02/03/2019

வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்.. பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள்...


மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ, நெடுமாறன். அவர்கள் துவக்கி வைத்தார், மேலும் தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஐயா,மணியரசன். அவர்கள் மற்றும் தமிழர் கொற்றம் அமைப்பின் தலைவர் திரு,வியனரசு. அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்...

மருத்துவ மாப்பியா... கேள்வி கேட்க பழகுங்கள்..


திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்...


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக் கிடைக்கிறது.

ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்...

எகிப்திய பெண்களின் அழகின் இரசியம் இது தான்...


https://youtu.be/iyOK3AiTvjE

Subscribe The Channel For More News...

சுவருடன் உரையாடு.. தியான யுக்தி...


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை.

உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ?

நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும்.

ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய்.

ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர்.

மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி...


நான் விஜயநகரப் பரம்பரை கன்னட ஈ.வே. ராமசாமி...


சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது பிரதமர் நேருவிற்கு தான் என்ன பரம்பரை என்பதை தெளிவாகவே கூறியுள்ளார்.

அது பின் வருமாறு...

இவர்களாவது பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம்..

என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா?

இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே…

விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே?

இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது, ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?

ஆதாரம் : தமிழ்நாடு தமிழருக்கே, நூல் பக். 80...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


சந்திரகலை என்றால் என்ன.....?


இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்...

தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர்...


ரெய்க்கி மருத்துவம்...


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது.

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்...

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசைதான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

உலக அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு...


பாலைப்பழம்....


பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.

பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.

பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...

பாஜக வின் ஏமாற்று வேலைகள் ஆரம்பம்...


குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி...


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,

வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும் பொழுதும், அபானவாயு பிரியும் பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,

சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.

அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்சு(ஸ்) மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரசு போன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்...

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால்...


https://youtu.be/R5gDKReVPc4

Subscribe The Channel For More News...

தேரையர் சித்தர் அறிவுரைகள்...


நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்..

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம்.

18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார்...

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும் போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விரும்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும் போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும் போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் ).

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்).

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்..

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்...

பாமக கோரிக்கைகள் நிறைய வேற தொடங்கி விட்டது...


தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒன்றாகும்...


கரகம், காவடியைப் போல வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் விளங்குகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும்.

மாயவ ளாடிய மரக்கா லாடலும் (கடலாடு காதை, அடி 59) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வஞ்சத்தால், பாம்பு, தேள் முதலிய விடப் பூச்சிகளாக உருவெடுத்துத் தனக்கு இன்னலை விளைத்துத் தன்னைக் கொல்லக் கருதிய அணர்களின் செயலை உணர்ந்து துர்க்கை தன் கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, அவர்கள் மிதிபட்டு மடியுமாறு ஆடிய ஆட்டமே மரக்கால் ஆடல் ஆகும். மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாடல் ஆயிற்று. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் மரக்காலாடல் இன்று பொய்க்கால் குதிரை ஆட்டமாக மாறிவந்தது.

இவ்வாறு காலில் கட்டை கட்டி ஆடுதல் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றது.

பொய்க்கால் குதிரை...

கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, உண்மையான கால்களில் நின்று ஆடாமல், பொய்யான கால்களில் நின்று கொண்டு, குதிரை போன்ற உருவத்தைச் சுமந்து கொண்டு ஆடுதல் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். மேலும் இந்த ஆட்டம் புரவியாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரைப் பகுதியில் காலில் கட்டையைக் கட்டிக் கொள்ளாமல் வெறுங்காலில் சலங்கை கட்டிக் கொண்டு பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. இதனால் இந்த ஆட்டம் “பொய்க் குதிரையாட்டம்” என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே வழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டில் பன்னெடுங் காலமாக மரக்காலாடல் வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஓடியதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தில் உள்ளன. தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் பெருந்திணைக்கு இலக்கணம் கூறும் நூற்பாவில் தலைமகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கப் பெண்ணின் பெற்றோர் தடை விதித்த போது, பனை ஓலையில் குதிரை போல் உருவம் செய்து அதனை உடலில் தாங்கிக் கொண்டு ஊர்த் தெருக்களில் வந்து தான் விரும்பும் பெண்ணைத் தனக்குக் கட்டி வைக்கக் கோரிய செயல் “மடலேறுதல்” என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்தில் “ஏறிய மடல் திறம்” என்று பேசப்படுகிறது. ஆனால் காலில் கட்டை கட்டிப் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து ஆடலாக ஆடப்பட்டதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இப்பொய்க்கால் குதிரையாட்டம் ஆடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

1¼ அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, செய்தித்தாள், சாக்கு, காடாத் துணி, புளியங் கொட்டைப் பசை, பிரம்பு, இரும்புத் தகடுகள் ஆகியவற்றாலான பொய்க் குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் இணைத்து ஆடுபவரின் இடுப்பு உயரத்தில் தொங்கும்படி தோளில் தொங்க விட்டுக் கொண்டு கோந்தளம் அல்லது நையாண்டி மேள இசைக்கேற்ப ஆடுவர்.

தற்காலத்தில் தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றில் வாழ்ந்த இராமகிருட்டினன் முதன் முதலில் பொய்க்கால் குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார்.

அடவுகள்...

பொய்க்கால் குதிரையாட்டத்தில் அரசனும் அரசியும் உலா வருவது போன்ற நிலையில், ஆடுகளத்தைச் சுற்றி அரசனும் அரசியும் கம்பீரமாக மூன்று முறை நடந்து வருவர். ஆண், பெண் இருவரும் தனியாகவும் சேர்ந்தும் அடவுகளை ஆடுவர். காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர். மேலும் குதிரையை அடக்குவது போலவும் செய்வர். இருவரும் நேருக்கு நேர் அடவுகள் செய்தும், வட்டமாகவும் அடவுகளைச் செய்வர். பெண் ஆட்டக் கலைஞர் பல நளினமான கால் அடவுகளைச் செய்வர். மேலும் காலில் அடவுகளைச் செய்து கொண்டு, குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுவர்.

இசைக்கருவிகள்...

பொய்க்கால் குதிரையாட்டத்திற்குக் கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாகப் பயன்படுகிறது. மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி போன்ற இசைக் கருவிகள் இவ்வாட்டத்திற்குப் பக்க இசையாகப் பயன்படுகின்றன.

தமிழகத்தில் அன்றி இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இந்த ஆட்டம் “கீலுகுர்ரலு” என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரிசாவில் “கையுதா” எனவும் இராசசுதான் பகுதியில் “கச்சிகோடி” எனவும் வழங்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரையாட்டம் தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களிலும், திருமண ஊர்வலங்களிலும், அரசியல் ஊர்வலங்களிலும் இடம் பெற்று ஆடப்பட்டு வருகிறது...

சிந்தித்துப் பார் தமிழினமே...


3ஆம் உலக யுத்தம் நாஸ்ட்ரடாமஸ் புகைப்பட குறிப்புக்கள்...


இந்த படத்தை பாருங்கள். ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.

இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நாஸ்ட்ரடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… ஒரு புதிய நகரத்தை… விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.. எனும் பொருள் பட எழுதியுள்ளாராம்.

அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது… விமானம். (நாஸ்ட்ரடாமஸ் காலம் 1600).

ஆனால்… இன்னொரு குறிப்பில்..  விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்… எனும் பொருள் பட கூறியுள்ளார்.

அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது… 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.

அடுத்த படத்தை பாருங்கள்… பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்… வரையப்பட்டுள்ளது..

இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என… ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

முதல் துளி… ஜூலி கிறிஸ்.. இரண்டாம் துளி… ஹிட்லர்..  மூன்றாம் துளியாக… பெரும்பாலும்… பில்லேடன் , கடாஃபி, முல்லா உமர், முகமட் அஹ்மதிநெஜாட்… இருக்கலாம் என்று ஒரு நீண்ட பட்டியலை ஆய்வாளர்கள் கூறினார்கள் / கூறிவருகிறார்கள்..

ஆனால், இதில் பில்லேடன் , கடாஃபி ஏற்கனவே இறந்து விட்டார்கள்… முல்லா உமர் தலைமறைவாகவுள்ளார்.

அதை அடுத்து அஹ்மதிநெஜாட் மற்றும் வடகொரிய அதிபர்கள் இந்த 3 ஆம் துளிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறார்கள்.

( நாஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது லூஜி பாஸ்டர் உடையது )..

இந்த படத்தில்… 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி… 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம்.

அதனால்… இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது..

எனது கருத்தின் படி… முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்… யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்…
3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது…

இந்தியா - சீனா… வடகொரியா - தென் கொரியா… இலங்கை – ஈழம்...

இலங்கை மற்றும் ஈழத்தை நான் குறிப்பிட்டிருப்பதற்கு வலுவான ஒரு காரணம் இருக்கிறது..

அது என்ன என்பதை பின்னர் ஆராயலாம். தமிழரை குறிப்பிட்டாரா அல்லது பிரித்தானியர்களை குறிப்பிட்டாரா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று..

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை… 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது..

மூன்றால் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளின் நிலை என்னவாகும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…

முக்கியமாக இந்தியா என்னவாகும் என்பதை பார்க்கலாம்...

இன்று முதல் இந்த ஆண்டு முழுவதும் பெரிய பெரிய யோகங்களை அனுபவிக்க போகும் அந்த 5 ராசிகாரர்கள் யார்..?


https://youtu.be/50pb934T8ZI

Subscribe The Channel For More News...

வற்றிப்போன கடல்...


1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்?

உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ?

தொடர்ந்து வாசியுங்கள்...

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு ) 1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்...

ஏன் இஸ்லாம் மார்கத்தை எதிர்கிறார்கள் இலுமினாட்டிகள்..?


பிரபஞ்சம் இரகசியம்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு இரகசியத்தை இங்கே கூற போகிறேன்..

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடி கொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை..

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே.

அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடை பிடியுங்கள்.

அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது.

மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

மீண்டும் டிவிட்டரில் Go back modi முதல் இடம் பிடித்தது...


நீ எத்தனை முறை வந்து நடித்தாலும் இது தான் உன் நிலைமையே...

மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்...

110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு...


பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம்.

அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம்.

ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா?!!!

இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம்.

இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட்என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம்.

அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.

அதுமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம்.

இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று.

அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நூற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம்.

இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...

இந்திய வீரர் அபிநந்தனை விஐபியை போல் அழைத்து வந்து ஒப்படைத்த பாக்கிஸ்தான்...


https://youtu.be/K9J9YPQQFJg

Subscribe The Channel For More News...

வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?


செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.

அது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.

பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனா கிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்து வதாம்.

எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.

ஏறத்தாழ 1714இல் யே(ஜெ)ர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்கீ(ஹீ)ட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார்.

அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகையை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 பாகையை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 பாகை ஆகவும் கீழ் உறைநிலை -83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும். சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே  (rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடன் நாட்டின் வான் கணிப்பாளர் அண்டர்சு(ஸ்) செலிசியசு(ஸ்) (Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 பாகை ஆகவும் கொதிநிலை 100 பாகை ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன...