23/11/2018

எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. லிப்டில் அத்துமீறிய பணியாளர்.. போராட்டம்...


சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பல மாநில மாணவர்கள், மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகம் இந்தியா முழுக்க பிரபலம் ஆகும். இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பிரச்சனையாகி உள்ளது....

ஊருக்குள் வராதடி போ.. போ.. என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தஞ்சை அதிராம்பட்டினம் பொதுமக்கள் ஓட, ஓட விரட்டியடிக்க, தப்பி ஓடும் தமிழிசை...


கஜா புயல் நிவாரண நிதி என கூறி, கட்சி வளர்ச்சி நிதி திரட்டும் நாம் தமிழர் கட்சி...


இதெல்லாம் சரிதானா...

இன்டர்நெட்...


இன்டர்நெட் (internet) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது..

ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்..

என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது..

பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது...

தமிழா.. நம் தாய் தமிழ் நாட்டின் பாதி தேசமே அழிஞ்சு சிதஞ்சு கிடக்கே...


மின்சாரம், குடிநீர், பால், உணவு, தங்கும் வசதி உடனடியாக செய்ய வேண்டும் - பாமக மரு.அன்புமணி ராமதாசு...


உடனடி நிவாரணமாக ஒவ்வொரு குடும்ப கணக்கிலும் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

புது வீடுகள் கட்டித் தர வேண்டும்.

உடனடி, நீண்ட கால திட்டங்களுக்காக
புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

மரு.அன்புமணி ராமதாசு...

திராவிட கட்சிகளை ஒழித்தால் தான் தமிழகம் உறுப்படும்...


அலங்கு நாய்...


தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்..

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல்,மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்….

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்..

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது..

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது இப்படம் அலங்கு நாய் தான் என்பது உறுதியாகிறது..

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது..

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு.

வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள்குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசு தான்..

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது..

வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின..

அவற்றில் முக்கியமானது அலங்கு..

அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்..

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்..

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு...

இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்..

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும்.

நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும்.

சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும்.

எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை...

ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது..

அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்..

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை..

இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு..

செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

ஜம்மு காஷ்மீர் சட்டசபையை கலைத்திருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு...


காங்கிரஸ், உமர் அப்துல்லா ஆகியோர் மெகபூபா முக்திக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பின்னர், பெரும்பான்மைய மெகபூபாவிற்கு கிடைத்துவிடும் என்ற சூழலில் சபையை கலைத்து ஜனநாயக படுகொலையை பாஜக அரங்கேற்றியிருக்கிறது...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயி விஷம் குடித்து தற்கொலை...


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சோழகன் குடிகாட்டில் தனது 5 ஏக்கர் தென்னந்தோப்பு கஜா புயலால் அழிந்த சோகத்தில், விவசாயி சுந்தர்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. வீட்டை இழந்து, கால்நடைகளை இழந்து, உணவுப்பயிர்கள் அனைத்தும் அழிந்து மக்கள் அனைவரும் நிர்க்கதியாக நிற்கின்றனர். நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. முந்திரி, சவுக்கு, மா, பலா உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சோழகன் குடிகாட்டைச் சேர்ந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜின் 5 ஏக்கர் தென்னந்தோப்பு, கஜா புயலால் முற்றிலும் அழிந்தது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக கண்ணீருடன் சோகத்தில் இருந்து வந்த சுந்தர்ராஜ் இன்று தென்னைக்கு அடிக்க வைத்திருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சுந்தர்ராஜ் தற்கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

இத்தனைக்கும் நாம் தாம் இந்திய அளவில் அதிக வரிகட்டுகிறோம்...


நாயுடு - நாயர் - நாயக்கர் - நாயகே எல்லாம் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்...


இலங்கையில் தமிழினத்தை அழித்தது தெலுங்கர்கள்...

தமிழகத்திலும் இதுவரை அழித்து ஆண்டுக் கொண்டிருப்பதும் தெலுங்கர்களே...

இந்த வடுக (தெலுங்கு) இனவெறியர் வைகோ என்ற தமிழ்ப் பெயரில் யாரும் அழைக்காதீர்கள்...

இவருடைய உண்மைப் பெயர் வை.கோபால்சாமி நாயுடு, இவர் தமிழ் இனத்தைக் கருவறுக்க முகமூடி, அரசியலுக்கு இருபது ஆண்டுகள் முன்பு தனது உண்மைப் பெயரை அடையாள மாற்றத்தின் வாயிலாக மாற்றி நம்மை மோசடி செய்கின்றார்...

ஆகவே தமிழர்கள் இவரது உண்மைப் பெயரான வை.கோபால்சாமி நாயுடு என்றே அழைத்து விழிப்புடன் அடுத்த தலைமுறைக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்...

மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்..

இனம் இனத்தோடு தான் சேரும்..

நம்மைப் பகைமூட்டிக் குளிர்காயும் வடுகத்தை இனியும் நம்ப வேண்டாம்..

குடிநோய் (Alcoholism) பற்றி தெரியுமா?



குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும்...

அதன் முக்கிய அடையாளங்கள்..

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.

குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.

நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக
உள்ளது.

போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.

இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்து விடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன..

மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் குறுகியகால
விளைவுகள் மக்களை வெகுவாக ஈர்த்து விடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை
ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்..

குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் தவறான கருத்துக்கள் எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டிறைச்சி தான் - தமிழக கால்நடை மருத்துவக் கல்லூரி பரிசோதனை முடிவில் தகவல்...


தமிழ்நாட்டின் பல உண்மை முகங்கள் வெளி வருகின்றன...


அது, இப்படியும் சாமான்ய மக்கள் இன்னும் வாழ்கிறார்களா..? என்று..

இதை சரிசெய்யாமல் தான் ஒவ்வொரு அரசியல்வியாதியும் இதுவரை இங்கு இருந்து இருக்கின்றார்கள், இருக்கிறார்கள், இருந்துக்கொண்டே இருப்பார்கள்..

நாம் அவர்களுக்கு வாக்குகளும் அளித்து இருக்கிறோம்.

சென்னை வாசிகளே, நினைவில் கொள்ளுங்கள்...

இனி நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் என் மக்கள் இழந்த இழப்புகளும், அவர்களின் கண்ணீரும் தான்..

இவன் ஏன்..? எப்பவும் சென்னையை மட்டும் கூறுகிறான் என சிலர் திட்டலாம்..

தலையெழுத்து சென்னையை காரணம் காட்டி தானே, இங்கு தமிழ்நாடு வளர்ந்து விட்டதுனு இங்கு பல அறிவாளிகள் கதை கூறுகிறார்கள்..

சென்னை மட்டும் தமிழ்நாடு இல்லை, சொல்லப்போனால் சென்னைதான் தமிழ்நாட்டில் இல்லை..

இனி சென்னை எங்கே இருக்குனு கேட்டா, என்ன சொல்வீங்க..

அது குசராத் பக்கம் இருக்குனு சொல்லணும், இருக்குற பயலுக எல்லாம் அவங்க தான்...

உளவியல் ரீதியாக நம்மை கட்டுபடுத்துகிறார்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு புரியாமல் சென்று இருக்கலாம்...


அதற்கு சிறு உதாரணம் கேரளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் தான்...

கேரளத்தில் பேரிடர் வந்தபொழுது உங்கள் மனதில் எந்த அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது(ஏற்படுத்தபட்டது)...

இன்று நம் தமிழகத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது ஒப்பிட்டு பாருங்கள்...

நம் தமிழகத்தில் பலர் வாழ்வாதரத்தையே இழந்து நிற்கிறார்கள் இதில் யாருக்கும் வருத்தமும் இல்லை... இதனை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல எந்த ஊடகமும் பிரபலங்களும் சரியான முறையில் செயல்படவில்லை...

இது தான் உளவியல் தாக்குதல்.. கேரளத்தில் ஏற்பட்ட பேரிடரை அரசியலாக்கினர் அதனை ஊடகமும் உங்கள் மனதில் சிறந்த முறையில் விதைத்தது,பிரபலங்கள் அவற்றை ஒவ்வொரு சமூகவலைதளத்திலும் பதிந்து பகிர்ந்து உங்கள் மனதில் ஊடுருவ செய்தனர்...

ஆனால் இங்கு நம் தாய்நிலத்தில் அவ்வாறு ஏதும் நிகழவில்லை...இன்று உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்று சிந்தனை செய்யுங்கள்...

இது தான் உலக அரங்கின் அரசியல்.. நம் ஒற்றுமை சிதைவதும் வீழ்வதும் தோற்பதும் இங்குதான்... விழித்திடுங்கள் இது மாய உலகம்...

விளம்பரத்தை கொண்டு செயல்படும் மாயத்தோற்றமே அனைத்தும்...

டெல்டாமாவட்டங்களுக்கு கரம  கொடுப்போம்...

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏராளமான மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீது விழுந்தன. இவற்றை அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றனர்...


இந்த நிலையில், மரங்களை அகற்றும் பணியில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரும் ஈடுபட்டு வருகிறார். அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளான அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் தென்னை, தேக்கு, செம்மரம், நாட்டு மரங்களான வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீதும் விழுந்தன. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாதனோடு போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தாங்களாகவே மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவர், கஜா புயல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள தகவலை தன் நண்பர் மூலமாக அறிந்தார். உடனே சென்னையிலிருந்து தன் நண்பருடன், அவர் ஆலோசனை பேரில் பீட்டர் காரிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதிக்கு வந்துள்ளார்.

அவர் வரும்போதே மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் அதற்குத் தேவையான பொருள்களை கையோடு வாங்கிக் கொண்டு தயார் நிலையில் வந்தார். பிறகு பள்ளத்தூரில் புயலால் கீழே விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு தொடர்ந்து செய்தும் வருகிறார். உள்ளூர் மக்களே புயல் பதிப்பால் உணவு, மின்சாரம் போன்ற வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு வேகமாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ள நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டர் மக்கள் படும் துயரத்தைப் பார்த்து கண் கலங்கியதோடு வேகமாக புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அவரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி, நன்றியும் தெரிவித்தனர்..

நீண்ட காலம் தூங்கும் நத்தை...


நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும்..

நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன.

ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன.
ஈரப்பதம் கொண்ட உடலின் மூலம் மிகக்கடினமான இடங்களிலும் எளிதில் செல்லும் திறன் கொண்டது.

ஆபத்துக் காலங்களில் உடலினை, முதுகில் இருக்கும் ஓட்டினுள் இழுத்துக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

சில நத்தையினங்கள் நீண்டகாலம் தூங்கும் ஆற்றல் கொண்டது.

கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இவை நீண்ட காலம் தூங்குகின்றன.

உலகிலேயே மிகவும் மெதுவாக செல்லக் கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ள நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும்.

இந்த இனங்களில், இரு பாலினமும் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டிருக்கின்றன.

நத்தை இனங்கள் அவைகளின் வாழ்விடத்திற்கேற்ப 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.

இரவில் சுறுசுறுப்புடன் இருக்கும் நத்தைக்கு கேட்கும் திறன் கிடையாது.

சில சென்டி மீட்டர் முதல் 12 இன்ச் வரை வளரும் திறன் கொண்ட நத்தை, தன்னுடைய உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருட்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது...

அரசு நிலத்தை வழங்குவதில் தவறேதும் இல்லை...


40 ஆண்டாக வசிக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு முன்னாள் ராணுவ வீரர் மனு : சீருடை அணிந்து தள்ளாத வயதிலும் வந்தார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பெருமாள்(92) என்பவர் சீருடையில் பதக்கங்கள் அணிந்து கொண்டு, தனது மனைவியுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது...

ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1979ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நான் மனைவியுடன் மண்டகொளத்தூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குடிசையில் வசித்து வருகிறேன்.

இந்தநிலையில் தற்போது, நான் குடியிருந்து வரும் பகுதி அரசுக்கு சொந்தமான இடம் எனக்கூறி உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று சேத்துப்பட்டு பிடிஓ கூறி வருகிறார். வயதான காலத்தில் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே நாங்கள் வசித்து வந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்...

அவசர கால முதலுதவி முறைகள்…


வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்...

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் உருவுதல் (massage) செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் உருவுதல் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி...

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள்...

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 அங்குலம் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.

இது போன்ற துளையீட்டு மருத்துவமுறை (acupuncture) முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்...

நகரமயமாக்கலின் அடிப்படை இயல்புத் தன்மையான சுயநலத்தை முழுதும் கற்றுக்கொண்டது தமிழகத்திற்கு தலைநகராக சொல்லப்படும் சென்னை...


பிற மொழி பேருக்கு ஏற்றது போலவே தன் மாநிலத்தை சார்ந்த பல மாவட்டங்களையும் பிரிச்சி பேசுதோ என்னவோ ? நம்மள ஆள்றவன் தான் நம்ம நிலத்தவன் இல்லனா, நம்மை ஆளும் தலைநகரும், அதன் மக்களும் அது போலவே செயல்படுறாங்க.

உங்களுக்கு பிரச்சனைனா கதறுவீங்க, நாங்க வரனும்.. ஆனா எங்க டெல்டா பக்கத்துக்கு ஏதாச்சும் பாதிப்புனா உங்களுக்கு மாலைக்கண் நோய் / Madras Eye  வந்திடும் போல.

நகர சென்னை வாசிகளே நீங்களாம் முழுதும் தற்சார்பிழந்த பிராய்லர் கோழிகள் என நினைவில் கொள்ளுங்கள், நீங்க மட்டும் எந்நேரமும் காகிதத்துக்காக உழைக்கிறதா நினைச்சிக்காதீங்க, டெல்டா விவசாயிகள் உங்களை விட  அதிகமே உழைக்கிறாங்க ஆனா போதுமான வருவாய் அவங்களுக்குமில்ல.

ஒருத்தர் இயல்பை மாற்றமுடியாது தான் ஆனா சுயநல நிலமா கட்டமைத்து, சுயநலமாவே வாழப்பழகிய உங்க மனநிலையையும் நாங்க தெரிஞ்சிக்கிட்டோம்.

நீங்க சாப்பிடுற சோறு எங்க மண்ணுல  விளைஞ்சது, அதுல போடுற உப்பு தூத்துக்குடி பக்கம் விளைஞ்சிது ஆனா பிற உயிரினங்களிடத்திருக்கும் துளி நன்றியோ, இரக்கமோ உங்ககிட்ட இல்லாததை இப்போ தெரிஞ்சிக்கிட்டோம்.

நாங்க எப்போ பார்த்தாலும் சென்னையை குறை சொல்றோம்னு நினைக்காதீங்க ஆனா ஒவ்வொரு விளைவுகளில் உங்க பங்கும் அடங்கியிருக்கு..

ஓ@# இனி இதுக்கு மேல உங்களாண்ட பேச விருப்பமில்லடா, நீங்க கடைசி வரை சுயநலமாவே இருங்க நாங்க எப்படியும், எந்த நிலை வந்தாலும் எங்க தாய் நிலம் ,தற்சார்பை விட்டுத் தர மாட்டோம்டா ஏன்னா அது எங்களுக்கு சோறு போடுற தெய்வம் , உங்க சுயநல இயல்பு நீங்க இருக்குற நிலத்தை வித்துட்டு ஓடி வந்தபோதே புரிஞ்சிருச்சு,

உவன் இங்கே சொல்றது பெரு வணிக செல்வந்தர்களுக்கு மட்டுமே, இதே சென்னைல இன்னொரு கூட்டமிருக்கு சொந்த ஊரை விட்டு பொழப்பு பார்க்க வந்த கூட்டம் அது எப்போமே தன் நிலை உணர்ந்தது, வந்த மண்ணையும் காப்பாத்தும் இயல்புடையது, பிறகு சென்னையின் மீனவ பூர்வக்குடிகள்... அவங்களுக்கு உவனின் தலை தாழ்ந்த நன்றிகள்.

நீங்க உதவ வேணாம்டா பாதிக்கப்பட்ட இடத்தின் விளைவுகளை பகிர்ந்தாலே போதும், நாங்க யாரையும் எதிர்ப்பார்த்து வாழ்றதில்லை... நன்றி...

பத்து அடிப்படை கோட்பாடுகள்...


வாழ்க்கை வளத்திற்கான பத்து அடிப்படை கோட்பாடுகள் முதலில் அறியுங்கள் பிறகு தன்னம்பிக்கையை அதில் கூடுதலாக வளர்த்துக் கொள்ளுங்கள்...

1. உயரிய எண்ணங்கள் - Mindfulness
2. வாழ்கையின் நோக்கம் - Life's Purpose
3. சுய உணர்வு - Self Awareness
4. குறிக்கோள் - Goals
5. செயல் - Action
6. ஆற்றல் - Energy
7. ஞானம் - Wisdom
8. தன்னம்பிக்கை - Self Confidence
9. அன்பு - Love
10. கடவுள் நம்பிக்கை - Entheos

1 . உயரிய எண்ணங்கள் - நாம் நமது எண்ணங்களை மேன்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை முன்னோக்கி செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. இதையே புத்தர் "நமது எண்ணங்களே நாம்" என்று கூறுகிறார்.

2 . வாழ்கையின் நோக்கம் - நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எதை செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது ? நாம் எதை செய்தால் நமது மனம் முழுவதுமாக முழ்கிவிடுகிறது, புத்துணர்ச்சி அடைகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

3 . சுய உணர்வு - நீ உன்னை அறிந்தால்...உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டெல்பி-யின் ஆரக்கிள் சாக்கரடிஸ் தான் உலகத்தின் தலை சிறந்த ஞானி என்று உரைத்தது, ஏன் என்றால் அவருக்கு தான் தனக்கு என்ன தெரியாது என்று தெரியும் என்று கூறியது. நாம் நம்மை பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.

4 . குறிக்கோள் - குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இருட்டில் விளக்கு இல்லாமல் நடப்பதற்கு சமம். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் காய்ந்த இலைகளை போல நாம் அடித்து செல்லப்படுவோம். குறிக்கோள் ஒரு கலங்கரை விளக்காக இருந்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது.

5 . செயல் - சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
இதற்கு மேல் "செயல்"-லை நான் சொல்ல என்ன இருக்கிறது.

6 . ஆற்றல் - நமக்கு அளவிட முடியாத ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆற்றலுக்கு வரையரை உள்ளது. ஆற்றலை கையாளும் அறிவு நமக்கு தேவைபடுகிறது. தேவையில்லாத சொற்ப காரியங்களில் நமது ஆற்றலை செலவிட்டால் நாம் எவ்வாறு நமது குறிக்கோள்ளை அடையமுடியும்.

7 . ஞானம் - நமக்கு வயது கூடி கொண்டே போனால் ஞானமும் அதிகரித்து கொண்டே செல்லும் என்பது சாத்தியம் அல்ல. நமக்கு வாழ்க்கை தரும் அனுபவங்களை அலசி ஆராய்ந்த பின்னரே நமக்கு ஞானம் தோன்றும்.

8 . தன்னம்பிக்கை - தன்னம்பிக்கை என்பது தூண். அதுவே நம்மை தோல்வியை கண்டு துழன்று விடாமல் நம்மை தாங்கி நிற்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு திறமை அதை நம்மால் வளர்த்து கொள்ள முடியும்.

9 . அன்பு - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - அன்புள்ள வாழ்கையே பயண்ணுள்ள வாழ்க்கை என்கிறார் உலகத்தின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதிய நமது திருவள்ளுவர்.

10 . கடவுள் நம்பிக்கை - மனிதனுக்கு இறை நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவை. நமது வாழ்கையின் பல்வேறு இடங்களில் நாம் இறைவனை பார்க்கலாம். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ள இறையாற்றலின் மீது நீ நம்பிக்கைவை...

உலகை கட்டி ஆண்ட தமிழன்...


கடற்வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள் மொழித் தேவன் அறிமுகப் படுத்தியதே...

உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப் படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம் மக்களை அடிமை படுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம் மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே..

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை, வரலாற்றையும் இலக்கியங்களையும் எடுத்துகாட்டாக முன் வைத்து நம் மக்கள் உணரும் வகையில் செய்வதன் மூலமே...

திராவிட கருத்துக்களில் சிக்கி தன் இனத்தை தானே அவமானப் படுத்தி பேசும் வழமையை அகற்ற முடியும்...

இலுமினாட்டி - ரோத்சைல்ட் (Rothschild)...


             
ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன். இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்...

இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர்.

இவன் தன் வீட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான்.

ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணிணர்.

இது பின்னாளில் பணமாக மாறியது.

இதுவே முதல் வங்கி.

இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான்.

தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்துணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டு வந்தான்.

தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான்.

இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது..

இவன் தன் வீட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான்.

மேசை என்பதன் லத்தீன் மொழி பெயர்ப்பு பாங்கா (Banka). இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank)..

இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான்.

இதவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி.

நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப் போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே.

இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க..

இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்)  கட்டுப்படுத்துகிறான்.

அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன.

உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே..

நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின் உரிமையாளன் வேறு யாரும் அல்ல இவன் தான்..

தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலையே இந்தியாவில் இயங்கி வருகின்றன. 

நாம் அடிமையா யார் சொன்னா?

அப்படினு பல பேர் சொல்லிட்டு திரிகிறாங்க. இப்ப சொல்லுங்க நாம யாரு?

இன்னும் இருக்கு இவனை பற்றி பிறகு பார்க்கலாம்...

மராட்டிய ரஜினி யின் சிஸ்டம்... அட த்த்துதுதூ...


இது வரை இந்தியத்திடம் இருந்து எந்த ஒரு அதிர்ச்சியோ, உதவியோ வரவில்லை.. வரலாறு காணாத பல ஆயிரம் கோடி.. புயல் சேதத்திற்கு...


இதுவே நாம் ஒரு டோல்கேட்டை அடிச்சி நொறுக்கிறுந்தால், இன்னேரம் ஒட்டு மொத்த இந்திய ஊடகமும் அதிகாரமும் அலறியிருக்கும்.

GST உட்பட எல்லா வரிப்பணமும், ரயில் கட்டணம் எல்லாம் நேரடியாக டில்லிக்கு சென்றடைகிறது...

ஆனால் நாம் எந்த ஒரு உதவிக்கும் மாநில அரசை தொங்க வேண்டியுள்ளது.. விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு கூட கழிவறையிலயும், படிகளிலயும் ரயிலில் தொங்க வேண்டியுள்ளது..

பறிக்கப்படும் வரிப்பணம் டில்லியில் இருந்து பெரிய வங்கிகளுக்கு போகிறது, பின்னடைவான மாநிலங்கள் என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு பணம் செல்கிறது.. அவர்கள் பெருமுதலாளிகளுக்கு கொடுத்து, வெளி நாடுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள், நலிவடைந்த மாநிலங்கள் என்ற பெயரில் அந்த மாநிலங்களின் விவசாய கடன் முதற்கண்டு எல்லாமே தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே 100% கட்டணம் எடுத்து ரயில் வருமானத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ் நாட்டுக்கு இதுவரை இரட்டை தண்டவாளம் கூட போட படவில்லை.. ஆனால் புல்லட் ரயில், ராஜஸ்தானி போன்ற வண்டிகள் எல்லாம் பயணக்கட்டணமே எடுக்காமல் பயனிக்கும் வட மானிலங்களில் ஓடுகிறது!. அப்படியே தமிழ் நாட்டுக்கு வந்தாலும் சென்னையோட வந்து விட்டு, வட மாநில தொழிலாளர்களை இறக்கி விட்டுட்டு சென்றுவிடும்..

இது எப்படி ஒரு நாட்டுக்கு வளர்ச்சியை கொடுக்கும்? ஒரு வீட்டின் ஒருவன் உழைத்து, உழைக்காத ஊதாரியாக திரியும் உடன் பிறப்பவர்களுக்கு சோறு போட்டு, அவனால் அந்த வீடு முன்னெறிவிடும் நினைப்பது முட்டாள்தனமே..

இந்திய ஒன்றியம் வல்லரசு ஆக வேண்டுமா? அதற்கு அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேணும்... அந்தந்த மாவட்ட வரி அந்த மாவட்டத்திற்கே. மாநிலங்கள் 5-10% வேண்டுமானல் வசூலிக்கப்படும் வரியில் தொகுப்பு நிதியான மத்திய நிதிக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த நிதி, ராணுவம், வெளியுறவுக்கு, மட்டுமே பயன்படுத்த வேண்டும்..

இது புரியாமல, இந்தியா இந்தியா என்று கத்தி ஒரு புண்ணியமும, கடைசியில் அழிய போவது உழைக்கிற அந்த ஒரு மகனும் தான்...

- தமிழ் தேசியவாதிகள்...

சூரியன் பற்றி தெரிந்து கொள்வோமா?


பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன..

சூரியனும் ஒரு நட்சத்திரம் தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம்..

என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான்.

மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது..

சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.

சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது.

இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது.

இந்த வேதி வினையின் காரணமாகத் தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது..

சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள்.

சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது.

இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்து கொண்டிருக்கும்..

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன.

சூரியனில் இருந்து தான் பூமி அனைத்து சக்திகளையும் பெறுகிறது..

பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்..

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவது சூரியக் கிரகணம்.

ஒரு முழு சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்களுக்கு நீடிக்கும்..

சூரியனின் சில பகுதிகள் கறுப்பாகத் தோற்றமளிக்கும். அவை சூரியப் புள்ளிகள். அப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் அப்படி இருக்கிறது..

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது.

பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண் டுக்கும் இடையிலான தொலைவு 14.7 கோடி கி.மீ. முதல் 15.2 கோடி கி.மீ. என மாறிமாறி இருக்கும்.

பூமியைப் போல 28 மடங்கு அதிகமான புவியீர்ப்பு விசையைக் கொண்டது சூரியன்.

அதன் காரணமாகத் தான் ஹைட்ரஜன் பிணைவின் போது அது வெடிக்காமல் இருக்கிறது. இல்லையென்றால், ஒட்டு மொத்த சூரியக் குடும்பமே வெடித்துச் சிதறிவிடும்..

வரலாற்றில் இதுவரை மனிதன் பயன்படுத்தியுள்ள மொத்த எரிசக்தியின் அளவு, சூரியன் வெறும் 30 நாள் பயன்படுத்திய அளவ ுதான்..

பெருவெடிப்பின் ஒரு கட்டத்தில் சுழலும் பெரும் வாயு மேகம் மூலம் சூரியனும், அதன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றக் கோள்கள், நிலவுகள், நூற்றுக் கணக்கான சிறுகோள்கள், எரி நட்சத்திரங்கள், விண்கற்கள் உருவாகின.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெரும் வாயு மேகத்தில் 99.8 சதவீதத்தைச் சூரியன் மட்டுமே உருவாக எடுத்துக் கொண்டது. எஞ்சிய 0.2 சதவீதத்தில்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கின்றன..

பண்டைய நாகரிகங்களில் பலவும் சூரியனை மையமாகக் கொண்டு இயங்கின.

எகிப்தியர்கள் ரா என்றும், மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்றும், இன்கா நாகரிகத்தினர் இன்ட்டி என்றும் சூரியனை அழைத்தனர்.

ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற வட்டமாக அமைக்கப்பட்ட கற்கள், சூரியனை வழிபடும் வகையில் அமைக்கப்பட்டவையே.

இயற்கையில் உள்ள கச்சிதமான வட்ட வடிவத்துக்குச் சிறந்த உதாரணம்
சூரியன்..

சூரியன் தன் அச்சில் 25.38 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது..

பூமியைவிட, சூரியன் 10 லட்சம் மடங்கு பெரியது. பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறது சூரியன்.

சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். சூரியனின் மையப் பகுதி மிக மிக வெப்பமானது. அதன் வெப்பநிலை 27 லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட்.

சூரியனை பூமி சுற்றி வருவதாக 16-ம் நூற்றாண்டில் நிகோலஸ் கோபர்நிகஸ் கூறினார்.

புவியீர்ப்பு விசைக் கொள்கையையும், அதன் காரணமாகச் சூரியனை மற்றக் கோள்கள் சுற்றி வருவதையும் ஐசக் நியூட்டன் நிரூபித்த பிறகே சூரியக் குடும்பம் என்ற கருதுகோள் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது...

வாய்கிழிய கிரேக்க வரலாறு பேசுவார் வைகோ நாயூடு...


ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்ற கருத்தை ஒரு முறை கூட சிந்திக்காதவர் தான் வைகோ...

ஏனென்றால் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னால் வைகோ போன்ற தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்ற பயம்...

இலுமினாட்டி களும் இந்தியாவின் விடுதலையும்...


இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள்..

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது..

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம்.

இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே. 

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு.

நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.

அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு
நிறுவனம் அல்ல. அது ஓர் தனியார் நிறுவனம்..

இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild.  இவன் இலுமினாட்டியில் முதன்மையானவன்..

சுதந்திர போராட்டம்...

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம்.

அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்.

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன..

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது..

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்..

முதலில் அந்தமான், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமான், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமினாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும்.

அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்..

அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள்.

இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி போ இதுவே மிரட்டல். 

ஜப்பான் அடிபணிய மறுத்தது. 

இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின.

ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்து விட்டு நாடு திரும்பியது..

சுதந்திரம் என்ற மாயை...

சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது.

ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம்..

மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது..

அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது..

இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது...

இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர். 

இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

சௌமியாவின் அண்ணன் முனீஸ்வரன் அவர்கள் தொலை பேசியில் பேசியதாவது காவல்துறையின் தொடர் அட்டூழியம் பழங்குடி மாணவி சௌமியாவின் வீட்டில்...


தாய், தந்தை, அண்ணன், அண்ணி போன்றவர்களுக்கு தற்பொழுது  கடுமையான நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறது.. அத்துமீறி அவர்கள் வைத்திருக்க்கும் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது..

சற்று முன்பு சௌமியா வின் அண்ணன் தொலை பேசியில் பேசியதாவது...

தங்கை இறப்பிற்க்காக போடப்பட்ட தொகை எவ்வளவு, யார் கணக்கில் போடப்பட்டுள்ளது, என்று மிரட்டி எங்களிடம் இருந்த பாஸ் புக்கை  பறிமுதல் செய்ததோடு மட்டும் அல்லாமல்...

நான் இங்கு நடக்கும் தொடர்ச்சியான ஆதாரங்கள் சேகரித்து உங்களை போன்றவர்களுக்கு அனுப்புவதால் என்னுடைய ஸ்மார்ட் போன்னை பறிமுதல் செய்து கொண்டு விட்டனர்....

காவல் துறை அத்து மீறி வீடு புகுந்து  தொடர்ச்சியான மன உளைச்சலை கொடுத்து வருவதாக  சௌமியாவின் அண்ணன் தனது வருத்தத்தை பதிவு சேர்த்துள்ளார்....

பழங்குடிகள் மீது தொடர்ந்து ஏவப்படும் அரசின் அடக்குமுறையை பெண்கள் கூட்டமைப்பு -தமிழ்நாடு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்...

தமிழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியின் வரலாறு. உலகின் மிகபெரிய ஏரி...


கண்களை ஏன் சிமிட்டுகிறோம்...


கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும்.

இச்செய்கை சுமார் 400  மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது.

இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்..

கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்..

சராசரியாக ஒரு நாளைக்கு நாம்  15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை..

ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்..

விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை...

நினைவில் கொள்ளுங்கள்...


தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...


தமிழனின் மாந்த நேயப் பண்பை, அவன் பண்பாட்டை, வீரத்தை, ஆயிரம் ஆண்டு கழித்து உலகை உணரச் செய்தவன் எம் தலைவன் பிரபாகரன்...

தமிழ் மொழியை கட்டி காத்து அம் மொழியின் வழியே இனத்தின் ஒற்றுமையை கட்டியமைத்து வீர சமர் புரிந்தவன்...

ஆங்கிலம் அறவே அற்ற தமிழ் பாட திட்டங்களை உருவாக்கி தமிழ் தேசத்தை கட்டி எழுப்பியவன்...

உலகில் தமிழ் மொழியின், இனத்தின் பெருமையை நிலை நாட்டியவன்...

இலக்கியங்களில் படித்த புறநானூற்று வீரத்தை நிகழ்த்தி காட்டியவன்...

இத்தகைய பெருமை மிக்கவர்கள் எல்லாம் தமிழ் மொழியில் பயின்றவர்களே...