08/12/2020

வெற்றி பெறட்டும் 8-12-2020 விவசாயிகளின் பாரத் பந்த்...

 


விவசாயிகள் பக்கம் நிற்போம்...

வேளாண்மையை பாதுகாப்போம்...

தமிழர்களுள் எந்த சாதியும் உயர்ந்ததும் அல்ல, எந்த சாதியும் தாழ்ந்ததும் அல்ல...

 


தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமமே என்றே கருத்தை ஆதி காலம் தொட்டே நம் முன்னோர்கள் முன்மொழிந்து வந்துள்ளனர்.

சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் வள்ளுவனும் மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்று தெளிவுபட உரைத்துள்ளனர்.

எனினும் ஆரியம் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்க, அதை திராவிடம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதி இறுக்கத்தை உருவாக்கி தமிழர்கள் ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொண்டது.

இதன் விளைவாகத் தான் தமிழ் சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் அடித்து சாகிறது...

அரசு சாரா நிறுவனங்களில், ஆர்எஸ்எஸ் தான், வெளிநாட்டு நிதியைப் பெறுகிறது...



வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ் தான்! மதவாதத்தையும், வெறுப்பையும் பரப்புவதன் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும்.

 இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்ற தகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்ற உண்மையை, “அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள்” என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச்சூழல், கட்டுமானத் தொழிலாளர் கள்துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக்கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே “வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி” என்ற தலைப்பில், ஆர்எஸ்எஸ் தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை,

“வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து” என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்காவின் நிதி, எப்படி ஆர்எஸ்எஸ்ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசியலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வ மாக அந்த அறிக்கை முன்வைத்தது.

பலலட்சம் கோடி டாலர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு சென்றுள்ளதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,

என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.நாட்டில் அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்எஸ்எஸ்-ஸின் அந்நிய நிதி பின்னணிகுறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ-யின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திரமோடி அரசு விசாரிக்குமா?

அந்த விசாரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியிலிருந்து தான், இவ்வளவு காலமாக வும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக் கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்எஸ்எஸ் மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...

 


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது..

எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது.

மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு குவளையில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, காடி (vinegar) இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மேபிள் சாறு (Maple Syrup) சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.

இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான். அவுசுத்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்...

திருச்சியில் ரயிலில் பயணித்த பொன்னுச்சாமி என்ற மாற்றுத்திறனாளியை குடிபோதையில் தகராறு செய்த திமுக பிரமுகர்கள்...

 


மராட்டிய பிராடு ரஜினி...

 


புதிய விவ‌சாய‌ சட்ட திருத்த‌ங்க‌ள் என்றால் என்ன..?


ஒப்ப‌ந்த‌ விவ‌சாய‌ம்.

ப‌துக்க‌ல் சுத‌ந்திர‌ம்.

உண‌வுப்பொருள் இனி அத்தியாவ‌சிய‌ பொருள் இல்லை.

இதுதான் சுருக்க‌மாக‌ புதிய‌ வேளாண் ச‌ட்ட‌ம்...

பெருநிறுவனங்கள் விவ‌சாயிக‌ளுட‌ன் நில‌த்துக்கு ஒப்பந்த‌ம் செய்வ‌த‌ன்மூல‌ம், விவ‌சாயி என்ன‌ விதைக்க‌ வேண்டும் என்ப‌து முத‌ல் எப்ப‌டி விவ‌சாய‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌துவ‌ரை இனி பெருநிறுவ‌ன‌ங்க‌ளே முடிவு செய்யும்.

பெருநிறுவனங்கள் இந்தியாவின் எந்த‌ பாக‌த்திலிருந்தும் எவ்வ‌ளாவு விவ‌சாய‌ பொருட்க‌ளையும் எந்த‌ விலைக்கும் வாங்கி ப‌துக்க‌ முடியும்.

விவ‌சாய‌ பொருட்க‌ள் இனி அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ளின் ப‌ட்டிய‌லிலிருந்து நீக்க‌ப்ப‌டுவ‌தால் மெல்ல‌ ரேஷ‌ன் முறை ம‌றையும்...

இய‌ற்கை பேர‌ழிவுக‌ளின் போது ம‌க்க‌ளுக்கு உண‌வு வ‌ழ‌ங்குவ‌துகூட அர‌சின் க‌ட‌மையாக இருக்காது.

 இரண்டாம் உலகப் போர்க் காலத்தில்,  உணவு பொருட்களை வெள்ளையர் மொத்தமாக கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு கடத்தியதால் இந்தியாவில் ஏற்ப்பட்ட கொடிய பஞ்சமும் லட்சக்கணக்கான பட்டினிச் சாவுகளும் இங்கே எண்ணிப்பார்க்கத்தக்க ஒற்றுமைகள்...

இரண்டு வருடமாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களைப் பரப்பிவந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த திமுக ஐடி பிரிவு நிர்வாகி ஜெயச்சந்திரன் கைது...

 


உழவர்களுடன் ஏன் விவாதிக்க மறுக்கிறீர்கள் மக்கள் விரோத பாஜக அரசே...

 


மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே...

இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. ஒரு up & down  ரயில்வேக்கு வாடகை தொகை ரூ.5 லட்சம். ஜனவரி 3 ம் தேதி வரை வாடகைத் தொகையை தனியார்  நிறுவனம்  ரயில்வேக்கு கட்டிவிட்டது. 

இந்த  ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல  ஒரு இளம் வயது பணிப்பெண் நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் இலவசம்.  அரசு ரயில்வேயின் பழைய  கட்டணம் ரூ.30/-, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000/- .

இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை டிமான்டை பொருத்து  ரூ. 8000 முதல் ரூ.12000 வரை இருக்கும் என அந்த நிருவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் ஓப்பன் பண்ணிட்டாங்க. ஊட்டி ரயிலில் ஒரு குடும்பம் மே மாதம் டூர் போய் வர ரூ.1 லட்சம் செலவு ஆகும் 

ஊட்டி ரயில் இனி கனவுதான்.தனியார் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆனது அல்ல என்பது நிரூபனம் ஆகிவிட்டது..

இதை பற்றி பேச வேண்டிய ஊடகம்.. 

ரஜினிக்கு கழுவி விட்டுகிட்டு இருக்கு...

படைவீரர்கள் விவசாயிகளே 💪💪

 


திமுக சொம்பு சுப.வீ யும் சாதி ஒழிப்பும்...

 


சாத்தான் வேதம் ஓதுகிறது...

சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்...

அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்... அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, இப்போது தான் என்னை கண் தெரிகிறதா எனக் காட்டமாகக் கேட்டாராம்..

இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?

தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது.

வேட்டியோடு என்ன விரோதம்?

நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம்.

அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.

சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது.

ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ..

அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்...

கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் பெண்ணியப் புரட்சியும்...

 


72 வயதில், 26 வயது பெண்ணை திருமணம் செய்து, இது ஒரு மாபெரும் பெண்ணியப் புரட்சி, நான் உலக மகா புரட்சியாளன் என்று கூறிய கேவலம் உலகில் எங்கும் நடந்திருக்கவில்லை.

பெரியார் என்ற தமிழின அழிப்பின் ஆணிவேரான வடுக வந்தேறியின் படத்தில் குசுபூவை மனைவியாக போட்டதின் நோக்கம் மணியம்மையை வயதான பெண்மணியாக காட்டவே தான்.

வெங்காய ராமசாமியின் இறப்பிற்கு பின்னர் மனிதகுல துரோகி கருணாநிதி, அண்ணா, மற்றும் பிற திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி) வந்தேறிகளால் துன்புறுத்தப்பட்டு தவறாக நடத்தப்பட்டார்.

இந்த பொழப்புக்கு சும்மா பொதீட்டு இருந்திருக்கலாம்.

அந்த திருட்டு திராவிட கள்ள சிரிப்புதான் செம அழகு...

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


பாஜக சங்கிகளுக்கு தரமான செருப்படி...

 


150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்...

 


மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார்.

வித்தியாசமான உடல் அமைப்புடன் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் "குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருவர், அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார்.

20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ம் ஆண்டு அவரும், அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்.

பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டு வரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப் போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்...

மக்கள் விரோத பாஜக மோடி அரசின் 20 லட்சம் கோடி செலவில் கொடுக்கும் கொண்டை கடலை...

 


டிசம்பர் மாசம் கணக்கை தொடங்கிய திருட்டு திமுக உபி...

 


தொப்பையை குறைக்க வழிகள்...

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல.

ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

மக்கள் விரோதி பாஜக மோடி அரசிற்கு செருப்படி இன்னும் பலமாக விழ வேண்டும்...

 


திமுக ஸ்டாலின் Vs அதிமுக எடப்பாடி 😁

 


உண்ணும் உணவு பொருட்களில் இலவசத்திற்கு ஆசைப்பட்டு வாங்கின மக்களுக்கு...


சர்க்கரை நோய் இலவசம் !

ரத்தக்கொதிப்பு இலவசம் !

புற்றுநோய் இலவசம் !

தோல் வறட்சி இலவசம் !

நெஞ்செரிச்சல் இலவசம் !

வெள்ளைமுடி இலவசம் !

செரிமானம் இல்லாமை இலவசம் !

மூட்டு வலி இலவசம் !

மலட்டுத்தன்மை இலவசம் !

கெட்ட கொழுப்பு இலவசம் !

ரத்த குழாய் அடைப்பு இலவசம் !

ஆதலால் இலவசத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காமல் நல்லதையே நாடுங்கள்..

உள்ளூரில் சிறு வியாபாரிகள் (செக்கு எண்ணெய் போன்ற இயற்கை முறையில்) இருப்பார்கள் அவர்களை தேடி பிடித்து வாங்குங்கள்..

அவர்கள் வியாபாரம் செய்து இலாபம் ஈட்ட வந்தவர்கள் அல்ல.. வியாதிகளுக்கு உணவே மருந்தென மாற்றம்  செய்ய வந்தவர்கள்...

வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்...

 


திருட்டு தெலுங்கு திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது ராஜா...

 


தாந்திரீக கட்டு செயல்முறை...

 


திருமூலரின் திருமந்திரத்தில் பல தாந்திரீக இரகசியங்கள் உள்ளது, அவை சூத்திரங்களாக உள்ளது அதை சரியாக புரிந்து கொண்டால் , இதை பிரயோகம் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்..

ஒருவரை உச்சாடனம் செய்ய அவர் சொல்லும் ஒரு கிரியை இந்த பாடலில் கவனியுங்கள் ; உச்சாடனம் என்றால் எவரையும் (தீய மனிதர்களையும் , துர் தேவதைகளையும்) நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது.

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்

பாங்கு படவே பலாசப் பலகையிற்

காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

975 பாடல்...

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் - கோவில். காங்கு அருமேட்டில் - வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு - கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு - கடுகு - கடு + கு - சிறுத்தவிடம்.

இதில் சொல்லப்படும் துர்தேவதைகள் யார் தெரியுமா?

உங்க குலதெய்வங்கள் எனும் முன்னோர்கள் தான்..

இப்போது புரிகிறதா ?

குலதெய்வ கோவிலில் குதிரையில் சாத்தன் வந்த இரகசியம்...

பெரியார் எனும் ஈ.வெ.ரா தெலுங்கரா? கன்னடரா?

நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,

நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா என்று நான் கூறினேன்.

ஈ.வெ.ரா  (1.6.1954 விடுதலை இதழில் ).

ஈ.வெ.ரா தெலுங்கரா? கன்னடரா?

தமிழர் கிடையாது என்பது மட்டும் உறுதி...

உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்...

 


அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது..

கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.

இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்…

அடுத்த சம்பவம்…

உண்மையிலேயே ஆச்சரியமானது தான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…

(சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்).

நீண்ட காலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.

மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.

முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.

அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.

இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.

அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…

மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் ..

இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.

அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை? என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…

அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…

தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரெயிலின் பயணக்கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது...

 


மராட்டிய பிராடு ரஜினி பரிதாபங்கள் 😁

 


ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?

 


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா..

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே..

திருட்டு திராவிடர்ஸ்...

மக்கள் விரோத பாஜக மோடி அரசே வேளாண் சட்டத்தை கைவிடு...

 


https://www.facebook.com/RTnews/videos/818475179003680/

இவ்வளவு மக்கள் கூட்டம் கொரோனா நாடகத்தையும் உடைத்து விட்டது..

வெல்லட்டும் விவசாயி ♥

 


சாதி பெயரை கேக்காதே என கதறுபவர்கள் பின்னணி... தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை...

ST பட்டியலில் மொத்த  சாதிகளின் எண்ணிக்கை = 36...

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.

ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41.

பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகி, கொரச்சா, தெலுங்கு பட்டி செட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள 41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

DC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.

பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்க போயர், தொம்பர்கள், நோக்கர்கள், போயர்கள் , இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79.

ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான், நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது உண்டா? தமிழ்குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா? 

ஆனால் இங்கு மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும், மற்றும் பிற மொழியினரும் இங்கு இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.

இது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இதை பற்றி யாராவது இந்த நிலத்தில் பேசியது உண்டா?

இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.  ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல பொது வெளியில் பேசிக் கொண்டு தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.

இட ஒதுக்கீடு முறையில் தமிழ் சாதிகளை விட பிற மொழி சாதிகள் தான் அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதை கேட்க யாருக்கு தைரியம் உள்ளது??

இங்கு தான் தமிழ் சாதிகளுக்குள் அடித்து கொள்வதற்கு மட்டுமே நேரம் உண்டு.

இத்தனை உரிமைகளையும், அதிகாரத்தையும், பலன்களையும் பிற மொழி சாதியினருக்கு கொடுத்தவர்கள் திராவிடர்கள்தான்.

திராவிடர்கள்தான் இத்தனை பிற மொழி சாதிகளை இங்கு இடம் பெற செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை பிற மொழி சாதியினரும் அனுபவிக்க காரணமானவர்கள்.

இந்த மண்ணில் திராவிட_ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்க தான் செய்யும். இதற்கான ஒரே தீர்வு மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு. 

சட்டநாதன் அறிக்கை போல.. நாம் மக்கட்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டால் இங்கு பிற மொழி சாதியினர் பயன்பெறும் அளவு குறையும்‌‌.

தமிழ் குடிகள் ஆதரவு கொடுங்கள். இல்லை எனில் இந்த நிலத்தை பிற மொழி சாதியினர்  ஆக்கிரமிப்பு செய்வது உறுதி. பாதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். இழந்தவற்றை மீட்க, உரிமையை வெல்ல, நிலத்தை காப்பாற்ற, அதிகாரத்தை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்...

இங்கு படிக்காதவனை முட்டாள் என்று சொல்லும் கூட்டம் யோசித்து பாரு யார் முட்டாள் என்று தெரியும்...

 


உலக அளவில் கவனம் பெறும் இந்திய விவசாயிகள் போராட்டம்... பாஜக மோடிக்கு செருப்படி...

 


மல்லிகையும் மருத்துவ குணமும்...

 


மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம்  மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல்,  பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய்  சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில்  தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால்  கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ   - 5 கிராம்

கறிவேப்பிலை                  -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப்  பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...

ஊழலே அசந்து போகும் திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி ஊழல்...

 


ஊழல் பண்ணி மாட்டிக்கிட்டு, அத சொல்லி மக்களிடம் அதுலயும் ஊழல் பண்ணுனா  ஊழல் விஞ்ஞானின்னு பட்டம் குடுக்காம வேற என்ன செய்வான், சர்க்காரியா?

ஊழலுக்கு ஒரு நோபல் பரிசு இருந்தால் அடுத்த ஆயிரம் வருஷத்துக்கு  கருணாநிதிக்கே அதை ரிசர்வ் பண்ணி இருப்பானுக.

அல்லது, அறிவியலை ஊக்குவிக்க 'ஆல்ஃபிரெட் நோபலின்' பெயரில் விருது வழங்குவது போல,  உலக மகா ஊழல்களை அங்கீகரிக்கும் வண்ணம் கருணாநிதி பெயரில் விருது வழங்கலாம்.

இப்படியான திறமைகள் கொண்ட கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஊழலை கருணாநிதி என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கலாம்.

டெண்டர் வழங்குவதில் 10 ஆயிரம் ரூபாய் 'கருணாநிதி' செய்தார். 

மாட்டுத்தீவன கருணாநிதி வழக்கு, போபோர்ஸ் கருணாநிதி வழக்கு, சவப்பெட்டிகள் வாங்கியதில் கருணாநிதி வழக்கு, ஜெயலலிதாவின் டான்சி கருணாநிதி வழக்கு, நல்லா இருக்குல்ல...

விவசாயிகள் ஒன்றிணைந்தால் நாடு தாங்காது 💪

 


இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா ஆதரவு...