01/10/2020

பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர் தனுஸ்ரீ கடந்த 2 நாட்களாக மிக தைரியமாக பாஜக உ.பி. காவல்துறையின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்திய இவருக்கு பாராட்டுக்கள்...

 


இத்தைகைய மனசாட்சியுள்ள ஊடகவியலாளர்கள் இருப்பதால்  தான்     உண்மைகள் வெளியில் வருகிறது...

பதவிக்காக சொந்த கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் திமுக நிர்வாகி...


 

நாயர்களின் பூர்வீகம் கேரளம் அல்ல... மாறாக நேபாளம் ஆகும்...

 


உஸ்பெக், கசக் மற்றும் ஆப்கான் பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்த பகுதியே சித்தியா..

இந்த சித்தியாவில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலவித நகர்வுகள் இந்திய தீபகற்ப பகுதிகளை குறிவைத்து நேர்ந்தன..

இன்றைய வடுகர்கள் இப்பகுதிகளைச் சேர்ந்தோர் ஆவர்..

இப்படியான வடுகர்களின் ஒரு பிரிவினர் நேபாளத்தில் குடியேறினர், இவர்களே நேவர் என்ற நாயர்கள் ஆவர்..

நேபாளத்தில் மங்கோலியர்களின் கை ஓங்கியதின் விளைவாக அங்கிருந்து தப்பிய நாயர்கள் சாதவாகனர்களின் படைகளில் இடம்பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொண்டை மண்டலம் அடைந்தனர்..

அங்கு பல்லவர்களின் படையணியில் வலிமையாக இருந்த படையாட்சி.. நாயர்களை எதிர்த்து விரட்டியதால் அவர்கள் மேலை சாளுக்கியத்தின் தென் பகுதியில் குடியேறினர்..

கேரளத்தில் (சேர நாட்டில்) வில்லவர் வலிமை குன்றிய நேரத்தில் இந்த நாயர்கள் பெரும்தாக்குதலில் இறங்கி சேர நாட்டினைக் கைப்பற்றினர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் மாறி மாறி வாழ்ந்தமையால் இவர்களுக்கென்று பொது மொழி இல்லாமற்போனது.

பாகதம், தெலுங்கு, துளு, கன்னடம் எனத் துவங்கி இறுதியில் சேரநாட்டின் தமிழ் மொழியைக் கைப்பற்றி அதனை மணிபிரவாளம் ஆக்கி இன்று சேர நாட்டினை ஆண்டும் வருகின்றனர்.

இவர்கள் அடுத்துக் கெடுக்கும் நச்சினத்தார் ஆவர்....

பாஜக பாபர் மசூதி இடிப்பும்... திருட்டு திமுக கூட்டணியும்...

 


பாபர் மசூதியை இடிச்ச அடுத்த தேர்தலில், பாஜகவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக...

என்னா பாய் மறந்துட்ட... பிரியாணில வல்லாரைக் கீரை நிறைய சேர்த்துக்க பாய்...

அப்புறம் லூசு பாய் , மொதல்ல வக்ப் வாரியத்துக்கு சொந்தமான திருச்சி திமுக அறிவாலயத்தை மீட்கிற வழியை பாரு...

மோடி ஆட்சியில் பெண்களின் நிலை 😡

 


இயற்கையை உணர்வோம்...

 


இயற்கையின் நியதி்படி ஒரு மொட்டு எப்பொழுது மலரும்?

அது தனது மகரந்த சேர்க்கைகாக மட்டுமே மலரும்.

ஒரு மொட்டு மலர்வது என்பது மகரந்த சேர்க்கைகான அத்தியாம் ஒரு சாட்சி, மலர்வது என்பது ஒரு செயல் மட்டும் அல்ல ஒரு உயிர் பயணிப்பதற்க்கான ஆற்றல்.

பிரபஞ்சம் உருவானது எதனால்?

அது ஒரு வெடிப்பு, அழுத்த நிலையில் இருந்த ஆற்றல் அந்த ஆற்றலே எல்லாம் ஆனது.

புரியும்படி சொல்கிறேன்...

ஒருவன் தனது வியாபாரம் செழிக்கவில்லை என்னும் கவலையோடு நடந்து கொண்டிருக்கும் போது.. ஒரு பூந்தோட்டத்தின் வழியே கடக்கிறான் அங்கு மலர்ந்த மலர்களில் தேனிகளும், வண்டுகளும் மொய்த்து கொண்டுள்ளன இந்த அழகான இயற்கை காட்சியை பார்த்த அவன் ஒரு மொட்டை அறுத்து கொண்டு சென்று தான் வணங்கும் தெய்வத்தின் முன் மொட்டை தனது கைகளால் மலர்வைத்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுகிறான், பிறகு அவன் வணிகம் செழிக்கிறது, இங்கு என்ன நடந்தது என உங்கள் யோசனைக்கே விடுகிறேன்.

ஒரு ஆண் ஒரு உயிரை உருவாக்கும் போது மட்டுமே அவனது மொட்டு மலர வேண்டும் அங்கு சிந்தும் இரத்தம் என்னும் ஆற்றல் ஆனது அந்த உயிரின் உண்மையான இயற்கை பயணத்தி்ற்கானது (மனிதன் இயற்கைதான் என நினைப்பவர்களுக்கு இது புரியும்) அந்த ஆற்றலை குழந்தை பருவத்திலேயே அவன் வணிகத்தில் வெற்றிபெற பயன்படுத்துவது வணிகம் என்னும் இயக்கியலை வாழ வைக்குமே தவிர அது இயற்கையாகது, இயற்கைக்கு எதிரானது.

இசுலாத்தில் மலர்களை இறைவனுக்கானது  என்று கூறுவார்கள்.. அதை பெண்கள் தனது கூந்தலில் சூடிக்கொள்ளமாட்டர்கள், ஆனால் குழந்தை பிறந்தால் அவர்களை பார்க்க போகும் போதும் அவர்களை சுற்றியும் மலர்களை வைத்து இருப்பார்கள்.. அரபு நாடுகளில் இது முறையாக பின்பற்றபட்டு வருகிறது. இது எதற்கு என்று உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

ஆணின் மேல்தோல் உரிப்பு என்பது அவன் இணை சேரும் போது மட்டுமே மலர வேண்டும் இதுவே இயற்கையானது...

வாங்குன காசுக்கு மேல கூவுறான்டா 🤣

 


ஆளுநர் பதவிக்கு ஆசைபடும் நீதிபதிகளால்... நீதித்துறை சீரழிவு...

 


தமிழ்நாடு சட்டமன்றம் 1956 க்கு முன்...

 


அதாவது மொழிவாரிமாகாண பிரிவினைக்கு முன் இருந்த சட்டங்களை தமிழர் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்...

மற்ற மூன்று மாநிலங்கள் அதாவது ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில நலன்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டதைப் போல் நாமும் நமக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்..

ஆனால் அது திராவிடத்தின் போர்வையில் பிறமொழியாளர்கள் ஆளும் வரை இது நடக்காது ..

ஆகையால் இனி தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம் என உறுதி எடுப்போம்....

சொன்னாலும் சொல்லிருப்பானுக 😒

 


இன்னும் எத்தனை குழந்தைகளை கெடுத்து கொல்லப் போறானோ...

 


மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

 


தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...

1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை  குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.

மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி..

பெரும் செல்வச் செழிப்பு - மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவை தான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து - வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது..

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது - ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை.

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது - அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது - ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்.

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்..

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது.

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை  -மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச - யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது - தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு - விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் - தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி - கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் - என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர்.

அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் - எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது..

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.. மாமதுரை மக்கள்...

வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் திருட்டு தெலுங்கன் திமுக ஸ்டாலின்...

 


ஊரடங்கு முக்கிய செய்தி...

 


தணுராசனம்...

 

குப்புற படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும்.

இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.

பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது...

எடப்பாடி அரசுக்கு கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...

 


சிபிஜ எனும் மோடி அரசின் கைகூலி அமைப்பை கலைக்க வேண்டும்...

 


இசையும் தமிழில் இசைந்தது...

 


சங்கீதம், கர்நாடக சங்கீதம் இப்படி எதை நாம் பயில முற்பட்டாலும் அதன் பயணம் தியாகராயர், முத்துசாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரிகள் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனைகளில் தான் இருக்கும்...

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி கெ சி, ராஜாஜி ராஜா சார் முத்தையா செட்டியார் போன்றோர் கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதை காட்டும் வகையில் மரபு இசை மேடைகள் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை..

ஆனால் இன்றைய தலைமுறைகள் இந்த நிலையை மாற்றி அமைக்கிறது..

தமிழ் பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் மரபு மேடை ஏறுகிறது.

மிகவும் குறைவான முந்தைய தலைமுறையினர் மட்டுமே இந்த கோட்பாடு கொண்டு இன்றும் உள்ளனர்.

இசை என்பது மொழி மரபு போன்றவற்றை கடந்தது. நாம் உணர்ந்து ரசிக்கவல்ல தாய்மொழியில் பாடல்கள் தோன்றினால் தத்தம் மொழியினருக்கு ஒரு இன்பம் தோன்றும்.

இசையில் பாகுபாடு ராகங்களால் இருக்கலாம் மொழியால் கூடாது என்பதை தற்போதைய தலைமுறை விதைத்து வருகிறது..

இசையில் இசைவோம் உணர்ந்து இசைவோம்...

திமுக 2G ஊழல்வாதி ஆ.ராசா கலாட்டா...

 


இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் இறந்தார்...

 


என் இல்லத்திற்கு பலமுறை வந்துள்ளார்...

என்னுடன் இனைந்து என் இல்லத்தில் உணவு சாப்பிட்டுள்ளார்...

மலரும் நினைவுகள் 😥😥😥

ஆழ்மனத்தின் அரியசக்தி...

 


நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.

அப்படியெனில் காரை ஓட்டுவது எது?

அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?

அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும் போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.

தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.

எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவகவே நீ மாறுவாய்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால்  காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.

நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...

இளைஞர்களை கைவிட்ட எடப்பாடி அரசு...

 


ரேஷன் கடை உண்மைகள்...

 


பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை - இம்பூட்டு தான் நீதிமன்றம்...

 


லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.மசூதியை இடித்ததாக, லட்சக்கணக்கான பெயர் தெரியாத, கரசேவகர்கள் மீது, லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்வானி உள்ளிட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்து, நீதிமன்றம், 2001ல் தீர்ப்பு அளித்தது. அதை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் படி, 2017ல் உத்தரவிட்டது. மேலும், ரேபரேலியில் உள்ள வழக்கை, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.

இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்தக் காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எஸ்.கே. யாதவ் அளித்த தீர்ப்பு: பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அத்வானி உட்பட, 32 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்ளிட்ட 26 பேர் நேரில் ஆஜராகினார்கள். அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, சதிஷ் பிரதான், கோபால் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்கள்.

தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றம் வழியாக செல்லும் ஏராளமான வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன...

தமிழகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழர்கள்...

 


தமிழ் மொழியை இந்திய ஒன்றிய மக்கள் அனைவரும் எழுத பேச வேண்டும்... இல்லையேல் இந்தியா பல நாடுகளாக பிறக்கும்.. மகாத்மா காந்தி...

 


உணவுக்கு பின்...

 


1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

திமுகாணவே அப்படிதான் 😂

 


இசைப்பாடும் தும்பி...

 


கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் 

பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய 

வரிக்குயில் பாட மாமயில் ஆடும் 

விரைப் பூம்பந்தர்..

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்...

மோடியின் புதிய பாலியல் இந்தியா 😒

 


மோடி ஆட்சியின் பாலியல் சாதனை 😡

 


திடீர் போராளிகள் மாயம் 😒

 


பாஜக யோகி ஆளும் உபி யில் பெண்களின் நிலை 😡

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல்...

 


தமிழக மக்களை ஏமாற்றும் திமுக - அதிமுக வின் நவீன விவசாயிகள்...

 


அந்த திட்டத்தை அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்தது , இவர்கள் தான் கையெழுத்து போட்டது , அமல்படுத்தியது அவர்கள் ஆட்சியில் என்று மாற்றி மாற்றி இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற போகிறீர்கள்?

அடுத்த தேர்தல் வரை இன்னும் பல வேடங்கள் போடுவார்கள்...

அதிமுக எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல்...

 


தமிழர் விரோத அதிமுக எடப்பாடியால் தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி திணிப்பு...

 


சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்...

 


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

அதன் பலன்களை இங்கே பார்ப்போம்...

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத் தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்...

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது ஆபத்து என்று ஹீலர்கள் சொன்ன கருத்து உண்மையாகி வருகிறது...

 


டாக்சிக்ஸ் லிங்க் நடத்திய இந்த ஆய்வில் தலேட்(phthalate) என்ற ரசாயனம் இருப்பது குழந்தைகளுக்கு ஆபத்து என்று பல வருடங்களாக சொல்கிறார்கள்..

மேலும் இது மலட்டுத் தன்மையை உண்டாக்கும் என்ற விபரம் இந்த ஆய்வுக்கு எப்போது எட்டும் என்று தெரியவில்லை. 

மேலே குறிப்பிட்ட இந்த "தலேட்" என்ற ரசாயனம் பாலித்தீன்களில் இருக்கும்.

பாலித்தீன் களை நெருப்பிலிட்டு எரிக்கும் போது இந்த ரசாயனம் புகையில் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் இந்த ரசாயனத்தை சுவாசிப்பவர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது ஆண்களின் உடலில் இருக்கக்கூடிய X மற்றும் Y குரோமோசோம்களில் ஏதேனும் ஒன்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

இதனால் பல ஆண்டுகளாகவே ஹீலர்கள் இந்த டயப்பர் , நாப்கின் போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை மட்டுமே மக்களுக்கு விநியோகிக்கும் மருத்துவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்கும் தன்மை இருக்காது என்பது, மருத்துவர்கள் இந்த டயப்பர் பற்றிய அபாயங்களை தங்களை நம்பி வரும் மக்களிடம் பேசாமல் இருப்பதில் இருந்தே தெரிகிறது...

தியானத்தின் நன்மைகள்...

 


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.

உடலளவில் ஏற்படும் நன்மைகள்...

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன...

சட்டபிரிவு 254(2) பயன்படுத்தி வேளாண் மசோதாவுக்கு எதிராக செயல்பட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவு...