04/08/2018

கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த திமுக பிரமுகர் கைது...


என் இனி தமிழ் மக்களே இதுல  ஆச்சர்யபட ஒன்னுமில்ல,

கள்ள என்று எது வந்தாலும் அதில் திமுக சம்பந்தப்பட்டிருக்கும்..

கள்ளத் துப்பாக்கி திமுக...

அட லூசுங்களா..... இதுக்கு ஒன்னும் போடாமயே இருக்கலாம்...




ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா.? ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழாவில் பாரதிதாசன் எதிர்ப்பு...


சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 57வது பிறந்த நாள் விழா 26.8.1963இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. அதில் குன்றக்குடி அடிகளார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். (புகைப்படம் மேலே) அதில் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரை வருமாறு:

அடிகளார் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதன் முதலில் என்னுடைய மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நாம் கூடி இருப்பது நம் சிவஞானம் அவர்களை வாழ்த்துவதற்காக. 'சிவஞானம்' என்று சொல்லும் போது எல்லோருக்கும் சிவ உணர்வு வருவதில்லை. தமிழ் உணர்வு தான் வரும். சிவஞானம் என்று சொன்னவுடன் 'சிலம்புச் செல்வர்' நினைவுதான் வருகிறது.

சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார்.

இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று, இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை.

நம் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால் தமிழை முன் வைத்துத் தொண்டு செய்ய அவர்கள் முயல வில்லை. நம் சிவஞானம் அன்று முதல் இன்று வரை தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காகத் தொண்டு செய்கிறார். அன்று அவர் கிழித்த கோட்டிலிருந்து தவறவில்லை.

இங்கே நாம் இரண்டு காரியங்களுக்காகக் கூடி இருக்கிறோம். ஒன்று நம் சிவஞானம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்த. இரண்டாவதாக. சிவஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்துக்கு நாம் மனமார ஆதரவு தெரிவிக்கவும் கூடி இருக்கிறோம்...

தமிழ்மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப் போகவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால் தமிழுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகப் பெரியது.

மாதர்கள் கூட நூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம் தான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். 75 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் பெரிய கலகமே ஏற்படுகிறது.

சென்னை நகர மக்கள் நாட்டுப்புறத்திற்குப் போனால், அங்குள்ள மக்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். காரணம், நாட்டுப்புற மக்களுக்கு இடை இடையே ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் அவர்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனித்த சிவஞானம் ஆங்கிலத்தை 'வரவிடாதே' என்று சொல்கிறார். ஆங்கிலத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சிலர் "இந்தி, ஆங்கிலம் இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் என்கிறார்கள். சிலர், "இந்தி வர வேண்டாம்" என்று சொல்கிறார்கள். சிலர் "தமிழ் ஆங்கிலம்" என்று சொல்கிறார்கள். மூவர் சொல்வதும் விஷயம் ஒன்று தான். மூன்று கட்சிகள் இருக்கின்றன.

தமிழ் ஆட்சிமொழியாக, பாடமொழியாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதோ பேதப்பட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து சிவஞானத்தை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தீமை நீங்க வேண்டும்...

ஒரு பெரிய கட்சித் தலைவர் "ஆங்கிலமே தாய்மொழியாக இருக்கலாம் என்று சொல்கிறார். நீண்ட நாளாக தமிழ் உணர்ச்சி இல்லாததால் அத்தகைய சோம்பேறித்தனம் வந்து விட்டது.

இன்னொருவர், ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர், "தமிழில் என்ன இருக்கிறது?" என்று கேட்கிறார். இப்படி கேட்கும் துணிவு எங்கிருந்து வந்தது? சென்னையில் நாம் பார்க்கிற இடம் எல்லாம் தமிழில் இல்லை. பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது.

சரி, கோயிலுக்குப் போனால் சிவபெருமான் இருக்கிறார். அவர் நம்ப ஐயா! எவனோ நம்மிடம் காசை வாங்கி ரெக்கமென்டஷன் செய்வதை சமசுகிருதத்தில் செய்கிறான். உன்தாய் மொழி எங்கே போயிற்று? தமிழ்நாட்டில் தமிழ் இல்லையா? தேவாரத்தில் இன்னின்ன வர்ணமெட்டு என்று இருக்கிறதே!

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் "தருமத்தின் பெயரால் நாங்கள் ஒன்றுபட்டு விட்டோம்" என்று அரை அணா கார்டு எழுதினால் போதும். நான் வரவில்லை என்று வடநாட்டான் சொல்லி விடுவான். நம்மிடம் அத்தகைய உணர்வு இல்லை.

இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்குப் பின்னால் நம் ஒற்றுமையை ஏன் காட்டக் கூடாது. சிவஞானம் அவர்களின் கொள்கையைக் கொண்ட இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அவர்களை இங்கே காணோம். மற்ற ஒரு கட்சி வராது. அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.

கட்சிகள் நாட்டு ஒற்றுமையை முன் வைத்து பணியாற்ற வேண்டும். இதற்கு இன்னார் தலைவரா? நாம் இரண்டாம் பட்சமா? என்று நினைத்தால் எங்கே உருப்படுவது? அவர்களுக்கு உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்..."நீண்ட நாள் செல்லாது உங்கள் வாலாட்டம்".

தமிழ்ப்பற்று என்று சொல்லி ஏமாற்றிக் கட்சி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு விட்டோம் என்று தமிழ்ப்பகைவர்களுக்குக் காட்டினால் போதும். 14 மணி நேரத்தில் சரியாகி விடும்.

நமது ம.பொ.சி. நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தியும், அவரது கருத்துக்கு நாம் பேராதரவு தர வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி: செங்கோல் (7.8.63)

குறிப்பு: 1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் உயர்கல்வியில் தமிழ்ப்பயிற்றுமொழி திட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். அப்போது ஆங்கிலத்திற்கு ஆதரவாக பெரியார், முதல்வர் காமராசர் ஆகியோரின் குரல்கள் உயர்ந்தன. இதன் காரணமாக தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனை எதிர்த்து ம.பொ.சி., பாரதிதாசன் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அப்போது பெரியார் "தாய்ப்பால் பைத்தியம்" என்று கிண்டல் செய்தார். பாரதிதாசன் தன்பேச்சின் ஊடே எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்...

செயல்படும் அதிகாரிகளுக்கு பாஜக - அதிமுக அரசின் பரிசு...


ஓட்டு போடுறது மட்டும் மக்களின் கடமை அல்ல.. தவறென்றால் சுட்டிக் காட்டுவதும் தான்...

களவு...



இந்த வார்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா?

களவு என்பது மணமுறை என்கிறது பண்டைய கால இலக்கியங்கள்..

மண முறை என்றாலே நமக்கு தெரியாதே.

ஆனால் மணமுறிவு இந்த வார்த்தையை கேட்டுள்ளீர்கள் தானே..

ஆம் மணமுறை எனபது திருமணம்..

மணமுறிவு என்பது விவாகரத்து...

இப்ப பாருங்கள் பழைய வார்தையை..

களவு என்பதற்கு திருமணம் என்பதாக அர்த்தம் தமிழர்களின் பண்டைய கால கலாச்சாரத்தில் இப்படியான களவு இருந்துள்ளது .

அதாவது திருமணம்.

பூஜை புனஸ்காரங்கள் மந்திரம் நெருப்பு அம்மிமிதித்தல் போன்ற எந்த வகையான சமாச்சாரங்களும் இல்லாத ஆரியர்கள் வருகைக்கு முன்பு உள்ள திருமணம் .

இந்த களவு என்ற வார்த்தைத்தான்
கற்பு என்றாகிறது என்ற கூற்றும் உண்டு.

என்று புலவர் கோவிந்தன்
அவர்களது வாதம்...

களவு
கற்பு
களவாடி...

சிலுவை யுத்தங்கள் - 16...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) - 6...

நூருத்தீன் ஸன்கீயும் சிலுவை யுத்தங்களும்...

உண்மையில் இமாமுத்தீனினது மரணம்,முன்னெடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாமிய சிலுவை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அவர் உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருந்த அதே கொள்கைத் திட்டங்கள்தான் அவரது மகன் நூருத்தீன் ஸன்கீயீன் தலைமையின் கீழ் நடைபெற்ற இஸ்லாமியப் புனிதப்போரின் பொதுத் திட்டமாகவும் இருந்தது.

நூருத்தீன் ஸன்கீ அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதும் சிலுவை வீரா்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அந்த நடவடிக்கைகளில் முக்கியமான சில அம்சங்கள் சுருக்கமாகப் பின்வருமாறு..

1.அன்தாகியாவில் ஆட்சிபுரிந்த சிலுவை வீரத் தலைவரைத் தோற்கடித்ததோடு, அவரின் அதிகாரத்தின் கீழிருந்த அதிகமான நகரங்களையும் கைப்பற்றினார்.

2.ஏற்கனவே, முஸ்லிம் இராச்சியத்துக்குட்படாத சிலுவை வீரத் தலைமை நடத்திய ரஹா ஆட்சியின் கீழிருந்த ஏனைய பகுதிகளையும் சேர்த்துக் கைப்பற்றினார்.

3.அன்தாகியாப் பிரதேசத்தினுள் ஊடுருவி, அதன் தலைவனைக் கைது செய்தார்.அதோடு திரிப்போலித் தலைவரையும் கைது செய்ததோடு தண்டப்பணம் செலுத்திய பின்னரே அவர்களிருவரையும் விடுதலை செய்தார்.

4.சிலுவை வீரா்களின் டமஸ்கஸ் கவர்னரைக் கைது செய்ததோடு அப்பிரதேசத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். இதன் மூலம் வடபகுதியிலும், கிழக்குப் பிரதேசத்திலும் சிலுவை வீரா்களை அடக்க முடிந்தது. சிலுவை வீரா்களை முழுமையாக முற்றுகையிடுவதற்காகத் தென்பகுதியான எகிப்தைக் கைப்பற்றுவதை மிகவும் அவசியமானதொரு காரியமாகக் கருதினார். இக்கட்டத்தில் எகிப்தில் காணப்பட்ட முஸ்லிம் சிற்றரசான பாதிமிய அரசு பலவீனமடைந்து நலிவுற்றிருந்தது. பாதிமியர்களில் ஒரு பகுதியினா் சிலுவை வீரா்களிடமும் மற்றுமொரு பகுதியினர் நூருத்தீனிடமும் உதவி கேட்கும் அளவுக்கு அவ்வரசின் நிலை மோசமாக இருந்தது.

5.எகிப்தைக் கைப்பற்ற நூருத்தீன், ஷேர்கோவினதும் தனது சகோதரா் மகன் ஸலாஹுத்தீனினதும் கூட்டுத்தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார். இவர்களிருவரும் எகிப்தை இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் தெற்கு, கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் சிலுவை வீரா்களை அடக்க முடிந்தது.

சிறந்த கல்விமானாக இருந்த நூருத்தீன் ஸன்கீ ஆலிம்களை ஆதரித்ததோடு தனது ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் கல்லூரிகளையும் மருத்துவ நிலையங்களையும் நிறுவினார்.நீதியின் மேல் விருப்பம் கொண்டிருந்த இவர், "தாருல் அத்ல்" எனும் பெயரில் உயர் நீதிமன்றம் ஒன்றை நிறுவினார்.

நூருத்தீன் ஸன்கீ அலெப்போவினாட்சி  பீடமேறிய சில நாட்களிலேயே எடேஸ்ஸா நகரக் கிறித்துவர்களும் ஆர்மினியர்களும் பிரஞ்சுக்காரா்களின் உதவியோடு அவரது ஆட்சிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி,அந்நகரைக் கோட்டையைக் கைப்பற்றியதோடு அங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும் கொன்றனர். இதனைக் கேள்வியுற்று எடேஸ்ஸாவை நோக்கிப் படை நடாத்திச் சென்ற நூருத்தீன் ஸன்கீ எதிரிகளைக் கடுமையாகத் தோற்கடித்தார்.

இதன் பின்தான் இரண்டாவது சிலுவை யுத்தம் ஆரம்பித்தது அதனை அடுத்தப் பதிவில் காண்போம்.

- தொடரும்.....

பண்டைய வரலாற்றில் குதிரைகளும்.. ராவுத்தர்களும்...


இரண்டாவது பாகம்...

குதிரைகள் பற்றிய தொகுப்பில் உள்ள ஒரு விஷயம் தான் அரபுநாட்டு குதிரைகளுக்கு தனி மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது

சேர சோழன் பாண்டிய மன்னர்கள் அல்லாது தஜிகிஸ்தான் கஜகஸ்தான் போன்ற அரசர்களும் பாரசீக நாட்டு அரசர்களும் இந்த வியாபாரத்தில் இருந்துள்ளனர். .

குதிரை வணிகம் பெரிதாக நடந்தது தமிழகத்தில் தான்..

பாரசீகத்தில் இருந்து குதிரைகளை விலைக்கு அனுப்பும் சுல்தான் குலி என்ற பாரசீகர்  கி பி 1518 ல் நமது அரசர்களை நேரில் சந்தித்து பேச வந்துள்ளார் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்பு உள்ளது.

குதிரை வணிகம் பெரிகியதால்
தமிழக அரசர்கள் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் மூன்று புதிய திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்ற வரலாறும் உண்டு.

குதிரை வரி
குதிரை பந்தி
குதிரை காணிக்கை என்று மூன்று விதமான வருவாய் இனங்கள். ஏற்படுத்தப்பட்டது...

இந்த குதிரைகளை படைக்கு தயாராகிக் கொடுப்பவர்கள் தான்
ராவுத்தர்கள்..

ராவுத்தர் என்ற பெயர் ஒரு அன்னியப் பெயர் போலவும் ராவுத்தர்கள் ஒரு அன்னியர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் ராவுத்தர் என்ற வார்தை சங்க கால இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது.

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் குதிரை வணிகர்கள் வேடத்தில் வந்த
கடவுளை போற்ற..

இன்னைறி மன்னர் மன்னர்
இனிமை கர்த்து ராவுத்தருக்கு.

என குதிரையை வைத்து இருந்தார் என்பதற்கு ராவுத்தர் என்று குறிப்பிடுகிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டு இலக்கியமான கலிவெண்பாவில்
கந்தர் அலங்காரத்திலும் அருணகிரிநாதர் முருகனை போற்ற..

சூர்க்கொன்ற ராவுத்தனே
மாமயிலேறும்  ராவுத்தனே
என்று பாடினார்..

இதிலிருந்தே தெரிகிறது ராவுத்தர் என்றால் மிகவும் கண்ணியமான
சொல் என்று...

ராவுத்தர் என்றால் என்னசொல் இது குறித்து முடிவுக்கு வரமுடியாத நிலையே உள்ளது.

பாரசீக மொழியில் ராபித்தூ என்றால் எதிரியை எதிர்க காத்துக்கொண்டு இருப்பவன் என்று பொருள்.

பிரச்சனை என்னவென்றால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் உள்ளது.

இம்மாடி ராவுத்தராயண்
ராகுத்த சிங்கப்பராயன்
பர்வத ராகுத்தன்.

ராஜ ராஜ சோழன் சோழனது விருதுகளில்  ராகுத்தமிண்டன்
என்ற பெயரில் ஒரு விருதும் உள்ளது என்ற வரலாறும் உண்டு.

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம்  கல்வெட்டில்  கி.பி 1500 களில் சிங்கய ராவுத்தன் தங்கல் கிராமமும் அருகே காமாட்சி ராவுத்தன் தங்கல் என்ற பெயரில் கிராமம் இருந்ததாக பதியப்பட்டுள்ளது.

மதுரை சொக்கேசர் ஆலயத்தில் பாதுகாப்பு பணி செய்தவர் திம்மு ராவுத்தர் என்ற பெயருடையவர்.

அதெல்லாம் சரி ராவுத்தர் என்றால் யார் தான் என்ற இறுதி கேள்விக்கு தெளிவான பதில். .

தமிழகத்தில் வாழ்ந்து இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ..
ஆம் இசுலாமியர்கள் தான். .

அதெப்படி ஒரு முஸ்லிம் கோவிலுக்கு பாதுகாப்பு பணி செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் இதோ

தண்டமிழ்க் கச்சி வளம்பதி வாழும் சதுரன் தீண்டரும் கீர்த்தி மிக்க சுவப்பையன் திம்மு ராவுத்தனே என்று புகழ்ந்து கூறியுள்ளது (மதுரை திருப்பணி மாலை )

ராவுத்தர் என்றால் இசுலாமியன் என்று ஒதுக்கிய நமக்கு பிரபந்த திரட்டு பாடல் எண்  362 இல்

தமிழகத்தின் மூத்த குடிகள் பட்டியலில் ராவுத்தர்களையும் சேர்ந்தே கூறியுள்ளது.

ராவுத்தராயன் என்ற பெயர் வரலாற்றில்  சில இடங்களில் வருகிறது.

அதேப்போன்று ராவுத்த கர்ததன் எனவும் வருகிறது.

குதிரைக்கு பயிற்சி கொடுத்த ராவுத்தர்கள்... அரசனின் படையிலும் போர் வீரணாக பங்கெடுத்துள்ளனர்.

ராவுத்த கர்தன் என்பது போர்படை தளபதிகளுக்கு தருகிற பெயர்.

பாண்டிய மன்னன் படையில் உள்ள முஸ்லீமுகளுக்கு ராவுத்த கர்தன் என்ற பெயர் ஏற்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குதிரைக்காக ராவுத்தர் கொக்காக பறந்தார் என்ற பழமொழி உள்ளது எத்த அளவிற்கு ராவுத்தருக்கும் குதிரைக்கும் தொடர்பு இருக்கிறது என்ற  உண்மை தெரியவருகிறது. .

அந்த பூர்வீகம் தான் எதற்கும் குதிரையை வைத்து கொண்டாடும் அம்மக்கள்.

திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை குதிரையில் வைத்து கொண்டுவருகின்றனர். ..

இப்போது குதிரை வாணிபம் செய்வதில்லை ஆனாலும் பல ஆண்டு பழக்கம் காரணமாக வாடகைக்கு குதிரைகளை எடுத்து திருமணத்தின் போதுமட்டும் ஊர்வலம் வருகின்றனர் அம்மக்கள்...

சிலுவை யுத்தங்கள் − 15...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) −5...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்
சகோதரர்களே என்னால் சில வாரங்களாக வேலை பளுவின் காரணமாக இந்தப் பதிவை சரிவர போட இயலவில்லை சிரமத்திற்கு வருந்துகிறேன்.. இந்தப் பதிவை அப்படியே படிக்க தொடங்கினால் ஒன்றுமே புரியாது என்னுடைய முந்தைய பதிவுகளோடு இணைத்துப் படித்தால் மட்டுமே முடியும் அதை கவனத்தில் வையுங்கள்..

சிலுவைப் போா்களில் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையைத் தான் நாம் பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி....

ஹி−511−ம் ஆண்டு (கி.பி.1118 ஏப்ரல்) ஸல்ஜூக்கிய சுல்தான் முஹம்மத் மரணமானார்.அதற்கடுத்ததாக அதேயாண்டு (கி.பி.1118 ஆகஸ்ட்) மத்திய அரசின் தலைவர் அப்பாஸிய கலீபா அல் முஸ்தன்ஸிரும் மரணமானார்.

எனவே,இப்பின்டைவிலிருந்து முஸ்லிம் உலகு விடுபட்டுத் தலை நிமிர வேண்டுமாயின், முஸ்லிம் கிழக்குப் பிரதேசத்தில் அத்துமீறிப் புகுந்து ஆட்சி நடத்தும் சிலுவை வீரா்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான உறுதியும் துணிவுமுள்ள ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டி ஒரு வழி மட்டுமே இருந்தது. இத்தேவை மோசுல் பிரதேசத்தில் வாழ்ந்த ஸன்கீ வம்சத்தினரின் தோற்றத்தினால் நிறைவேறலானது.

இஸ்லாமிய மத்திய அரசின் தலைவரான கலீபா அல் முஸ்தன்ஸிரின் மரணத்திற்குப் பின்,அவரது மகன் அபூ மன்ஸுர் அல்பரல் என்பவர், "அல்முஸ்தர்ஷித் பில்லாஹ்"எனும் பெயரில் புதிய அப்பாஸிய கலீபாவாகத் தேர்வு செய்யப்பட்டார்.இவர் ஆட்சிப் பீடமேறியபோது,சுல்தான் முஹம்மதின் மகன் மஹ்மூத் என்பவர் ஸல்ஜூக்கிய அரசின் சுல்தானாக இருந்தார்.

சுல்தான் மஹ்மூதின் காலத்தில்தான் சிலுவை வீரர்களை எதிர்த்துப் போராடி, இழந்த பகுதிகளை மீட்டெடுக்கக்கூடிய வலிமையுள்ள வீரா் ஒருவர் முஸ்லிம்களிடையே தோன்றினார். அவர்தான் இமாமுத்தீன் ஸன்கீ என்பவர்.

இவர் ஸல்ஜூக்கிய சுல்தான் மலிஷாஹ்வின் துருக்கிய அடிமையும் தளபதியுமான 'ஆத்ஸங்கர்' என்பவரின் புதல்வர் சுல்தான் பா்க்யாருக்கின் காலத்தில் ஆத்ஸங்கர் சிரியாவின் ஸல்ஜூக்கிய கவர்னர் 'தனஷ் அர்ஸலானுக்கு' எதிராக நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார்.சுல்தான் பர்க்யாரூக், அவர் செய்த தொண்டுகளுக்கு நன்றிசெலுத்தும் முகமாக அவரது மகன் இமாமுத்தீனுக்கு இளவரசருக்குரிய கல்வியையும் பயிற்சிகளையும் அளித்தார்.

இதனால் இமாமுத்தீன் ஸன்கீயினால் மோசுல், ஹலப், ஹிம்மஸ், ஹுமாத், பஃலபக் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு பலமான அரசை உருவாக்க முடிந்தது. இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இத்தலைவருக்கு சிலுவையுத்த வரலாற்றில் முக்கிய பதிவுள்ளது. முதலாவது சிலுவையுத்த வெற்றியைத் தொடர்ந்து சிரியாப் பிரதேசத்தில் சிலுவை வீரா்களால் உருவாக்கப்பட்ட 'ரஹா' ஆட்சியை வீழ்த்திய பெருமை இவரையே சாரும்.ஒவ்வொரு பிரதேசமாகக் கைப்பற்றி வந்து, கி.பி.1114−இல் சிலுவை வீரர்களது 'ரஹா' ஆட்சியை முற்றாக வீழ்த்தினார்.

தனது சாணக்கியத்தினால் கிறித்துவர்கள்,ரோமர்கள்,சிலுவை வீரர்கள்,ஏனைய எதிரிகள் அனைவரையும் அடக்கி வெற்றி வாகை சூடி வந்த தளபதி இமாமுத்தீன் ஸன்கீ,ஹி−541(கி.பி.1146) ஆம் ஆண்டு எதிரிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்ட அவரது அடிமை ஒருவனால் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

இமாமுத்தீன் ஸன்கீ இறையடி சேரந்ததும் அவரது மூத்த மகன் ஸைபுத்தீன் காழி என்பவர் மோசுலுக்கும் அடுத்த மகன் நூருத்தீன் மஹ்மூத் அலெப்போவுக்கும் தலைவராகினர். பிற்காலத்தில் நூருத்தின் மஹ்மூத் என்பவர் நூருத்தீன் ஸன்கீ எனப் பிரபல்யமானார்...

அடுத்தப் பதிவில் நூருத்தீன் ஸன்கீயுடனான சிலுவை யுத்தங்களைப் பார்ப்போம்.

- தொடரும்.....

தமிழக பண்டைய வரலாற்றில் குதிரைகளும்.. ராவுத்தர்களும்...


ஒரு இனத்தின் வரலாறு...

இந்த கட்டுரை எழுதக்காரணம்
ஒற்றுமையே...

மற்றும் பல விஷயங்களை நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருத்தல் நல்லது என்ற நிலையில் தற்சமயம் இருப்பதால் இந்த வரலாறு,

குதிரைக்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்?

ராவுத்தர்களுக்கும் பாரசீக த்திற்கும் என்ன சம்பந்தம்..

இசுலாமியர்களுக்கும் தமிழக மன்னர்களுக்கும் என்ன சம்பந்தம்.

ஒற்றுமைக்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்பந்தம்..

இப்படி பல கேள்விகளுக்கு பதில்
இந்த கட்டுரை..

இரண்டு தொகுப்பாக வரும் இவற்றை படித்துவிட்டு பகிர்வது சிறப்பு..

நாம் இன்றைய சூழலில்  குதிரைகளை காண்பது அரிது..

ஆனால் ஒரு காலகட்டத்தில் குதிரைகள் தான் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது என்பது நம்ப முடியாத உண்மை.

இன்றைய ஆயுதக்கிடங்கை நம்பி அமெரிக்காவும்..

எரிபொருளை நம்பி மத்தியக்கிழக்கு நாடுகளும் இருப்பது போல..

பல்லவர்கள் தங்கள் ஆட்சியை குதிரையை மட்டும் நம்பி இருத்துள்ளனர்..

தமிழ் அரசன்களின் எந்தப்படையிலும் குதிரைப்படை இருந்துள்ளது.

அதேபோன்று அறுபத்து நான்கு கலைகளின் குதிரை ஏற்றம் ஒரு முக்கிய கலை.

போரில் குதிரைப்படையை நிற்வகிக்க தனியாக ஒரு துறையை வைத்துள்ளனர் நமது மூதாதையர்கள் என்கிறது வெண்பாமாலை.

சோழப்பேரரசு பெருக்கத்திற்க்கு குதிரைப்படைகள் மட்டுமே உதவியது என்று கலிக்கந்துபரணி கூறுகிறது. .

இதில் ஒரு சந்தேகம் ஏற்படலாம்
அது என்ன யானைப்படை எல்லாம் இருக்கும் போது குதிரைப்படையை மட்டும் கூறவேண்டும்.

ஆம் யானைப்படையை விட குதிரைப்படைகள் மிகவும் முக்கியமானது.

தமிழக அரசர்களின் குதிரைகள் பெரும்பாலும் பாரசீகம் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

வேறு நாட்டு உடல்வாகு உள்ள குதிரைகள் இங்குள்ள தட்பவெப்ப நிலையோடு ஒட்டிக்கொள்ளும்

பல நாட்கள் பயணம் செய்த அனுபவம் உள்ள குதிரைகள் நாடுபிடிக்க பக்கத்திலே உள்ள நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும்..

இப்படியாக பெரும் செல்வாக்கு உடையது குதிரைகள் .

பாண்டிய மன்னன் காலத்தில் ஆண்டுக்கு பதினாயிரம் குதிரைகள் பாரசீகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று வரலாற்று குறிப்பு உள்ளது.

காயல்பட்டினம் மற்றும் தேவிப்பட்டிணம் துறைகளில் கரை இரக்கப்பட்டு அங்கிருந்து நெல்லை மதுரை என்று பிரித்து அனுப்பபட்டது.

அப்படி அழைத்துச்செல்லும் வழியை குதிரைவழிக்காடு என்றும்
குதிரைவழிக்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. .

சில ஊர்களில் உள்ள கிராமங்களில் இப்படியான பெயர் இருக்குமானால் அது அந்தக்கால குதிரை ஓட்டிப்போன தடம் என அறிந்துக்கொள்ளுங்கள்.

பாரசீக நாட்டு குதிரைகள் பரி என்றும் துருக்கி நாட்டு குதிரைகள் துரகம் என்றும் மத்திய ஆசியா குரஸான் பகுதி குதிரைகள் கோரம் என்றும் வழங்கப்பட்டது..

சரி மூன்று மாபெரும் மன்னர்கள் சேரன் சோழன் பாண்டியன் அரசர்கள் தங்களது வாகனமாக எந்த குதிரையை வைத்திருந்தனர் என்று பார்போம்

சேரன் மன்னர் குதிரைக்கு
பாடலம்
சோழ மன்னர் குதிரைக்கு
கோரகம்
பாண்டிய மன்னன் குதிரைக்கு

கனவட்டம் என்றும் பெயர்.

FAR என்ற பாரசீக வார்தைக்கு குதிரை என்று அர்த்தமாம்
பஃர் என்ற வார்தையில் இருந்து பரி என்று வார்தை உருவாகியது

சேணம், லகான், சவுக்கு, சவாரி, என்ற குதிரைகள் சம்பந்தமான வார்த்தைகள் பாரசீகத்தில் இருந்து தமிழுக்கு வந்தவைதான்.

குதிரைகள் சம்பந்தமாக பார்த்தாகிவிட்டது குதிரைகளை பயிற்றுநர்களை பற்றி நாம் பேசவேண்டுமே கண்டிப்பாக
பேசவேண்டும்.

ராவுத்தர்கள் என்றால் யார்?
ராவுத்தராயர்கள் என்றால் யார்?
குதிரை வாணிபத்தால் பாரசீக வியாபாரி நமது பாண்டிய மன்னனை
சந்திக்க வருதல்.

சங்க காலத்தில் ராவுத்தர்கள் பற்றிய செய்திகள். இப்படி எல்லாவற்றையும் அடுத்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்..

பேசுவோம்...

சிலுவை யுத்தங்கள் − 14...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) − 4...

முதலாம் சிலுவைப் போர்களின் தொகுப்பை நாம் கடந்த பதிவுகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.அதன் வரிசையாக இதைக் காணுவோம்...

கி.பி.1101−ஆம் ஆண்டு மே மாதம் 2−ம் திகதி ஸீஸேரியா நகரம் சிலுவை வீரா்களால் முற்றுகையிடப்பட்டது. இரண்டு வாரங்களில் அவர்கள் அந்நகரத்தைக் கொள்ளையடித்துத் தமது வழமையான மிருகக் குணத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் செய்த பாதகங்களின் பயங்கரத்தைக் கண்டு அவர்களின் தளபதிகள் கூட அதிர்ச்சியுற்றனா். அந்நகரத்தின் பெரிய பள்ளிவாயிலொன்றில் மிகக் கொடூரமாக முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டனா். "கருணையை எதிர்பார்த்து அப்பள்ளிவாயினுள் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பள்ளிவாயிலின் தரை குருதிக் குளமாக மாறும் வரை படுகொலை செய்யப்பட்டனா்" என்று சிலுவை வரலாற்றாசிரியர் ஸ்டீவன் ரன்ஸிமேன் (Steven Ransimon) குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.

இந்த வெற்றிகளின் பின்னர் பாதிமிய்ய ஆட்சியாளர்கள் பலஸ்தீனை மீட்டெடுக்கும் முயற்சியில் பல தடவைகள் ஈடுபட்டனர். என்றாலும், அவர்களின் முயற்சிகள் யாவும் சிலுவை வீரா்களால் இலகுவாக முறியடிக்கப்பட்டன.

அத்தோடு ஜப்பா, ஹைபா, திரிப்பொலி,
சிடோன் போன்ற பிரதேசங்களையும் சிலுவை வீரா்கள் கைப்பற்றினா்.

சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தின் விளைவாக சிரியாவின் கரையோரப் பிரதேசத்திலுள்ள இரண்டு நகரங்களைத் தவிர, ஏனைய நகரங்கள் அனைத்தும் சிலுவை வீரா்களால் கைப்பற்றப்பட்டன.

முதலாவது சிலுவைப் போருக்கும் இரண்டாவது சிலுவைப் போருக்கும் இடையிலான காலப்பகுதி...

முஸ்லிம்களிடையே காணப்பட்ட பிரிவுமனப்பான்மையும் ஒற்றுமையின்மையும் உள்நாட்டுப் பிரச்சினைகளுமே முதலாவது சிலுவைப்போரில் ஏற்பட்ட தோல்விக்கான முக்கிய காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

அப்பாஸிய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஸல்ஜூக்கியர் முஸ்லிம் ஆட்சியின் பிற்பட்ட ஆட்சியாளர்கள் நிலமானிய முறையின் கீழ் இராஜ்ஜியத்தைக் கூறுபோட ஆரம்பித்ததும் அவர்களின் பலம் குன்றத் தொடங்கியது.

ஸல்ஜூக்கிய சுல்தான் மலிக் ஷாஹ்விஷ் மரணத்தைத் தொடர்ந்து அவ்வரசு சிதைவுறத் தொடங்கிற்று. உள்வீட்டுப் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து அரசு நலிவுறலாயிற்று. முதலில் மலிக் ஷாஹ்வின் மனைவி துர்க்கான் சாத்தானுக்கும்,மலிக் ஷாஹ்வின் புதல்வன் பா்க்யாரூக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் பர்க்யாரூக்கும் அவரது சிறிய தந்தைக்குமிடையில் குழப்பம் ஏற்ப்பட்டது. பின்னர் பர்க்யாரூக்கும் அவரது சகோதரான ஹா்ரான் பிரதேச ஆளுனர் முஹம்மதுக்கும் இடையில் ஏற்பட்ட பதவிப் போராட்டம் ஸல்ஜூக்கிய அரசில் அமைதி ஏற்பட சந்தர்ப்பமே இல்லாமலாக்கியது.

இவ்வாறு முஸ்லிம் அரசியலில் காணப்பட்ட குறுநில ஆட்சி முறையும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதீகாரப் போட்டிகளும் முஸ்லிம்கள் தமது மேற்குப் பிரதேசங்களுள் சில பகுதிகளை சிலுவை வீரர்களிடம் பறிகொடுக்க வழிவகுத்தன.

- தொடரும்.....

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா...


1940ஆம் ஆண்டு தந்தை பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை. பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம். "தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது 'மனக்கசப்போடு' தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்" (சி.என்.ஏ.பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)

அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: "இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு....
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க".

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்னை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் 'நாடார்குல மித்திரன்' இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.
வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: 'உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்' என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார். இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.

9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு:

"எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை" . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.

திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது...

தமிழர்களுக்காக போராடியதாக சொல்லிக் கொள்ளும் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...

கரோல் ஏ.டெர்ரிங் கப்பல் உண்மைகள்...


தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்... கடுக்காய் தான் அது...


அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள்...

பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்

என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர..

காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்

எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்.

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி

என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம்.

அதே போல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய்...

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்...

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள்...

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.

எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

சிலை கடத்தல் - கிரிஜா வைத்தியநாதன்...


தமிழருக்கு மட்டுமா சாதி பிரச்சனை ?


தமிழர்களுக்கு சாதி இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருப்பது ஏனென்றால்...

மற்ற மொழிக்காரர்களுக்கு அவர்கள் இனவரலாறே சிறிதாக இருக்கும் போது, அதை விட நீளமான வரலாறு இங்கே ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் இருக்கிறது..

தமிழின் பழமையோடு ஒப்பிடும் போது தூண் முன் துரும்பாகத் தெரியும் சாதியப் பழமையை தூக்கிப் போடுங்கள்.

அப்போது தான் தனிநாடு பெற்று ஆராய்ச்சிகள் செய்து தமிழின் பழமையை நிறவ முடியும்...

சரியை, கிரியை, யோகம், ஞானம்...


சரியை : உருவத்திருமேனியை வழிபடுதல்.

கோவில் கட்டி, விக்ரகம் அமைத்து, உழவாரப்பணி செய்து, விழா எடுத்து இறைவனை வேண்டி அருள் பெறுதல்.

தாஸமார்க்கம் என்றும் சொல்வார்கள்.

எஜமானனிடம் வேலைக்காரன் வணங்கி
நின்று தயவு பெறுவது போல. இறைவனை தலைவனாக கொண்டு அடிமையாய் தொண்டு செய்தல்.

கிரியை : அருவத்திருமேனியை வழிபடுதல்.

கடவுளை லிங்கங்களிலும், பிம்பங்களிலும், கும்பங்களிலும் கண்டு நித்திய பூஜை வழிபாடுகளை 16 வகை உபசாரங்களுடன் செய்து அருள் பெறுதல்.

ஸத்புத்திர மார்க்கம் என்றும் சொல்வார்கள்.

தந்தையிடம் மகன் உரிமையோடு தொட்டு பேசி பழகி அருள் பெறுதல் போன்று.

இறைவனை தந்தையாக கொண்டு
உரிமையோடு தொண்டு செய்தல்.

யோகம் : அருவுருவத்திருமேனியை வழிபடுதல்.

மூல குண்டலினியை எழுப்பி புருவ மத்தியில் சுடராக கொழுந்து விட்டெரிய உருகிய அமிர்தத்தினை உண்டு மகிழ்ந்து, வேண்டுவன பெறுதலாம்.

ஸஹமார்க்கம் என்றும் சொல்வார்கள்.

தோழனாக உரிமை பாராட்டி மிக நெருங்கி பழகி அருள் பெறுதல். இறைவனை தோழனாக உரிமை பாராட்டி
தொண்டு செய்தல்.

ஞானம் : உருவ, அருவ, அருவுருவ மேனிகளை கடந்து நிற்கும் அகண்டாகார ஜோதிமயமான கடவுளை நோக்கிச் செய்யும் வழிபாடு.

அறிவை மட்டும் கொண்டு செய்வது.
ஸன்மார்க்கம் என்றும் சொல்வார்கள்.

கணவன் - மனைவி உறவு போல, உடல் வேறானாலும் உயிர் ஒன்றாய் நின்று இன்பத்தை துய்ப்பது போல், இறைவனும் தானும் ஒன்றேயாகி, தன்னுள்ளே
உலகமும், உலகத்துள்ளே தானுமாகி, இறையறுள் பெறுதலாம்.

இறைவனை தலைவனாக பாவித்து
போற்றி தொண்டு செய்தல்...

ஸ்டெர்லைட் கொலைகளும் உண்மைகளும்...


பூசணி அதிசயத்தின் உச்சம்...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்..

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.

பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும்.

எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

இலுமினாட்டி ராக்கெர் பெல்லரும் சாகர்மாலா திட்டமும்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.

ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன.

தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான் என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

பாஜக விற்கு விலை போன தமிழக ஊடகங்கள்...


அரசு ஊழியர்களை மரியாதைக் குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது - பாமக டாக்டர் ராமதாஸ் கண்டனம்...


ஆசிரியர்கள் அரசு ஊரியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்...

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது; அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சேலத்தில் நேற்று முன்நாள் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

''அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்'' என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கும் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல. அரசு ஊழியர்கள் முதலமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இப்போது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதையாவது முறையாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய மறுப்பதும் எந்த வகையில் நியாயம்? முதல்வரின் கருத்துகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அம்சமாகும். அதனால் 8&ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்குகின்றனர். ஒருவகையில் பார்த்தால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க இது தேவையாகும். இதை முதலமைச்சர் விமர்சிப்பது எந்த வகையில் சரியாகும்? ஒருவேளை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று முதல்வர் நினைத்தால், அந்த நிலையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் அவர்களின் கடமையை ஒழுங்காக செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைக் கொண்டு வரலாம். ஆனால், அதை செய்ய மறுப்பது ஏன்?

மாநில அரசின் மொத்த வரி வருமானத்தில் 61% அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவு ஆவதாக முதல்வர் கூறியிருக்கிறார்.   உண்மை தான். இந்த நிலைக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசின் செலவுகள் அதிகரிக்கும் போது, அதற்கேற்ற வகையில் அரசின் வருமானத்தையும் மக்களை பாதிக்காத வகையில் அதிகரிக்க வேண்டும். மக்களை பாதிக்காதவாறு அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு யோசனைகளை பா.ம.க. அரசுக்கு வழங்கியுள்ளது. அதை செய்யாதது அரசின் தவறு. இதற்காக அரசு ஊழியர்களை விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்...

இயற்கை விவசாயி...


திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்...


தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்..

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி..
திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது..

பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல்,
வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது..

தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள, உணர்ச்சியும் ஆற்றலும்
திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

திரவிடம் முக்கால் ஆரியமாதலால்,
அதனொடு தமிழையும் இணைப்பின்,
அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும்
சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

தமிழ் வேறு திரவிடம் வேறு என்பதுடன்
ஆரியமும்திராவிடமும் ஒன்றேயென அறிக.

நடந்தது பிராமணர் ஆட்சி,
நடப்பது திரவிடர் ஆட்சி,
நடக்கவேண்டியது தமிழர் ஆட்சி.

- பாவணர்...

பத்திரிக்கையாளர் - பாஜக மோடி சந்திப்பு...


ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறை...


மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம்.

அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும்..

மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும் உயய நோக்கங்கள் கொண்டவை.

எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;
கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;
கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பே;
மூண்டெயும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்;
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;
செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;
இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே;

''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்
கனிந்த கனியாகச் செய்யலாம்;
கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்
கரடி, புலி, சிங்கம் முதலா
வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்;
மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை
மேவு தேர் வடமாக்கலாம்;"

இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும்.

இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களில் கூறியுள்ளனர்...

வங்கி என்பது ஒரு ஏமாற்று நிறுவனம்...


சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணிகடை ஊழியர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் 4 பேர் கைது...


யுவராஜ் உள்பட 11பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு; தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்...

கிராமசபை குறித்து மக்கள் பாதையின் வழிகாட்டுதல்...


எஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகள்: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்ய வழிவகுக்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில், தலித் அமைப்புகள் சார்பில் வரும் 9-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
முன்னதாக, தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இத்தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, இதர தரப்பினருக்கு உத்தரவிட்டனர்.

கூட்டணி கட்சி நெருக்கடி: இதனிடையே, எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த ஏ.கே.கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு தலித், பழங்குடியின அமைப்புகள் மட்டுமன்றி, பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறியடிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டு வருவதுடன், ஏ.கே.கோயலையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இல்லையெனில், வரும் 9-ஆம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம்' என்று லோக் ஜனசக்தி கட்சி எச்சரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தலித் எம்.பி.க்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.

ஒப்புதல்: இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரவேற்பு: இதுதொடர்பாக லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது...

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கடுமையான அம்சங்களுடன் கூடிய புதிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா, வரலாற்றுசிறப்பு மிக்கதாகும். இதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, வரும் 9-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டங்கள் கொண்டாட்டங்களாக மாறும். தேவைப்பட்டால் எஸ்சி, எஸ்டி சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்றார் பாஸ்வான்.

எனினும், முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தலித் அமைப்புகள் சார்பில் உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நெருங்கும் தேர்தல்கள்: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுபோன்ற சூழலில் தலித், பழங்குடியின மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என்று பாஜகவினர் நம்புகின்றனர்...

விழித்துக்கொள் தமிழினமே...


சாத்தியமில்லை என்று ஒரு இடத்தில் முடங்கிப்போவதை விட, அதற்கான முயற்சிகளை எடுப்போம்...


தோற்றாலும் அதற்கான காரணத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்..

நாம் ஒன்றும் உடனடி தீர்வுக்கு இங்கு வரவில்லை..

அப்படி நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த முட்டாள்களாக இருப்பார்கள்...

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை...

காவிரி நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஆற்றுநீர் கடலில் கலப்பதை “வீணாகக் கலக்கிறது” என்று முடிவு செய்வது ஒரு மூடத்தனம்! ஆற்று நீர் ஆண்டுதோறும் கடலில் கலந்தால்தான், கடல் உப்பு நீர் நிலத்தடியில் மேலும் மேலும் முன்னேறி உட்புகாமல் தடுக்கும்!

காவிரிச் சமவெளியில் கடல் உப்பு நீர் மேலும் மேலும் ஏறி வருகிறது. நிலத்தடி நீர் பாசனத்திற்கும் குடிக்கவும் பயன்படாமல் மாறிப் போகிறது. காரணம், ஐந்தாண்டு அல்லது எட்டாண்டுக்கு ஒருமுறைதான் மேட்டூர் அணை நிரம்பி காவிரி நீர் சிறிதளவு கடலுக்குப் போகிறது.

அடுத்து, உலகெங்கும் ஆற்று நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டால், கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகி மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்; கடல் நீர் ஆவியாகி மேகமாகும் அளவும் குறைந்து, நிலக் கோளத்தில் மழைப் பொழிவு குறையும்! அதனால் வரும் பாதிப்புகள் பல!

கடலோரத்தில் ஆற்று நீர் கலக்கும் இடத்திற்கும் ஆழ்கடலுக்கும் இடையே அச்சூழலுக்கேற்ப ஒருவகை மீன்கள் உற்பத்தியாகும். ஆற்று நீர் கடலில் கலக்க வில்லையென்றால், அந்த மீன்வளம் அழியும்.

கேரளத்தில் ஓர் ஆண்டில் 2,000 ஆ.மி.க. (1 ஆ.மி.க. - 100 கோடி கன அடி) ஆற்று நீர் - அரபிக் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் ஓர் ஆண்டில் 1,000 ஆ.மி.க. நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கோதாவரி ஆற்று நீர் மட்டும் ஓர் ஆண்டில், 2,000 முதல் 3,000 ஆ.மி.க. வரை வங்கக் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு, தென்பெண்ணை ஆறுகளின் நீர் கடலில் கலப்பதில்லை. எப்போதாவது பெரும் புயல் ஏற்பட்டால் உலக அதிசயமாக அவற்றின் நீர் கடலில் கலக்கும்! வைகை ஆறு கடலில் போய்ச் சேர வழியே இல்லை. தாமிரபரணி, பெரும்பாலும் கடலில் கலப்ப தில்லை.

காவிரி ஆற்றிலிருந்து தவிர்க்க முடியாமல் தப்பிச் செல்லும் நீர் ஆண்டுச் சராசரியாக 10 ஆ.மி.க.தான் எனக் காவிரித் தீர்ப்பாயம் கணித்துள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் தவிக்கும் தமிழ்நாடு, காவிரி ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் தடுப்பணைகள் (அதன் உயரம் சற்றொப்ப 6 அடி அளவில்) கட்டி, தண்ணீரை அங்கங்கே தேக்கி நிறுத்தலாம். இதனால் அதன் அருகே உள்ள கிளை வாய்க்கால்களில் முழு அளவில் தண்ணீரைத் திருப்பி விட முடியும். அத்துடன் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஊற்று அதிகரிக்கும். அதேபோல் ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்.

மற்றபடி காவிரியில் தமிழ்நாட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தேவை இல்லை. கர்நாடகம் மேக்கேத்தாட்டில், இராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. கர்நாடகம் புதிய அணை கட்டினால் எந்தப் பெரிய வெள்ள காலத்திலும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மாட்டார்கள்...

நேர்மையின் இமயம் தோழர் ப.ஜீவானந்தம்..


பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு என்ன காமராஜ் என்று கேட்டார். என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?  என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.

உடனே ஜீவா, நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

 நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.

காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார்.

அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார். கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, நல்ல வேட்டி  ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே.. என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்றார்.

உடனே காமராஜர், ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான்  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. நோய்  வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்.. என்பது தான்.

இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த, பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்...