17/01/2018

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2018- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

தமிழனின் பாரம்பரியம் டா...


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


மூலிகை மருந்துகள்...

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப் பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

கார்பரேட் வியாபார இரகசியம்...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது.

இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.  முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.

ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

எப்போது எம் தமிழின் பெருமையை இந்தியா அறியுமோ?


தொடரும் ஆதார் அட்டூழியம். கைரேகை கண்விழிப் பதிவை தொடர்ந்து இப்போது வருகிறது முக அடையாளப் பதிவு...


தனிமனித தகவலான கை ரேகை, கண்விழிப் படலங்களை ஏற்கனவே ஆதார் நிறுவனம் மக்களிடம் இருந்து கட்டாயமாக பெற்றுவிட்டது என்பதை நாம் அறிவோம்.

இவற்றை தனியார் நிறுவங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது என்பதையும் அறிவோம்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் அனைத்து குடிமக்களின் முக அடையாளத்தையும் துல்லியமாக பதிவு செய்து அதை சரிபார்த்த பின்னரே சேவைகள் வழங்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது ஆதார் நிறுவனம்.

கைரேகை கண்விழிப் பதிவுகளை நீங்கள் ஒருவருக்கு விரும்பிக் கொடுத்தால் தான் அதை சரி பார்க்க இயலும். ஆனால் முக அடையாளப் பதிவு என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உங்கள் படத்தை வைத்து உங்கள் ஒட்டு மொத்த தகவலையும் சரி பார்த்து விடலாம்.

சாலையில் நடப்பவர் முதற்கொண்டு வீடுகளில் வசிப்பவர் வரை எவரது தகவலையும் அவரது ஒளிப்படத்தை வைத்து வெகு எளிமையாக சேகரித்து விடலாம்.

இது தனிமனிதர்களின் அடிப்படை அகவுரிமையை மீறும் செயலாகும்.

கண் ரேகை கண் பதிவுகளே தனிமனித உரிமை மீறல் என்று நாம் உச்சநீதிமன்றம் வரை சென்று நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய அரசோ அதை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இப்போது முக அடையாளப் பதிவுகளை சேகரிக்கும் வேலையை தொடங்கி உள்ளது கண்டனத்திற்குரியது.

இதை எதிர்த்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை...

இந்த மானங்கெட்ட ஈனர்களை உள்ளே விட்ட அலங்காநல்லூர் மக்களை என்னவென்று சொல்லுவது...


உத்தமன் பன்னீரை ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் திருப்பி அனுப்பியதால் ரவுடி துறையை வைத்து விரட்டி விரட்டி அடித்த இந்த அடிமை ஈனர்களை உள்ளே விட்டு இருக்கக்கூடாது..

வெட்கங்கெட்ட அடிமைகள்.. நமது மறதி.. அவர்களின் பலம்...

ஆர்.கே.நகரில் தினகரனை மறைமுகமாக தாக்கி வைக்கப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்...


தமிழிசைக் கருவி - பறை (தப்பு)...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி.

எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன...

கார்பரேட் மருத்துவத்தின் உண்மைகள்...


பெட்ரோல் விலை 75ஐ நெருங்கியது: ஒரு வாரத்தில் 1 உயர்வு...


பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு லிட்டர் 75ஐ நெருங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை 1 உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து, எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்து வருகிறது...

பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி 1993ல் கூறியது...


சிவசேனா கட்சியை தடை செய்ய வேண்டும்...

RSS இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்...

மறுக்க முடியாத உண்மைகள்...


கர்ம விதிகள்...


உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்...

1. மகத்தான விதி  காரணி மற்றும் விளைவு விதி Law of Cause and Effect..

எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்...

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு .

2 படைத்தல் விதி ( Law of creation )...

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான். நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது. ஆகவே  நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்..

3 பணிவு விதி ( Law of Humility )...

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும். இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி. பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத் தான் இருக்கும்..

4 வளர்ச்சி விதி ( Law of Growth)...

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம் தான்.. நாம் மாறும் பொழுது நமது வாழ்க்கையும் அதற்கேற்றாற் போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது. உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி ( Law of Responsibility )...

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில் தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும் பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச் சுற்றியுள்ளவற்றை மாற்ற வேண்டும் ..

6 தொடர்பு விதி ( Law of Connection )...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி ( Law of Focus )...

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்த முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது. நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது. நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)...

நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போக வேண்டும். நமது சுயநலமற்ற தன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்.. சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும் பொழுது தான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம். ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி ( Law of Change )...

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும். மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE...

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும்,  நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி ( Law of Patience and Rewards )...

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது. பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும், வேறெந்த வழியுமில்லை.  வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வதில் தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration )...

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை. காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..

தான் ஒரு பைத்தியம் என்று, தப்பித்த விஎச்பி தலைவர் தொகாடியா...


ராஜஸ்தான் மாநிலம், கங்காபூர் காவல்நிலையத்தில் இந்த ஆளு மீது ஒரு வழக்கு. கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறை சென்றதும், ஆள் ஆட்டோவில் எஸ்கேப் ஆனார்.

விடாது தேடி அலைந்த போது ஒரு இடத்தில சுயநினைவு இல்லாமல் இருந்தாராம், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்களாம்.

நல்லா காதுல பூ சுத்துரானுங்க...

ஒரு வழக்கை சந்திக்க வக்கில்லாமல், ஓடி ஒளிந்து பைத்தியம் என்று மருத்துவமனையில் படுப்பதுதான் காவிகளின் வீரம் அவர் அவ்வளவுதான்...

நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் உங்களுக்கு ola டாக்ஸி.. uber டாக்ஸி தெரிந்து இருக்கும்... கூடவே மா உலா தெரிந்து கொள்ளுங்கள்...


இவர்கள் சென்னை சென்ட்ரல் சுற்றி உள்ள பகுதிகளில் 2 வீலர் மூலம் உங்கள் இடத்திற்கு உங்களை சேர்க்கும் தன்னம்பிக்கை மாற்று திறனாளி மனிதர்கள்...

உங்கள் உலா தனிமையில் என்றால் இவர்கள் நம்பிக்கை ஊட்டுவார்கள்...

தொடர்பு மா உலா பாலாஜி 7448442424...

நல்லா பாருங்க.. விஜய் சேதுபதி வாழ்த்து செய்தியில் பாஜக என்ற வார்த்தை இருக்கா?


பிரித்தாலும், தீயசக்தி என்ற வார்த்தைகளை பார்த்தவுடன் பாஜக சேகருக்கு ஏன் கோபம் வருகிறது?

அடேய் மறுபடியுமா...


தமிழர்கள் அனைவரும் இந்தி கற்பதனால் வரும் ஆபத்துக்கள்....


1. தமிழ் பெயர்கள் அனைத்தும் இந்தி பெயர்களாக மாற்றப்படும்.. இது ஏற்கனவே நடந்தேறி வருகிறது.

2. தமிழ் பெயர் பலகைகள் முற்றிலும் மறைந்து ஹிந்தி மொழியிலும் பெயர் பலகைகள் காணப்படும்.

3. ஹிந்தியர்கள் சுதந்திரமாக தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் பயணித்து வியாபாரம் செய்வார்கள்.

4. ஹிந்தி வழிக் குடும்பங்கள் சாரை சாரையாக தமிழ்நாட்டில் குடியேறுவார்கள். அதனால் ஹிந்தி வழி பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கும்.

5. ஹிந்திய அரசியல் தொகுதிகள் தமிழ் நாட்டில் உருவாகி ஹிந்திய அரசியல் வாதிகள் ஆங்கங்கே வெற்றி பெற்று ஆட்சியும் செய்வார்கள்.

6. அனைவருக்கும் ஹிந்தி எழுத படிக்க தெரியும் என்ற நிலையில் , அனைத்து வியாபாரம் , அலுவலக ஆவணகளும் ஹிந்தி மொழியில் பதியப்படும்.

7. தமிழ் சினிமாத் துறை நலிவடையும். ஹிந்தி சினிமாக்கள் இனி பட்டி தொட்டியெல்லாம் திரையிடப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டும்.

8. வணிக வளாகங்கள், சுற்றுலாத் தளங்கள், வழிபாட்டுத் தளங்கள் ஹிந்தியை தான் முதலில் பயன்படுத்தும். கர்நாடகாவில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

9. அரசு அறிவிப்புகள் ஹிந்தி மொழியிலும் வெளிவரும், இது ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு எளிமையாகிவிடும்.

10. பெயரளவில் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படும். எழுதாத சட்டமாக எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் இருப்பது போல் இனி எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்தி என்கிற நிலைமை தமிழ்நாட்டில் நிச்சயம் உருவாகும்.

இத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும், ஹிந்தி மக்கள் இந்தியாவில் எங்கும் சிரமமின்றி வாழ வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு தான் இந்திய அரசு பிற மாநிலங்களில் ஹிந்தியை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.

இந்த இழிநிலை வரக் கூடாது என்பதற்காக தான் தமிழர்கள் நாங்கள் போராடுகிறோம்.

ஆகவே தமிழர்கள் அனைவரும் இந்த சூழ்ச்சியை கருத்தில் கொண்டு உங்கள் தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து , ஹிந்தி திணிப்பை முடிந்த வரை எதிர்க்க போராடுங்கள். இல்லை என்றால் உங்கள் கண்முன்னே உங்கள் தாய் மொழி சீரழிந்து போவதை நீங்கள் உறுதியாக காண்பீர்கள்...

கன்னட தெலுங்கர் ஈ.வே.ரா எனும் பெரியார் என்ற பொய்யரை...


பெரியார் என்ற பொய்யரை, அவர் விதைத்த திராவிட கொள்கையை வீழ்த்துவோம். கன்னட ஈவே ரா நாயக்கரின் திராவிட சாதனையே தமிழரின் வேதனை...

இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு, பார்பன எதிர்ப்பு கடவுள் மறுப்பு என்று முற்போக்கு சிந்தனைகளுக்கு முன்னோடியாக உள்ள தமிழர்கள் கண்ணெதிரே தான் பல இலக்கத்தில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழீழத்தில் நடந்தேறியது.

போரில் மக்கள் கொல்லப்படும் முன்பும், கொல்லப்படும் போதும்,கொல்லப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் மயிரிழை அளவிற்கு கூட இன்றளவும் தமிழர்களிடத்தில் எழுச்சி இல்லை..

இதற்கு காரணம் தமிழினத்திற்கு எதிராக ஈ வே ராமசாமி நாயக்கர் விதைத்த திராவிட கருத்துக்களும் அவர் வழி வந்த திராவிடர்களும், திராவிட அரசியல் செயல்பாடு களேயாகும்.

தனது தொடர் உழைப்பின் மூலம் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பார்பனர்களை ஒழிப்பதாக கூறிய ஈ.வே.ரா இறுதியில் இவைகளை ஒழிக்க முடியாமல், தமிழர்களின் மொழி இனப்பற்றை முழுமையாக துடைதொழித்து விட்டார். அதனால் தமிழர்களின் உயிராக இருந்த தமிழினப் பற்று அழிந்து கடை கோடியில் இருந்த சாதிப் பற்று இன்று முதன்மையாகி தமிழினத்தை அழித்து வருகிறது..

தமிழ் மொழியை கற்காதே, தமிழனாய் எண்ணாதே, பழம் பெருமையை பேசாதே., தமிழனாய் வாழாதே என்ற ஈ வே ராமசாமி நாயக்கரின் பரப்புரைக்கு அடிமையான தமிழர்கள்.. அவரின் கொள்கையான ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, தமிழ் மொழியினப் பற்றை துறந்து மனிதனாக வாழ துவங்கியதன் விளைவு இன்று தாய்த் தமிழில் உரையாடுவவதையும், தமிழின சிக்கலுக்காக உரிமை குரல் எழுப்புவதையும் அதற்காக போராடுவதையும் மறந்து சாதித் தமிழனாக தன்னலம் மிகுந்த தமிழினமாக மாறியுள்ளனர்..

உடலை கொடுத்து உயிரை பறித்த கதையாக திராவிடக்கொள்கை என்ற நஞ்சுக் கருத்துக்களை விதைத்து, தமிழினப் பற்று என்ற உயிரை பறிப்பதற்காக தன் இறுதி காலம் வரை போராடிய ஈ வே ராமசாமி நாயக்கரை பெரியார் என்று கூறுவது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இழுக்கல்லவா?

இந்தியாவில் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பற்று என அனைத்தும் கூடுதலாக ஏன் வெறியாக உள்ள மாநிலங்களில் எல்லாம் அந்த இனத்தை சார்ந்தவரே ஆள முடிகிறது.. அம் மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக போராட முடிகிறதே எப்படி?

காரணம் அங்கு சாதி,மதத்தை விட இனப் பற்று மேலோங்கி இருப்பது தான்.

உலகில் எங்குமே இல்லாத வியக்கத்தக்க செயலாக இங்கு மட்டுமே 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட திராவிட இனம் 98 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அடிமையாக இறுத்தி ஆண்டு வருகிறது .

தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக ஈ வே ராமசாமி நாயக்கரையும் அவரின் திராவிட கொள்கைகளையும் முன்னிறுத்தி. அதன் மூலமாக தமிழர்களின் ஒரே தலைவராக பெரியாரை நிலை நிறுத்தி வருகிறார்கள். தமிழ் மொழியினப் பற்றை அழித்து தமிழிய சிந்தனைகளை வளர விடாமல் தடுத்து பாதுகாத்து வருகிறார்கள்.

“தமிழ்நாடு தமிழருக்கே” என்று சோமசுந்தர பாரதி முழங்கிய முழக்கத்தை, அடுத்த ஒரு திங்களில் தனதாக்கி கொண்ட ஈ வே ராமசாமி நாயக்கர், அந்த கருத்தை அதன் தாக்கத்தை மழுங்கடித்து, வெறும் பேச்சளவில் கொண்டு மீண்டும் தனது இறுதி மூச்சு உள்ளவரை திராவிட கொள்கைகளை பரப்புரை செய்து தனது திராவிட பற்றை காட்டுகிறார்.

இங்குள்ள திராவிட தலைமைகள் யாரை முதன்மை யான தலைவராக போற்றி கொண்டாடுகிறார்களோ , நிலை நிறுத்துகிறார்களோ அவர்களே தமிழர்களின் எதிரிகள் என்ற எளிமையான புரிந்துணர்வு இருந்தாலே நாம் வென்று விட முடியும். ஈ வே ரா இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரை போற்ற வேண்டும்..

தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஈ வே ரா சிலைகளை அகற்றி அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் தமிழர்களுக்கான தலைவராக தேசியத் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்த வேண்டும்..

ஈ.வே.ரா விதைத்ததே திராவிடம். ஈ.வே.ரா வை அடித் தளமாக கொண்டே திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது..

திராவிடத்தின் உயிர் நாடியாக ஈ.வே.ரா வின் தமிழின எதிர்ப்பு கருத்துக்களையும், கொள்கைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு அதனைப் புகழ் பாடி, தமிழர்களை முட்டாள்களாக திராவிட அரசியல் தலைமைகள் உருவகப் படுத்துகின்றனர்.

எனவே ஈ வே ரா என்ற அடித்தளத்தை வீழ்த்தாமல் திராவிட அரசியலை வீழ்த்த முடியாது. தமிழன் ஆட்சிக் கட்டிலில் ஏறவும் முடியாது..

தமிழின ஒற்றுமையை பற்றி பேசினால் சாதியை ஒழித்து விட்டு பிறகு பேசலாம் என்று ஈ வே ரா வின் கொள்கையை முன்னிருத்துகிறார்கள். இல்லாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு 50 அல்லது 100 அல்லது 500 அல்லது 5௦௦௦ ஆண்டுகள் போதுமா என்றால் அதற்கு யாரிடமும் விடை இல்லை.

சாதி ஒழிப்பு என்ற முக மூடியுடன் தமிழர்களை பிரித்து திராவிடம் நம்மை ஆண்டு நம்மினத்தை அழித்து வருகிறது.

சாதிய மேலாண்மை, சாதிய ஏற்றத் தாழ்வு, சாதிய அடிமைத் தனத்தை ஒழித்தாலே நாளடைவில் சாதி தானாக மறைந்து விடும். படிப்படியாக செல்ல வேண்டிய இடத்தில் எடுத்தவுடன் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழர் ஒற்றுமையை பற்றி பேச வேண்டும். சாதியால் தான் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

அதுவே உண்மை என்றால் .சாதிய ஏற்றத தாழ்வு அதிகமாக உள்ள அண்டைய மாநிலங்கள், மற்றும் சாதி வெறி உள்ள வட இந்திய மாநிலங்கள் எல்லாம் இனப் அடிப்படையில் ஒன்று கூடி உரிமைகளுக்காக போராட முடிகிறதே எப்படி? .ஆக நமக்கு உடனடி இலக்கு இனப்பற்றே அன்றி சாதி ஒழிப்பு அல்ல..

ஈ வே ராமசாமி நாயக்கரின் (கொள்கை) தலை மீது அமர்ந்து கொண்டு தான் திராவிடம் நம்மை ஆளுமை செய்கிறது. ஈ வே ராமசாமி நாயக்கரின் கருத்துக்களை உயர்த்தி பிடித்தே தமிழர்களை திராவிடம் அடிமை படுத்தி வருகிறது..

திராவிடத்தை வீழ்த்த வேண்டுமானால் நாம் முதலில் பெரியாரை வீழ்த்த வேண்டும். தமிழினத்தின் தலைவராக தேசியத் தலைவரை முன்னிருத்த வேண்டும். அப்பொழுதே தமிழர் நாட்டை தமிழன் ஆட்சி செய்ய முடியும்.

இந்த தலைமுறைக்குள் மீட்டெடுக்க தவறினால் வரும் தலைமுறைகள்,  திராவிடர்களின் வட இந்தியர்களின் அடிமையாக வாழ நேரிடும்..

பெரியார் என்ற பொய்யரை வீழ்த்துவோம். திராவிடம் என்ற பொய்மையை விரட்டி அடிப்போம். தமிழினம் என்ற உண்மையை அரியணை ஏற்றுவோம்...