29/09/2018

போனால் போகட்டும் போடா...


பெற்றோர் வைத்த பெயரும்
பிணம் என்று மாறுது...

விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என்று ஆகுது...

பாடுபட்ட சேர்த்த சொத்தும்
வாரிசு இடம் சேருது...

கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா சாகுது...

ஓடி ஆடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு கிடக்குது...

உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்
ஊமையாக தள்ளி நிக்குது...

சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்த இந்த உலகில்
அவன் தந்த உடம்பில்
சொந்தம் என்பது ஏதுடா...

தங்கி செல்லும் வழிப்போக்கனே...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...



போலி சாதி ஒழிப்பு பெரியாரியாவாதிகளின் பின்னால் போவோர் கணவத்துக்கு...


சாதி ஒழிப்பு பற்றி தோழர் தமிழரசன் சொல்வது...

நமது உண்மையான எதிரிகளை அடையாளம் காண்போம்..

12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய 'பசவர்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'கபீர்தாசு' இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள் என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

17-ஆம் நூற்றாண்டின் முடிவில் 'சத்தியமே கடவுள்' என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ஜகஜீவன்தாசு' எனும் 'ராஜபுத்திரரின்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை..

19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ரயிதாஸ்' இயக்கத்தில் சேர்ந்த 'சமார்கள்' இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை..

சாதிகளை எதிர்ப்பதாகக் கூறி சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன..

ஆனால், அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை..

தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் ''மூசல்லி" சாதியாகவும்,

பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''சூஹ்ரா'' சாதியாகவும்,

பஞ்சாபில் 'கத்தி' சாதியிலிருந்தும், சிந்துவில் 'லோகனா' சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் ''கோஜா" சாதியாகவும்,

'ராசபுத்திர' சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''லால்கனி" சாதியாகவும்,

பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள "அவான், கோஷி, கட்டீ, மிராதி" சாதிகளாகவும்,

மேல் இந்தியாவில் "லால்பெகி, மிவாதி ஜொலாகா" சாதிகளாகவும்,

சிந்து பகுதியில் "மீமான்,
துருக்கிய பஞ்சாரா சமார்,
கௌர் சாதிகளாகவும்",,..

பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் "தாக்கர் சாதியாகவும்,
டவாய்ப் சாதியாகவும்" ...

சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன..

அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார்.. கிறித்துவ நாடாராயும், தேவர், கிறித்துவத்தேவராயும், பள்ளர், கிறித்துவப்பள்ளராயும், கவுண்டர், கிறித்துவக் கவுண்டராயும்.....

சாதியற்ற கிறித்துவ மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன..

ஆரியமதம், வைதீகமதம், சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்த்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி.,

முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும்படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

இப்படி சர்வவல்லமையுடன் நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை..

தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை..

- தோழர் தமிழரசன் (1945 --1987)
தலைவர், தமிழ்நாடு விடுதலைப்
படை (TNLA)...

பாஜக - ஸ்டெர்லைட் காய் நகர்த்தல்கள்...


முருகனும் தமிழும்...


1. தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.

2. தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப்பெருமான் தோள்கள் பன்னிரெண்டே.

3. முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.

4. முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு. பிரணவ மந்திர எழுத்து ஆறு (ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. (வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).

5. முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து (ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து இருக்கும். இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.

6. முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு.

எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்.. ஓம் சரவணபவ...

குறிப்பு : திருப்பதியும் முருகன் கோவிலே...

ரஷ்யாவில் டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு வரவழைத்து, 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்...


ஆவிகள் - பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான்...


ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர்.

ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம்  பேய் என்று அழைப்போம்.

இந்த  பேய்களில் பல வகை உண்டு. இப்படி மரணித்த பின்பும் மனித உலகில் வாழும் ஆன்மாக்கள், வஞ்சம் தீர்ப்பதற்காகவும், சிலரை சொந்தமாக்கி கொள்வதற்காகவும், மனிதர்களை பாடாய்படுத்தும்.

அவ்வாறு அருகில் அமானுஷ்ய சக்திகள் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படும்.

திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.

இரவில், அமைதியான இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ, அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது.

காரணம் அது பேய்கள் நம்முடன் வருவதற்கு நாமே அழைப்பு விடுப்பது போன்று ஆகிவிடும்.

நம்மை சுற்றி விசித்திரமான விஷயங்கள் நடந்தால் நமது 6வது அறிவு செயல்படும். நம்மை யாராவது உற்று பார்ப்பது போல் இருந்து, அங்கு யாரும் இல்லை என்று புரிந்தால் அங்கிருந்து உடனே சென்றுவிட வேண்டும்.

இருளில்  சிகப்பு நிற உடையிலோ, அல்லது வெள்ளை நிற உடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான். அதை மோகினி ,  காட்டேரி என்று சொல்வர்.

ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கருந்து உடனடியாகசென்றுவிட வேண்டும்.

பெரும்பாலும் நீர்வீழ்ச்சி அருகே மோகினி பிசாசை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர். இவைகளை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமாம்.

மோகினி பிசாசுகள், மற்றும்  ரத்த காட்டேரிகள்  காற்றில் உலாவுமாம். இவை அருகில் இருப்பதை ஒரு வகை துர்நாற்றத்தால் அறியலாம். இவை  வீட்டின் அறையில் நம் அருகிலேயே கூட இருக்குமாம்.

அப்படி சம்பந்தம் இல்லாமல் வீட்டில் ஏதேனும் கெட்ட துர்நாற்றம் வந்தால் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை அறியலாம்...

இயற்கை...


பீட்சா வரலாறு...


பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா.

பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்..

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார்.

சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார்.

இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது.

ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள்.

பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவு தான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.

பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது...

அதிமுக அமைச்சர் காமராஜ் 400 கோடி ஊழல்...


மண்ணை சாப்பிடும் மக்கள்...


ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு.

இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம்.

ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது.

கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள்.

மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும்.

அடுத்தநாள் பட்டினி.

அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும்.

அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும்.

இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது.

பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது.

சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர்.

உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை.

விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை.

எல்லாமே பொட்டல் காடுகள் தான்.

எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டார்கள்.

நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது.

எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது.

இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.

போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் பொய், இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர்.

இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர்.

இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன...

பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே...

கன்னட ஈ.வே.ரா வின் திராவிட பேத்திகளுக்கு கொண்டாட்டம் டோய்...


இராஜேந்திரனின் கல்லறை...


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம்..

நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர்..

இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது..

பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது..

கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்று கொண்டிருக்கிறது..

அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது..

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறை தான் அந்தக் கட்டடம்..

தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்திய ஒன்றியத்தின் தொல்பொருள் துறை அதை அழிக்கத் திட்டமிடுகிறது..

ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ‘மடவலத்துக் கோயில்’ என்றுதான் சொல்கிறார்கள்..

சிலர் கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா என்று அடையாளப்படுத்துகிறார்கள்..

சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள்..

மிக அரிதாக யாரேனும் ஒருவர் தான் ராஜேந்திர சோழனின் சமாதி என்று சொல்கிறார்கள்..

ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்..

இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது..

தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் சிலர் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே தான் கிடக்கிறதாம்..

தமிழர் அல்லாதவர்கள் எப்படி தமிழர்களின் தொன்மையை பாதுகாப்பார்கள்?

தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் தமிழர்களின் வரலாற்று சின்னங்கலையா விட்டு வைப்பார்கள்?

ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவன்; தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவன். பல போர்களில் வெற்றி வாகை சூடியவன். ‘பண்டித சோழன்’ என்றெல்லாம் வரலாற்றில் புகழப்பட்டவன்..

இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திரனின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக் கிடக்கிறது..

இதைப் பார்க்கும் போது மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே… என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது..

ஆனால் வரலாறு அப்படி அல்ல..

ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். அவன் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவு கொள்வதாகவே அமையும்..

அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்...

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? - கன்னட ஈ.வே.ரா ஆவேசம்...


தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி...

அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...


இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால், அதுதான் உண்மை..

சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன.

ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.

இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.

மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.

இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப் பட்டிருப்பதால் தான்  காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.

எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார்.

அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்..

இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.

அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.

இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம்  கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.

சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது..

அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது.

அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.

மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.

அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.

திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின..

விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.

அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன..

இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது.

1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது..

அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்..

இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.

மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.

இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது.

இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.

இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.

1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.

இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.

குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம்..

இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்..

இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் வெவ்வேறு தேசிய இனத்தவர் ஆவர்...


அவர்கள் நாடு அரசியல் ரீதியாக இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ளது அவ்வளவே..

அவர்களிடம் போய் இந்தியன் என்று என்றும் இல்லாத உணர்வைத் தூண்டி அதன்மூலம் ஆதரவு திரட்ட நினைப்பது மடத்தனம்..

ஆகவே தமிழரே நம் பிரச்சனை நம் நாட்டுப் பிரச்சனை அதாவது தமிழர் நாட்டின் பிரச்சனை..

இந்தியாவின் பிரச்சனை அல்ல..

அதாவது இந்தியா என்று எதுவும் நம்மைப் பொறுத்தவரை இல்லை..

நமது பிரச்சனைகளில் முதலில் நாம் முழுமையாக இறங்க வேண்டும்..

தமிழர் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னொரு தமிழரிடம் கூறிப் புரிய வையுங்கள்..

உலகம் முழுதும் உள்ளத் தமிழரை ஒன்று திரட்டுங்கள்.. அது தான் பலனளிக்கும்..

பிரச்சாரத்துக்காக வேண்டுமானால் பிற இனத்தவருக்கு அதுவும்  தகவலாகத் தெரிவிக்கலாம்..

அதை விட்டுவிட்டு நம்மினம் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு வேறொருவரை நம்புவது முட்டாள்த்தனம்..

ஈழத்திலே
காவிய நாயகனாம்
காக்கும் கடவுளாம்
கண் கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
நம் தேசியத்தலைவர் திரு.பிரபாகரன் கூறுவது போல..

நாம் ஒரு  ஆற்றல் மிக்க இனம்...

ஒரு வீரப்பனாரை தோற்கடிக்க மூன்று மாநிலக் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ்  படை சேர்ந்து நாற்பது வருடம் முக்கினார்கள்...

ஒரு பிரபாகரனைத் தோற்கடிக்க சிங்கள காவல்துறை,  இராணுவம் , இந்திய இராணுவம்,உளவுத்துறை மற்றும்   32 நாடுகள் 30வருடம் முக்கினார்கள்...

ஒட்டு மொத்தத் தமிழனமும் எழுச்சி பெற்றால்   நம்மைத் தோற்கடிக்க உலகநாடுகள் என்ன அண்ட சராசரமும் ஆயிரம் ஆண்டுகள் முக்கினாலும் நடக்காது...

நாளை நம்மீது இந்தியா போர் தொடுத்தாலும் தொடுக்குமேயன்றி நமக்கு நீதி கிடைக்க வழிவிடாது இதுதான் கசப்பான உண்மை...

அதனால் மீண்டும் கூறுகிறேன்..

தமிழராக இணையுங்கள்..
தயாராக இருங்கள்..

நம் விடுதலை நம் கையில்...

சன் டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்கு முறைகளையும் மறந்து விட்டீர்களா?


இதோ.. உங்களின் கவனத்திற்கு...

சன் டிவிக்கு லைசன்ஸ் வழங்க பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம்..

ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக தெலுங்கர் தட்சிணாமூர்த்தி (மு.கருனாநிதி), ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கு கன்னட கலப்பினம் ஈ.வே.ராவின் பேரன்), தெலுங்கர் வைகோபால் சாமி நாய்டு, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து..

ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!

1. கன்னட வந்தேரி ஜெயாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் கழிவறை வரை படம் பிடித்தது யார் ?

2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ?

3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?

4. தமிழ்திரை (தமிழர் யாருமில்லை, அணைத்து மாநில திரைதுரைகளும் கன்னட மலையாள தெலுங்கு திரைத்துறை என்ற பெயரில் இருக்கும்போது தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் இது தென்னிந்திய திரைத்துறையாக உள்ளது) துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?

5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ?

6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ?

7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ?

8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கி கொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ?

9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ?

10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ?

11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பது யார் ?

ஆண்களை மதுவுக்கும் பெண்களை கீழ்த்தரமான மெகாத்தொடர் நிகழ்சிகளுக்கும் அடிமைகளாக வைத்துள்ளது யார்?

12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ?

வந்தேரிகளுக்குள்ளான சண்டை தமிழர்களை யார் அடக்கி ஆள்வதென்று!

13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இவர்களால்தான் .

இதற்கு முதலில் பதில் கூறுங்கள்…

சித்தர் ஆவது எப்படி - 4...


வெளிச்சத்தின் விரையத்தில் மனிதன்...

கனல் ஒன்றே உயிர் ஆற்றல்.. ஆன்மா முழுமைக்கும் தூய கனலாக உள்ளது...

இந்த கனல் பூமியில் படும் பொழுது பஞ்சபூதங்கள் கனலை பெறுவதில் உள்ள வேறு பாட்டினால் பல்வேறு உயிர் இனங்கள் தோன்றுகின்றன.

மனித தேகத்தில் மட்டும் காற்று ஆகாயம் என்ற பூதங்கள் கனலை அதிகமாக பெற்று இருக்கின்றன...

மனம் என்ற பூதம் மிக அதிக பட்ச கனலை பெற்று இருக்கின்றது...

அப்படி கனலை பெற்ற மனம், வலுவான பூதமான சித்தத்திற்கு அடிமையாகி உள்ளதால், மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது... இதுதான் மனிதனின் மிக பெரிய ஆன்மீக தடை...

சித்தத்தின் தன்மையே மனதை வசப்படுத்துவது தான்..

சித்தம் என்ற நீர் பூதம் நீரின் தன்மை போல் ஓடி ஓடி பள்ளத்தில் தங்க முயலுவது போல் மனம் என்ற பாத்திரத்திரமான பள்ளத்தை நோக்கியே சித்தம் போய் கொண்டு இருக்கும்..

சித்தத்திற்கு மனதை விட்டால் வேறு புகலிடம் இல்லை..

அது மேல் நோக்கி நகர முடியாததால் கீழ் நோக்கி செல்லும் பொழுது, மண்ணின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே நகர தொடங்குவதால், மனதை சதா காலமும் சித்தம் மண் என்ற பூதத்தின் பக்கமே இழுத்து செல்லும்...

மண் அம்சமான ஆணவ குணம் சதா காலமும் ஒடுக்கத்தை நோக்கியே நோக்கியே போய் கொண்டு இருக்கும்...

அதனால் தான் மனம் முழுமைக்கும் சித்தத்தின் எண்ண ஆதிக்கமாகவே இருக்கும்..

குறுகிய வட்டமாகிய ஆணவத்தில் சதா காலமும் மனம் சிக்குண்டதாகவே இருக்கும்..

பழைய பதிவுகளான சித்தத்தின் எண்ண ஆதிக்கம் பழைய வாழ்க்கையே வாழ தொடங்குவதால் அது பழக்கமாகவும், குணமாகவும், இயல்பாகவும் மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு புதிய நிகழ் காலத்தில் மனதை ஈடு பட விடாது..

இறந்த கால வாழ்க்கையை வாழும் மனிதன் செத்தாரை போன்று இருக்கின்றான்.. நிகழ் காலத்தில் இந்த உலகில் உள்ள புதுமைகளில், மனம் மலர இந்த சித்தம் விடுவதில்லை...

நிகழ் காலத்தின் ஈடுபாட்டையே ' சி ' என்ற உயிர் மெய் எழுத்து குறிக்கிறது... அதில் வன்மையாக பொருந்தி இணைந்து கொள்வதையே வம் என்ற சொல்..

இறந்த கால எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நிகழ் காலத்தில் இணைவதையே சிவம் என்றனர்.. சிவத்தை கைகொண்டால் சிவன் ஆகலாம்..

சிவன் பெற்ற அத்தனை சக்திகளையும் நிகழ்கால இணைப்பால் பெறலாம் என்பதே உண்மை அறிந்தோரின் சத்திய வாக்கு.. ஆனால் கனலாக அனுபவக்கூடிய சிவம் இன்று மதத்தில் சடங்காக மாறி வெளிச்சமாக விரையமாகி விட்டதே..

சடங்கு என்பதே ச் + அடங்கு என்பதாகும்..

நிகழ் கால இணைப்பு அதாவது சிவ கலப்பு இன்று அடங்கி போய் விட்டதே..

அதை விட மிக பெரிய கொடுமை என்றும் எங்கும் நீக்கமற உள்ள இறைவனையே இன்று இல்லாதது போலும் நாளை தீர்ப்பு நாளில் வருவார் என்று இறைவனையே நிகழ் காலத்திலேயே சவமாக்கி விட்டார்களே...

கனல் ஒளியை போன்றது.. ஒளிக்கும் வெளிச்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

தேவையான ஒன்றிலே ஒன்றித்து பயிலுவது ஒளி ஆகும்.. அது தேவையை நிறை வேற்ற ஆற்றலை கொடுத்து தேவையை முடித்து வைக்கும்...

தேவை எது என்று தெரியாமல், குறிக்கோள் அற்று, சும்மா இருக்க முடியாமல், எதையாவது தேடி, வெளியே உள்ள பொருள்களில் ஆற்றலை சிதறி போக செய்து, பின் வாழ்வின் தேவை என்று ஒன்று வரும் போது அதை நிறை வேற்ற ஆற்றலற்று போய் தோல்வி அடைவது வெளிச்சம்...

ஒளி வாழ்வையும் உயர்வையும் கொடுக்கும்.. வெளிச்சமோ தாழ்வையும் பலவீனத்தை கொடுக்கும்..

ஒளி என்பது 'ஒ' (ஒன்றித்தல்) + 'ளி' ( பயிலல் ) ஆகும்.. வெளிச்சம் என்பது வெளி ( வெளியே உள்ள அனைத்தும் ) + எச்சம் ( மலம் விரையம் ) என்பதாகும்...

உணர்வு என்பது ஒளி தன்மை உடையது.. எண்ணம் சிதறு போகும் தன்மையால் வெளிச்சமாக உள்ளது.. மனம் இரண்டாக பிரிந்து இருக்கிறது.. உணர்வு என்ற ஒளியால் மேல் நிலை பூதங்களான காற்று, ஆகாயம் புலப்படுகிறது..

நினைத்தல் என்ற வெளிச்சத்தால் உருவ அமைப்புகளான கீழ் நிலைபூதங்களான நீர் மண் புலப்படுகிறது.. உணர்வால் மனிதன், மேல் நிலையும் நினைத்தலால் மனிதன் கீழ் நிலையும் அடைகிறான்..
இன்றைய மனிதன் நிலை என்ன ?

பூர்வீக ஜென்மங்களின் உணர்வுகளை தாங்கி நிற்கும் வல்லமை உடைய சித்தம் என்ற பூதம், இந்த பிறவியில் காலையில் உண்ட உணவின் சுவையின் உணர்வினை, மதியத்திற்குள் ஏன் இழந்து விடுகிறது ?

கோவிலில் இறைவனை தொழும் போது ஏற்பட்ட பக்தி உணர்வு, கோவில் வாசலை தாண்டும் முன்பே ஏன் காணாமல் போய் விடுகிறது?.. அன்பு பாசம் போன்ற உணர்வுகள் குறுகிய கால அளவிலே மறைந்து போக என்ன காரணம்?

முதியோர் இல்லங்களிலும் நடு தெருவிலும் தாய் தந்தையரை அநாதையாக விட்ட மகனின் பாச உணர்வு எப்படி காணாமல் போய் விட்டது ?.. வல்லமை வாய்ந்த சித்தம் எதனால் பலவீனம் அடைந்தது ?..

பயன்தூய்ப்பில் நிறைவு பெறாமலே மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் தேடுதலையே தொழிலாக கொண்டுள்ளான் ?..

இறைவனே நேரில் காட்சி அளித்தாலும் அவனால் உணர்வில் ஏன் நிறைவு கொள்ள முடியாத நிலையில் உள்ளான்?..

சொர்க்கமே கிடைத்தாலும் அதனுடைய அனுபவ உணர்வுகள் விரைவில் தொலைத்து விட்டு சொர்க்கமே கசந்து போகும் நிலை ஏன் அடைகிறான் ?..

எந்த சுகத்தையும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் அனுபவிக்கும் தகுதியை ஏன் இழக்கிறான்?..

இந்த பிரபஞ்சத்தில் எந்த அற்புதம் கிடைத்தாலும் அது மனிதனின் மன நிலையில் விரைவில் அது தன் மகத்துவத்தை ஏன் இழந்து விடுகிறது?..

நினைவு பதிவுகளமான கலங்கிய சித்தத்தில் எந்த உணர்வும் நிலைப்பதில்லை.. அது வெளிச்சமாக இருப்பதால் பெற்ற உணர்வை வெளிச்சமாக விரையம் செய்கிறது.. அதுவே காரணம்...

அப்படி விரையம் செய்யாமல் தடுத்து, சித்தத்தை கனலால் நிரப்பும் பயிற்சியான கனல் தீட்சை நயன தீட்சை திருவடி தீட்சை என பயிற்சிகளை பயின்றார்கள் நம் சித்தர் பெருமக்கள்..

இந்த மூன்றும் ஒன்றே.. வெளிச்சத்தை எவ்வாறு தடுப்பது, கனலால் உணர்வால் எப்படி நிரப்புவது என்பதை வரும் பகுதிகளில் காணலாம்... சித்தர் ஆவதில் சிரமம் ஒன்றும் இல்லை...

ஐஸ்லாந்த்...


திராவிடம் சாதி வளர்த்த கதை...


தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை அமலில் உள்ளது. சாதிய ரவுடி ஒருவரின் நினைவு நாளை முன்னிட்டு இந்த தடை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதிய நிகழ்வாக மட்டும் தெரியும். அந்த சாதிவெறிக்கு பின்னால் திராவிடம் ஒளிந்து கிடப்பது பலருக்குத் தெரியாது.

ஜெயாவின் ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் என்னும் ரவுடி என்கவுண்டரில் கொல்லப்படுகிறார். அப்போது நாடார் சாதியை அதிமுகவுக்கு எதிராக திருப்பும் வேலையை சூத்திர(திராவிட) முன்னேற்ற கழகம் திறம்பட செய்தது.

ரவுடியின் மனைவி ராதிகாசெல்வி உடனே திமுகவில் சேர்க்கப்படுகிறார். அடுத்த தேர்தலில் அவருக்கு எம்பி சீட் கொடுத்து சாதி வெறியை வலுப்படுத்தி வெற்றி பெறுகிறது திமுக.

சாதியத்தின் மூலம் தங்கள் காரியம் முடிந்த பிறகு சாதியவாதிகளை விலக்கி வைப்பதுதான் திராவிட அரசியல். அப்பதான் முற்போக்கு அடையாளம் கொடுக்க திக, திவிக, தபெதிக போன்ற சூத்திர(திராவிட) இயக்கங்கள் தயாராவார்கள். தலித் வாக்குகளையும் பெறலாம்.

ராதிகாசெல்வி தற்போது திமுகவில் தடம் காணாமல் போய் விட்டார். ஆனால் அன்று திமுக கொளுத்திப்போட்ட சாதிவெறி இன்றும் எரிகிறது.
குருபூஜை, ரிப்பன் கட்டுதல், சாதிய முழக்கங்கள், போஸ்டர்கள் என நாடார் சாதி இளைஞர்களைப் பின்னோக்கி நகர்த்துகிறார்கள். மற்றொரு பக்கம் காவி கும்பல் நாடார் சாதியில் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

வலதுசாரி/இடதுசாரி தமிழ்த்தேசியம் என வகைப்படுத்தும் புதிய பெரியார் பக்தர்கள் கூட இந்த "திராவிட சாதிவெறி அரசியல்" குறித்து பேச மாட்டார்கள். திராவிட புனிதம் கெட்டுவிடக் கூடாதல்லவா..

புரிந்தவன் பிழைத்துக் கொள்வான்.
புரியாதவன் ஆரிய மற்றும் திராவிட சாதிய அரசியலுக்கு பலியாவான்...

பாஜக அருண் ஜெட்டிலும் ஏமாற்று வேலையும்...


பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்...


பல பெண்களுக்கு பாதங்கள் வறண்டு போவது, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுவது ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் அடையாளமாகும். நாம் நமது கைகளையும் கால்களையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையானவற்றைச் செய்கிறோம், ஆனால் நமது பாதங்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமது பாதங்கள் பல்வேறு வகையான பரப்புகளைத் தொடுகின்றன, தொட்டுக் கடக்கின்றன, பல்வேறு வானிலைகளை எதிர்கொள்கின்றன, ஆகவே அவற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஸ்பா செல்வதும் அழகு நிலையங்களுக்குச் சென்று பாதப் பராமரிப்பு செய்துகொள்ளவும் அதிக செலவாகும், பலருக்கு அதற்கெல்லாம் நேரமும் கிடைப்பது கடினமாக இருக்கலாம். பாதங்களின் வெடிப்புகளைப் போக்கவும், பாதங்களை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி எண்ணெய் மாஸ்க் (Vegetable oil mask)..

காய்கறி எண்ணெய்கள் எளிதில் கிடைக்கின்றன, இவை பாதங்களின் வெடிப்புகளைச் சரிசெய்ய மிகவும் உதவக்கூடியவை. பாதங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க, வழக்கமான மாய்ஸ்டுரைஸர்களுக்குப் பதிலாக, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் சிறப்பாக வேலை செய்யும். இவற்றைப் பயன்படுத்தும் முறை எளிதானது - இவற்றில் நீங்கள் விரும்பும் எண்ணெயை பாதத்தில் ஊற்றித் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்பு இதனைச் செய்யுங்கள். இதை ஒரு சில வாரங்கள் செய்தால் வியத்தகு பலன்களைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். இதனைப் பயன்படுத்தும் முன்பு பாதங்களைக் கழுவி நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கிளிசரின் மாஸ்க் (Glycerine mask)..

கிளிசரின் மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அத்துடன் பன்னீரைச் சேர்த்துக்கொண்டால், பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்குகிறது, பன்னீர் பாதத்தின் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் அதற்குத் தேவையான வைட்டமின்களையும் அளிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன்பு, பன்னீரையும் கிளிசரினையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, கலந்து பாதங்களின் வெடிப்புகளின் மீது தேய்த்து பாதம் முழுதும் மசாஜ் செய்து கொண்டு தூங்கச் செல்லுங்கள்.
எலுமிச்சைச் சாறு (Lemon juice)

எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்ற மிகவும் உதவக்கூடியது, மேலும் இதில் அமிலத் தன்மை இருப்பதால் அது வெடிப்பு உண்டாகிய பாதங்களில் இருந்து உலர்ந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தாள், களைப்படைந்த பாதங்கள் விரைவில் புத்துணர்வு பெறும். மேலும், ஒரு ஸ்கரப்பரைப் பயன்படுத்தித் தேய்ப்பதன் மூலம் பாதங்களின் சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்றலாம். இதில் பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம். அது வெடிப்புகளை குணப்படுத்த இன்னும் உதவியாக இருக்கும். எலுமிச்சைச் சாற்றுடன், கிளிசரின், பன்னீர் ஆகியவற்றையும் சேர்த்தும் வெடிப்புகளில் பூசலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)..

தேங்காய் எண்ணெயை கிட்டத்தட்ட அனைத்துக்கும் பயன்படுத்தலாம். வெடிப்புண்டான பாதங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். தூங்கச் செல்லும் முன்பு, பாதங்களில் சிறிது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொண்டால் போதும். தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசராகச் செயல்படுகிறது, அது பாத வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் சருமத்தின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று ஒட்டுமொத்த சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் வித்தியாசத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.

இவை உங்கள் பாதங்களை மென்மையாக்கி வெடிப்புகளை சில நாட்களில் சரிசெய்யக் கூடியவை. பயன்படுத்திப் பலன் பெறுங்கள்...

அதிமுக - நீதிமன்றம் - காவல்துறை அனைத்துமே பாஜக அடிமை...


சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்...


சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் குடியிருப்பவர் ரன்வீர் ஷா. ஆடை நிறுவனம் நடத்தி வரும் இவர் முபையை சேர்ந்தவர். இவர் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது போலியான ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி 300 சிலைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக தீனதயாளன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீனதயாளன் ரன்வீர் ஷாவிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரன்வீர்சிங்கின் வீட்டில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகள் ஆவணங்களின்றி இருந்ததால் கைப்பற்றியுள்ளனர். ரன்வீர் ஷா தற்போது வீட்டில் இல்லை என்று தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட சிலைகள் நூற்றாண்டு பழமைமிக்கவை என்றும் பல்வேறு கோயில்களை சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது...

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப் பிறவியில் அதே நிலையில் இருப்பதால் தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...


தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் இல்லை. அமைச்சர் திட்டவட்டம்...


நிதி நெருக்கடி காரணமாக, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய முடியாது என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 26) தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “நிதி நெருக்கடி காரணமாகப் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இயலாது.

நூலகங்களுக்குப் புதிய புத்தகங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவையிலுள்ள நூலகங்களுக்குத் தனியார் மூலம் இணையச் சேவை வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி, 2,000க்கும் மேற்பட்ட பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்கள்கிழமையன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

அதிமுக வின் நெடுஞ்சாலை டெண்டர் முறைக்கேடு...


திராவிட கன்னடன் இதுவரை தமிழனுக்கு செய்த கொடுமைகள்...


தமிழகத்திற்கு சேர வேண்டிய, ஈழம் போல இருமடங்கு பெரிய (42,250 ச.கி.மீ பரப்பளவு) நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளான்.

இது கர்நாடகத்தில் கால்வாசி ஆகும்.

மைசூர், பெங்களூர், மாண்டியா, கோலார், சாம்ராஜ் நகர் போன்றவை அடங்கும்..

காவிரி நீரை தேக்கிவைத்து வீணாக்கி தமிழக விவசாயம் 40% அழிய முக்கிய காரணமானான்..

1982 தமிழை பாடத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து போராடிய 4 கோலார் தமிழர்களைச் சுட்டுக் கொன்றான்.. மேலும் 15 பேரை பிடித்துக் கொண்டு போய் கொன்று காணாமல் ஆக்கினான்..

1991 காவிரிப் படுகொலை நடத்தி பல தமிழர்களைக் கொன்று ஒரு லட்சம் பேரை அகதியாக தமிழகத்திற்கு விரட்டினான்..

ஆங்கிலேயன் காலத்திலேயே மைசூர் சமஸ்தானம் மூலமாக பாலாறை சட்டத்திற்குப் புறம்பாக மறித்து பாதி நீரை எடுத்துக் கொண்டு மீதியையே தமிழகத்திற்கு விட்டான்..

இவனை பின்பற்றியே தெலுங்கன் மீதி தண்ணீரையும் மறித்து பாலாற்றின் தண்ணீரே வரவிடாமல் தடுத்தான்..

தமிழகத்தின் சொத்தான கோலார் தங்கச் சுரங்கம் முழுவதையும் தோண்டி தங்கம் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.

வீரப்பனார் தேடுதல் என்ற பெயரில் 57 தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தான்.
89 பேரைக் கொலை செய்தான்.
270 பேரை ஊனமாக்கினான்.

1999 ல் மத்திய அரசு பணிக்கு முறைப்படி தேர்வான 26 தமிழர்களை கர்நாடகத்தில் பணிசெய்ய விடாமல் ஏ.ஜி.ஓ என்ற நாற்பது நாட்கள் போராட்டம் நடத்தி விரட்டியடித்தான்..

திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் செய்து அதன் சுற்றுப்புறத்தை மலம் கழிக்கும் இடம் ஆக்கினான்..

கோயில்களில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை அழித்துவிட்டான்..

கல்வெட்டுத் துறையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தமிழ் கல்வெட்டுகளைக் கொடுக்காமல் தொடர்ந்து பராமரிப்பில்லாமல் போட்டு அழிக்கிறான். இதுவரை 500 க்கும் மேற்பட்டவை அழிந்துவிட்டன.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழகத்தை அளிக்க மறுப்பதுடன் ஒகேனக்கல்லே எங்களுடையது என்று பிரச்சனை செய்கிறான்..

267 தமிழ்ப் பள்ளிகளில் 147 பள்ளிகளை மூடிவிட்டான்..

இன்று பெங்களூர் திருக்குறள் மன்ற நூலகத்தை சூறையாடியுள்ளான்..

ஆனால் தமிழன் மட்டும் திராவிடனாக எண்ணி அனைத்து உரிமையையும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்...

ஏனெனில் தமிழன் முட்டாள்...

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

Yamaha நிறுவனத்தில் தொழிலாளர்கள் போராட்டம்...


இலங்கை இந்திய மீனவர் - ஒரே தீர்வு...


மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும் நாடுகள் கடந்ததுமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத சிக்கலாகவும் இருக்கிறது.

மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு இருந்தாலும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள்தான். அவர்களுக்குக் கடல்பற்றிய புரிதல் உண்டு.

மீன் பிடித்தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு.

கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம்.

ஆனால், இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்களக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இரு நாட்டு அரசுகள்தான் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறார்கள்.

வட மேற்கு இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில்தான் மீன்வளம் அதிகம். தமிழகக் கடல் எல்லைக்குள் நீர்பரப்பு உண்டே தவிர, மீன்வளம் இல்லை.

மீன் பிடிக்க வேண்டும் என்றால், கச்சத்தீவைத் தாண்டுவதைத் தவிர, தமிழக மீனவர்களுக்கு வேறு வழி இல்லை.

கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதைவிட, மீன் வளத்தை எப்படி இரு நாட்டு மீனவர்களும் பங்கிட்டுக் கொள்வது என்பதுதான் முக்கியம்.

ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகு மீனவர்களுக்கும் விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது.

அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும் ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம்.

ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற்புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு.

இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குப் புலி அச்சம் போகவில்லை.

பிழைப்புக்காக கடலில் பாடெடுத்துச் செல்லும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவதும் சுட்டுத்தள்ளுவதும் எந்தத் தார்மிக நெறிகளிலும் சேர்த்தி இல்லை.

மீன் என்பது எப்போதும் வலையில் வந்து விழாது. இரவில் வலை போட்டுக் கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள்.

காலையில் படகு இந்திய எல்லையைத் தாண்டிவிடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று, தட்ப வெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது.

இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்க்கைப்பற்றிப் புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்!

ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள்.

ஏதோ சிங்களக் கடற்படை மட்டும்தான் அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம் அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது, மீன்பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும் இந்தியக் கடற்படையும் செய்கிறது.

ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம் பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அன்னியரோ, இந்திய கடலோரப் படை அதிகாரியும் அன்னியராகத்தான் இருக்கிறார்.

சமீபத்தில் கச்சத்தீவைச் சுற்றிலும் என்ணெய் வளங்கள் இருப்பதாகக் கண்டு பிடித்து உள்ளனர்.

ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும்.

அந்தப் போட்டி எத்தகைய அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதற்கு முன், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும் அமர்ந்து பேசி பரஸ்பர புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு...

ஐயா நீதிபதிகளே... இதற்கும் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க...


என் பதிவின் நோக்கமே...

ஆண்கள் சட்டையை அணிந்து கொண்டு  செல்ல வேண்டும் என்பதே...

உலகெங்கிலும் உள்ள பூர்வ வேத நூல்கள், பைபிளோடு சேர்த்து, இந்த ஊர்வனகலப்பினங்களின் ஊடுருவல் காணப்படுகின்றன.

இந்த கலப்பின தெய்வங்கள் ஆனது - ஒரு பாகம் மனிதர், ஒரு பாகம் கடவுள் என தன்னை ஊருவகப் படுத்துகின்றன..

இந்த ஊர்வன இரத்த கலப்பினங்கள் ஆனதுதான் உலகின் அரச குடும்பங்கள்..

பண்டைய நூல்களையும் பைபிளையும் பாருங்கள்...

உலகெங்கிலும் உள்ள நூல்களில் இந்த ஏதேன் தோட்டம் மீண்டும் மீண்டும் வருவதைக் காண்முடிகிறது. ஏதேன் தோட்டத்தில் உள்ள பாம்பு உண்மையிலேயே பாம்பை தான் குறிக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நான் உணர்ந்த கடவுள்...


மரமும் காடுகளும் மலையும்  கடவுள்
காற்றும் கடலும்  கடவுள்

சூரியனும் சந்திரனும் கடவுள்
மேகமும் வானமும் கடவுள்

நீரும் நெருப்பும் கடவுள்
மண்ணும் மழையும் கடவுள்

இடியும் மின்னலும் கடவுள்
செடியும் பூவும் கடவுள்

உன்னும் உணவும் கடவுள்
உணவை தருபவன் கடவுள்

அன்பும் ஆதரவும் கடவுள்
கருனையும் மகிழ்ச்சியும் கடவுள்

பாசமும் நேசமும் கடவுள்
பண்பும் பணிவும்  கடவுள்

தாயும் தந்தையும் கடவுள்
இந்த தாய் பூமியும் கடவுள்

நீ உணரும் உணர்வு கடவுள்
நீ நேசிக்கும் தன்மை கடவுள்

உன் கருனை கடவுள்
உன் அன்பு கடவுள்
உன் இரக்கம் கடவுள்
உன் மகிழ்ச்சி கடவுள்

மொத்தத்தில் கடவுள் யார்  என்கிற கேள்விக்கு மனிதனுக்கு  இதுவே பதில்...