29/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 43...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 43-வது தீர்க்க தரிசனப் பகுதியாகும்.

இந்த உலகில் மக்கள் மந்திரம், மாயம் இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் கடவுளையும் அவ்வாறே பார்க்கும் சூழலுக்கு மாறிவிட்டனர். மாறிவிட்ட மனிதனுக்கு கடவுளின் எளிய வழிமுறைகள் நம்பிக்கை தரவில்லை போலும், அதனால்தான் இன்றும் கடவுளை விட்டுவிட்டு தன்னைப் போன்ற மனித சமூகத்தில் வாழும் போலி மனிதர்களை நம்பி ஏமாந்து வாழ்ந்து வருகிறான் என்று 43-வது தீர்க்க தரிசனம் மக்களின் விழிப்புணர்வு நிலையை தூண்டும் வகையில் பல தீர்க்க தரிசனங்களின் தொகுப்பை இப்பகுதியில் எடுத்து கூறுகின்றது.


கன நேரத்தில் மனித கண்களுக்கு முன் வரவழைக்கும் எந்த பொருளுமே இவ்வுலகில் நீடித்தவை அல்ல, அவைகள் நிலையானவையும் அல்ல என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு கூறுகிறது. மறுப்பவனும் அதை மறைப்பவனும் இவ்வுலகில் வேடதாரிகள் என்றும், இதுவே சித்துக்கான முதல்பணி என்று அந்த தீர்க்க தரிசனம் ஒரு உண்மையை எடுத்து கூறுகிறது.


இனி இவ்வுலகின் எந்த மூலையிலும் மனிதனை ஏமாற்றும் சித்து வேலைகளும், மந்திர, தந்திர, யந்திர, மேஜிக் வேலைகளும் எடுபடாது என்றும், அவைகளை நிகழ்த்தி காட்டும் நிகழ்ச்சிகளிலேயே அவைகள் நிகழாமல் பொய்யாகி போகும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய உண்மையை இங்கு எடுத்துகூறுகிறது. இனி அற்புதம், அதிசயம் என்ற வார்த்தைகள் கடவுள் குலத்திற்கு மட்டுமே உரியவை என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


விண்ணுலகிலிருந்து தேவாதி தேவர்களும், முக்கோடி அதிசயர்களும், தேவதைகளும் களமிறங்கும் ஒரு அதிசய இடமாக இந்த பூமி மண்டலம் விளங்கிட போகிறது என்றும், இத்தகைய அதிசய நிகழ்வினை மக்கள் தங்கள் கண்களால், அவர்கள் பூமியை நோக்கி ஒளி வெள்ளங்களாக இறங்கி வரும் அதிசய காட்சிகளாக காண உள்ளார்கள் என்று மற்றொரு குறிப்பை 43-ம் தீர்க்க தரிசனம் இங்கு வெளிப்படுத்துகின்றது.

தேனும் பாலும் ஒன்றிணைந்தால் எத்தகைய தித்திப்பும், சுவையும், வாசனையும் ஏற்படுமோ அதுபோன்ற நறுமண சுவைகள் இனி இந்திய பூமியில் விளையும் ஒரு வகை தானியங்களில் காணப்படும் என்றும், இதுவே சத்தியயுகத்திற்காக, மக்களுக்காக இறைவன் வழங்கும் புதிய வகை ஒரு உணவுப் பண்டம் (மாற்றுவகை) என்று 43-ம் தீர்க்க தரிசனம் ஒரு அதிசய குறிப்பை தருகின்றது.


இந்த பூமியில் திடீரென்று சிறு, சிறு வகை விலங்கினங்கள் காணப்படும் என்றும், அவைகளால் மனித குலத்திற்கு எவ்வித அச்சம் இல்லையென்றும், இதுவே அடுத்த யுகம் நமது வாழ்நாளில் வந்து கொண்டுள்ளது என்பதற்கான மற்றொரு அடையாளம் என்று 43-வது தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


கண்மணிகளைப் போன்ற விதைகள் இனி வனப்பகுதியில் மக்களால் அதிகமாக கண்டெடுக்கப்படும் நிகழ்வுகள் நடக்கும் என்றும், அதனை மக்கள் இனம் தங்கள் இல்லத் தோட்டங்களில் வளர்ப்பார்கள் என்றும், இதனால் மனித குலத்திற்கு அதிசயமான மூலிகை ஒன்று கிடைக்கப்பெறும் என்றும், இது இரத்தம், மூளை, நரம்பு, கண்கள் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகப் பயன்படும் என்றும், இதனால் இந்திய மண்ணில் சித்தர்களின் சித்த மரபு மீண்டும் வந்தற்கான அடையாளங்களாக இவை விளங்கும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு அதிசய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


வானவரும் உலக மக்களும் இன்றும் அதிசயமாக நினைக்கும் கற்பக விருட்சம் இந்திய மண்ணில் குறிப்பாக தமிழக்தில், குறிப்பாக சேலத்தில் உருவாகி வளரும் என்றும், இதனை காண விண்ணவரும், மண்ணில் வாழும் மக்களும் தினசரி வருவார்கள் என்றும், இதனை அருகில் சென்று யாராலும் தொட முடியாது என்றும், அதற்கே உரியவர்களால் மட்டுமே அதனை தொட முடியும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு அதிசய குறிப்பை இங்கு எடுத்துக்கூறுகிறது.


பாண்டிய மன்னன் வாழ்ந்த பூமியில் ஒரு பூமி திரட்டு வெளிப்படும் என்றும், இது உலக மக்களுக்கே பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தப்போவதாகவும், சோழ, சேர, பாண்டிய மன்னர்களுக்குள் இருந்த ஒரு மகத்தான புண்ணியம் இதன் மூலம் தெரிய வரும் என்றும், இது நிகழ்கால நிகழ்வுகளை வெளிச்சமிட்டு காட்டும் என்று 43-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.