29/09/2018

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் இல்லை. அமைச்சர் திட்டவட்டம்...


நிதி நெருக்கடி காரணமாக, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய முடியாது என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 26) தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “நிதி நெருக்கடி காரணமாகப் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இயலாது.

நூலகங்களுக்குப் புதிய புத்தகங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவையிலுள்ள நூலகங்களுக்குத் தனியார் மூலம் இணையச் சேவை வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி, 2,000க்கும் மேற்பட்ட பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்கள்கிழமையன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.