30/07/2018

திமுக கருணாநிதி கலாட்டா...


கல்யாணம் பண்ணாத ஜெயலலிதாவுக்கே நான் தான்  வாரிசுன்னு 10 பேரு வந்தாங்க..

கலைஞருக்கு மூணு பொண்டாட்டி வேற, 50 பேராவது வாரிசுன்னு வரமாட்டாங்களா...

திமுக கருணாநிதியும் ஊழல் சாதனையும்...


நானும் டிவில பாத்துட்டே இருக்கேன்...

கன்னியாகுமரில சிலை வெச்சாரு, பூம்புகார்ல இலை வச்சாருனு சொல்றானுங்களே தவிர..

இந்த உலகமே கண்டிராத சாதனையை ஏன்டா ஒருபயலும் சொல்ல மாட்றீங்க?

பெரியோர்களே, தாய்மார்களே அண்ணன் ஒரு விஞ்ஞானி, சைன்டிஸ்ட்டுனு போய் இதையும் சொல்லுங்கடா...

திமுக கலாட்டா...


திமுக காவேரி மருத்துவமனை கலாட்டா...


அங்க தலைவன் அப்போவோ இப்போவோனு கெடுக்குறாரு, இவனுங்க என்னடானா பிரியானி, இரவு ப்ரைடு ரைஸ்னு கொண்டாட்ட கனக்கால்ல இருக்கு...

இப்போதான் புரியுது இந்த கூட்டம் பிரியானிக்கு வந்திருக்குனு.

உடன்பிரப்புகளா நல்லா வருவிங்கடா...

எமதர்மா ஒனக்கு இறக்கமேயில்லாயா எங்க உபிக்கல இப்படி காக்கவைக்கிறியே உனக்கே அநியாயமா இல்லயா...


ஒரிசா பாலு ...


அறிந்துக் கொள்ள வேண்டிய மனிதர்கள் பட்டியலில்...

இதில் நான் வரிசை வாரியாக இவருக்கு ஒன்றாவது இடம் இரண்டாம் இடம் என்றெல்லாம் கூற வரவில்லை.

நான் சொல்லும் நபர்கள் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டவும்
தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில இதை செய்கிறேன்

ஒரிசா பாலு...

இவரைப்பற்றி கூறுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும் முதலாவது இவர் கடல் சார்ந்த ஆய்வும் மீனவர்கள் பற்றிய  ஆய்வும் சிறந்தது.

கடல் ஆமைகள் தான் முந்தைய மூதாதையர்களுக்கு கப்பல் வழி காட்டி என்று இவர் அறிவித்த ஆய்வு முடிவு மிகவு‌ம் பிரசித்தி பெற்றது.

தமிழ் எழுத்துடைய பெயர்கள் உலக அளவில் எத்துனை இடங்களில் தமிழ் உள்ளது என்று அறிவித்தவரும் இவரே.

குமரிக்கண்டம் லெமூரியா ஆய்வுகளில் முக்கிய பங்கு இவருக்கும் உண்டு.

தமிழ் பற்றியும் தமிழர்களின் வாழ்கை முறைமை பற்றியும் ஆய்வு செய்து மேடைகளில் பேசி வரும் இவரை நம்ம அடிமை அரசுகள் கண்டுக்காமல் இருப்பதே வேதனை..

இதிலும் கடல் சார்ந்த ஆய்வுகளில் பல நாடுகளில்  பல நாட்கள் ஈடுபடுவதால் இவரது குடும்பத்தினர் கூட இவரை புரிந்து கொள்ளாமல் நோவினை செய்த தகவலும் உண்டு..

ஆனால் இப்போது இவரது குடும்பம் புரிந்து கொண்டு தமது மகனை இதே ஆய்வில் ஈடுபடுத்தி வருவதாகவு‌ம் தெரிகிறது..

நல்லா அறிவாளிகள் எல்லாம் அயல் நாட்டுல இருக்கீங்களே என்று நாம் வேதனை படும் சமயத்தில் இங்குள்ள மக்களின் வரலாற்று வாழ்கையை ஆய்வு செய்து உலக மக்களும் எடுத்துச்செல்லும் இவரை போன்றோரை நாம மதிக்கத்தான் செய்ய வேண்டும்.

அரசாங்கம் செய்யும் என்று காத்திருப்பது முட்டாள் தனம்..

அரசியல் வாதிகள் மீம்ஸும்
விளம்பர நடிகர்கள் மீம்ஸும்
போட்டு கை கொட்டி சிரிக்கும் நாம..

இவர்களை போன்றோரை அடையாளப்படுத்த வேண்டாமா? 

சிலுவை யுத்தங்கள் − 8...


நடந்து முடிந்த அனைத்துக் காரணங்களையும் பார்த்தோம் இப்பொழுது விளைவுகள்...

ஐரோப்பிய உலகம் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட எதிர் நடவடிக்கையின் முதல்கட்டமாக "கிளேர்மொன்ற்" மாநாட்டை நடத்தியது. ஹி.489(கி.பி.1095), நவம்பர் மாதம் 18−ம் தேதி தென்கிழக்கு பிரான்சிலுள்ள கிளேர்மொன்ற் எனுமிடத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 300 மதகுருமாா் பங்கேற்றனர்.

இதில் பல பிரச்சனைகள் பற்றியும் ஆராய,27−ம் தேதி மதகுருமாருடன் பொது மக்களும் கூடியிருந்த பிரமாண்டமான இக்கூட்டத்தில் பாப்பரசர் இரண்டாம் ஏர்பன், முஸ்லிம்கள் கிறித்தவர்களை அவமதித்ததாகப் புனையப் பட்ட கதையைக் கூறி, முஸ்லிம்களிடமிருந்து புனித ஜெரூஸலத்தையும் கிழக்குப் பிராந்தியத்தையும் அங்கு வாழும் கிறித்துவ சகோதரர்களையும் மீட்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் எனப் பிரசாரம் செய்தார்.

இப்புனிதப் பணிக்காக சிலுவைப் போரை ஆரம்பிக்குமாறும் பணக்காரன், ஏழை, ஆண்டான், அடிமை என்ற பேதமின்றி இப்போரில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பணித்தார்.

இப்போரில்  கலந்துக் கொள்வோரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் உயிர் துறப்போருக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் ஆசையூட்டினார்.

பிரித்தானிய வரலாற்றுப் பேராசிரியர் "ஸ்டீவன் ரன்ஸி மேன்" என்பவர் இவரது பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் பின்வரும் கூற்று நோக்கத்தக்கது.

அதாவது "பாப்பரசர் இரண்டாம் ஏர்பன் ஒரு நாவலருக்குரிய கலைத்திறமையோடும் ஆர்வத்தோடும் பேசினார்.

உடனடியானதாகவும் பிரமாண்டமானதாகவும் ஏற்பாடாகிய அக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தும்போது, "இது தெய்வ ஆணை"(Deysle volt)எனும் முழக்கம் அவரது பேச்சை அடிக்கடி இடைமறித்து எழுந்தது.

இவரது இவ்வுரையினால் கவரப்பட்டு, அங்கு குழுமியிருந்த அனைவரும் போரில் கலந்து கொள்வதாக வாக்களித்ததோடு சிலுவைச் சின்னத்தையும் தம் உடைகள் மீது குத்திக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போருக்கான ஆட்களை திரட்டும் படலமே நடைபெற்றது.

- தொடரும்.....

இது தான் திமுக உ.பி.களின் நாகரிகம்...


உங்க நாகரிகத்தை பார்த்து புல்லரிக்கிறது...

குற்றாலத்தின் அரிய புகைப்படம்...


பெரிய புராணம் தந்த சேக்கிழார் பெருமானின் வரலாறு...


பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார்.

அவர் பிறந்ததும் அருண்மொழி ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்.

1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின.

தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச் சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்ல முறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார்.

ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறை சக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அரச பதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமய நூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார்.

நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான்.

அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்.


சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார்.

தில்லையம்பல நடராஜர் உலகெலாம்  என அடியெடுத்துக் கொடுத்தார்.

 அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார்.

இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள #மூவாயிரம்_அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார்.

அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்ல நாளும், திருஞானசம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர்.

ஒரு பக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன.

இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது.

அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்த பாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான்.

சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்...

பாடல் விளக்கம்: எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மேலும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேரவையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெருமானின் அடியவருடையவும் ஆன, பொருள்சேர் புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்...

ட்ராய் தலைவரின் ஆதார் பாதுகாப்பு சவால் - தோற்கடித்த ஹேக்கர்...


பொதுவெளியில் பகிர்ந்து சவால் விடுத்த சூழலில், அவரது தனிப்பட்ட தகவல்களை பிரான்ஸ் நபர் இணையத்தில் பகிர்ந்தார்.

டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்று அதை ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். இதன்மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா எனவும் சவால் விட்டார். ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார்.

செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார்.



எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ளார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இந்த பதிவுகளுக்கு எந்தவொரு விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ ட்ராய் அமைப்பின் தலைவரான ஷர்மா தெரிவிக்கவில்லை.

ஆதார் எண் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று வாதிடப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

முடியட்டும் திராவிடம்... விடியட்டும் தமிழகம்...


திராவிடமும் சாதி ஒழிப்பும்...


தமிழர்கள்: அறுபது ஆண்டுகளாக திராவிடம் பேசியும் ஏன் தமிழ்நாட்டில் சாதிய பிரச்சனைகள் ஓயல..

திராவிடர்கள்: ஆயிரம் ஆண்டு கால சாதியை அப்படி அறுபது ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது

தமிழ் தேசியர்கள்: அதெல்லாம் ஒரு மயி*ம் இல்ல..

சாதிய பிழவுகள் தமிழரிடம் இருந்திருந்தால் எப்படி சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் தமிழ்நாடு வல்லரசாக இருந்திருக்கும்?

திராவிடர்கள் தமிழரை பிரித்தாள சாதிய அரசியல் செய்கிறார்கள்.. திராவிட ஆட்சியை வீழ்த்தாமல் சாதிய சிக்கல்கள் ஒழியாது...

பிரமிடும் இரகசியங்களும்...



உலகில் பல இடங்களில் அமைத்துள்ள பிரமிடு அமைப்புகள் அனைத்தும் இணைத்து பார்க்கும் போது...

அந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள அணைத்து இடங்களிலும் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பை போல இருக்கிறது இது ஒரு wireless communication கம்பி இல்லா தொடர்பு முறையை போல செயல் பட்டு இருக்குமா?

அதாவது இந்த கால மொபைல் போன் டவர் போல? 

நோட்டமிடும் வேற்றுலக மர்ம விண்கலம்...


இன்றைய அறிவியல் யுகம் விண்வெளி ஆய்வின் உச்சத்தில் இருக்கிறது, ஒரு சாமான்யனுக்குக் கூட வான்அறிவு அதிகமாக இருக்கிறது.

அதாவது நாம் பூமியில் இருந்து பார்க்கும் நீல வானம் ஒரு முடிவல்ல அதற்குமேல் கருமையான ஒரு வானம் இருக்கிறது அங்கே சூரியக்குடும்பத்தில் பூமியும், அந்த சூரியக்குடும்பம் ஆயிரக்கணக்கான சூரியக்குடும்பங்களும் கோடிக்கண‌க்கான சூரியன்களையும் (நட்சதிரங்கள்), உள்ளடக்கிய பால்வெளி மண்டலமும் உள்ளது என்றும், இது போல ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் வின்வெளியில் இருக்கின்றன என்பதும், இவைகள் வட திசையில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான ஒரு பால்வெளி மண்டலத்தை மற்ற பால்வெளி மண்டலங்கள் சுற்றி வருகின்றன என்பதும் சாமான்யரும் அறிந்ததே.

அந்தவகையில் நமது சூரிய மண்டல பால்வீதியில் மர்மமான விண்கலம் ஒன்று சுற்றி வருகிறது. ' இது வேற்றுலகத்தை சார்ந்தது என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வேற்றுலக மர்ம விண்கலம் ஆனது 13000 ஆண்டுகளாக
விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த மர்மமான விண்கலம் பற்றிய  1954-யில் அமெரிக்க
விமானப்படையைச் சார்ந்த
ஆய்வாளர் ஒருவர் அளித்த
செய்தியின் மூலம் தான், இப்படி
ஒரு விண்கலம் புவியைச் சுற்றி
வருகிறது என்பது தெரிய வந்தது.

விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த மர்ம விண்கலம் பற்றிய செய்தி தீயாய் பரவியது என்பதும் குறிபிடத்தக்கது.

மீண்டும் 1960-யில் அமெரிக்க
கடற்படை இதே மர்ம விண்கலம்
104.5 நிமிட சுற்று வேகத்தில்
புவியைச் சுற்றிவருவதை
கண்டறிந்தது .

மேலும் இது சார்ந்த தீவிரமான ஆய்வும் தொடங்கப்பட்டது.

216 கி.மீ தூரம் : விசித்திரமான
சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்றும் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது.

இந்த மர்ம விண்கப்பலில் 50
ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக்
கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக விண்வெளிவளர்ச்சி யுத்தம் நடத்திக்
கொண்டிருக்கும் அமெரிக்க
மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த மர்ம விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1899-ஆம் ஆண்டு நிக்கோலா
டெஸ்லா வேற்றுகிரகவாசிகளிடம் பெற்ற சமிக்ஞை என்பது இந்த மர்ம விண்கலத்தின் சமிக்ஞையாக தான் இருக்கும். மேலும் 1930-களில் இருந்தே இந்த மர்ம விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெறுவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் அறிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1957-ஆம் ஆண்டு தான் மர்மமான விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது
டாக்டர் லுயிஸ் கோராலோஸ்
(Dr.Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இசுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2)
வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக இந்த விண்கலம்
சிக்கியது.

அதே 1957-ஆம் ஆண்டு
இசுப்புட்னிக் 1 விண்கலத்தில்
(Sputnik 1) இருந்த விண்வெளி
வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்று வட்டப்பாதையில் தங்களின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 7-ஆம் அதேதி 1960-ஆம்
ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த மர்ம விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

1957-ஆம் ஆண்டு வாக்கில்
அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட போலார்
செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்று வட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் மர்ம விண்கலம் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது.

பின் 1960-களில் மீண்டும் மர்ம விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம்
ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும்,
அறிவியலாளர்களும் கணிப்பு
தெரிவித்தனர். அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான
விண்கலமாய் (Heaviest Artificial space ship) பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது முதல் முறையாக ரேடாரில் மர்ம விண்கலம் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு
மீண்டும் மர்ம விண்கலம்
புகைப்படத்தில் சிக்கியது.
இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட்
கார்ப்ரேஷன் (Grumman Aircraft
Corporation) மிகவும் உதவியது.

இந்த விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்து பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ச் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் இந்த
மர்ம விண்கலம் பற்றி உண்மையை மக்களிடம் மறைக்காமல் அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது...

இயலாமையின் உச்சம்...


திமுக கருணாநிதியை பற்றி யாரும் பேச வேண்டாம் நாதக சீமான்....


உற்று கவனித்துப் பாருங்கள்...

இந்த தமிழ்தேசிய வியாதிகள் ஈழத்திற்காக பல போராட்டங்களை நடத்துவார்கள், ஆனால் அகதிகள் முகாம்களில் வாழும் அதிககளுக்கு ஆக்கப்பூர்வமான எந்த உதவியையும் செய்திருக்க மாட்டார்கள்.

காரணம் உதவி செய்வது தமிழ்தேசிய வியாதிகளின் வேலையல்ல. கோடிகளை வாரிக்குவிக்கும் ஈழம் மற்றும் தமிழ்தேசியத்திற்கான போராட்டங்களை நடத்துவது மட்டுமே முக்கியம்...

தமிழகத்தில், ஈழம் என்பது வருமானம் ஈட்டும் வியாபாரச் சந்தையே.

மே மாதம் ஆனாலே ஈழ வியாபரம் கொடி கட்டிப் பறக்கும்....

திமுக கருணாநிதியும் தமிழின அழிப்பும்...


எந்த இந்தி எதிர்ப்பு போரை வைத்து அரசியல் செய்து ஆட்சியை பிடித்தார்களோ அதே இந்தி எதிர்ப்பு போர் ஈகியர்களுக்கு துரோகம் செய்தவர் தான் கருணாநிதி..

திமுக வும் பண வெறியும்...


பதட்டமும் சோகமும் நிறைந்த இந்த நேரத்தில்... கலைஞரின் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும்
சினிமா பாடல்களும் கடிஜோக் காட்சிகளும் ஒளிபரப்புகிறார்களே இவன்கள் என்ன ரகம்?

எங்கே நிறுத்த சொல்லுங்கள் தொண்டர்களே பார்ப்போம்...

கம்யூனிசம் - திராவிடம் எல்லாமே தெலுங்கர்களின் கூடாரம் தான்...


பொதுவுடமை பொங்கச்சோறும் மாட்லாடு மனவாடுகளின் கூடாரம்தான்...

என்னடா இது திராவிடமும், பொதுவுடமையும் கூடிக் குழாவும் காரணமும் இதுவே...

ஏழு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா...

தற்சார்பு பொருளாதாரத்திற்கு மாற விரும்புகிறீர்களா..?


திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்...


இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.

வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.

அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.

இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.

தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?

அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்  அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிவர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...

ஆட்சி பதவி சலுகை இவைகளுக்காக எதிரியின் காலைக் கூட நக்குவதற்கு பெயர் தான் ஆளுமை என்றால்.. திமுக கருணாநிதி ஒரு சிறந்த ஆளுமை...


பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி...


சிலுவை யுத்தங்கள் − 7...


ஐரோப்பிய யாத்திரிகர்களின் இட்டுக்கட்டு.....

ஐரோப்பிய யாத்திரிகா்களில் சிலர், ஜெரூஸலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தம்மை மானபங்கப்படுத்தித் துன்புறுத்தினர் என்று பொய்யாகக் கூறிய கதையும் கிறித்துவர்கள் சிலுவைப் போரை ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு உரமிட்டது.

கி.பி.−11ஆம் நூற்றாண்டளவில் ஜெரூஸலம்,சிரியா ஆகிய பிரதேசங்கள் ஸல்ஜூக்கிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.இக்காலப்பிரிவில் ஐரோப்பாவிலிருந்து ஜெரூஸலத்துக்கு வந்த கிறித்துவ யாத்திரிகர்கள், இஸ்லாத்தின் கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறிவிட்ட முஸ்லிம் பெயர் தாங்கிய கொள்ளைக்காரா்களால் சில துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.

அக்கொள்ளையா்களுக்கும் முஸ்லிம் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால்,நாடு திரும்பிய கிறித்தவா்கள் ஜெரூஸலத்தில் முஸ்லிம்கள் தம்மை அவமானப்படுத்தினர். என்ற எவ்வித ஆதாரமற்ற வதந்தியைக் கட்டவிழ்த்து விட்டனர்.

ஏற்கனவே முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த ஐரோப்பிய கிறித்துவத் தலைமைப்பீடம் எவ்வித ஆதாரமற்ற இக்கட்டுக் கதையால் சினமுற்று, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளலாயிற்று.

இதுவரை நாம் மொத்தம் ஏழு காரணங்களை பார்த்தோம் இனி வரும் சில பதிவுகளில் இக்காரணிகளின் விளைவுகளை எதிர்நோக்குவோம்..

- தொடரும்...

நீங்கள் மறந்த தமிழக பிரச்சனைகள்...


உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்த ஐபிஎம்...


ஐபிஎம் நிறுவனம் ''உப்புத் தூள்'' அளவில் இருக்கும், உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்து இருக்கிறது.

அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் இரண்டு நாட்கள் முன்பு இந்த கணினியை அறிமுகப்படுத்தியது.

இதை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எதிர்பார்த்தது போலவே இயங்குவதாக கூறியுள்ளது.

இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என கூறப்பட்டு இருக்கிறது...

திமுக கருணாநிதியும் தமிழின அழிப்பும்...


யோகா முத்திரைகள்...


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த பஞ்ச மஹாபூதங்கள்  ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் ஈதர் என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது.

உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன..

1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை..

1. பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு சூன்ய முத்திரை. இது மட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில..

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.

பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.

பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.

பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.

பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை...

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.

பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்...

சிந்தித்துப் பாருங்கள்...


தமிழகத்தில் பிறமொழி பேசுவோர்...


தமிழகத்தில் பிறமொழி பேசுபவர்கள், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எவ்வளவு பேர் எனும் விவரம் அண்மையில்  வெளியிடப் பட்டுள்ளது.

அதன்படி, ஏறக்குறைய ஆறு கோடியே 40 இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தமிழ் பேசுகிறார்கள். அடுத்த படியாக, ஏறக்குறைய 42 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தெலுங்கு பேசுகின்றனர். ஏறக்குறைய 4 இலட்சம் பேர் இந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2011 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் வங்காள மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 160 % அதிகரித்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் தொகை 107 % வளர்ந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் இங்குள்ள வேலை வாய்ப்பு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலுள்ள நடுத்தர வர்க்கக் கல்வி கற்றவர்களைத்தமிழகத்தை நோக்கி ஈர்த்துள்ளது.

மேலும் இடம் பெயர் மக்கள் குறித்து  2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, 20.9% பேர் போர்டு, ஹுண்டாய், பிஎம்டபுள்யூ மற்றும் நிசான் தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வாழ்கின்றனர். இடம் பெயர் தொழிலாளர்களில் 51.3% பேர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

ஜவுளி மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள காரணத்தால், தமிழகத்திலுள்ள மொத்த இடம்பெயர் தொழிலாளர்களில் கோவையில் 12.1 % பேரும், திருப்பூரில்
 9 % பேரும் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டுமனை வணிகம், மெட்ரோ இரயில் மற்றும் கட்டடத் தொழிலில் அண்மைக்காலமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பிறமொழி பேசுபவர்கள், தமிழகத்தில் திடீரென  அதிகரித்து வருவதைத் தமிழகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற அரசியல் சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கியுள்ளது.   இருப்பினும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, அவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டிய மாபெரும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அரசு இந்த விடயத்தில் கருத்தூன்றிச் செயல்படா விட்டால், பிற மாநிலங்களில் இருந்து வரும் பிற மொழி பேசக் கூடியவர்களால் இங்கு பல்வேறு சிக்கல்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. 

அரசு மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தமிழக மக்களும் இச்சிக்கலில் கவனம் குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்...

வழிநடத்தி செல்பவன் மட்டுமே தேவை...


சேலம் 8 வழிச்சாலை எதிர்த்து தற்கொலை...


தனது வீடு விவசாயநிலம் கிணறு போன்ற அனைத்தும் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் என்ற நிலையில்
மனமுடைந்து விவசாயி சேகர், விஷமருந்தி இன்று ஜூலை 29 2018 பிற்பகலில் தற்கொலை.

அவருக்கு 55 வயது மேல்வணக்கம்பாடி, செங்கம் தாலுகா, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்....

எங்கே சென்றான் மராட்டிய ரஜினி...


சிலுவை யுத்தங்கள் − 6...


சின்னாசிய பிரதேசத்தில் துருக்கிய ஸல்ஜூக்கியர்களின் வெற்றி...

ஹி.462(கி.பி.1071) இல் Manzikert (மன்ஸிகேட்/மலஸ்காட்) யுத்தத்தில் ஸல்ஜூக்கிய சுல்தான் அலப்அர்ஸலான் என்பவரிடம் உரோமர் படுதோல்வி அடைந்து சிலுவைப் போருக்கான இன்னொரு காரணமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்போரில் உரோம அரசன் நான்காம் "ரோமன்ஸ் டியோஜினஸ்" முஸ்லிம்களால் கைதியாக்கப்பட்டான். பின்னர்,பல நிபந்தனைகளோடு கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான்.

இந்த "Manzikert" (மன்ஸிகேட்)" யுத்தத்தில் உரோமர்கள் அடைந்த தோல்வி,அவர்களின் உள்ளங்களிலே எப்போதாவது, எப்படியாவது முஸ்லிம்களைத் தோற்கடிக்க வேண்டும் எனும் தீராத வெறியை   ஏற்படுத்தியிருந்தது. உரோமர்களின் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஏமாற்றத்தையும் தோல்வியாகவும் அமைந்த அப்போர், மேற்குலகைச் சேர்ந்த கிறித்துவர்கள்,கிழக்குலக முஸ்லிம் நாடுகளின் மேல் தமது கவனத்தைத் திருப்பக் காரணமாகவும் இருந்தது.

உரோமப் பேரரசன் பாப்பரசரிடம் உதவி கோருதல்...

ஸல்ஜூக்கிய சிற்றரசின் ஆட்சியாளர்கள் சின்னாசிய (துருக்கி)விலுள்ள உரோம அரசப் பிரதிநியான "அலக்ஸியஸ்" என்பவனின் ஆட்சிப் பிரதேசங்களான ஹலப்,ரஹா,மவ்ஸில் என்பவற்றைக் கைப்பற்றியதோடு ஐரோப்பியப் பிரதேசங்களையும் வெற்றி கொள்ள நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

வளர்ந்து வரும் ஈமானிய உணர்வுள்ள முஸ்லிம்களின் சக்தியை எவ்வகையிலும் தன்னால் தடுத்து நிறுத்த முடியாது எனக் கண்ட உரோம அரசன், கி.பி.1094ல் கிறித்துவ மதத் தலைவரான பாப்பரசரிடம் உதவி கோரியது தான் உடனடிக் காரணம் என வரவாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

கி.பி.869−ஆம் ஆண்டு ரோமிலும் கி.பி.879−ஆம் ஆண்டு ஸ்காண்டி நோபிலும் நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து கிறித்துவத் திருச்சபை கிழக்கு திருச்சபை, மேற்கு திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது.கிழக்கு திருச்சபையைச் சேர்ந்த அரசன் அப்போதைய உரோமத் திருச்சபையின் தலைவராக இருந்த பாப்பரசர் இரண்டாம் "ஏர்பனிடம்" உதவி கோரி வேண்டுகோள் விடுத்தான்.

கிழக்குத் திருச்சபையின் மீது தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் நிறுவிக்கொள்ள இதனை ஒரு சந்தர்ப்பமாகக் கருதிய மேற்குத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் இரண்டாம் ஏர்பன், உரோமப் பேரரசின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவி வழங்கினார்.

குறிப்பு:- ஸல்ஜூக்கியர் என்பது அப்பாஸிய ஆட்சியின் கீழ் ஆட்சி செய்த முஸ்லிம் சிற்றரசாகும்.

- தொடரும்.....

தற்சார்பை மறந்ததற்கான பரிசு, வாழ்நாள் அடிமை...


அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை...


அமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த அமெரிக்கர்களில் பதினெட்டு சதவிகிதம் பேர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் பதிமூன்று சதவிகிதம் பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இது கடந்த 1996-ம் ஆண்டு ஒன்பது சதவிகிதமாக இருந்தது. மொத்த மக்கள் தொகையில் இருபத்தாறு சதவிகித ஆண்களும், முப்பதுமூன்று சதவிகித பெண்களும் அமானுஷ்யமான அனுபவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்...

ஆதார் உண்மைகள்...


தனிமனித விவரங்கள் பொதுவெளிக்கு கொண்டு வருவது ஏற்றுக்கொள்ளவே முடியாது...

ஏற்கனவே 119 கோடிக்கும் கூடுதலான தகவல்களை திருடும் நிலை உருவாகியுள்ளது. இதில் ரூ10,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஆதார் கட்டமைப்பு அரசுக்கு உதவியதை விட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கே பெரிதும் உதவியுள்ளது.....