29/09/2018

போனால் போகட்டும் போடா...


பெற்றோர் வைத்த பெயரும்
பிணம் என்று மாறுது...

விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என்று ஆகுது...

பாடுபட்ட சேர்த்த சொத்தும்
வாரிசு இடம் சேருது...

கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா சாகுது...

ஓடி ஆடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு கிடக்குது...

உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்
ஊமையாக தள்ளி நிக்குது...

சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்த இந்த உலகில்
அவன் தந்த உடம்பில்
சொந்தம் என்பது ஏதுடா...

தங்கி செல்லும் வழிப்போக்கனே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.