04/08/2018

சரியை, கிரியை, யோகம், ஞானம்...


சரியை : உருவத்திருமேனியை வழிபடுதல்.

கோவில் கட்டி, விக்ரகம் அமைத்து, உழவாரப்பணி செய்து, விழா எடுத்து இறைவனை வேண்டி அருள் பெறுதல்.

தாஸமார்க்கம் என்றும் சொல்வார்கள்.

எஜமானனிடம் வேலைக்காரன் வணங்கி
நின்று தயவு பெறுவது போல. இறைவனை தலைவனாக கொண்டு அடிமையாய் தொண்டு செய்தல்.

கிரியை : அருவத்திருமேனியை வழிபடுதல்.

கடவுளை லிங்கங்களிலும், பிம்பங்களிலும், கும்பங்களிலும் கண்டு நித்திய பூஜை வழிபாடுகளை 16 வகை உபசாரங்களுடன் செய்து அருள் பெறுதல்.

ஸத்புத்திர மார்க்கம் என்றும் சொல்வார்கள்.

தந்தையிடம் மகன் உரிமையோடு தொட்டு பேசி பழகி அருள் பெறுதல் போன்று.

இறைவனை தந்தையாக கொண்டு
உரிமையோடு தொண்டு செய்தல்.

யோகம் : அருவுருவத்திருமேனியை வழிபடுதல்.

மூல குண்டலினியை எழுப்பி புருவ மத்தியில் சுடராக கொழுந்து விட்டெரிய உருகிய அமிர்தத்தினை உண்டு மகிழ்ந்து, வேண்டுவன பெறுதலாம்.

ஸஹமார்க்கம் என்றும் சொல்வார்கள்.

தோழனாக உரிமை பாராட்டி மிக நெருங்கி பழகி அருள் பெறுதல். இறைவனை தோழனாக உரிமை பாராட்டி
தொண்டு செய்தல்.

ஞானம் : உருவ, அருவ, அருவுருவ மேனிகளை கடந்து நிற்கும் அகண்டாகார ஜோதிமயமான கடவுளை நோக்கிச் செய்யும் வழிபாடு.

அறிவை மட்டும் கொண்டு செய்வது.
ஸன்மார்க்கம் என்றும் சொல்வார்கள்.

கணவன் - மனைவி உறவு போல, உடல் வேறானாலும் உயிர் ஒன்றாய் நின்று இன்பத்தை துய்ப்பது போல், இறைவனும் தானும் ஒன்றேயாகி, தன்னுள்ளே
உலகமும், உலகத்துள்ளே தானுமாகி, இறையறுள் பெறுதலாம்.

இறைவனை தலைவனாக பாவித்து
போற்றி தொண்டு செய்தல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.