30/07/2018

ஒரிசா பாலு ...


அறிந்துக் கொள்ள வேண்டிய மனிதர்கள் பட்டியலில்...

இதில் நான் வரிசை வாரியாக இவருக்கு ஒன்றாவது இடம் இரண்டாம் இடம் என்றெல்லாம் கூற வரவில்லை.

நான் சொல்லும் நபர்கள் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டவும்
தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில இதை செய்கிறேன்

ஒரிசா பாலு...

இவரைப்பற்றி கூறுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும் முதலாவது இவர் கடல் சார்ந்த ஆய்வும் மீனவர்கள் பற்றிய  ஆய்வும் சிறந்தது.

கடல் ஆமைகள் தான் முந்தைய மூதாதையர்களுக்கு கப்பல் வழி காட்டி என்று இவர் அறிவித்த ஆய்வு முடிவு மிகவு‌ம் பிரசித்தி பெற்றது.

தமிழ் எழுத்துடைய பெயர்கள் உலக அளவில் எத்துனை இடங்களில் தமிழ் உள்ளது என்று அறிவித்தவரும் இவரே.

குமரிக்கண்டம் லெமூரியா ஆய்வுகளில் முக்கிய பங்கு இவருக்கும் உண்டு.

தமிழ் பற்றியும் தமிழர்களின் வாழ்கை முறைமை பற்றியும் ஆய்வு செய்து மேடைகளில் பேசி வரும் இவரை நம்ம அடிமை அரசுகள் கண்டுக்காமல் இருப்பதே வேதனை..

இதிலும் கடல் சார்ந்த ஆய்வுகளில் பல நாடுகளில்  பல நாட்கள் ஈடுபடுவதால் இவரது குடும்பத்தினர் கூட இவரை புரிந்து கொள்ளாமல் நோவினை செய்த தகவலும் உண்டு..

ஆனால் இப்போது இவரது குடும்பம் புரிந்து கொண்டு தமது மகனை இதே ஆய்வில் ஈடுபடுத்தி வருவதாகவு‌ம் தெரிகிறது..

நல்லா அறிவாளிகள் எல்லாம் அயல் நாட்டுல இருக்கீங்களே என்று நாம் வேதனை படும் சமயத்தில் இங்குள்ள மக்களின் வரலாற்று வாழ்கையை ஆய்வு செய்து உலக மக்களும் எடுத்துச்செல்லும் இவரை போன்றோரை நாம மதிக்கத்தான் செய்ய வேண்டும்.

அரசாங்கம் செய்யும் என்று காத்திருப்பது முட்டாள் தனம்..

அரசியல் வாதிகள் மீம்ஸும்
விளம்பர நடிகர்கள் மீம்ஸும்
போட்டு கை கொட்டி சிரிக்கும் நாம..

இவர்களை போன்றோரை அடையாளப்படுத்த வேண்டாமா? 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.