07/02/2019

தருமபுரி மக்களின் கனவை நினைவாக்கிய பாமக அன்புமணி இராமதாஸ்...


தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது....

குலதெய்வங்கள் என்றால் என்ன.. அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்து போகின்றது...?

என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள்..

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் கோத்திரம் என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.

இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை.

ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது..

இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..

நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?

குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.

மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களை எளிதில்
பெற்று விடுகிறார்கள்.

மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.. புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்..

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள்.. திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்..

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்க கூடிய ஒரு ஆற்றலை தரும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால்.. குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கை போகும் போக்கை…

அடிப்படையில் இந்து மதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது.

ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....

விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும்..

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.

ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.

பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

இன்னைக்கு நாம சாதாரணமா சுடுற தோசைக்கு பின்னாடி கூட ஒரு வரலாறு இருக்கு..


எல்லா கோயில்லையும் ஒவ்வொரு பிரசாதம் சிறப்பு..

காஞ்சி வரதர் கோயில்ல இன்னைக்கும் தோசை தான் பிரசாதம்..

இந்த தோசை சுடுவதற்கு தேவையான அரிசி, உளுந்து, மிளகு, சீரகம்..போன்ற தோசைக்கு தேவையான இன்ன பிற பொருட்களுக்கு 13-14 நூற்றாண்டிலேயே கோயில் Treasury ல இருந்து கொடுத்த நிவந்த கல்வெட்டு இன்னைக்கும் வரதர் கோவிலில் பாக்கலாம்...

தமிழகத்தில் திராவிடத்தால் வந்தேறிகள் எல்லாம் பணியில்.. மற்ற மாநிலத்தில் தமிழனுக்கு இது தான் நிலை...


விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு. உஷார் மக்களே...


 கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதினால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்.

அனால் இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன.

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே.

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்.

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது.

ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

பாஜக வை வெளுத்து வாங்கும் நாம் தமிழர் கட்சி சீமான் / Ntk / Bjp..


https://youtu.be/OGqciBq1JEE

Subscribe the channel for more news...

அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது...


1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்..

இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும்
தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட் தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.

நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்துவிட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

தமிழகத்தின் நீர்வளத்தை உறிஞ்சும் கெளதம் அதானி...


முருகன் இந்து அல்ல... தமிழன்...


குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன். குமரிக்கண்டம் தொடங்கி பாரத கண்டம் முழுக்க தமிழனுக்கு சொந்தமானது.

அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம், சிலப்பதிகாரம்,  அகநானூறு, புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.

தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய தமிழரின் தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது.

அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர்  வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு.

தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள்.

இது குறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ?

1.முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை?

2.தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை?

3.முருகன், சிவன், பார்வதி,  விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு (ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு) தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா?

4.கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும் போது ஏன் விநாயகருக்கு விநாயக  புராணம் இயற்றவில்லை?

5.ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான்.அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன். நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது.....

6. முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை? தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே?

7.தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை?

8.தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85%  முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை?? மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது? 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும் போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை?

9.கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?
காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும் போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு. அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும். எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது....

9.இந்து என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே. ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உண்மை இந்துவே விடைதேடு.....

விநாயகரை வைத்து உன்னை மூட்டாளாக்கும் ஆரியக் கூட்டத்தை அடையாளம் கண்டுக் கொள்வோம்...

இதன் நீட்சிதான் வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் செய்வதும்.   

நீ... இந்து  நீ..... இந்து  என்று உன்னை நம்பவைத்து.... அடிமையாக்கி..

சாஸ்தர- சம்ரதாயம் என்று சொல்லி உன்னை ஏமாற்றி மேலும் அடிமையாக்கி  ஆண்டு வரும் ஆரிய கூட்டத்தின் முகத்திரையை உணரருங்கள்...

பதிவு - MU KALANJIYAM

உங்கள் வீட்டு சுவற்றில் இது போன்ற குறியீடுகள் இருந்தால் வெளிமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தப்படும் குறியீடு ஆகும்....


இது போன்ற குறீயிடு இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள்....

உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்....

மலர் மருத்துவம்...


உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே. மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம்.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்து விட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும்.

இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.

இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதே நேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

பிரச்சினைகளுக்கு உதவி...

முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க கார்ஸ், மிமுலாஸ் என்கிற மருந்துகள் உதவும். இதனால் முதுகு வலி குறையும்.

டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, மது, சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் மலர் மருந்துகள் உண்டு.

பரு, தோல் பிரச்சினை, தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் மலர் மருந்து உண்டு.

இந்தச் சிகிச்சையைத் தருவதற்கும் கற்றுக் கொள்வதற்கும், அனுபவமும், தீவிர ஆர்வமும், உள்ளார்ந்த பார்வையும் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரிடம் சிகிச்சை பெறும் போது மலர் மருத்துவம் தரும் பலன்களை உணரலாம்.

அகத்திப்பூ:   பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும்சூட்டையும் நீக்கும்.

முருங்கைப் பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வை அதிகமாக்கும்.

செந்தாழம் பூ: தலைவலி தீரும். கபம்,ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்த்திப் பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

வாகைப்பூ:  கசப்பு சுவையுடைய இப்பூவினால் சுட்டால்  உண்டாகும் நோயை  நீக்கும்.

இலுப்பைப்பூ:  நல்ல சுவையுடைய  இப்பூவினால் பாம்பின் விஷம் நீக்கும், வாத நோய்  குணமாகும்.

புளியம் பூ:  மலையை சார்ந்த காட்டில் முளைக்கும்  இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.                       

மாதுளம் பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி,  இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.           

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்குநோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்                    .

பனம் பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம் பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை  குணமாகும். விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்,

குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம்,  புண் பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும்.உடலுக்கு சூட்டை அளிக்கும். அதிகப் பால் சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால் சுரப்பு குறையும்.

பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்து விரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்

மந்தார்ப்பூ:  உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம் பூ: இதனை முகர வாந்தி நிற்கும். உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ:  கரப்பான், சொறி, சிறங்கு, பால்வினை நோய் ஆகியவை நீங்கும். ஆனால் பித்த மயக்கம் ஏற்படும்.             

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும். வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு, ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்.

செண்பகப்பூ: வாத, பித்த நோய்,  எலும்பு காய்ச்சல்,  பால்வினை நோய், விந்து விரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

இந்தப் பூவை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி,  நீங்கும். தலைமுடி நன்றாக வளரவும், கருமை நிறத்தினை தரும்.

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.

காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி, பால்வினை நோய் குணமாகும்...

தினம் ஓர் முட்டை சாப்பிடுங்கள்...


அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து...


நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்... இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .

இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்....நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....

நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, சுண்ணாம்புச்சத்து, பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்..

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்... உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு...

Remove Unwanted Facial Hair / முகத்திலுள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி.?



https://youtu.be/5Ec_07pnU7c

Subscribe the channel for more tips...

டெலிவரி பாயுடன் உல்லாசம் அனுபித்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்...


செங்கல்பட்டு நகராட்சி குப்பை கிடங்கு அருகே நேற்று மாலை  ஒரு வாலிபர், கொடூரமாக வெட்டப்பட்டு  உதவி கேட்டு  சத்தம் போட்டுள்ளார். அந்த சமயத்தில், அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த  போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து 5 பேர் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர். உடனே போலீசார், ஆட்டோவை விரட்டி சென்று, அதில் இருந்த 2 பேரை  பிடித்தனர்.

பின்னர், 2 பேரையும் காவல்  நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதற்கிடையில், பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விசாரணையில் சென்னை T.நகர், தாமஸ் ரோட்டை சேர்ந்த மதன். இவரது மனைவி ரேகா அடிக்கடி ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். சென்னை துரை பாக்கத்தைச் சேர்ந்த  ஹரி என்பவர். தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார்.

ரேகா, ஆன்லைனில் புக் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும்போது, ஹரிக்கு ரேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது.

டெலிவரி கொடுக்கவரும் ஹரி ரேகாவோடு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.  இந்த விஷயம் அறிந்த மதன்,  மனைவி ரேகாவையும், கள்ளக் காதலன் ஹரியையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை, இவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்தது.  இந்த தொடர்பை பல நாட்களாக கண்காணித்த மதன், கள்ளக் காதலன் ஹரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதற்காக திட்டம் தீட்டி, தனது நண்பர்கள் ராமு, பழனி உள்பட 4 பேருடன் ஒரு ஆட்டோவில் நேற்று மாலை கள்ளக் காதலன் ஹரியை  ஆட்டோவில் கடத்தி கொண்டு செங்கல்பட்டு குப்பை கிடங்கு அருகில் அழைத்து சென்று, அரிவாளால், ஹரியை சரமாரியாக வெட்டியது தெரிந்தது.

இதற்கு முன்னதாக, தரமணி காவல் நிலையத்தில் ஹரி காணமல் போனதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். அதன்பேரில், தரமணி போலீசார், பிடிபட்ட 2 பேரையும் நேற்று இரவு, அழைத்து  சென்றனர். மேலும், ஆட்டோவுடன் சென்ற ஒருவரை, பல்லாவரம் அருகே கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர்...

பதஞ்சலி எனும் பாஜக பினாமியின் ஏமாற்று வேலைகள்...


பதஞ்சலி பொருட்கள் அனைத்துமே  மேலும் 90%  கலப்படத்திலே உருவாக்கி விற்கப்படுகிறது...

சிறிது நாள் முன்பு இந்திய உணவுத்துறையும் பதஞ்சலி 90% கலப்படப் பொருட்கள் தரமற்றவை என்றே சான்று கொடுத்தது...

இருப்பினும் பாஜக பினாமி என்பதால்  இந்த பதஞ்சலி மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறது...

கன்னட ஈ.வே.ரா வும் திராவிட பொய் மூட்டை கதைகளும்...


கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. இந்த நம்பூதிரிப் பிராமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?

1957ல் இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து , கேரளாவில் உள்ள கிறித்துவர், இசுலாமியர் உட்பட அனைவரையும் கொண்டாடும் படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்..

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்று வரை மலையாளக் கிறிசுத்தவர், மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது...

பாஜக மோடி இராணுவத்தையும் இராணுவ வீரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை...


தற்போது போதிய நிதி இல்லாததால் ராணுவ வீரர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு பணம் தற்போது கொடுக்க இயலாது - ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புதுறை அமைச்சகம்...

பணம் வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் - The Principal Controller of Defence Accounts வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாதுகாப்புதுறை அமைச்சகம்..

”ஜிஎஸ்டியில் அத்தனல லட்சம் கோடி வரி வாங்கியிருக்கோம் இத்தன லட்சம் கோடி வரி வாங்கிருக்கோம், வரி கட்ரவங்க அத்தன மடங்க உயர்ந்துள்ளார்கள் இத்தன மடங்கு உயர்ந்துள்ளார்கள் என்றாலும் கூறியவர்கள் அந்த பணத்தை யாருக்கு செலவு செய்கின்றார்கள் , விளம்பரத்திற்கும் விமான செலவிற்கும் மட்டும் தானா நாட்டை காக்கும் ராணுவீரர்களுக்கு இல்லையா என எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றது.

விமர்சனத்தை தொடர்ந்து The Principal Controller of Defence Accounts இணையதளத்தில் இருந்து அந்த அறிவிப்பு நீக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து இது தற்காலிக நிதி பற்றாக்குறைதான், சரி செய்யப்படும் என பாதுகாப்புதுறை அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இவ்வாறு நடப்பது யதார்த்தமானதது தான் ஊடகங்கள் அதை தேவையில்லாமல் பெரிதாக்கக் கூடாது இது அடிப்படையற்றது என விளக்கம் அளித்துள்ளது...

பாஜக மோடி மீண்டும் மக்களை ஏமாற்ற அடுத்த பொய் மூட்டைகள் வெளியிடு தொடக்கம்...


பேருந்து ஓட்டுனர்களே கவனம்... ஒரு குடும்பத்தின் பெரிய நஷ்டம்..


குளத்தூர் அருகே அரசு பஸ் மோதி 23 ஆடுகள் பரிதாபமாக இறந்தன..

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த மேல செல்வனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (40). ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர், தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள ஒருவரது நிலத்தில் ஆட்டுக்கிடை போடுவதற்காக தனது 80 ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

குளத்தூர் தனியார் கல்லூரி வழியாக வந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அதிவேகமாக சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக ஆடுகள் மீது மோதியது. இதில் 23 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டிச்சென்ற கலைச்செல்வம் நூலிழையில் உயிர் தப்பினார். தகவலறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்...

கிரில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்போம்...


தமிழர்களே இன்னமும் மௌனமாக இருந்து எதை சாதித்து எதற்காக வாழப் போகிறீர்கள் ?


எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் தமிழன் என்று உரக்கச் சொல்லுவீர்கள்..

உங்களுக்கு பணம் தான் வாழ்க்கை, கொஞ்சம் சாராயம், திண்பதற்கு உணவு இருந்தால் போதும் எவனுக்கு வேண்டுமென்றாலும் காவடி தூக்குவீர்கள், அடி வருடியாய் வாழ்வீர்கள், இந்த வாழ்க்கை உங்களால் தேர்ந்துடுக்கப்ட்டதா? அல்லது திணிக்கப்பட்டதா?

அதுகூட உங்களுக்கு அடுத்த நாட்டுக்காரன் வந்து சொன்னால்தான் தெரியும்..

இதோ உங்கள் கண்முன் நீங்களே செத்துக் கொண்டு இருக்கிறீர்கள் . ஆம் உங்கள் உயிர் போகவில்லை ஆயினும் நடைபிணமாக வாழப் பழக்கப் படுத்தி இருக்கிறார்கள்.

உங்களுக்கு தேசியம், சர்வதேசியம், இந்தியம், எல்லாம் தெரியும் உங்கள் இனம் எது என்று மட்டும் தெரியாது. சொன்னாலும் விளங்கிக் கொள்ளும் நிலையில்லா இந்த ஆளும் வர்க்கம் உங்களை வைத்துள்ளது, எப்படியாயினும் வாழ்ந்து நொந்து சாகத்தான் போகிறீர்கள் கடைசியாக ஒருமுறை இந்த காட்சியை கண்டுவிட்டு சாகுங்கள்...

எங்கள் தலைமுறை வரை அடிமையாக வாழ்ந்துவிட்டீர்கள்.. அடுத்த தலைமுறையாவது தமிழினத்திற்காக சிந்தித்து வாழட்டும், உங்களின் இயலாமையை அடுத்த தலைமுறை மீது திணிக்காதீர்கள், அவனாவது போராடி இனத்திற்கு விடுதலை தேடி தர வழிவிடுங்கள்..

நீங்கள் உங்கள் திராவிட தேசியம், இந்திய இறையாண்மை தேசியம், என்ற மண்ணாங்கட்டி தேசியங்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடுங்கள்,  எங்களையாவது தமிழனாக வாழவிடுங்கள், போராடி சாகவாவது விடுங்கள். எங்களை உங்களைப் போன்ற அடிமையாக்கி விடாதீர்கள்..

நான் தமிழன். திராவிடன்அல்ல..

தமிழா...
பள்ளனாய்,
பறையனாய்,
நாடானாய்,
தேவனாய்,
வன்னியனாய்,
பரவனாய்,
பிள்ளையாய்,
கவுண்டனாய்,
மள்ளனாய்,
பார்பனாய்,
குயவனாய்......
வாழ்ந்தது போதும்..

வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்..

தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி..

தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள்...

பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்...

பாஜக மோடியின் புதிய சாதனை...


தமிழா நமது பலம் நமக்கு இன்னும் புரியவில்லை...


ஆனால் எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்..

அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விடக்கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் நமக்குள் இருக்கும் சாதி மதம் என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயல்படுகிறார்கள்..

நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்...

எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்...


வாசியும் – நெற்றிக்கண்ணும்...


நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றானது , எல்லோர்க்கும், மூக்குத் துவாரதிற்குள் ஏறி , கீழிறங்கி நுரையீரலுக்கு வந்து விடும். அப்படி கீழிறங்காமல் . அதனை தடுத்து , மேலேற்ற வேண்டும் – இது ஒரு பயிற்சி..

இதனை உணர்த்தத் தான் நடராஜர் தன் இடக்காலை மேலே தூக்கி நடமாடுகின்றார்..

1. வாசி என்பது – இட கலை – சந்திர கலை ஆகும் – இதனை மேல் ஏற்றுவதற்குத் தான் உலகில் எல்லா யோகியரும் – ஞானியரும் அரும் பாடு படுகின்றனர்..

இந்த வாசிக் குதிரையைத் தான்  அகோரம் என்றும் , இந்த பயிற்சி செய்வோரை அகோரிகள் என்று அழைக்கின்றோம்...

நெற்றிக்கண்ணைத் திறந்து , ஆன்மாவைத் தரிசனம் செய்வதற்கு இந்த வாசி என்னும் காற்று வேண்டும்.

இந்த சந்திரனின் கலைகள் மொத்தம் பதினாறு...

இதனைக் கருத்தில் கொண்டே தான், நம் முன்னோர் , ஒவ்வொரு கோவில் முன்பும் , பதினாறு கால் மண்டபம் அமைத்து உள்ளனர் – அது வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லாமலே சொல்லியுள்ளனர்..

– அதாவது பதினாறு கலையுடைய சந்திரனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து, உள்ளே புகுந்து ஆன்மாவை தரிசிக்க வேண்டும்..

நெற்றிக்கண்ணை திறப்பதற்கன திருமந்திரப் பாடல்...

மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி
ஆக்கு மனதை அசையாமல் தான்
தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே

ஆனால் , சன்மார்கிகள் , அருட்பா உரை நடையில் வள்ளலார் ” தக்க ஆசான் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார் என்று புறத்திலே இருக்கும் குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்..

2. கர்ப்பக்கிரகமானது , எல்லாக் கோவில்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைத்து இருப்பார்கள் = அதாவது , ஆன்மாவானது ஆயிரத்தெட்டு இதழ் கமலம் ( மூளையின் நடுவில் ஆழத்தில் ) நடுவே ஒளியாக இருக்கின்றது என்று காட்டியிருக்கின்றார்கள்..

நம் ஊர் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்கு ஆய்ந்து – ( முதல் நாள் கொடியேற்றம் முதல் – கடைசி நாள் திருக்கலியாணம் வரை – ரத உற்சவம் வரை ) , அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டால் , திருசிற்றம்பலத்திற்குள் நுழைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியும்..

ரகசியங்களை சாதனையில் புகுத்தி, வெற்றி கண்டால், திருசிற்றம்பலத்திற்குள் நுழையவும் முடியும்..

நம் வேத காலத்து ரிஷிகள் , எல்லா ரகசியங்களையும், யோக சாதனைகளையும் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து வைத்து, நம் வாழ்க்கையின் அங்கமாக்கி விட்டார்கள்..

திருசிற்றம்பலத்திற்குள் நுழையும் ரகசியங்களை திருமந்திரம் – திருவாசகம் தெரிவிக்கின்றன. அதனை நன்கு ஆய்ந்து படித்தால் தெரிந்து கொள்ளலாம்...

சந்தை பொருளாதாரத்தில் என்றைக்கும் உற்பத்தி இருக்காது, அது ஒரு நாடு மலடு ஆவதற்கான அறிகுறி...


நினைவு கொள், உலக உற்பத்தி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது, ஆனால் அதை அவர்கள் சந்தை பொருளாதாரமாக மாற்றி விட்டனர்.. விழித்துக்கொள் தமிழா...

இஸ்லாமியர்கள் நிகழ்த்திய மதமாற்றத்தை தட்டிக் கேட்ட "இராமலிங்கம் படையாட்சி" என்ற அப்பாவியை "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா" எனும் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்..


PFI எனப்படும் "பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பை ஜார்க்கண்ட் அரசு தடை செய்த போது, தடையை நீக்க கோரி தமிழகத்தில் பல தலைவர்கள் குரல் கொடுத்து போராட்டம் செய்தனர்..

அந்த அமைப்புக்கு ஆதரவாக போராடி, தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் வலுவூட்டிய தலைவர்களான தொல் திருமாவளவன், சீமான், தி.வேல்முருகன், ஜவாஹிருல்லா போன்ற தலைவர்களுக்கு இந்த படுகொலை சமர்பனம்..

(படம் : தடையை நீக்கக் கோரி போராட்டம்)...

முன்னால் பாமக நகர செயலாளர் ராமலிங்கம்.. முஸ்லீம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - பாமக மருத்துவர் ஐயா அறிக்கை...


நடிகை சந்தியாவை கண்டம் துண்டமாக வெட்டியது எப்படி.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்...


குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள்   தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கணவர் பாலகிருஷ்ணாவை கைது செய்து மற்ற பாகங்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சந்தியாவின் இடுப்பு, முழங்கால் பாகங்களை அடையாறு ஆற்றில் கண்டெடுத்துள்ளனர். எனினும் சந்தியாவின் தலை உட்பட உடலின் மீத பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

விசாரணையில் பாலகிருஷ்ணன் கூறுகையில்; சந்தியாவை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்தால் ரத்தம் கொட்டும் என்பதால் பேப்பர் கட்டிங் மெஷினை பயன்படுத்தி உடலை வெட்டினேன்.

சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டி, அந்த உடல் பாகங்களை 4 கவர்களில் போட்டு  பல்வேறு இடங்களில் வீசினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடல் பாகம் வீசிய கூவம் ஆற்றுக்கே சென்று அடையாளம்  காட்டியுள்ளார். ஆனால் இன்னும் தலை மட்டும் எங்கே இருக்கிறதென்று சொல்லவில்லையாம்....