08/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 7...

சத்திய யுகத்தின் 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய பகுதிகள் இன்று வெளிப்படுத்தப்படுகின்றன.


இந்த 7-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் இந்திய வான் பகுதியில் தோன்றும் சில வினோதமான உருவங்களினால் மக்கள் ஆச்சர்யங்களையும், பயத்தினையும் சுமந்த மனநிலையில் இருக்கும்படியான ஒரு அதிசய சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இது இந்திய மண்ணில் இயேசுவின் வருகைக்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


காலத்தால் அழியாத காவியம் ஒன்று தமிழகத்தில் உருவாகும் சூழல் தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது ஆன்மீகம் சார்ந்த இறை நிகழ்வாக அமைய இருப்பதாகவும், இதனைப் பற்றிய பல குறிப்புகள் சமூக ஊடகங்களில் இனி மக்கள் காண உள்ளார்கள் என்றும், இது “சத்திய யுகத்திற்கான“ முதல் சுவடு இந்த பூமியில் பதிய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட கூறுகிறது.

நடிகர் ஒருவரின் மரணம் தற்போது நடக்க இருப்பதாகவும், தென்னிந்திய நடிகராக அவர் இருப்பார் என்றும், இச்சம்பவம் நடந்த தினத்திலிருந்து தமிழக அரசியலில் பல குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும் என்பது 7-ம் தீர்க்கதரிசனத்தின் முக்கிய குறிப்பாகும்.


வரும் மாதம் ஒன்றில் ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய பயங்கரவாத செயல் ஒன்று அரங்கேறிட இருப்பதாகவும், இதனால் மக்கள் நடமாட அஞ்சுவார்கள் என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே எச்சரிக்கை செய்தியாக வெளியிடுகிறது.


பனிப்புயல் ஒன்றினால் அமெரிக்க நாட்டின் ஒரு மாகாணம் பலத்த சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், இதுவே அந்நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறியாக இருக்குமென 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது. இது இறைவனின் நீயாயத் தீர்ப்பின் முடிவாக அமைய உள்ளதாக தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


படைப்பாளிகளின் படைப்புகளைப் போன்றே நமது இந்திய தேசத்தின் கலை, கலாச்சாரங்கள் நமது பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இறைவனின் அற்புதங்களை தாங்கிய ஒரு புதுமையான படைப்பை கலைஞன் ஒருவன் கி.மு.600-ம் ஆண்டுகளில் உருவாக்கினான். அது தற்போது எகிப்திய பூமியில் புதையுண்டு கிடக்கிறது என்றும், அதனை தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்து பூமியிலிருந்து எடுப்பார் என்றும், அது வெளிவரும் நேரத்தில் இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் பூமி அதிர்வால் பெரும் சேதம் ஏற்படும் என்றும், இதன் அறிகுறி என்னவெனில் இந்த பூமியில் இறைவன் கால்ஊன்றும் நேரம் வந்துவிட்டதற்கான அறிகுறியாக உலக மக்கள் கருத வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறைகுறிப்பை இங்கே வெளிப்படுத்துகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் போன்ற இடங்களில் பூமி அதிர்வானது மிகுந்த சேதங்களை ஏற்படுத்த இருப்பதாகவும், அங்கு வாழும் மக்கள் இடம் விட்டு இடம் பெயரும் அளவிற்கு அது அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆன்மீக அதிசயம் ஒன்று விரைவில் நடக்க இருப்பதாகவும், இதனால் மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்றும், ஊர்கள்தோறும் திருவிழாக்களை மக்கள் எடுக்கும் அளவிற்கு இச்சம்பவம் நடைபெற உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகிறது.



அஸ்ஸாம் காடுகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி ஒரு செய்திப்படம் ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், அங்கே தமிழக மக்கள் வாழ்ந்த்தற்கான பல சான்றுகள் அதன் வழியே தெரியவர உள்ளதாகவும், சிவனின் சிறு ஆலயம் ஒன்று மலைக்குகையில் கண்டறியப்படும் என்றும், அதனை உலக மக்கள் இனம் கண்டு ஆச்சர்யப்படும் அதிசய நிகழ்வு ஒன்று தற்போது நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


வான் மண்டலத்தில் இனி பல வியத்தகு வினோதங்கள் நிகழ உள்ளதாகவும், இது உலக விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருக்கும் என்றும், இதனை இனி வரக்கூடிய உலக மாற்றத்திற்கான அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இனி தமிழகத்தில் பல புதுமைகளும், வேடிக்கைகளும் நிகழ இருப்பதாகவும், உலக ஊடகங்களில்கூட இத்தகைய செய்திகள் விறுவிறுப்பாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் தமிழகத்தின் மாணவர்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகிட இருப்பதாகவும், இத்தகைய எழுச்சியே உலக அரங்கில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் ஒரு புதுமை நிகழ்வாக அமைய இருப்பதாகவும், அது வரக்கூடிய மாதத்திலிருந்து துவங்கிடும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய வருங்கால நிகழ்வைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறது.


தமிழகத்திற்கு காவேரியின் தண்ணீர் நிச்சயம் வரும் என்றும், இதற்கு இறைவனின் நீயாயத்தீர்ப்பு அந்த மாநிலத்தின் மீது இறங்கிட இருப்பதாக 7-ம் தீர்க்கதரினம் நடைமுறை செயலைப் பற்றி ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சித்தர் சபை, சித்தர்குடில், ஆன்மீக சேவை மையம், குடில், ஆலயம் என புனைப் பெயர்களில் வலம் வரக்கூடிய ஆன்மீக அமைப்புகளுக்கு இது போதாத காலம் என்றும், இனி அந்த மாதிரியான அமைப்புகள் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் இந்தியா முழுவதும் இறங்கிட உள்ளதாகவும், முக்கியமாக தென் தமிழகத்தில் இது விரைந்து நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சித்தர்களின் வாரிசு, சித்தர்களின் பரம்பரை என தமிழகத்தில் எவருமே இல்லையென்றும், அவ்வாறு கூறுபவர்கள் வெறும் ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டு பொய் பேசி மக்களை ஏமாற்றி வருபவர்கள் என்றும், இனி அவர்கள் யாவரும் சித்தர்கள் பெயரைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என்றும், அவர்களின் முகத்திரை இனி கிழிக்கப்பட்டு மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்படும் பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


தீர்க்கதரிசனங்கள் மெய்படும் பல உண்மைச் சம்பவங்களை உலக மக்கள் அறியும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் திருப்பதியில் ஒரு மகா சம்பவம் நடந்து முடிய இருப்பதாக 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற சிவாலயம் ஒன்று இயற்கை சீற்றத்தால் முற்றிலும் அழிய இருப்பதாகவும், இது தமிழகத்திற்கு போதாத காலமாக அமைய இருப்பதற்கான அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என்றும், இதனால் தமிழகத்தில் பெரும் மழை, புயல், காற்று, நெருப்பு இவைகளால் பல அழிவுச் சம்பவங்கள் நிகழ இருப்பதாக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


இறைவன் வெளிப்படும் அந்த இறுதி சபையை பற்றி அமெரிக்காவில் உள்ள இந்தியர் ஒருவர் ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், அவரை தொடர்ந்து, ஜப்பான் நாட்டில் உள்ள ஜென் துறவி ஒருவரும் ஒரு செய்திக் குறிப்பை வெளியிடுவார் என்றும், இவரை தொடர்ந்து சீனாவில் உள்ள புத்த துறவி ஒருவரும் வெளியிடுவார் என்றும், இவரை தொடர்ந்து நெதர்லாந்தில் இருந்து கிருஸ்துவ பாதிரியார் ஒருவரும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு உலக மக்களை ஆச்சர்யப்பட வைப்பார்கள் என்றும், அந்த இறுதி சபை இந்தியாவில், தமிழகத்தில் என்பதே அந்த செய்திக் குறிப்பில் இடம்பெற்று இருக்கும் என 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


பல மக்கள் பல மதத்தினரும் எதிர்பார்க்கும் அந்த இறை அவதாரம் தோன்றும் இறைவனின் இறுதி சபை தமிழகத்தில் என செய்திகள் வரும் சமயத்தில், இந்த உலகத்தின் ஒரு மூலையில் பனிப்பிரதேசம் உருக துவங்கிடும் என்றும், அப்பொழுது சந்திரனில் வேற்றுகிரவாசிகள் உள்ளனர் என்பதை உலக விஞ்ஞானிகள் ஒட்டுமொத்தமாக ஒரு செய்தியினை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்துவார்கள் என்றும், இச்செய்தியினை தொடர்ந்து உலக மக்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பும் என்றும் 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய செய்தியினை இங்கே வெளியிட்டு தனது பதிவை பதிவு செய்கிறது.


தீர்க்கதரிசிகள் வாழ்ந்த இவ்வுலகில் ஒரு தீர்க்கதரிசியின் பல கூற்றுகள் உண்மையாகும் சம்பவங்கள் இனி நடக்க இருப்பதாகவும், இது சத்திய யுகத்தின் வருங்காலத்திற்கான நிகழ்கால நிகழ்வுகளாக இருக்குமென 7-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட கூறுகிறது.

உண்மைகளை காண நாம் காத்திருப்போம். பல புதுமைகளை படைக்கும் இறை அரசு அமையும் அந்த சத்திய யுகத்தின் வருகைக்காக மக்களாகிய நாம் ஒன்றிணைந்து அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.