29/04/2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைய வெயில் அளவு...


அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்...


ஹிந்தியா தமிழரை மதிக்காதது இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

விவசாயிகள்? அம்மணமாக ஆடிய செய்தி இந்திக்காரன் பலருக்கு தெரியவில்லை.

சோறு சாப்பிடுபவன் டெல்லி போராட்டத்தை? ஆதரிக்கணுமாம்.

சோறு முக்கியம்தான் ஆனால் மானம் அதைவிட முக்கியம்.

மானமுள்ள எவனும் அய்யாக்கண்ணு போன்றோரை ஆதரிக்கமாட்டான்.

மனுவை வாங்கிய பிறகும் நடுத்தெருவில் அம்மணமாக ஆடிய அய்யாக்கண்ணு மாதிரி ஆட்களை மானமுள்ள தாய்க்குப் பிறந்த யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, ஓய்வுதியம் என்று அந்த கும்பல் கேட்பது பணப்பிச்சை.

தமிழகத்தின் தலையாய விவசாய பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டத்தைப்பற்றி அவர்கள் வாய்திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க செய்யப்படும் சதி இது.

பா.ஜ.க ஆளான ஐயாக்கண்ணு ஒரு வழக்கறிஞர்.

இவரது மனைவி சிபிஐ வழக்கறிஞர்.

இவரது இருமகன்களும் மருமகள்களும் வக்கீல்கள்.

20 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரே தவிர இவர் விவசாயி கிடையாது.

இவர் தமிழரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் கள்ளர் என்றும் நாயுடு என்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன.

விவசாயிகள் மீது அருவருப்பை வரவழைக்க களத்தில் இறங்கிய விவசாயிகளே இல்லாத வந்தேறிக் கூட்டம் இது.

இவர் இந்துத்துவாவின் விவசாய சங்கமான 'பாரதீய கிஸான் சங்க்' ல் இருந்து விலகி ஆரம்பித்த சங்கத்தின் பெயர் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்'.


தென்னிந்தியா அதாவது திராவிடம் அதாவது வந்தேறிகளின் கூடாரம்.

இதன் மூன்று மாநிலச் செயலாளர்களில் கிட்டப்பா ரெட்டி என்ற தெலுங்கர் உள்ளார்.

இவனது வலதுகரமாக டெல்லியில் இருப்பவன் சரவணக்குமார் என்ற கன்னடவன். இவன் ஐ.டி. ஓழியன் ஆவான்.

இவன் அளித்த பேட்டியில் தமிழில் பேசவோ கோரிக்கைகளை விளக்கவோ கூட தெரியவில்லை.

போராடுவது என்றால் என்னவென்று தெரியாதோரே 'சோறு போட்ட விவசாயி' என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் இவனை ஆதரிக்கின்றனர்.

உலகில் வென்ற போராட்டங்கள் மானத்தை இழந்து போராடி வென்றதில்லை.

போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

பேரரசர்களை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகளின் கதை வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

வியடநாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான் போல நம் இனம் ஒன்றும் கிடையில் கிடக்கவில்லை.
நமக்கு இப்போது போராட வலு இருக்கிறது.

இத்தகைய மானங்கெட்ட ஆட்களை வளர்த்துவிட்டால்.. நாளை உங்கள் மகனும் மகளும் போராட்டம் என்கிற பெயரில் மானத்தை விட்டு அம்மணமாகும் போராட்டம், சுயஇன்பப் போராட்டம், மலம் கழிக்கும் போராட்டம், விபச்சாரம் செய்யும் போராட்டம் என்று இறங்கி விடுவார்கள்.

கவனத்தை ஈர்க்கிறேன் என்று வேசித்தனத்தில் இறங்காதீர்கள்.

அய்யாக்கண்ணு போன்ற ஆண் வேசிகளை ஆதரிக்காதீர்கள்.

இவன் தமிழகத்திற்கு வந்தால் காறி உமிழ்ந்து செருப்பால் அடியுங்கள்...

கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்?


எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.

அவர் தீர்க்க தரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தபின்புதான் அதை உணர முடிகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்.

அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.

கி.பி.1809  வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார் .


அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல நடந்தும் நடந்துகொண்டுமிருக்கின்றன.

இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்துகொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம். இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார். நான் அதைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன் .

இந்நிலையில் நேற்று எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்நூலின் குறிப்பிட்ட பக்கத்தின் நகல் எனக்குக் கிடைத்தது. அந்நூலின் 24  வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் தோன்றுகிறது. அவ்விரு வரிகள்

அண்ணர்க்களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன்
அவிழ்த்துப்  பார்க்கலாச்சே சிவனே அய்யா..

கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டுகளில் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.

இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளன .

அவை ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய்

என்பதாகும் .

இதைப் படிக்கும்போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது.

அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும் ..

நன்றி : ayyavazhi.org 

தமிழக பாஜக தலைவர்களுக்கு பதவி பணம் மட்டும் தான் முக்கியம்...


தமிழகமே எதிர்பார்த்த மாயாண்டி குடும்பத்தார் ஒன்று சேரவில்லை... ஓபிஎஸ் அணி இன்று அறிவிப்பு...


அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரனின் கொட்டத்தை அடக்குவதற்காக அதிமுகவின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் பேச தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதை எடப்பாடி அணியினர் வரவேற்றனர், இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக சிதறுண்டது. அத்துடன் தமிழக அரசை கவிழ்க்க தினகரன் சதி செய்வதாகவும் கூறப்பட்டது.

எனினும் எடப்பாடி அணியினர் முதலில் முனைப்பு காட்டினர். பின்னர் அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியினரை சீண்டி பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் கடுப்பான ஓபிஎஸ் அணியினர் வந்தால் வாங்க, இல்லையெனில் போங்க. அதற்காக எங்கள் மீது மூன்றாம் தர அரசியல்வாதிகளை போல் கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்று கூறினர்.

இதுபோன்று இரு அணிகளும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்ததால் அதிமுக இணைவது சற்று கேள்விக்குறியாகவே இருந்தது.

பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேரும் நியமிக்கப்பட்டனர். இருந்தும் நல்ல நாள், அஷ்டமி, நவமி, முதல்வர் டெல்லி பயணம் என்று பேச்சுவார்த்தை தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில் தினகரன், சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் 30 பேரை கட்சியிலிருந்து துரத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் கறார் கோரிக்கை விடுத்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டவுடன் கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்கள், பேனர்கள் அகற்றப்பட்டது.

இதனால் ஓபிஎஸ் அணியினர் குளிர்ந்து போனதாலும், பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்து போனதாலும் அமாவாசை நாளன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் கிடைத்தது.

ஆளாக்கு மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்ததால் குழப்பம் நிலவியது. இதனால் எடப்பாடி அணியினர் யாரும் கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் அதிகாரபூர்வ நிர்வாகி ஒருவர் மட்டும் கருத்துகளை கூற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நாம் இத்தனை முறை வலியுறுத்தியும் தினகரனும், சசிகலாவும் கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட்டாததால் ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார். மேலும் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ செம்மலை, எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

சசிகலா, தினகரனை நீக்க பலமுறை கோரியும் அவர்கள் மௌனம் காத்து வருவதால் பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி அணியினருடன் இணைய வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஓபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் தொண்டர்களின் விருப்பப்படி அந்த கோஷ்டியுடன் இணைய வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

எனவே அதிமுக இணைப்பு கிடையாது என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தெரிகிறது...

ஓபிஎஸ் சின் பழைய நினைவுகள்...


ஆட்கள் வேலை செய்யவில்லை....


தமிழகத்தை 22 ஆண்டுகள் ஆண்டது திமுக...


ஈழத்தமிழர், மீனவர், விவசாயி, காவிரி, கட்சத்தீவு உள்ளிட்ட எந்த பிரட்சனையிலும் ஒன்றில்கூட தீர்வில்லை என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்...

இந்த பிரச்சனைகளை வலுவாக்கி அரசியல் செய்து சொத்து மட்டுமே சேர்த்தது திமுக...

இதைவிடவா ஒரு அவமானம் வந்துட போகுது... மானஸ்த்தனா இருந்தா தொங்கிடுவான்...


பாஜக தேச பத்தாஸ்...


2015 ல நக்ஸல்களுக்கு ஆயுதம் கொடுத்ததுக்காக இரண்டு BJP தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்....

நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின் கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில் தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி, வாழ்க வளமுடன்...

சேலத்தில் தற்போது மழை...



ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 43...


தியானம் - சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்...

பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது.

பயிற்சி முறைகளை அறிந்து கொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்கிற்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.

எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.

எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).

உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்விற்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்திற்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் சிலர் நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன் என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.

ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்...

அமெரிக்காவின் தற்போதைய நிலைமை...


பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக நடிகை நக்மா போர்க்கொடி...


தமிழக பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு, நடிகை நக்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக பெண்கள் குறித்து கேரள அமைச்சர் எம்.எம். மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா கூறியுள்ளார்.

கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி, மூணாறில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது தமிழக பெண்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசினார் என அவர் மீது எதிர்கட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர்.... குடும்பத்தினர் பார்க்க..
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா சென்னை வந்துள்ளார். அவர் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசை கைகாட்டுவது தவறு என குற்றம் சாட்டினார்.

மேலும் தினகரன் கைது விவகாரத்தில் உண்மை வெளி கொண்டு வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்...

விவசாயி செத்தா என்ன.. நமக்கு பாகுபலிதான மிக்கியம்... தமிழா..


எதைகொண்டு எங்களை நீ அடிமையாக்கினாயோ அதை கொண்டே உன்னை ஆண்டியாக்குவோம்...



அடுத்தது 2.0 கனடன் சிவாஜிராவுக்கும் இனதுரோகி லைக்காவுக்கும் அடுத்த ஆப்பு...

நம்ம செஞ்சது பத்தாது என்று சீனகாரனும் வெச்சி செய்யுறான் போல...


கொடநாடு பங்களா கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் ட்ரைவர் கனகராஜ் சேலம் ஆத்தூர் அருகே மர்ம மரணம்...


இவர் கொடுநாடு பங்களா தொடர்பான விவகாரங்களை  கவனித்து வந்ததாக கூறப்படுகின்றது...

ஜெ கொடநாடு பங்களா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு நபர் சென்ற கார் கேரள மாநிலம் பாலக்காடு அருகே விபத்து, மனைவி குழந்தை பலி, தேடப்பட்டு வந்தவர் அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...


தேடப்பட்டு வந்த ஜெயலிதாவின் கார் ட்ரைவர் கனகராஜ் இன்று சேலத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து அவரது நண்பரான இவரும் தற்போது விபத்தில் சிக்கில் உயிருக்கு போராடி வருகின்றார். இவரின் குடும்பம் இதில் பலியாகியுள்ளது.

ஜெ கொடநாடு பங்களா கொலையில் தொடரும் கொலைகளும் மர்மங்களும்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 43...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 43-வது தீர்க்க தரிசனப் பகுதியாகும்.

இந்த உலகில் மக்கள் மந்திரம், மாயம் இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் கடவுளையும் அவ்வாறே பார்க்கும் சூழலுக்கு மாறிவிட்டனர். மாறிவிட்ட மனிதனுக்கு கடவுளின் எளிய வழிமுறைகள் நம்பிக்கை தரவில்லை போலும், அதனால்தான் இன்றும் கடவுளை விட்டுவிட்டு தன்னைப் போன்ற மனித சமூகத்தில் வாழும் போலி மனிதர்களை நம்பி ஏமாந்து வாழ்ந்து வருகிறான் என்று 43-வது தீர்க்க தரிசனம் மக்களின் விழிப்புணர்வு நிலையை தூண்டும் வகையில் பல தீர்க்க தரிசனங்களின் தொகுப்பை இப்பகுதியில் எடுத்து கூறுகின்றது.


கன நேரத்தில் மனித கண்களுக்கு முன் வரவழைக்கும் எந்த பொருளுமே இவ்வுலகில் நீடித்தவை அல்ல, அவைகள் நிலையானவையும் அல்ல என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு கூறுகிறது. மறுப்பவனும் அதை மறைப்பவனும் இவ்வுலகில் வேடதாரிகள் என்றும், இதுவே சித்துக்கான முதல்பணி என்று அந்த தீர்க்க தரிசனம் ஒரு உண்மையை எடுத்து கூறுகிறது.


இனி இவ்வுலகின் எந்த மூலையிலும் மனிதனை ஏமாற்றும் சித்து வேலைகளும், மந்திர, தந்திர, யந்திர, மேஜிக் வேலைகளும் எடுபடாது என்றும், அவைகளை நிகழ்த்தி காட்டும் நிகழ்ச்சிகளிலேயே அவைகள் நிகழாமல் பொய்யாகி போகும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய உண்மையை இங்கு எடுத்துகூறுகிறது. இனி அற்புதம், அதிசயம் என்ற வார்த்தைகள் கடவுள் குலத்திற்கு மட்டுமே உரியவை என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


விண்ணுலகிலிருந்து தேவாதி தேவர்களும், முக்கோடி அதிசயர்களும், தேவதைகளும் களமிறங்கும் ஒரு அதிசய இடமாக இந்த பூமி மண்டலம் விளங்கிட போகிறது என்றும், இத்தகைய அதிசய நிகழ்வினை மக்கள் தங்கள் கண்களால், அவர்கள் பூமியை நோக்கி ஒளி வெள்ளங்களாக இறங்கி வரும் அதிசய காட்சிகளாக காண உள்ளார்கள் என்று மற்றொரு குறிப்பை 43-ம் தீர்க்க தரிசனம் இங்கு வெளிப்படுத்துகின்றது.

தேனும் பாலும் ஒன்றிணைந்தால் எத்தகைய தித்திப்பும், சுவையும், வாசனையும் ஏற்படுமோ அதுபோன்ற நறுமண சுவைகள் இனி இந்திய பூமியில் விளையும் ஒரு வகை தானியங்களில் காணப்படும் என்றும், இதுவே சத்தியயுகத்திற்காக, மக்களுக்காக இறைவன் வழங்கும் புதிய வகை ஒரு உணவுப் பண்டம் (மாற்றுவகை) என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு அதிசய குறிப்பை தருகின்றது.


இந்த பூமியில் திடீரென்று சிறு, சிறு வகை விலங்கினங்கள் காணப்படும் என்றும், அவைகளால் மனித குலத்திற்கு எவ்வித அச்சம் இல்லையென்றும், இதுவே அடுத்த யுகம் நமது வாழ்நாளில் வந்து கொண்டுள்ளது என்பதற்கான மற்றொரு அடையாளம் என்று 43-வது தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


கண்மணிகளைப் போன்ற விதைகள் இனி வனப்பகுதியில் மக்களால் அதிகமாக கண்டெடுக்கப்படும் நிகழ்வுகள் நடக்கும் என்றும், அதனை மக்கள் இனம் தங்கள் இல்லத் தோட்டங்களில் வளர்ப்பார்கள் என்றும், இதனால் மனித குலத்திற்கு அதிசயமான மூலிகை ஒன்று கிடைக்கப்பெறும் என்றும், இது இரத்தம், மூளை, நரம்பு, கண்கள் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகப் பயன்படும் என்றும், இதனால் இந்திய மண்ணில் சித்தர்களின் சித்த மரபு மீண்டும் வந்தற்கான அடையாளங்களாக இவை விளங்கும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு அதிசய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


வானவரும் உலக மக்களும் இன்றும் அதிசயமாக நினைக்கும் கற்பக விருட்சம் இந்திய மண்ணில் குறிப்பாக தமிழக்தில், குறிப்பாக சேலத்தில் உருவாகி வளரும் என்றும், இதனை காண விண்ணவரும், மண்ணில் வாழும் மக்களும் தினசரி வருவார்கள் என்றும், இதனை அருகில் சென்று யாராலும் தொட முடியாது என்றும், அதற்கே உரியவர்களால் மட்டுமே அதனை தொட முடியும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு அதிசய குறிப்பை இங்கு எடுத்துக்கூறுகிறது.


பாண்டிய மன்னன் வாழ்ந்த பூமியில் ஒரு பூமி திரட்டு வெளிப்படும் என்றும், இது உலக மக்களுக்கே பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தப்போவதாகவும், சோழ, சேர, பாண்டிய மன்னர்களுக்குள் இருந்த ஒரு மகத்தான புண்ணியம் இதன் மூலம் தெரிய வரும் என்றும், இது நிகழ்கால நிகழ்வுகளை வெளிச்சமிட்டு காட்டும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

சிவகங்கை, தேவகோட்டை அருகே வலங்காவயல் கிராமத்தில் விவசாய நிலத்தில் சாராயக்கடையை திறக்க வந்த பெண் தாசில்தார், ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்...!


தமிழ் நாடு முழுக்க இளைஞர் மாணவர்கள் இயக்கம் போராட்ட களத்தில்...


மருத்துவ நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகள் விலக்கு ....

அதிகார  குவியலில் ஈடுபடும் மத்திய அரச போக்கை கண்டித்து .....

நடமாடும் பிணமாக இருக்கும் மாநில அரசை கண்டித்து போராட்டம் ....

திராவிடத்தை யாரும் திட்டவில்லை...


அதன் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதால் விமர்சிக்கப்படுகிறது. அவ்வளவே...

மேலும் ஆரியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அதனுடன் மறைமுகக் கூட்டணி வைத்து தமிழையும், தமிழரையும் ஒழித்துக் கட்டுவது தான் இதுவரை திராவிடம் செய்து வந்துள்ளது.

இன்னொன்றையும் சொல்கிறோம், ஆரியம், பார்ப்பனீயம், பிராமணீயம் ஆகிய முன்றையும் இன்றுவரை தமிழர்கள் தான் முழுமூச்சுடன் எதிர்த்து வந்துள்ளார்கள்...

இலுமினாட்டியும் இரகசியமும்...


ராக்கிஃபெல்லர் Rockerfeller family..

இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன்.

இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான்.

1872ல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான்.

அந்த காலத்திலேயே அமெரிக்காவில் மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமாக வைத்திருந்தான்..

1880 லை யே அமெரிக்காவோட ஆயில் தேவையில் 85% இவனை நம்பி தான் இருந்தது...

முதன் முதலில்1890 இல் ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் அப்போழுதே வைத்தி ருந்தான்..

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை  பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினதும் இவன் தான்.

அது தான் Rockefeller institute for medical research.

இப்போது இதன் பெயர் Rockefeller university.

1911 இல் இவன் குடும்பத்தோட கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 58000000 US dollars.

இவன் தான் இப்போது அரேபிய நாடுகளிலுள்ள  எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன்.

கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்..

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...

முடக்கத்தான் கீரை...


Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது...

சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை...

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச் சென்று விடும். இதுபோல் எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்...

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளை வைத்து கெஜ்ரிவாலுக்கு இது மிகப்பெரிய தோல்வியாக கட்டமைக்கிறது ஊடகங்கள்..


இனிமேல் அவ்வளவு தான் ஆம் ஆத்மி என்று எல்லோரும் சொல்லிவைத்தார் போல எழுதுகிறார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு கட்சியை பலப்படுத்துங்கள் என்று கேலி செய்கிறார்கள் பாஜக ஆதரவு நடுநிலை அறிவுசீவிகள்..

இந்த தேர்தல் முடிவு கெஜ்ரிவாலுக்கு பின்னடைவையே அல்ல. டெல்லி மாநகராட்சியை பாஜக மீண்டும் தக்கவைத்திருப்பதை விட புதிதாக களம்கண்டு இத்தனை வருடமாக ஆட்சி செய்த காங்கிரசை விட அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிற ஆம் ஆத்மி நிஜத்தில் அடுத்த அடியை நோக்கி நகர்ந்திருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீதான வெறுப்பு போன்று இந்த தேர்தலில் பாஜக மேல் இல்லை என்பது உண்மை தான் என்றாலும் பாஜகவிற்கு எதிரான ஓட்டை காங்கிரஸ் பிரித்த பின்னும் 46 இடங்களை வென்று கணிசமான இடங்களில் இரண்டாமிடம் வந்திருப்பது சாதாரமானதல்ல.

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் வெறும் 3 இடங்களை மட்டுமே பஞ்சாப்பில் வென்ற பாஜகவை விட அங்கே எதுவுமே இல்லாமல் 20 இடங்களை வென்று, டெல்லியில்184 இடத்தில போட்டியிட்டு 46 இடங்களை வென்ற ஆம் ஆத்மி எவ்வளவோ மேல் தான்.

ஆம் ஆத்மி மாற்று சக்தியாக வளர்ந்து விட கூடாது என்ற நோக்கிலேயே Prostitutional ஊடகங்கள் இப்படி எழுதுகின்றன..

இந்திய தேசிய சிந்தனைகளில் முரண்கள் இருந்தாலும் மாற்று சக்திகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைளிலும் மக்கள் செல்வாக்கிலும் வலுவிழந்திருக்கும் இந்த நேரத்தில் ஆம் ஆத்மியின் இருப்பு நமக்கு அவசியமாகிறது...

சந்திர வழிபாடும்... சூரிய வழிபாடும்...


இந்த உலகில் இரண்டே இரண்டு வழிபாடுகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று சந்திர வழிபாடு, மற்றொன்று சூரிய வழிபாடு...

வழிபாடு வேறு, கோட்பாடு வேறு. நிறுவனப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் இன்று பல்வேறு மதங்களாக மக்களின் குருதியை உறிஞ்சி இம்மண்ணில் இயங்கி வருகின்றன..

சூரிய வழிபாடு...

இது கதிரவனின் அயனத்தைப் பின்தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைச் செய்வோர் முக்கோண வடிவிலான பெரு மேடுகளைக் கட்டி கதிரவனைப் பின் தொடர்வர்.

இவர்களுக்கு தை 1, சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய தேதிகள் முக்கிய நாட்கள் ஆகும்.

சூரியன் உச்சம் அடையும் வேளையும், நாளும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

ஒரு சூரிய நாளில் நண்பகல் நேரத்தில் (12 - 2 ) இவர்கள் கோவில்களின்  நடையைச் சாத்துகின்றனர்.

அதே போல் ஒரு சூரிய ஆண்டில் நிகழும் இரண்டு சூரிய கிரகணங்களின் போதும் கோவில்களின் நடையைச் சாத்துகின்றனர்.

முக்கோண வடிவங்கள், கலசம், தங்கம்,  தெப்பக்குளம் போன்றவை இவர்களின் அடையாளங்கள். ஏழு நாட்களைக் கொண்ட வாரக்கணக்கை இவர்கள் பின் பற்றுகின்றனர்.

கதிரவன் ஒரு இராசிக்குள் நுழையும் நாளை மாதப் பிறப்பாக இவர்கள் கடைப் பிடிக்கின்றனர். சூரியன் உச்சமடையும் நாளை புத்தாண்டுப் பிறப்பாக இவர்கள் அறிவிக்கின்றனர்.

இவர்களின் சூரிய ஆண்டுக்கு 365.25 நாட்கள். இறந்த சூரிய வழிபாடாளர்கள் இறந்த உடலைப் எரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

சந்திர வழிபாடு...

இது சந்திரனின் சுழற்சியைப் பின் தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைக் கடைப்பிடிப்போர் வெறும் கண்களாலேயே நிலவின்வளர் பிறையையும், தேய்பிறையையும் கண்டு அதற்கேற்ப நிலவைப் பின் தொடர்வர்.

மறைநிலவு நாளும், முழு நிலவு நாளும் இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

மொட்டையடித்தல், சேவல்/கிடாய் வெட்டு போன்ற சடங்குகளை இவர்கள் மறைநிலவு நாளில் குலதெய்வக் கோவில்களில் செய்வர்.

சூலம், பிறை போன்றவை இவர்களின் அடையாளமாக உள்ளது. ஏழு என்ற எண்ணை பொதுவாகவே இவர்கள் வெறுக்கின்றனர். அதனால் ஏழுநாள் வாரக்கணக்கு இவர்களிடம் கிடையாது. சூரிய வழிபாடு செய்த அரசானால் இவ்வாரக் கணக்கு பிற்காலத்தில் திணிக்கப் பட்டிருக்கலாம்.

வளர்பிறை மற்றும் தேய்பிறையை மட்டும் பின்பற்றுவர். மறை நிலவு நாளன்று தவறமால் முன்னோருக்கு படையல் வைத்தல் சந்திர வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கம்.

தை மறைநிலவு நாள், ஆடி மறைநிலவு நாள் மற்றும் புரட்டாசி மறைநிலவு நாள் ஆகியவை முன்னோருக்குப் படையல் வைக்க இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

தீமிதித்தல், அலகு குத்துதல் போன்ற உடலை வருத்திக் கொள்ளும் வழிபாடுகளை இவர்கள் செய்கின்றனர்.

மேற்கு வானில் மூன்றாம் பிறை தோன்றுவதை வைத்து இவர்கள் மாதப்பிறப்பை உறுதி செய்கின்றனர்.

சந்திர வழிபாட்டின்படி ஒரு சந்திர ஆண்டுக்கு 354 நாட்கள் தான் வரும்.

முக்கியமாக 99.99 % சந்திர வழிபாட்டினர் இறந்த உடலைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்து விட்டு அதிமுகவில் சரத்குமார் ஐக்கியமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன...


ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையும் நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளாராம் நடிகர் சரத்குமார்.

அதிமுக தற்போது ஐந்து கோஷ்டிகளாக சிதறிப் போயுள்ளது. ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டி இணைவதற்கான பேச்சுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிராக தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஐந்தாவது கோஷ்டியாக தலித் எம்.எல்.ஏக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் நாற்காலியை விட்டு எழுந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இதற்காகவே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் யாகம், பூஜைகள் என அமர்க்களப்படுத்தி வருகிறார்.

சரத்குமாருடன் பேச்சு...

எடப்பாடியைப் பொறுத்தவரையில் தம்மை அனைத்து ஜாதியினருக்குமான ஒரு முதல்வராக காட்டிக் கொள்ள விரும்புகிறார். எப்படியும் டெல்லி தம்மை முதல்வராகவே நீடிக்க அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் சரத்குமாருடன் பேச்சுவார்த்தையை எடப்பாடி தரப்பு மேற்கொண்டிருக்கிறது.
 
ராஜ்யசபா எம்பி பதவி...

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் கோஷ்டிகள் இணைப்பின் போது நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அத்துடன் சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாம்.

மேலும் அதிமுகவில் மாநில பொறுப்பு ஒன்றுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்...

கற்கள் நகரும் அதிசயம் – மரணப் பள்ளத்தாக்கின் மர்மம்...


நம்ப முடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம் பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்..

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.

டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.

தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.

சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.

குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948 லேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.

இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.

கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.

ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது கூடவே கற்களும் தான்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 42...


ஜென் தியானம்...

தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.

அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.

தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும் என்று சொல்கிறார் ஓஷோ.

ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.

முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள் நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.

அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.

ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்...

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.

மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

மேலும் பயணிப்போம்......

வைகோ நாயூடு கலாட்டா...


நாட்டில் அதிக லஞ்சம் புரளும் இடத்தில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தில் உள்ளது...


இது தொடர்பாக நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் Centre for Media Studies என்ற நிறுவனம் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் கர்நாடகா மாநிலத்தில் அரசு பொதுசேவைகள் பெற 77 சதவீதம் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 74 சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் அரசு சேவைகள் பெற 68 சதவீதம் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை உள்ளதாக ஆய்வில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்...

ஒரு இளைஞனின் வாழ்வையே சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகையின் அயோக்கியத்தனம்...


இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.

அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..?

இந்த கொடுமையான செய்தியை பாருங்கள்...

திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன், படித்த.. முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர். மார்க்சிய, அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர்.

இவரைப்பற்றி விவசாயிகள் போர்வையில் தீவிரவாதி ?  என்று தலைப்பிட்டு 'தமிழக அரசியல்' என்ற வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 42 நாட்களும் கலந்து கொண்டார் என எழுதியுள்ளது அப்பத்திரிகை.

ஆனால் அவரோ கடந்த 16 ஆம் தேதி புறப்பட்டு 18 ஆம் தேதி தான் அங்கு போய் சேர்ந்தார். 23 ஆம் தேதி போராட்டம் முடிந்தவுடன் அய்யாக்கண்ணுவுடன் ரயிலிலேயே புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார். மொத்தம் 6 நாட்கள்தான் அங்கு இருந்தார்.

ஆனால் 42 நாளும் இருந்தார்ன்னு பொய்யை எழுதி கதையை துவக்குகின்றனர்.

இவர் முகநூலில் போட்ட பதிவுகளை வைத்து இவர் காஷ்மீர் தீவிரவாதி என்று புனைகிறார்கள். அப்சல் குருவை தூக்கிலிட்டதை விமர்சித்து பதிவு போட்டிருப்பதால் தீவிரவாதி தான் என முடிவுக்கு வருகிறார்களாம்.

நானும்கூடத்தான் அப்சல்குருவை தூக்கிட்டதை எதிர்த்தேன். ஆனால் அவரை மட்டும் தீவிரவாதி எனக்குறிப்பிட அவரது இஸ்லாமிய பெயர்தானே காரணம்.

சில நாட்களுக்கு முன் 99 wiki என்ற காவி இணைய இதழிலும் இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பினார்கள். அதுகுறித்து பலரும் என்னிடம் தெரிவித்தனர். இப்போது காவிகளின் பொய்யை வைத்து தமிழக அரசியல் இதழும் ஒரு இளைஞனை... அவன் இஸ்லாமியன் என்பதாலேயே தீவிரவாதி என முத்திரை குத்துவது எந்த வகையில் நியாயம்.

இப்படியொரு செய்தியை எழுதும் முன்பு சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்தீர்களா..? அல்லது போராட்டத்தை நடத்திய அய்யாக்கண்ணுவிடமாவது கேட்டீர்களா..?

இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல். இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும். மனித உரிமை அமைப்புகள் இதனை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இதனை பரவலாக பகிர்ந்து காவிகளை... போலி பத்திரிகைகளை அம்பலப்படுத்துவோம். ஒரு நல்ல மனிதனை பாதுகாப்போம...

தொட்டாற் சுருங்கி செடி...


சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...

இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...

மருத்துவ குணங்கள்...

தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..

இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.

உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.

ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.

இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.

இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.

தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.

இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...

பாஜக கலாட்டா...


திராவிடத்தின் ஆணிவேர்...


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்?

பார்ப்பன வெறுப்பு தான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.
அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது தமிழ் பார்ப்பனரையே..

அந்நியரான பிராமணரை அல்ல...

என்னடா சர்க்கரை மூட்டை.. செய்தியாளர்களை பாக்கவே இந்த பயம் பயப்புடுற...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 42...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனத்தின்  42-ம் பகுதி ஆகும். இந்த 42-ம் தீர்க்க தரிசனப் பகுதி இவ்வுலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு பகுதியாகும்.

வருங்காலம் என்பது கடந்து கொண்டு இருக்கும் நிகழ்காலத்தின் அடுத்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளின் தொகுப்பே அதுவென்று 42-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்கால தாதாக்களாக உள்ள பயங்கர வாதிகளுக்கு இக்காலம் போதாத காலமென்றும், இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இவர்கள் மீது இறங்கிட உள்ளதாக 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


இங்கிலாந்து பகுதியில் ஒரு பயங்கர தாக்குதல் நிகழலாம் என்றும், அதன் முன்னெச்சரிக்கைகள் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிந்திருப்பினும் அது நிகழக்கூடிய ஒரு சம்பவம் என்று 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. கார்க்கஸ் நிகேவ்ஸ் என்கிற சொல்லில் அது மறைந்துள்ள பகுதி என்று 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.

இறைக்கு எதிரான அரபு நாடுகளில் இறைவனின் தீர்க்க தரிசனங்கள் மெய்பட உள்ளதாகவும், அதன்படி அங்குள்ள ஜமாத்களில் ஒரு சில சம்பவங்களும் அதைத்தவிர பயங்கரமான விளைவுகளும் மனித இனத்தால் நடைபெற உள்ளதாக 42-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.


சுழலும் நிலையில் உள்ள ஒரு கட்டிடம் தீவிரவாத அமைப்புகளால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும், இந்த சம்பவத்தின் பிண்ணனியில் பல தீவிர அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்துள்ளதை அந்நாடு கண்டறியும் என்றும், இதற்கு உலக பாதுகாப்பு அமைச்சகம் தனது கண்டனத்தை முழுமையாக தெரிவிக்கும் என்றும், அச்சமயத்தில் அமெரிக்காவின் உளவு ஸ்தாபனம் உலகத்திற்கே ஒரு எச்சரிக்கையை செய்யும் என்றும், அதை கேட்கும் அனைத்து நாடுகளும் சற்று பீதிக்குள் உள்ளாகும் என்று 42-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


கடல் தேசத்து நாடுகளில் ஒரு சில நாடுகள் தங்களின் கடல் பயணத்தின் போது அதிசயமாக பல வண்ணங்களை கொண்ட மிதக்கும் வான் ஊர்திகளை காண்பார்கள் என்றும், இதனால் உலக நாடுகளுக்கு இடையே ஒரு வியப்பான செய்தி பரிமாற்ற தொடர்பு ஏற்படும் என்று 42-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

இந்திய வான் எல்லைப்பகுதியில் திடீரென்று ஒரு விமானம் பறந்து செல்லும் என்றும், அதனை விரட்டியடிக்கும் நிகழ்வு இந்திய தேசத்தில் நடக்கும் என்றும், அதன் அருகில் செல்லும் போது தான் அது விமானம் அன்று, ஒரு பறக்கும் தட்டு என்று இந்திய மக்கள் அறிவார்கள் என்று 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் தேசத்தில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்கு இந்திய தேசத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்றும், இந்திய திபெத் எல்லை பகுதியில் இந்திய மக்களை கொண்டே சீன அரசு தனது எல்லை தாண்டிய ஊடுருவலை செய்ய ஆரம்பிக்கும் என்றும், இந்திய மண்ணை காக்க வேண்டிய நாம், அண்டை நாட்டுக்கு துணை போவதை இந்திய அரசு கண்டு திகைப்படையும் என்றும், இதனால் அங்கு ஒரு பதட்டமான சூழல் திடீரென்று ஏற்படும் என்றும், மக்கள் புரட்சி படை ஒன்றை சீன அரசு மறைமுகமாக உருவாக்கி வைத்திருப்பதை இந்திய இராணுவம் கண்டறிந்து திகைப்படையும் என்றும், அன்றுமுதல் இந்திய சீன எல்லையில் நமது பாதுகாப்பு பணிகள் தீவிரமடைய வேண்டும் என்றும் 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தீவிரப்படுத்துகிறது.

காலம் சென்ற ஒரு அரசியல்வாதியின் வாரிசு ஒருவர் பல கலவரங்களுக்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் இருப்பார் என்றும்,  அவரின் நடவடிக்கைகள் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என்றும், நமது தமிழக அரசு அதனை கண்டறிந்து அவரை கைது செய்யும் ஒரு நிகழ்வு உடனே நடக்க உள்ளதாக 42-ம் தீர்க்க தரிசனம் ஒரு சிறப்பு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


மாமல்லபுரம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்பு என்றும், அதன் சுற்று வட்டார பகுதியில் இனி வினோத சம்பவங்கள் மக்கள் மத்தியில் நிகழும் என்றும் 42-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சேலம் ஊத்துமலையில் திடீரென்று ஒரு அதிசயம் நடைபெறும் என்றும், அதனை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்களும் காணவரும் சமயத்தில் அதன் அருகே உள்ள மற்றொரு மலையில் தெய்வீக அதிசயம் ஒன்று உடனே நிகழும் என்றும், அதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் தொடர்ச்சியாக பல அதிசயங்கள் நடக்கும் என்றும், இது அனைத்து ஊடகங்களிலும் முன்னணி செய்திகளாக இடம் பெறும் என்றும், இது முருகப்பெருமானின் அற்புதங்களாக இருக்கும் என்று 42-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு தெய்வீகக் குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...