16/11/2017

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக ஸ்டாலினை வறுத்தெடுத்து பாமக தலைவர் ஜி. கே. மணி அறிக்கை...


ஊழல் வரலாற்றை சுட்டிக்காட்டினால் திமுக வுக்கு கோபம் வருவது ஏன்?

உண்மை சுடும்... ஊழல் மேலும் சுடும். அதனால் தான் திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையக் குற்றச்சாற்றுகளை நினைவுபடுத்தியதற்காக திமுக. என்ற ஊழல் முகாமின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நண்பர் க.பொன்முடி துள்ளிக் குதித்திருக்கிறார்.

திமுக செய்த ஊழல், துரோகம் குறித்த உண்மைகளைக் கூறினால் அக்கட்சித் தலைமைக்கு கோபம் வருவது வியப்பளிக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை; அவர் மாறவே மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வழக்கமாக பா.ம.க. மீது புழுதி வாரித் தூற்றுவது என்றால் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்ற வன்னியரை மட்டுமே பயன்படுத்தி பழக்கப்பட்ட   மு.க.ஸ்டாலின், இப்போது மருத்துவர் அய்யாவுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் க.பொன்முடியை  ஏவி விட்டிருப்பது தான் அந்த மாற்றம் ஆகும்.

ஒருவேளை திமுகவில் அதிக எண்ணிக்கையில் ஊழல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை சந்தித்தவர்/சந்தித்துக் கொண்டிருப்பவர் என்பதால் பொன்முடிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் மாற்றம் நல்லது தான். அதற்காக வாழ்த்துகள்.

நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்ததில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த அளவுக்கு பங்கு உண்டோ, அதை விட அதிக பங்கு திமுகவுக்கு உண்டு.

2010-ஆம் ஆண்டில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் முடிவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த போது, அந்த அரசில் திமுக அங்கம் வகித்ததா... இல்லையா?

திமுக நினைத்திருந்தால் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் முடிவை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா... முடியாதா?

2009-ஆம் ஆண்டில் திமுக கேட்ட அமைச்சகங்களை ஒதுக்க மறுத்ததற்காக மத்திய அரசில் சேர மாட்டோம் என்று மிரட்டல் விடுத்து, தில்லியிலிருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய திமுக தலைமை, நீட் விவகாரத்தில் அதே ஆயுதத்தை பயன்படுத்த மறுத்தது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு நண்பர் பொன்முடி பதிலளிக்க வேண்டும்.

அதை விடுத்து நீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது, வழக்கு தொடர்ந்தது என பழைய பல்லவியையே பொன்முடி பாடிக்கொண்டிருப்பதால் பயனில்லை.

2010-ஆம் ஆண்டில் நீட்டை திமுக தடுத்திருந்தால்  இப்போது நீட் குறித்த விவாதத்திற்கே வேலையில்லை. அப்போது நீட்டை தடுக்காமல் இப்போது நீட்டுக்காக குரல் கொடுத்தோம் என்பது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல் அன்றி வேறல்ல.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்தது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இடம் பெற்றிருந்தார். அப்போதும் நீட் தேர்வை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு தரப்பட்டது. ஆனால், அதை ஏற்க முடியாது என்று கூறி நீட் திட்டத்தை விரட்டியடித்தார்.

அதனால் தான் 2009&ஆம் ஆண்டு வரை நீட்  தேர்வு வரவில்லை. 2006&07 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஒப்புதல் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட்டவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

அப்போது மட்டும் அவர் கையெழுத்திட மறுத்திருந்தால் இப்போது நீட் விலக்கு சட்டத்திற்கு ஏற்பட்ட அதேகதி தான் திமுக அரசு கொண்டு வந்திருந்த நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டத்திற்கும் ஏற்பட்டிருக்கும்; தமிழகத்தில் சமூக நீதி பிழைத்திருக்காது என்பதை எல்லாம் தெரிந்த நண்பர் பொன்முடி அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் நலன்களைக் காப்பதில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடைபிடித்த உறுதிப்பாட்டில்  பத்தில் ஒரு பங்கை திமுக தலைமையும், அதன் மத்திய அமைச்சர்களும் கடைபிடித்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தை நெருங்கியிருக்காது.

நீட் தேர்வு மட்டுமல்ல... தமிழக நலன் சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் திமுக செய்தது துரோகம்.... துரோகம்... துரோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை..

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று கடைசி நேரம் வரை கூறி வந்த திமுக தலைமை, நாடாளுமன்றத்தில் அத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது திடீர் பல்டி அடித்து ஆதரித்தது ஒன்று போதாதா திமுகவின் துரோகத்தை அம்பலப்படுத்த?

உலகப்புகழ் பெற்ற 2ஜி வழக்கில் திமுகவின் முதல் குடும்பம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு திமுக எத்தனையோ துரோகங்களை செய்தது. அந்த துரோகங்களில் ஒன்று தான் நீட் தேர்வை தடுக்காதது ஆகும்.

தமிழ்நாட்டில் ஒரு தலைமுறை மறந்திருந்த மது அரக்கனை மீண்டும் அறிமுகப்படுத்தியது திமுக தான். தமிழகத்தில் இப்போது அதிக எண்ணிக்கையில் மது ஆலைகளை நடத்தி வருவதும் திமுக தான்.

ஆனாலும், மருத்துவர் அன்புமணி இராமதாசை காப்பியடித்து, ஆட்சிக்கு வந்தால் முதல் நாள்.. முதல் கையெழுத்து மது விலக்கு என்று திமுக பேசுவது எப்படி முரண்பாட்டின் உச்சமோ, அதேபோல் தான் நீட் தேர்வை அறிமுகம் செய்த திமுக, அத்தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறுவதும் முரண்பாட்டின் உச்சம் ஆகும். ஆனால், பாவம், பொன்முடிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை உள்ளீடற்றது என்று பொன்முடி கூறியிருக்கிறார். உள்ளீடற்ற அந்தக் குற்றச்சாற்றுக்காகத் தான் திமுக தலைமை தில்லியிடம் சரண் அடைந்து கிடந்ததா? என்பதை அப்போது அரசியலுக்கு வராத பொன்முடி கட்சித் தலைமையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்,
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது,
10. வீராணம் ஊழல், 
11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்,
11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு,
24. தொழிற்சங்க ஊழல்,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்,

ஆகிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை என்ற வரலாற்றை பேராசிரியர் பொன்முடிக்கு நான் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.

உலகம் முழுவதும் இந்தியாவுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்த 2ஜி ஊழல் வழக்கின் நாயகனே  திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா தானே. இந்த ஊழலால் திமுக பயனடையவில்லை என்று பொன்முடியும், மு.க.ஸ்டாலினும் கூறுவார்களேயானால்,  இந்த ஊழலில் கைமாறிய பணம் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்காக எப்படி கொண்டு வரப்பட்டது? இந்த ஊழலை மறைக்க என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன? என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இணையதளங்களில் காணப்படுகின்றன. அவற்றை நண்பர் பொன்முடி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

திமுகவின் ஊழலை மறுக்கும் நண்பர் பொன்முடி மீதே வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்ததாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலையான ரகசியம் அனைவருக்கும் தெரியும்.

அது தவிர செம்மண் கொள்ளை வழக்கு, சென்னை சைதாப்பேட்டையில் நிலம் அபகரிப்பு வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

திமுகவைச் சேர்ந்த 16 முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டு ஊழல் வரலாற்றை  திமுகவை தவிர்த்து விட்டு எழுத முடியாது. ஊழல் என்றாலும் திமுக என்றாலும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் ஊழலை தொடங்கி வைத்தது திமுக, அதை பெருக்கி வருவது அதிமுக என்பது தான் உண்மை. இந்த உண்மையை பேசாமால் இருக்க முடியாது. இதற்காக திமுக வருந்துவதில் பயனில்லை.

நீட் தேர்வு, ஊழல் குறித்த அறிக்கையில் அந்த சொற்களை விட வன்னியர் என்ற சொல்லைத் தான் பொன்முடி அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஊழல், நீட் தேர்வு ஆகியவற்றுக்கும் வன்னியருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை. அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்ததைப் போல பா.ம.க.வை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு பொன்முடி அவரது சாதி வெறியை வெளிப்படுத்தி உள்ளார்.

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரைச் சுற்றியிருக்கும் திமுக மூத்த தலைவர்களுக்கு எந்த அளவுக்கு சாதி வெறி பிடித்திருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

தமிழகத்தில் 89 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக திமுக விளங்குகிறது. ஆனால், சட்டப் பேரவையில் உறுப்பினரே இல்லாத பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.

திமுகவோ விளம்பர அரசியலில் மட்டும் தான் ஆர்வம் காட்டுகிறது.

ஊழல், துரோகம் குறித்த உண்மைகளை சொன்னால் துள்ளிக் குதிப்பதை விடுத்து ஆரோக்கியமான, நாகரிகமான அரசியலை செய்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட திமுக முன்வர வேண்டும்...

சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...


வரலாற்றில் இருந்து ஒரு தகவல்...


1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக் கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம் (paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை...

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool day)...

மிளகு மருத்துவம்...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

-குதம்பைச் சித்தர்..

உணவில் தினமும் மிளகு இரசம் இடம் பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாத போதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத் தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி] மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்று நோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்து அரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடி முளைக்கும்.

மிளகு ஊறுகாய்: பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

மும்பையில் 50 அடி தூரத்திற்கு சுரங்கம் தோண்டி பாங்க் ஆப் பரோடா வங்கியின் 27 லாக்கர்களில் இருந்த நகைகளை கொள்ளையடித்த பலே திருடர்கள்...


அந்த சிலர் இலுமினாட்டிகள்...


அந்த சிலர் இலுமிணாட்டிகள் என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.

இலுமினாட்டி என்ற சொல் நான் சொல்ல வரும் அரச குடும்பம் முழுவதையும் குறிக்காது. இருப்பினும் ஆங்கில ஆய்வாளர்கள் இவர்களை இலுமினாட்டி என அழைப்பதால் இந்த பெயரே அதிகமாக அறியப்படுவதாலும், நானும் இதே பெயரை இந்த அரச குடும்பத்திற்கு பயன்படுத்துகிறேன்.

Adam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமினாட்டி இரகசிய குழு மே,1,1776 ல் தோற்று விக்கப்பட்டது.

இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது.

இவர்கள் 1776ல் 13 பேர். இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் வரலாற்றில் இந்தியா  முக்கிய பங்கு  வகிக்கிறது.

அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள். இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன. உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள்  தான்.

இவ்வாறு எல்லாம் சொல்லப்படினும் எனது ஆய்வு படி இலுமினாட்டி என்பது இவர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்திய ஒரு அமைப்பு மட்டுமே.

அரச குடும்ப உறுப்பினர் சிலர் இதில் உறுப்பினராக இருந்தனர். இந்த 13 என்ற எண்ணிக்கை ஒரு காரணத்திற்காக குறிப்பிடுகிறது.

13 BLOODLINE - 13 குடும்பங்கள்...

1.  The Astor Bloodline 
2.   The Bundy Bloodline
3.   The Collins Bloodline
4.   The DuPont Bloodline
5.   The Freeman Bloodline
6    The Kennedy Bloodline
7    The Li Bloodline
8.   The Onassis Bloodline
9.   The Reynolds bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12 .The Russell Bloodline
13. The Van Duyn Bloodline

[ Merovingian] (European Royal Families)
கால போக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன. அவை..

1. The Disney bloodline
2. The Krupp bloodline
3. The McDonald bloodline

கவனித்தீர்களா ? எண்ணிக்கை கூட சரியாக 13 வரவில்லை.

நாம் பேசவரும் இந்த அரச குடும்பம் ஒரே குடும்பமும் அதன் சந்ததிகளுமே . இவர்கள் வேறு யாருடனும் கலப்பு செய்யாமல் தங்கள் பெண்களை பாதுகாப்பதன் வழியக தங்கள் இனத்தை தூய்மையாக வைத்துள்ளனர்.

இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகை ஆள முயலுகின்றனர்.

இவர்கள் தான் பழங்குடிகளை காடுகளில் இருந்து இழுத்துவந்து பெரும் நகரங்களை கட்டியவர்கள். கடல் வணிகத்தின் வழியாக உலகை ஆண்டவர்கள்.

இவர்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்...

மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டு பிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்…

மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியவில்லை என்டா விடுங்க‌… நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

“ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்”.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா?

மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு.

வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் “தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால “electroplating” என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்,

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி. உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

தமிழக அரசின் லட்சனம்...


ஜெயா - சசிகலா குடும்பத்தினரால் , சூறையாடப்பட்டு சுரண்டப்பட்ட தமிழகம்...


மேலாளர் பெயரிலேயே அறுபது ஏக்கர் என்றால் இன்னும் எங்கெங்கு என்னவெல்லாம் உள்ளதோ ?

ஆக  கொடநாடு முழுமையும் இவர்கள் வாங்கி விட்டார்கள் என்றே அறிகிறோம்.

விலகுமா ஆறு பேரை காவு கொண்ட கொட நாடு எஸ்டேட் மர்மம்..

கடந்த 9-ம் தேதி நாடு முழுவதும் சசிகலா குடும்பத்தை குறிவைத்து 187 இடங்களில் சோதனையை துவக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்து விட்டார்கள்.

ஆனால் கோடநாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்றும் 6-வது நாளாக நீடிக்கிறது.

சோதனை துவங்கிய முதல் நாளன்று கோடநாடு எஸ்டேட்டிற்குள் சென்ற அதிகாரிகள் 2 மணி நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது மேலாளர் நடராஜனையும் உடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தான் கோடநாட்டில் மற்றொரு இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டையும் ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கியிருப்பது தெரிய வந்தது. எனவே அந்த எஸ்டேட்டில் தான் தொடர்ந்து சோதனையும், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

எஸ்டேட் மேனஜர் நடராஜனும் 60 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். குறிப்பாக கிரீன் டீ எஸ்டேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆவணத்தையும் சரி பார்த்து விசாரிக்க 4 மணி நேரம் எடுத்து கொள்வதால் கிரீன் டீ எஸ்டேட்டை பொறுத்த வரை, அங்கு விசாரணை நீடிக்கிறது.

கோடநாடு எஸ்டேட்டிற்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா சென்றால் அவர்கள் முன்னிலையில் தான் சில அறைகள் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த அறைகளை சல்லடை சல்லடையாக சோதனை போட்டு எல்லாவற்றையும் கண்டறிய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. சுவற்றில் தங்க நகை அல்லது கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகள் மத்தியில் உள்ளது.

இதனால் கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் பயன்படுத்திய அறையை சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுவர்களை ஸ்கேன் செய்யும் நவீன கருவிகளுடன் காத்திருக்கும் அதிகாரிகள், மேலிட அனுமதி கிடைத்தவுடன் சோதனையை துவக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்றும், எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாதாந்திர வரவு செலவு ஆகியவை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது..

இது வரை ஜெயலலிதாவின் இரு ஓட்டுனர்கள் அவர்கள் நண்பர் மற்றும் அவரின் மனைவி , கொட நாடு எஸ்டேட் காவலாளி உள்ளிட்ட ஆறு பேரின் மர்ம மரணம் முடிச்சி அவிழாத நிலையில் ஜெயலலிதா சசிகலா தாங்கும் ரகசிய அறையில் கிடைக்க போவது என்ன வென்று பல்வேறு ஹாஸ்யங்கள் உலவுகிறது ..

கடந்த 25 ஆண்டுகளில் ஜெயலலிதா 15 வருட ஆட்சியில் எப்படி 20,000 கோடிக்கு மேல அசையா சொத்து வாங்கி குவித்தார்கள் என்ற ஆச்சிரியத்தில் வருமான வரி அதிகாரிகள் மலைத்து போய் உள்ளதாக தகவல்கள் கசிகிறது...

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்...


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.

சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.

சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

"ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்...

தியானம் ஏன் எதற்கு எப்படி?


நம் அன்றாட வாழ்கையில் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் சக மனிதர்களால் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம்.

ஏன் இப்படி என்றால் பிரபஞ்சம் அப்படித் தான் உருபெற்றுள்ளது.

ஆம் நேர் எதிர் ஆற்றல்கள் இரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தால் அந்த இடத்தில் இயக்கம் இருக்காது.

ஆம் இன்பதுன்பம் இரண்டும் இல்லை என்றால் பற்றற்ற நியூட்ரான் தளத்தில் மோன நிலையில் இருந்துவிடுவீர்கள்.

அங்கு காலம் இடம் இருப்பு அனைத்தும் உறைந்துவிடும். அதுதான் இன்பதுன்பம் அற்ற பிறவா நிலை.

நாம் இன்பம் ஏற்படும் போது வாழ்வை வரமாகவும், துன்பம் ஏற்படும் போது அதையே சாபமாகவும் பார்க்கிறோம்.

இந்த நிலையை போக்க ஒரே வழி தியானம். ஆம் தியானத்தின் போது மட்டுமே மனம் மூலத்தில் ஒடுங்குகிறது.

தியானம் பழக ஆசைப்படுபவர்கள் சில சின்ன விடயங்களை கடைபிடிக்க தவறி விடுகிறார்கள்.

நம் உடல் மற்றும் மனதை ஒரே மாதத்தில் நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முடியும்.

ஆம் அதற்கான குறிப்புகள் இதோ..

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் பழகுங்கள். இடத்தை மாற்றாதீர்கள். ஒருநாள் கூட தவற விடாதீர்கள்.

தடிமனான தடுப்பில் அமர்ந்து தியானியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பழக மறக்காதீர்கள். படிப்படியாக நேரத்தை கூட்டுங்கள்.

எந்த எண்ணம் வந்தாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் நிறைய வரும் வரட்டும். அதை பற்றி கவலை கொள்ளாமல் வெருமனே மூச்சை கவனியுங்கள்.

அவ்வப்போது கவனத்தை இழுத்துவந்து மூச்சில் நிறுத்துங்கள். ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல உங்களுக்குள் அமைதி பரவுவதை உணர்வீர்கள்.

இரண்டு வாரத்தில் பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பாய ஆரம்பத்திருக்கும். மூன்று வாரத்தில் உங்கள் முகம் பொலிவு பெற்றும் உங்களை சுற்றி நல்லதே நடப்பதையும் உணர்வீர்கள்.

ஒரு மாதத்தில் நீங்கள் ஆழ்ந்த தியான நிலையை அடைந்திருப்பீர்கள். இவ்வளவு தான் தியானம்.

இது உங்களுக்கு நடக்கவில்லை எனில் நான் மேலே கூறியிருப்பதை நீங்கள் கடை பிடிக்கவில்லை என்றே அர்த்தம்...

அந்த போராட்டத்திற்கு பிறகு கட்சிகள் உருவாகின, சில நடிகர்களின் பின் மக்கள் சென்றனர்..


அந்த கட்சிகளும் நடிகர்களின் கொள்கைகள் ஒன்று என்றால் ஏன்..? அவர்கள் சேரவில்லை..

தமிழ் தேசிய அரசியலை அனைவரும் பேசிகிறார்கள் ஆனால் ஏன்..? ஒன்று சேர மறுக்கிறார்கள்...

கொள்கைகளை இல்லாத அவர்கள் ஒன்றாக இணைகின்றனர்.. ஆனால்
இதுதான் தமிழ் தேசிய அரசியல் என்று அறிந்த நாம் ஏன்..? பிரிந்து நிற்க வேண்டும்...

இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் ‘எக்ஸ்’ சின்னம். குஜராத்தில் பாஜக கலவரம் நடத்த முயற்சி...


குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ‘எக்ஸ்’ என்ற சின்னம் பரவலாக வரையப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர்9, 14ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 180தொகுதிகளில் 150இடங்களில் வெற்றிபெற பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஹார்த்திக் பட்டேல் ஆகியோர் பாஜகவின் இலக்குகளை முறியடிக்க தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத் நகரில் பல இடங்களில் எக்ஸ் என்ற குறியீடு வரையப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இக்குறியீடு இடம் பெற்றுள்ளது.

இந்துத்வா சமூகவிரோதிகள் பிரச்சனையை தூண்டும் வகையில் இதுபோல் எழுதியுள்ளார்களா என்று அப்பகுதி மக்கள் கலக்கம் கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் சதி என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதேபோன்று 2002 கலவரம் நடக்கும் முன்பு இஸ்லாமியர்களின் வீடுகள் அடையாளம்  இடப்பட்டு சூரையாடப்பட்டன தீயிட்டு கொளுத்தபட்டன....

அதேபோன்று மீண்டும் சங்பரிவார் பயங்கரவாதிகள் தேர்தல் தோல்வியை பயந்து இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்ய முஸ்லிம்களை பலிகாடக்க முடிவு செய்துள்ளனரா என சந்தேகிக்கப்படுகிறது.

எதுவாயினும் இம்முறை பாஜக ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது வரலாறு ஆக குஜராத் இஸ்லாமியர்கள் தங்கள் உயிர் பொருள் அனைத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்... ஏன் என்றால் நடப்பது காவி வெறியர்களின் ஆட்சி...

தண்ணீருக்காக 4 கி.மீ நடந்து செல்லும் இருளர் பெண்கள்...


செங்கல்பட்டு அருகேயுள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் 4 கி.மீ நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அரும்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சீத்தாவரத்தின் பாலாற்றங்கரையை ஒட்டி இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 60 ஆண்டுகளாக இருளர் குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்துளை பம்பு மற்றும் சிறு மின்விசை மோட்டார்கள் மூலம், மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். இந்நிலையில் பம்பு மற்றும் மோட்டார் ஆகிய இரண்டுமே பழுதடைந்துவிட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழவேரி கிராமத்திற்குச் சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வருகின்றனர். இவ்வாறு 4 கி.மீ சென்று தண்ணீர் கொண்டு வருவதால் கால் வலி ஏற்படுவதாகவும், வீட்டில் உள்ள குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை...

நான் படித்த உளவியலில் இருந்து.. எப்போதும் வெற்றிப் பெறுவது எப்படி என்பதறக்கான வழிமுறைகள்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்...

கொடைக்கானல் ஏரி மீன்களிலும், பெரியகுளம் கண்மாய் மீன்களிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதரசம். அதிர்ச்சி ரிப்போர்ட்டர்...


கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில், 1984 முதல் தெர்மா மீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவந்தது. இங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு தோல் பாதிப்பு உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்பட்டதால், கடந்த 2001ல் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளை அகற்றும் பணிகளை உலகத் தரத்தில் நடத்தவேண்டும் என தமிழக பாதரச எதிர்ப்பு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். நீதிமன்றங்களிலும் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தில்லி ஐஐடி, லக்னோ தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம், உதகை மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து அளித்த ஆய்வறிக்கையின்படி, பாதரசக்கழிவுகளை சோதனை அடிப்படையில் அகற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், இந்தப் பணிகள் இன்னமும் முழு வீச்சில் தொடங்கவில்லை. இந்த நிலையில், கொடைக்கானல் ஏரி மற்றும் பெரியகுளம் கண்மாயில் பிடிக்கப்பட்ட மீன்களில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பாதரசம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக மக்கள் சிவில் உரிமைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில செயலாளர் இரா.முரளி, கொடைக்கானல் பாதரச மாசை அகற்றுவதற்கான பிரச்சார இயக்க நிர்வாகி நித்யானந்த் ஜெயராமன் ஆகியோர் மதுரையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:


மீனில் பாதரசம்...

கொடைக்கானல் பகுதியில் பாதரசக் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஹைதராபாத் ஐஐடியின் பேராசிரியர் அசிப் குவார்ச்சி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், கொடைக்கானல் ஏரி, கும்பக்கரை அருவியை உருவாக்குகிற பாம்பாறு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் மிகமிக அதிகமாக பாதரசக் கழிவு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கும், கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கும் அவர் கடந்த 2.8.17 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்த நீர்நிலைகளிலும், இந்த நீரைப்பெறுகிற பெரியகுளம் கண்மாயிலும் உள்ள மீன்களைச் சாப்பிடுவதைக் குறைக்குமாறு அப்பகுதி மக்களை அரசு நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், 3 மாதமாகியும் அரசு நிர்வாகங்கள் அவ்வாறு செய்யாததால், மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக நாங்களே இதனை அறிவிக்கிறோம்.

ஒரு கிலோ எடையுள்ள மீனில், 30 மைக்ரோ கிராம் பாதரசம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று அமெரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, தர நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கொடைக்கானல் ஏரியில் பிடிபட்ட 8 மீன்களைப் பிடித்து சோதித்தபோது, அதில் நான்கு மீன்களில் 41.9 மைக்ரோ கிராம் வரையில் பாதரசம் காணப்பட்டது. கும்பக்கரை அருவியில் இருந்து நீரைப்பெறுகிற கண்மாய் ஒன்றில் பிடித்த மீனை சோதித்தபோது, அதில் 94 முதல் 165 மைக்ரோ கிராம் வரையில் பாதரசம் காணப்பட்டது.

பாதரசக் கழிவானது நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையையும் சேதப்படுத்தக்கூடியது. சிறுநீரகத்தையும் பாதிக்கும். பாதரசமானது உயிரினங்களால் உட்கொள்ளப்படும் போது, அது மெத்தைல் பாதரசமாக மாறுகிறது. அந்த வடிவில்தான் இப்பகுதியில் பிடிபடும் மீன்களில் பாதசரம் காணப்படுகிறது. இது சாதாரணப் பாதரசத்தைக் காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்டது. கர்ப்பிணிகள் சாப்பிட நேர்ந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும்” என்றனர்.

இதற்கு என்ன தீர்வு என்று நிருபர்கள் கேட்டபோது, “கொடைக்கானல் மண்ணில் உள்ள பாதரசத்தை சுத்திகரிப்பதற்கான தர அளவை, கம்பெனியின் உரிமையாளரான யுனிலீவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் உள்ள தர அளவைவிட, கொடைக்கானலில் 20 மடங்கு அதிகமான பாதரசக் கழிவுகளை அந்நிறுவனம் விட்டுச்செல்லும் என்று தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிப்பது சரியல்ல. எனவே, ஆலை வளாகத்தைச் சுத்திகரிப்பதற்கு மேலும் கடுமையான தர நிர்ணயத்தை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்பந்திக்க வேண்டும். மக்களும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

K7 news திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வினோத் குமார்...

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது...


அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440
நிமிடங்களாகும் (60x24=1440)}
ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்..

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்..

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு...

தமிழர் நிலம் கொள்ளை போவதை ரசித்துக் கொண்டிருந்த துரோகி கன்னடர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...


1956 சூலை மாதம் 27-ஆம் தேதி, 12 கோரிக்கைகளை முன்வைத்து, திரு சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார்.

அவரது முதல் கோரிக்கை: ஆந்திரத் தெலுங்கரிடம் இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டாவது கோரிக்கை: சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

அடுத்து, பல தமிழர் நலம் சார்ந்த கோரிக்கைகளை வைக்கிறார்.

1956 அக்தோபர் மாதம் 13 வரை உண்ணா நோன்பிருந்து சாகிறார்!

அந்த 78-நாளிலே, இவருடைய கோரிக்கையை ஆதரித்து, ‘ஆமாம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும் என்று கேட்டாரா?

சரி, சித்தூர் மாவட்டத்தையும், திருத்தணி மாவட்டத்தையும், திருக்காளத்தி மாவட்டத்தையும் - ஆக மூன்று மாவட்டங்களையும் ஆந்திராக்காரன் பிடுங்கிகிட்டுப் போயிட்டானே, இவர் கேட்கிறது நியாந்தான், திருப்பிக் கொடுங்கள் என்று சொன்னாரா?

அந்த 78-நாளும், உண்ணாநோன்புச் செய்தியை, ‘விடுதலை’ நாளிதழில் போட்டிருக்கிறாரா?

அந்த 78-நாளில் , இவரது (சங்கரலிங்கனார்) கோரிக்கையை ஆதரித்து ‘விடுதலை’யில் எழுதியுள்ளாரா?

அந்த 78-நாளில் அந்தச் செய்தியையாவது, ’இப்படி ஒருத்தர் உண்ணா நோன்பு இருக்கிறார்’ என்று வெளியிட்டுள்ளாரா? – செய்தியே கூடப் போடவில்லையே!

சங்கரலிங்கனார் இறந்ததையொட்டி
கலவரத்தில், பொதுவுடைமைக்கட்சி ஜீவானந்தம், இராமமூர்த்தி அடிபட்ட செய்திதான் வந்துள்ளதே தவிர..

இன்னார் இப்படி உண்ணாநோன்பு இருக்கிறார், அவரது கோரிக்கைகள் நியாயமானவை என்று ஆதரித்து ஒரு அறிக்கைகூட விடுதலையில் வெளியிடவில்லை;

ஆதரித்து வேண்டாம், ‘இப்படி ஒரு முட்டாள் தமிழன் உண்ணாநோன்பு இருக்கிறார்’ என்றாவது ஒரு செய்தியைக் கூட அவர் நாளிதழில் போடவில்லையே!

தமிழ்நாட்டில் தமிழனுடைய பணத்தை வாங்கிக் கொண்டு நாளிதழ் நடத்தின ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்த நியாயமான செய்தியைக் கூட போடவில்லையே!?

இவர் தான் தமிழருடைய தன்மானத்தைக் கட்டிக் காப்பாற்றியவரா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்து கொள்வதற்காக.

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

சுத்தமான தேனை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது.

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால் தூய தேனைக் கண்டு பிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு..

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக...

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 13...


உண்மைகள் உறங்குவதில்லை என்கிற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்க தரிசனப் பகுதி 13-ம் பகுதி ஆகும். இந்த 13-ம் பகுதி பல நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். அவைகளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.

13-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக இடம் பெறும் குறிப்பு என்னவெனில் “நாடாளும் மன்னன் ஒருவனின் இராஜ்யம்“ அவன் கைகளை விட்டு விலகிச் செல்லும் என்றும், ரோம் நாட்டில் நடைபெறும் ஒரு பெரும் புரட்சி இதற்கு வித்தாக அமையும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது. யுதர்களின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் அளவிற்கு இப்புரட்சி அமையும் என்று இந்த தீர்க்க தரிசனம் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.



நாகரீகம் வளர்ந்த நாடுகளில் இனி மக்கள் பஞ்சத்தால் பரிதவிக்கும் காட்சிகளை இனி உலகம் காண உள்ளதாகவும், எத்தோப்பியா இதில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இயேசுவின் வருகை இனி உலக நாடுகள் முழுவதும் அறிவிக்கப்பட உள்ளது என்றும், இச்செய்தி விரைந்து உலக மக்களை சென்று அடைய உள்ளதாகவும், இதற்கான முக்கிய அறிவிப்பு வரும்  மாதத்தில் நடக்க இருப்பதாகவும், அச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்ற 27-ம் தீர்க்க தரிசனம் மெய்பட உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய செய்திக்குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


புதுமைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது போல, வரும் முக்கிய மாதமொன்றில் இப்பூமியில் இறை அதிசயம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இந்த அதிசயம் நடைபெறும் சமயத்தில் உலக மக்கள் ஒரு விழாவை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்றும், இதனைப் பற்றிய விஷயம் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் குறிப்பிட்டுள்ள 37-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ளது என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.



நமது இந்திய தேசத்தில் வரும் 3 மாதங்களுக்கு வடதேசம் முழுவதும் பூமி சார்ந்த இடர்பாடுகளும், கடும் பனிப்பொழிவுகளும், ஆறு முழுவதும் நீர் நிரம்பி ஒடும் காட்சிகளும் இடம்பெற உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது. சிரபுரஞ்சி, மேகாலாயா, டார்ஜிலிங், ஒரிஷா, கன்குவான், வடஹிமாலயா போன்ற பகுதிகள் கடும் சேதங்களை சந்திக்கும் என தீர்க்க தரிசனச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.




பர்மாவில் வரலாறு காணாத அளவிற்கு மழைநீரால் சேதங்கள் ஏற்பட இருப்பதாகவும், பர்மாவின் எல்லையோரத்தில் உள்ள இந்திய தேசத்தின் சில பகுதிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. மணிப்பூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தமிழ்நாட்டில் ஏற்படும் பருவநிலை மாற்றம் கடலில் புதியதாக ஒரு புயல் உருவாதற்கான காரணமாக அமையும் என்றும் இப்புயலால் தமிழகத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட இருப்பதாக 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இதற்குமுன் வெளியிட்ட தீர்க்க தரிசனத்தில் இதற்கான விடைகள் உள்ளன என்று 13-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு சுட்டிக்காட்டுகின்றது.


கோவை மாவட்டத்தின் அருகே உள்ள ஒரு மலைத் தொடரில் ஒரு பேரதிர்வு உருவாக இருப்பதாகவும், இந்த அதிர்வினால் கோவை மாவட்ட மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.




பழனி மலைக்கும், கொடைக்கானல் மலைக்கும் இடைப்பட்ட ஒரு மலைக்கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ இருப்பதாகவும், இவ்வதிசயம் ஸ்ரீபோகர் என்ற சித்தரால் நடத்தப்படும் என்றும், இவ்வதிசயத்தை காண அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக காத்து உள்ளனர் என்றும் 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தமிழக உள் மாவட்டங்களில் செப்டம்பர், நவம்பர்  முதல் மழை பெய்யத் துவங்கும் என்றும், பல மாவட்டங்களில் மழையினால் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு செய்திக்குறிப்பை இங்கு நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.


புதைபொருள் ஆய்வில் இனி தமிழகம் தனி ஒரு இடத்தை பிடிக்கும் என்றும், அது வரலாற்று சார்ந்த பல ஆய்வுகளின் கேள்விகளுக்கு விடை காண உதவும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சென்னை மதுராந்தகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரியில் வியப்பான ஒரு நிகழ்வு நடக்க இருப்பதாகவும், அச்சமயம் சென்னையின் மையப்பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சென்னை மயிலாப்பூர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், மக்கள் யாரும் எதிர்பாராத தருணத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்க இருப்பதாகவும் 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கல்விக்கொள்கை ஒன்றில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஒரு முக்கிய முடிவெடுக்கும் என்றும், இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டை பெரிதும் பெறும் என்றும், இச்சமயத்தில் நடிகர் ஒருவரின் அரசியல் பிரவேசம் நடக்கும் என்றும், அச்சமயத்தில் நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 43-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ள சில குறிப்புகள் உடனே நடக்கும் என 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் உருவாகும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அதே சமயத்தில் பல பெரிய, பெரிய IT நிறுவனங்கள் தற்போது மூடும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


நடிகர் ஒருவரின் மரணம் தற்போது நிகழ உள்ளதாகவும், இது நடைபெறும் இக்காலகட்டத்தில் அரசியலில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடவுள், மனிதன் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை இன்றளவும் மக்கள் சமூகம் ஏற்காத ஒன்றாக இருக்கிறது என்றும், இது கட்டுக்கதை அல்ல. இது நிஜமான ஒன்றாகும் என நினைக்கும் அளவிற்கான ஒரு தெய்வீக நிகழ்வு தமிழகத்தில் நடக்க இருப்பதாகவும், அது நடக்கும் சமயத்தில் மக்கள் உண்மைகள் உறங்குவதில்லை அது எப்பொழுதும் தனது நிஜத்தை இப்பூமியில் நிலை நாட்டிடும் என்று நினைக்கும்படி நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 13-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. அதுவரை நாம் காத்திருப்போம்.

குறிப்பு :  இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...