18/06/2017

நம்ப முடியாத உண்மைகள்...


கக்கன் ஐயா பிறந்த தினம் இன்று...


அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்...

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார்.

அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் , நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்  என்று அவர் கேட்டுக்கொள்ள, நீங்கள் பார்க்க வந்ததே போதும்  என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் 18 ஜூன் 1908 இன்று...

புகழ் வணக்கம்...

தந்தையர் தின வாழ்த்துக்கள்...


இலுமினாட்டிகளால் ஆளப்படும் இந்திய அரசு..அதிரிச்சியூட்டும் உண்மை தகவல்கள்


திராவிடத்தை விரட்டி அடிப்போம்...


தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப வல்லுநர் குழு மீத்தேன் அகழ்வு திட்டம் மிகவும் கொடியது என்றும்
உணவு உற்பத்தியில் அதிக பங்கை நிறைவு செய்வதே காவிரி டெல்டா தான், இந்த திட்டத்தால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சமர்பித்ததன் பேரில் தானே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடை செய்தது??

பிறகு மீண்டும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்யை சுரண்ட அனுமதித்தது ஏன்?

மீத்தேன்
அணு உலை
எரிவாயு குழாய் பதிப்பு

என தமிழினத்தை இன அழிப்பு செய்யும் நோக்கோடு திணிக்கப்பட்ட அத்தனை அழிவுத் திட்டங்களையும் தடை செய்யும் வரை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து போராடுவோம்...

திமுக தமீம் தந்திரா வின் திமிர் பேச்சிற்கு செருப்படி...


விசிக திருமா வும் தமிழின துரோகமும்...


தென் தமிழ்நாட்டில் அணு உலைகளின் அணு கதிர் வீச்சு பாதித்த தண்ணீர் குடித்து இறப்போம்...


வட தமிழ்நாட்டில் மீத்தேன் எண்ணெய் எரிவழி குழாய்களால் பாழாய் போன தண்ணீரை குடித்து இறப்போம்.

இது தமிழ்நாடா இல்லை தமிழர்களின் இடுகாடா?

ஓ.என்.ஜி.சி.யை உடனே தடை செய்...

மக்களின் எதிர்ப்பையும் மீறி எண்ணெய்யை சுரண்டி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஓ.என.ஜி.சி (ONGC) தடை செய்...


நேற்றுமாலை கதிராமங்கலம் நறுவெளி பகுதிவாசிகள் அளித்த தண்ணீர் இது...

பதிவு - நண்பர்

தமிழா விழித்தெழு... விபச்சார ஊடகத்தை நம்பாதே...


இலுமினாட்டி - உலக கார்ப்பரேட்களால் சுற்றி வளைக்கப்படும் இந்திய கார்ப்பரேட்கள்...


Elite குழுவின் தலைவனால்
வீழ்த்தப்பட்ட இந்திய கார்ப்பரேட் மல்லையா...

ஆதாரம் :

http://www.thehindu.com/news/national/Diageo-money-was-split-among-my-children-Mallya/article16696470.ece

ஆட்சியை கலைத்து மீண்டும் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் திமுக ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்...


தமிழினமே உதவி செய்யுங்கள்...


கர்நாடக மாநில தொல்லியல் மூன்று வட்டமாக உள்ளதால், வருடத்திற்கு 19 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

புனரமைப்புப் பணிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றை மேற்க்கொள்ள போதுமான நிதி கிடைக்கிறது.

அவர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய சின்னங்களை சிறப்பாக பராமரிக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரே வட்டம் மட்டுமே உள்ளது. இதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு நடக்கிறது.

இந்த பணத்தில் புதுவையும், கேரளாவின் சில தொல்லியல் சின்னங்களும் இதில் அடங்கும்.

ஆகவே நண்பர்களே, நீங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய வேண்டாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்.

வீட்டில் இருந்தபடி உங்களுடைய தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பி, நம்முடைய சென்னை வட்டத்தை இரண்டாக பிரித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுவோம்.

அதற்கான Format மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அனுப்பினால் போதும்.

எதை எதையோ ஷேர் செய்பவர்கள் கொஞ்சம் இதையும் Facebook, Whats app போன்றவற்றில் ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

எறும்பூற கல்லும் தேயுமென்பார்கள்...

நம்மால் இயன்ற சிறு முயற்சி, ஒன்றிணைந்தாற்றுவோம்..

இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரின் கோயில்களை காப்பாற்ற தன் பங்கும் இருப்பதாக நினைத்து செய்யுங்கள்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மண்ணின் வரலாற்றுப் பொக்கிஷங்களைக் காக்க தன்னாலான சிறு பங்களிப்பாக நினைத்து செய்யுங்கள்..

Email Draft to our M.P s.

Dear Honorable Member of Parliament,

Sub: Request to divide Chennai Circle Archaeological Survey of India (ASI) into two separate Circles.

 As you are aware that The Archaeological Survey of India (ASI) is divided into 24 Circles for the maintenance of our ancient monuments, archaeological sites and remains of national importance of our entire country.

In South India, Karnataka has 747, Tamil Nadu has 403, United Andhra has 37 and Kerala has 13 ancient monuments and archaeological sites.

Karnataka has 3 Circles (Bengaluru, Dharwad & Hampi) and are able to get an allocated fund of Rs 19 Crore for managing its 3 circles. Whereas we (Tamil Nadu) get only Rs 5 Crore because of the single division and Kerala circle is also included in this allocated fund.

So kindly please do consider in dividing the Chennai Circle into two circles, so as to get added fund, which aids in proper maintenance of our heritage sites. As we have more and more archaeological sites, it will help us in the smooth maintenance of our heritage. This will in turn attract more and more international tourists and surge in our country’s foreign exchange.

Requesting you to write a letter regarding the above issue to Dr. Mahesh Sharma, Ministry of Arts and Culture to do the needful.

Thanks & Regards,
XYZ.

Our M.P's Email I'd.

1.Arakkonam Shri G. Hari  hari.g@sansad.nic.in  & tiruttani.hari@gmail.com

2.Arani Shri Elumalai v.elumalai@sansad.nic.in

3.Cuddalore Shri A. Arunmozhithevan  a.arunmozhithevan@sansad.nic.in  & arun2868@gmail.com

4.Chidambaram Shri M.Chandrakasi  m.chandrakasi@sansad.nic.in & mckasi1969@gmail.com

5.Chennai South Dr. Jayakumar Jayavardhan  j.jayavardhan@sansad.nic.in

6. Coimbatore Shri P. Nagarajan  nagarajan.p19@sansad.nic.in  & apnagarajanb2@gmail.com

7. Chennai Central Shri S.R. Vijay Kumar sr.vijayakumar@sansad.nic.in

8. Chennai North Shri T.G.Venkatesh Babu venkatesh.tg@sansad.nic.in

9. Dharmapuri Dr. Anbumani Ramadoss dranbu910@gmail.com

10. Dindigul Shri M. Udhayakumar  m.udhayakumar@sansad.nic.in

11. Erode Shri S. Selvakumarachinnayan ss.chinnayan@sansad.nic.in  & erodempselvakumarachinnayan
@gmail.com

12. Krishnagiri Shri K.Ashokkumar k.ashokkumar@sansad.nic.in

13. Kallakurichi Dr. K.Kamaraj  k.kamaraj@sansad.nic.in

14. Kancheepuram k.maragatham@sansad.nic.in  & maragathamkmj@gmail.com

15. Kanniyakumari Shri Pon Radhakrishnan  ponrk@sansad.nic.in

16. Karur Dr. M.Thambi Durai

17. MayiladuthuraiShri R.K. Bharathimohan rkm.bharathi@sansad.nic.in & rkbmp2014@gmail.com

18. MaduraiShri R. Gopalakrishnan eramgopal@gmail.com

19. Nilgiris Shri Gopalakrishnan Chinnaraj c.gopalakrishnan@sansad.nic.in & cgopal777@gmail.com

20. Nagapattinam Dr. K.Gopal  gopalnannilam@gmail.com

21. Namakkal Shri P.R. Sundaram  pr.sundaram@sansad.nic.in  & aiadmkprs@gmail.com

22. PollachiShri C.Mahendran mahendran.c@sansad.nic.in

23. Perambalur Shri R.P.Marutharajaa r.p.marutharajaa@gmail.com

24. RamanathapuramShri A. Anwhar Raajhaa  raajhaa7786@gmail.com

25. Sriperumbudur Shri Krishnan Narayanasamy Ramachandran  knt.ramachandran@sansad.nic.in
& knramachandran.mp@gmail.com

26. Salem Shri V. Panneer Selvam  v.pannerselvam@sansad.nic.in  & vpselvam.salem@gmail.com

27. Sivaganga Shri PR. Senthilnathan senthilnathan.pr@sansad.nic.in & senthil.admk.SVG.DS@gmail.com

28. Thanjavur Shri K. Parasuraman  parasuraman.k@sansad.nic.in

29. Tiruchirappalli Shri P.Kumar p.kumar@sansad.nic.in & trichy.mp@gmail.com

30. Tenkasi Smt. M. Vasanthi  vasanthi.m@sansad.nic.in

31. Thoothukkudi Shri J. Jayasingh Thiyagaraj Natterjee  jjtnatterjee@gmail.com

32. Theni Shri R.Parthipan  r.parthipan@sansad.nic.in

33. Tirunelveli Shri K.R.P.Prabakaran  prabakarankrp79@gmail.com

34. TiruppurSmt. V. Sathyabama v.sathyabama@sansad.nic.in

35. Tiruvannamalai Smt. R.Vanaroja  r.vanaroja@sansad.nic.in & vanarojaadmka@gmail.com

36. Tiruvallur Dr. Ponnusamy Venugopal  p.venugopal@sansad.nic.in

37. Virudhunagar Shri T. Radhakrishnan mpvirudhunagar@gmail.com

38. Viluppuram Shri S.Rajendran

39. Vellore Shri Balasubramaniam Senguttuரvan & senguttuvanb.adv@gmail.com

நன்றி: Chennai Sevas Pandian...

திருநெல்வேலி ஆங்கிலேய கலெக்டர் 'ஆஷ் துரை' நேற்று நினைவு தினம்...


குற்றாலத்தில் பார்ப்பனிய வெறியர்களால் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களில் சாணார் என்றழைக்கப்பட்ட இன்றைய நாடார்களும் அடக்கம்.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற அரசாணையை அமல்படுத்தியவர் அன்றைய ஆங்கிலேய திருநெல்வேலி கலெக்டர் மாமனிதர் ஆஷ் துரை.

அந்த அரசாணையால் ஆத்திரமடைந்த பார்ப்பன பயங்கரவாதியான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்தான் ஆஷ் துரை.

ஆனால் ஆஷ் துரை எந்த சமூகத்திற்கு உரிமை பெற்று கொடுத்தாரோ அந்த சமூகத்தை சேர்ந்த பொன்னாரனும், இந்திரா குமாரி புகழ் ஆனந்தனும் அந்த மாமனிதரை கொன்ற 'பார்ப்பன பயங்கரவாதி' வாஞ்சி நாதனை போற்றித் திரிவதுதான் காலக்கொடுமை...

பாஜக மோடி யும் சதியும்...


ஒட்டு மொத்த இந்தியர்களையும் பயங்கரவாதிகளாக மாற்றி ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாட்டில் உள்ள நிலையை இந்தியாவில் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மோடி தலைமையிலான அரசு கடும் முயற்சி செய்து வருகிறது...

பாகிஸ்தானை விட கேடுகட்ட நாடாக இந்தியாவை மாற்றுவதே இவர்களின் லச்சியம்..

அனுதினமும் குண்டுவெடிப்புகள், வண்முறைகள், கொடூர தாக்குதல்கள், இரத்த வெறி கொலைகள் என இந்தியர்களை  இரத்த வெறி பிடித்த மிருகங்களாக மாற்றுவது..

அதற்கு மதவெறியை தூண்டுவது சாதி வெறியை தூண்டுவது அதன் மூலம் மதங்களுக்கிடையே மிகப்பெரிய வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இருதரப்பையும் தீவிரவாதிகளாக மாற்றுவது..

இந்துக்களை ஆர்எஸ்எஸ் தொடங்கபட்ட காலம்முதல் இன்றுவரை வெறியர்களாக  மாற்றி வருகிறார்கள்...

இதன் மூலம் எதிர்  தரப்பை ஆயுத போரட்டத்துக்கு தள்ளுவது அல்லது  அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவது இதன்மூலம் இந்தியர்களின் இரத்தத்தை ஓட்டுவது அதில் அவர்கள் ஆனந்தம் அடைவது...

சாதி இந்துக்களை கீழ் சாதி இந்துக்களுக்கு எதிராக திருப்புவது..

வெறுப்பு சாதி வெறியை ஊட்டி அவர்களை கொன்று குவிப்பது.....

இதற்க்கான நிகழ்வுகள் தான் அனுதினமும் நடக்கும் மதவெறி கொலைகள் சாதி வெறி தாக்குதல்கள்..

மாட்டுக்காக மனிதனை கொல்லலாம் என்ற பாஸிஸ சித்தாந்தம்....

தமிழ்நாட்டில் 5000 கிராமங்களில்  இதற்க்கான வேலைகள் நடைபெறுகிறது என கடந்த மாதம் மோகன்பகவத் கோவையில் பிரச்சாரத்தை  துவங்கி வைத்து பேசினான்..

இதற்கு எல்லா வகையிலும் மோடி தலைமையிலான அரசு அனைத்து  ஒத்துழைப்பும் செய்து வருகிறது..

இது தணிப்பட்ட மத சண்டையோ சாதி சண்டையோ அல்ல ஒட்டுமொத்த இந்தியர்களை வெறியர்களாக மாற்றி தீவிரவாதிகளாக உருவாக்க வேண்டும் இதுதான் அவர்களின் நெடுங்கால லட்சியம்..

இதன் மூலம் தங்களின் ஆதயங்களை அடைந்து கொண்டு  இந்தியாவை அடிமை படுத்துவது...

அதற்கு  உருதுனையாக அம்பானி, அதானி கும்பல் கோடி கணக்கில் செலவிட்டு வருகிறார்கள்..

மீண்டும் ஒரு சுதந்திர போரை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது...

ஆக இந்தியர்களே உங்களை  தீவிரவாதிகளாக மாற்ற அல்லது உருவாக்க மிகப்பெரிய சதி நடக்கிறது..

விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் மரணம் உங்கள் கையில்...

நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.

இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்த பாஜக பினாமி எடப்பாடி (டெட்பாடி) அரசை கண்டித்து இன்று (17-06-17) நடந்த 'முதல்வர் வீடு முற்றுகை' போராட்டம்...


விசிக திருமா வும் தமிழினத் துரோகமும்...


ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன் தேசத் தியாகியா ?


பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார்.

அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார்.

இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார்.

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார் என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார்.

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது...

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு
R. வாஞ்சி அய்யர்.

என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது.

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர்.

ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


மரபணு மாற்றம் எனப்படும் ஜி.எம் பயிர்கள் (Genetically Modified) பி.டி பயிர்களை ஏன் எதிர்க்கிறீர்கள்?


ஜி.எம் தொழில்நுட்பத்தால் மகசூல் கூடும் என்று ஆய்வறிக்கை எதுவும் இல்லை. இது, மீண்டும் மாற்றமுடியாத தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தால் சூழலியல் கேடுகள் ஏற்படுகின்றன என்பதைப் பல ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. மரபணு மாற்ற பி.டி பருத்தியைக் கொண்டு வந்தபோது, ‘இதனைப் பூச்சித் தாக்காது’ என்றார்கள். ஆனால், பூச்சி தாக்கியது; தாக்க மட்டும் செய்யவில்லை; பூச்சிகளும் வீரிய மடைந்தன. மொத்தச் சூழலியலும் கெட்டது.

நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்தானே இந்தத் தொழில்நுட்பத்துக்கு அரசு அனுமதி அளித்திருக்கும்?

இந்திய அரசாங்கம், ஜி.எம் பயிர்களைப் பிரபலமாக்கத்தான் நமது வரிப்பணத்தைப் பயன்படுத்துகிறதே தவிர, இதுவரை ஜி.எம் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஓர் உருப்படியான ஆய்வும் நடத்தவில்லை.

நமது பயோடெக்னாலஜி துறை, கோடிக்கணக்கான பணத்தை ஜி.எம் பயிர் தொழில்நுட்பத்தை வளர்க்கச் செலவு செய்கிறது.

ஆனால், இதில் சிறுதொகையைக்கூட... இந்தப் பயிர்கள் என்ன மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை ஆய்வுசெய்யப் பயன்படுத்தவில்லை.

பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, இது அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் வளர்த்த தொழில்நுட்பம் என்பதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அறிமுகம் ஆகியுள்ள ஜி.எம் கடுகு இந்தியப் பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்பம் தானே?

நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடியதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தன. அதில் ஒரு காரணம், அது மான்சான்டோ உருவாக்கம் என்பது. ஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பற்றதாக இருக்கும்போது, அதை யார் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. நம் அம்மா கொடுக்கிறார்கள் என்பதற்காக நாம் விஷத்தை அருந்துவோமா? யார் கொடுத்தாலும் விஷம், விஷம்தான். நம் இந்தியப் பல்கலைக்கழகம், நம் நிலத்தில் பயிரிட விஷத்தைப் பரிந்துரைக்கிறது என்பதற்காக, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜி.எம் கடுகைக் கொண்டுவர நம் அரசு முன்வைக்கும் வாதங்கள் என்ன?

இதனால் அதிக மகசூல் கிடைக்கும்; இறக்குமதி குறையும் என்கிறார்கள். ஆனால், நம் மரபு ரக கடுகு விதைகளிலிருந்தே அதிக மகசூலைப் பெற்றுவிட முடியும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.எம் கடுகை அறிமுகப்படுத்துவதால் பலர் வேலை இழப்பார்கள் என்று சொல்லி வருகிறீர்களே?

விவசாயப் பொருளாதாரம் பெண் களைச் சார்ந்து இயங்குகிறது. ஓர் ஏக்கரில் கடுகு பயிரிடப்பட்டால், களை அகற்றும் பணிக்காக சராசரியாக ஒரு பெண்ணுக்கு 10 நாள்களுக்கு வேலை கிடைக்கும்.  ஆனால், இந்த ஜி.எம் தொழில்நுட்ப கடுகு, நிலத்தில் பெரும் களைச்செடிகளை உண்டாக்கவல்லது. அதை, மருந்து தெளிப்பதால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும்.

நம் தேசத்தில் இப்போது கடுகு உற்பத்தியாகும் 65 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் ஜி.எம் கடுகு  பயிரிடப்படும் பட்சத்தில், 12 கோடி பெண்கள் பணி இழப்பார்கள். இவர்கள் எல்லாம், சமூகத்தின் பொருளாதார அடுக்குகளில் கீழ்நிலையில் இருப்பவர்கள். இருக்கும் வேலையையும் இழந்து இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களை வேலையிழக்கச் செய்துவிட்டு, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மருந்து கம்பெனிகளுக்கு மாற்றித் தரும் வேலையைத்தான் அரசு இப்போது செய்கிறது.

ஜி.எம் கடுகினால் வேறு என்ன விளைவுகள் ஏற்படும்?

ஜி.எம் தொழில்நுட்பம் நம் விவசாயத்தை ரசாயனமயமாக்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். ஏற்கெனவே பி.டி பருத்தி, கேடுதரும் புதிய பூச்சிகள் உண்டாகக் காரணமாக அமைந்தது. அதுபோல, புதிய களைச்செடிகளின் வருகைக்கு இது காரணமாக அமையும். விவசாயிகளை, நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். தேனீக்கள், கடுகுப் பூவைத்தான் அதிகம் விரும்பும். இந்தத் தொழில்நுட்பத்தால் தேனீக்கள் பாதிக்கப்படும். தேன் உற்பத்திக் குறையும். ஆறு லட்சம் பேர் தேன் உற்பத்தித் துறையைச் சார்ந்திருக்கிறார்கள். நேரடியாக அவர்கள் வாழ்வாதாரம் சிதையும்.

ஒருபக்கம் பி.ஜே.பி அரசாங்கம், நம் பாரம்பர்யத்தைப் புனிதப்படுத்துகிறது; மரபுப் பெருமை பேசுகிறது; மாடுகளைக் காக்க வேண்டும் என்கிறது. இன்னொரு பக்கம் ஜி.எம் பயிர்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

பி.ஜே.பி ஒன்றும் மாடுகள் நலன் குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. மாடுகள் பெருக வேண்டும் என்று நினைக்கும் ஓர் அரசாங்கம், இப்படியொரு விவசாயிகள் விரோதச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது. உள்ளூர் மாட்டுச் சந்தை மெள்ள அழிந்துகொண்டிருக்கிறது.

அவர்களுக்கு நிதி அளிப்பவர்களுக்கு அவர்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள்.

பதிவு - மு.நியாஸ் அகமது

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...


தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது..

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.

கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
(புறம் - 18,28 - 30).

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.
(புறம்.118).

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார். (83).

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (25).

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும். (1384 - 87).

என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை கற்சிறை எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

எங்களை யாராவது விமர்சித்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு உள்ள தள்ளுங்க - சட்ட திருத்தம் கேட்டு சட்டத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள தேர்தல் ஆணையம்...


அதுக்கு பேசமா மன்னர் ஆட்சி நடக்குதுன்னு ஒட்டுமொத்தமா அறிவித்து விட்டு போகலாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...

கேரள ஆளுநர் சதாசிவம் யார் தெரியுமா...


ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகம் ஸ்டெயினஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பிலிப்பு மற்றும் திமத்தெயு இந்துத்துவா காவி தீவிரவாத வெறியர்களால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனையை ஆயுளாக குறைத்த உத்தமன்...

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் காவி தீவிரவாதி அமித்ஷாவை தப்பிக்க வைத்தவர்...

அதற்கு பரிசாக ஓய்வுபெற்ற மறுநாளே ஒய்யாரமாக கேரள ஆளுனராக கொலுவேற்றப்பட்டார் சதாசிவம்...

வாழ்க மனிதாபிமானம்...

பாஜக வும் தேச துரோகமும்...