21/01/2019

கவனத்தைக் கவர விரும்பாதே...


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது. அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

நீ யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...

நோகாம நொங்கு திங்குறதுல திருட்டு பிராமணனை அடிச்சுக் கொள்ள முடியாது...


1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை...


1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.

இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.

இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.

தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்.

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.

கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

"வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்"

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
(தேடுக: தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி)

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.

அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.

புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.

கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்...

அதிமுக வும் சட்ட மீறல்களும்...


கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்...


பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,தமிழக வனத்துறை வசமுள்ள,பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.

அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.

நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.

பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.

தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.

ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.

இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக் கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.

இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.

வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.

ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?

இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?

இலுமினாட்டி களும்.. ஆதார் திட்டமும்...


இறந்த பிறகு என்ன நடக்கும்.?


வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.

அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.

அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?

நான் பிறக்கும் போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன், என்று எண்ணுங்கள்.

இறந்த பிறகு என்ன நடக்கும்.?

இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்...

தமிழ்நாட்டு விபச்சார ஊடகங்கள் தமிழ் மக்களை எப்படி முட்டாள் ஆக்குகிறது என்பதற்கு இந்த பாஜக ராம சுப்பு.. ஒரு சிறிய எடுத்துக்காட்டு...


சங்கீதம் என்பது சரீரம், சாரீரம், சுருதி, லயம் இவைகளைக் கொண்டது...


சரீரம் : சரீரம் என்றால் உடம்பு. உடம்பு நன்றாய் இருந்தால் தான் சாரீரம் நன்றாக இருக்கும்

சாரீரம் : சாரீரம் என்றால் குரல். குரல் நன்றாக இருந்தால்தான், சுருதி நன்றாக சேரும். குரலை ஸாதக பலத்தால் நன்றாக வளமடையச் செய்ய முடியும்

சுருதி : சுருதி என்பது, மந்திரஸ்தாயி ஷட்ஜம் (ஸ) மத்யஸ்தாயி பஞ்சமம் (ப) தாரஸ்தாயி ஷட்ஜம் (ஸ்) இந்த மூன்று ஸ்வரங்களும் சேர்க்கம் இனிமையாய் ஒலிப்பதாகும். முக்கியமாகக் காது நன்றாய் கேட்க வேண்டும். பாடும் போதோ, வாத்யங்களில் வாசிக்கும் போதோ, சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுருதியை தாயாருக்குச் சமமாகச் சொல்லப்படுகிறது.

லயம் : லயம் என்றால் தாளம். எண்ணிக்கையின் சமமான இடைவெளியை குறிக்கும். தாளத்தை தகப்பனாருக்கு சமமாக குறிப்பிடுவார்கள்.

கர்னாடக சங்கீதம் : கர்னாடக சங்கீதம் என்பது, ஸ்வராளி வரிசைகள், கீதங்கள், வர்ணங்கள், ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் முதலிய அம்சங்களைக் கொண்டதாகும்...

திமுக விடம் கூட்டணி இல்லை - கன்னட கமல்...


வரலாற்று தலைவர்களின் நினைவை போற்றும் கிராமம் -- பெரியபோது...


ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபோது கிராமத்தில் தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயரை சூட்டி பெருமை சேர்த்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் பெரியபோது ஊராட்சி, அங்கு செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அங்குள்ள தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக உள்ளது. பெரியபோது ஊராட்சியில், பெரியபோது, காந்தி ஆசிரமம், சித்தாண்டிகவுண்டன்புதூர் என்ற மூன்று கிராமங்களையும், ஒரு ஆண்டிற்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் நகர் என்ற பகுதியையும்
கொண்டது.

இந்த ஊராட்சியில் மக்கள் ஐந்தாயிரம் பேரும், மூவாயிரத்து 500 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் 15 தெருக்கள் உள்ளன. காமராஜர் வீதி, இந்திராகாந்தி வீதி, பாரதியார் வீதி, கஸ்தூரிபாய் வீதி, குமரன் வீதி, விவேகானந்தர் வீதி, நேரு வீதி, ராஜாஜி வீதி, திருவள்ளுவர் வீதி, திருஞானசம்பந்தர் வீதி, வினோபா வீதி போன்ற வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பி.கே.பி. வீதி, நல்லண்ணகவுண்டர் வீதி, கிருஷ்ணசாமி வீதி போன்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கடைசி மூன்று பெயருள்ள தெருக்கள் பெரியபோது கிராமத்திற்கு இடம் கொடுத்தவர்களின் பெயர்கள். இதுவரை இந்த ஊராட்சிக்கு தற்போது உள்ள ஊராட்சி தலைவரையும் சேர்த்து நான்கு பேர் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இதில் பழனிச்சாமி என்பவர் மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சுப்பையர், ராதா கலையரசி ஆகியோரும் இருந்துள்ளனர். தற்போது ராதாகண்ணன் என்பவர் ஊராட்சியின் தலைவராக உள்ளார். மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று கிராமங்கள் முழு சுகாதார கிராமம் என்ற சான்றிதழையும் டில்லியில் நடந்த விழாவில் பெற்றுள்ளது. அதில் பெரியபோது கிராமமும் உள்ளது. ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த ஊர் பொது மக்கள் நன்கொடை வழங்கி அதன் மூலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1956ம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியபோது ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3333 ஆகும். இவர்களில் பெண்கள் 1642 பேரும் ஆண்கள் 1691 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

சித்தாண்டிகவுண்டண்புதூர்
காந்திஆஸ்ரமம்
பெரியபோது

பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் பாடப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழின் சிறப்பை விளக்கும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் கற்பிக்கப்படுகிறது. தினமும் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது, மாநாட்டு பாடலையும் பாடி மாணவர்கள் அசத்துகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு கூறியதாவது:

செம்மொழி மாநாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிப்பது மட்டுமின்றி, பாடலையும் பாட வைத்தால், நாளடைவில் அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியவரும். தமிழ் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டு பாடல் துண்டு பேப்பர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது; பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தினமும் காலையில் கூட்டுப் பிரார்த்தனையின் போது, மாணவர்கள் அந்த பாடலை பாடி வருகின்றனர். தமிழ்தாய் வாழ்த்துக்கு அடுத்தப்படியாக செம்மொழி மாநாடு விளக்கப்பாடல் பாடப்படுகிறது. பின்னர், உறுதிமொழி, தேசியகீதத்துடன் பிரார்த்தனை கூட்டம் முடிவடைகிறது. இவ்வாறு, தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பெரியபோது ஊராட்சியில் நுழைந்ததும் ரோட்டோர குப்பைகள் நம்மை வரவேற்றது. முகம் சுளித்துக் கொண்டு ஊராட்சிக்குள் சென்றதும் அழகுச் செடிகள் சூழ வரவேற்கிறது ஊராட்சி அலுவலகம். அதேபோன்று, அழகுச் செடிகள் சூழ்ந்த நுாலகமும், ஆபத்தை வரவேற்கும் பாதுகாப்பு வேலி இல்லா பொதுக்கிணறும் கண்ணில் பட்டது. ஊருக்குள் சுற்றிய போது, திறந்த வெளி கழிப்பிடமில்லாத ரோடுகள், எல்.இ.டி., தெருவிளக்குகள், உயர்நிலைப் பள்ளி போன்ற வசதிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. மக்களிடம் பேசிய போது, 'எங்கள் ஊரில் அனைத்து வசதிகளும் உள்ளது, குப்பையைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபோது ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விவசாயகூலி மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வாழ்கின்றனர் மக்கள்.ஊராட்சியில் நுாலகம், உயர்நிலைப் பள்ளி, வறுமை ஒழிப்புத் திட்ட கட்டமைப்பு, சேவை மையம், தரமான ரோடுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆனால், சில காட்சிப்பொருள் கட்டமைப்புகளாலும், குப்பை மற்றும் குடிநீர் பிரச்னையாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஊராட்சியில் மொத்தம், 33 ரோடுகள் உள்ளன. தேசத் தலைவர்களான காமராஜர், நேரு உள்ளிட்டோரின் பெயர்கள் ரோடுகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. மெயின் ரோடுகள் தார் ரோடாகவும், மற்ற இடங்கள் கான்கிரீட் ரோடுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ரோடுகள் அனைத்தும் குண்டும், குழியுமின்றி பளிச்சிடுகின்றன.

குடிநீர் சப்ளைபெரியபோது ஊராட்சிக்கு வேட்டைக்காரன்புதுார் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நான்கு மேல்நிலைத் தொட்டி, மூன்று தரைமட்ட தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட, எட்டு ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேரு வீதியிலுள்ள கைப்பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு, ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்று தண்ணீர் எடுக்கின்றனர். நுாலகம்ஊராட்சி அலுவலகம் அருகில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக நுாலகம் கட்டப்பட்டது. பல ஊராட்சிகளில் நுாலகம் யாருக்கும் பயன்படாமல் பூட்டிக்கிடக்கும் நிலையில் பெரியபோது நுாலகத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக பராமரிக்கின்றனர்...

அழகான உதடுக்கு...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் லோவாசு(ஸ்)டேடின்  (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

தமிழ் மொழியின் காலக் கணக்கு...


மனம் விசித்திரமானது...


மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல.

அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும் போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது.

இது அத்தனை பேரிடமும் உண்டு.

ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.

அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது.

ரத்த உறவுகளையே கூறுபோடும். பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடும் கொடிய மிருகம் அது...

கார்ப்பரேட் வியாபார உண்மைகள்...


மதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று வசமாக சிக்கினார்...


மதுரை, மதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., யுவராஜ் 22, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் வாழ்த்து பெறச்சென்றதால் சிக்கிக் கொண்டது தெரிந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் யுவராஜ் சிவில் சர்வீஸ் ஆரம்ப நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்தகட்ட தேர்வில் தோல்வியுற்றார். ஆனால் ஆடு மேய்க்கும் தனது பெற்றோரிடம் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சில 'டிவி'க்கள், 'ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ்., ஆனார்' என யுவராஜை பிரபலப்படுத்தின. இதை சாதகமாக்கி கொண்ட அவர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவரை சில கல்லுாரிகள் பேச அழைத்தன.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து மாணவர்களிடையே யுவராஜ் பேசினார். இதற்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை அவரது வங்கி கணக்கில் கல்லுாரிகள் செலுத்தின.

திருவண்ணாமலை ஓட்டல் உரிமையாளர் பாலகிருஷ்ணனுடன், யுவராஜுக்கு அறிமுகம் கிடைத்தது. தைப்பொங்கலை முன்னிட்டு சொந்த ஊரான மதுரை திருமங்கலம் கட்ராம்பட்டிக்கு யுவராஜை, பாலகிருஷ்ணன் அழைத்து வந்தார். உறவினர் சேதுராமன் மூலம் விருதுநகர் கல்லுாரிகளில் யுவராஜை பேச வைக்க ஏற்பாடு செய்தார்.

அதற்கு முன் நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரியான மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஜன.,16 காலை கமிஷனரை யுவராஜ் சந்தித்தார்.

அப்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தொடர்பாக சில விபரத்தை கமிஷனர் கேட்ட போது யுவராஜ் கூறிய பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.

யு.பி.எஸ்.சி., இணையதளத்தை கமிஷனர் ஆய்வு செய்ததில், யுவராஜ் மோசடி நபர் எனத்தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

நமது நிருபரிடம் கமிஷனர் கூறியதாவது:

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுவது என்பது குறித்த புத்தகங்களை யுவராஜ் படித்துள்ளார். அவரிடம் தேர்வில் கேட்கப்படும் பாடம், அதற்கான துணைப் பாடங்கள், மதிப்பெண் உள்ளிட்டவை குறித்து அவர் அளித்த பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. இணையதளத்தை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஆண்டில் அவர் பெயரே இல்லை. இதை உறுதிசெய்ய மீண்டும் அவரை அழைத்துவர கூறினேன். அவரிடம் விசாரித்த போது பலரையும் ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானது, என்றார்...

உடல் பருமன் குறைய...



https://youtu.be/48kptrRbRcE

Subscribe the channel for more tips...

பாரத் மாலா திட்டத்தின் அடுத்த பகுதி...


தமிழ் நாடு முழுக்க வெறும் சாலைகள் மட்டுமே இருக்க போகுது...

மக்கள் எல்லோரும் தமிழ் நாட்டுக்குள்ளேயே அகதிகளாகத் தான் மாறப் போகிறார்கள்...

பாஜக மோடியின் ஆட்சியால் அபார வளர்ச்சி அடைந்தது கடன் மட்டும் தான்...


இதுதாம்லே ஒரிஜினல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்...

2014 வரை (விடுதலைக்குப் பிந்தைய 55 வருசத்தில்) இந்திய அரசுக்கு இருந்த கடன் சுமை 55 லட்சம் கோடி.

மோடி அரசின் 4 வருசத்துல இது 82 லட்சம் கோடியாக உயர்ந்துடுச்சு.

அப்படீன்னு ஒரு ரிப்போர்ட் இன்னிக்கி வந்திருக்கு.

பக்தாள் இதுக்கு வெளக்கம் சொல்லியிருப்பாங்களே... யாருக்காவது தெரியுமா?

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்...?


நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.

இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் வறட்சி நீங்க குறைந்தபார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். முழங்கால் வலி குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்?

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது...

உயரமாக வளர உதவும் இயற்கை உணவு...


https://youtu.be/2E8SthpxYQY

Subscribe the channel for more tips...

தெலுங்கர் திருமலை நாயக்கர் எனும் திராவிட வரலாற்று இரகசியம்...


தெலுங்கர் திருமலை நாயக்கனின் மொத்த மனைவி 169 பேர்...

திருமலை நாயக்கன் செத்ததும் 169 மனைவியரையும் தீவைத்து எரித்து உடன் கட்டை ஏறச்செய்தனர்..

தமிழகத்தில் முதல் இனப்படு கொலையை நிகழ்த்தியவனும் திருமலை நாயக்கனே.

பாண்டிய அரசை வீழ்த்தியதும் பாண்டிய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தான்.

அதில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டது போல் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்...

வர்ணாசிரம பிராமணியத்தை மிகக் கடுமையாக தமிழகத்தில் புகுத்தியவனும் இந்த திருமலை நாயக்கனே.

திருமலை நாயக்கன் ஆட்சியில் தான் இடக்கை வலக்கை என்னும் சாதி சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தது..

பிராமாணியத்தின் மனுவை அப்படியே தமிழகத்தில் அமல்படுத்தியவனும் இந்த திருமலை நாயக்கயனே...

https://youtu.be/_fpNijYbzSE

பண்டைய மினோவா நாகரிக ஏற்தழுவல்...


சங்கராமடம் சார்பாக கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்…


இது பேரு சமத்துவப்பொங்கல் தான் 3 % சதவீத பார்பானைவிட மற்ற சாதி இந்துக்களின் நிலை இது தான்…

கீழே அமர்ந்து பேசுவது ஒரு நீதிபதி ஆவார்...

கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...


முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன  ஈ.வே. ராமசாமி நாயக்கர்...

கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.

காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.

நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.

இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...