24/10/2018

இரவோடு இரவாக CBI இயக்குனரை அவசரமாக கட்டாய விடுப்பில் அனுப்பி, பாசிச டூபாக்கூர் பாஜக மோடி அரசு எதை மறைக்க முயல்கிறது.?


குஜராத் கலவரத்தில் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டவர், மோடியை அந்த வழக்கிலிருந்து வெளியேவர உதவியவர், அமீத்ஷாவிற்க்கு நம்பிக்கையான ஆள், எதிர்க்கட்சிகளை  மிரட்டி பணியவைக்க உதவுவார் என RSS கும்பலால் சிபிஐயில் சிறப்பு இயக்குனராக திணிக்கப்பட்டவர் அஸ்தானா..

அவர் மீது சிபிஐ ஊழல் வழக்கை பதிவு செய்துள்ளது... ஊழல் வழக்குள்ள அவரை மட்டும் பணியிலிருந்து அனுப்பாமல், வழக்கை போட்ட சிபிஐ டைரக்டர் முதல், மோடியின் செல்லப்பிள்ளையான அஸ்தானா மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி வரை இரவோடு இரவாக அந்தமானுக்கு தூக்கியடிக்கப்படுள்ளார்கள்..

இத்தனைக்கும் சிபிஐ டைரக்டரை எடுத்தேன் கவிழ்த்தேன் என மாற்ற முடியாது.. அவருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது, அதற்கான உயர்நிலை குழு தான் செய்யமுடியும்..

அவசரம் அவசரமாக நள்ளிரவில் CBI இயக்குனர் அலோக் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றபட காரணம் ரஃபேல் விமான ஊழல்..

ரஃபேல் விமான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவார் என்ற அச்சத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது ஏழைத்தாயின் மகன் மோடி அரசு..

இவர்தான் நீரவ்மோடி விஜய்மல்லையா உள்ளிட்ட வங்கி பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வழக்குகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்..

இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு தளங்களை யாரும் நுழைய முடியாதபடி சீல் வைத்து இருக்கிறார் மோடி...

ரஃபேல் விமான ஊழல் வழக்கு உள்ளிட்ட பாஜக மோடி அரசின் முக்கிய புள்ளிகள் மீது இருக்கும் வழக்குகளின் ஆதாரங்கள் உள்ள பைல்களை அழிக்கும் முயற்சியே இது...

மலபார் என்பது தமிழே...


கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதல் முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச் சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை மலபார்மொழி என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு : மேல்நாட்டினர் தான் தமிழ் மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர். அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன. அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்.. தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கிலிசுமாயிருக்கற அகராதி..

A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779.. printed vapery...

மோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல்...


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது..

நடு விரல் உங்களை குறிக்கிறது..

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது..

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது..

பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது..

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப் பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்...


எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும்.

செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும்.

இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.

இலைகளையும், பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை, கால் பகுதிகளை முக்கி வைக்கலாம்..

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது...

ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது.

மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்க வல்லது என்று இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது..

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும்.

நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும்.

ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும்.

மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.

நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.

மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும்.

அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது, என்று கூறுகிறார்கள்.

ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது.

இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது.

விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும்.

இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம்.

ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

இளவட்டக்கல்...


அன்று மாப்பிள்ளையின் தைரியத்தை பரீட்சித்துப் பார்ப்பார்கள் இப்படிப்பட்ட கல்லை ஒரே தூக்கில் தூக்க வேண்டும்..

அந்தக் காலத்தில இளவட்டக்கல் இதை ஒரே தூக்ககத் தூகுபவருக்கே பெண் கொடுப்பார்கள்..

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால் தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது..

இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரால் தான் அந்தக் கல்லையே தூக்க முடியும்.

அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம்.

அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள்.

ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை.

ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள்.

எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம் தான் முக்கிய வேலை.

அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள்.

காளை மாட்டை அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விளையாட்டுக்களில் வீரத்தை வெளிப்படுத்தும் முறை பெரும்பாலும் கல்யாணத்திற்கு காத்திருக்கும் அல்லது தயாராயிருக்கும் காளையர்களுக்கான ஒரு போட்டி. அதிலும் இளவட்டக்கல் என்பது லேசுப்பட்டதல்ல.

அதைத் தூக்கும் முறையைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே மூச்சு முட்டிவிடும்.

முதலில் குத்தவைத்து உட்காருவது போல உட்கார்ந்து கொண்டு இளவட்டக்கல்லை இரு கைகளாலும் இறுகப் பிடித்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், முழங்காலில் தூக்கி வைக்கும் போது சிறிது இடைவெளி கிடைக்கும்.

இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு மெல்ல எழ முயற்சிக்க வேண்டும்.

உடல் சற்று நிமிர்ந்தவுடன் நெஞ்சுப் பகுதிக்கு கல்லை அங்குலம் அங்குலமாக மேலேற்றி, வலது புறத்திலோ அல்லது இடது புறத்திலோ கல்லை உருட்டி ஏற்றிவிடவேண்டும்.

அவ்வளவு தான்..

ஆனால், முதன் முறை அப்படிக் கல்லை மேலேற்றும்போது நெஞ்சுப்பகுதியில் சடசடவென்று எலும்புகளின் சத்தம் கேட்குமாம்.

மார்பிலிருந்து தோள்பட்டைக்கு நகர்த்தும் போதுதான் பலரும் தோல்வியடைந்து விடுவார்களாம்.

சற்று மூச்சடக்கி தூக்கிவிட்டால் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து, அருகிலுள்ள கோயிலை வலம் வந்து கீழே போடுவார்களாம்.

சிலர், அருகில் உள்ள ஊருணியைச் சுற்றி தமது வீரத்தை வெளிப் படுத்துவார்களாம்.

ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லச் சொல்ல, கேட்பவரின் மனம் கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரின் நிலைக்குத் தள்ளப்படும்.

தோல்வியடையும் சிலரும், முதன் முறையாக முயற்சி செய்வோரும் ஆளில்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிப் பார்ப்பதுண்டு.

சில பீமர்கள் ஒரே மூச்சில் தூக்கிவிட்டு அடுத்து என்ன என்பது போலவும் பார்ப்பார்கள்...

உடலில் உள்ள கொழுப்பு கரைய...


தேவையான பொருட்கள்.

சின்ன வெங்காயம் ( நாட்டு வெங்காயம் ) அரை கிலோ.

பசுமாட்டு நெய் கால்கிலோ.

பனவெல்லம் (அ) பனங்கல்கண்டு  தேவையான  அளவு.

செய்முறை..

வெங்காயத்தினை தோலுரித்து கொள்ளவும்  பிறகு வானலில் போட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும்.

வதக்கிய வெங்காயம் சூடு ஆரியப்பின் மிக்சியில் போட்டு அரத்துக் கொள்ளவும்.

அரைத்த வெங்காயத்தினை  மறுபடியும் வாணலில் போட்டு நெய் ஊற்றி கிளறவும்.

குறிப்பு - சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்  கரி உப்பு அல்லது கருப்பு உப்பு   சேர்த்து கொள்ளவும்..

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பனங்கல்கண்டு  அல்லது பனவெல்லம் சேர்த்து லேகிய பதம் வரும் வரை  கிளறி  கண்ணாடி குடுவையில்  வைத்துக் கொண்டு காலை ஒரு ஸ்பூன்  இரவு ஒரு ஸ்பூன்  48 நாட்கள்  சாப்பிட்டு வர...

உடலில் உள்ள கொழுப்புகள் கரையும், பருத்த உடல்  இளைக்கும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


சித்தர் ஆவது எப்படி - 22...


உள்ளிருந்து ஓங்கும் உன்னதத்தின் இரகசியம்...

பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையை தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை தேகம் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கற்றவற்றை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தோர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவயத்தை நான் ஒரு பொழுதும் மறக்க மாட்டேன் என பொருள் பட வள்ளலார் பாடி இருக்கின்றார்..

இதில் உள்ளிருந்து ஓங்கும் என்ற வரி தான் மிக மிக முக்கியம்..

நமசிவய என்ற பஞ்ச பூத சக்தி, தேகத்தின் உள்ளே அமர்ந்து ஓங்க தொடங்கும் பொழுது மட்டுமே, தேகத்தில் உயிர் நிற்கும்..

கண நேரம் ஆயினும் அந்த ஓங்குதல் நடைபெற வில்லையென்றால், சுற்று புற காற்று மண்டல அழுத்தத்தால் ஒடுங்குதல் என்ற செயல் நடைபெற்று, தேகம் நசுக்கப் பட்டு வேதனை படுகிறது..

பிறந்த குழந்தை மூச்சு விட தெரியவில்லை என்றால் உடனே இறந்து போகும்..

இந்த மூச்சானது தேகத்தின் உள்ளே புகுந்து, வெளி உலக சூழ் நிலைகளின் ஒடுக்குதல் என்ற செயலுக்கு எதிராக ஓங்குதல் என்ற செயலை உருவாக்கி தேகத்தை சமநிலை படுத்துகிறது..

இந்த காரணத்தினால் தான் நாம் நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை சுவாசித்து, உள் நுழைந்த காற்று மண்டலத்தினால் உள்ளே ஓங்குதல் என்ற செயல் பாடு நடை பெற்று நம் தேகம் சமசீர் அடைந்து உயிர் வாழ்கிறோம்..

ஆக மொத்தத்தில் உள் இருந்து ஓங்குதல் மூலம் மட்டுமே தேகத்தில் உயிர் வாழ்கிறது..

ஓங்குதல் என்ற செயல் பாடு நடக்கும் போது மட்டுமே தேக திசுக்கள் விரிவடையும் தன்மையால் இன பெருக்கம் அடைந்து அதன் மூலம் தேகம் வலுவடைகிறது..

இந்த சூழ்நிலையில் சுற்று புற சூழ்நிலைகளால் உருவாகும் ஒடுங்குதல் என்ற செயல் பாடு, சுவாச ஒழுங்கின்மை காரணமாக அதிகரித்து, தேகம் சிறுக சிறுக வலுவிழந்து, முடிவில் மரணம் கவ்வுகிறது...

ஆகவே ஓங்குதலுக்கு உதவாத சுவாச பயிற்சிகள் அத்தனையும் தேகத்தை நாசப் படுத்துகிறது..

மிக முக்கியமாக சுவாசத்தின் மூலமாக நடைபெறும் ஒங்குதல் என்ற செயல் பாட்டிற்றிக்கு, சுவாச இல்லாத நிலையில் ஒரு மாற்று பயிற்சியின் மூலம் அந்த ஓங்குதல் நடை பெற வில்லை என்றால், சுவாச மற்ற நிலையில் தேகத்தில் உயிர் நிச்சயமாக தங்காது..

அந்த மாற்று பயிற்சியை பயிலாத வரை ஜீவ சமாதி என்பது சாத்தியமில்லை...

சுவாசத்தின் மூலம் இல்லாமல் அந்த மாற்று பயிற்சியின் மூலம் மட்டுமே அந்த உள் இருந்து ஓங்குதல் மூலம், புதையுண்ட ஜீவ சமாதியில் ஓரு மகான் தன் தேகம் அழியாமல் காத்து, தன் தேக கனலை காத்து, தன் ஒளி தேகத்தால் செயல் பட முடியும்..

அந்த மாற்று பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், உள் இருந்து ஓங்குதலை இழந்து, ஜீவ சமாதி என்று புகுந்தவர்கள் அத்தனை பேரும் மரணத்தை தழுவியவர்களே...

இதனால் தான் உள் இருந்து சதா காலமும் ஓங்குதலை நடத்தும் நமசிவய என்ற ஜீவ சக்தியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

அந்த உள் இருந்து ஓங்குதலை பெற மாற்றுப் பயிற்சியினை கற்று பயின்ற பின் சுவாசம் என்ற ஒன்று மனிதனுக்கு தேவை இல்லை..

அப்படி வெளி சுவாசம் தேவையில்லாத மனிதனே ஜீவ சமாதிக்கு தகுதி உடையவன் ஆகிறான்..

அவன் வெளி சுவாசத்தால் செயல் படும் ஒழுங்கின்மையிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு.

பரி பூரண ஒழுங்கு என்ற அந்த உள் ஓங்குதலில் தன் தேகத்தை வேண்டிய காலம் காத்து தன் ஒளி தேகத்தில் செயல் ஆற்றுகின்றார்கள் சித்தர் பெரு மக்கள்...

பாஜக மோடியும் ஊழல் சிபிஐ யும்...


அமானுஷ்யம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், 'சோச்சி மில்கோ' என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம்பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.


பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படியெல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

இயற்கை...


பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்...


நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.

பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.

பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠..

இராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய்...


1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் இராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய் இன்னும் சிங்கம் போல நம் தமிழரின் அடையாளம்.....

நம்ப முடியாத உண்மைகள்...


பிரம்மத்தை நோக்கி - 1...


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

அமைச்சர் ஜெயக்குமாரால் அந்தப் பெண்ணுக்கோ, குழந்தைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் தலையிடுவோம்- வெற்றிவேல் எச்சரிக்கை...


இப்பிரச்சினையைக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை. அவர் திருந்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட்டு, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்''.

அமைச்சர்னா, பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?

மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு...


1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய  மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.

ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.

குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வட திசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால் இந்திய விடுதலை வரலாற்றை தென் திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை கால வரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர் .

ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடி வைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன்முதலாக நிறுவினர். அதன் பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து , விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்,

ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலை பெற்று ஆதிக்கம் செலுத்திய போது பல்வேறு சிற்றரசுகள் ( பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக  செயல் பட்டன. பின்பு வரி வசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போதுதான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரி எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்று படுகின்றன . இந்த ஒன்று படுத்துதல்  முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.

 தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக்கர்  (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), மயிலப்பன், முத்துக்கருப்பர்  (இராமநாதபுரம்). ஞானமுத்து (தஞ்சை ) ஆகியோரோடு இணைந்து "தென்பகுதி கூட்டமைப்பை" முதன் முதலில்  உருவாக்கி ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.

சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

 "ஜம்புத்தீவு ( நாவலந்தீவு என்பது தமிழ்ப் பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது.

 இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய  அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர் ,மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறை பிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.அதன் பிறகு மருது பாண்டியர்  உள்ளிட்ட  500 பேர்  திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப் படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley )எனும் ஸ்காட்லாந்துகாரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்:

"மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பி விட்டது. இதன் காரணமாக அவரது சீமைக்குத் தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடி பட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணைகள் சிறிது கூட மாற்றமின்றி கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருது இராணுவ மன்றத்திடம், 'தனக்கு தயை எதுவும் காட்ட வேண்டாம்' என்று சொன்னார். நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?"

(கோர்லே எழுதிய நூலின் பெயர் : "Mahradu- An indian story of the begining of the ninteeth century- 1813, London)

மேற்கண்ட  மருதுவின் இறுதி உரையினைப் படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர் தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப் பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?

ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.

 24.10.1801இல் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட்ட பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவீல்லை.

மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (prince of wales island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.

1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வேல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அது குறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின் வருமாறு கூறுகிறார்: "உடல் நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்."

சிவகங்கையை  ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப்பரம்பரையினர் அல்ல. சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுக நாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப் படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதி விலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு மக்கள் அரசாக குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை பேரா.கதிர்வேலின் "history of Maravas" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.

விவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான்  அவர்கள் விடுதலைப் போரை நடத்திய போது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது . மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ.கேசவன் அர்கள் "சமூகமூம் கதைப்பாடலும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருது பாண்டியர்களின்  மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும் கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கங்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவானது  (ICHR) மருது பாண்டியர்களின்  வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.

தென்னாட்டுக் கிளர்ச்சிகள்
(South indian rebellion- The first independance 1800-1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இராஜய்யன் என்பவர் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்" என்று பேரா.ந.சஞ்சீவி எழுதிய "மானம் காத்த   மருதிருவர்" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.

 மு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மை தானே? தமிழர்களே! நம் வரலாற்றை உணரப் போவது எப்போது?

(இன்று மருது பாண்டியர் தூக்கிலிட்ட நாள் 24.10.1801)..

"மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்" நூலிலிருந்து...

டெங்குக் காய்ச்சல் : இந்தியா மீது தொடுக்கப்பட்ட உயிரியல் யுத்தமா?


டெங்கு – இந்த பெயர் 2012 வரை தமிழக மக்கள் பரவலாக உச்சரிக்காத ஒரு நோயின் பெயர். 2012க்கு பின் தமிழகத்தின் குக்கிராமத்தில் இருக்கும் பாமரர் வரை உச்சரிக்கும் பெயராக மாறியது எப்படி?

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதா?

தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திடீரென குறைந்து விட்டதா? அல்லது டெங்கு வைரஸ் புது வீறு கொண்டு எழுந்து விட்டதா? (அறிவியல்பூர்வமாக சொல்வதானால் mutation ஏற்பட்டுவிட்டதா? அதற்கான காரணி என்ன?).

இங்குதான் உயிரியல் ஆயுதப் போரினை (Biological warfare) பற்றியும், டெங்குவை உயிரியல் ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் நம்பகப்பூர்வமான ஆதாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அணுகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் ஆயுதமாக பயன்படுத்தி போரிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று நாம் உயிரியல் ஆயுத போர்களின் காலகட்டத்தில் இருக்கிறோம். டெங்கு ஓர் உயிரியல் போர் ஆயுதம் என்பது பரபரப்புகாக யாரோ சொன்ன செய்தி அல்ல. Indian Defence Studies and Analysis என்ற இந்திய அரசின் பாதுகாப்பு துறை சார் தன்னாட்சி நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் கடற்படை அதிகாரியான கேப்டன் அஜய் லீலீ எழுதிய கட்டுரையின் சாராம்சம். அஜய் லீலீ, பாதுகாப்பு துறை ஆய்வில் சிறந்த பங்களிப்புக்கான கே.சுப்பிரமணியம் விருதை 2013-ஆம் ஆண்டு வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் லீலீ கட்டுரையின் உள்ளடக்கம்..

1981-ஆம் ஆண்டு க்யூபா நாட்டில் டெங்கு சுரம் தீவிரமாக பரவியது. அந்த ஆண்டு ஒரேநேரத்தில் 158 பேர் வரை டெங்குவினால் செத்து மடிந்தனர். அப்போது, அந்நாடு தனது பரம எதிரியான அமெரிக்காவை நோக்கி சுட்டுவிரலை நீட்டியது. அவ்வாறு சந்தேகப்படுவதற்கு காரணமும் இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் டெங்கு மையம் கொண்டிருந்தது. இந்த இடங்களில் உள்ள மக்கள் எவரும் அதுவரை டெங்கு பாதித்தவருடன் தொடர்பில் இல்லை. டெங்கு பாதித்த பகுதிகளுக்குச் சென்று வந்தவர் எவரும் இல்லை. சுயம்புவாக அந்த இடங்களில் எங்கிருந்து டெங்கு உருவாக முடியும் என்ற சந்தேகம் குற்றச்சாட்டிற்கு வலுசேர்த்தது.

மேலும், அமெரிக்காவும் டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை Fort Deitrick, Maryland-இல் உள்ள தனது ஆய்வகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்துவந்தது. இந்த தகவலும் ஆதாரமாக முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் அந்த ஆராய்ச்சி 1972-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டிருந்தது.

பனிப்போரின் உச்சகட்ட காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வு முயற்சிகள் தொடர்பான 46 இரகசிய கோப்புக்கள் பின்னர் வெளியானது. அதில் இருந்த முக்கியமான ஆய்வு டெங்கு தொடர்பானது. தெற்கு பசிபிக்கில் உள்ள பேக்கர் தீவுகளில் Magic sword என்று பெயரிடப்பட்டு ஓர் ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில் டெங்கு வைரசை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்தி’ வகை கொசுக்கள் பேக்கர் தீவில் பரப்பப்பட்டது.கொசுக்கள் பரவும் தன்மையும், வேறு இடங்களுக்கு அந்த கொசுக்களை எடுத்து பரப்பும் வாய்ப்புகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்குப் பின், இதுபோன்ற ஒரு ஆய்வு 1975-ஆம் ஆண்டு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனெபட் என்ற இடத்தில் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. பசிபிக் தீவுகளில் நடந்த ஆய்வுக்கும் சோனெபட் ஆய்வுக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. பசிபிக் தீவுகளில் மக்கள் தொகை குறைவான பகுதிகளில் நடந்த அதே ஆய்வு இந்தியாவில், தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் அமைந்த மக்கள்தொகை அடர்ந்த பகுதியில் மேற்கொள்ள முயற்சி நடந்தது. இந்தியாவின் உயர் மருத்துவ ஆய்வு நிறுவனமான ICMR-க்கு இது குறித்து தகவல் தெரிந்திருக்கவில்லை. கொசுக்கள் குறித்த ஆய்வு என்றுக் கூறி உலக சுகாதார நிறுவனம் மூலமாக அமெரிக்கா இந்த முயற்சியை எடுத்தாலும் டெங்கு நோயை பரப்பும் நோக்கம் முதன்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்போதைய இந்திய பிரதமர், இந்திரா காந்தியால் அந்த ஆய்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

2001-ஆம் ஆண்டு Hepatitis C என்னும் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வு செய்த பிரிட்டிஷ் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இருவர் Hepatitis C மற்றும் டெங்கு வைரஸை இணைத்து மரபணு மாற்றம் செய்து ‘Dengatitis’ உருவாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

டெங்கு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதில் உள்ள சாதகமான அம்சங்கள்.

1.டெங்குவை கொசுக்களின் மூலமாக எளிதாக பரப்ப முடியும்.

2.டெங்கு எளிதாக பரவ கூடியது. எனவே ஒரு பரந்துபட்ட புவியியல் பகுதியை எளிதில் தாக்குதலுக்கு உட்படுத்தலாம்.

3.டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில் மக்கள் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பதில் கவனக்குறைவாக உள்ள போது கடிக்கும் தன்மை கொண்டது.

4.டெங்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் இல்லை. அது காலம் காலமாக மக்களை தாக்கும் அரிதான நோய். அதை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் போது எந்த சந்தேகத்திற்கும் இடம் இருக்காது. (புதிய நோய் கிருமிகள் தான் உயிரியல் ஆயுத கருவிகளாக பயன்படுத்தப்படும் என்ற தவறான கருதுகோள் உள்ளது).

கட்டுரை ஆதாரம்: https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006

இந்திய பாதுகாப்பு துறை ஆய்வுகள் மட்டும் அல்ல பாகிஸ்தானும் டெங்கு உயிரியல் ஆயுதமாக தன் நாட்டின் மீது ஏவப்படுகிறது என்று பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கிறது.

ஆதாரம்: http://pakistancyberforce.blogspot.in/2011/09/dengue-virus-cias-biological-warfare.html

Ed Regis எழுதிய The Biology of Doom என்ற புத்தகமும் டெங்குவை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள், ஆதாரங்கள் பற்றி விரிவாக பேசுகிறது.

டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதால் மனித சக்தியை பாதிக்க முயற்சி எடுக்கப்படுகிறதா அல்லது டெங்குவை பரப்பி அதன் பின்னர் மருந்தை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் பொருளாதார நோக்கம் உள்ளதா என்பது குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. தமிழகத்தில் இப்போது பரவி வரும் டெங்குவும் உயிரியல் ஆயுத போரின் தொடர் விளைவு தானா என்பதும் ஆராயப்படவில்லை.

ஆனால் உலக பொருளாதாரத்தின் மையமான Wall street பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்கும் மூன்று சக்திகள் ( Pharma, Oil, Banking) தங்கள் லாபத்திற்காக போரை தூண்டிவிட அஞ்சாதவை என்ற எச்சரிக்கையுடன் தான் மேலே சொன்ன தகவல்களை நாம் கடந்து செல்ல வேண்டும்.

தற்போது டெங்குவிற்கு வழங்கப்படும் பாரம்பரிய சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீரை ஒடுக்க நடக்கும் முயற்சிகள், இதன் பின்னணியில் மருந்து கம்பெனிகளின் லாப அரசியல் இருக்குமோ என்ற சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.

அறிவியல் பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.

மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது. அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள். ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல் பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அவசர கோலத்தில் அவர்கள் அள்ளித் தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.

ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

உண்மை தான் என்ன?

நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.

ஆனால் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கரைப்பானாகிய Propylene glycol அதன் இயல்பிலேயே விந்தணுக்களை அழிக்க கூடிய தன்மை வாய்ந்தது. எனவே இந்த ஆய்வே தவறானது என்று அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி, Dr. ராமசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1997-ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology-இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம்: http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998

மேலும், நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்? நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், பேய்ப்புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து. அதில் நிலவேம்பு என்பது 9-இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.

இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

சுக்கு(Zingiber officinale):

https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும். எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.

Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of testis and epididymis.There were dose and duration dependent increase in sperm quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.

அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய testis , epididymis எடையை அதிகரிக்கிறது. ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது. மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது.

https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.

Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.

கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):

http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf

Cisplastin என்ற மருந்தின் மூலம் விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.

பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):

http://www.webmedcentral.com/article_view/3498

one would observe reduction in the testes weights (shrinkage) because, no spermatogenic activity occurred, as the spermatogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial spermatogenic state of the testes were approached.

அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.

நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் மேலே சொன்ன 3 மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.

நிலவேம்பு விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஏற்றுக் கொண்டாலும், அதை திருத்தி அமைக்கும் பண்பு நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்படும் மற்ற மூலிகைகளுக்கு உள்ளது.

நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படிக்க வேண்டும். ஒரு மூலிகை சரக்கின் கெட்ட குணங்கள், அதற்கு எதிரிடை பண்புடைய மற்ற மூலிகையால் திருத்தி அமைக்கப்படும் கோட்பாடு இது.

இங்கு சித்த மருத்துவத்தை அறிவியல் என்று எப்படி அழைக்கலாம் என்று சிலருக்கு கேள்வி எழும். பாரம்பரிய மருத்துவமே மூட நம்பிக்கை என்ற கற்பிதம் தவறானது. பாரம்பரிய மருத்துவம் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் புழங்கி வந்தது. அதில் மூட நம்பிக்கை ஒரு சிறிய சரடு மட்டுமே. சித்த மருத்துவம், தத்துவங்களை அடிப்படையானது. அறிவியல் காலத்திற்கு காலம் கருவிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப வளரக் கூடியது. இதில் தத்துவ அடிப்படையிலான அறிவியல் என்பது ஒரு பரிமாணம்.

உயிரினங்கள் அனைத்திற்கும் தனது உடலுக்கு நேரும் நோயை மாற்றி அமைக்கும் மருத்துவ அறிவு உள்ளது. இதில் ஆறு அறிவுடைய மனிதன் தனது அனுபவத்தில் சேமித்த மருத்துவ அறிவு ஒப்பீட்டளவில் அதிகமானது. அதனுடன் தத்துவங்களும் உள்ளீடும்போது அது பாரம்பரிய மருத்துவ அறிவியலாக பரிணமிக்கிறது.

மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் (ஆதாரம்: Biology letters அறிவியல் ஏடு, December 2012), குறிப்பிட்ட ஒரு வகை பறவைகள் சிகரெட் துண்டுகளை தனது கூண்டில் சேகரித்து வைத்தது குறித்து ஆராயப்பட்டது. சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்படாத கூண்டில் முட்டைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது.  முட்டைகளுக்கு ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் அந்த சிகரெட் துண்டுகளுக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இது மந்திரம் அல்ல, பறவைகளின் சூழலுக்கேற்ற தகவமைப்பு. மனிதனின் தகவமைப்பு முயற்சிகளுடன், தத்துவ அறிவும் சேர்ந்து உருவானது தான் பாரம்பரிய மருத்துவ அறிவியல்.

இந்த பாரம்பரிய அறிவியலை, நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தி முன்னேற்ற வேண்டும். ஆனால் அதுவரை அதன் பயன்பாட்டை நிறுத்த சொல்வது ஏற்புடையதா? நிலவேம்பு குடிநீர், Phase 3 clinical trial முடித்து தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறும்முன், இன்று அலோபதி மருத்துவமாக சந்தையில் உலாவும் பல மருந்துகள் முறைப்படி அனைத்து ஆராய்ச்சிகளும் முடித்து தான் வெளிவந்ததா என்பதை கவனிக்க வேண்டும்!

தமிழகத்தில் டெங்கு தீவிரமாக பரவிய அதே 2012 மே மாதம், இந்திய பாரளுமன்ற நிலைக்குழு CDSCO (Central Dug Standard Control Organisation) என்ற அமைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. CDSCO மருத்துவத் துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சந்தையை கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்த ஆய்வில் பல முறைகேடுகள் வெளியானது.

மருத்துவத்துறை ஆராய்ச்சியை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் விதிமுறைகள் அடங்கிய Drugs and Cosmetics act-ல் ஒரு சிறப்பு பிரிவு உள்ளது. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற நோய்கள் தாக்கும் போது அதற்கான மருந்துகள் கண்டறியப்படாமல் இருந்தால் phase 3 clinical trial  முடிக்கப்படாமல் ஒரு மருந்தை பயன்படுத்த அங்கீகரிக்கலாம் என்று அது குறிப்பிடுகிறது. (Phase 3 clinical trial என்பது மருத்துவ ஆராய்ச்சியின் 4 நிலைகளில் ஒன்று.) பாராளுமன்ற நிலைக்குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த சிறப்பு பிரிவை காரணம் காட்டி பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இப்பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 33 மருந்துகளில் ஒன்று கூட தகுதியான அவசரநிலை காரணங்களுக்காக தான் ஆராய்ச்சி முடிக்காமல் அனுமதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை.

Letrozole என்ற மருந்தை Novartis என்ற பிரபல மருந்துக் கம்பெனி பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதாகக் கூறி அறிமுகப்படுத்தியது. இம்மருந்து PHASE 3 மற்றும் PHASE 2 Clinical trial முறையாக முடிக்காமல் பல மோசடிகளை கையாண்டது பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வில் தெரியவந்தது.

Sertindole என்ற மருந்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் அங்கீகரிக்கலாம் என்று மூன்று மனநல மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் Phase 3 clinical trial செய்யாமல் சந்தையில் அனுமதிக்கப்பட்டது. சென்னை, அஹமதாபாத் மற்றும் மும்பையிலிருந்து பரிந்துரை அனுப்பியிருந்த இந்த மூன்று மருத்துவர்களின் பரிந்துரையும் ஒரே மொழி நடையில் வரி மாறாமல் இருந்தது மட்டுமல்ல, அவர்கள் அனுப்பிய மூன்று கடிதங்களிலும் DCGI அலுவலக முகவரியும் ஒன்று போல் தவறாக எழுதப்பட்டிருந்தது. மருந்து கம்பெனிகளே மருத்துவரின் பெயரில் பரிந்துரையை அனுப்பியது என்பதை கண்டறிய பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இதைவிட அதிக ஆதாரங்கள் தேவைப்படவில்லை.

இன்றும் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் மருந்து Nimesulide. இதை குழந்தைகளுக்கான மருந்தாகவும்  பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. Nimesulide மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து. மேலும், குழந்தைகளுக்கு இதை உபயோகித்து பார்த்து எந்த Clinical trial-லும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படி முறையான ஆராய்ச்சி இல்லாமல் சந்தையில் புழங்கி வரும் மருந்துகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். இம்மருந்துகளை எல்லாம் மருத்துவர்கள் இன்றும் பரிந்துரைத்து கொண்டு தான் உள்ளனர். ஆனால் மக்கள் பலநூறு ஆண்டுகள் உபயோகித்து வரும் நிலவேம்பு குடிநீர் பற்றி மட்டும் பீதி கிளப்புவதன் பின்னணியில் உள்ள அரசியலை ஆராய வேண்டும்.

பாரம்பரிய மருத்துவத்திற்கு புனிதத்தன்மையைக் கெடுத்து, நிலவேம்பு குடிநீரை ஆராய்ச்சி செய்வது பாவத்திற்குரிய செயல் என்பது பொருளல்ல. ஏற்கனவே பல்லாயிரம் வருடங்களாக உபயோகித்து பாதுகாப்பானதாக அனுபவப்பூர்வமாக உணரப்பட்ட ஒரு மருந்தை, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் முடித்து ஓர் அவசர நிலையில் உபயோகிக்கும் போது எதிர்ப்பது ஏன்?

பார்மா கம்பெனிகளுக்காக வளைத்து ஒடிக்கப்பட்ட சட்டங்களை கண்டுக் கொள்ளாத நவீன மருத்துவ சமூகம், சட்ட திட்டங்களை கடைபிடித்து முறையாக வழங்கப்படும் ஒரு மருந்தை எதிர்ப்பது அநீதி.

நிலவேம்பு குடிநீரை பற்றிய வதந்திகளையும், பொய் பரப்புரைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக அறிவியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி தயாரிப்பு முறைகளிலும்,  வடிவத்திலும் தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வருவது சித்த மருத்துவர்களின் கடமை. இங்கு ஆர்டிமைசின் என்ற மருந்தை சீன பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்த Tu youyou என்ற நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளரை முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

நிலவேம்பு குடிநீரும், ஆர்டிமைசின் போல் பல கட்ட ஆய்வுகளைக் கடந்துவர ஏற்புடைய அரசியல் சூழல் இருப்பது அவசியம். ஆர்டிமைசின் என்பது 30 வருட ஆராய்ச்சியின் இறுதி விளைவு. ஆராய்ச்சி நடந்த 30 வருடங்களும், “மருந்தின் மீது ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அதுவரை மக்கள் அந்த மூலிகையை பயன்படுத்த வேண்டாம்” என்று ஆணை பிறப்பிக்கவில்லை.

நிலவேம்பு குடிநீரை நிறுத்தச் சொல்லி இங்குள்ள அரசு ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால் அதற்கு எதிராக போரிடுபவர்களின் வாதம் சூழலை மாற்றக் கோருகிறது. இவர்களே அரசின் மருத்துவக் கொள்கையை வகுக்கும் நிர்வாகிகளாக இருப்பதால், சூழலும் விரைவில் இவர்கள் எண்ணப்படியே மாறிவிடும்.

ஆர்டிமைசின் கண்டுபிடிக்க சீனாவின் பொது சுகாதாரத்துறையில் கடைபிடிக்கப்படும் ஒருங்கிணைந்த மருத்து சிகிச்சைக் கொள்கை ஒரு களமாக இருந்தது. நிலவேம்பு குடிநீருக்கும் அப்படி ஒரு களம் தேவை.

நம் நாட்டு சுகாதாரத் துறை, WHO வழிகாட்டுதல்களை வேத வாக்காக கருதி கொள்கைகளையும் சிகிச்சை முறையையும் வகுக்கிறது. WHO வழிகாட்டுதல்கள் பாரம்பரிய சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது அல்ல. இதை காரணம் காட்டியே பாரம்பரிய மருத்துவம் WHO வழிகாட்டுதலுக்கு குறுக்கே நிற்பதாகவும், அதனாலேயே நம் நாடு பொது சுகாதாரத்தில் முன்னேறவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் பொது சுகாதாரத்தில் முன்னேறிய பல நாடுகள் (வளரும் நாடுகள் உட்பட) WHO வழிகாட்டுதல்களை தன் நாட்டு சூழலுக்கு ஏற்ப நிராகரித்தோ, ஒப்புகொண்டோ, தகவமைத்தோ பயன்படுத்தி வருகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

வேலூர் கிறிஸ்த்துவ மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், Dr.K.S.Jacob ஒரு கட்டுரையில் மிகச்சரியாக இவ்வாறு குறிப்பிட்டார்- “Indian problems requires Indian solutions. While International advice from WHO should be considered seriously, we need to make our decisions to Indian context.”

அதாவது, “நாம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மிக கவனமாக கேட்டு கொண்டாலும், நம் இந்திய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சனைகளுக்கு இந்திய தீர்வுகள் தான் தேவை.”

இந்திய தீர்வுகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வேர் கொண்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவத்தை புறம்தள்ளி விட்டு நாம் சுகாதாரத்துறையில் தன்னிறைவு அடைய முடியாது...

தமிழர்களை அழிக்க பரப்பப்பட்டதா டெங்கு.. சிந்தியுங்கள் தமிழர்களே...

நமது தண்ணீரை எடுத்து நமக்கே விலைக்கு விற்க வரும் சூயஸை 'பேன்' செய்ய குரல் எழுப்புவோம்...


சிங்களத்தின் பொருளாதாரத்தடையும் எம் மக்களின் ஜாம் போத்தல் விளக்கும்...


இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990இல் மீண்டும் ஆரம்பித்த போது, புலிகளையும் மக்களையும் அடிபணியவைக்கும் நோக்கில், பெரும் பொருளாதாரத்தடையை, எமக்கு எதிராக சிங்களம் விதித்தது.

உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம், வாகனங்கள் அதன் உதிரிப்பாகங்கள், பற்றரிகள் என எதுவும் மிச்சமின்றி தடை செய்தது சிங்கள அரசு.!

இதன் மூலம் மக்களையும், புலிகளையும் அடிபணிய வைக்கமுடியுமென சிங்களம் தப்புக்கணக்கு போட்டது.

ஒரேநாளில் தமிழர் பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியது. பெரும் உணவுத்தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. புலிகளும், மக்களும் இந்த பொருளாதாரத்தடைக்கு அடிபணியாது, இந்தத்தடைக்கு முகம்கொடுக்க ஆயத்தமாகினர்.

தலைவரின் நேரடிப்பணிப்பின் பேரில், பணப்பயிர்களுக்கு தடைவிதித்து, உணவுப்பயிர்களின் உற்பத்தியை விரிவுபடுத்தினர். அதன் மூலம் மக்களின் உணவுத்தேவையை விரைவிலேயே பூர்த்திசெய்து, பட்டினிச்சாவைத் தவிர்த்தனர் புலிகள்.!

இந்த உலகில் பல போர்களை பல, நாடுகள் சந்தித்த போது, பட்டினிச்சாவென்பது அவர்களுக்கு தவிர்க்கமுடியாததாகவே இருந்தது. 30வருடங்களுக்கு மேற்பட்ட எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில், எமது தாயகத்தில் மட்டுமே பட்டினிச்சாவென்பது நிகழவில்லை.

இதற்கு தலைவரின் தீர்க்கதரிசனத்துடன் கூடிய உணவு உற்பத்தியே என்றால், அது மிகையாகாது.

இது போலவே தான், வாகனங்களுக்கான டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணையும், பெட்ரோக்குக்கு பதிலாக மண்ணெண்ணையை பயன்படுத்தி, புலிகளும், மக்களும் வாகனங்களை இயக்கினர்.

சவற்காரத்துக்கு பதிலாக பனம்பழத்தையும், சாம்பலையும் கொண்டே உடைகளைத் துவைத்தனர். அதுபோலவே தான் மின்சாரத்துக்கு, சைக்கிள் டைனமோவைக்கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் கிடைத்த மின்சாரத்தில், தங்கள் வானொலிப்பெட்டியை இயக்கி பாடல்களைக்கேட்டனர்.

ஆரம்பத்தில் தங்கத்துக்கு நிகரான விலையில் மண்ணெண்ணை விற்றபோது, சிக்கன விளக்கு ஒன்றை எம் மக்கள் உருவாக்கினர்.

ஒரு ஜாம் போத்தலினுள் சிறிது பஞ்சைப்போட்டு, அதில் சிறிதளவு (5ML போதும்) எண்ணையை விட்டு, அது பஞ்சில் ஊறியதும், திரி ஒன்றை பஞ்சில் முட்டவைத்து, அதன் மூலம் கடத்தப்படும் எண்ணையில் எரியுமாறு வடிவமைத்து, இந்த விளக்கை எமது மக்கள் எரித்தனர்.

சிறிய தொழில்நுட்பம் என்றபோதும், அன்று அது எமக்கு பெரிய பலனைத் தந்தது. இப்படித்தான் அன்று எம் மக்கள் சிங்களத்தின் பொருளாதாரத்தடைக்கு மத்தியில் வாழ்ந்தார்கள். அல்லது அதை எதிர்கொண்டார்கள்.!

இன்று சில நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டால், தடுமாறிப்போகும் நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். ஆனால், அன்று பலவருடங்களாக மின்சாரம் இல்லாது, அதற்குள் வாழப்பழகி, வாழ்ந்து இந்த போராட்டத்தை தாங்கி நின்றனர் எம் மக்கள்.!

இந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, அதற்கு மாற்று வழிகளை உருவாக்கவைத்து , எமது போராட்டத்தை மாபெரும் சக்தியாக வளர்த்த, தலைவரின் ஆளுமை வியப்புக்குரியது.!

கடைசிவரை எம் மக்களுடன் கூடவே பயணித்த ஒரு விளக்கு. எமது போராட்டத்தின் நம்பிக்கை குறியீடாக அன்று எமக்கிருந்தது இந்த விளக்கு.!

இது இன்னும் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கின்றதோ தெரியவில்லை?

எமது விடுதலைப்போராட்டத்திற்காக எமது மக்கள் உயிர், உடமைகளை மட்டும் இழக்கவில்லை, தங்கள் இளமைக்கால கனவுகளையும் இழந்து தான் போராடினர்.!
அதற்கும் இந்த விளக்கே சாட்சி.!

இந்த படத்தை பார்த்தபோது, இனம் புரியாத ஏக்கம் ஒன்று, மனத்தைச்சுற்றி சூழ்வதை என்னால் தடுக்கமுடியவில்லை.!

நினைவுகளுடன்
-ஈழத்து துரோணர்

ஒற்றுமையை தகர்க்கும் காரணிகள்...


சபரிமலை நடை மூடப்பட்டது. இனி கார்த்திகை மாதம் திறக்கப்படும்...


அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான 19 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றினை ஏற்பது குறித்து இன்று முடிவு...

பாஜக சார்பாக சென்னையில் எம்.எஸ். தோணி...


மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது...


நெத்திலி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்கத்தக்க நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..

பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்துவிடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள்.

இதை முழுமையாக படித்து, இந்த மீனின் அற்புதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இருதய ஆரோக்கியம்...

நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

சரும ஆரோக்கியம்...

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள்...

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

கண் ஆரோக்கியம்...

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எடை குறைவு...

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்

வரலாறு அனைத்தும் இங்கு மாற்றப்பட்டு இருக்கிறது...


நீ இப்போது வரலாறு தற்பெருமை பேசுவது, உன்னை நீயே மடைமாற்றி கொள்கிறாய்..

நமக்கான வரலாறு நம்முன் இருக்கிறது,

ஆனால் அதுவும் இன்னும் சிலகால கட்டத்தில், அரசியல்வாதிகளால் மாற்றியமைக்கப்படலாம்..

அதற்குள் அந்த வரலாற்றை தேடி, அதன் கருத்தியலை அடுத்த தலைமுறைக்கு விதைக்க முயற்சி செய்.....

இந்தியா நோயாளிகளை உற்பத்திச் செய்யும் கூடாரமாக மாறியிருக்கிறது...


வேர்சொல்லாய்வு தமிழின் ஆயுதம்..


தமிழ்நாட்டில் அகழ்வு செய்து கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் பொருட்கள் அனைத்தும் மைசூரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.

அங்கே கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையில் பல ஓலைச் சுவடிகளும், கல்வெட்டுக்களும் உள்ளன..

நடுவண் அல்லது தமிழ் மாநில அரசுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தால் இவை இவ்வாறு அங்கே இருக்காது என்று அங்கலாய் போரும் உண்டு.

ஐயகோ தமிழ்ப் பராம்பரியம் பறிபோகிறதே என்று புலம்புவோரும் உண்டு.

இந்திய நடுவண் அரசின் சதி புரியாதவர்கள் தான் இவ்வாறு புலம்புவார்கள்.

தமிழ் மொழி தான் பழமையானது என்பதை நாம் அனைவரும் அறிகிறோம்.

தமிழ் மொழியோடு சமணத்தின் பிராக்ரிதமும், பௌத்தத்தின் பாழியும், வைதீகத்தின் சமற்கிருதமும் கலந்து உருவான மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு,துளு மற்றும் மலையாளம்.

ஆனால் கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகள் தமிழை விட மூத்தவை என்று நிரூபிக்க இந்தியப் பிராமனீயம் செய்யும் சதிகளுள் ஒன்றுதான் போலி ஆவணம் உருவாக்குவது.

மண்ணில் தோண்டி எடுக்கப்படும் ஆதாரத்தை மட்டும் நம்பு; மரபறிவை நம்பாதே; கிராம நம்பிக்கைகள்,கதைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே என்று ஆங்கிலேயனும் அவன் அடிவருடிகள் விதைத்த நச்சுக் கருத்தியல் தான் நமக்கு மிகப் பெரிய ஆப்புவைத்துள்ளது.

தமிழ்மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் தொல்லியல் பொருட்களை  இந்திய அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் கன்னட மண்ணில்  புதைத்து விடுவார்கள்.

ஒரு பத்து, இருபது வருடங்கள் கழித்து, அங்கே சென்று தோண்டுவார்கள்.

கன்னட மொழியின் தொன்மைக்கு மிகப் பெரிய சான்று கிடைதுவிட்டதென அறிவிப்பார்கள்.

தமிழி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இவை இருந்தன என்றும் கதைகட்டப்படலாம்.

இந்திய அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் துறையை இம்மண்ணில் தொடங்கியவர்கள் ஆங்கிலேயர்களே. மண்ணைத் தோண்டி அதன் மூலம் வரலாறைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுத்தவனே வெள்ளையன் தான்.

அதற்கு முன்புவரை  ஊர்ப் பெரியார்கள்  வாயால் கதை கேட்டுத் தான் நம் பிள்ளைகள் வரலாறு தெரிந்து கொண்டார்கள்.

ஒரு மொழியின் வேர்ச்சொல்லாய்வே அம்மொழியின் தொன்மையை அறியவைக்கும்.

அவ்வாறு சொல்லாய்வு செய்து பார்த்தால் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய மொழிகளின் தாய் தமிழ் மொழிதான்.

செப்புப் பட்டயங்களும், கல்வெட்டுக்களும் நம் முடிவை உறுதிப்படுத்தி கொள்ள மட்டும் பயன்பட்டாலே போதுமானது.

தமிழின எதிரி சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஆயுதம் தான் சொல்லாய்வு.

இதை இத்தலைமுறைக்கு கொடுத்துச் சென்ற பாவாணருக்கே எல்லாப் புகழும் சேரும்...

பாஜக மோடியின் சிபிஐ மோதல்கள்...


இந்துத்துவாவின் இரண்டு தூண்கள் தான் திராவிடம் & தலித்தியம்...


கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்: இது கொஞ்சம் பெரிய விடயம். அதை எளிய வடிவில் கதை போல் விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள் :

தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியன் என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி?

தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.

திராவிடன் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான்.

பின்பு திராவிடன் 'உண்மை தான் தமிழரசா, ஆரியன் சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான்.

அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திராவிடன் ஆரியனுக்கு தான் துணை நிற்கிறான்.


தலித்தியன் என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான்..

'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான்.

இறுதியில் அந்த தலித்தியன் போட்டானே ஒரு போடு....

அடேய் தமிழரசா... நீ தமிழரசனே கிடையாதப்பா...... உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.. எல்லாமே ஆரியனுடையது தான் என்கிறான்.

திராவிடனாவது தமிழரசனின் உடமைகளை ஆரியனுடையது என்று கூறினான்.

ஆனால் தலித்தியன் ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான்.

கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆரியனுடன், திராவிடனும், தலித்தியமும் இருட்டறைக்குள் கை குலுக்கிக் கொண்டு செல்கிறார்கள்...

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர் சரவணனின் மணல் சிற்பம்...


பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்...


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன.

அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே.

இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை..

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து சீர நஞ்சு (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது.

ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த சீர நஞ்சு நல்ல குணமளிக்கும் மருந்து தான். ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து..

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும்.

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும், வாய் திறக்கும், வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து..

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடியே...


உலகின் முதல் மனிதன் தமிழன் - இந்தியாவையே தலைச்சுற்றச் செய்த ஆய்வு History 2...


உலகின் ஆதி மொழி, மூத்த மொழி, முதன்மை மொழி என தமிழ் பல்வேறு நபர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் பேசுபவர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழிக்காரர்களும் மனிதர்கள் ஆதியில் பேசிய மொழி தமிழ் என்றே பெருமைக் கொள்கின்றனர்.

ஆனால் ஒறு சிலர் தமிழின் உண்மையான வரலாறு வெளியில் தெரிந்தால் தங்கள் மொழி பாதிக்கப்படும் என்றும், எப்படி தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்னதாகவே செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை இப்போது வெறும் அறிக்கையாக வாசித்து பிறர் பெற்ற பிள்ளைக்கு தன்பெயர் இடுகிறார்களோ அதுபோல, தமிழின் சிறப்புகளையும், தமிழர்களின் பெருமைகளையும் தங்களுடையது என்று சிலர் கொட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களை அச்சம் கொள்ளவைக்கும் அதிர்ச்சி நிறைந்த தகவல்கள் இந்த கட்டுரையில் உள்ளது. உலகின் முதல் மனிதன் தமிழனாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்ற ஆதாரம் இப்போது கிடைத்துள்ளது. அந்த இடத்தைப்பற்றியும், வரலாற்றைப் பற்றியும் அறிய இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

எங்கே கிடைத்துள்ளன?
ஆதி மனிதன் பேசிய மொழி தமிழ்தான் என்று இதுவரை குத்துமதிப்பாகத்தான் பேசி வந்தோம். ஆனால் இப்போது இந்த ஆதாரம் அவை உண்மையென நிரூபிக்கிறது.

பழங்கால நம்பிக்கை மற்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் வரை நிறைய ஆய்வாளர்கள் கூறிவருவது மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றுள்ளான் என்பதுதான். அதற்கான ஆதாரம் என்பது அங்கு பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள், வேட்டைபொருள்கள்தான். ஆனால் அதைவிட அதிக நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் இந்த கருவிகள் மிகவும் மேம்பட்ட முறையில்பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்தியாவே அதிர்ச்சியடையச் செய்யும் தகவல்தானே.

இது சென்னைக்கு அருகிலுள்ள அதிராம்பாக்கத்தில் கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு பிரம்மாண்டமான வரலாற்று ஆய்வுக்குரிய பகுதியாகும்.

சென்னையிலிருந்து எப்படி செல்வது...

சென்னையிலிருந்து இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது 68கிமீ தூரம் கொண்டது. இங்கு வரலாற்று ஆய்வுகள் நடந்துவருகின்றன.

இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம். இங்கு செல்வதற்கு ஆவடி வழியாகவும், திருவள்ளூர் வழியாகவும் இரண்டு வித வழித்தடங்கள் உள்ளன.

நீண்டநாள் நம்பிக்கை...

மனிதன் முதலில் எங்கு தோன்றினான் என்பது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய கேள்விதான். நான்கு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியதாக ஒரு ஆதாரம் இருந்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆப்ரிக்காவிலிருந்து இருந்து மனிதன் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

கற்காலத்தில் தமிழக பகுதிகள்...

நாம் முன்னர் படித்த வரலாற்றுப்பகுதிகளில் கற்கால தமிழர்கள் என்னவெல்லாம் செய்தார்கள், அவர்களின் பாரம்பரியம் எப்படி என்பது குறித்த நிறைய தகவல்களை படித்தோம். ஆனால் இதையெல்லாம் அரசு பெரிதாக எடுக்கவில்லை. அப்போவே கற்கருவிகள், சாயஆலைகள், உலோகங்களை உருக்கும் ஆலை என நிறைய முன்னேறி இருந்ததை படித்திருக்கிறோம். அதற்கும் மேலாக கிட்டத்தட்ட 3.85 லட்சம் வருடங்களுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்ட ஆயுத கற்கள் தமிழகத்தின் தலைநகருக்கு அருகேயே கிடைத்திருப்பது, இங்கேயே மனிதன் தோன்றியுள்ளான் என்பதையே காட்டுகிறது.

இதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்...

தமிழகத்தில் நிறைய இடங்கள் நிச்சயம் தொல்லியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற நிலையில் தற்போது இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக ஆய்வுகளங்களைப் பற்றி பார்க்கலாம்.

தமிழகத்தின் மிக முக்கிய தொல்லியல் களங்களாக, கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, பூம்புகார், குற்றாலம், தரங்கம்பாடி, கங்கைகொண்ட சோழபுரம், கோவலன் பொட்டல், தேரிருவேலி, கொடுமணல் என என்னற்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வியலை பற்றிய விவரங்களை காண ஆய்வு நடத்தப்பட்ட இடங்களாகும். இவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் தெளிவாகக் காண்போம்.

அருகிலுள்ள காணவேண்டிய இடங்கள்...

அதிரம்பாக்கம் பூண்டி ஏரிக்கு அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இதன் அருகினில் திருவள்ளூர், மாமண்டூர், சுருட்டப்பள்ளி, காரனி, ஊத்துக்கட்டை, திருப்பதி உள்ளிட்ட இடங்கள் காணவேண்டிய தளங்களாகும்.

சுருட்டப்பள்ளி நீர்வீழ்ச்சி...

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சி சென்னை மாநகர மக்களின் வாரவிடுமுறை கால சுற்றுலாத் தளமாக பார்க்கப்படுகிறது.

இங்கு அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது இல்லை. எனவே நிம்மதியான சிறப்பான ஒரு பயணத்தை திட்டமிட்டு இங்கே சென்று புத்துணர்ச்சியாக திரும்பி வரலாம்.

எப்படி செல்வது...

சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண் 51ல் செல்வது சிறப்பானதாகும். மேலும் திருவள்ளூர் வழியாகவும் தேநெஎ 50ஐத் தொடர்ந்து செல்லமுடியும். ஏறக்குறைய 60 கிமீ தொலைவு வரும் இந்த பயணத்தை, இப்படியே முடித்துக்கொள்ளலாமா? அருகிலுள்ள சுருட்டப்பள்ளி கோயிலுக்கும் போய் வரலாமே.

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர்...

சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான கோயில் இந்த சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில் ஆகும். மற்ற சிவ தலங்களில் இருப்பதைப் போல் இல்லாமல், இந்த கோயிலின் சிவபெருமான் பள்ளிகொண்ட வடிவில் இருக்கிறார்.

இந்த கோயிலில், பிரம்மா, விஷ்ணு, சந்திரா, குபேரா, சூர்யா, இந்திரா, கணேசா, கார்த்திகேயா என நிறைய தெய்வங்கள் இருக்கின்றன.

குடியம் கற்கால குகைகள்...

சுருட்டப்பள்ளியிலிருந்து தெற்கே தமிழக எல்லையில் அமைந்துள்ளது இந்த வகை குகைகள். இவை மிகவும் பழமையானது. இதைக் காணும்போது நம் பழமையையும், கற்காலத்தையும் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

பழவேற்காடு ஏரி...

சுருட்டப்பள்ளியிலிருந்து பழவேற்காடு ஏரி 2 மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட காலத்தில் நிறைய நீர் இருக்கும். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இங்கு மகிழ்ந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். மேலும் அருகிலேயே சென்னை மாநகரம் அமைந்துள்ளது.

காளஹஸ்தி...

ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு மாநகராட்சியாகும். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவிலுள்ள முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன.

வெய்யிலிங்கல கோணா’ நீர்வீழ்ச்சி...

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை. தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு' ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு' என்பது பொருள். நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தால் சரும வியாதிகள் குணமாகும் என்று கருதப்படுகிறது. அது தவிர பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் இதற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.

துர்கா கோயில்...

துர்கா கோயில் எனப்படும் இந்த ஆலயம் சக்தியின் வடிவமான துர்க்கையம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடந்தோறும் ஈர்க்கிறது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்காக 800 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. அகலமான படிக்கட்டுகள் மூலமாக இந்த கோயிலுக்கு ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. துர்க்கா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள சன்னதி மற்ற காளஹஸ்தி கோயில்களோடு ஒப்பிடும்போது மிகச்சிறியது என்றாலும் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகளால் மிகவும் விரும்பி தரிசிக்கப்படுகிறது.

பூண்டி ஏரி...

பூண்டி ஏரி சென்னைக்கு நீர் தரும் ஏரியாகும். இது அந்த அளவுக்கு சுற்றுலாத் தளம் இல்லை என்றாலும், சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இடம்தான். திருவள்ளூர் வருபவர்கள் இந்த பூண்டி ஏரிக்கும் சென்று வரலாம். மேலும் அருகில், செல்லியம்மன் கோயில், வைத்ய வீரராகவ சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், மணக்குலவிநாயகர் கோயில், திரௌபதியம்மன் கோயில் என எக்கச்சக்க வழிபாட்டுத் தளங்களும் உள்ளன...