிடம்  கறுப்புப் பணம் இந்த அளவிற்கு  இல்லை.

அதனால் அவர்களால் உற்பத்தி விலையை விட குறைந்த விலையில் கொடுக்க முடியாது.

இது தான் பதஞ்சலி நிறுவனத்திற்கு பெரும் ஆதாயமாகும்.

பொதுவாக உள்நாட்டு தயாரிப்புகள் விலை கூடுதலாகத் தான் இருக்கும்.

செக்கு எண்ணை, மலைத்தேன் , நாட்டு சர்க்கரை, பனவெல்லம், பற்பசை, குளியல் பொருட்கள்,  இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் அனைத்தும் விலை அதிகம் தான்.

காரணம் இதன் உற்பத்தி செலவுகள் அதிகம்.

இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தயாரிப்பு என்று கூறி தன்னுடைய பொருட்களை குறைந்த விலைக்கு விற்று வருகிறது.

இதனால் உண்மையான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பதஞ்சலிக்கு அரசின் மூலமாகவும், இந்துத்வா ஆதரவாளர்கள் மூலமாகவும்,  வெளிநாட்டில் இருந்தும் பெருமளவில் பணம் வருகிறது.

இதை வைத்துக் கொண்டு பதஞ்சலி நிறுவனம் மற்ற நிறுவனங்களை ஓரம்கட்டி தன்னுடைய நிறுவனத்தையும், இந்தி மொழியையும், சமற்கிருத மொழியையும் வளர்த்து வருகிறது.

ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழ வைக்கிறது பதஞ்சலி நிறுவனம்.

இந்தி தேசியத்தையும் ஆரிய இந்துத்வா சித்தாந்தங்களையும் வளர்க்கும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தொழில்களையும், உள்நாட்டு மொழிகளையும் பண்பாடுகளையும் அழிக்கும் வேலைகளையும் கட்சிதமாக செய்கிறது.

இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு நிச்சயம் உண்டு..

தமிழர்கள் எவரும் பதஞ்சலி நிறுவனப் பொருட்களை வாங்குதல் கூடாது. இந்தி மொழியில் எழுதப்பட்ட எந்த தனியார் நிறுவனப் பொருட்களையும்   வாங்குதல் கூடாது.

தமிழ்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குதல் வேண்டும்..

அது விலை கூடுதலாக இருந்தாலும் தமிழ்நாட்டு தயாரிப்புகளையே வாங்குதல் வேண்டும் . இப்படி ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே தமிழர்கள் தங்கள் வணிகத்தை தக்க வைக்க இயலும்.

பன்னாட்டு தேசம், இந்தி தேசம் முதலான அன்னிய பொருட்களை பொருட்களை புறக்கணித்து தமிழர் தேசத்தின் பொருட்களை வாங்குவது தமிழர்களின் பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம், அரசியல் ஆகியவற்றை பாதுகாக்கும்.

விழிப்போடு இருப்போம் தமிழர் தேசத்தை பாதுகாப்போம்...

நாம் தான் மாட்டை காப்பாற்றி விட்டோம் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்....


சித்தர்களின் எளிய மருந்துகள்..


1.சுக்கு...

கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி...

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி...

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு, புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி...

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்...

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது. மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி...

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும். இரத்தம் சுத்தமாகும். எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும். காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை...

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி, மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு...

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது. சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய், பூசணிக்காய்...

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது. நீரிழிவு நோய்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்...

வயிற்றுப் பொருமல், தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு...

இதய நோயாளிகளும், சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும். புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்..

12.கரிசலாங்கண்ணி கீரை, கீழாநெல்லி..

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும். குடிப்பழக்கமும், மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும், வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம், வசாகா, குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சுக்கு,மிளகு,திப்பிலி, மஞ்சள், புளி, துளசி, பெருங்காயம், ஆடாதொடை, பூண்டு, எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

13.சுக்கு, மிளகு, திப்பிலி...

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமிட்டு குடித்து வந்தால் குணமடையும்...

இது இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும்....


உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்...


கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும் என்கிறது சித்த மருத்துவம்..

காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும்.

கஞ்சி என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள்.

உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம்.

இளைத்தவனுக்கு எள்ளு என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட..

இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும் போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்து கொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்...

பீட்டா ஏன் தமிழக நாட்டு மாடுகளை அழிக்க துடிக்கிறது என்று புரிகிறதா...


மரண விளிம்பில் 9 அனுபவங்கள்...


ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்..

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்..

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும்..

மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம்..

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல்..

சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல்..

சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்..

ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்..

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல்..

அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

கார்பரேட் வியாபார உண்மைகள்...



ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்...

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.

ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பது போல் முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.

உடலை வளர்த்தால் தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.

இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.
அரிசிக்கு மூன்று பங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும்.

கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது.

வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது.

பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழ வைக்கும்.

நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.

குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும்.

மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும்.

எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும்.

ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும்.

இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும்.

குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும்.

மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.

பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.

சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது..

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும்.

சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது.

கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும்.

நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும்.

குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.

மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள்.

விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.

மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும்.

பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது.

அதுவும் உணவே மருந்து...

மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள்.

வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான்.

கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும்.

உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

கலைஞர் ஊழல்வாதி என்று கட்சியை விட்டு வெளியே வந்த எம்ஜிஆர் பல லட்சம் ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு நூற்றாண்டு விழா தேவையா?- பாமக அன்புமணி...


தேகமே திருக்கோயில்...


தன்னைத் தான் அறிவது ஞானம். தன்னை அறிந்தால் தலைவனான கடவுளையும் அறியலாம்.

அன்றும், இன்றும், என்றும் கடவுள்பால் அன்பு செலுத்துகின்றார்கள் மனிதர்கள்.

கடவுள் என்றால் என்ன? இதை முதலில் சிந்திப்போம்.

வாத்தியக் கருவிகளில் கடம் என்ற ஒரு வாத்தியம் உண்டு.  அது மண்ணாலான ஒரு பானை, இதுபோல் உடலும் முடிவில் மண்ணாகக் கூடியது. இதனால் உடலுக்கும் கடம் என்று பெயர்.  இதன் உள்ளேயிருந்து இயக்கும் சக்திக்கு உயிர் என்று பெயர்.  உள்கட, உள்கட என்று தத்துவங்கள் அத்தனையும், கடந்து கடவுள் நிலையை அடைவது தான் கடவுளை அடைவது.  உயிரைத்தான் கடவுள் என்று கூறுவர்.

உயிருக்கு மனைவி மக்கள் இல்லை, உருவமுமில்லை.  உயிர் எங்கும் நிறைந்தது.  உயிர் இல்லாத இடமே இல்லை.  இதனால் தான், அடிப்பவனும் அவனே, அடிபடுபவனும் அவனே, என்று ஞானிகள் கூறுவர்.  அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் கூறுவர்.

எல்லா உடல்களிலும் உயிர் இருப்பதால், கடவுள் வாழ் இல்லங்களாக அனைத்துயிரையும் கருதிக் தொண்டு செய்யுங்கள்.  அன்பு செலுத்துங்கள் இதுதான் அன்பே சிவம் என்னும் அமுதான இறைகாட்டும் சிவநெறித் தத்துவம்.

எங்கும் நிறைந்தவன் இறைவன்.  நம் உடல் முழுவதும் அவன் வியாபித்து இருக்கின்றான்.  நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வோர் அங்கங்களிலும் வெவ்வேறு சக்தியாக அவன் பரிமளிக்கின்றான்.  இதை நம் முன்னோர்கள் எடுத்துக்காட்ட நினைத்தார்கள்.  அகத்தில் உள்ள அரும்பெரும் பரம்பொருளைப் புறத்தில் பாவனையாகக் கண்டு தொழுவதற்குப் பல கடவுள்களின் உருவங்களையும் படைத்தனர்.  அக் கடவுள்களுக்கான பல கோவில்களையும், இதிகாச புராணங்களையும் ஏற்படுத்தினர், இவற்றால் உண்மையை உணர்ந்து, பரிபக்குவம் பெற வகை செய்தார்கள்.

தேகமே ஆலயம்...

நம் உடலில் உள்ள இறைவனை அறிந்து, அவனை அடையவேண்டி, நம் உடலையே மாதிரியாக வைத்துக் கோவிலாக் கட்டினார்கள்.

அதாவது, பாதம் கோபுரம் பத்து விரலும் கலசம்.

ஆண்குறி துவஜஸ்தம்பம் (கொடிமரம்). இதற்குப் பத்துமாதம் கருதரிக்கச் செய்யும் சக்தி இருப்பதால், இதற்குக் கொடியேற்றிப் பத்துநாள் திருவிழாவும் நடத்துவார்கள்.

தொப்புள் பலிபீடம்.  வயிற்றுமேடு நந்தி. "நந்" என்றால் ஆகாரம், தீ என்றால் அதை எரிக்கும் சக்தி, அதனால் "நந்தி" என்று பெயர்.

வாய், உள்ளே செல்லும் வாசல் வழி, அண்ணாக்குக்கு மேல் இறைச்சக்தி இருப்பதால், இதனை லிங்கம் என்றனர்.

உயிர் தூங்கா விளக்கு, ஆன்மா சிற்சபை.  அறிவு சுடர் ஒளி.  எண்சான் உடலுக்குச் சிரசே பிரதானம் அதனால், கோவிலுக்குள்ளே ஒரு சுற்றும், வெளியில் பிரகாரத்திலே ஒரு சுற்றும் சுற்றுவார்கள்.

எந்தச் சிவன் கோயிலிலும் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும், இடதுபுறம் ஆறுமுகன் சந்நிதியும் சற்று முன்னாக இடதுபுறம், சக்தி சந்நிதியும் இருக்கும்.

நமது மார்பில் வலதுபுறம் ஐந்துதலை உள்ள நாடி இருக்கின்றது.  "கணம்" என்றால் தேகம். "பதி" என்றால் ஆட்சி, இதைக் கணபதி என்றும் வினைகளுக்கு நாயகமாக இருந்து வேலை செய்வதால் விநாயகர் என்றும் கூறினர்.  ஐந்து தலை உள்ள விநாயகரும் உண்டு, இதைப் பஞ்சமுக விநாயகர் என்று கூறுவர்.

நமது மார்பில் இடதுபுறம் ஆறுதலை உள்ள நாடி இருக்கின்றது.  இது எழுப்பத்தீராயிரம் (72,000) நரம்புகளுக்கும் வேலை செய்கின்றது.  இதை "ஆறுமுகன்" என்று கூறுவர்.

நமது மார்பில், இடதுபுறம், சற்று முன்னதாக இருதயம் இருக்கின்றது.  இது இரத்த ஓட்டங்களுக்கும் உடல் பலத்திற்கும், சகல விசயத்திற்கும் மூல காரணமாக இருப்பது.  இதைச் "சக்தி" என்று கூறுவர்.  இதனால்தான் சக்தியைச் சிவப்பு நிறமாகவும், இவள் உடுக்கும் புடைவையைக்கூடச் சிவப்பு நிறமாகவும் அமைத்தனர்.  இவள் அணியும் குங்குமம் கூடச் சிவப்பு நிறமாக இருப்பதற்குக் காரணம் இதுதான்.  நம் உடலில் ஓடும் இரத்தமே சக்தி சொருபந்தான்.  சக்தி இல்லையேல் நாம் இல்லை.  இதனால் தான், பெரும்பாலோர் சக்தியையே போற்றி வழிபடுகின்றனர்.

குறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளன.  பிண்டத்தில் அண்ட பிண்டம் உள்ளன.   நாம் இங்கே கூறிய விளக்கங்களை பிண்டத்தில் அண்ட பிண்ட தத்துவத்தை அறிந்து  சிந்தித்து தெளிவு பெற விரும்புகிறேன்.

பிண்டத்தில் அண்டம் பிண்டம் - கழுத்துக்கு கீழே பிண்டம் என்றும், கழுத்துக்கு மேலே அண்டம் என்றும் கூறுவர். 

கழுத்துக்கு மேலே அண்டத்தில் முருகன், விநாயகர், சக்தி என்பவள் எங்கு இருக்கிறார்கள்? 

துவாரபாலகர்கள், சூரியன், சந்திரன், நந்தி எங்கு இருக்கிறார்கள்  சிந்தியுங்கள்...

கார்பரேட் வியாபார உண்மைகள்...





வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


வேற்றுகிரக தொடர்புகள் சாட்சிக்கான வாய்ப்பைக் கொண்டிருப்பது ஒரு வியக்கத்தக்க நிகழ்வு ஆகும், மனிதர்களில் சிலர் நிறைய சந்திப்புகளைக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் பலர் அத்தகைய அனுபவத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை, அல்லது எதையோ சாட்சியாக பார்த்திருக்கிறோமே தவிர அனுபவ சம்பவம் ஒன்றும் கிடையாது.

எனவே, கேள்வி என்னவென்றால், இது போன்ற ஒரு சந்திப்பை ஆரம்பிக்க  வழிகள் உள்ளதா?

ஒரு வழி இருக்கிறது அதான் டெலிபதி. இது மனச்சோர்வு அல்லது மனநல திறன் உள்ளுணர்வு திறன். ஆற்றலை பொறுத்தது. இந்த தொடர்பு யோக நடைமுறைகள் மற்றும் தத்துவம், ஒரு தியான  மற்றும் சமாதான பிரதிபலிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்வதற்கான இந்த முறை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நடைமுறை முறையாகும். அதுவே ஷாமினிசம் (Shamanism) எனப்படும் பழங்குடிகளின் சடங்குமுறையாகும்.

ஷாமினிசம் (Shamanism) என்பது உலகின் பண்டைய பழங்குடிகளின் பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறை ஆகும். பிரபஞ்சம், இயற்கை உருவாக்கும் அனைத்தையும் இணைக்க இது ஒரு வழி. சைமன் என்ற வார்த்தையின் மூலம் துங்கஸ் பழங்குடியிலிருந்து உருவானது. இந்த ஷாமினிசம் (Shamanism) என்ற வார்த்தை.

உலகம் முழுவதிலுமுள்ள பழங்குடி கலாச்சாரங்களில் ஆன்மீக மற்றும் அமானுஷ்ய சடங்குகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த பழங்குடி கலாச்சாரங்களின் பண்டைய ஆவிக்குரிய பழக்கங்களை விவரிப்பதற்கு ஷமனிசம் (Shamanism) ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பண்டைய மரபுகள் இடையிலான எண்ணற்ற ஒற்றுமைகள் இந்த வார்த்தையின் தொடர்ச்சியான பொதுமைப்படுத்தலில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.

வரலாறு முழுவதும், ஷாமன்கள்  (Shamanism) என அறியப்படும் ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் மக்களை குணப்படுத்தி, பாதுகாத்து, அறிவுரை வழங்கி வழிநடத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் வெறுமனே ஆன்மீக ஆற்றல் மூலம் மட்டுமே இத்தகைய அமானுஷ்யங்களில் ஈடுபடுகிறார்களா? அல்லது அவர்கள் வேற்றுகிரக உறவுகளுடன் தொடர்பில் இருந்து இவற்றை நடைமுறைபடுத்த முடிகிறதா?

தென் ஆப்பிரிக்காவில் சவானாவின் (Kalahari Desert) கலாகரி பாலைவன சமவெளிகளில், சான் புஷ்மன்ஸ் ஷாமன்ஸ் உண்மையிலேயே வேற்றுகிரக மனிதர்களுடன் தொடர்புகொள்ள முடிந்து. அதற்கான குகை சித்திரங்கள் நிறையவே காணப்படுகின்றன. அமானுஷ்ய வேற்றுகிரக மனிதர்கள், அறிவுரை பெற பூமியைத் தாண்டி செல்ல அனுமதிக்கும் சக்திவாய்ந்த கவசத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று ஷாமினியன்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.  என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆவிக்குரிய தொலைதூர மத்தியஸ்தர்களால்,  கடந்த காலங்களில் மனிதகுலத்தை மாற்ற முடிந்ததா? இன்றும் இத்தகைய வானுலக தொடர்பு தொடர்கிறதா?

Shamanism தொடர்ந்து பார்ப்போம்..

இந்திய கோவில் சடங்குகள் உடன்படிக்கைக்கு ஒப்பானவை என்றால்?


இரு மத சடங்குகளுக்கான ஒற்றுமை
என்னவொன்று பார்க்கலாம்;

உடன்படிக்கை பெட்டி வழிபாடு:

மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூடாரத்துக்கு உள்ளே முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய இரண்டு விசேஷ தூதர்கள் இருந்தார்கள். அந்த பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும் , பொன்னால் செய்த தூபகலசம், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன.

வைணவ ஆலய வழிபாடு:

வைணவ ஆலய வழிபாட்டை பிம்ப வழிபாடு என வைதீகர்கள் அழைப்பர். பிம்பம் என்பது உருவ விக்கிரகங்கள் எனப் பொருள்படும்.

அந்த கடவுள் சிலைகளுக்கு தங்க தகடுகள் பதித்து வைத்திருப்பார்கள்.
மேலும் கருவரை வாயிலில் இரண்டு காவல் தெய்வங்கள், (துவாரபாலகர்கள்) இடம் பெற்றிருக்கும். மேலே குறிப்பிட்டது போலவே பூஜை பொருட்களான தூபகலசம்,குத்துவிளக்கு, நெய்வேத்தியங்கள் இறைவனுக்கு படைக்க வைத்திருப்பார்கள்.

உடன்படிக்கை பெட்டி வழிபாடு:

இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது திரை சீலையால் மூடப்பட்டிருக்கும்.

வைணவ ஆலய வழிபாடு:

கருவறையில் இருந்து அருள்பாலிக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் போதும் திரையிட்டு சுவாமிக்கு பூஜை சடங்குகள் செய்வார்கள்.

வைணவர்களும் பலிபீடத்துக்கிட்டே தலை தாழ்த்தி அகங்காரம், பேராசை, தீய எண்ணங்கள் முதலான கெட்ட குணங்களையெல்லாம் பலியிட்டுட்டு மனதை தூய்மை செய்துகிட்டு வணங்கத் தயாராகுவார்கள்.

பரிசுத்த கூடாரத்தின் கருவரை இருளாக காட்சியளிக்கும், அந்த இருளில் உடன்படிக்கை பெட்டியின் மேல் உள்ள தூதர்களின் இறகுகளுக்கு நடுவே ஒளியாக பரிசுத்தமானவர் காட்சியளிப்பார். அவரிடம் பிரதான ஆச்சாரியார் உரையாடுவர். இது போன்றே வைணவ கோவில்களின் பெரும்பாலான கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய யந்திரம் பூமிக்கடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது.

இப்படி கருவறையினுள் நிரம்பியிருக்ககூடிய பாசிட்டிவ் எனர்ஜியை வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பியிருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். அந்த பாசிட்டிவ் ஒளியிடம் வைணவ பூசாரிகள் தங்கள் கடவுள்களிடம், மந்திரங்கள் மூலமாக உரையாடுவார்கள்.

இவ்வாறான இரு மத வழிபாடு சடங்குகளுக்கு இடையேயான ஒற்றுமையை பார்க்கும் போது
கடவுளின் உடன்படிக்கை பெட்டியானது சுமார் BC586 ஆம் ஆண்டு எருசலேம் பாபிலோனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்தபொழுது ஜெரேமியா மற்றும் அவருடைய சீடர்களும் ஒருவருக்கும் புலப்படாமல் எதிரிகளிடமிருந்து பரிசுத்த உடன்படிக்கை பெட்டியை மறைத்து வைத்திருக்கலாம்,இல்லை இந்தியாவிற்க்கு புலம்பெயர்ந்த யூத பிராமணர்களால் ஒருவேளை இந்தியாவில் மறைக்கப்பட்டு இருக்கலாம்..!! உடன்படிக்கை பேழை இந்திய கோவில்களில் ஏதேனும் ஒன்றில் தான் மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: "உடன்படிக்கை பேழை" ஒன்றல்ல ஒன்றுக்கும் மேற்பட்டவை உள்ளதாக  யாத்திராகமத்தில் கூறப்பட்டுள்ளது.

நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின் உச்சியில் ஏறி, ஒரு மரக்கால் மார்க்கண்டத்தை எடுத்து, நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் உன்மேல் எழுப்புவேன். நான் பேழைக்குள் போய்ச் சேர்த்தேன்... நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்த பெட்டியிலுள்ள மேஜைகளை வைத்து, கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அங்கே இருக்கிறார் என்றான்.

யாத்திராகமம் 34: 1 10: 1-5...

தற்சார்பு வாழ்வியலுக்கு திரும்புங்கள்...


இந்தியாவின் தொல்குடிகள் தமிழர்கள் தான்...


சிந்து சமவெளி, ஆதிச்ச நல்லூர், கீழடி, பூம்புகார் எனத் தொடர்ந்து பூதங்கள் கிளம்பிக் கொண்டே உள்ளது...

தமிழனைவிடத் தொன்மையானவன் நாங்கள் தான் முன்னோடி எனக் காட்ட சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என சொல்லி பார்த்தனர். இதுவரை நிரூபிக்க முடியவில்லை. சரிப்பா அதை நீங்களே வச்சுக்குங்க, ஆதிச்ச நல்லூரைப் பார்க்கலாம்னு கூப்பிட்டா அது இன்னும் பழையது என்று ஆய்வு முடிவுகள் வந்தவுடன் அதை வெளியிடாமல் வைத்துள்ளனர். பூம்புகாரில் கடலில் புதையுண்ட நகரம் குறித்து ஆய்வு செய்ய தடை போடுகிறார்கள். கீழடி தோண்டி பார்த்து கடவுள்களையேக் காணோம் தமிழன் வித்தியாசமனவன்னு உறுதியானவுடன் அவசர அவசரமாக மண்ணள்ளிப் போட்டு மூடுகின்றனர்.

உலக வரலாற்றிலேயே அதிகமான கல்வெட்டுகள், வரலாற்றுச் சுவடுகள் என தமிழகத்தில் காணப்பட்டும் அதைப் பாதுகாக்கவோ மேலும் ஆராயவோ முன்வர மாட்டேன் என்கிறார்கள்.

கொள்ளையர்களும், அருமை அறியா மக்களும் கல்குவாரிகள் போட்டு அழிப்பதை வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

எழுத்து வடிவில் நாங்கதான் முன் எனக் காட்ட அசோகர் பிராமி எனச் சொன்னார்கள். அடேய் உங்க ராசா எழுத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னாடி அவங்க தாத்தன் காலத்திலேயே, எங்கூரு வயலில் வேலை செய்பவன் கூட எழுத்து பயன்படுத்தியுள்ளான் என வந்தவுடன் அதை தமிழ் பிராமி எனத் திரிக்கிறார்கள். பேரன் பெயருடன் தாத்தா பேர் சேருமா, தாத்தா பேருடன் பேரன் பெயர் சேருமா?. சரிப்பா உங்க சமஸ்கிருதம் தான் மூத்த மொழியாச்சே எங்கே ஒரு கல்வெட்டு, ஓலைச்சுவடின்னு கேட்டா ஆங், இது தேவ பாஷை எழுத்தெல்லாம் கிடையாது செவிவழி மட்டும்னு எகிர்றானுக.

தமிழ் எல்லத்துக்கும் மூலம்னு வந்தவுடன், தமிழன் தான் மூத்தவன், இம்மண்ணின் மைந்தன்னு வந்தவுடன் சங்க இலக்கியத்தில் வரும் அந்தணன், பார்ப்பனனே நாங்கதான், நாங்களும் தமிழன் தான், சமஸ்கிருதமும் தமிழர்கள் ஒரு சில தேவைகளுக்காகப் பயன்படுத்திய சங்கேத மொழின்னு உட்டாலக்கடி பாட்டு பாடுறானுக.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொன்மை குறித்து முழு ஆய்வுகள் செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழக தொல்லியல் துறை முழு அதிகாரம் பெற்றதாக மாற்றப்பட வேண்டும். தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்பு, கனிமங்கள், தொழில், சூழல், அனைத்து போக்குவரத்துகள், கடல் என தமிழகத்தின் தொடர்புடைய அனைத்திலுமே தமிழர் தன்னுரிமை பெற வேண்டும்...

திரிபலா தரும் நன்மைகள்...


இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்...

திரிபலா பொடி...

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து..

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில் கொள்ளவும்.

முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தசோகையை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்...

அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்...


உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும்.  இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள். மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம்.

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காண்போம்.

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.

அடைமழை – ஐப்பசியில் பெய்வது

கனமழை – கார்த்திகையில் பெய்வது

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது.

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது.

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம்.

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது...

எவனுக்கும் சொம்படிக்காமல் உன் தற்சார்பை திரும்பி பார்த்தாயானால் தெரியும்...


இதுவரை நீ செலவிட்ட நேரவிரயம்... உன் வாழ்வியல்...

அருமையான திசைதிருப்பலை உனக்கு எடுத்துக்கூற தான் முடியுமே தவிர உன் மேல் திணிக்க முடியாது... 

திருந்துவது உன் முடிவு...

இலக்கு...


உங்களின் இலக்குகளில் இருந்து, மற்றவர்களால் உங்களை திசை திருப்பமுடியுமா..?

முடியவே முடியாது என்கின்றேன் நான்..

எப்படி என்று தமிழீழ வரலாறுகளில் இருந்தே விளக்குகிறேன்.. நாளை...

நாதக வின் சாதி ஒழிப்பு என்பது யாதெனில்...


ஊருக்கு ஏற்றாப் போல்... நேரத்திற்கு ஏற்றாப் போல்... திராவிடத்திற்கு போட்டியாக நடிப்பது...

அம்பாணிக்கு சவால்விடும் திமுக கருணாநிதி குடும்பம்...


2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.

அதை தமிழில் விகடன் வெளியிட்டது.

அது வருமாறு...

(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு  2 கோடி.

(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு 4 கோடி.

(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு 2 கோடி.

(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு  2 கோடி.

(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு - 12 கோடி.

(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி

(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு 50 கோடி.

(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு தெரியவில்லை.

(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ்  மதிப்பு
தெரியவில்லை.

(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை

(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை

(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.

(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு தெரியவில்லை.

(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -  தெரியவில்லை.

(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடி.

(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு - 2 கோடி.

(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

(50) சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 3 கோடி.

(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு  தெரியவில்லை.

(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு - 5 கோடி.  இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.

(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி.  இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு  தெரியவில்லை

(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்​கள்" உடையதே.

(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.

(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.

நன்றி: விகடன் (10.08.2011)

இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.

கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம். அதாவது 1.4 லட்சம் கோடி.

(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.

2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.

அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)

இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார். அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை...

கார்பரேட் வியாபார உண்மைகள்...





நிர்வாண பூஜை என்ற பெயரில் பெண் பலாத்காரம்.. போலி ஜோதிடர் மீது போலீசில் புகார்...


காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அப்பகுதியில் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். மாந்ரீகமும் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜோதிடம் பார்க்க வரும் பெண்களிடம் முறை தவறி நடந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தெய்வானை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஸ்ரீதரிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். அப்போது தெய்வானை, உடல்நிலை தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தீர்த்து வைக்கவும் ஜோதிடரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஜோதிடர் ஸ்ரீதரும், மாந்ரீகத்தின் மூலம் இதனை சரி செய்யலாம் என்று கூறி, குறிப்பட்ட நாளில் வர சொல்லியுள்ளார்.

ஜோதிடரின் வார்த்தையை நம்பிய தெய்வானையும் குறிப்பிட்ட நாள் அன்று ஸ்ரீதரை சந்தித்துள்ளார். அப்போது அவர், மாந்ரீகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று கூறி தெய்வானையை பலாத்காரம் செய்துள்ளார். ஸ்ரீதரின் இந்த செயலால் அதிர்ந்துபோன தெய்வானை, இது குறித்து தன் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள், செய்யூர் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர்.

ஜோதிடர் ஸ்ரீதர் மீது தெய்வானை தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட சுமதி என்ற பெண்ணின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் தெய்வானை புகார் அளித்த நிலையில், சுமதி என்ற பெண்ணும், செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...