04/06/2017

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?


எப்பாடுபட்டாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டுமென்று பலவருடங்களாக காத்திருந்த காவி பயங்கரவாத கும்பலனா ஆர்,எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பிஜேபிற்கு ஜெயலலிதாவின் இறப்பு ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டுத்திருக்கிறது.

அதன்படி எப்படியாவது தமிழகத்தில் நுழைந்து தனது  அரசியலை நிறுவவும், அதே நேரத்தில்  தமிழகத்தில் வளங்களை தனது ’பனியா கும்பலுக்கு கொடுக்கவும் நினைக்கும் இந்த கும்பலின்  அரசியலுக்கு யாரெல்லாம் தடையாக  இருப்பார்களோ அவர்களை தங்களது பினாமி அரசான தமிழக எடப்பாடி அரசை வைத்து கைது செய்து மிரட்டும் எமர்ஜென்சி கால உத்தியை பயன்படுத்திவருகிறது.

இதன்படி தான் நினைவேந்தலை நடத்தினார்களென்று தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் போலியான வழக்குகளை காட்டி  குண்டர் சட்டம் போடப்பட்டதும், 17 தோழர்கள் மீது பொய் வழக்கு சிறையில் அடைத்ததும் நடந்தது.

மேலும் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராடினார்கள் என்று SDPI கட்சியை சேர்ந்த 17 தோழர்களையும் கைது செய்திருக்கிறது.

இத்தோடு நில்லாமல்  தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த தோழர் ஒருவரின் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது (இவர்கள் தான் தமிழர்களை தரக்குறைவாக பேசியதற்காக சமீபத்தில் ரஜினி வீட்டை முற்றுகையிட்டவர்கள்)..

இதுபோக நேற்று காவிரி டெல்டாவில் சட்ட விரோதமாக மீத்தேன் எடுக்கும் ONGC நிறுவனத்தை கண்டித்து அறவழியில் மக்களை திரட்டி போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இப்படி அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழகத்தில் தனது பினாமி அரசான எடப்பாடி அரசை பயன்படுத்தி செய்து வருகிறது பிஜேபி.

தமிழர்கள் நாம் இதனை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடாவிட்டால்  மக்கள் பிரச்சனைக்காக போராடபவர்கள் அனைவரும் வருங்காலத்தில்  சிறையில் தான் இருக்க வேண்டும்.

தமிழகமே பாஜக வையும் அதன் பினாமி அரசையும் எதிர்த்து போராட வீதிக்கு வா...

கயிறு வேணுமா எஸ்.வீ. சேகர்...


தமிழகத்தை தமிழன் ஒருவன் மட்டுமே ஆள வேண்டும் என நினைப்பவன் தமிழன்...


நம் இனம் இழந்த நிலங்களை மீட்க வேண்டும் என நினைப்பவன் தமிழன்..

ஈழ நாட்டை அடைந்தே தீர வேண்டும் என்பதை உயிர் மூச்சென கொள்பவன் தமிழன்..

சாதிகள் பல இருப்பினும் அதில் ஏற்றத்தாழ்வு பார்க்காது.. அண்ணன் தம்பியாய் ஒரு தாய் பிள்ளையாய் சக தமிழனை பார்ப்பவன் தமிழன்..

நாம் யாரால் வீழ்ந்தோம் இனி எப்படி எழுவது என்பதை சிந்தித்து செயல்பட நினைப்பவன் தமிழன்...

திலீபனின் இறுதி உரையிலிருந்து…


என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது.

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.

இதில் பிழைகள் இருக்கலாம்.

இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...

தலை சுற்றுகிறதா?


யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம்.

ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள்.

அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம்.

கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது.
அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்..

முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.

இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம்.

உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.

உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம்.
ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.

உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் முலம் பெருக்கிக் கொள்ள முடியும்.

இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்...

தமிழர் படை குழுக்களின் பெயர்...


இன்றைய ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன்.. அதை விட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின் எண்ணிக்கையும்...

பட்டாட்டி :
காலாட்படை வீரர்கள் - 5
தேர் - 1
யானை - 1
குதிரை - 3
மொத்தம் - 10

சேனாமுகன் :
காலாட்படை வீரர்கள் - 15
தேர்கள் - 3
யானைகள் - 3
குதிரைகள் - 9
மொத்தம் - 30

குழுமம் :
காலாட்படை வீரர்கள் - 45
தேர்கள் - 9
யானைகள் - 9
குதிரைகள் - 27
மொத்தம் - 90

கனம் :
காலாட்படை வீரர்கள் - 135
தேர்கள் - 27
யானைகள் - 27
குதிரைகள் - 81
மொத்தம் - 270

வாகினி :
காலாட்படை வீரர்கள் - 405
தேர்கள் - 81
யானைகள் - 81
குதிரைகள் - 243
மொத்தம் - 810

பிரட்டனை :
காலாட்படை வீரர்கள் - 1215
தேர்கள் - 243
யானைகள் - 243
குதிரைகள் - 729
மொத்தம் - 2430

கமு :
காலாட்படை வீரர்கள் - 3645
தேர்கள் - 729
யானைகள் - 729
குதிரைகள் - 2187
மொத்தம் - 7290

அணிகம் :
காலாட்படை வீரர்கள் - 10935
தேர்கள் - 2187
யானைகள் - 2187
குதிரைகள் - 6561
மொத்தம் - 21870

அக்குரோணி :
காலாட்படை வீரர்கள் - 109350
தேர்கள் - 21870
யானைகள் - 21870
குதிரைகள் - 65610
மொத்தம் - 2,18,700

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.

தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாக்கும் அபாயம் இல்லை.

சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

இலுமினாட்டி யும் சக்திவாய்ந்த ஆறு துறைகளும்...


இலுமினாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை...

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)...

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)...

International Gourmet Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)...

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)...

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)...

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)...

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பற்றி பார்ப்போம்.  அடுத்த பதிவுகளில்...

பாஜக மோடியும் கருப்புப் பண ஒழிப்பும்...


தமிழா விழிப்போடு இரு...


பாஜக வும் ஏமாற்று வேலையும்...


அவசர செய்தி...


மயிலாடுதுறை கதிராமங்கலத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு துணை ஆட்சியர் கண்காணிப்பில் எரிவாயு குழாய் பதிப்பு வேலைகள் இரவு பகலாக நடைப் பெறுகிறது..

அந்த இடத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு காவல்துறை சுமார் 500 மேற்ப்பட்டோர் குவிப்பு.

ஏற்கனவே போராடியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில். தங்கத்திற்கு 3 சதவீதம் வரி.. செருப்புக்கு 18 சதவீதம் வரி...


வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாடு முழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல் படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து ஜி.எஸ்.டி குறித்து பல்வேறு கூட்டங்கள் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 15-வது ஜி.எஸ்.டி கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது ஜி.எஸ்.டியில் தங்கத்திற்கு 3சதவீதம், 500 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் செருப்புகளுக்கு 5 சதவீதமும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் செருப்புகளுக்கு 18 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படும்.

மேலும் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25 சதவீதம் வரியும், பிஸ்கட்டுக்கு 18 சதவீதம், ஆடைக்கு 12 சதவீதம், பீடிகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என கூறினார்.

வாழ்க கார்ப்பரேட்.. வீழ்க நாட்டு மக்கள்...

பாஜக மோடியும் GST வரிக் கொள்ளையும்...


நம்ப முடியாத உண்மைகள்...


இந்தியாவின் GDP குறையவில்லை குறைக்கப்பட்டுள்ளது...

இந்தியாவின் 2.85 டிரில்லியன் டாலர் கொள்ளையடிக்கவே இந்த நாடகம் ரகசியக் குழுவினரால்...

2 லட்சத்திற்குமேல் பொதுமக்களில் யாரேனும் ரொக்க பண பறிமாற்றம் செய்தால் வருமான வரித் துறைக்கு துப்பு கொடுக்க மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு...


2 லட்சத்திற்குமேல் ஒருவர் ரொக்க பண பறிமாற்றம் செய்வது குற்றம் என்பதால் blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சலில் துப்பு கொடுக்கலாம் எனத் தெரியவிக்கப்பட்டுள்ளது...

தமிழ்த் தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்...

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்...

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்).

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாட வைத்து விட்டனர்.. இந்த திராவிட வந்தேறி..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவி வருகிறோம்.

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

வயிற்று வலியை குணப்படுத்தும் மாதுளை...


கோடைகாலத்தில் உடல் உஷ்ணம், சோர்வு, மயக்கம், நீர்வற்றிபோதல், சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்க மாதுளையை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டை சாறாக எடுத்து பாகுபதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது, இதில் நீர்விட்டு குடித்துவர கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் தணியும். பித்தம் சமன்படும். குழந்தை இன்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

மாதுளை உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. நோய்களை தடுக்கவல்லது. குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளையின் தோலை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். மாதுளையின் மெல்லிய தோலை எடுக்கவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி, சீதபேதி குணமாகும்.

தாமரை பூவை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தாமரை பூ இதழை பசையாக அரைத்து, அதை பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப் பொடி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். வயிற்று புண் ஆறும். வயிற்று வலி குணமாகும். செரிமானத்தை தூண்டும். உடல் உஷ்ணம், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், காய்ச்சல், வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு தாமரை இதழ் மருந்தாகிறது.

ஜவ்வரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, வரமிளகாய், உப்பு, தயிர், நல்லெண்ணெய். ஜவ்வரிசியை லேசாக வறுத்து வெந்நீர் விட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதை ஜவரிசி, தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும். வயிற்று வலி குணமாகும். மரவள்ளி கிழங்கு வகையை சேர்ந்தது ஜவ்வரிசி. இது, குடலுக்கு நல்ல இயக்கத்தை கொடுக்கிறது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று கடுப்பை தணிப்பதுடன், வயிற்றுப்போக்கை சரி செய்கிறது...

இந்த ஆளை எல்லாம் சிஎம் ஆக்கி வச்சி இருக்காங்க.. பாஜக யோகியாம்..


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி..

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

திமுக கருணாநிதி கலாட்டா...


திமுக தெலுங்கர் கருணாநிதியின் சாதனை...


பொண்டாட்டிக்காக தாஜ்மகாலைக் கட்டுனது அதிசயம் என்றால்...

தனது நாலாவது பொண்டாட்டியோட பேருல ஒரு நகரையே உருவாக்குன திமுக கருணாநிதி..

இது உலக மகா அதிசயம் தானே.?

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


நம்ப முடியாத உண்மைகள்... Robbin hood...


பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன?


பாரம்பரிய உணவுகள் என்பவை பாரம்பரிய விதைகளிலிருந்து விளைந்தவை. அதாவது புதிய ஒட்டு ரக விதைகளிலிருந்து உருவானவையல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக நெல்லிலும், சிறுதானியங்களிலும் ஒட்டுரக விதைகள் அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து மரபு வழியிலான விதைகளிலிருந்து விளைந்தவையே பாரம்பரிய உணவுகளாகத் தகுந்தவையாகும்.. இதுமட்டுமின்றி, பயிர்விளைச்சலுக்கு ரசாயண உரங்களையோ, பூச்சிகொல்லி மருந்துகளையோ முற்றிலும் தவிர்த்து உருவாக்கப்பட்டவையே பாரம்பரிய உணவுகளாகும்..

மானாவரிநிலத்திலும், மலைமுகடுகளிலும் விளையும் புன்செய் பயிர்களான சிறுதானியங்களும், தண்ணீர்வரத்துள்ள நன்செய் பயிர்களான பாரம்பரிய அரிசிகளும் ஊட்டசத்துமிக்க பாரம்பரிய உணவுகளாகும்! திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, பனிவரகு எனப்புடும் பெருஞ்சாமை, சிறுசோளம் போன்றவற்றைத் தான் நாம் சிறுதானியங்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம்.

இந்த சிறுதானியங்களில் என்னென்ன உணவுவகைகளைச் செய்யலாம்? என்றால்….. செய்ய முடியாதது என்ன? எல்லாமே செய்யலாம்..

வெரைட்டிரைஸ் மாதிரியான கலவைச்சோறுகளை அருமையாகச் செய்யலாம். திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு, புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி, தயிர்சோறு….. போன்ற சோறு வகைகளை செய்யலாம்..

அதேபோல் இட்லி, தோசை, உளுந்துசேர்த்தகளி , வெந்தயம் சேர்த்தகளி, கும்மாயம், இடியாப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, கட்லெட், அடை, உப்புமா, ஆப்பம், புட்டு, சேவை போன்ற பலகார வகைகளும் செய்யலாம். சற்றே கோதுமையைச் சேர்த்து சப்பாத்தி, பூரியும் செய்யலாம். லட்டு, அதிரசம், மைசூர்பா, கேசரி, தொதல், அல்வா, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்தும் அசத்தலாம். ரிப்பன் பக்கோடா, முறுக்கு, தட்டடை, சீடை, காரச்சேவு போன்ற திண்பண்டங்களையும் செய்யலாம்.

அதே சமயம் ஒவ்வொரு சிறுதானியமும் தனிப்பட்ட தன்மையும், சுவையும் கொண்டது என்பதால் அது அதற்கேற்ற சமயலைச் செய்வது சிறப்பாக இருக்கும்...

தினை  (Foxtail Millet) - தினையில் இனிப்பு செய்தால் நன்றாக இருக்கும். சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பா, லட்டு போன்றவற்றை தினையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாகத் தினை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். ஆகவே, இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரையோடு, பனைவெல்லம் சேர்ப்பது நலம் பயக்கும். அத்துடன் தேங்காய் துறுவலையோ, தேங்காய்பாலையோ சேர்ப்பது  தினையின் சூட்டை சமன்படுத்தும்.

தினையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு பிரசவமான தாய்க்கு கொடுப்பது தமிழர் மரபு. காரணம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். தினையில் கண்ணுக்கு ஒளிதரும் பீட்டா கரோட்டின் அதிகம்! எனவே தினையை தொடர்ந்து உட்கொள்ளும் போது கண்பார்வை பிரகாசமாகும்.  தினைமாவுடன் தேன்கலந்து உண்டால் கபம் நீங்கும்.தினை விரைவில் செரிமானமாகும், ஆகவே பசியைத் தூண்டும். மொத்ததில் தினை உட்கொள்வது உடலுக்கு வலுசேர்க்கும்.

சாமை (Little Millet) - சாமை எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாகும். சாமன்ய மக்களின் விருப்பு உணவாக சாமை திகழ்ந்த காரணத்தால் சாமை எனப் பெயர் பெற்றது.

சாமையில் கூட்டாஞ்சோறு தொடங்கி அனைத்து சோறு வகைகளும் செய்யலாம்.  அதேபோல் இட்லி, தோசை, கிச்சடி போன்ற பலகாரங்களுக்கும் ஏற்றது.  நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்டிருப்பதால் சாமை  உட்கொள்வது மலச்சிக்கலுக்கும், நீரிழிவிற்கும் தீர்வாக அமையும்.

சாமையில் மிகுந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகையுள்ளவர்களை குணப்படுத்தும். சாமையில் மினரல்ஸ் அதிகமிருப்பதால் நம் உடலில் உயரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திவிடும். மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவின் அடித்தளமாகும்!

குதிரைவாலி  (Barnyard Millet) - வாலரிசி எனப்படும் குதிரைவாலி ஒரு சுவை மிகுந்த சிறுதானியமாகும். இதில் செய்யப்படும் வெண்பொங்கல் மிக ருசியாக இருக்கும். குதிரைவாலி சோற்றில் தயிர் சேரும் போது lactobaclius என்ற வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாவைத் தருகிறது. குதிரைவாலி  மோர்சோறு அல்சரை குணப்படுத்தும். குதிரைவாலியில் அனைத்து சோறு வகைகளையும், பலகாரவகைகளையும் செய்யலாம். குறிப்பாக இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிக மிருதுவாக இருக்கும்.

குதிரைவாலி -  உட்கொள்வது சர்க்கரைநோயை கட்டுபடுத்த உதவும்.  குதிரைவாலியோடு சற்றே உளுந்து சேர்த்து களியோ, கஞ்சியோ செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி, வயிற்று கடுப்பு பிரச்சினைகள் தீரும்.  காய்ச்சலின் போது குதிரைவாலி கஞ்சி உட்கொள்வது காய்சலிருந்து மீள உதவிபுரியும்!  வாயுப் பிரச்சினைகளால் வதைபடுபவர்களுக்கு குதிரைவாலி உணவு ஒரு வரப்பிரசாதம்.

வரகு (Kodo Millet) - நமது சங்க இலக்கியங்கள் பலவற்றில் அதிகமாக குறிப்பிடப்படும் சிறுதானியம் வரகரிசியாகும்.  பழந்தமிழரின் அடிப்படையான உணவாக வரகரிசி திகழ்ந்துள்ளது. வரகரிசி உடலில் சக்தியை பெருக்கி தினவெடுக்க செய்யும்.  வரகரிசியில் எல்லாவகை சோறுகளையும், பலகாரங்களையும், திண்பண்டங்களையும் செய்யலாம். பிரியாணி செய்வதற்கு பொருத்தமாக இருக்கும்.

வரகு சுட்ட சாம்பல் கற்பிணிப் பெண்களின் இரத்தபோக்கை நிறுத்துவதற்கு கிராமங்களில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வரகின் தோல் ஏழுபடலங்களை  கொண்டதாகும். எனவே இதை கிராம மக்கள் நன்றாக குத்தி புடைத்து தோல்களையும், கடைசியாக உள்ள பூஞ்சானத்தையும் நீக்கியே பயன்படுத்துவார்கள். அவ்வாறு நீக்காவிட்டால் அது நஞ்சாகிவிடும். பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகக்குறைவாக உட்கொள்ள வேண்டும். தேள்கடிக்கு மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேழ்வரகு (Finger Millet) - இது உழைப்பாளிகளின் உன்னத உணவாகும் இதில் கால்சியம் அபரிமிதமாக இருப்பதால் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வாகும். கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போதான உதிரபோக்கை நிறுத்த வல்லதாகும்!  கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு ரிப்பன் பக்கோடா என பலவும் செய்யலாம்.

ராகி அல்வாவும் செய்யலாம்.  உடலை உறுதிபடுத்தும், பித்தத்தை தணிக்கும், வாதத்தை கட்டுபடுத்தும். உடல் உழைப்பு அதிகம் செய்யதாதவர்கள் கேழ்வரகை உட்கொண்டால் எளிந்தில் ஜீரணமாகாது.

அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை தவிர்ப்பது அல்லது குறைத்துண்பது நலம் பயக்கும். நன்கு தோல்நீக்கிய கேழ்வரகையே உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேதியாகிவிடும்.

கம்பு (Pearl Millet) - தெம்பு வேண்டும் என நினைப்பவர்கள் கம்பு உண்டால் பலன் பெறுவர்.  கம்மங்கூழ், கம்பு தோசை, கம்பு குழிபணியாரம் இன்றும் கிராமங்களில் பிரசித்தமாகும். கம்பு உடம்பிற்கு குளிச்சி தரும் சிறுதானியமாகும். அதே சமயம் கேழ்வரகு உடல் சூட்டை அதிகப்படுத்தும் சிறுதானியமாகும். ஆகவே தான் பெரும்பாலும் கம்பு, கேழ்வரகு இரண்டையும் இணைத்து கூழ் தயாரிப்பது வழக்கில் உள்ளது.

புரதமும், கால்சியமும் கம்பில் அதிகம் உள்ளதால் நல்ல உடல் உழைப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.  கம்மங்கூழில் சிறிது மோர் சேர்த்து உட்கொண்டால்  வயிற்றுஎரிச்சல், வயிற்று பொருமல், மூலம் போன்றவை நிவர்த்தியாகும். கம்போடு உடைத்தகடலையை நன்கு அரைத்து பனவெல்லம் கலந்து நெய்யோடு உருட்டி லட்டு செய்யலாம். இது குழந்தைகளுக்கு நன்கு ஊட்டசத்து தரும் திண்பண்டமாகும்.

அதேசமயம் சளி, இருமல், ஆஸ்த்துமா மற்றும் தோல் நோய் பிரச்சினையுள்ளவர்கள் கம்பை மிக குறைவாக உட்கொள்ள வேண்டும்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஊடகம் உங்களை திசை திருப்பி விட்டது...


மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்...


ஒரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்து போன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்து வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்து விட்டார்கள்.

குளோனிங் செய்யும் மாயம்.. 10,000 வருடங்களுக்கு முன்பு சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து போன ரோமங்கள் நிறைந்த மாமத யானைகளை ரஷ்யாவையும் கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்க முயன்று வருகிறார்கள்.

சர்வதேச விஞ்ஞானிகள் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் இந்த மாமத யானைகள் மீண்டும் சைபீரியப் பகுதிகளில் நடமாடப் போகின்றன.

இந்தத் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆதரவளித்திருக்கிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் சிறந்த தென்கொரியப் பேராசிரியர் ஹவாங் வூ இதற்கான முதற்கட்ட வேலைகளை ரஷ்ய விஞ்ஞானிகளோடு தொடர்ந்து செய்துவருகிறார். இதன் விளைவாக மாமத ரோம யானையை மீண்டும் உருவாக்க அடிப்படை ஆராய்ச்சிகள் முடிந்துவிட்டன.


இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அழிந்து போன விலங்குகளின் மரபணுப் பொருட்கள் தேவை. இதற்காக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சைபீரிய பகுதிகளில் இறந்து பனியால் மூடப்பட்டுப் பாதுகாப்பாக இருந்த மாமத யானையின் தசைப் பகுதிகள் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.

அந்த யானையின் ரத்தம்கூட உறையாமல் இருந்தது.

தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தசைகளிலிருந்து செல்கள் கிடைத்தால் அதிலிருந்து பல மரபணுத் தகவல்களைப் பெறலாம்.

ஒருவேளை நல்ல தகுதியான செல்கள் கிடைப்பின் நன்றாக இருக்கும் அல்லது செயற்கை முறையில் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த மரபணுக்களைப் பிரித்தெடுக்கும் வேலையை பென் மாகாணப் பல்கலைக்கழகம் 70 சதவீதம் முடித்துவிட்டது.

மாமத யானைகளின் மரபணுக்கள் ஆசிய யானைகளின் மரபணுக்களோடு நெருக்கமாக இருக்கின்றன. மாமத யானைகளின் மரபணுக்களை ஆசிய யானைகளின் இனப்பெருக்க செல்களோடு புகுத்தி மாமத யானைகளை உயிர்த்தெழச் செய்ய முடியும். இது சாத்தியம் என்று கோட்பாட்டு ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படி உருவாக்கப்படும் புதிய மரபணுவுக்கு ஆசிய யானைகள் தாயாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானால் ஆசிய யானை தன்னுடைய மரபணுக்களைவிட மாமத யானைகளின் மரபணுக்களை அதிகம் கொண்ட யானைகளை உற்பத்தி செய்யும்.

இப்படி உருவான மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாமத யானைகள் உருவத்தில் ஆசிய யானைகளைப் போல் இருக்கும்.

ஆனால், இந்தக் கலப்பு யானைகள் இன்னொரு கலப்பு யானையோடு சேர்ந்து பிறக்கும் குட்டிகள் மாமத யானைகளைப் போல் இருக்கும்.

இம்மாதிரி அழிந்தொழிந்து போன விலங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பலவிதமான கேள்விகள், தடைகள், நெறிமுறைகள் இருக்கின்றன.

இயற்கையின் போக்கில் உயிரினங்கள் அழிந்து போவதும் புதிய உயிரினங்கள் உருவாவதும் வழக்கம்.

ஆனால், ஒரு உயிரினத்தை அழிப்பதோ எப்போதோ அழிந்து போன உயிரினத்தை மறுபடியும் உயிர்கொடுத்து உலவ விடுவதோ இயற்கையின் போக்கில் குறுக்கிடுவதாகும்.

இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பெரும் ஆபத்து..

ஆகவே, பனி நிறைந்த சைபீரியப் பகுதிகளில் மீண்டும் மாமத யானைகள் பவனிவரவிருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி கொண்டாலும் சூழலியலாளர்கள் கவலையுடனே இருக்கிறார்கள்...

என்னை கட்சியிலிருந்த நீக்க பொதுச் செயலாளரை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது என டிடிவி தினகரன் பேட்டி...


சென்னை சென்று மீண்டும் கட்சிப்பணிகளை தொடருவேன் என டெல்லியில் டி.டி.வி. தினகரன் பேட்டி...

நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்...


உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள்.

ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.

இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று.

இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார்.

இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார்.

இந்த உலகில் 100, 200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.


அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர்.

1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன.

அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.

அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார்.

என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டு பிடித்தார்.

அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டு பிடிப்புகள் சாத்தியம்.

எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.


இவற்றை ஆராயும் பணிக்கு ‘காட்டுக்கூரை’ என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.

இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது...

திமுக கருணாநிதிக்கு மன்னிப்பே கிடையாது...


யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்...


1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம்  1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம்
அனைத்து பட்டியலில் உள்ள
தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும்
தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க. சட்டநாதன் ஆணையத்தை  தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டு கொள்ளாது.

திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்.

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில்...