08/04/2018

உ.பி. முதலமைச்சர் இல்லம் முன் குடும்பத்தோடு ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி...


பாஜக எம்எல்ஏவும் அவரோட கூட்டாளி களும் சேர்த்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார்...

கார்பரேட்களுக்கு பயத்தை காண்பிக்க தொடங்கி விட்டோம்...


கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரிகள் திடீர் போராட்டம்...


சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு கறிவேப்பிலை வியாபாரிகள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.

200க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரம் செய்யவதற்கென 52 கடைகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், இதனால் மீதமுள்ளவர்கள் சந்தை அருகே சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்களுக்கு கூடுதல் கடைகள் ஒதுக்கித்தர வேண்டும் அல்லது சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

அரசியல் உண்மைகள்...


பாஜக மோடி தமிழகத்தை அழிக்க கொண்டு வரும் சாகர்மாலா திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்...


எல்லா திட்டத்தையும் எதிர்க்க ஆரம்பிச்சுட்டான்... ஆனா ஒரு 'ரெஸ்பான்சும்' இல்ல.. எகிரி அடிக்கனும் போல...

நியூட்ரினோ அறிவியலும் ஆபத்தும் - பாகம் 2...


கடந்த பாகத்தில் நியூட்ரினோ பற்றி அறிவியல் ரீதியாக பார்த்தோம்..
இனி தமிழ் நாட்டில் நிறுவ இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் பற்றி கொஞ்சம் அரசியல் ரீதியாக பார்ப்போம்.

இங்கே நமது கட்டுரை அறிவியல் கட்டுரையில் இருந்து சமூக கட்டுரையாக மாறுகிறது ..

மற்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வகங்கள் இல்லையா ?? இருக்கிறது இல்லாமல் இல்லை. ஆனால் அவைகள் இப்படி நாட்டுக்கு நடுவில் இல்லை.
உதாரணமாக அமெரிக்காவின் the University of Wisconsin சார்பாக
"The IceCube " எனும் பெயரிட பட்டுள்ள Neutrino Observatory எங்கே நிறுவ பட்டுள்ளது தெரியுமா ?

அண்டார்டிகாவில்... தென் முனையில்..
மனித சஞ்சாரமற்ற இடத்தில்.
அங்கே வருடத்தில் சில மாதங்களே வெயில் இருக்கும் குறிபிட்ட மாதத்தில் சென்று தான் அந்த லேப் ஐ நிறுவினார்.

(முன்பு சொன்னது போல ஆரம்ப கால பிரபஞ்சம் மற்றும் டார்க் மேட்டர் பிளாக் ஹோல் பற்றி எல்லாம் ஆராய்வது இந்த லேபின் நோக்கம்.)

ANTARES என்று ஒரு ஆய்வகம் (கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டேன் பாருங்க 6 வருடமா ஒன்னையும் பிடிகல னு ) அது எங்கே இருக்கிறது என்றால் France இல் Toulon coast இல் 2.5 கிலோ மீட்டர் கடலுக்கு உள்ளே.

அடுத்ததாக INO . அதாவது India-based Neutrino Observatory .

இது ஒரு particle physics research project  இது தான் தேனி மலையில்  அமைய இருக்கும் ஆய்வகம்.

முதலில் இது தமிழ் நாட்டில் நுழைந்த வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.

முதலில் இது 2015 யிலேயே 1500 கோடி ப்ராஜெக்ட் இல் முடிந்து இருக்க வேண்டிய திட்டம் இது.

முதல் முதலில் 1989 ஆண்டு  இதற்கான பிள்ளையார் சுழி போட பட்டு அந்த ஆண்டில் பல மீட்டிங் நடத்த பட்டது.
ஆனால் உறுதியாக முடிவு செய்ய பட்டது 2000 இல் சென்னையில் நடந்த WHEPP (workshop on high energy physics phenomenology ) எனும் workshop இல் .
Neutrino physics மற்றும் Cosmology working குழு இதை உறுதி செய்தார்கள்.

பிறகு அதே ஆண்டில் கல்கத்தாவில் ஒரு மீட்டிங் நடந்த பின் 2001 இல் மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் INO வின் collaboration கள் முடிவு செய்ய பட்டன.
குழுக்கள் இணை  துணை குழுக்கள் முடிவு செய்ய பட்டன.

ஒருவழியாக பல research institutes, universities, மற்றும் scientific community funding agency, Department of Atomic Energy, இவைகள் எல்லாம் இனைந்த Neutrino Collaboration Group (NCG) ஒரு India-based Neutrino Observatory (INO)வை வடிவமைத்தார்கள் இவர்களின் முக்கிய நோக்கம் ஒரு  underground neutrino laboratory அமைப்பது.

அதன் மூலம் நியூட்ரினோ மற்றும் இதர பிஸிக்ஸ் ஆய்வுகளை செய்ய ஒரு பாதுகாப்பான அண்டர்கிரவுண்ட் ஆய்வகம் அமைப்பது

முதல் முதலில் இதற்க்கு ஒதுக்க பட்ட இடம் நீலகிரி யில் உள்ள சிங்கரா .
நவம்பர் 20.. 2009 இல்  Environment  மினிஸ்டர் ஆக இருந்த Jairam Ramesh
என்பவர் Atomic Energy துறையின் Chairman,  anil kakodkar க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் இது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருபதால் மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கே ஆய்வகம் அமைக்க அனுமதி மறுக்க படுகிறது என்றார். ஆனால் அதற்க்கு பதிலாக அவர் தேனி மலையில் சுருளி அருவி அமைந்துள்ள பகுதியை சிபாரிசு செய்தார் . அங்கே சுற்றுசூழல் மற்றும் வன துறையில் அனுமதி வாங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று சுட்டி காட்டினார்

 18 October 2010, இல்  Ministry of Environment & Forests  ஆனது...
environment மற்றும் forest இரண்டுக்குமான அனுமதி கொடுத்தது.
இப்படியாக தேனி மாவட்டத்தில் போடி மேற்கு மலைகளில் உள்ள Reserved Forest இல் ஆய்வகம் அமைக்க இடம் குறிக்க பட்டு உறுதி செய்ய பட்டது.

பிறகு 2012 இல் INO க்கு காட்டில் இடம் ஒதுக்க பட்டது. முதல் ஒதுக்கீடாக 66 கோடி ஒதுக்க பட்டது. திட்டத்தின் முதல்
செயல்பாடாக  ராசிங்காபுரத்தையும் பொட்டிபுரத்தையும் இணைக்கும் சாலை போட பட்டது. இந்த திட்டம் 1500 கோடியில் 2015 இல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்க பட்டது.

ஆனால்... 18 செப்டம்பர் 2012 இல்
கேரளா சென்ட்ரல் கமிட்டி மெம்பர் v.s அச்சுதானந்தம் என்பவர் தேனி இடுக்கி எல்லை தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையில் சுற்றுசூழல் மற்றும் ரெடியோலாஜி பிரச்னையை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் முன்வைத்த அணைத்து பிரச்சனைகளுக்கும் விளக்கத்தை INO தனது வெப்சைட்டில் வெளியிட்டது.

அதன் பின் 5 January 2015, பிரதமர் மோடி தலைமையிலான யூனியன் கேபினட் குழு INO வுக்கு முழு அனுமதி வழங்கியது.

ஆனால் அடுத்த மாதமே The southern bench of National Green Tribunal .அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசுக்கு சுற்று சூழல் அனுமதி அளிக்க பட்டத்தை கண்டித்து ஒரு பெட்டிஷன் ஒன்றை அனுப்பி வைத்தது.

 அப்படியே அதற்க்கு அடுத்த மாதம் மார்ச் 26 .. 2015 இல் மெட்ராஸ் ஹைகோர்ட்டின் மதுரை பெஞ்ச் தனது எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்து..  நீதி மன்றம் மத்திய அரசை   Tamil Nadu Pollution Control Board (TNPCB) இடம் இருந்து அனுமதி வாங்க சொல்லி உத்தரவு இட்டது.

Environmental Impact Assessment” (EIA)
மூலம் catagiry" B " யின் அடிப்படையில் அந்த அனுமதி எளிமையாக வாங்கியது INO.

(catagiry A என்பது மத்திய அரசிடமும் B என்பது மாநில அரசிடமும் அனுமதி பெற வேண்டிய திட்டங்களை குறிக்கும் )

இப்போதைக்கு அனைத்தும் தாயார்..

இங்கே என்ன ஆய்வு செய்ய போகிறார்கள் ?

முன்பு குறிப்பிட்டதை போல நியூட்ரினோ களில் எப்படி எடை உண்டாகிறது என்ற ஆய்வு தொடங்கி நியூட்ரினோ ஆஸ்கிலேசன்..Study of charge-conjugation ...charge parity violation  possible charge-conjugation, parity, time-reversal என்று பல வகை ஆய்வுகள் மற்றும் இயற்பியலில் பல வகை சோதனைகள் செய்ய இருக்கிறார்கள்.

பொதுவாக அட்மாஸ்பியர் நியூட்ரினோ என்று நமக்கு இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோவை ஆராய 1200 மீட்டர் ஆழம் கொண்ட அண்டர்கிரவுண்ட் குகைகள் தேவை.

தேனி திட்டத்தில் 31.44 ஹெக்டர் இடம் பயன்படுத்த படும் (அதில் 26.8 ஹெக்டர் வெளியிலும் 4.6 ஹெக்டர் நிலத்தடி யிலும் அமைக்க படும் ) 

underground project இல் 3 குகை அமைப்புகளாக செயல் படும் அதில் முக்கிய குகை அமைப்பு 50 ஆயிரம் டன் காந்தமாக்கம் செய்ய பட்ட இரும்பை பயன்படுத்தி நியூட்ரினோவை பிடிக்கும் அயன் கலோரி மீட்டர் ஐ செய்வார்கள்.
(இது வரை உலகத்திலேயே உள்ள மிக பெரிய காந்தம் CERN இல் இருக்கும் Compact Muon Solenoid (CMS) detector’s magnet ஆகும் ஆனால் தேனியில் அமைக்க பட போகும் காந்த அமைப்பு இதை விட 4 மடங்கு பெரியது )

முக்கிய குகை 130 மீட்டர் நீளம் 26 மீட்டர் அகலம் மற்றும் 30 மீட்டர் உயரம் கொண்டு இருக்கும். இதை தவிர மேலும் இரண்டு துணை குகை அமைப்பு  neutrino double detector ஆக செயல் படும் மற்றும் dark matters களை ஆராயும். இந்த மொத்தம் அமைப்பிற்கு 2 கிலோ மீட்டர் குகை அமைப்பு தேவை படும்.

இப்போ மேலே சொன்ன அமைப்பை உண்டாக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி வரும் யோசியுங்கள் . மலையில் சாலை போடவும் மலையில் குடையவும் 50 ஆயிரம் டன் வெடி மருந்தை பயன்படுத்த இருக்கிறார்கள்.

இன்னோரு கணக்கு படி
8 லட்சம் டன் பாறைகளை தகர்த்து எடுக்க 1 லட்சம் டன் ஜெலட்டின் தேவை படலாம் என்கிறார்கள் . இவைகள் 2..3  ஆண்டுகள் தொடர்ந்து நடக்க இருக்கும் கட்டுமானம்.

வெடியில் மற்றும் ட்ரிலிங்கால் பெரும் அதிர்வுகள் உண்டாகும்
இதனால் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் முல்லை பெரியாறு அணையில் விரிசல் உண்டாகும் சாத்தியம் அதிகம் . இந்த அணையில் நீர்மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிபிட தக்கது.(முல்லை பெரியாறு அணை நூற்றாண்டு பழமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ).

இது மட்டும் அல்ல இந்த இடத்தை சுற்றி மொத்தம் 12 நீர் அணைகள் உள்ளன அவைகள் தேக்கி வைத்து இருக்கும் நீரின் அளவு 400 கோடி cubic meter நீர்.
இப்போதைக்கு அரசு செய்திருக்கும் வேலை என்ன தெரியுமா தினமும் 340 kl நீரை இந்த ஆய்வகம் அமைக்க அந்த முல்லை பெரியார் அணையில் இருந்தே எடுத்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உள்ளது.

மலையில் வைக்க படும் அந்த வெடிகளில் எழும் புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றை மாசு படுத்தும் நீரை மாசு படுத்தும் (சாதாரண கல் குவாரிக்கு அருகில் தேங்கி இருக்கும் நீர் நிலைகள் பார்த்தாலே புரியும் ).

அந்த சப்தம் காட்டின் விலங்குகளை பறவைகளை அச்சுறுத்தும்.
மலையும் காட்டும் ஆறும் அருவியும் மழையும் ஒன்றோடு ஒன்று கண்ணுக்கு தெரியாத சங்கிலி பிணைப்பால் பிணைந்து இருக்க கூடியவை ஒன்றை பாதித்தால் அந்த பாதிப்பு மற்றதை பாதிக்க கூடியவை.

இது இயற்கை ஆர்வலர் சமூக ஆர்வலர்களின் பார்வை.

அடுத்து அறிவியல் பார்வையில் பார்த்தால்...

நமக்கு சொல்ல பட்டது போல அட்மாஸ்பியர் நியூட்ரினோ வை ஆராய்வது மட்டும் நோக்கம் அல்ல இது வேற வித ஆய்வு என்கிறார்கள் அதாவது பெர்மி யில் இருந்து செயற்கை lab made நியூட்ரினோ கற்றைகள் பெரும் செறிவுடன் அனுப்ப பட்டு அது இங்கே ஆராய பட போகிறது இதன் மூலம் அணு ஆயுதத்தை தொலைவில் இருந்து அழிக்கும் அணு ஆயுத ஆய்வு திட்டம் இது என்று சொல்ல படுவது எந்த அளவு உண்மை என்பதை உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்
ஆனால் அடுத்து நான் சொல்ல இருப்பது முக்கியமானது.

அது ஒரு சாமானியனின் பார்வை ஒரு எளிய  குடிமகனின் கேள்வி. .
ஒரு அணையை கட்டும் போதோ அல்லது ரயில் பாதை அமைக்கும் போதோ கூட மலையை வெடிக்க தகர்க்க தான் செயகிறோம் ஆனால் அதை யாரும் எதிர்ப்பது இல்லை காரணம் திட்டம் ஏதுவாக இருந்தாலும் அதனால் என்ன நன்மை என்பது தான் ஒரு சாமண்யன் கேள்வி...

இந்த ஆய்வகத்தில் பெரிய உண்மை கண்டு பிடிக்க படலாம் (ஏற்கனவே நியூட்ரினோ ஆய்வில் 2 நோபல் பரிசு வாங்கி இருக்கிறார்கள் நிச்சயம் நியூட்ரினோ ஆய்வு நோபல்கான ஒரு நல்ல களம் தான் ) ஆனால் அந்த பெருமை நம்ம நாட்டிற்கு இல்லை. இந்த ஆய்வை மேற்கொள்ளும் நாட்டிற்கு தான் அந்த பெருமை. நமக்கு இதனால் பத்து பைசா லாபம் இல்லை.
போதிய அளவு வேலை வாய்ப்பும் கூட இந்த திட்டம் வழங்க பட போவது இல்லை. ஆனால் இதனால் ஏதாவது ஆபத்து உண்டானால் அது முழுக்க முழுக்க நமக்கு தான்.

ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் கோலா கம்பெனிகள் ஏன் அவர்கள் தொழிர்சாலைகளை நம் நாட்டில் அமைத்து இருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

அதற்க்கு முக்கியகாரணங்கள்...

1. தொழிற்சாலைக்கு தேவையான நிலம் மற்றும் நீரை மற்றும் இதர பொருட்களை இங்கேயே எடுத்து கொள்வது. மற்றும் மறை நீர் கான்செப்ட்

2. இயற்கை அழிவு சுற்றுசூழல் மாசு போன்ற வற்றைலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்றி நம் நாட்டை பலி கடா ஆக்குவது...

3. இங்கே குறைவான ஊதியத்தை கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள கூடிய வசதி..

4. மற்றும் இங்கேயே சந்தை படுத்தும் வசதி

இப்படி பட்ட காரணங்கள் இந்த INO ஆய்வகத்துக்கும் பொருந்தும்.

இப்படி பட்ட நிலையில் இவர்களுக்கு அனுமதி கிடைப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில் எளிமையானது கமிஷனுக்கு கையெழுதிடும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை எதுவும் சாத்தியமே...

இந்த தேனி ஆய்வகதால் நன்மை  விளைந்தால் அது வெளி நாட்டுக்கும் ஆனால் தீங்கு விளைந்தால் நம் நாட்டிற்கும் என்ற இந்த திட்டம் "
நமக்கு எந்த அளவு பலனளிக்கும்.??

நாம் இன்னும் கடல் எண்ணையை வாளியில் அள்ளி கொண்டிருக்க..
இன்னும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கருவி இல்லாமல் இருக்க..

இன்னுமும் கடலில் சிக்கிய மீனவனை காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க..  இன்னுமும் பேருந்து ஓட்டையில் குழந்தைகள் விழுந்தது  கொண்டிருக்க..

இப்படி நாம் வளர்க்க வேண்டிய அடிபடை அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்க்க படாமல் இருக்க யாருக்கோ பேரை புகழை தேடி தர போகும் ஆய்வுக்கு நமது காட்டை மலையை அழித்து இந்த அறிவியல் ஆய்வகத்தை கட்டுவதால் நமக்கு என்ன பயன்.

அறிவியலை நேசிக்கும் அறிவியல் காதலனாக நான் சொல்கிறேன் நியூட்ரினோ நம் நாட்டுக்கு தேவை இல்லாத திட்டமே..

நன்றி.

பின் இணைப்பு :

INO தனி அமைப்பு அல்ல அதனுடன் இணைத்து ஆய்வுக்கு கைகோர்த்து இருக்கும் முக்கிய 7 பார்ட்னர்கள்..

Tata Institute of Fundamental Research (TIFR), Mumbai,
Bhabha Atomic Research Centre (BARC), Mumbai,
Institute of Mathematical Sciences (IMSc), Chennai,
Saha Institute of Nuclear Physics (SINP), Kolkata,
Variable Energy Cyclotron Centre (VECC), Kolkata,
Harish Chandra Research Institute (HRI), Allahabad

மேலும் இதனுடன் சேர்ந்து இணைக்க இருக்கும் 13 மேலும் சில பார்ட்னர்கள்

Aligarh Muslim University, Aligarh,
Banaras Hindu University, Varanasi,
 Calcutta University (CU), Kolkata,
Delhi University (DU), Delhi,
University of Hawaii (UHW), Hawaii, Himachal Pradesh University (HPU), Shimla,
Indian Institute of Technology, Bombay (IITB), Mumbai,
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam, North Bengal
 University (NBU), Siliguri,
Panjab University (PU), Chandigarh, Physical Research Laboratory (PRL), Ahmedabad,
Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON), Tamil Nadu
மற்றும் Manipal Institute of Technology, Manipal...

கவண் - மீம் தொடர் அறிமுகம்...







நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

இரண்டுக்கு விசயத்துக்கு எல்லையில்லை - Albert Einstein...


ஒன்று அண்டவெளி; மற்றது மனிதனின் முட்டாள்தனம் - Albert Einstein...

யாராவது ஒரு நபரோடு நீங்கள் அதிகம் நேசிக்கும் போது உங்கள் உள்ளத்துக்குள்..

இவர் எங்கே? நாம் எங்கே?
இவர் எவ்வளவு அறிவுஜீவி,
நாம் எவ்வளவு பெரிய முட்டாள்?
இவரோடு ஒப்பிடும் போது
நம்மையெல்லாம் இறைவன்
ஏறெடுத்தும் பார்ப்பது
சந்தேகமே... என்பது போன்ற உணர்வுகள் அடிக்கடி தோன்றுகிறதா?.

அப்படியாயின், உடனடியாக
அந்த நபரை விட்டுக் கொஞ்சம்
விலகியிருப்பதே சிறந்தது.

ஏனெனில், அறிந்தோ, அறியாமலோ அந்த மனிதர் உங்களை இறைவனின்க ருணையிலிருந்து தூரமாக்குகிறார்.

தெரிந்தோ தெரியாமலோ அந்த மனிதர் மூலம் உங்களது இறை நம்பிக்கை குறைய தொடங்கும்...

தமிழகத்திற்கு விடிவு..ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை : அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா...


தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.

பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அது மேகதாது அணைக்கு எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார்கள்...

நம்மை பற்றி புரிந்து கொண்டான் போல.. இப்போது இலவசங்கள் தந்து அழைக்குறான்...


தமிழகத்தை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் பாஜக மோடி...


உங்களுக்கான அரிசியில் உங்கள் பெயர் எழுத பட்டுள்ளதோ? இல்லையோ?  உங்களுக்கான தோட்டாவில் உங்கள் பெயரை அரசாங்கம் எழுதிவிட்டது.
சும்மா பரப்புக்காக பேசதப்பா. என்னவிடயம் தெளிவா சொல்லு. ஆதாரம் இருக்கா? என்கிறீர்களா?

கீழ் கண்ட நிகழ்வுகளின் முடிச்சை தொடர்பு படுத்தி பாருங்கள்..

நிகழ்வு-1: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்றே அதை முன்பே உணர்ந்த  இறைவன் போல திரு. வெங்கய்யா நாயுடு  முன்பே வந்திருந்து திரு. ஓ. பன்னீர் செல்வத்துக்கு கவர்னர் வித்யா சாகர் ராவ் மூலம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்றவுடன் ஜெ.வால் நிறுத்த பட்டிருந்த பூந்தமல்லி - மதுராவாயல் -துறைமுக மேம்பாலத்தை உடனடியாக முடிக்க நிதி ஒதுக்கி உத்தரவிடுகிறார். ஜெ.இறப்பால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

(கல்யாணத்துக்கு இரண்டுநாள் முன்னாடி போவாங்க! சாவுக்கு முன்னாடி போவாங்களா?)

சாகர்மாலா தொடங்கபட்டு அதானிக்கு சொந்தமாக சென்னையில் ஒரு துறைமுகம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? இதனால் பலகோடி லாபத்தில் இயங்கிய அரசின் காமராஜர் துறைமுகம் இனிநஷ்டமடைய தொடங்கும்.

நிகழ்வு-2 : கடந்த சில மாதங்களுக்கு முன் திரு.எடப்பாடி பழனிசாமி அரசு 89 MLA வைத்துள்ள எதிர்கட்சியின் தயவோடு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையை (ECR) இந்திய பாதுகாப்பு துறைவசம் விமானங்கள் நிறுத்திக்கொள்ள ஒப்படைத்தது.

கிழக்குக்கடற்கரை சாலை என்பது வெறும் சென்னை- பாண்டிச்சேரி சாலையல்ல மீஞ்சூர் தொடங்கி பாண்டிச்சேரி நாகபட்டினம் வாயிலாக இராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய சாலை.

மேலும் அது கன்னியாகுமரி வரை துறைமுக நகர்களை இணைக்கும் சாலை.

நிகழ்வு-3 : காரணமேயின்றி தனுஷ்கோடி மனிதர்கள் வாழமுடியாத பகுதி என சட்டசபையில் அறிவித்து கள்ளத்தனமாக ராணுவ மையம் ஆக்கபட்டு வருவது. தூத்துகுடிக்கருகே குலசேகரபுரத்தில் மனிதர்கள் நுழைய தடை என்று அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதற்கும் எதிர்கட்சி வாய்மூடிக் கிடக்கிறது.

நிகழ்வு-4 : தமிழகத்தை சேர்ந்த திருமதி நிர்மலாசீத்தாராமன் இராணுவ அமைச்சர் ஆக்க படுகிறார்.

ஒரேத்தகுதி: மக்கள் போராட்ட களங்களில் அது நெடுவாசல் போராட்டம்  ஆனாலும் சரி மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யபட்டபோதும் சரி. குமரி ஒக்கி புயல் பாதிப்பு போராட்டங்களிலும் துணிச்சலாக சென்று போராட்டகாரர்களை மிரட்டலாலும் பொய் வாக்குறுதியாலும் பணிய வைக்கு சாதுர்யம் உடையவர்.

இனிமேல் தான் தமிழகத்தில் அவருக்கு வேலையே இருக்கு.

நிகழ்வு-5 : கோவை கொடீசியா தொழிற்பேட்டை இராணுவ பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் சிறப்பு மண்டலமாக அறிவிக்க பட்டு இராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் முதற்கட்ட பராமரிப்பு பணிக்காக ரூ60 கோடி ஒதுக்க பட்டது.

நிகழ்வு -6 : இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஆயுதக்கிடங்குக்காக வலுகட்டாயமாக மக்கள் வெளியேற்ற பட்டது! 6000 ஏக்கர் நிலத்தை கையக படுத்த 22 கிராமங்கள் அப்புறபடுத்த பட இருக்கிறார்கள்.

நிகழ்வு-7 : தஞ்சைமாவட்டம் மன்னார்குடி, திருவாரூர்,கதிராமங்கலம் பகுதிகளில் நீலச்சீருடை அணிந்த மத்திய துணைராணுவ  சிறப்பு காவல்படை அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக காவல் துறை இருக்கும் போது எதற்காக மத்திய சிறப்பு காவல் படை?

ஆளுனர் காவிரிவிடயமாக மோடியை  சந்திக்கிறார் என்று தமிழன் நினைத்தால் தமிழனின் அறியாமையே. நமக்கு புரோகிதம் பண்ண நாள் குறிக்கவே சென்றுள்ளார்.

வரும் ஏப்ரல் 11 ல் பாதுகாப்புகண்காட்சி (DFEXPO18) என்ற பெயரில் அடிமைஅரசால் ராணுவத்துக்கு தாரைவார்க்கபட்ட சென்னை ECR சாலை திருப்போரூரில் திருவிடந்தையில்  நடை பெருகிறது அதில் கலந்து கொள்ளவே பிரதமர் வருவதாக இருந்தது அசாதாரணமான சூழ்நிலை காரணமாக மோடி வராமல் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆரம்பத்தில் தமிழக ஆர்பாட்டத்தை கண்டு பயந்த மோடி ஆழம் பார்க்க கர்நாடகாவை சார்ந்த சூரப்பனை  துணைவேந்தராக்கி பரிசோதித்து பார்த்தார்கள். சோதனை வெற்றி.

தமிழன் வாழைமட்டை என்று முடிவு கட்டி விட்டார்கள். இப்போது மோடியே 11 தேதி வருகிறார். நான் கருப்பு கொடி மட்டும் காட்டுறேன் கோச்சுகாதீங்க மோடிஜி. என்று ஸ்டாலின் முன்னறிவிப்பு செய்துள்ளார்.

விரைவில் தமிழகத்தில் நடைபெரும் போராட்டங்களை காரணம் காட்டி தமிழக  காவல்துறை கையிலிருந்து தமிழகத்தின் பாதுகாப்பு துணை ராணுவத்துக்கு செல்லும் வாய்பிருப்பதாகவே தெரிகிறது.
மண்ணுரிமை போராளிகளே.  இயற்கை காவலர்களே.

உங்கள் சட்டைகளை கழற்றி மார்புகளை தயாராக்கி கொள்ளுங்கள். இந்திய அரசு பரிசளிக்கும் தோட்டாக்களை தாங்க.

இவர்கள் தமிழகத்தின் இயற்கை வளங்களை, கனிம கரிம வளங்களை , உலகெங்கும் தடைசெய்யபட்ட அழிவு திட்டங்களை தொடங்க மற்றும் இலங்கையில் காலூன்றும் சீனாவை கண்டு பயந்து தமிழகத்தை இராணுவமயமாக்க துணிந்து விட்டார்கள்.

இன்னொரு காஷ்மீர் இந்தியாவில் உருவாக களம் அமைத்து விட்டார்கள்.

தமிழ்நாட்டை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து அதில்வரும் பொருளாதாரத்தை வைத்து கொஞ்ச நாள் வல்லரசு என மார்தட்டி கொள்வார்கள்.

பிறகு குடிகாரன் வீட்டை விற்று குடிப்பது போல ஒவ்வொரு மாநிலமாக கொள்ளையடித்து எதிர்த்து கேட்கும் மக்களை சுட்டு தள்ளி உள்நாட்டு போரை உண்டாக்கி ஆப்பிரிக்கா அரேபிய நாடுகளுக்கு தொடர்ச்சியாக இந்தியா மாறும். அதில் சோமாலியாவாக தமிழகம் இருக்கும்.

நாம் எல்ல நல்ல திட்டங்களையும் எதிர்பதாக அண்டை மாநிலத்தார் சிரிக்கிறார்கள்.

பாவம்.. நமக்காவது நமக்கு நடக்க போகும் அநீதி தெரிந்துள்ளது அவர்களுக்கு அதுவும் தெரியாத தற்குறிகளாக உள்ளார்கள்.

உங்களை கொல்ல உங்களின் அரசாங்கம் துடிக்கிறது. நம்மை நாம் எப்படி காப்பாறிக் கொள்ள போகிறோம்?
ஆனால் அறம் வெல்லும்.

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

இதற்கான எடுத்துக்காட்டு.
தலைநகரில் புழுதிபுயல். இயற்கையை அழிக்க துடிப்பவனுக்கு இயற்கை எச்சரிக்கை செய்கிறது.

பாதுகாப்பு கருவிகள் கண்காட்சி (DEFEXPO2018) துவங்க இருக்கும் நிலையில்உலகில் உள்ள கொலைகார ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளின் ஒன்று கூடும் நாளை நெருக்கத்தில் வைத்து கொண்டு கொத்து குண்டுகள், விஷவாயு குண்டுகள், உயிரியல் சிதைக்க கூடிய குண்டுகள் தயாரிக்கும் இஸ்ரேல் போன்ற ஆயுத வியாபாரிகள் ஒன்று கூடும் இந்த நாளில் பாதுகாப்பு துறை இணையதளமே முடக்கம் செய்ய பட்டது மிகப்பெரிய வெட்ககேடு.

தன் முதலாளிகள் மத்தியில் தமிழனை கிள்ளுகீரையாக நினைத்த மோடி தலைகுனிந்து நிற்கிறார்.

அதனால் தான் அசாதாரண சூழ்நிலை என்று வர்ணித்த பிரதமரே இப்போது வேறு வழியில்லாமல் ஆயுத வியபாரிகளை தன் முதலாளிகளை  திருப்தி படுத்த இந்த கண்காட்சிக்கு வருகிறார்.

இது தொடக்கமே.

வெல்லப்போவது தமிழனின் மறமா? அல்லது கோழைகளின் துப்பாக்கிகளா?
என்ற கேள்வியை விட...
தமிழனின் அறம் எல்லாவற்றையும் விட வலிமையானது.
   
நாம் இயற்கைக்கு துணையாய் நிற்கிறோம்  இயற்கை நமக்கு துணையாய் நிற்கிறது.

அரிமாக்கள் முழங்காத காட்டில் தான் நரிகள் ஊளையிடும்.

குகைவாழ் ஒரு புலி.. உயர்குணமேவிய தமிழன் தம் சிம்மகுரல் கொடுக்க துவங்கிவிட்டான்.. நரிகள் ஓடும்..
எப்பாடு பட்டேனும் வென்றே தீருவான்...
என்பதை காலம் சொல்லும்...

உங்கள் கேளிக்கைகளுக்கு நடுவே நடக்கும் போராட்டங்களுக்கும் குரல் கொடுங்கள்....


நீங்களே படைப்பாளி...


முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.

இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.

அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.

உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.

உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.

ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.

அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள் தான்.

வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.

உங்கள் வாழ்க்கையை வழக்கம் போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்...

நியூட்ரினோ ஆய்வு எதற்காக.?


நேற்றைய முன்தினம் கணித்தாற் போல வங்ககடல் மேகங்கள் ஒரு படி முன்னேறி 07/04/18 இலங்கையில் மழை வெளுத்து வாங்குகிறது...


இன்று இது தென்தமிழகத்தில் நுழைந்து கன மழை பொழியும் என எதிர்பார்க்கபடுகிறது...

நீங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை...


நீங்கள் வேறெந்த உண்மையான கருத்தியல் சார்ந்து போய்விட கூடாது என்பதற்காக, வல்லாதிக்க சக்திகளின் ஆணைக்கிணங்க ஆட்சி மாற்றம் நடக்கிறது...

நியூட்ரினோ - பூகம்பம் வருமா.?


மான் கறி வழக்கு சிறை தண்டனை , உள்ள போன கையோட ஜாமினில் வெளிய வந்த சல்மான் கான்...


சட்டம் சாமானியனுக்கு ஒன்று சினிமாக்காரர்களுக்கு ஒன்றா ? சமூக வலைதளத்தில் கேள்வி...

திமுக கருணாநிதி யின் மரிராதையான பேச்சும் நாகரீகமும் இது தான்..


அமானுஷ்யம் - பேச்சிலர்ஸ் கல்லறைத் தோட்டம் – 1991...


ஆவி புகைப்படங்களில் கீழ்க்கண்ட புகைப்படம் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது. (பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).

அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலைபாய்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்தப்படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...

இதோ உங்கள் இந்தியா வின்.. பாஜக மோடியால் உங்களுக்காக பாரத் மாலா...


பாஜக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ கல்வியாளரோ அல்ல...


வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்படுவோருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்தப் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

1. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநராகப் பணியாற்றியபோது பெரும்பாலான நாள்களில் பணிக்கு வராதது.

2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது.

3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும் 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1,958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்துக்கு ஆளானது.

4. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளைத் தமது கண்டுபிடிப்பாக காட்டியது. 5. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன...

திமுக வின் உண்மை முகத்தை கிழித்த விஜயகாந்த்...


மின்காந்த சக்தி...


இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைகளுக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு.

ஒவ்வொரு இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்து விடும்போது இந்த சக்தி வனவெளியில், கலக்கிறது.

பிரபஞ்ச இயக்கதில் வலுவடைந்த அந்த சக்தி-cosmic currents தினம், தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது.

இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும்.

யுக யுகமாக தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்ப வேண்டும் இளைஞனே....

இப்படி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறுகிறார்.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும்.

தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை….

பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்...

ஸ்டெர்லைட் மர்மம்...


திமுக கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...


1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.. ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது.

கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றி பெற்றனர்.

இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.

கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார். மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார். சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார். எம்ஜியார் இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.

கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்.

எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.

அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்).

தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.

திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்த காலகட்டத்தில் தான்.

எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக் கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி பெற்று முதல்வரானார்.

1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட்நாயக் தலைமையில் முயற்சி நடந்தது.

முதல் நாள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.

அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.

அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.

கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார். மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.

கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.

அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்து விட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி. இது தான் அவரின் ஈழ தியாகம்..

இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.

இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர். கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..

தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழ தமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன் பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...

இதோ உங்கள் இந்தியா வின்.. பாஜக மோடியால் உங்களுக்காக பாரத் மாலா...


திமுக வும் டூபாக்கூர் வேலையும்...


அறிக்கை விடுவதும் அடுத்தநாள் மறுப்பு அறிக்கை விடுவதும் கருணாநிதி தெரிந்த கைதேரந்த கலை...

கையெழுத்து போடுவதும் தெரியாமல் போட்டு விட்டேன் என்று அந்தர்பல்டி அடிப்பதும் மொக்கை ஸ்டாலினின் வாடிக்கையாகி விட்டது...

நியூட்ரீனோ திட்டமும் உண்மைகளும்...


கைக்குத்தல் அரிசியின் பயன்கள்...


அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.

இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் போது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர்.

நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி.

நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்...

எளிதில் சீரணமடையும், மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும், பித்த அதிகரிப்பை குறைக்கும், நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது.

உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது...

இணையத்தில் உள்ள உங்களின் ஒவ்வொரு நொடியும் உங்களை பற்றிய தகவல் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது...


தமிழர்கள் வகுத்த காலக்கணக்கு...


தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.

அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்...

அவர்கள் நமக்கானவர்கள் இல்லை, என்றுமே கார்பரேட்டின் பிராண்ட்கள் தான்...


இராணுவ மயமாகும் தமிழகம்...


மாமல்லபுரத்திற்கு இராணுவம் வருவது இதற்கு தான்...

கண்காட்சி என்ற பெயரில் மெல்ல ராணுவத்தை தமிழகத்தில் நுழைக்கும் மத்திய அரசு.

சாகர் மாலா மீத்தேன் நியூட்ரீனோ கெயிலுக்காக ராணுவத்தை கொண்டு வருவது தான்.

உண்மை சில நாட்களுக்கு முன் புது கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் எல்லையில் வீரமரணம் அடைந்து அவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தது 500 ராணுவ வீரர்கள் ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது சரி.

ஆனால் வந்த 500 ராணுவ வீரர்கள் அந்த ஊருக்கு வெளியிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருப்பது ஏன்.?

அப்படியென்றால் வீரமரணம் அடைந்தாரா? அல்லது ராணுவம் வந்து இங்கு நுழைவதற்க்காக கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் வருகிறது.

ஏன் இருக்காது அப்துல் கலாம், ஜெயலலிதா போன்ற பெரும் தலைகளையே அப்புறப்படுத்தியவர்களுக்கு இது சாதாரணம்.

மக்கள் விழிப்படைய வேண்டிய வேளை இது...

தமிழகத்தின் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்...


ஏன் குண்டலினியை எழுப்ப வேண்டும்?


நாம் பல பிறவிகளை கடந்து இந்த ஜென்மத்தை அடைந்துள்ளோம்.
இதுவரை நாம் எல்லா பிறவிகளிலும் சேகரித்த கர்ம பதிவுகள் நம் ஆன்மாவில் பதிந்துள்ளது.

அதில் இருந்து நம் ஆன்மாவை பிரித்தால் ஒழிய பிறவி என்பது தொடர்கதை தான்.

அந்த கர்மாவின் அதிர்வுகள் ஆக்ஞாவில் அதிர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்க அந்த அதிர்வுகளை ஒருநிலைக்கு கொண்டுவர அபரிமிதமான சக்தி தேவைப்படுகிறது.
அந்த சக்தி தான் குண்டலினி.

அதை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லோர்க்கு ஊழ்வினை செயல்படுவதும் இல்லை, உறுத்துவந்து ஊட்டுவதும் இல்லை.

மூளை என்கிற மீடியம் மனம் என்கிற பிரபஞ்ச பதிவுகளை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளதால் அது நமக்கு மட்டும் சொந்தமானது இல்லை.

எனவே தான் குண்டலினியை எழுப்ப வேண்டும்.

ஏன் முக்திக்காக அலைய வேண்டும்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றால் அலைவதில் தவறில்லை.

போன சென்மமும் தெரியாது, அடுத்த சென்மமும் தெரியாது, கடந்த சென்மத்தில் எவனோ எங்கோ செய்த கர்மாவை நான் அனுபவிக்கும் போது, அடுத்த சென்மத்தில் எவனோ எங்கோ பிறப்பதற்கு நான் ஏன் சுகபோகங்களை தவிர்க்க வேண்டும்?

இந்த ஐம்புலன்களின் மாயையில் இருக்கும் வரைதான் எதுவும் தெரிவதில்லை.

உண்மையில் வாழ்க்கை என்பது மிகக்குறுகிய காலமே.

ஆன்ம நிலையில் தான் நாம் நெடுங்காலம் அலைகிறோம்.

சில ஆன்மாக்கள் யுகங்கள் கூட இருக்க கூடியது.

எனவே ஓடம்(உடல்) உள்ளபோதே உறுதிபண்ணி கொள்ளக்கூடியது அவசியமாகிறது.

எவனோ எங்கோ என்பதைவிட ஆன்மாவாகிய நாம் என்பதே நிதர்சனம்.

பரப்பிரம்மத்தில் ஐயிக்கமாகி சும்மா இருப்பதைவிட, நான் ஏன் பிறவிகள் எடுத்து  வாழக்கூடாது?

நாம் இங்கு மிகப்பெரிய இன்பமாக கருதுவதைவிட பரப்பிரமத்தில் ஐயிக்கியமாவது பலகோடி மடங்கு பேரானந்தம் எனும்போது முக்திதானே சிறந்தது.

நாளை கிடைக்கப் போகும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் கலாக்காய் சிறந்தது இல்லையா?

இன்று கையில் இருக்கும் கலாக்காய் விஷமாகக்கூட மாறலாம். ஆனால் பலாக்காயை புசித்தவனுக்குத் தானே தெரியும் அதன் அருமை...

பாஜக மோடி பற்றிய உண்மைகள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 7...

சத்திய யுகத்தின் 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய பகுதிகள் இன்று வெளிப்படுத்தப்படுகின்றன.


இந்த 7-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் இந்திய வான் பகுதியில் தோன்றும் சில வினோதமான உருவங்களினால் மக்கள் ஆச்சர்யங்களையும், பயத்தினையும் சுமந்த மனநிலையில் இருக்கும்படியான ஒரு அதிசய சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இது இந்திய மண்ணில் இயேசுவின் வருகைக்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


காலத்தால் அழியாத காவியம் ஒன்று தமிழகத்தில் உருவாகும் சூழல் தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது ஆன்மீகம் சார்ந்த இறை நிகழ்வாக அமைய இருப்பதாகவும், இதனைப் பற்றிய பல குறிப்புகள் சமூக ஊடகங்களில் இனி மக்கள் காண உள்ளார்கள் என்றும், இது “சத்திய யுகத்திற்கான“ முதல் சுவடு இந்த பூமியில் பதிய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட கூறுகிறது.

நடிகர் ஒருவரின் மரணம் தற்போது நடக்க இருப்பதாகவும், தென்னிந்திய நடிகராக அவர் இருப்பார் என்றும், இச்சம்பவம் நடந்த தினத்திலிருந்து தமிழக அரசியலில் பல குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும் என்பது 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய குறிப்பாகும்.


வரும் மாதம் ஒன்றில் ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய பயங்கரவாத செயல் ஒன்று அரங்கேறிட இருப்பதாகவும், இதனால் மக்கள் நடமாட அஞ்சுவார்கள் என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே எச்சரிக்கை செய்தியாக வெளியிடுகிறது.


பனிப்புயல் ஒன்றினால் அமெரிக்க நாட்டின் ஒரு மாகாணம் பலத்த சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், இதுவே அந்நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறியாக இருக்குமென 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது. இது இறைவனின் நீயாயத் தீர்ப்பின் முடிவாக அமைய உள்ளதாக தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


படைப்பாளிகளின் படைப்புகளைப் போன்றே நமது இந்திய தேசத்தின் கலை, கலாச்சாரங்கள் நமது பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இறைவனின் அற்புதங்களை தாங்கிய ஒரு புதுமையான படைப்பை கலைஞன் ஒருவன் கி.மு.600-ம் ஆண்டுகளில் உருவாக்கினான். அது தற்போது எகிப்திய பூமியில் புதையுண்டு கிடக்கிறது என்றும், அதனை தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்து பூமியிலிருந்து எடுப்பார் என்றும், அது வெளிவரும் நேரத்தில் இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் பூமி அதிர்வால் பெரும் சேதம் ஏற்படும் என்றும், இதன் அறிகுறி என்னவெனில் இந்த பூமியில் இறைவன் கால்ஊன்றும் நேரம் வந்துவிட்டதற்கான அறிகுறியாக உலக மக்கள் கருத வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறைகுறிப்பை இங்கே வெளிப்படுத்துகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் போன்ற இடங்களில் பூமி அதிர்வானது மிகுந்த சேதங்களை ஏற்படுத்த இருப்பதாகவும், அங்கு வாழும் மக்கள் இடம் விட்டு இடம் பெயரும் அளவிற்கு அது அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆன்மீக அதிசயம் ஒன்று விரைவில் நடக்க இருப்பதாகவும், இதனால் மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்றும், ஊர்கள்தோறும் திருவிழாக்களை மக்கள் எடுக்கும் அளவிற்கு இச்சம்பவம் நடைபெற உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகிறது.



அஸ்ஸாம் காடுகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி ஒரு செய்திப்படம் ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், அங்கே தமிழக மக்கள் வாழ்ந்த்தற்கான பல சான்றுகள் அதன் வழியே தெரியவர உள்ளதாகவும், சிவனின் சிறு ஆலயம் ஒன்று மலைக்குகையில் கண்டறியப்படும் என்றும், அதனை உலக மக்கள் இனம் கண்டு ஆச்சர்யப்படும் அதிசய நிகழ்வு ஒன்று தற்போது நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


வான் மண்டலத்தில் இனி பல வியத்தகு வினோதங்கள் நிகழ உள்ளதாகவும், இது உலக விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருக்கும் என்றும், இதனை இனி வரக்கூடிய உலக மாற்றத்திற்கான அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இனி தமிழகத்தில் பல புதுமைகளும், வேடிக்கைகளும் நிகழ இருப்பதாகவும், உலக ஊடகங்களில்கூட இத்தகைய செய்திகள் விறுவிறுப்பாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் தமிழகத்தின் மாணவர்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகிட இருப்பதாகவும், இத்தகைய எழுச்சியே உலக அரங்கில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் ஒரு புதுமை நிகழ்வாக அமைய இருப்பதாகவும், அது வரக்கூடிய மாதத்திலிருந்து துவங்கிடும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய வருங்கால நிகழ்வைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறது.


தமிழகத்திற்கு காவேரியின் தண்ணீர் நிச்சயம் வரும் என்றும், இதற்கு இறைவனின் நீயாயத்தீர்ப்பு அந்த மாநிலத்தின் மீது இறங்கிட இருப்பதாக 7-ம் தீர்க்கதரினம் நடைமுறை செயலைப் பற்றி ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சித்தர் சபை, சித்தர்குடில், ஆன்மீக சேவை மையம், குடில், ஆலயம் என புனைப் பெயர்களில் வலம் வரக்கூடிய ஆன்மீக அமைப்புகளுக்கு இது போதாத காலம் என்றும், இனி அந்த மாதிரியான அமைப்புகள் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் இந்தியா முழுவதும் இறங்கிட உள்ளதாகவும், முக்கியமாக தென் தமிழகத்தில் இது விரைந்து நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சித்தர்களின் வாரிசு, சித்தர்களின் பரம்பரை என தமிழகத்தில் எவருமே இல்லையென்றும், அவ்வாறு கூறுபவர்கள் வெறும் ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டு பொய் பேசி மக்களை ஏமாற்றி வருபவர்கள் என்றும், இனி அவர்கள் யாவரும் சித்தர்கள் பெயரைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என்றும், அவர்களின் முகத்திரை இனி கிழிக்கப்பட்டு மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்படும் பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


தீர்க்கதரிசனங்கள் மெய்படும் பல உண்மைச் சம்பவங்களை உலக மக்கள் அறியும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் திருப்பதியில் ஒரு மகா சம்பவம் நடந்து முடிய இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற சிவாலயம் ஒன்று இயற்கை சீற்றத்தால் முற்றிலும் அழிய இருப்பதாகவும், இது தமிழகத்திற்கு போதாத காலமாக அமைய இருப்பதற்கான அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என்றும், இதனால் தமிழகத்தில் பெரும் மழை, புயல், காற்று, நெருப்பு இவைகளால் பல அழிவுச் சம்பவங்கள் நிகழ இருப்பதாக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


இறைவன் வெளிப்படும் அந்த இறுதி சபையை பற்றி அமெரிக்காவில் உள்ள இந்தியர் ஒருவர் ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், அவரை தொடர்ந்து, ஜப்பான் நாட்டில் உள்ள ஜென் துறவி ஒருவரும் ஒரு செய்திக் குறிப்பை வெளியிடுவார் என்றும், இவரை தொடர்ந்து சீனாவில் உள்ள புத்த துறவி ஒருவரும் வெளியிடுவார் என்றும், இவரை தொடர்ந்து நெதர்லாந்தில் இருந்து கிருஸ்துவ பாதிரியார் ஒருவரும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு உலக மக்களை ஆச்சர்யப்பட வைப்பார்கள் என்றும், அந்த இறுதி சபை இந்தியாவில், தமிழகத்தில் என்பதே அந்த செய்திக் குறிப்பில் இடம்பெற்று இருக்கும் என 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


பல மக்கள் பல மதத்தினரும் எதிர்பார்க்கும் அந்த இறை அவதாரம் தோன்றும் இறைவனின் இறுதி சபை தமிழகத்தில் என செய்திகள் வரும் சமயத்தில், இந்த உலகத்தின் ஒரு மூலையில் பனிப்பிரதேசம் உருக துவங்கிடும் என்றும், அப்பொழுது சந்திரனில் வேற்றுகிரவாசிகள் உள்ளனர் என்பதை உலக விஞ்ஞானிகள் ஒட்டுமொத்தமாக ஒரு செய்தியினை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்துவார்கள் என்றும், இச்செய்தியினை தொடர்ந்து உலக மக்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பும் என்றும் 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய செய்தியினை இங்கே வெளியிட்டு தனது பதிவை பதிவு செய்கிறது.


தீர்க்கதரிசிகள் வாழ்ந்த இவ்வுலகில் ஒரு தீர்க்கதரிசியின் பல கூற்றுகள் உண்மையாகும் சம்பவங்கள் இனி நடக்க இருப்பதாகவும், இது சத்திய யுகத்தின் வருங்காலத்திற்கான நிகழ்கால நிகழ்வுகளாக இருக்குமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட கூறுகிறது.

உண்மைகளை காண நாம் காத்திருப்போம். பல புதுமைகளை படைக்கும் இறை அரசு அமையும் அந்த சத்திய யுகத்தின் வருகைக்காக மக்களாகிய நாம் ஒன்றிணைந்து அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...