28/01/2019

பெப்சி தயாரிப்பு என்றால் வெறும் பெப்சி குளிர்பானம் மட்டும் அல்ல...


கீழ்க்கண்ட அனைத்துமே பெப்சி தயாரிப்புகள் தான்...

இவற்றையும் புறக்கணிப்போம்...

பெப்சியின் பான வகைகள்..

    7UP
    Aquafina
    Duke's
    Gatorade
    Mirinda
    Mountain Dew
    Pepsi
    Slice
    Tropicana

பெப்சியின் உணவு வகைகள்...

    Cheetos
    Kurkure
    Lay’s
    Lehar Namkeen
    Quaker Oats
    Uncle Chipps

ஸ்வஸ்திக் முத்திரை உலகெங்கும் பழமையான நாகரிகம் உள்ள இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது...


தமிழ் நாட்டிலும் ஸ்வஸ்திக் கிணறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

நவீன மன்னராட்சி மக்களாட்சி போர்வையில்...


அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை, தேசிய கீதமும் இல்லை' - எழுந்தது சர்ச்சை...


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்ட இன்று காலை 11.50 மணிக்கு மண்டேலா நகரில் அமைந்துள்ள விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி.

விழாவில் ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற துணை சபாநாயகர், மத்திய-மாநில அமைச்சர்கள்,  எம்பிக்கள் பங்கேற்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தனது அரசு சுகாதாரத் துறையில் செய்துவரும் சாதனைகளை  பேசி முடித்து, தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, பாஜக  பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுவாக அரசு விழா துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபு.

நாட்டின் உயரிய பதவியிலிருப்பவர்கள் பங்கேற்ற நிகழ்வில் இந்த மரபு கடைபிடிக்க படாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது...

சீமான் vs கன்னட கமல்...



Subscribe the channel for more videos...

மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும்...


உடல் உறுதியைவிட மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும். இதோ ஒரு உதாரண மனிதன்...

ஏஞ்சலோ சிசிலியானோ என்பவர் இத்தாலியில் பிறந்தவர். பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் மெலிந்த தோற்றத்துடன் இருந்தார். இதை பலர் ஏளனம் செய்தனர். ஒருநாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முரடன், ஏஞ்சலோ முகத்தில்படும்படி கடற்கரை மணலை வாரி இறைத்தான். இந்தச் செயல் ஏஞ்சலோவிற்கு பெரிய அவமானத்தை அளித்தது.

உடனே தீர்க்கமாக முடிவெடுத்தார். கடினமான உடற்பயிற்சிகளை செய்து வலிமையான உடலமைப்பைப் பெறுவது என்று உறுதியேற்றார். உடலமைப்பை மெருகேற்றி வந்தார். ஒருமுறை மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் கவனித்தார். அவை தங்களது தசைகளின் வலிமையைக் கொண்டே ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தார்.

தானும் அவற்றைப் போல வலிமையான தசைகளைப் பெற வேண்டும் என்று கடினமான பயிற்சி மேற்கொண்டார். இவர் 12 நிலைகளில் பயிற்சியை வரையறுத்துக் கொண்டு பயிற்சி செய்தார். பிறருக்கும் பயிற்சி அளித்தார். இவரது பயிற்சிமுறை உலகளவில் தரமுடையதாகக் புகழ்பெற்று பரவியது.

'அட்லஸ்' சிலை ஒன்று பூமியை தாங்கிக் கொண்டிருக்கும். இதைப்பார்த்த பலருக்கு ஏஞ்சலோ சிசிலியானாவின் கட்டான உடல்தோற்றமே நினைவுக்கு வந்தது. அதனால் அவரை 'சார்லஸ் அட்லஸ்' என்று அழைக்கத் தொடங்கினர். அன்று முதல் தனது பெயரை (சட்டப்படி) அட்லஸ் என்று மாற்றம் செய்து கொண்டு தன்னுடைய பயிற்சி நிறுவனத்திற்கு 'அட்லஸ் பிராண்ட்' என்ற அடையாளத்தையும் உருவாக்கினார்.

இவரது அனுபவம் மற்றும் பயிற்சி என்பது வெறும் எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்வது என்று கூற முடியாது. பிறரது கேலிப் பேச்சுகளுக்கும், அவமானத்திற்கும் ஆளான ஏஞ்சலோ தான், தன்முனைப்புடன் கடுமையான பயிற்சிக்குப் பின் உலகின் உறுதியான மனிதனின் உடலமைப்புக்கு எடுத்துக் காட்டாகிப் போனார்...

Go back modi உலகளவில் டிரன்டாகி சாதனை...


தொப்பையை குறைக்க வழிகள்....


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சிதான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். தொப்பையை குறைக்க வழி...

பாஜக மோடி கலாட்டா...


சபரிமலை குறித்து சர்ச்சை கவிதை.. பிரபல இயக்குனர் மீது சானியை கரைத்து ஊற்றிய மர்மநபர்கள்...


தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் பிரியனந்தன் மீது சிலர் சாணியால் தாக்குதல் நடத்தியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அவர் சபரிமலை பற்றி சமீபத்தில் அவர் எழுதி பகிர்ந்த கவிதை ஒன்றிற்காக தான் இப்படி அவர் வீட்டுக்குள்ளேய நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதனால் அவர் செர்பு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது...

ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போராட்டத்தை கலைக்க அரசின் சதிகள் ஆரம்பம்...



Subscribe the channel for more videos...

தேசிய கொடியை ஏற்றும்போது செல்பொனில் பேசிய அதிகாரி... குவியும் கண்டனங்கள்.....


70ஆவது குடியரசு தின விழா இன்று  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால்  கொடி எற்றி வைத்தார்.

அதேபோல,  மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளிலும் குடியரசு தினம்  கொண்டாடப்படும் நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும்  ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ரயில் நிலைய  வாசலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கீதம் போட்ட போது ரயில்வே அதிகாரி இப்ராகிம் செல்போனில் பேசியுள்ளார்.

 அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பேசும்  வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் ரயில்வே அதிகாரிக்கு கண்டனங்களும் குவிந்து வருகிறது...

பாஜக வும் இந்திய சுதந்திரமும்...


பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்...


இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட  நரிலதா மலர் கண்களில்  தென்பட்டது.

மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது  கிடைத்த  செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த  நரிலதா மலர்  பூர்வீகம் இமயமலை  அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.

நரிலதா மலர் மரம்  இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து , இலங்கை நாடுகளில்  காணப்படுகிறது.

புத்த மத புராணப்படி இந்த மரத்தை கடவுள் படைத்தாக தெரிகிறது.அச்சு அசலாக பெண் நிர்வாணமாக இருக்கும் இந்த மலரை மனிதன் தான் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் இருந்து 500 கி.மீ தொலைவில் பெட்சபூன் என்ற இடத்தில் இருக்கிறது.   

தாய்லாந்தில் இந்த மரத்தை நாரிபோல் என்றழைக்கப்படுகிறது. நாரி என்றால் ஆண், பெண்ணையும் போல்
என்றால் மரத்தையும் குறிக்கிறது...

ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போராட்டத்தின் உண்மை என்ன.?




Subscribe the channel for more news...

இந்தியாவை இன்னும் நாடு என நம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


உன் முன் தேசம் என மாயை உருவாக்கிவிட்டு அதன்பின் அவர்கள் வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர்..

நான் தேசத்திற்கு எதிரானவன் இல்லை, என் தேசத்தை உலகத்தின் மத்தியில் வியாபார சந்தையாக மாற்றுபவர்களுக்கு எதிரானவன்...

இலுமினாட்டி களின் முதல் எதிரி தமிழன் தான்...


அவர்களுடைய முதல் எதிரி என்பதிலும் அவர்களை முதலில் எதிர்த்தவன் தமிழன் என்பதிலும் கர்வம் கொள்வோம்...

ஒருநாள் அவர்களை கருவறுத்து, நம் தமிழ் தேசிய அரசியல் விதைக்கப்படும்...

அகாரசாதகம்...


உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும்.

அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.

விளக்கம்...

ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ

இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல் வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.

இம்முறையை தான் “அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்...

தமிழா சிந்தித்து விழித்துக்கொள்...


கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி நதி பிரச்சனையில் தலையீடாமல்
பேருந்து கட்டண ஏற்றம், நுகர்வோர் பொருள் குறைப்பு போன்றவற்றை செய்த அரசு...

தடுப்பூசி திணிப்பு விவகாரத்தில் அதிக முனைப்பு காட்டுவது ஏன் ?

மின்காந்த சக்தி...


இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைகளுக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு.

ஒவ்வொரு இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்து விடும் போது இந்த சக்தி வான்வெளியில், கலக்கிறது.

பிரபஞ்ச இயக்கதில் வலுவடைந்த அந்த சக்தி-cosmic currents தினம், தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது.

இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும்.

யுக யுகமாக தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்ப வேண்டும் இளைஞனே...

இப்படி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறுகிறார்...

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும்.

தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்...

Get back ur natural hair colour / நம் கருமை நிறம் தலைமுடியை திரும்ப பெறுவது எப்படி.?



Subscribe the channel for more tips...

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது. கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

போலியோ சொட்டு மருந்து வாங்க மத்திய சுகாதாரத் துறையிடம் போதுமான நிதி இல்லையாம்...


ஆண்டுதோறும் ஜனவரி மற்றும்‌ பிப்ரவரி மாதங்களில் இரு தவணைகளாக நாடு முழுவதும்‌ ஒரே நேரத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அதைக்குறித்த தகவல்கள் எதுவுமே வெளியாகாத நிலையில், நிலைமை என்னவென்று விசாரித்தால், போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தைக் காலவரையின்றி ஒத்தி வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.

என்ன காரணம்? முதல் வரிதான்...

https://www.news18.com/news/india/contamination-rise-in-prices-force-health-ministry-to-postpone-national-polio-immunisation-day-2012481.html?fbclid=IwAR1fjYPKalmSHpaVp_FvYBr8XviWNICvkvj-UVWghNEZqy1-Xrsh3YZptXE

ஆசிரியர் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகள்.. போராட்டம் வெல்லட்டும்...


துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும். மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது. நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

இலுமினாட்டி ரோத்ஸசீல்டும் இந்திய வங்கிகளும்...


1934 ம் ஆண்டு ரூபாய். 100 மதிப்புள்ள பங்குகளாக முதல் பெறப்பட்டு இந்தியா ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.. கீழ் உள்ள படத்தில் உள்ளவர்கள் தான் அதன் பங்குதாரர்கள்.

ஆனால் 1949 ம் ஆண்டு பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை இந்தியா ரிசர்வ் வங்கி திரும்ப வாங்கி கொண்டது.  அன்று முதல் இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்ததது.

1947 ம் ஆண்டு அமெரிக்கா டாலருக்கு இணையாக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று 63 .91 பைசாவுக்கு மாறி உள்ளது. இதன் அர்த்தம் இந்திய மதிப்பு குறைந்துள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பணம் தேவை பட்டதால், பங்குதாரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியானது, போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட IMF (International Monetary Fund)யின் கீழ் வருகிறது.

IMF 1944 ல் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின் பேரில் 1949 ல் இந்தியா ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களுக்கு பணம் கொடுத்து, தனி சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு கீழ் வருகிறது.

ஆனால் IMF யின் அதிகபட்ச பங்குதாரர் United States Department of the Treasary.

United States Department of the Treasary யின் அதிகபட்ச பங்குதாரர் Federal Reserve Bank of New York.

Federal Reserve Bank of New York யின் பங்குதாரர் ரோத்ஸசீல்டு..

நேரடியாக ரோத்ஸசீல்டு, இந்தியா ரிசர்வ் வங்கி யோடு தொடர்பு படுத்தி கொள்ளவில்லை ஆயினும், ரோத்ஸசீல்டு வசமே, இந்திய வங்கிகளும் உள்ளன.

ரூபாய் , தங்கம் , பெட்ரோல் மட்டும் அல்ல , bitcoin உருவாக்கி அதன் மதிப்பு நிர்ணயம் செய்வதும் ரோத்ஸசீல்டு குடும்பம் மட்டுமே...

Start ur own business / சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா.?


அப்போ இந்த வீடியோ வை பாருங்க...


Subscribe the channel for more Tips...

தமிழா இனமே எல்லை.. அதுவே அரண்...


மலையாளிகளுக்கு அமைப்புகள்  இருக்கின்றன... தமிழரையோ தெலுங்கரையோ மற்றவர்களையோ அதில் பார்க்க முடியாது.. சேர்க்க மாட்டார்கள்...

தெலுங்கருக்கு அமைப்புகள் இருக்கின்றன.. நூல் பிடித்தது மாதிரி தெலுங்கர்கள் மட்டும் தான் உள்ளே இருப்பார்கள்.. ஒரு தமிழரையோ மற்றவர்களையோ உள்ளே விடமாட்டார்கள்...

கன்னடர், பஞ்சாபியர், வங்காளியர். இத்தாலியர், இங்கிலாந்தியர் என்று
எல்லோருமே அப்படித்தான் இருகிறார்கள். அதாவது, மிகச் சரியாக இருகிறார்கள்..

ஆனால் எல்லா தமிழ் அமைப்புகளுக்குள்ளும் தெலுங்கர்கள் இருகிறார்கள் மற்றவர்களும் இருகிறார்கள்...

இருகிறார்கள மட்டுமல்ல..  பெரும்பாலானவற்றில் அவர்களே பொறுப்புகளில் இருகிறார்கள்..

இந்த இழிவுக்கு முட்டுக் கொடுக்க அந்தகாலத்துப் பராசக்தி படம் முதலே நமக்கு உசுப்பேத்திக் கொண்டே இருகிறார்கள்..

வந்தாரை வாழவைத்த தமிழ் நாடு  என்று.. இதைக் கேட்டு கேட்டு மெய் மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் நம் தமிழர்கள்.. மயங்கிய நிலையில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து  எல்லாவற்றையும் உருவிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாட்டிலுள்ள தமிழத் தேசிய அமைப்புகளின் தொடர் தேய்மானத்திற்கு பின்னணியில் இருப்பது திட்டமிட்ட ஊடுருவலே...

மார்சியம் பேசுவார்கள், பெரியாரியம் பேசுவார்கள், பொதுவுடைமை பேசுவார்கள், விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள், ஈழம் பற்றி உருகுவார்கள், திராவிடம் பேசுவார்கள், தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால் தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்..

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...

தமிழர் நாடு நமது இலக்கு....

கார்ப்பரேட் சதி...


பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி...

நேர்த்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...

தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி...

தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி...

தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி...

உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி...

தாய்ப்பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி...

மாட்டுப்பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி...

சுகப்பிரசவம் என்பது இயற்கையின் விதி...

சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி...

யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...

சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...

யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...

இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...

பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...

ஆரோக்கியகிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி...

அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி...

நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி...

நோயைக்காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி...

எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...

எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி...

மொத்ததில்...

மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி...

அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி...

Stop ur hair fall / தலைமுடி உதிர்வை நிறுத்துவது எப்படி.?




Subscribe the channel for more tips...

இதையும் நாம் சிந்தித்து தான் ஆக வேண்டும்...


தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்... தமிழை நின்று திட்டும் திராவிடம்...


சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அவமதித்து விட்டார் என்று திராவிடர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

பெரியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்பார் என்று சொல்லும் திராவிடர்கள், அவர் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடலுக்கு எதிராக பேசியதை மூடி மறைக்கிறார்கள்.

தமிழருக்கு ஆரியம் வெளிப்பகை என்றால்,  திராவிடம் உட்பகையாகும்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து முதுகு பின்னால் ஒளிந்து  கொண்டு ஆண்டாள் மீதான வன்மைத்தை வெளிப்படுத்தியவர்கள் பெரியாரிஸ்டுகள். அது மட்டுமல்ல, குல்லுக பட்டர் இராசாசி என்று திட்டிக் கொண்டே அவரை இந்துமதத்தின் பாதுகாவலராக சித்தரித்தவர்கள் பெரியாரிஸ்டுகள்.

(ஆண்டாள் கற்பனை கதை என்று இராசாசி கூறியது).

இப்போது தமிழின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு சங்கராச்சாரியை திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் இராசாசி கிடைக்க மாட்டார். பெரியார் தான் கிடைப்பார். அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எதிர்த்தவர்கள் பட்டியலில் சங்கராச்சாரியையும், பெரியாரையும் குறிப்பிட்டேன்.

மேலும் சிலர் கேட்கிறார்கள். இப்போது பெரியாரை விமர்சிக்கலாமா? என்று.
இந்தக் கேள்வியை கேள்வி எழுப்புபவர்கள் ஆண்டாளை கொச்சைப் படுத்தி பெரியாரிஸ்டுகள் எழுதும் போதும், பேசும்போதும்  எங்கே போனார்கள்?

ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் குருதி ஓட்டமாகும். இதை திராவிடர்களிடமிருந்து கற்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை.

அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்...

தமிழை அமர்ந்து திட்டும் ஆரியம்...
தமிழை நின்று திட்டும் திராவிடம்...

டிக் டாக் கில் விபரீதம்... எல்லையை மீறும் இளைஞர்கள்...



Subscribe The channel for more news...

சுவருடன் உரையாடு தியான யுக்தி....


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

ஆந்திராவில் இருந்து தமிழகம் திருவாரூர் வந்து.. திருவாரூரில் இருந்து திருட்டு இரயில் சென்னைக்கு வந்த திமுக... உழைக்காமல் ஊழல் செய்து திண்ணும் ஒரே குடும்பம்...


உணர்வுகள்...


உணர்வுகளை விளக்க முடியாது
உணர மட்டுமே முடியும்...

உணர்வுகள் ஓர் உயிர் கொண்ட உயிரின் ஆற்றல்..

உணர்வுகள் ஓர் உலகம்...

இந்த உலகமே உணர்வால் பின்னி பினய பட்டுள்ளன...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...