09/07/2017

பரதமும் இரகசியமும்...


இந்த மன்னர் குடும்பம் தனக்கான இயங்கியலாக தேனியின் இயங்கியலை தான் வைத்திருக்கிறது... என்பது நாம் முன்பே கண்டவிசயம் ஆகும்...

இதில் ஒரு சிறு விளக்கம்...

தேனிகளில் வெளியே தேன்சேகரிக்க போகும் தேனிகளில் ஒரு பிரிவு  அதன் உளவு வேலையை முடித்துவிட்டு வந்த உடன் ஒருவித நடனத்தை ஆடுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்தனர்.

அந்த நடனம் ஒருவித நளினத்துடன் இருக்கிறது இது உடல்உறவுக்கான அழைப்பு (Sex dance) என்று கூறினர்.

ஆனால் ஆஸ்திரிய நாட்டு ஆய்வாளர் Karl von Frisch தான் இது உடல் உறவுக்கான அழைப்பு அல்ல இது உளவு பார்த்து வந்த தேனிகள் தேன் இருக்கும் இடத்தையும் அங்கே இருக்கும் ஆபத்துகளையும் ஒரு சில அடையாளத்துடன் கடத்துகிறது என பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தினார்...

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது...

அதே  போல தான் இந்த மன்னர் குடும்பத்தின் உளவு பிரிவின் பெண்கள் தங்கள் பரத நடனத்தின் மூலம் ஒரு சில விடயங்களை சூசகமாக கடத்தினார்கள்...

எந்த பரத நாட்டியமும் கிராமமக்களிடம் நடத்தப்படவில்லை அனைத்துமே கோவில்களுக்கு உள்ளே தான் நடத்தப்பட்டது.

உளவு பிரிவில் பெண்களை பயண்படுத்திய இந்த மன்னர் குடும்ப இயங்கியல் தான் உலகத்தின் மிக நேர்த்தியான மற்றும் மறைவான உளவு அமைப்பாகும்...

ஆனால் இன்றோ  இது தமிழர்களின் கலை என ஒருசிலர் சொல்லிவருவது தான் வேதனை...

கொசு ஒழிப்பு பின்னாடி இருக்கும் வணிகம் மற்றும் கேன்சர் எவ்வாறு உருவாகிறது விளக்கும் தமிழன்...


தெரியாத ஆலய தகவல்...


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர் கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்று இசைத் தூண் வகையைச் சார்ந்தது. மற்றொன்று துளை இசைத் தூண் வகையைச் சார்ந்தது.

இங்குள்ள இசைத் தூண்களைத் தட்டினால் ஏழு ஸ்வரங்களின் ஒலியைக் கேட்க முடிகின்றது. மற்றொன்று இரண்டு துவாரங்களைக் கொண்ட தூணை அமைக்கப்பட்டுள்ளது.

துளை இசைத் தூணின் அடியில் காணப்படும் துவாரத்தில் படுத்துக் கொண்டு ஊத முடியும். ஒரு பக்கம் ஊதினால் சங்கொலியும், மறுபக்கம் ஊதினால் எக்காள ஒலியும் எழுகிறது.

இதே கோயிலின் மற்றொரு கருங்கல் தூணில் குடைந்துள்ள குழலில் நின்று கொண்டு ஊதலாம்...

கதிராமங்கலம், களத்தில் குதித்த ட்ராபிக் ராமசாமி, கிராம மக்களை நேரில் சந்தித்தார்...


இது உண்மை யா... அமைச்சர் செங்கோட்டையன் பார்த்த மாமா வேலை...


இந்து மக்கள் கட்சியினர் அலுவலகம் என்ற பெயரில் தினமும் குடித்து விட்டு அராஜகம்... மலையாளி அர்ஜூன் சம்பத். ராம் ரவிகுமார்.. மீது பெண்கள் புகார்....


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


இரத்த அழுத்தமா? குறைக்க எளிய வழி...


ரத்தக் கொதிப்பு என்றால் என்ன? ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்? ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல், அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள், மது மற்றும் புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலம் இரத்த அழுத்த நோய் வரலாம்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

பாட்டி வைத்தியம்:

1). அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

2). ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

3). ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

4). இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

5). இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

6). எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

7). கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

8). பீட்ரூட் சாற்றில் அப­ரி­மி­த­மாக அடங்­கி­யுள்ள நைத்ரேட் (Nitrate) இரத்­தத்தில் நைட்ரிக் ஒக்­சைட்டின் (Nitiric Oxide) அளவை அதி­க­ரித்து உட்­கொண்ட 24 மணித்­தி­யா­லத்­திற்குள் உயர் இரத்த அழுத்­ததைக் குறைக்கும். தினமும் 250 மில்லி லிட்டர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும் கட்­டுப்­பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை மென்று சாப்­பிட, கறி­வேப்­பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த அழுத்தம் குறையும்.

9). ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

10). பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

11). கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

12). முருங்கைக்காய்: முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

13). நெல்லிக்காய்: நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

14). முள்ளங்கி: இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

15). எள்: சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

16). ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

17). ஏலக்காய்: உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது

உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்...

2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?


தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.

கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதை அதிகம் வெளிவரவிடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.

இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. அமர்நாத் ராம்கிருஷ்ணா - கீழடி தொல்லியல் ஆய்வாளர்.

பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.

இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

2. சுப்பராயலு -  கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர்.

மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.

3. பத்மாவதி அணையப்பன் - களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.

காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.

4. ஐராவத மகாதேவா - அசோகப்பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.

ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.

நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.

அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.

நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டு வந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச் செல்வார்கள் இவர்கள்.

இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.

இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்..

இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்துவிடுவார்கள்.

எதனால் அப்படி?

கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்துவிடும்.

அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?

அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேச மாட்டார்கள்..

செய்தி - தென்காசி சுப்பிரமணியன்

கோவில் என்பது ஒரு நிறுவனம்...


கோவில் என்பது ஒரு நிறுவனம் என்று எத்தனை முறை சொல்லியும் கேட்க மறுத்தவர்கள் இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள்...

கோவில்களில் இருந்து மக்களுக்கு 12.5% வட்டிக்கு  கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது...

இப்படி அநியாய வட்டி கொடுக்கும் இடத்திற்கு போய் தமிழர் வழிபட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய்...

பெரும் கோவில்களுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு சேர்த்தும் பதில் சொல்லி விடுங்கள்..

பலிகொடுத்து வணங்கும் குலதெய்வ வழிபாடு மட்டுமே மரபுவழி கடத்தப்பட்டது இதுவே தமிழர்களின் மதம் ஆகும்...

பாஜக மோடி மீண்டும் ஒரு மிகப் பெரிய துரோகத்தை தமிழர்களுக்கு இழைத்துள்ளார்...


இஸ்ரேலுக்கு ஊர் சுத்த போன மோடி இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாஹூவை சந்தித்து ஒரு செப்பு தகட்டை பரிசாக கொடுத்துள்ளார்...

அந்த செப்பு தகட்டில் வட்டெழுத்து எழுதப்பட்டுள்ளது அந்த வட்டெழுத்து எழுத்து முறை என்பது 3 ம் நூற்றாண்டில் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்து முறையாகும். ஆனால் அதை பதிவு செய்யாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்...

அந்த செப்பு தகடு தமிழர்கள் யூதர்களுடன் வணிகம் செய்துள்ளார்கள் என்று எழுதப்பட்ட செப்பு தகடாகும்....

மலேசியா தமிழர்களின் சீற்றம்...


தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்ற போர்வையில் தமிழர்களை சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தொடர்கூட்டத்தில் எதிர்மறையான கருத்துகள் பேசப்பட்டதால் சரமாரியான கேள்விகளுக்கு மத்தியில் கூச்சல் குழப்பம் வெடித்து இறுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவையில் பெரும் சலசலப்பு நிகழ்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஒருவரையொருவர் கைநீட்டிக்கொண்டு மோதும் தன்மையில் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்கே  கைகலப்பு ஏற்பட்டு  விடுமோ என்ற அச்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே கூட்டத்தை நிறுத்தினர்.

இந்த சம்பவம் இங்கு கிள்ளான் தெங்கு கிளானா மின் புத்தகசாலை மண்டபத்தில் நிகழ்ந்தது. தமிழகப் பேச்சாளர்களைக் கொண்டு கடந்த வாரம்  தமிழ் உணர்வாளர்கள் மாநாடு இங்கு  நடைபெற்றது. அதன் தொடர் அங்கமாக எல்லா நகரங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருத்தது. இதன் தொடர்பில் இரவு 8 மணிக்கு கூட்டம் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், கூச்சல், குழப்பம், சலசலப்பு வெடித்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

'தமிழர்கள் தொன்று தொட்டு ஒற்றுமை இல்லாத இனம்' என்றும் 'அவர்களால் ஒற்றுமையாக என்றும் வாழ முடியாது' என்றும் 'திராவிடத்தால்தான் இவர்கள் ஒற்றுமைப்படுத்தப்பட்டார்கள்' என்றும் 'திராவிட ஆட்சிகளில்தான் தமிழர் நாடு இந்தியாவில் வளங்கொழிக்கும் மாநிலமாக இருக்கிறது திராவிடத்தாலும் திராவிடக் கட்சிகளாலும்தான் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும்' என்று தமிழகத்திலிருந்து வந்த திராவிட பேச்சாளர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அந்தப் திராவிட பேச்சாளர்களின் பேச்சை வன்மையாக கண்டித்து  கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர், மேடையில் பேசிய பேச்சாளர்களிடம் கேள்விகளைக் கேட்டுக் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பதட்டமும்  சலசலப்பும் ஏற்பட்டது.

தமிழ் உணர்வாளர் மாநாட்டு கூட்டத்தில் தற்காலத் தமிழர் உணர்வு, குமரிக் கண்டத் தமிழர், என்ற தலைப்புகளைத் தொட்டுப் பேசாமல் திராவிடச் சிந்தனையைப் பரப்புவதா? என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பேருரையை  நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை இராஜேந்திரன், பேராசிரியர் அ.மாக்ஸ் ஆகியோர்  பார்வையாளர்களின் கடும் கூச்சலுக்கும் எதிர்ப்புக்கும் இடையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அந்தப் பேச்சாளர்கள் மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் தன்மையில் பேசியதாக கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக   குற்றஞ்சாட்டினர்.

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் சுமார் 83 சதவிகிதத்தினர் தமிழர்கள் என்ற பொதுவான கணிப்புக்கிடையில் இங்குள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வந்துள்ள திராவிட கருத்தியலுடைய தமிழ் தேசியத்திற்கு எதிராக தமிழகப் பேச்சாளர்கள் நம் மலேசிய தமிழர்களை மூளைச் சலவை செய்து திராவிடம் எனும் சித்தாந்தத்தைத் தமிழர்களிடம் பரப்பும் தன்மையில் பேசுவது  கடும் கண்டனத்திற்கு உரியது என்றனர்.

அக்கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்களின் தலைமைப் பொறுப்பாளர் எழிலன், மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர் பெருமாள், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் எல்.சேகரன் உள்ளிட்ட தமிழர் சமூக இயக்கப் பொறுப்பாளர்கள்   தமிழக பேச்சாளர்களின் எகத்தாளப் பேச்சுக்கு கடும் கண்டனக்குரல் எழுப்பினர்.

தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும் தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் இன்னும் பல வழிகளில் சிறுமைப்படுத்திப் பேசியவர்களை, இந்தப் பேச்சாளர்கள் முன்னிலைப்படுத்தி மூளைச் சலவை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று  அவர்கள் எச்சரித்தனர்.

தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில் தமிழகப் பேச்சாளர்கள் தொடர்ந்து  நாடு தழுவிய நிலையில் இதே தன்மையில் கூட்டத்தை நடத்துவார்களேயானால் போலீஸில் புகார் செய்யப்படும் என்றும் அவர்கள் நினைவுறுத்தினர். இந்நிலையில் கூட்டத்தில் பதற்றம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதேபோன்று கடந்த புதன் கிழமை காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டு தொடர் கூட்டத்திலும் பார்வையாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திராவிட கருத்தியலுடைய தமிழகப் பேச்சாளர்கள் தடுமாறியதை தொடர்ந்து கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-மலேசியாவிலிருந்து,
கே.வி.சுதன்,
கிள்ளான்

தமிழ்நாட்டில் பற்றியெறியும் பிரச்சினைகள் பல உள்ளன. தமிழ்நாட்டில் நின்று போராடுவதை விட்டு விட்டு மலேசியாவில் திராவிடத்தை பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

அங்குள்ள மலேசிய மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க போயிருந்தால் கூட பரவாயில்லை. அங்கு போய் எதிரும் புதிருமாக உள்ள, தமிழ்நாட்டில் எந்த போராட்டத்திலும் ஒன்று சேராமல் உள்ள தி.க.வும் (திராவிடர் கழகம்), தி.வி.க.வும் (திராவிடர் விடுதலை கழகம்), தி.மு.க. ஏஜென்டான மதிமாறனும், இந்திய அரசின் உளவாளியான அ.மார்க்சும் ஆகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து திராவிடத்தை பாதுகாக்க அவசியம் என்ன நேர்ந்தது?

குறிப்பாக, அ.மார்க்சு இந்திய அரசுக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். தமிழர் உரிமை சார்ந்த காவிரி , முல்லைப் பெரியாறு என்று எதற்கும் வந்ததில்லை. சாதிக்கலவரம் நடந்தால் அறிக்கை தயார் செய்து கொடுத்து ஊதியம் பெற்றுக் கொள்பவர்.

 அதுமட்டுமல்ல, கடந்த காலத்தில் தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டு என்று கூறி வந்தவர். அந்த வன்மம் இன்னும் மறையவில்லை. அ.மார்க்சின் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்தில் தி.மு.க. ஏஜென்ட் மதிமாறனுக்கும் உடன்பாடு உண்டு.

மலேசியாவில் எதிர்ப்பு தெரிவித்த தமிழர்களை பார்ப்பன அடிவருடிகள் என்று தப்பி வந்தவர்கள் தற்போது குற்றம் சாட்டுகின்றனர். இது பெரியார் காலத்திலிருந்து வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.  தமிழர்களை சிந்தனையற்ற மடையர்கள் என்று மறைமுகமாக சொல்வதுதான் இதன் பொருள். கருத்தை கருத்தால் வெல்வதுதான் பகுத்தறிவாளருக்கு அழகு...

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டு தரகர்களிடம் வழிப்பறி கொள்ளை...


புதிதாக திருமணமாகும் தம்பதியிகளுக்கு இலவசமாக ‘காண்டம்’ வழங்கும் புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது உ.பி அரசு...


புதுசா கல்யாணம் ஆனவங்கள பதினாறும் பெற்று, குழந்தை செல்வம் உட்பட பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்துவது பெரியமனுஷதனம்..

ஆனா இந்த சில்லரை பயலுக காண்டம் குடுத்து குழந்தை பாக்கியமே இல்லாம தம்பதிகளை கண்டம் பன்றானுவ ஈனப்பயலுக...

இது தான் பாஜகவின் உண்மை முகம்..


பாஜக வின் ஆர்எஸ்எஸ் இராணுவ வல்லுனர் ஒருவர் இன்றைக்கு காலையில் அனுப்பிய படுபயங்கர இராணுவ தகவல்...


அவருக்கு நமக்கு தெரிந்த அளவிலான பதில்கள்...

1. ஆகாஷ் என்பது விமானம் இல்லை.
ஆகாஷ் என்பது விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு (Anti Aircraft Missile System) ... இதை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் (SAM - Surface to Air Missiles) என்று அழைப்பார்கள்

2. ஏவப்படும் இடத்தில் இருந்து அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை (விமானம்) மட்டுமே தாக்க முடியும்.... இதை, எதிரி விமானப்படை தாக்குதல்களை எதிர்கொள்ள மட்டுமே பயன்படுத்த முடியும்...

3. அடங்கொக்காமக்கா.... 30 கிலோமீட்டர் தூரத்திலயா பெய்ஜிங் இருக்கு?

மராட்டிய கன்னட ரஜினி என்னும் பச்சோந்தி...


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதுவரை தீவிரமாக ஆதரித்துவந்த தமிழ்நாட்டு வலதுசாரிகளுக்கு அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதைவிட முக்கியமானக் காரணங்கள் இருந்தன. சசிகலாவின் சுற்றமும் சமூகமும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, ஊடகங்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் போக்கு, அவர் வீரமணியின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர் அடித்து முடமாக்கப்பட்டது, சேஷன் மீது நடந்தத் தாக்குதல் முயற்சி என்று எத்தனையோ காரணங்களால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைக்கத் தொடங்கினர்.

எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே ரஜினி தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் ஜெயலலிதா நல்ல பிள்ளையாக இருந்த வரையில் அவர் ஒரு அரசியல் சக்தியாக எவராலும் முன்வைக்கப்படவில்லை.

அதேபோல தனக்கு அரசியலில் நுழையும் நோக்கம் உண்டு என்பதை விஜய்காந்த் தனது செயல்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக உணர்த்தி வந்தும் 2004-ம் ஆண்டு தேர்தலில் ரஜினியின் அரசியல் கனவுகளுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் சங்கு ஊதப்படும் வரை அவர் ஆதரிக்கப்படவில்லை.

ரஜினி மீது இன்னும் நம்பிக்கை இழக்காத சிலர் விஜயகாந்தை ஆதரிக்கத் தொடங்கவில்லை என்பதையும் கவனிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு குதிரை மீது தான் சவாரி.

அந்நாட்களில் ரஜினியை எல்லாம் வல்லவராக, தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவராக, நினைத்தால் அடுத்த தேர்தலில் முதல்வராகிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்து வந்தன.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் பெரும் வெற்றிக்கு ரஜினியின் ஐந்து நிமிட தொலைக்காட்சி பிரசாரம் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அந்த தேர்தலில் 'ரஜினி அலை' வீசியதாக பலர் திரும்பத்திரும்ப எழுதிவந்தார்கள். நல்ல வேளையாக ரஜினியின் உண்மையான செல்வாக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது.

தொண்ணூறுகளில் ரஜினிக்கு உருவாக்கப்பட்டிருந்த புனிதபிம்பம் இன்று அப்துல்கலாமுக்கு இருக்கும் புனிதபிம்பத்துக்கு சற்றும் குறைந்ததல்ல.

மகாத்மாவின் மறுபிறப்பே என்று ரஜினியை விளிக்கும் சுவரொட்டிகளை பார்த்த நினைவிருக்கிறது.

இந்திய ஊடகங்கள் ஒருவரை புனிதபிம்பமாக சித்தரிக்கின்றன என்றால் அவர் வறுமை, அடிப்படை சுகாதாரமின்மை, சாதிக் கொடுமைகள் போன்றப் பிரச்சனைகளைக் குறித்து மறந்தும் கூட அக்கறை கொள்ளாதவராகவும் அதே நேரத்தில் இந்தியாவை
வல்லரசாக்குதல், கங்கையையும் காவிரியையும் இணைத்தல், சந்திரனில் இறங்குதல் மற்றும் இன்னபிற கனவுகளை சர்வரோக நிவாரணியாக விநியோகிப்பவராகவும் இருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவராகவும், மதத்துறவிகளிடம் உபதேசம் பெறுபவராகவும், அக்கம்பக்கம் பார்க்காமல் ஆகாயப் பார்வைப் பார்ப்பவராகவும் இருந்தால் இன்னும் நல்லது.

இந்த தகுதிகள் பெரும்பாலும் அமையப்பெற்ற ரஜினி புனிதபிம்பமாக மாறியது இயல்பானதே.

ரஜினிக்கு சமூகப் பார்வை என்று ஒன்று இருக்குமானால் அது பிற்போக்கானது என்பதில் ஐயமில்லை.

படிப்பறிவோ, உலக அறிவோ இல்லாத லட்சக்கணக்கானவர்கள் தன்னை ஒரு ஆதர்சமாக காண்பதை அறிந்திருந்தும் எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்போம் போன்ற நிலபிரபுத்துவ துதிபாடல்களை தன் படங்களில் அனுமதித்தவர் அவர்.

ஜெயலலிதாவி டம் நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களைத் தன் படங்களில் தொடர்ந்து பேசி வந்தவர். பொதுப் பிரச்சனைகளில் அவர் அக்கறை வெளிப்படுத்தியதெல்லாம் தானோ தனது நண்பர்களோ (மணிரத்தினம், ராஜ்குமார்..) பாதிக்கப்பட்டபோது மட்டுமே.

தெனாலி படம் பார்த்த பிறகு தான் சிலோன் பிரச்சனை யின் தீவிரம் புரிந்தது என்று சொல்லும் அளவிற்கே அரசியல் அறிவு உள்ள ஒருவரைத் தான் தமிழக மக்களை உய்விக்க வந்தவராக ஊடகங்கள் கொண்டாடின.

அரசியலில் தான் இப்படி அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறார் என்றில்லை, இத்தனை ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டும் ஆன்மீகம் குறித்த அவரது புரிதல் ஒரு சராசரி பாமர பக்தனிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. (உலகில் பாவிகள் அதிகரித்ததால் தான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன என்று அறிக்கை வெளியிட்டதை இங்கே சொல்லலாம்.)

அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரிக்கப்பட்ட ரஜினியிடம் எம்.ஜி.ஆரிடம் இருந்த சில திறமைகளும் குணங்களும் அறவே கிடையாது. சிறுவயதிலேயே தமிழகத்துக்கு வந்து நாடகக்குழுவுடன் ஊர்ஊராக சுற்றித்திருந்து பலதரப்பட்டத் தமிழர்களுடன் பழகிய எம்.ஜி.ஆரைப் போலல்லாது ரஜினி தமிழகத்தின் கிராமப்புற, சிறுநகர வாழ்வு குறித்து நேரடியாக அறியாதவர். மக்கள் கூட்டத்திற்கிடையே திளைப்பதும், கிழவிகளைக் கட்டிப்பிடிப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே வந்தது அவர் குணமும் கூட. ரஜினியோ தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க மறுப்பவர்.

முக்கியமாக, தன்னை நம்பி வருபவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து அவர்களது நன்றியையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ரஜினி தனக்கு இத்தகைய ஒரு வாழ்வை அளித்த திரைத்துறைக்குக் கூட எதுவும் செய்ததில்லை.

கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் திரைத்துறையில் ஈட்டிய பணத்தையெல்லாம் நல்ல படம் என்றுத் தாங்கள் கருதுவதை எடுக்க அந்த துறையிலேயே மறுபடியும் இடுகின்றனர்.

ஆனால் ரஜினி தமிழ் திரைத்துறையை அவ்வப்போது வந்து பணம் அள்ளிச்செல்லும் ஒரு களஞ்சியமாக பயன்படுத்துகிறாரே தவிர அதன் மேம்பாட்டுக்கு எதுவும் செய்ததில்லை.

தன்னைக் கடுமையாக விமரிசித்த சிலருக்கு பண உதவியையோ அல்லது நடிப்பதற்கான வாய்ப்பையோ வழங்கி அவர்களை ஊடகங்களில் தன்னைப் புகழ வைத்தது தான் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அவர் செய்த ஆகப்பெரிய உதவியாகத் தெரிகிறது.

மொத்தத்தில், ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச சமூக அக்கறையைக் கூட ரஜினி வெளிப்படுத்தியதில்லை என்பதே உண்மை.

ஒரு கோடி முட்டாள் ரசிகர்களுக்கு என்று புரியுமோ.. காசுக்கு நடிக்கும் கூத்தாடி உனக்கு தலைவனா?

பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


பக்கத்தில் இருக்கிற சுண்டைக்கா நாடு இலங்கையிடம் கண்டனம் தெரிவிக்க கூட திராணி இல்ல...

இதில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் அமெரிக்காவிற்கு அடுத்துள்ள சீனாவை பார்த்து சீன் போடுறானுங்க நம்ம பக்தாஸ்...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள் - ஏய்ட்ஸ்...


LINK : http://www.antinews.in/dr-gallo-i-invented-aids-depopulate-humanity/

சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்குதாம்...


ஆனால் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் கோடிகளில் புரண்டு கொண்டு இருக்கிறார்களாம்..

இவனுங்களுக்கு ஜால்ரா போடுறதுக்கு ஒரு கூட்டம் இப்போ வருவானுங்க...

Download பண்ணுங்க ஜாலியா பாருங்க.
http://tamilrockers.nu/

நெடுவாசலில் 88 வது நாளாக தொடரும் போராட்டம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை...


இன்று 88 வது நாளாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்கள் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை வைத்துள்ளனர்...

உலகமே சூரிய ஒளி மின்சாரத்தை நோக்கி பயணம் செய்யும் போது...


தமிழகத்தில் மட்டும் சோலார் தகடுகளுக்கு மானியத்தை குறைத்து வரியை கூட்டி அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு குறைந்த விலை தான் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழக மின்சார வாரியம் பரிந்துரை செய்கிறது என்றால் அவர்களது தொலைநோக்கு பார்வை எந்த அளவிற்கு குருடாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்...

Source: http://timesofindia.indiatimes.com/city/chennai/tn-to-tax-rooftop-solar-cut-support/articleshow/59480653.cms

கதிராமங்கலம்...


இலுமினாட்டி யும் பாஜக மோடியும்...


நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக தமிழக விடிவெள்ளி அக்காவின் அன்பு ஆசிர்வாதங்களுடன் செல்லத் தம்பியின் தகிடுதத்தங்கள்...


வானதியின் சகோதரர் சிவக்குமார் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

சுதர்சன் மற்றும் ராமானுஜத்தால் துவங்கப்பட்ட நிறுவனம் அவர்களின் கையையே விட்டு போனதில் ஒரு துரோக வரலாறு இருக்கிறது என்ற உண்மை நம்மை திகைக்க வைக்கிறது.

வானதியின் தம்பியான சிவக்குமார் ஒரு சாதாரண கூலிக்கு ஜைலாக் நிறுவனத்தில் சேர்ந்த நபர். வானதி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு சுதர்சனுடன் இருந்து உறவால் அதிவேகமாக ஜைலாக் நிறுவனத்தின் பதவிகளில் உயர்ந்தார். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள் எல்லாரும் சிவக்குமார் சொல்லியதால் சேர்க்கப்பட்டவர்கள் என்ற நிலை வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சிவக்குமார் தங்கியது, சாப்பிட்டது முழுக்க, முழுக்க சுதர்சனின் அமெரிக்க பங்களா வீட்டில்தான். ஜைலாக்கின் ஐரோப்பிய சேவைகளின் தலைமை பொறுப்பு சிவக்குமாருக்கு வழங்கப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் சிவக்குமார் கையில் என்ற நிலைமையும் உருவாகிறது.

இப்போதுதான் இந்த துரோக வரலாற்றின் உச்சம் துவங்குகிறது. ஜைலாக் நிறுவனத்திற்கு வர வேண்டிய 20 மில்லியன் யூரோவை ஒரு நிறுவனம் ஜைலாக்கிற்கு அனுப்புகிறது. சுதர்சனும், ராமானுஜமும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க அதிகார போட்டியில் இருந்த இருண்ட காலம் இது.

20 மில்லியன் என்பது சுமார் 140 கோடிகள். 2007ல் ஜைலாக் பொது பங்குகளை வழங்கிய போது வெளியில் விடப்பட்டது 36 லட்சம் பங்குகள் மட்டுமே. 10 ரூபாய் மதிப்பில் அவற்றால் 3.6 கோடிகளை மட்டுமே கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் முக மதிப்பு 10ரூபாய், விற்கப்படும் விலை 350 ரூபாய் என இருந்ததால் அதன் மொத்த விற்பனை 126 கோடிகளை தொட்டது. நான் கூறும் இந்த 20 மில்லியன், அதாவது 140-145 கோடிகள் கம்பெனி வருமானம் வரும் காலத்தில் ஜைலாக்கின் 350 ரூபாய்க்கு வழங்கப்பட்டு இருந்த பங்குகளின் மதிப்பு 15 ரூபாய்க்கும் குறைவாக பங்கு சந்தையில் விற்றுக் கொண்டு இருந்து(இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது). ஆக ஜைலாக்கின் பங்குகளின் மதிப்பை குறைத்து, மக்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி விட திட்டமிட்டு சுதர்சன், தனது ஐரோப்பிய அலுவலகத்திற்கு வந்த பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு சிவக்குமாரிடம் பணிக்கிறார். ஏற்கெனவே மற்றொரு முக்கிய பங்குதாரரும், கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான ராமானுஜத்துடன் தனக்கு இருக்கும் பிரச்சனையை இதை வைத்து அனைத்து பங்குகளையும் வாங்கி விட்டு, ராமானுஜத்தை கம்பெனியை விட்டு சுதர்சன் திட்டமிடுகிறார். தனது வீட்டில் தங்கி, தான் போட்ட சோற்றை தின்று,தான் கொடுத்த ஐரோப்பிய தலைமை பதவியை வைத்துக் கொண்டு இருக்கும் சிவக்குமார் தனக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் சுதர்சன் இவ்வாறு உத்தரவிட, அங்கு வேறு துரோகமும், சதித் திட்டமும் அரங்கேறி வந்தது.

வானதி தம்பி சிவக்குமார் திருட்டுத்தனமாக ராமானுஜத்துடன் கை கோர்த்தார். பணம் ராமானுஜத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சிவக்குமாரால் அனுப்பப்படுகிறது. விளைவு, சத்தமில்லாமல் ஜைலாக்கின் பங்குகள் ஒரு மாதத்திற்குள் ராமானுஜம் மற்றும் சிவக்குமாரின் ஆட்களால் வாங்கப்படுகின்றன. எல்லாம் தன் கையில் என சுகபோகங்களுடன் சுதர்சன் வாழ்ந்து வந்த வசந்த காலம் இது.

இரண்டு மாதங்கள் கழித்து தனது மெயிலுக்கு வந்த ஐரோப்பா வங்கியின் கணக்கில் பணம் ராமானுஜத்திற்கு சென்றதை கண்டு அதிர்ந்தார் சுதர்சன். அதே நேரத்தில் கம்பெனியின் பங்குதாரர்களின் கூட்டத்தில் வைத்து சுதர்சன் சேர்மன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

பிறகு இந்த நிறுவனம் எப்படி கார்த்திக் சிதம்பரத்தின் பினாமிகளின் கைக்கு சென்றது என்ற கதைகள் விரைவில் காண்போமா!…

வானதிக்கு ஆதரவு அளிக்கும் ஆதரவாளர்கள் யார் என்பதையும் நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக புரிகிறது.
சம்மன் ஏதோ எனக்கு வருவதாக அம்மணி சூசகமாக சொல்கிறார்கள்.
பார்த்து விட்டு பின்னர் பேசுவோமா?.

படத்தில் இருப்பது வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி.

அத்தான்...மீண்டும் என்னை காப்பாற்ற வாங்க அருமை Zylog ஷேர் அத்தான் என்கிறாரோ!!.

இது வரை நோட்டீஸ்க்கு பொட்டு வெடி.
இனி சம்மனுக்கு வாண வேடிக்கை.

வானதி குழுமம் வாழ்க.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.
ஓம் முருகா...

பெண்கள் குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொள்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது - சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்...


சாமலாபுரம் உள்ளிட்ட போராட்டங்களில் பெண்கள் தாக்கப்படுவது குறித்து எதிர்கட்சி எம்எல்ஏ கேள்வி கேட்டதற்கு , அந்த போராட்டம் சில அமைப்புகளால் தூண்டி விடப்பட்டது, பெண்கள் குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொள்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்...

இந்தியா போன்ற பல தேசிய இன நாட்டில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன விடுதலையை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகாதா ?


பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது.

தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை.

தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை).

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.

ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின்.

அந்த உரிமையைத் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) என்றார்.

ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ( Right to Self determination with the right to secede ) வழங்கினார்.

விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம். விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.

பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்...