13/08/2018

கேரள அரசின் தமிழரை வஞ்சிக்கும் நீர் அரசியல் முறியடித்த இயற்கைத் தாய்...


நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தொட்டது.

தற்போதைய தொடர் மழையால் 142 அடியையும் அணை தொட்டுவிடும். அதற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க நமக்கு அனுமதி இல்லை.

முல்லை பெரியாறு அணையில் 155 அடிவரை தண்ணீரை தேக்க முடியும். அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த கேரளா இன்று முல்லை பெரியாறிலிருந்து தண்ணீர் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என இயற்கையிடம் மன்றாடுகிறது.

காரணம் இதுதான்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை.

இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணை.

இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல.

167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது.

ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும்.

இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது.

இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீணமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.

பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தார் மறைந்த முதல்வர் அம்மா.

இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன.

1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் மலையாள மனோரமா பத்திரிக்கை ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணையில் ஒரு யானை நுழைந்து போகும் அளவிற்கு ஓட்டை விழுந்து விட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்தியை மக்களிடையே பரப்பியது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் கேரள ஊடகங்களும், கேரள அரசும் திருந்தவில்லை. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். Dam 999 என்ற தலைப்பே விஷமத்தனமானது. Dam 999 என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள  பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் மலையாளிகள் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.

விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி.

முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில்,  இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.

முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும்,  காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்த தண்ணீர் சேர்ந்துவிடும்.

இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள்.

தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம்.

தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிராத்தனை செய்கிறார்கள்.

ஆனால் நாம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும்...

பாஜக மோடியின் விளம்பர செலவு 4880 கோடி...


கம்யூனிசமும் சாதி - மத வெறியும்...


50 வருடங்களாக தங்களது பொலிட் பீரோவில் ஒரு பட்டியல் சாதியினரைக்கூட நியமிக்காத கட்சியில் இருந்து கொண்டு...

தற்பொழுது இருக்கும் பொலிட் பீரோவில் கூட யெச்சூரி, பிள்ளை, சென், மிஸ்ரா, காரத் என்று தங்கள் சாதியை இன்னும் பெயர்களில் தாங்கி சுமக்கும் உயர்கட்சி தலைவர்களை வைத்துக் கொண்டு...

இதுவரை இருந்த பொது செயலாளர்களின் முக்கால்வாசி நபர்கள் பிராமணர்கள் என்ற வரலாறை வைத்துக் கொண்டு...

தமிழ்நாடு மாநில செயலாளராய் இதுவரை ஒரு பட்டியல்சாதினரை/ஒரு பெண்ணை/ஒரு மாற்று மதத்தினரை நியமிக்காத கட்சியில் இருந்து கொண்டு...

சாதி மறுத்து தமிழராய் நிற்கும் எங்களிடம் மனுவாதம் இருப்பதாக சொல்லும் ஐயா அருணன் (Ramalingam Kathiresan) அவர்களே.. எங்களுக்கு தெரியாதா பிஜேபி "காவி" என்றால் நீங்கள் "கடுங்காவி" என்பது..

BJP is Saffron & CPIM is Dark Saffron...

மே 17 திருமுருகன் காந்தி கலாட்டா...


தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும் தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
             
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும், சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல் தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திராவிடம் ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....

பாஜக மோடியும் நிதி மோசடியும்...


வில்லியம் ஜோன்ஸ் கற்பித்த சமஸ்கிருத வரலாற்றை முறியடிப்போம்...


நரேந்திரமோடி உள்ளிட்ட பல இந்துத்துவாதிகள் சமசுகிருதத்தை இந்திய துணைக் கண்டத்தின் முதன்மை மொழியாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு தமிழ்நாடு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்மொழி என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்து வரும் வேளையில், சமற்கிருதத்தை இந்துத்துவ -தில்லி வல்லாதிக்க அரசு முதன்மைப்படுத்துவது வரலாற்று மோசடியாகும்.

முதன் முதலில் பிரித்தானிய வல்லாதிக்கம் தான் இந்த சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்து வரலாறு எழுதியது. இந்த 'சமற்கிருத' நச்சு விதையை முதன் முதலாக விதைத்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த லில்லியம் ஜோன்ஸ் ஆவார். (படத்தில் இருப்பவர் வில்லியம் ஜோன்ஸ்)

இவர் இளம் வயதிலேயே கிரேக்கம், இலத்தின், பாரசீகம், ஹீப்ரு, அரபு மொழிகளை கற்றிருந்தார். 1783 இல் கல்கத்தா நீதிமன்றத்தின் நீதியரசாகவும் பணிபுரிந்தார். அவர் இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில்  மூத்தமொழியாக சமற்கிருதத்தை கருதி வந்தார். அதன் காரணமாக சமஸ்கிருத மொழியை வங்காளப் பார்ப்பன சமஸ்கிருத ஆசிரியர் ராம்இலக்சன் கவிபூசன் என்பவரிடம் கற்றுத் தெளிந்தார்.

இவர் மேலெழுந்தவாரியாக சில சமஸ்கிருத சொற்களுக்கும், கிரேக்கமொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக கண்டறிந்து சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதாகக் கருதினார். இதன் மூலம் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பக் கோட்பாட்டை வகுத்தார். இதை 1787இல் வங்கத்து ஆசிய சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் அறிவித்தார். இந்தக் கோட்பாடு ஆரிய இன மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கவே பயன்பட்டது.

இந்தியாவிலும், செர்மனியிலும் ஆரிய இனத்தின் ஆதிக்கத்தை தூண்டியதே தவிர எந்தமொழி வரலாற்று உண்மையையும் வலுவான சான்று காட்டி வெளிப்படுத்த வில்லை.

வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக்கு, எச்.எச்.வில்சன் போன்றோர் இக்கருத்தையே அதிகமாக பேசி வந்ததால்  சமஸ்கிருத முதன்மை மொழிக்கொள்கையும், இந்தோ ஐரோப்பிய மொழிக்கோட்பாடும் இந்திய வரலாற்றை தவறாக எழுதும் நிலைக்கு கொண்டு நிறுத்தியது.

இந்திய ஆட்சித்துறைப் பணிக்கு இங்கிலாந்தில் I.C.S. படித்த மாணவர்களுக்கு இந்திய வரலாறு தேவைப்பட்டது. 1815  சேம்சு மில் என்பவர் இந்திய வரலாற்றை எழுதி வெளியிட்டார். அவரைப் பின்பற்றியே தொடர்ந்து பலரும் எழுதலாயினர்.

இந்தியர்களுள் பெரும்பாலோர் காட்டு மிராண்டிகளாக இருந்ததால் ஆரியர் வருகைக்கு பின்னரே  பண்பாடு உருவானதாக  குறிப்பிட்டனர். இதன் மூலம் தவறான இந்திய வரலாற்றுக் கொள்கை அடித்தளமிடப் பட்டது.

அது மட்டுமின்றி, மேலை நாட்டினர் ஆளுவதற்கான கொள்கை வகுப்பாளர்களாகவும் இவர்கள் விளங்கினர். சமஸ்கிருதப் பராம்பரியத்திற்குப் புறம்பான இந்த காட்டுமிராண்டிகளை மேம்படுத்த வெள்ளையர்களுக்கு பொறுப்புண்டு என்றும், பண்பாடற்ற அவர்களை நெறிப்படுத்த கீழ்த்திசை யதேச்சாதிகாரப் போக்கிலேயே (Oriental despotism) ஆள வேண்டும் என்ற ஆளுமைக் கொள்கையையும் வகுத்தனர்.

சமஸ்கிருதம் முதன்மொழி என்பதற்கு எந்த வரலாற்றுத் தரவுகளையும் தரவில்லை. அவர்கள் வேதமொழியும், சமசுகிருதமும் வேறுவேறு மொழிகள் என்பதை அறிந்திலர்.

கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முன் சமஸ்கிருதம் தொடர்பாக எந்தக் கல்வெட்டும், நாணயமும், மட்கலப் பொறிப்புகளும், முத்திரை எழுத்துகளும் கிடையாது என்பதை அறிந்திலர்.

கி.பி. 350க்குப் பிறகே சமற்கிருத இலக்கியம் பிறந்ததையும் அறிந்திலர். பிறமொழி இலக்கியத்தை தமதாக்க கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் சமற்கிருத மொழி வரலாற்றில் ஒருமொழி பெயர்ப்பு இயக்கம் நிகழ்ந்ததையும் அறிந்திலர்.

சமற்கிருத மொழியின் முந்தைய நிலை பாகதமாகும். அதன் திருந்திய நிலையே சமற்கிருதம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழும், பாகதமும் சில இலக்கண விதிகளிலும், 90% உயிர் எழுத்துகளிலும் ஒன்று படுகின்றன. அதே வேளையில், இவை இரண்டும் ஒரே விதமாக சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன.

தமிழும், பாகதமும்- தென் மொழி, வடமொழி என்ற நிலையில் கி.பி.350 வரை தொல்லியலில் காட்சியளிக்கும் போது அக்காலத்தில் சமற்கிருதம் குழந்தையின் தவழும் நிலையில் இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன.

உண்மை வரலாறு இவ்வாறு இருக்க சமற்கிருதம் இந்தியமொழிகளின் முதல்மொழி என்பது தவறான வாதமாகும்.

சமற்கிருதம் தமிழைப் போன்றும், பாகதத்தைப் போன்றும் அ,இ,உ, அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. கிரேக்கம், இலத்தீன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் ஆல்பா, பேத்தா அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. இவ்விரு வகை மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தில் சேராதவை என நிரூபிக்க இது ஒன்றே போதுமான சான்றாகும். வில்லியம் ஜோன்ஸ் கூறிய இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப கோட்பாடும் அவரின் கற்பனையில் தோன்றிய ஒன்றாகும்.  ஆரியர்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்பது ஏற்க இயலாது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் உருவாகி விட்டது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர் வாழ்ந்த தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது.

உலகின் முதல் மாந்தன் பிறந்தகம் தென்தமிழகம் என்பதும்  முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ்மொழி என்பதும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்  உலகிற்கு உரத்துச் சொன்ன உண்மையாகும்.

இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து எழுதும் மரபு உடைத்தெறியப்பட வேண்டும். தெற்கிலிருந்து வரலாறு எழுதும் மரபு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் சமற்கிருத மேலாண்மைக்கொள்கை ஆட்டங்கண்டு ஓட்டமெடுக்கும்.

நூல் உதவி: வே.தி.செல்லம் எழுதிய தமிழகப் பண்பாடும் வரலாறும்...

பாஜக - அதிமுக வும் தமிழின அழிப்பும்...


நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்...


மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா?

ஆங்கிலத்தில் படிக்கும் போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ் மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்...

பில்கேட்ஸ் சும் மருத்துவ மாப்பியாவும்...


CO2 =PSEC  பில்கேட்ஸ் கண்டு பிடித்த வாய்பாடு...

அணை உடைக்கப்பட்டிருந்தால்...


சிங்கள - இந்திய ராணுவ படைகள் பெரும்பாலும் அழிந்திருக்கும்...

அதிலிருந்து சிங்கள அரசு மீண்டு வருவது கடினமாக இருந்திருக்கும்..

அவ்வாறு பிரபாகரன் அவர்கள் செய்யவில்லை, இது சிறிய தவறு போல் தெரியும்..

ஏனெனில் நாம் இல்லையென்றாலும், இந்த மண் அடுத்த தலைமுறைக்காக இருக்க வேண்டும் என யோசித்தார்...

மின்சாரமே உணவு அதிசிய மனிதன்...

     
ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார மனிதன் என அப்பகுதி  மக்கள் அழைக்கிறார்கள்.

காரணம், நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை.

இதோடு, பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்து கொள்கிறார்.

இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம்.

ஒரு முறை ஏதேச்சையாக மின்சார ஒயரை தொட்டுள்ளார், ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேஷ்குமார் கூறுகையில், தொலைக்காட்சி பெட்டி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி என என எல்லா வகையான மின்சார பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன்.

என் மீது மின்சாரம் பாயாது, வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்து கொண்டால் பசி அடங்கி விடும் என கூறியுள்ளார்...

அடப்பாவிங்களா அப்ப எங்க பெண்கள் மூஞ்சில தடவினது எல்லாம் பன்னி கொழுப்பா ?


24 மணிநேரமும் ஏமாற்று விளம்பரம் போடும் இவனை பிடிக்காமல்...

இதெல்லாம் தவறு என்று கூறிய ஹீலர் பாஸ்கரை கைது செய்திருக்கிறது நமது அரசு...

நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் - இது தான் நம் அனைவரின் ஆசை...


ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே.

நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம்.

ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, இதைவிடக் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதைத் தான், மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை. அது, நம் மனநிலையில் இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.

சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் எண்ணங்கள் தான்.

இது போன்ற மனநிலையைத் தீர்மானிப்பதில் நாம் வாழும் சூழலுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

சூழல் என்பது, அலுவலமாகவோ, உற்றார், உறவினர்களுடன் நாம் வாழும் வீடாகவோ, நண்பர்களுடன் மகிழ்ந்திருக்கும் இடமாகவோகூட இருக்கலாம்.

ஆனால், நாம் நேரத்தை அதிகம் செலவிடுவது நம் வீட்டில்.

எனவே, வீட்டில் இருந்து இதைத் தொடங்குவது தான் சரியாக இருக்கும்.

வீட்டில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை குறைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்...

வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்...

நாம் வீட்டுக்குள் நுழையும் போது நம்மை வரவேற்பது பாசிட்டிவ் வாசகமாக இருக்கட்டுமே.

உதராணமாக, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இடம், எல்லாம் நன்மைக்கே போன்ற ஏதாவது, ஒரு வாசகமாக அது இருக்கலாம். இதை, கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டி வைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் சொருகி வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

மாயம் செய்யும் மலரும் நினைவுகள்...

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக பதிவு செய்து, சுவர்களில் மாட்டி வைப்பது, உங்களை உற்சாகப்படுத்தும். இது, நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுவதோடு, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கத் தேவையான உந்துதலையும் கொடுக்கும்.

ஃபர்னிச்சர் சுத்தம் உதவும்...

நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் தூய்மையாக இருந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். எனவே, நாம் அதிகம் பயன்படுத்தும் சோஃபா, நாற்காலி போன்ற ஃபர்னிச்சர்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை தூசிதட்டி, எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

அமைதிக்கு ஓர் அறை...

வீட்டில் படுக்கை அறை, குளியல் அறை, பூஜை அறை... என இருப்பதுபோல, அமைதி கிடைக்க வழிசெய்யும் ஓர் அறையை உருவாக்கிக்கொள்ளலாம். அது, அறையாகவோ அல்லது சிறிய இடமாகவோகூட இருக்கலாம். அது பூஜை அறையாக இருந்தால், இன்னும் சிறப்பு. அந்த இடத்தில் வெளியிலிருந்து எந்தச் சத்தமும் ஊடுருவக் கூடாது. அறைக்குள் போனாலே மன அமைதி கிடைக்க வேண்டும். அந்த அறையில் தினமும் சிறிது நேரத்தை அமைதியாகச் செலவிட வேண்டும். அங்கே அமர்ந்து, தியானம், யோகா செய்வது சிறந்தது.

நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனை...

நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவே, எப்போதும் எதிர்மறையாக ஏதாவது நடந்துவிடுமோ என்று சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை மட்டுமே உருவாக்கிக் கொள்ளுங்கள்...

தமிழினமே இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...


அப்துல் கலாம் பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது - ஏவுகணை உருவாக்கிய இளைஞன்...


புதுச்சேரியை சேர்ந்த ராஜ மனோகரன் என்ற இளைஞர் 3 புதிய ஏவுகணைகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி முருங்கபாக்கம் அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவருக்கு சிறுவயதில் இருந்தே ராக்கெட்டுகளின் மீது ஆர்வம் இருந்தது.

தீபாவளி சமயங்களில் பட்டாசுகளின் மருந்தை சேகரித்து, அவற்றைக் கொண்டு, சிறிய ராக்கெட்டுகள் செய்து, தனது கனவுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கினார்.

நாளடைவில் இந்த ஆர்வம், மென்மேலும் பெருகி, கடந்த 12 ஆண்டுகளாக முயன்று 3 ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார்.

ஐடிஐ படித்துள்ள ராஜ மனோகரன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு விஷன் 2020, மிஷன் அர்ஜுனா என்று பெயரிட்டுள்ளார்.

மிஷன் அர்ஜுனா என்ற ஏவுகணை 800 கிலோ மீட்டர் வேகத்தில், 300 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து சென்று தாக்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளார்.

இது ஒரே நேரத்தில் மூன்று இலக்குகளை தாக்க கூடிய வல்லமை பெற்றது என தெரிவிக்கிறார்...

இந்த நிகழ்வின் முடிவை நீங்கள் யூகித்து விட்டீர்கள் என்றால், அது என்னவென்று புரியும்...


சோழப் பேரரசு...


சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்...

இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன..

சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது...

பில்கேட்ஸ் சும் மருத்துவ மாப்பியாவும்...


கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடுமையாக உள்ளது...


ஒரு மாதமாக தினமும், 100 மி.மீ., மழை பெய்து வருகிறது. துவக்கத்தில் ஆலப்புழா போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வடக்கு, மத்திய கேரளா முழுவதும் வெள்ள பாதிப்பு காணப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகளும் திறக்கப்பட்டுள்ளன.

கேரள அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் நீதிபதி ராமசந்திரன் நாயர் கூறியதாவது...

இடுக்கி பகுதியில் உள்ள குட்டநாடு என்ற இடம், 84 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு காரணம் அப்பகுதியில் இருந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளையும், பிரமாண்ட கட்டடங்களையும் கட்டியது தான். நிலச்சரிவு பாதிப்பு ஏற்படும் என்ற அபாயம் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து மக்கள் வீடுகளை கட்டி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிபுணர்கள் சிலர் கூறியதாவது...

கேரளாவில் நிலப்பகுதியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான திட்டம் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. கேரளாவில் 100 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது இல்லை. மக்கள் மெத்தமனமாக இருந்து விட்டனர். இயற்கை சீரழிவு ஏற்படும் பாதிப்பு பகுதிகளில் கட்டடங்களை கட்டி விட்டனர். 1924ம் ஆண்டு கேரளாவில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் தற்போது விமான நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

இடுக்கி பகுதி நில நடுக்கம் அபாயம் உள்ள இடம். ஆனால், அங்கு தான் கட்டுமான பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. குவாரி பணிகளும் அதிகளவில் நடக்கின்றன. 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து கேரள அரசு எந்த பாடத்தையும் கற்றதாக தெரியவில்லை.

இவ்வாறு நிபுணர்கள் கூறினர்...

அரசியலை ஒழுங்கு படுத்த தீவிரமாக களம் இறங்கிய சகாயம்...


மனதை வகைப்படுத்தலும் (சில சமயங்களில்) அதிலிருந்து வெளியே வருதலும்...


மனதை மாற்றுங்கள்...

மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்ற வேண்டுமென்று கருதினால், சுவாசம் தான் சிறந்த வழி. மனதின் எல்லா பழக்கங்களுமே சுவாசத்தின் பாணியை பொறுத்தே இருக்கிறது.

சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்.

எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள், உடனே மூச்சை வெளியே விடுங்கள் – ஏதோ அந்த முடிவை அந்த வெளியே விடும் மூச்சுவழியாக தூக்கி எறிவது மாதிரி.  வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சை விடுங்கள்.

நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும் போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்.

பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள்.

என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை
உணர்வீர்கள்.

பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.

அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல.

எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே
இழுக்கத் துவங்குங்கள்.

எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால், மூச்சை வெளியே விடத்துவங்குங்கள்.

மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள். 

உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்.

ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது.  நீங்கள் அந்த பழைய பள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வரமாட்டீர்கள்.

இது எல்லா பழக்கத்திலும் உண்மை.

உதாரணமாக, நீங்கள் புகை பிடிக்கிறீர்கள்...

புகைக்க வேண்டுமென்கிற உந்துதல் வரும் போது, உடனே அதைச் செய்ய வேண்டாம், அப்போது மூச்சை வெளியே விடுங்கள், அந்த உந்துதலை தூக்கி வெளியே எறியுங்கள்.

புதியகாற்றை உள்ளே இழுங்கள், உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள்.

உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்...

யூதர்களுக்கு இணையான இன்னொரு சக்தியும் உள்ளது...


குண்டலினி இயக்கம்...


மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தியிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்

குறிப்புரை :

பாம்பு என்றது குண்டலினியை, 

இயந்திரம் என்றது நடுநாடியை.

பதினாறு அங்குலக் கயிறு என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை,

பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை.

அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல் என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை.

எனவே, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தியிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.

மூன்று மடக்கு என்றது, உடம்பில், அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை.

அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக.

இனி, அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில்லாமல், விழித்திருப்பது போல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம்.

பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப்புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க.

குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது.

கட்டியிட்டு என்பதில் இட்டு அசைநிலை.

பாம்பு இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே என வினை முடிவு செய்க.

இரண்டெட்டு என்பது எண்ணலளவை யாகுபெயர்.

முட்டை என்பது பாடம் அன்று.

இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது...

தற்சார்பு உண்மைகள்...


திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி ஆற்றில் 26,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது...


மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்படுவதால் முக்கொம்பு அணைக்கு 28,000  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது...

சர்வதேச சிலை கடத்தலும்.. திசை திருப்பல்களும்...


நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி போர்டுகளை மறைத்து திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்....


இடம்: கோவை ரோடு, பொள்ளாச்சி...

ஆளுங்கட்சி நடைபாதைய மறைச்சு போர்டு வெச்சா, குறை சொல்ற நீங்களே, இப்படி செய்யலாமா...?

ஈழத்தை படி...


பிறவியின் நோக்கம் பற்றி...


ஆண்டவன் படச்சான் என் கிட்ட கொடுத்தான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான் என்ன அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...

இந்த பிரப்பஞ்சம் படைத்து ஒவ்வொரு உயிருக்கும் உணர்வை கொடுத்து அதை
பயன்படுத்தி அனுபவிக்கவே அனுப்பிருக்கிறது..

உயிரினங்களிளே மேம்பட்ட ஒரு விலங்கு என்றால் மனித பரிமாற்றமே
ஆமாம் நம்மை விட உணர்வுகளே பிரித்து பார்க்கும் வல்லமை எந்த உயிருக்கும் இல்லை.

நமக்குள் உதயமாகும் எண்ணங்களை ஒவ்வொரு விதமாக வெளியே காட்டுவோம் (உணர்வுகள்)அப்படி நீங்க எத வெளிய காட்டுறோமோ அதுவே கிடைக்கும் நமக்கும்.

உணர்வின் உதவியோடு நாம் செய்யும் அல்லது எதிர்வினையாற்றும் செயல்களுக்கு ஆதி புள்ளி எண்ணங்கள் அதை வெளியே கொண்டு வருவது உணர்வுகள்..

ஆக மொத்த விளையாட்டுமே உணர்வுகளை வைத்து தான் இருக்கு (எந்திரன் படத்தில் வசிகரன் சிட்டிக்கு உணர்வு கொடுத்த விசயத்த நினைவுல வச்சுக்கோங்க).

இது மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் பதிலுக்கு திரும்ப வாங்க வேண்டும் இந்த கணக்கு எப்போ முடியுதோ அப்போ பிறவி இல்லை (ஏதுமற்ற நிலை / எண்ணங்கள் உதயமாக இருத்தல்).

அதாவது ஒருவனை அடிச்சுடோம் னா நீ பதிலுக்கு அடி வாங்கனும். வாங்காம இறந்தாலும் அந்த அடிவாங்க திருப்பி இந்த சக்கரத்துக்குள்ள தூக்கி போட படுவாய் இந்த சக்கரத்த நிறுத்தனும் எல்லாத்தையும் அனுபவித்து....

ஒரு பிறவில பணக்காரனா இருப்ப மறுபிறவில பிச்சகாரனா கூட இருப்ப...

Simple la solla போனா வாழ்க்கை என்பது அனுபவம்/அனுபவிக்க (தோன்றுவதை செய்யுங்க.. சரி தப்புனு எதுவும் இல்லை)
எல்லாதையும் அனுபவித்து பிறகு எல்லாத்தையும் தூக்கி போடனும் (இதுவே பிறப்பின் ரகசியம்)...

உனக்கு முழுமையா கற்பித்து கொடுத்த பிறகு பிரபஞ்ச சக்தி அதோட இணைத்துக் கொள்ளும்...

கர்நாடக முதல்வருக்கு சென்று சேரட்டும், இனியாவது புரிந்து கொள்ளட்டும், தமிழகம் வடிகால் அல்ல என்று...


என் தாயை கொன்றவனோடு நான் எப்படி சமரசமோ, நட்பு ரீதியாகவோ இருக்க முடியும்...?


அப்படி இருந்தால், அது என் தாய்க்கு நான் துரோகம் செய்வது போன்றது..

இந்த அடிப்படையே தான் அரசியல் நாகரீகம் எனக்கூறி கூறி கடந்த 50 ஆண்டுகளாக நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள்..

அரசியல் நாகரீகம் என்ற ஒரு கொடூரத்தை உங்கள் மனதில் உளவியல் ரீதியாக அதை நல்லதாகவும், இதுதான் நவயுக நாகரீக அரசியல் எனவும் திணித்து விட்டார்கள்...

யேமனில் சவூதி ஏவுகணை தாக்கியதில் 40 க்கு மேல் பள்ளிக் குழந்தைகள் பலி...


யாருக்கு மறுபிறவி கிடையாது…?


மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. 

யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.

இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..

பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை.

இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.

அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.

சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.

தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.

பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. 

நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும்.

அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன...

ஜாதக ரீதியாக பார்த்தால் 12 இல் கேது இருப்பவருக்கு மறுபிறப்பு இல்லை... மீண்டும் பிறப்பதும் பிறக்காமல் போவதும் அவர்களின் விருப்பம்...