24/10/2018

இது ஆணாதிக்க பதிவாக தெரிந்தால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை..


ஏனெனில் இங்கு ஆணாதிக்கம் என்பதே தவறாகத்தானே வரையறுக்கப்பட்டு இருக்கிறது..

நீங்கள் செயற்கையால் இயற்கையை வெல்ல முடியும் என்ற தைரியத்தில் இயற்கைக்கு எதிரான அனைத்தையும் அனுமதித்து கொண்டிருக்கிறீர்கள்,

நீங்கள் கட்டமைத்த சுயநலம் சூழ்ந்த உலகம், ஒருநாள் உங்களையே சூழ்ந்து கருவறுக்கும்..

அது ஆரம்பித்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்..

உடனே இயற்கையாக வாழ வேண்டுமென்றால் காட்டுக்குள் செல்லுங்கள் என சிலர் முட்டு கொடுக்க வருவார்கள்..

அவர்களுக்கு ஒன்றே ஒன்று கூறுகிறேன்,

வருடத்திற்கு விடுமுறை மாதங்களில் சுற்றுலா என ஏன்..? இயற்கையை தேடி செல்கிறீர்கள்..?

மன அமைதிக்காக தானே செல்கிறீர்கள்,

அந்த மனஅமைதியே வாழ்க்கை முழுவதும் பெறுவதற்கு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முயலுங்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.