02/10/2018

இன்று மகாத்மா காந்தி ஜெயந்தியாம்...


காந்தியின் மறுபக்கம் மகாத்மா எனும் அடைமொழி இவருக்கு ஏன்?

தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே.

மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி.

இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது.

அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.

ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது.

பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார்.

காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக் கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும்.


கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.

மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை.

ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்பட வேண்டியதே.

பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?

இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது...

உலக வங்கியால் சீரழிழும் நாடுகள்...


இந்திய வரலாறும் தமிழர்களும்....


இந்திய வரலாறு - காலக் குறிப்புகள்...

கி.மு 4440 - தமிழின் முதல் சங்கம் கடலடியில் உள்ள “தென் மதுரையில்”

கி.மு 3700 - இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில்

கிமு 3500 -1500 - சிந்து வெளி நாகரிகம்

கி.மு 1850 - மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்”

கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் / வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்

கிமு 554 - புத்தரின் நிர்வாணம்

கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு

கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா

கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு

கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்

கிமு 272-232 - அசோகர் ஆட்சி

கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்

கிமு 58 - விக்கரம் ஆண்டு

கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்

கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி

கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை

கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்

கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்

கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்

கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது

கிபி 405-411 - பாகியான் வருகை

கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி

கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்

கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்

கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை

கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு

கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்

கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு

கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்

கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்

கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்

கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு

கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது

கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை

கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை

கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்

கிபி1347 - பாமினி அரசு துவக்கம்

கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு

கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்

கிபி1451 - லோடி வம்சம்

கிபி1496 - குருநானக் பிறப்பு

கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)

கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்

கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்

கிபி1539 - குருநானக் இறப்பு

கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்

கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்

கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்

கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை

கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது

கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது

கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது

கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்

கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்

கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்

கிபி1757 - பிளாசிப் போர்

கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்

கிபி1764 - பாக்ஸர் போர்

கிபி1790-92 - மைசூர் போர்

கிபி1799 - நான்காம் மைசூர் போர்

கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்

கிபி1805 - மராத்தியர் தோல்வி

கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்

கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்

கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)

கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தமிழகத்தில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)

கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு

கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்

கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்

கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்

கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்

கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்

கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்

கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை

கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்

கிபி1928 - சைமன் கமிஷன் வருகை

கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்

கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது

கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா

கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்

கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி

கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)...

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அருகே உள்ள சாளுவகுப்பம்...


தனக்கு நிகர் வேறு யாரும் மொழி உணர்வாளர் இல்லை என்று நினைக்கும் ஒரு அறிவாளித் தமிழர் நம்மிடம் கேட்டுள்ள கேள்வி இது தான்...


தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த தமிழ் அமைப்புகளுக்கு குறைந்த அளவு பொதுபுத்தி கூட இல்லை.

எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தானே தமிழர்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஒரே ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம் தானா ?

இவருக்கு நம் பதில்...

இவருக்கு குறைந்த அளவு அரசியல் அறிவு இல்லை என்பதே உண்மை.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அளவு எந்த மாநிலமும் போராடவில்லை.

தமிழகம் இந்தியை எதிர்த்து போல் எந்த மாநிலமும் எதிர்க்கவும் இல்லை.

இன்னும் பல மாநிலங்கள் தங்கள் மேல் திணிப்பு உள்ளது என உணரக் கூட இல்லை.

பல மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டும் விட்டனர்.

இந்தி எதிர்ப்பு பலமாக உயிர்ப்புடன் இருப்பது தமிழகம் மட்டுமே.

இந்த நிலையில் நம் பக்க நியாயத்தை புரிய வைக்கவும் , நம் மீது ஏவப்பட்டுள்ள இந்தித் திணிப்பையும் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க நாம் கையில் எடுத்த கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவது தான்.

இந்த கோரிக்கையே பல தமிழர்களுக்கு என்னவென்று புரியவில்லை.

ஏன் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என பல தமிழர்கள் கேள்வி கேட்கும் நிலை தான் இன்றும் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தான் தமிழ்நாட்டில் எடுபடும் .

குறைந்த அளவு வரவேற்பு பெரும்.

இங்கு தமிழர்களின் பலத்தை திரட்ட இம்முயற்சி பலன் தரும்.

ஆனால் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தொடக்கக் காலத்தில் பயன்தராது.

காரணம் அதற்கான முன்னெடுப்பு அந்தந்த மாநிலங்களின் சூடு பிடிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட இதே கோரிக்கை வலுப்பெற வேண்டும்.

அது வலுப்பெறாமல் நாம் மட்டும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தமிழகத்தில் கூட அந்த கருத்து எடுபடாது.

இது தான் அரசியல் யதார்த்தம்.

இதை புரிந்து கொண்டே தமிழை முன்னிறுத்தி கோரிக்கை வைக்கிறார்கள்.

இது நாம் புதிதாக வைத்த கோரிக்கை அல்ல .

காயிதே மில்லத் 50 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை தான்.

உண்மையில் தமிழ் மொழிக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாவதற்கு அனைத்து தகுதியும் உண்டு என்று நிரூபித்தவர் காயிதே மில்லத் அவர்கள்.

இப்போது நாம் அதே கோரிக்கையை வைக்கிறோம்..

இதற்கு மேல் அந்த அறிவாளித் தமிழருக்கு நாம் எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை...

சித்தர் ஆவது எப்படி - 6...


புத்தியின் கனல் தன்மை...

மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான் .. மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது...

வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும்,ஆக இரு செயல்களை மனம் செய்கிறது... வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்..

இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்..

கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்...

பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது..

அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது..

ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது...

அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது.. அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது..

இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது.. இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...

மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது....

வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்தி கொள்ளும்..

ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்...

முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது... இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி...

தடு மாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?

புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது.. புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்..

புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது..

புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக்கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்..

மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்..

ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்.. தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்..

அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...

தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்...

புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்...

மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே..

இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது...

ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்.. பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது..

பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.. இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...

நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே...

புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்..

குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது..

புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை..

ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்..

எழுந்த புத்தியே குருவாக முடியும்.... எழுந்து பலப்படவேண்டும்..

பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்..

பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்..

சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது..

அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்..

ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...

தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக - அதிமுக...


பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி - வாஞ்ஜுர்...


பாதங்களைத் தாக்குவதில் பித்த வெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்:

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்...

ஸ்டெர்லைட் ஏமாற்று வேலை...


மண் பானை சமையல் நல்லதா?


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும்.

ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.

மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை.

எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்...

பாஜக மோடி யின் டிஜிட்டல் இந்தியா அம்பானி - அதானி விற்பனைக்கு...


பாம்பாட்டிச் சித்தர் பாடல்...


வேதப்பொருளின்ன தென்று வேதங் கடநத
மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள் கண்டாடாய் பாம்பே

பொருள்...

வேதத்தின் பொருள் என்ன என்ன என்பதை வேதத்திற்கும் அப்பாற்பட்டு நின்ற மெய்ப்பொருளைக் கண்டு மனதினை ஆய்ந்து உரைத்து அறிவாய் நின்ற பொருள் இதுதான் என்று அறிவுறுத்தும் முழுமை பெற்ற நல்லாசிரியரின் அடிபணிந்து ஆடுவாய் பாம்பே

நாதவெளி என்பது வேதம்.. உரைப்பதாகக் கூறப்படும் நிலை, நாதத்தையும் கடந்து நிற்கும் சுத்த வெளி நிலை ஆதி நிலை. இவ்வாதி நிலையில் அறிவும் அன்புமாகி முற்றுணர்ந்த நிலை இந்நிலையை அடைவதை உரைக்கும் ஆசிரியரைப் பணிக என்பது விளக்கம்...

அதிமுகவின் சாதனைகள்...


ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்...


ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர்.

அவர்கள், இங்கு வீசும் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து தப்பிப்பதற்கு (அது உச்சபட்சமாக 47 டிகிரி செல்சியசாக இருக்கும்) நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக் கருதினர்.

இந்த வறண் ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன.

குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது, தரையில் கான்கிரீட் இடப்படுகிறது.

நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு, வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு. கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.

நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.

கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

இந்த நகரத்தின் ஆயிரத்து 900 குடும்பங்களில் 70 சதவீதம் பேர் நிலத்தடி வீடுகளிலேயே வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் தவிர வேறு எங்கும் தங்களுக்கு வாழப் பிடிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக இடம் வாங்கி ஒரு 'டக்கவுட்'டை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 17 லட்ச ரூபாயும், ஏற்கனவே தயாராக உள்ள, மூன்று அறைகள் கொண்ட 'டக்கவுட்'டை வாங்குவதற்கு 30 லட்ச ரூபாயும் ஆகிறது.

ராபர்ட் கோரோ என்பவர் இங்கு 'டெசர்ட் கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டலை நடத்தி வருகிறார்.

உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல் என்கிறார் அவர்.

தனது ஓட்டலில் வேறு எங்கும் இல்லாத அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம், அவர்கள் தமது அறைக் கதவை மூடிவிட்டால் எந்த வெளிச்சத்தமும் கேட்காது என்று கூறுகிறார் ராபர்ட் கோரோ.

நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான்.

தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்...

திராவிடம் - 4...


பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்..

இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்துகொள்வோம்..

பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர்.

இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.

ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணி வந்தனர்.

தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதும் மத வழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும் நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும் விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும் உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.

உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.

பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது.

(தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது)

மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.

(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).

அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு,
நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).

அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.

இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

நாயக்கர் மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.

அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும், தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும் இன்று வரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.

18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.

வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.

18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது.

(ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா)

ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனை பேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர் 19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.

1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டுவரப்பட்டது.

(நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) .

அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.

ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.

'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால்  அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .

பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.

பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.

அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்துவிட்டனர்.

பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.

அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.

இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.

இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.

அப்போது  பிறந்தது தான் திராவிடம்...

அதிக ரயில் நிலையங்களில் அவலநிலை இது மீஞ்சூர் ரயில் நிலையம்...


ஆழ்மன சக்தியைப் பெற முடியுமா?


ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்....

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


ஆயுத எழுத்தின் சிறப்பு....


கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் முதற்பாடலிலேயே ஆயுத எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் நூன்மரபு சூத்திரம் -1

எழுத்துக்களின் வகை..

1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன

குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் பஃறுளியாறு..

என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு போர் வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில்  இருக்கும்.

அதன் பின் பக்கத்தில், பிடிப்பதற்கென ஒரு கைப்பிடி இருக்கும். முன்பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இருக்கும்.

போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கும் போது, அந்த மூன்று குமிழிகள் போன்ற கடும் பகுதிகள், பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் தாக்கும்.

(அந்த நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தானாக எழும் )

அந்த கேடயம் என்ற ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும்  ஆய்தம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும் போது, அவன் வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அதுவே அந்த எழுத்திற்கான உச்சரிப்பாகவும் இருப்பது வியப்பை அளிக்கிறது...

பிற எந்த மொழியிலும் இதற்க்கு இணையான உச்சரிப்பை கொண்ட எழுத்து கிடையாது என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும்...

ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தது ஆய்வு செய்து எழுதியும் இருக்கிறார்கள்...

அவர்கள் எதை ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே இருக்கிறது...

(அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)

ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நாம் அறிவோம்.

குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கே ஆயுத எழுத்தை தனது பெயரில் கொண்டிருந்த பஃறுளி ஆறு அமைந்திருந்தது.

அப்படியானால், எந்தக் காலத்திளிருந்து வாளின் பயன்பாடும் கேடயத்தின் பயன்பாடும் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதை எடுத்துக் கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆயுத எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...

பாஜக 1.30 லட்சம் கோடி சம்பாதித்ததால் காங்கிரசுக்கு கோபமாம்....


மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?


மகாபாரதப் போர் நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும், இலக்கிய ஆதாரங்களும், பழங்கால சிற்ப ஆதாரங்களும் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது.

அதற்கான காரிய காரணங்களை ஆராய்ந்து வெளியிடும் முயற்சியில் தமிழ் பேரறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்து மதத்தினர் உண்மையான உள்ளத்துடன் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வழக்கிற்கு வந்தது எனலாம்....

ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்திலேயே, பஞ்சபாண்டவர் இரதங்களுடன் சேர்த்து, ஏழு இரதங்கள் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது....

அவற்றுள், இரண்டு இரதங்கள் கடற்கோளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது..

முழ்கிய பகுதிகளில் கடைசங்க காலத்தைச் சேர்ந்த  பகுதிகளும் உள்ளதாக ஆய்வாளர்களின் முடிபுகள் கூறுகிறது.

ஆனால், கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக முனைவர். சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு "புராண உண்மைகள் " என்ற புத்தகமானது வெளிவரப்போவதாக இருக்கும் நிலையில்,  ''பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல'' என்கிற பரப்புரையானது, எவ்விதமான ஆதாரமும் இன்றி விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது..

மகாபாரதப் போர் என்பது தமிழர்களின் ஆதியில் கடைபிடித்து வந்த போர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த போராகும் என்பதை அதன் உயரிய போர் நெறிமுறைகளைக் கொண்டு அறியலாம்..

போர்க்களத்தின் எல்லைக்கு அப்பால் யாருமே தனியாக ஒருவரையும் தாக்கவில்லை.

பெண்களோ, குழந்தைகளையோ, முதியவர்களையோ, சம்பந்தமில்லாத பொது மக்களையோ தாக்குவதும், புறமுதுகிடுதலும், முதுகில் அம்பை எய்தலும், கேவலமானதாக கருதப்பட்டது.

உயரிய போர் நெறிமுறையானது, அறியப்படுகிற வரலாற்றுக் காலத்திற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தகைய ஒழுக்கமானது தமிழரைத்தவிர வேறு எந்த இனத்தாரிடத்திலும் இருந்ததாக வரலாறு கிடையாது.

ஆனால், மூலக்கதையில் வரும் போர்க்களமும், நதிகளும், சில காட்சிகளும் கடற்கோளால் மூழ்கடிப்பட்டும் இருக்கலாம்.

வனவாச காலத்தில், பாண்டவர்கள் கொல்லி மலையில் முனிவர்கள் (சித்தர்கள்) ஆதரவுடன் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது.

இத்தகவல்கள் அங்கு வாழும் மக்கள் தமது அடுத்த தலைமுறைக்கு வாழையடி வாழையாக கூறிவரும் தகவலாகும்.

அவ்வாறு கூறப்பட்டுவரும் உண்மையான அதிசயமான தகவல்கள் ஆயிரம் தலைமுறைகள் கடந்து சென்றாலும்  நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை...

கொல்லி மலையில், பெரியண்ணசாமி கோவில் என்று அழைக்கப்படுவது பஞ்சபாண்டவர்களில் பெரியவராக இருந்த தருமருடைய கோவிலே ஆகும்..

கொல்லிப்பாவையாக இருப்பது திரௌபதியே ஆகும்.

அந்த இடங்களுக்கு நேரில் சென்றபோது, இவ்விவரங்கள் எனக்கு கிடைத்தது..

அங்குள்ள திரௌபதி அம்மன். துகிலுரியப்பட்டு இருக்கும். அதனால் முகத்தை மட்டும் பார்க்கும்படியாக திரை கட்டப்பட்டிருக்கும்.

அங்கு யாரும் பலி கொடுக்கவோ, அசைவம் புசிக்கவோ அனுமதி இல்லை. காரணம், அத்தேவதையானவள் விரதத்தை கடைபிடிப்பவள்.

வனவாசம் முடியும் காலத்தில், ஓராண்டு காலம் யார் கண்ணிலுமே படாமல் வாழவேண்டும் என்ற ஆணை இருந்தது.

அப்போது வெள்ளியங்கிரி மலையிலுள்ள பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படும் இரகசிய குகைகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுவதற்கு எதுவாக அதன் அமைப்பு உள்ளது.

திரவ்பதி அம்மனது கோவில்கள்...

திரவ்பதி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கோவில்கள் அனைத்தும் தமிழ்நாடு, முன்னாளில் தமிழர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் தென்னிந்திய பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் போன்ற  இடங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது.

(கதை நடந்ததாக கூறப்படும் இடங்களில் மிகவும் பிற்காலத்தில் மட்டுமே ஒன்றிரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது)

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்..

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.

இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

புறநானூற்றில் கூறப்படும் “ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

பாரதப் பெரும்போரில், இருபடைகளுக்கும் சோறுகொடுத்த சேரமன்னன், உதியஞ்சேரலாதனைப் பற்றிய குறிப்புகள், புறநானுறிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சோற்றை எவ்வளவு தூரம் கொண்டு சென்று கொடுக்கமுடியும் என்பதை நீங்களே யூகம் செய்து கொள்ளவும்.

திரு.முருகேசன் தனபால் அவர்களால் எழுதப்படும் "புராண உண்மைகள்" நூல் விமர்சனம்.

முனைவர் சு.சௌந்திரபாண்டியன் அவர்கள் எழுதிய "புராண உண்மைகள்"என்ற புத்தகத்தில் இருந்து..

கண்ணன் என்றும், கிருஷ்ணன் என்றும், கிருஷ்ணபகவான் என்றும், கிருஷ்ண பக்தி என்றும், ' அரே ராமா அரே கிருஷ்ணா ' என்று கூறி உலகெங்கும் பேசப்பபடுகிறாரே கிருட்டிணன் , அந்த கிருட்டிணன் ஒரு தமிழன்..

கிருட்டிணன் என்பவனின் மூலத் தமிழ் பெயர் கருப்பையா அல்லது கருப்பசாமி என இருத்தல் வேண்டும்.

கறுப்பு என்பதற்கான வடசொல்தான் கிருஷ்ணம்.

தமிழிலிருந்து பிரிந்த வடமொழி, தமிழன் வரலாறாகிய கிருட்டிணன் வரலாற்றை எழுதி வைத்த நூல்தான் அரியவம்சம்.

மகாபாரதம் கூறும் இக் கிருட்டிணன், ஒரு தமிழன்..

இதற்கு ஐயமே வேண்டாம்..

இதற்கு சான்று?

கிருட்டிணன் வரும் இடங்களை எல்லாம் உற்று நோக்குங்கள்.

உங்களுக்கே தெரியும், அவை எல்லாம் தமிழ் மண்ணில் நடந்தவையே என்று.

ஸ்ரீமத் பாகவதத்தை தமிழில் மொழி பெயர்த்த கடலங்குடி நடேசசாத்திரி அவர்கள், மதுரா என்று வட மொழியில் எழுதபட்ட இடங்களை எல்லாம், மதுரை என்று தான் மொழி பெயர்த்துள்ளார்.

அவர் தமிழ் நாட்டு மதுரையைக் குறிக்கவில்லையாயினும், உண்மையில வடமொழி நூல்கள் கூறும் ' மதுரா ' தமிழ் நாட்டு நம் மதுரை தான். இதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் பேருண்மை இது.
மிக பெரிய புராண உண்மை இது.

தமிழ் மக்கள் வரலாறே புத்துணர்ச்சி பெறும் உண்மை இது..

இத்தனை ஆண்டுகளாக மறைந்து போய்க்கிடத்த மாபெரும் வரலாற்று உண்மை இன்று தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

எனது 23 ஆண்டுகால ஆய்வின் பலன் என்று அடக்கத்தோடு கூற விரும்புகிறேன் இதை..

அதாவது, தமிழகத்து மதுரையில் தான் வாசுதேவருக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான்.

இதே நம் மதுரையில்தான் கம்சனின் அரன்மனை இருந்தது.

தமிழகத்தில், கஞ்சன் என்று சில தமிழ் நூற்களில் வருபவன் இதே தமிழனாகிய கம்சன் தான்.

அப்படியானால், யமுனைக் கரையில் கோகுலத்தில் வளர்ந்தான் கண்ணன் என்பது ?

அது உண்மை தான்.. ஆம்..

தமிழகத்து வைகை இருக்கிறதே , அதன் வடமொழிப் பெயர் தான் யமுனா.

இந்த சொல் மாற்றம் தான் தமிழகத்து வரலாற்றைத் தமிழர்களிடமிருந்து பறித்தது.

இனிமேல் வட மொழி நூல் எந்த நூலை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, அதில் யமுனா நதி என்று வந்தால், அது தமிழகத்து வைகை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக வரலாறு இனிமையாகத் துலங்கக் காண்பீர்கள்.

தமிழக வரலாறு என்றுகூடக் கூற வேண்டாம் உண்மை வரலாறு என்று கூறலாம்.

வை - நூனி
வைக்கோல் - கதிரின் நுனி
வை + கை = வைகை

யமுனை என்ற சொல்லை பாருங்கள்..
ய + முனை = யமுனை ; முனை = நுனி..
இப்போது விளங்குகிறதா ?

வைகைதான் யமுனை என்று ?

இதை ஏதோ சொல்லாராய்ச்சி என எண்ணி விட வேண்டாம்.

நமது ஆய்வு சொல்லாராய்ச்சி மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.

நமது ஆய்வு நிலவியல் (Geography) உள்பட பல்வேறு கூறுகளின் மீது உட்கார்த்துள்ளது.

வைகை கரையில் தான் கண்ணன் விளையாடியது.

பலராமனுடன் கண்ணன் விளையாடிய கோகுலம் எது ?

நமது திருப்பூவனம் என்ற ஊர்தான்.. ஆம்..

வடமொழி நூற்களில் விரஜா என்று குறிப்பிடடும் இந்த ஊர் நந்தகோகுலம், தமிழகத்துத் திருப்பூவணம் என்ற ஊர்தான்.

மதுரையை ஒட்டி அமைத்துள்ளது. வைகைக் கரையில் உள்ளது.

இத் திருப்பூவணமே யமுனை கரையில் உள்ள நத்தகோகுலம் என்று சித்திரிக்கபட்டுள்ளது வடமொழி நூல்களில்.

எந்த வடமொழி நூல்களில் ?

மகாபாரதம், அரியவம்சம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய வடமொழி நூல்களில்..

எனவே, இந்த வடமொழி நூற்கள் விவவரிக்கும் கண்ணன் வரலாறு , தமிழக வரலாறே , கற்பனை கதை இல்லை..

நத்தகோகுல வருணனைகளைப் படித்துப் பாருங்கள்.. அப்படியே நமது வட்டாரத்திற்கு பொருந்தி வரும்.

திருப்பூவணத்துக் கடம்ப மரங்கள் எல்லாம் கூட அப்படி வடமொழி நூற்களில் அச்சுக் குலையயாமல் வருணிக்கப்படுகின்றன.

நான் இங்கு ஒன்றைக் கேட்கிறேன்..

எந்த வடமொழி நூலிலாவது, 'மதுரா' 'கோகுலம்' முதலியன வடநாட்டில் இருப்பனவாக எழுதப்பட்டுள்ளதா? இல்லையே..

அப்படி இருக்கும் போது, இவற்றை ஏன் வடநாட்டுக்குத் தள்ள வேண்டும்..

யமுனை ஒன்றுதான் இதுவரை கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ளிக் கொண்டிருந்ததுது.

அந்த இரகசியம் இன்று விடுபட்டு விட்டது.

தமிழக வைகை தான் யமுனை என்று தெளிவான பின்.

வேறு எதை வைத்து கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ள முடியும்?

தமிழகத்து வைகைக்கு 'யமுனை ' என்று பெயரிட்டவர்களும் தமிழர்களே..

பழந்தமிழர்கள் வடநாடு பரவிய போது, அங்கே இருந்த ஒரு பெரிய நதிக்கு யமுனை என்று பெயரிட்டார்கள். அதுவே யமுனை எனப்பட்டது..

வடநாட்டு யமுனா, தமிழகத்து வைகையைவிடச் சிறப்பாக, வளமாக இருந்ததால் 'யமுனா' என்றாலே அது வடநாட்டு யமுனாதான் என்ற நிலை ஏற்ட்டது..

யமுனையின் இரகசியம் இன்று வெளிப்பட்டு விட்டதால் எத்தனையோ வரலாற்றுக் கருத்துகள் இனி தமிழர் பக்கம் ஒதுங்கும். இந்த அதிசயத்தை இனித் தமிழகம் துய்க்கும், தமிழர்கள் நிச்சயமாக ஏற்றம் பெறுவர்..

கண்ணனை ஒரு கடவுளாக வணங்குவது வேறு, அவனை ஒரு பழந்தமிழ் அரசனாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது வேறு..

கண்ணன் எனும் ஆற்றல் வாய்ந்த தமிழக அரசனின் வரலாறு மிக பெரிய தமிழக வரலாறு.

இதை நம் இளைய சமுதாயத்திற்குக் கூற வேண்டியது கடமை நமக்கு உள்ளது.

இந்த வரலாறு தமிழர்களின் சொத்து.

இதை இழந்தால், தமிழர்களைப் போல் ஏமாளிகள் எருவம் இருக்க மாட்டார்கள்.

கடவுள் பக்தி இல்லாதவர்களும், தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம், பக்தியில் பரவவசபட்டுத் தான் கண்ணன் வரலாற்றை பேச வேண்டும் என்பதில்லை.

சுற்றுலாத் துறையினர் இங்கு விழித்துக் கொள்ள வேண்டும்..

மதுரையில் "இது தான் கண்ணன் பிறந்த ஊர். மதுரா என்பது இது தான்." என்று எழுதி வைக்க வேண்டும். உலக மக்களைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும்.

தமிழகம் அப்போது ஒரு மெக்கா ஆக, ஒரு வாடிகன் ஆக ஆகும்.

திருப்பூவணத்தில், "இதுதான் கண்ணன் விளையாடிய கோகுலம்" என்று ஒரு விளம்பர பலகை எழுதி வைக்க வேண்டும், அப்போது அவ்வூரே செழுமையாகும்.

என்னினிய தமிழர்களின் வாழ்வு பூத்து குலுங்கும்.

கண்ணன் கையில் உள்ள புல்லாங்குழல், அதுவே தமிழகத்து இசைக் கருவி அல்லவா..

ஏழு சுரங்களை கண்டறிந்த இனம் தமிழினம் அல்லவா?

இப்படி எத்தனையோ கருத்துகளை அடுக்கி கொண்டே போகலாம்.

கண்ணன் தமிழன் என்றால் அவரை ஒட்டிய எத்தனையோ வரலாறுகள் உள்ளனவே.

அவை எல்லாம் தமிழர்களின் வரலாறுகள் தான். இதில் ஐயம் இல்லை.

இவை பற்றிய எனது விரிவான ஆய்வு பின்னர் வெளிவரும், அதுவரை பொறுத்தருள்வீர்...

பாஜக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


பெட்ரோல் விலை உயர்வு, பாஜக மோடியின் டிவீட்டையே போட்டு கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்...


தற்போது உள்ள பிரதமர் மோடி 2012 மே மாதம் 23 ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த போது பதிவு செய்தது:

”கடும் பெட்ரோல் விலை உயர்வு காங்கிரஸ் அரசின் தோல்வியை காட்டுகின்றது” - மோடி

இந்த ட்வீட்டின் இணைப்பு

https://twitter.com/narendramodi/status/205314848064679938 (இந்த செய்தி வெளியிடும் வரை இந்த இணைப்பு உள்ளது)

மோடி அவர்கள் இந்த ட்வீட்டை போடும் நேரத்தில் அப்போது குருட் ஆயில் விலை 111 டாலர். பெட்ரோல் விலை 73 ரூபாய்.

தற்போது குருட் ஆயில் விலை 67 டாலர் , பெட்ரோல் விலை 83+ ரூபாய்

கிட்ட தட்ட 2012 ஆம் ஆண்டை விட தற்போது குருட் ஆயில் விலை பாதி குறைந்துள்ளது.

அப்படி எனில் 2012 உடன் ஒப்பிடும் போது பாதி விலை அதாவது 35-40 ரூபாய் தான் பெட்ரோல் இருக்க வேண்டும்.

73 ரூபாய்க்கு விற்றதே பிரதமர் மோடியின் பார்வையில் அரசின் தோல்வி என்றால் , 35-40 ரூபாய்க்கு (குருட் ஆயில் விலை படி) விற்க வேண்டிய பெட்ரோலை 83 ரூபாய்க்கு விற்கும் மோடி அரசின் செயல்பாட்டை என்ன சொல்வது என நெட்டிசன்களின் கேள்விக்கு பதில் கிடைக்குமா ?

குறிப்பு : 2012 ல் டாலரின் மதிப்பு 52 ரூபாய், தற்போது 72 ரூபாய். 52 ரூபாய்க்கு இருந்த டாலர் மதிப்பை தற்போது 72 ரூபாய்க்கு கொண்டு வந்தது நாட்டு மக்களின் தவறு அல்ல நாட்டை ஆள்பவர்களின் தவறு!. இந்த அளவிற்கு நம் இந்திய நாட்டின் பணத்தின் மதிப்பை குறைத்துள்ளார்கள் என்பது கூடுதல் தோல்வி...

பாஜக - அதிமுக இரண்டும் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதை தான் சொல்லி இருக்கான்...


கன்னிமாரா நூலகம்...


கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம்.

எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப் பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம்.

1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை.

காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம்.

கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் (இன்று) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி..

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம், முன்னேற்றம், தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப்படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது.

1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் திருமூலர்.

இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான 'பிரெய்லி' மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது.

தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

“இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம்.

ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று, வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள்.

இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்...

திராவிடம் - 3...


திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டு வந்தது என்பதைப் பார்க்குமுன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது..

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'..

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்'  கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர்..

இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக் கொண்டு சாதியை உருவாக்கி  மனுதர்மத்தை உருவாக்கி கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி
ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர் .

ஆனால் உண்மை அதுவல்ல..

ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே.

இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலி செய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும், இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு மற்றவர்கள் விலகிக் கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.

திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது...

The new world order இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்...


தற்போது நடப்பதை ஒப்பிட்டு பாருங்கள்...

இறந்தவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை.. ரமணா பட பாணியில் சம்பவம்...


நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழஈசனூரைச் சேர்ந்தவர், சேகர். இவர் அரசு பஸ் கண்டக்டராக நாகை பணிமனையில் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து  சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து  கடந்த 11 ஆம் தேதி சேகரை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் . சிகிச்சைக்காகவும், மருந்து செலவுக்காகவும் ரூ.5லு லட்சம் வரை செலவானது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.2லு லட்சம் பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களிடம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வசூலித்து மொத்தம் ரூ.50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்கள் கட்டியுள்ளனர்.  தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாதால்

நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சேகர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்ற தகவலை தெரிவித்தனர்.

இதனைக்கேட்டு அவருடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி பணம் வசூலித்து அந்த தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதே என அவருடைய குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேகரின் மகன் சுபாஷ், தஞ்சை தெற்கு போலீசில் மாலை புகார் கொடுத்தார். ரமணா படப் பாணியில் இறந்தவருக்க சிகிச்சை அளித்த தனியார் மருத்துவனை பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

எய்ட்ஸ் உருவாகவில்லை... உருவாக்கப்பட்டது...


தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்...


கலாநிதி பாலசிவகடாட்சம் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் விவசாயத் துறை உயிரியல் (Agricultural Biology) பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர்.

தமிழ் மருத்துவர் அல்லாத இவர் தமிழ் மருத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளதிலிருந்து இவரின் திறமையைப் பற்றி அறியலாம்.

பல்கலைக் கழகத்தின் புலமையாளர்களிடம் அவற்றைப் பற்றிய நன்மதிப்பு நிறைந்திருந்தது.

தமிழர் மருத்துவத்தில் தனிச் சிறப்புகளைப் பழம் பாடல் விளக்கத்துடன் கூறுவதோடு சித்த மருத்துவத்தின் மேன்மைகளை சுவைபடக் கூறியுள்ளார்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் எளிய மருத்துவ முறைகளையும் இந்நூலின் விளக்கியுள்ளார்.

சமுதாயத்திற்கே பயன்தரும் நூல் இது. ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது.

இந்நூலில் நான்கு பகுதிகள் உள்ளன.

(1) தமிழ் மருத்துவத்தின் வரலாறு

(2) உணவே மருந்து

(3) வீட்டு வைத்தியம்

(4) மூலிகை ஆய்வு

ஒவ்வொரு பகுதியும் தமிழரின் அறிவுத்துறை வளர்ச்சி பற்றியும் சிந்தனை வளர்ச்சி பற்றியும் மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

இந்நூல் தமிழ் வாசகர்களின் உடல்களிற்கு மாத்திரமல்லாமல் உள்ளங்களுக்கும் நன்மருந்தாக அமையும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி
அவர்களின் முன்னுரையிலிருந்து...

நூலாசிரியர் : கலாநிதி பால சிவகடாட்சம்
B.Sc. Hons.Srilanka, B.Ed. (Toronto),
Ph.D.(London), D.I.C
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
விலை : ரூ. 130/-

4 ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை...


இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன்.

இவர் கேஸ்பர் என்ற 12 வயது பூனையை வளர்த்து வந்தார்.

இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது.

இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும்.

அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும்.

அப்போது அது இறங்கிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும்.

வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும்.

நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது.

சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது...

20.01.2010 அன்று இவ்வுலகை விட்டு சென்றது...

ஸ்டெர்லைட்டின் டூபாக்கூர் வேலைகள்...


திராவிடம் - 2...


தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறி விடுகிறன்...

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னணியில் உள்ள திராவிடக் கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்க வேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்...

இப்போது விடயத்திற்கு வருவோம்..

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளிமாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத் தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக் கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழி செய்திருந்தனர்..

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர்..

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப் பெயரையும் மாற்றி...

தெலுங்கரின் நாய்க்கர், ரெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்..

தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் வந்தேறு குடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப் பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை  என்பது இனப்பற்று இல்லாமை ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதே நிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன...

நம்ப முடியாத உண்மைகள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


அமெரிக்க இந்திய பழங்குடியினர் நீண்ட காலமாக "நட்சத்திர மக்கள்" அல்லது "நட்சத்திர மனிதர்கள்"   விண்ணிலிருந்து பறக்கும் படைப்பில் வந்து தங்கள் மூதாதையர்களுக்கு ஆன்மீக மற்றும் விண்ணியியல் அறிவை வழங்கியதாக கூறிவருகின்றனர்..

அரிசோனாவின் ஹோப்பி குகை சித்திரங்கள் "பறக்கும் படைப்புகள் மற்றும் விசித்திரமான மனிதர்கள்" பற்றி பேசுகிறது. அவர்கள் நான்காவது கட்டத்தில் (பரிணாமத்தில்) இருக்கிறார்கள் என்றும், அவர்கள் "எறும்பு மக்கள்" என்றும் குறிப்பிடுகின்றனர், இது அவர்களின் முன்னோர்கள் பாதுகாப்பிற்கு வழிவகுத்த உயிரினங்களின் குகை சிற்பங்கள்.

நியூ மெக்ஸிகோவில் மூதாதையர் மக்கள் தங்கள் நம்பிக்கையான அமைப்பில் வானத்திலிருந்து வந்த முன்னோர்களைப் பற்றிய குகை சித்திரங்கள் இவை என்று குறிப்பிடுகின்றனர்..

அமெரிக்காவின் வயோமிங் நகரில் லெஜெண்ட்ஸ் ராக் என்ற இடத்தில் ஒரு குகை சித்திரத்தில், வேற்றுகிரகவாசி-போன்ற தோற்றத்தை விவரிப்பதாக பலர் கூறுகின்றனர். இதில் 280 க்கும் அதிகமான பென்டோகிளிஃப்கள் உள்ளன, அவற்றுள் சிலவும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக கருதப்படுகிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கிறிஸ்டினா ஏரிக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய வரைபடம், நான்கு மனிதர்களுக்கு மேலே கருப்பு இறக்கைகளுடன் ஒரு வெள்ளை தட்டு போன்ற ஒரு சித்திரம் உள்ளது.
இடாஹோவில் உள்ள கியூஸ் கிரீக்கில் உள்ள ஒரு பாறை ஓவியம், ராக்கெட்டில் உள்ள புகை மற்றும் சுழற்சியைக் கொண்ட ஒரு ராக்கெட்-போன்ற பொருளைக் காட்டுகிறது மற்றும் ராக்கெட்டின் உள்ளே மனித இனத்தை ஒத்த உருவம் ஒன்று உள்ளது.

அசாசியி மற்றும் ஃப்ரெமோன் பூர்வீக அமெரிக்கர்கள் மூதாதையர் களின் உட்டாவின் சேகோ கனியன் பகுதியில் பெரிய கண்கள் மற்றும் மனிதனுக்கு நெருக்கமான வித்தியாசமான மனிதர்களைக் காட்டுகின்றன சித்திரங்கள் உள்ளன..

அமெரிக்க பழங்குடி இனத்தில் வந்தவறான ரிச்சர்ட் வாடிகஸ் என்பவர் தங்கள் அமெரிக்க இந்திய மூதாதையர் பற்றிய ஒரு ஆய்வு முடிவுகள்,

"பல தலைமுறைகளுக்கு முன்னர் எங்களிடம் வந்த நட்சத்திர மக்களை பற்றி என் மக்கள் சொல்கிறார்கள்.
விண்வெளிலிருந்து வந்துமக்கள் ஆன்மீக போதனைகளையும், பிரபஞ்சத்தின் வரைபடங்களையும் கொண்டு வந்தனர். அவர்கள் அன்பானவர்களாகவும், சிறந்த முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை விட்டுச் சென்றபோது, வெவ்வேறு இனங்களாக இருந்தார்கள் என்று என் மக்கள் சொல்கிறார்கள்." என குறிப்பிட்டார்.. 

இந்த மாதிரி பதிவுகள் நிறைய போடுங்க ..... தொடர்ந்து அதை பற்றியே எழுதுங்கனு நிறைய பேர் சொல்லுராங்க....


ஒரு குறிப்பிட்ட துறையில்  நமது பார்வையை பற்றியே அதிகமாக தேடுவதன் மூலம் நாம் Echo chamber என்ற மாயஉலகத்தில் மாட்டிகொள்கிறோம்....

அதாவது அதை ஒட்டிய தகவல்கள் மட்டுமே நமது வாழ்க்கையாகிவிடும்....

ஒரு மாயஉலகத்தை மூளை கற்பனை செய்துவிடும்....

இதனால் என்ன பாதிப்பு நிகழும் என்றால் சிறு சிறு விடயங்களை கூட சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை வந்துவிடும்... இது ஒரு விதமான நோய்....

மேலும் நம்முடைய கருத்துக்கு ஒத்துவராதவர்களை எதிரிகளாகவும்.... நாம் தான் மிகப்பெரிய அறிவாளி இந்த உலகத்தில் என்ற போலியான எண்ணங்களும் நம்மை ஆட்கொண்டுவிடும்....

புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கனுமே தவிர ஒற்றை சிந்தனையில் நாம் மாட்டிகொள்ள கூடாது....

என் கண்முன்னால் உலகத்தை ஆளும் அந்த குழுவே வந்து நின்றாலும் நான் இயல்பாக தான் பேசுவேன்... ஏனெனில் அவர்களே ஏதோ மனநோயால் பாதிக்கப்பட்டு தான் இவ்வாறு செய்கிறார்களோ என்னவோ.....

சூரியன் - செவ்வாய் - குரு...


ஜாதகத்தில் செவ்வாய் / அஸ்வினியிலும், சூரியன் / மகத்திலும், குரு / மூலத்திலும் இருப்பவர்களிடம் கவனமாக சற்று இருக்க வேண்டும். இவர்களிடம் உங்கள் பாட்ஷா பலிக்காது...

1. முதலாமவர்கள் கட்டுக்கடங்கா காட்டுத்தீயைப் போன்ற முரடர்கள்...

2. இரண்டாமானவர்கள் நின்று குமுறும் எரிமலையைப் போன்ற அரசர்கள்..

3. மூன்றாமவர்கள் குன்றில் இட்ட தீபம் போன்ற ஞானிகள்...