19/06/2018

பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே பிரிவுகளில்...


அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது. அமைதி வழியில் பிரச்சாரம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசுகள் பொய் வழக்குகள் புனைவதை வழக்கமாக கொண்டுள்ளன. மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் சமயங்களில் அரசுகள் கொண்டு வரக்கூடிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு எல்லா உரிமைகளையும் பெற்றவர்கள். பசுமை சாலை திட்டத்தால் 40,000 வீடுகள் பாதிக்கப்படும், கிட்டத்தட்ட 8,000ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும், பலநூறு கிணறுகள் மூடப்படும், பல நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட திட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. அப்படி அமைதியான வழிகளில் போராடும் பலரை அரசுகள் கைது செய்யத்துவங்கியுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எதற்காக நிலங்களை கையகப்படுத்துகிறீர்கள் என்று கேள்விகேட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சேலம் நகரில் பல சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்டுவரும் பியூஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் கைது, அரசின் திட்டங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களிடம் அச்சுறுத்தலை உண்டாக்கும் என்று நினைத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கோருகிறோம். - பூவுலகின் நண்பர்கள்...

இலுமினாட்டியும் இந்திய அடிமைகளும்...


பறவைகளின் வெப்பத்தை பரப்புவது...


வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.

சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக அவுசுத்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன.

வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம்  உணவைப்பெறுவதற் காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு ஒரு ‘வெப்பத்தை பரப்பு’வதற்காக அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது.

214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு வெப்பத்தை பரப்புவது போன்று செயல்படுவதும், வெப்பத்தை பரப்புவது (Radiator) தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது...

மொழி போர்...


ஏகபத்தினி விரதமும் ஐந்து அறிவும்...


ஆறறிவுடைய மனிதகுலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஏகபத்தினி விரத்தை ஐந்து அறிவுடைய பறவைகளும், விலங்குகளும் கடைப் பிடிக்கின்றன.

இப்படியான தவறுகளினாலேயே மகளிர்குலம் வன்புணர்ச்சிக்கு ஆளாவது நடைபெறுகின்றது, அனைத்து மக்களுமே ஏகபத்தினி விரத்தை கடைப்பிடித்தால் உலகிலே பெண்கள் மிகுந்த சுதந்திரமாக பாலியல் தொல்லைகள் அற்று வாழ வழிவகுக்கும்.

மனிதர்களிடையே அண்ணன்-தங்கை போன்ற நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே சிலவகையான பறவை, எலி, பல்லி இனங்களிலும் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் பாலுறவு தவிர்க்கப்படுகிறது என்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

கறுப்புக்கால்களை உடைய “கிட்டிவேக்” என்னும் கடற்கரைவாழ் பறவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை  BMC பரிணாம உயிரியல் (Evolutionary Biology) என்னும் ஆய்வு இதழ் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களிடையே ஒருதாரமணத்தை பின்பற்றுபவர்கள், பலதாரமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இதைப்போலவே, பறவைகளில்கூட ஒரே நேரத்தில் பல பறவைகளுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒரு சமயத்தில் ஒரு பறவையுடன் மட்டுமே பாலுறவு கொள்ளுதல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதுண்டு.

கறுப்புக்கால்களை உடைய கிட்டிவேக் (kittiwake) என்னும் கடற்கரையோரமாக வாழக்கூடிய பறவை மிகத்தீவிரமான ஏகபத்தினி விரதன். இவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதுதான் BMC பரிணாம உயிரியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம். பல ஆய்வர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இருந்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

கிட்டிவேக் (Kittiwake) பறவைகள் நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதும் அவ்வாறு பாலுறவு கொள்ள நேரிட்டால் உயிர்பிழைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்துபோகிறது என்பதும் சுவையான செய்தி.

கிட்டிவேக் பறவைகள் தங்களுடைய இரத்த உறவுகளை எத்தனை பெரிய பறவைக்கூட்டத்திலும் கண்டுபிடித்துவிடுகின்றன. அப்படி தவறுதலாக ஏதேனும் பாலுறவு ஏற்பட்டாலும்கூட முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை அல்லது பொரித்த குஞ்சுகளும் இறந்துபோய்விடுகின்றன.

குஞ்சுகளைப் பொரித்தவுடன் அவற்றின் பெற்றோர் நெருங்கிய இரத்த உறவில் வந்த குஞ்சு இது என்று இனங்கண்டு கொள்வது மட்டுமன்றி, குஞ்சுகளை வெறுக்கத் தொடங்குகின்றன.

இந்த வகை குஞ்சுகள் நோய், உண்ணி இவற்றால் எளிதில் தாக்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மெதுவாக இருப்பதால் மற்ற பறவைகளுடன் போட்டியிட்டு வாழமுடிவதில்லை.

கிட்டிவேக் பறவைகள் வாழ்க்கை முழுவதும் சேர்ந்தே வாழுகின்றன என்பதும் மணமுறிவு எக்காலத்திலும் ஏற்படுவதில்லை என்பதும் வியப்பான செய்தி. உடல் வாசனையைக் கொண்டு நெருங்கிய இரத்த உறவுகளை இந்த கிட்டிவேக் பறவைகள் அடையாளம் காண்கிறதா என்பதைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன...

இலுமினாட்டி கன்னடன் கமலின் பிக்பாஸ்.. மீண்டும் ஒருமுறை நினைவூட்டல்...


உன் அம்மா உனக்கு வேடிக்கை காட்டுகிறால் என்றால் உனக்குச் சோறு ஊட்ட முயற்சிக்கிறாள் என்று அர்த்தம்...

அதுவே உன் எதிரி உனக்கு வேடிக்கை காட்டுகிறான் என்றால்...?

எச்சரிக்கை தமிழினமே...

என் தனிப்பட்ட கருத்து கட்டக் கூடாது என்பதே ஆனால் நீதித்துறையை பொறுத்தமட்டில் சட்ட விதிகளுக்கு முரணாக இருந்தால் மட்டுமே தலையிட முடியும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி...


கடற்கரையில் ஜெ நினைவிடம் கட்டக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அடுத்த வாரம் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் எந்த விதி மீறல்களும் இல்லை எனக் கூறப்பட்டது...

ஈரோடு மாணவர்கள் சாதனை...


தமிழ் தமிழ் என பேச வைத்துவிட்டு தமிழ் நாட்டு பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியை புகுத்தும் இலுமினாட்டிகள்...


தமிழை அடுத்த உலகாலும் வணிக மொழியாக மீண்டும் நமது வரலாற்றை கைமாற்றும் வேலைகள் ஓடிகொண்டிருக்கிறது..

ஒரு பக்கம் உலக நாடுகள் முழுக்க தமிழை வளர்க்க, உலக நாடுகளின் வளர்ச்சிக்காக தொப்புள்கொடி நிலத்தின் வளத்தையும், வரலாற்று சுவடையும் முற்றிலும் வேரறுக்க முயற்ச்சித்துகொண்டிருக்கும் கார்பரேட்டுக்கு தமிழர்கள் கொடுத்துள்ள புது அதிர்ச்சிதான்.

பழங்குடி, குலதெய்வ வழிபாடு, தற்சார்பு இயற்கைவள பாதுகாப்பு...

இவைகள் பற்றிய பேச்சுக்களை அறிவார்ந்த தமிழர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இலுமினாட்டி எனப்படும் கார்பரேட்டின் வணிக சதிதிட்டங்களை பழங்குடி இனமக்கள் ஒன்று திரண்டு முறியடிப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துகுடி வெற்றி ஒரிசா நியாம்கிரி பழங்குடியினருக்கு புத்துணர்ச்சி தந்துள்ளதாக தன்னம்பிக்கை கொண்டுள்ளனர்..

மூலைக்கு மூலை மெடிக்கல் முளைக்க வைத்த கார்பரேட், விழிப்புணர்வடையும் தமிழர்களால் நாட்டு மருந்து கடைகள் அதிகம் முளைத்து தமிழர்கள் வாழ்க்கை முறை மாறுவதும் இலுமினாட்டிகளுக்கு மிகவும் சவாலானதாக உள்ளது.

போராட்ட களத்தை துளைத்தனர்;
சமூக வலை தளத்தை துளைக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றனர்.

வழிதவறி நகரம் வந்தாலும், பழங்குடியாய் வெற்றிபெற்று தற்சார்பு வாழ்விற்கு திரும்பும் நம் முயற்சிக்கு சற்றும் தளராதே வீரமிக்க மூத்தகுடி இனமே...

இன்றைய காலத்தில் வரும் நோய்களுக்கன காரணம்...


டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வந்தால் பாராட்டுக்குரியது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்...


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீரை பெறுவது பற்றி மத்திய நீர்வள அமைச்சரிடம் பேசினேன் என கூறியுள்ளார்.

மேலும், காவிரி ஆணையத்துக்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்கவில்லை, காவிரி ஆணையம் விரைவாக செயல்பட மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்...

இவர்களே போடுவார்களாம் இவர்களே உடைப்பார்களாம். இதற்கு பொறுப்பான மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் வீட்டில் இது போல் உடைத்து போடுவார்களா?


இது போன்ற அலட்சியமான வேலைகள் செய்யும் கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உள்ள அதிகாரிகள் இருக்கிறார்களா?

அரசியல் பின்புலம் உள்ள அரசியல்வாதிகளின் பினாமி கான்ட்ராக்டர்கள் செய்யும் தவறுகளுக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்குமா? இதற்கெல்லாம் என்ன தான் முடிவு?

Corporation Complaint Number: 996FKR...

இவற்றை முடிந்தளவு தவிர்க்க முயற்சியுங்கள்...


பாஜக எச்.ராஜா சர்மாவை முகநூலில் விமர்சித்த பத்திரிகை எடிட்டரை கைது செய்த அதிமுக அரசு...


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் உள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அந்த மீன் சந்தையை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க வினர் போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் 20 ந் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம்  நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்த மாலை முரசு தொலைக்காட்சியின் சப் எடிட்டர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த  ஜகுபர் அலி மகன் நூருல் அகமது ( 23 ) தனது முகநூலில்,  சாகும்வரை உண்ணாவிரதமா? இல்லை சாக்கு போக்கு சொல்லி முடிப்பார்களா? என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த முத்துப்பேட்டை பா.ஜ.க வினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் நூருல் அகமதுவை கைது செய்தனர்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு...


இயற்கையை அழிக்காமல் எப்படி அழகா பிரேசில் நாட்டில் ரோடு போட்டுயிருக்காங்க பாருங்க...


இந்த மாதிரி ரோடு பாலம்  கட்டி ரோடு போட தெரியாதுன்னு நீங்க சொன்னிங்க  அப்படினா பிரேசில் க்கு வேண்டுமானால் எங்க வரி பணத்துல ஒரு  ஓசி Tour போயிடு வாங்க. அத விட்டுட்டு எங்க மலைகளையும் இயற்கை வளங்களையும் ஆட்டையை போட வேண்டாம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் சென்னை - சேலம் சாலையை அனுமதிக்க முடியாது - பாமக அறிக்கை...


சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக  5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை  செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்திற்குள் செல்ல வசதியாக 277 கி.மீ நீளத்திற்கு    8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் இந்த  நெடுஞ்சாலையை அமைப்பதற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அது தங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் என்பதால் அத்திட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். ஆனால், தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி என்பதால் தங்களின் எஜமானர்கள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக  காவல்துறையினரை ஏவி, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, வீடு வீடாக சென்று மிரட்டுவது, காவல்துறை பாதுகாப்புடன் நில அளவை மேற்கொள்வது போன்ற அனைத்து வகையான அடக்குமுறைகளிலும் பினாமி அரசு ஈடுபட்டு வருகிறது.

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை-சேலம் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும், அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மற்றொரு புறம் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை முறியடித்து சாலைத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே  3 சாலைகள் இருக்கும் போது நான்காவதாக பசுமை சாலைத் திட்டத்திற்கான தேவை என்ன? மக்கள் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அவர்கள் துடிப்பது ஏன்? என்பன உள்ளிட்ட மக்களின் வினாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டியது வளர்ச்சிக்கு அவசியம் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சேலம் செல்லப் பயன்படுத்தப்படும் இரு தேசிய நெடுஞ்சாலைகளும் இன்னும் முழுமையடையவில்லை. உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகள் இன்னும் 4 வழிப்பாதைகளாக மாற்றப்படாததால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அதேபோல், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா வரையிலான சாலை ஆறு வழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழியாகவே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலம் செல்லப் பயன்படும் மற்றொரு சாலையான திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 8 ஆண்டுகளாகியும் அமைக்கப்படாமல் ஒட்டுச்சாலையாகவே காட்சியளிக்கிறது. இந்த மூன்று சாலைகளையும் சீரமைக்கும்படி பொன்.இராதாகிருஷ்ணனிடம் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் வலியுறுத்தியுள்ளேன். எனது சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் பலமுறை பொன்.இராதாகிருஷ்ணனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அதை செய்யாமல் ரூ.10,000 கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி புதிய பசுமை சாலை அமைப்பது திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இரும்புத்தாது கொள்ளையடிக்கவுள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறுக்க முடியுமா? ஒரே ஒரு நிறுவனத்தின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறித்து அமைக்கப்படும் சாலையை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றால், மக்களின் பயன்பாட்டுக்கான இரு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்களை எப்படி அழைப்பது? இது பெருந்துரோகம் அல்லவா?

சென்னை & சேலம் பசுமைச் சாலைக்காக 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் உட்பட மொத்தம் 1900 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்திற்காக தேவைப்படுவதாகவும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். புறம்போக்கு நிலங்கள் தவிர 1500 ஹெக்டேர் நிலங்கள், அதாவது 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் என்பதால் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதையும் இழந்து வாழ்வாதாரமற்றவர்களாக மாறுவார்கள். மொத்தம் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வனப்பகுதிகள் சீரழிக்கப்படும். இதனால் மக்களுக்கும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை யாராலும், எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது.

இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தி அமைக்கப்படும் பசுமை சாலை மக்களின் நலனுக்கானதாகவும், வளர்ச்சிக்கு பயன்படுவதாகவும் அமையுமா? என்றால் அதுவும் இல்லை. இது முழுக்க, முழுக்க ஒரு தனியார் நிறுவன நலனுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. பினாமி ஆட்சியாளர்கள் வேண்டுமானால் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முழக்கம் எழுப்பலாம். ஆனால், தங்களின் நலனுக்கு எதிரான இத்திட்டத்தை பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான யோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் எனப்படுபவை மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும்  ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்...

அதிர்ச்சி அடைந்த உலக வங்கி...


முற்றும் வர்த்தகப் போர்... கேள்விக் குறியாகும் வர்த்தகக் கழகம்...


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுத்திட உலகப் பணக்கார நாடுகளால் ஏற்படுத்தப்பட்டு மற்ற நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான் உலக வர்த்தகக் கழகம். 

இந்த அமைப்பு 1947 முதல்  வர்த்தக, வரிக்கான பொது ஒப்பந்தம் அதாவது  (General Agreements on Tariffs and Trade (GATT) என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1986 லிருந்து 1994 வரை நடந்த உருகுவே பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலக வர்த்தகக் கழகம் எனும் பெயர் மாற்றம் அடைகிறது இந்த அமைப்பில் இந்திய அரசு 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.

அன்றிலிருந்து இந்தியா உட்பட வளரும் நாடுகளின் இயற்கை வளத்தை, போராடிப் பெற்ற உரிமைகளை, மனித உழைப்பை வேகமாக தின்று கொழிக்கிறது உலக முதலாளியம்.அந்த உலக முதலாளிய அமைப்பு முறையில் அமெரிக்க முதலாளிகள் போன்றோருக்கு நிகராக
 தங்களையும் நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான் சீனா, இந்தியா, ருஷ்யா போன்ற நாடுகளின் முதலாளிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்க மூலதனத்தோடு இவர்கள் மல்லுக்கு நிற்கின்றனர். இதன் எதிரொலியாகத் தான் 'சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக' குற்றம்சாட்டி 800 வகையான சீன  பொருள்களை குறிவைத்து சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது  25 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதே மதிப்பிலான கூடுதல் வரி விதித்தது.

இந்த கதையே தான் அமெரிக்கா இந்தியாவுக்கும் இடையேயும் நடக்கிறது.சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஜி 7 மாநாட்டிலும் இத்தகைய வர்த்தகப் போரே பிரதிபலித்தது.

இந்தகைய வர்த்தக மோதல்கள் இன்றைக்கு உலக வர்த்தக அமைப்பை கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது.

நைரோபியில் 2015-ல் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக - பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டின்போதே, அந்த அமைப்பை மதிக்காத போக்கை அமெரிக்கா வெளிக்காட்டியது. அதிலிருந்தே இத்தகைய வர்த்தக மோதல்கள் பல்வேறு நாடுகளிடையே தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.

உலக வர்த்தக நிறுவனத்தின் (டபிள்யு.டி.ஓ.) தலைமை இயக்குநர் ராபர்ட் அசெவெடோவின் 2017 ஆண்டின்  இந்தியப் பயணம் இத்தகையப் போக்கை தான் நமக்கு சுட்டிக் காட்டியது .உலக வர்த்தக நிறுவன அமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உறுப்பினர்களான வளரும் நாடுகளின் தேவைகளை அமெரிக்கா கவனத்தில் கொள்ளாத போக்கு உலக வர்த்தக அமைப்பையே பெரும் கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது.

இன்னும் சில காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பல்வேறு சமூகத்தினரும் வாழும் சாதிய கிராம அமைப்பு முறையில் கடவுள் வழிபாட்டிற்கான சமத்துவ உரிமையை தாழ்த்தப்பட்ட மக்கள் எழுப்புகிறார்கள் எனில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை பல்வேறு வழிகளில் சாதிய ஆதிக்கம் தண்டிக்கும். அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியோடு கடவுள் வழிபாட்டு உரிமைக்காக போராடினால் சாதிய ஆதிக்கம் இறுதியில் கடவுளையே புறக்கணிக்கும், கோயிலை இழுத்து மூடும்.

இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து வர்த்தகப் போர் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மேற்கூறிய உதாரணத்தை பொருத்திப் பார்த்தால் நமக்கு  விஷயங்கள் பட்டென விளங்கும்.

இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது மார்க்ஸ், காண்ட் இடையே  நடந்த வர்த்தகம் பற்றிய பொருள் விளக்க சண்டை தான் நினைவுக்கு வருகிறது.
'நாடுகளுக்கு இடையே நட்புறவு மற்றும் அமைதியான பரிவர்த்தனைக்கான கருவி தான் வர்த்தகம்' என்று காண்ட் கூறினார்.

இதற்கு நேரெதிரான முறையில் ' ஆதிக்கத்திற்குள்ளான மக்களையும் நாடுகளையும் அடிமைப் படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான கருவி தான் வர்த்தகம்' என மார்க்ஸ் பதிலுரைத்தார்.

மார்க்ஸ் கூறிய பொருளிலேயே ட்ரம்ப் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறார்....

தமிழக சந்தைக்கு வந்த ஆர்கானிக் உப்பு - தமிழினமே எச்சரிக்கை...


தேடப்படும் குற்றவாளி பாஜக எஸ்.வி.சேகர்.. அதிமுக கடம்பூர் ராஜு குடும்ப விழாவில் காவல்துறை பாதுகாப்போடு கலந்து கொண்டார்...


பெண் நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டியளித்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகன் நிச்சயதார்த்த விழா சென்னை ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் செல்பி எடுத்த எஸ்.வி சேகர்...

கர்ர்த்த்தூ.... சட்டமாம் ஜனநாயகமாம்... மக்களாட்சியாம்...

மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? - ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்...


ஒருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே ஏழெட்டு லட்சங்களைத் தாண்டுகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச உடல் உறுப்பு கள்ளச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 85 லட்ச ரூபாய். கல்லீரல் 94 லட்சம். சிறுநீரகம் 93 லட்சம். ஒரு ஜோடி கண்கள் 14 லட்சம். எலும்புக் கூடு 5 லட்ச ரூபாய். ரத்தம் ஒரு லிட்டர் 43 ஆயிரம் ரூபாய். தோல் ஒரு சதுர செ.மீட்டர் 85 ரூபாய். சிறு எலும்புகள் மற்றும் தசைநார் 4 லட்ச ரூபாய்.

இப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது! உடல் உறுப்பை அளிக்கும் சாமானியனுக்கு இவ்வளவு விலை கிடைக்குமா என்றெல்லாம் அப்பாவியாகக் கேட்கக் கூடாது. சர்வதேச சந்தை நிலவரத்தை மருத்துவ மாஃபியாக்கள் நிர்ணயிக்கிறார்கள் எனில் சாமானியனின் சந்தை நிலவரத்தை அவரது குடும்பச் சூழலே நிர்ணயிக்கிறது. கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகபட்சமாக 93 லட்சத்துக்கு விலை போகும் சிறுநீரகத்தை ஐம்பதாயிரத்துக்குக் கொடுத்தவர்களும் / கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா, சீனா, இந்தோனேஷியா இவையெல்லாம் உடல் உறுப்புகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகள். கசாப்புக் கடைகள் என்றும் சொல்லாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாங்குவதில் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மட்டுமின்றி கள்ளச்சந்தை விற்பனையிலும் முன்னணியில் இருக்கிறது தமிழகம். நீண்ட காலமாக இந்தப் பேச்சுகள் மேலெழுந்தாலும், தற்போது தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி, இதுதொடர்பாகக் குற்றம் சாட்டியிருப்பது விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த இதய மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 25 சதவீதம் பேரும், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 33 சதவீதம் பேரும் வெளிநாட்டினர். அதாவது, நான்கில் ஒரு பங்கு மற்றும் மூன்றில் ஒரு பங்கு. இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் 31 இதயங்களும், 32 நுரையீரல்களும் வெளிநாட்டினருக்கே பொருத்தப்பட்டிருக்கின்றன. இது விமல் பண்டாாியின் குற்றச்சாட்டு மட்டும் அல்ல; இதுதொடர்பில் கேரள முதல்வரும் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றுமே கண்காணிக்கப்படுகின்றன; கணக்கில் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் கண்காணிப்பும் கிடையாது, கணக்கும் கிடையாது. ஆனாலும், இந்தியாவில் மூன்றரை லட்சம் நோயாளிகள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகத்துக்காகக் காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். ஆனால், ஆண்டுக்கு ஆறாயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே சட்டப்படி கிடைக்கின்றன. அதில் 3,500 அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன.
தமிழகத்தில் சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் எப்போதுமே சராசரியாக நான்காயிரம் பேர் நிறைந்திருக்கிறார்கள்.

இப்படித் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையே இருக்கும் இடைவெளியே உடல் உறுப்பு மாஃபியாக்கள் கொழுப்பதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. சுமார் 5,200 பேர் தமிழகத்தில் உடல் உறுப்புகள் கேட்டுக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் அளித்ததிலிருந்தே இதன் முறைகேடுகளைப் புரிந்து கொள்ளலாம். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் ஆறு மணி நேரத்தில் முடித்துவிட வேண்டும். குறைந்தகால அவகாசத்தால் வசதியற்றவர்கள், காத்திருப்புப் பட்டியலில் முன்னால் இருந்தாலும் பணம் ஏற்பாடு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், அதைவிட பல மடங்கு கூடுதலாகக் கொட்டிக்கொடுக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தியே முறைகேடுகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை மையங்கள், மருத்துவமனைகள், மார்ச்சுவரிகள், காவல் நிலையங்கள் உட்பட இதுதொடர்பான தகவல்களை அளிக்க ஏராளமான புரோக்கர்கள் இருக்கிறார்கள். துப்பு சொல்வதுபோல ஒவ்வொரு தகவலுக்கும் ஒவ்வொரு விலை. விபத்துகளில் மனித உயிரைக் காப்பாற்ற நடக்கும் முயற்சிகளை விட விபத்துகளைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளை வியாபாரம் செய்ய நடக்கும் முயற்சிகளே அதிகம். வெளிப்படையாகச் சொல்லப்போனால், மருத்துவத் துறையில் பலரும் மனிதர்களையும் அவர்கள் தம் உடல் உறுப்புகளையும் பணமாகத்தான் பார்க்கிறார்கள்.” என்கிறார்கள்.

இந்தியாவில் உடல் உறுப்புப் பரிமாற்றம், தானம் அடிப்படையிலேயே நடக்க வேண்டும். நெருங்கிய உறவினர் மற்றும் உறவினர் அல்லாதவர்களும் தானம் அளிக்கலாம். நெருங்கிய உறவினர் தானம் அளிக்கும்போது அறுவை சிகிச்சை நடக்கும் மருத்துவமனையின் நிபுணர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். உறவினர் அல்லாதவர் தானம் அளிக்கும்போது மாநில அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தானம் பெறக் கூடாது. தானமாக அளித்தற்காகப் பணமோ வேறு ஆதாயங்களோ அளிப்பது, பெறுவது தண்டனைக்குரிய குற்றம். இதற்காக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.20 லட்சம் முதல் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கலாம். ஈரான் உள்ளிட்ட சில நாடுகளே இதனை வணிகமாக அங்கீகரித்துள்ளன. நமது நாட்டிலும் இதைச் சட்டபூர்வ வணிகமாக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்களும் உண்டு. ஆனால், இந்தியா போன்ற சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கொண்ட நாட்டில் இதை வணிகம் ஆக்குவது ஏற்கெனவே அற உணர்வுகள் அருகிவரும் நமது மருத்துவத் துறையை மென்மேலும் வீழ்ச்சியடையவே செய்யும்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் : கசிந்ததா கசியவிடப்பட்டதா... போபாலிலும் இப்படித்தான் ஆரம்பித்தது...


தேனி மேகமலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன், 33 பேர் படுகாயம்...


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலையில் இன்று மாலை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்தனர்...

சின்னமனூரை அடுத்த உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்கள் வேன் ஒன்றின் மூலம் மேகமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மேகமலை பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த 33 பேரும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தளங்களில் ஒன்றான மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் 500 அடி பள்ளத்தில் கழிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அவர்களில், 5 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்..

காயமடைந்தவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்...

டேவிட் கெல்லியின் மர்ம மரணம்...


சூரியனை விட இரு மடங்கு பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் 9 பி என்ற கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்...


அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

அதில் இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெல்ட் 9 பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.

மேலும், கெல்ட் 9 பி கிரகம் சூரியனை விட இரு மடங்கு பெரியது மற்றும் சூடானதாகும்.

கெல்ட் 9 பி கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இதை கெல்ட் வகை டெலஸ்கோப் மூலமே காணமுடியும்.

மற்ற நட்சத்திரங்களால் சூழப்பட்டுள்ள கெல்ட் கிரகத்தின் ஒரு பகுதியில் நீர், கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் உள்ளது.

ஆனால் இந்த மூலக்கூறுகள் கிரகத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஊதாக்கதிர்கள் காரணமாக நிலையாக அங்கு இல்லை என கூறப்பட்டுள்ளது...

சாகர்மாலா - பசுமைவழி சாலை உண்மைகள்...


ஜவ்வரிசி...


இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது...

பாஜக - அதிமுக விற்கு செருப்பு கொடுத்து... தரமான நியாயமான பேச்சு....


தேங்காய் நண்டு....


மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள்.  இவற்றில் பல வகை இருந்தாலும் நாம் அறிந்திராத பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு.

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவை இந்திய பெருங்கடல் மற்றும் பசும்பிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது.

காரணம், இவற்றின் தோற்றம் பூச்சியை போன்று உள்ளதால் இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை. இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும்.

தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது. இதனால் தான், ‘தேங்காய் நண்டு’ என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது. மரம் ஏறுபவர்கள் சில நேரங்களில் இந்த நண்டுகளை பார்த்து பயந்து கீழே விழுவதும் உண்டு. தேங்காய் நண்டுகளை பொறுத்த வரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும்.

சில இடங்களில் அவற்றின் வண்ணத்தை வைத்து வகை பிரிக்கின்றனர். ஆனால் இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி இன விருத்தி செய்கின்றன. இவற்றை நண்டு என அறிந்தவர்கள் மட்டுமே பிரத்தியேகமாக தேடி பிடித்து உண்கின்றனர்.

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசிபிக் மகா சமுத்திரத்திர தீவுகளிலும் காணப்படும் நண்டு வகையில் ஒன்று தான் Coconut Crab.  இதனை தமிழில் கொள்ளைக்கார நண்டு என அழைக்கின்றனர்.

எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய இடுக்கியால் (முன் இருக்கும் ஒரு சோடி கால்கள் – pincers) உடைத்துத் தின்று விடும்.

தனது இடுக்கியால் 29 கிலோகிராம் வரையான பாரத்தை தூக்கும் திறன் படைத்தது. இதன் உடலின் நீளம் 40 சென்டி மீட்டர் ஆகும். பொதுவாக பெண் நண்டை விட ஆண் நண்டு பெரிதாக இருக்கும்.  இதன் நிறை அன்னளவாக 4 கிலோகிரமுடையது.

இந்த கொள்ளைக்கார நண்டால் நீந்த முடியாது, நீரில் மூழ்கி விடும். ஆறு மீட்டர் உயரமுள்ள (தென்னை) மரங்களிலும் ஏறும் இந்த கொள்ளைக்கார நண்டு 30 தொடக்கம் 60 வரையான வருடகாலம் வாழக்கூடியவை...

பிக்பாஸ் பார்க்கும் சமூகமே.. இதையும் கொஞ்சம் பார்...


கோனாரும் யாதவரும்...


திராவிடவாதிகள் தங்களின் சுய லாபத்திற்க்காக வடுக, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் அரசியல் மேலாதிகத்தை நியாயப்படுத்திட தமிழர்களை பல கூறுகளாக வெட்டி சிதைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர்.

ஆரியமும் இம் மண்ணில் தமிழின ஓர்மையை அழித்துவிட்டு, முழுமையாக ஆரிய கலப்பு செய்ய முடியாவிட்டாலும் ஆரிய கலப்பினமான வடுக, கன்னடர் தெலுங்கர் மலையாளிகள் செய்யும் சூழ்ச்சி தமிழின ஓர்மையை சிதைத்து விட செய்யும் முயற்சி,

இந்திய தேசிய மாயையை வலுப்பெற செய்கிற படியால், ஆரியமும், திராவிடமும் எப்பொழுதும் தமிழர்கள் முன் சில நேரம் பகையாளிகள் போலவும், சில நேரம் நண்பர்கள் போலவும் தோற்றம் தந்தாலும் தங்களுக்குள் கள்ளக்கூட்டும், கள்ளக்காதலும் கொண்ட ஓர்மைப் பட்ட இரு வகை வழி முறை என்பதை நாம் அறிவோம்.

கோனார் சமுதாய மக்கள் முல்லைத்திணையின் பூர்வீக மக்களாவர். தூய தமிழரான இடையர் குடியினரை எப்படியேணும் மடை மாற்றம் செய்து ஆரியமயப் படுத்திவிட துடிக்கிறது ஆரியமும், திராவிடமும்.

கோனாரை யாதவராக்குவதால் இந்திய மாயைக்குள் இழுத்துச் செல்ல முடிகிறது பிராமணியத்தால் சாதி, சாதியாய் சிதைத்துவிட்ட தமிழ் இனத்திற்க்குள் பெரிய அளவில் இனக் கலப்பு செய்ய முடியாவிடினும், அடிமை என்பதை விட ஆள்பவன் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமையை ஆசைக் காட்டி இந்திய தேசியம் என்கின்ற மாய வலைக்குள் சிக்கவைத்து விட்டது ஆரியம்.
   
கோனார் என்கின்ற தன் வம்ச வழி தமிழின தொழிற்ச்சார்ந்த அடையாளத்தை அடிமையெனக் கருதி யாதவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட வைத்து விட்டது.

இதற்க்கு கோனார் சமுதாய மக்களில் டில்லிக்கு விசுவாசமுள்ள, திராவிடத்திற்கு துணை போகின்ற அல்லது திராவிட தலைமையில் உள்ள யாதவ வந்தேரிகளோடு கை கோர்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் துரோகிகள் யாதவர் என்று மடை மாற்று செய்து வருகின்றனர்.

“கோனாருக்கும், யாதவருக்கும் இன ரீதியாக யாதொரு சம்பந்தமும் இல்லை”

இந்த யாதவர்கள் யார்?

எங்கிருந்து எப்பொழுது தமிழகத்திற்க்குள் நுழைந்தார்கள்.

தமிழன் வந்தவனையெல்லாம் வாழ வைத்துவிட்டு, தன் அடையாளத்தை துறந்து, வந்தவனின் அடையாளத்தை தன் அடையாளமாக கொண்டாடி கோமாளியாய் போனதன் பின்னனிதான் என்ன என்பதை பார்ப்போம்..

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாதவர் என்னும் இடையர் குடியினர் தெற்க்கு நோக்கி நகர்ந்து தக்காண பீட பூமி பகுதியில் ஓர் எழுச்சிப் பெற்ற அரசாக கி.பி.12 ம் நூற்றாண்டு வாக்கில் ஓர் அரசை நிறுவினர்.

அப்படி எழுச்சிப் பெற்ற யாதவர்களின் அரசுகளில் குறிப்பிடதக்க அரசு தேவகிரியின் யாதவர்களின் அரசாகும்.

ஆரம்பத்தில் மேலை சாளுக்கிய அரசுக்கு திறை செலுத்தி வந்தவர்கள், மேல சாளுக்கியரின் வீழ்சிக்குப் பின்னர் தனித்துவம் பெற்ற அரசாக நிலைப் படுத்திக் கொண்டனர். இவர்கள் மராட்டியப் பகுதியில் நாசிக்கில் இருந்து தேவகிரிவரை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக்கிக் கொண்டு ஆண்டனர்.

கி.பி.12 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டுகள் இறுதி வரையிலும் ஆண்டனர்.

கி.பி. 14 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் சுல்த்தானிய அரசுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்து இறுதியில் கப்பம் கட்ட தவறியமைக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்து இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்டு, யாதவர் அரசு முடிவடைந்தது.

இவர்கள் கிருஷ்ண பகவானின் முன்னோரான “யாடு” என்னும் கடவுளின் வழிவந்தவர்கள் என இவர்கள் தங்களை சொல்லிக் கொண்டதால் யாதவர் என அழைக்கப் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தவிர ஹொய்சாளர்கள் மற்றும் காகத்தியர்கள் தக்காணத்தை ஆண்டனர். இம்மூன்று அரசுகளுமே இந்து சமயத்தை பேணி பாதுகாத்தன.

தென்னகத்தில் காகத்தியர்கள் இஸ்லாமிய சமயம் பரவுவதை பெரும் முயற்சி செய்து தடுத்து வந்தனர். காகத்தியர்கள் ஆரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தனர்.

காகத்தியர்கள் பேணி வந்த இந்து சமயப் பற்று பின்னாளில் விஜய நகரப் பேரரசு எழுச்சிப் பெற தூண்டுகோலாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏற்கனவே அலை, அலையாய் வந்து நம் தமிழ் மன்னர்களை முட்டாள்களாக்கி சுகம் அனுபவித்து வந்த கன்னட, வடுக, மராட்டிய பிராமணர்கள் தமிழகத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர அரசுகளை பலவீனமடையச் செய்தனர்.

அவர்கள் தூண்டி விட்டு மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளச் செய்து பலவீனமான அரசுகளாக ஆக்கி ஒற்றுமையைக் குலைத்தனர்.

இந்நிலையில் காகத்தியர்கள் டில்லி சுல்த்தானியர்களிடம் வீழ்ச்சி பெற்றப்பின், உருவான விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்க்குள் ஊடுருவி தமிழ் மன்னர்களை வீழ்த்தி, தமிழகத்தை சூறையாடி, தமிழின மக்களை கொன்று குவித்து வடுக ஆட்சியை அமைத்தது.

மராட்டியர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தின் தஞ்சை போன்ற முக்கிய பகுதிகளை கைப் பற்றி ஆண்டனர்.

இப்படி பரவலாக தமிழகத்திற்க்குள் அமைந்த அன்னிய ஆட்சியின் விளைவாக மராட்டிய மொழி மற்றும் வட மொழி பேசும் யாதவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வாழ தழைப்பட்டனர்.

இவ்வாறு தமிழகத்துக்கு அன்னியமான நாடோடிக் கூட்டமான யாதவர்கள் தமிழகத்தின் அரசியலையும், திராவிடக் கருத்தியலையும் சாதகமாக்கிக் கொண்டு ஆளுமைக் கூட்டமாக பரிணமிக்கலாயினர்.

இப்படி வந்தேரிகள் வாழ, ஆட்சி செலுத்த, அதிகாரம் பறிக்கப் படாமல் இருக்க ஈ.வெ.ராமசாமி என்னும் கன்னட தெலுங்கர் பல்வேறு வகையில் தமிழக மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்தார் என்பது, நாம் கவனிக்கத் தக்கது.

இம் மண்ணின் முல்லைத்திணை மக்களான கோனார் சமுதாய மக்களுக்கும், யாதவர் என்னும் நாடோடி ஆரிய, திராவிட கலப்பு இனக் கூட்டத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

கோனார் சமுதாய மக்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன், ஓட்டன் என காலம் காலமாய் வழங்கி வந்த திணை பகுதி அடையாளப் பெயரான கோனார் என்னும் சொல்லை கேவலமாகக் கருதி யாதவர் ஆக முயற்சிப்பது இழிவான செயலாகும். சர்வ தேசத்தமிழனும் வெட்கி தலைகுனிய தக்கதாகும்...

வாழ்க தமிழ்.. வெல்க தன்னுரிமை.. அடைவோம் மண்ணுரிமை...