16/10/2017

இரட்டை இலை சின்னம் வழக்கு , 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம்...


இன்று இறுதி விசாரனை நடைபெற்றது, ஒபிஎஸ், இபிஎஸ் டிடிவி யினர் தங்களது வாதங்களை வைத்தனர்...

நோயை யார் பரப்புகிறார்கள், எதற்கு பரப்புகிறார்கள் என்பதை இனியாவது உங்களால் கண்டு பிடிக்க இயலுமா?


கொள்ளை... கொள்ளை டெங்கு கொள்ளை.

பப்பாளி இலை, நிலவேம்பு இலை போதுமே...

தமிழக காவல்துறை உலகத்திலே மிக மோசமான காவல்துறை என்று பெயர் எடுத்து கடைசி இடத்திற்கு வந்து ரோம்ப நாளாச்சு...


இது கேரளாவில்...


மலையாள மனோரமா இதழின் செய்தியாளர் ராமசாமி, தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருப்பது போல, கேரளாவிலும் ஜூன், ஜூலை மாதங்களில் தீவிரமாக டெங்கு பரவியது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வேகமாக ஆய்வில் இறங்கினார். ஒரே நாளில், காலையில் அதிகாரிகள் கூட்டத்தையும் மதியம் அமைச்சரவைக் கூட்டத்தையும், மாலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமைச்சரை நியமித்தார். அவரின் கட்டுப்பாட்டில் ஆட்சியாளர், அதிகாரிகள் மேற்பார்வையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தொண்டர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் என அனைவரையும் இணைத்துத் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

15 நாள்களில் கொசுவின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காய்ச்சலிலிருந்து முழுமையாக மீட்டனர்.

கொசுவே இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றிவிட்டார்கள். கேரளாவைப் போல தமிழக அரசும் செயல்பட வேண்டும் என்றார்.

இது தமிழ்நாட்டில்...

அக்டோபர் 7ம் தேதி தர்மபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 200க்கு 400மீட்டர் பந்தல், 10 எல்இடி திரைகள், சேலம் - தர்மபுரி எல்லையான தொப்பூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வரை கட்சிக் கொடிகள், கட் அவுட்டுகள், ஆங்காங்கே மேடைகளில் குத்தாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தங்குவதற்கு 250க்கும் மேற்பட்ட ஏசி ரூம்கள், வந்து செல்வதற்கு ஏசி கார்கள், அவர்களுக்கான உணவுகள் என விழாவுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் படுக்க பெட் இல்லாமல், ஒரு கிழிந்த பாயில் மூன்று குழந்தைகளைப் போட்டிருக்கிறார்கள். போதிய மருந்து இல்லை... ஊழியர்கள் இல்லை... மருத்துவர் இல்லை!

- ஜூனியர் விகடன்...

தமிழக எடப்பாடி அரசு விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..


உடுமலைப்பேட்டையில் மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு வந்த நடிகை நிக்கி கல்ராணியை வரவேற்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்...


குறிப்பு : நடிகை வருகைக்காக கால்கடுக்க நின்று காத்திருந்து கைகூப்பி வரவேற்றார் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்...

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட பலி இல்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம்...


நாம் அழுதுவடியும் இனமல்ல... தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல...


கல்கி எழுதிய 'மோகினித்தீவு' படித்திருக்கிறீர்களா?

1942ல் சப்பான் பர்மாவின் மீது படையெடுத்து ரங்கூனை (யகூன்) கைப்பற்ற முனையும் போது அங்கே வாழ்ந்த பர்மா தமிழர்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள்..

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் பாதி தொலைவு வந்ததும் ஒரு சப்பானிய போர்கப்பல் (க்ரூஸர்) அவ்வழி வருவதாகத் தகவல் வருகிறது..

கப்பலின் நாயகர் (கேப்டன்) அருகிலுள்ள ஒரு தீவுக்குள் கப்பலை மறைவாக கரையொதுக்குகிறார்..

அந்த கப்பலில் இருந்து இறங்கி அந்த தீவை பார்வையிடச் சென்றவர்களில் ஒருவர் இலக்கியவாதி..

பின்னாட்களில் அவர் அமரர் கல்கியைச் சந்தித்து தாம் அந்த தீவில் காதல் மணம் புரிந்த சோழ இளவரசனையும் பாண்டிய இளவரசியையும் சந்தித்ததாக கற்பனையான ஒரு கதையைக் கூறுகிறார்..

இது 1950ல் கல்கி எழுதி 'மோகினித் தீவு' என்ற புதினமாக வெளிவருகிறது..

அந்தக் கதையில் என் மனதில் நின்றது எது தெரியுமா?

அந்த இளவரசனிடம் கல்கியின் நண்பர் போர் நடக்குமுன் தப்பி வந்ததை கூறுகிறார்..

அதற்கு தமிழர் நிலை அப்படி ஆகிவிட்டதா? போருக்கு தமிழர் பயப்படும் நிலையும் வந்துவிட்டதா? என்று அந்த இளவரசன் அதிர்ச்சியாகக் கேட்கிறார்.

தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல...

ஆயிரமாயிரம் போர்க் களங்களையும் முள்ளி வாய்க்கால்களையும் கடந்து தான் நாம் தாக்குப் பிடித்து இன்றுவரை மிஞ்சியிருக்கிறோம்..

அதற்கு காரணம் நம் வீரம்...

தமிழன் என்றாலே வீரம்...

நம்மைப் போன்ற பல பழங்குடிகள் இன்று காணாமல் போய்விட்டனர், நாம் அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டோம், இவ்வளவு காலம் தாக்கு பிடித்தது நம் வீரத்தால் தான்..

வீரம் என்பது வெட்டி வீழ்த்துவது மட்டுமில்லை இழப்புகளை மீறி நிமிர்ந்து நிற்பது தான் வீரம்..

இருகால்கள் இழந்த நிலையில் தள்ளாத வயதில் குதிரைகூட உயிரோடு எஞ்சியிராத போர்க்களத்தில் இருவர் தோளில் தூக்கிக் கொள்ள இருகைகளில் வாளேந்தி களத்தில் புகுந்து எதிரிகளை சிதறடித்த 96 விழுப்புண்களே பதக்கங்களாகக் கொண்டிருந்த விஜயாழய சோழன் வழிவந்த தமிழர்களே...

கரிகாலன் இமயமலையைக் குடைந்து அமைத்த பாதை சோழா கணவாய் (chola pass) என்ற பெயரில் இன்றும் இருக்கிறதே, அவன் வழிவந்த நம்மிடம் அவ்வீரம் எப்படி இல்லாமல் போகும்?

உங்களுக்கு வீரத்துறக்கம் என்றால் தெரியுமா?

பிறந்த குழந்தை இறந்தே பிறந்தால் விழுப்புண் இல்லாத அதன் மார்பில் வாளால் கீறி புதைத்து வீரத் துறக்கம் (வீரசொர்க்கம்) அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்வர்..

குழந்தை இறந்த துயரம் ஏற்படுத்திய வெற்றிடத்தை வீரவுணர்வால் நிரப்பிய இனம்,
இன்று ஒப்பாரி மட்டுமே வைக்கும் இனமாக ஆனது ஏன்?

எதிரிகள் மிகப்பெரிய வெற்றி நம்மை கொன்று வீசியது அல்ல, நம்மை நாமே இழிவானவர்களாக நினைத்துக்கொள்ள வைத்தது தான்...

நாம் காது குத்துவதும், அலகு குத்துவதும், தீமிதிப்பதும், நோன்பிருப்பதும், மலை சுற்றுவதும், காளையடக்குவதும் வெறும் சடங்குகளில்லை போர்ப் பயிற்சியின் வடிவம்...

நாம் கேடயம் அணிந்ததே கிடையாது, வாளின் கூர்மைதான் கேடயம், மாரில் தைத்த ஈட்டியை எடுத்து போரிட்ட வம்சம், தனியறையில் துணையே இல்லாமல் தானே பிள்ளை ஈன்று கொண்ட இனம்..

இன்று பிணங்களின் படத்தைக் காட்டி நீதிப்பிச்சை கேட்கும் கூட்டமாக மாறியது தான் நம் தோல்வி..

மே18 இனப்படு கொலை நாள் என்றால் ஒன்றாம் தேதியிலிருந்தே ஒப்பாரி தொடங்கிவிடுகிறது..

அவர்கள் உயிரைத் துறந்தது நாம் கூடி அழவா?

இல்லை, அவர்கள் நமக்காக விட்டச் சென்றது ஒரு காரணம்..

நமக்கு என்ன தான் பெரிதாக கொடுமை நடந்துவிட்டது என்று மற்றவர்கள் கேட்டால் காரணம் சொல்லத்தான் அவர்கள் மொத்தமாக செத்து விழுந்தார்கள்..

அந்தப் படுகொலை நிகழ்வை வேற்றினத்தார் எத்தனை முயன்றும் மறைக்க முடியாமல் இன்று உலகத் தமிழரிடம் விழிப்புணர்வு பரவிவருகிறது..

2009 நடந்த படுகொலை 2016 வரையில் 90% தமிழர்களிடம் பரவலாகத் தெரிந்துவிட்டது..

8 ஆண்டாகி விட்டதே என்று எண்ணாதீர்கள்.

இரு ஆண்டுகள்தான் ஆகிறது, சூடு இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது...

புலிகளே தமிழகம் வாருங்கள்...

தமிழக விடுதலைக் குழுக்களே மீண்டும் களத்தில் இறங்குங்கள்...

தமிழ் மக்களே தலைவர் வழியில் போராடும் இளைஞர்களுக்கு தயங்காமல் ஆதரவு தாருங்கள்...

ஒருபிடி தமிழ்மண் கூட மாற்றான் கையில் இருக்கக்கூடாது...

மண்ணை மீட்போம் அல்லது மண்ணோடு மண்ணாக கலந்து விடுவோம்...

அழுது வடியும் அடிமை இனமாக இருக்க வேண்டாம்...

போர்க்குற்றக் கதைகள் எல்லாம் நம் தலைமுறைகளுக்கு உரமூட்ட மட்டுமே பயன்படட்டும்...

இதுவரை அழாமல் இருந்தவன் மாந்தனில்லை...
இனியும் அழுதுவழிந்தால் அவன் தமிழனில்லை...

இது திருப்பி அழிக்கும் நேரம்...

தமிழினமே சிந்தித்து விழித்தெழு...


கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என திமுக கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌...

தமிழா விவசாயத்தை காப்போம் விழித்தெழு...


மக்களுக்கு எனக் கூறி இருக்கும் கொஞ்ச விவசாய நிலங்களையும் அழித்து உணவு பற்றாக்குறை என வெளிநாட்டிலிருந்து இறக்குமதி என கார்பரேட் ராஜ்ஜியம் அரங்கேறும் அனுமதியளிக்காதே தமிழா விழித்தெழு...

சித்தர் ஆவது எப்படி - 14...


மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காணமுடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை..

ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்படமுடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை..

எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன..

அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்..

அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்..

இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..

இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக்கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது..

அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்...

சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..

அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை..

ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்..

தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்..

அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே..

வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது..

அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்.. அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை..

ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று..

ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது..

மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது..

அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..

ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது..

அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்..

மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்..

தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்...

ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றா நிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ள வேண்டும்...

சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்..

கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்..

வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்..

உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்...

தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை..

ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...

தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை.....

சாதிப்பெயர் வேண்டாம் என முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் ( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் திமுக  கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்.

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன...

கருப்பட்டி சுக்கு காபி சாப்பிடலாம் வாங்க..,


வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம் என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே.

ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது.

அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது.

இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது.

சுக்கு, கருப்பட்டி இட்டு சுக்கு நீர் தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்...

மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன...


பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

ஏழு பிறப்பு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும் என்பது பொருள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பிரபந்தம்.

ஏழேழ் பிறவி என்றால், நாற்பத்தொன்பது பிறவி என்று அர்த்தமல்ல.

எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும் என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது.

காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள்.

இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானேதாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா – என்றார் பட்டினத்தார்.

பிறவா வரம் வேண்டும் எம்மானே என்று புலம்பினார் ஒருவர்.

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

அன்னை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை அப்பனோ
இன்னும் எத்தனை ஜென்மமோ? – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், ஐயையோ. படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும் என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி.

ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

பகவான் ஒன்று சொல்கிறான், மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, ஆத்ம சாந்தி.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தி அடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன.

மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்...

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தமிழை கொச்சைப்படுத்திய கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படா தமிழ் வளர்த்தான்..?



வந்தேறி- தெலுங்கு-கன்னடர்கள் திராவிடர்களின் பொய் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லாமல் போகிறது...

பஞ்சாப் குர்தாஸ்பூர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜக்கார் வெற்றி...


ஒற்றைத் தலைவலி (Migraine)...


உலகில் 70 சதவீதம் மக்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள்.

சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.

அறிகுறிகள்:

மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.

படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்..

ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine).

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)..

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும் போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்:

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்:

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்...

ஆங்கில மருத்துவம் எனும் போலி வியாபாரம்...


மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...


மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கி விடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது.

அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச் சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள்.

ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞான பூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
உண்மைதான்.

இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்.

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார்.

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது.

ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது நினைத்தேன் வந்தாய், நூறுவயது என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம்.

உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...

கார்பரேட் வியாபாரத்தை அழிக்க அவன் பாணியிலேயே செயல்படுவோம்...


பாஜக தமிழிசை க்கு செருப்படி...


பெருஞ்சீரக லெமன் டீ குடித்தால் இப்படி ஒரு விஷயம் நடக்கும்...


உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

டீத்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :

இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

பயன்கள் :

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது.

மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.

தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்...

வெள்ளை முடியா ? இதோ இயற்கை டை...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 33...


சில எளிய தியானப் பயிற்சிகள்...

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு....

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம்.

இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

அடுத்த வாரம் வரை இந்த தியானங்களைச் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....

வாங்கதே வாங்காதே ஹைபிரிட் பொருளை வாங்காதே...


நம்ம அரசாங்கம் நம்மை பிச்சகாரனா ஆக்காம விடமாட்டானுங்க...


தமிழகம் முழுவதும் உள்ள 23 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்; வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி..

சென்னை: தமிழகத்தில் 23 சுங்கச்சாவடிகளின் கட்டணம் சத்தமின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்ைகக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வில் ஆம்னி பஸ், லாரிகளுக்கு ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 374 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் 43 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1992ம் ஆண்டு போட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), சமயபுரம் (திருச்சி), மொரட்டாண்டி (விழுப்புரம்), வைகுந்தம் (சேலம்), நாதக்கரை (சேலம்), வீரசோழபுரம் (சேலம்) , ஓமலூர் (நாமக்கல்) மேட்டுபட்டி (சேலம்), பரணூர் (காஞ்சிபுரம்), அதூர் (செங்கல்பட்டு), வல்லவன்கோட்டை (தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), மணவாசி (திருச்சி), திருப்பரைத்துரை (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (விழுப்புரம்) உட்பட 23 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 45 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு கார், ஜீப் ஒரு தடவை செல்ல ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆனால், லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.160லிருந்து ரூ.165 ஆகவும். இலகுரக வாகனங்களுக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.250லிருந்து ரூ.265 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு சில சுங்கச்சாவடிகளில் கார், ஜீப் இரண்டு முறை செல்வதற்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து உரிய அறிவிப்பு வெளியிடாமல் சத்தமின்றி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த ஆகஸ்ட் 21ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வால், அத்தியாவசிய ெபாருட்களின் விலை உயரும். மேலும் லாரி தொழில் நஷ்டத்தில் இயங்கும் லாரி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்...

வைகோ வின் மதிமுக நாயுடு ஜாதிக்கட்சி கிடையாது...


வை.கோபால்சாமி நாயுடு ஜாதித் தலைவர் கிடையாது..

நாயுடு சமூகம் தெலுங்கு சமூகம் கிடையாது..

கட்டபொம்மன் தெலுங்கர் கிடையாது..

மதிமுகவில் உள்ள தெலுங்கர்களுக்கும், தெலுங்கர் வை.கோபால்சாமி நாயுடுவுக்கும் நாயுடு ஜாதிப்பாசம் கிடையாது..

எல்லோரும் நம்புங்க...

ஆனால்,

பாமக வன்னியர் கட்சி..
நாதக நாடார் கட்சி..

போங்கடா  வந்தேறி திருட்டு திராவிட பயலுங்களா...

கருப்பட்டியின் பயன்கள்...


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப் படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது...

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

பிரான்சுக்கு அருகாமையில் அதிசயமான தமிழர் பூமி...


ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி..

தமிழர்களுக்கு பரிச்சயம் இல்லாத இடம்..


தமிழர்கள் பலர் கேள்விப்படாத இடம்..

ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று..

சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்..


சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு..


பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதி..

உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும் வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…


விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..

சிலர் இலங்கையில் (Jaffna & Point Pedro) இருந்தும் குடியேறினார்கள்..

இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்..

ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக் கொண்டது..


இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்..

பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்..

இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்...

சித்தர் ஆவது எப்படி - 13...


ஒழுங்கு வடிவமே உண்மை: உண்மையே இறைநிலை...

ஒழுங்கு என பேசினாலே ஓட தொடங்கும் மனித இனம், ஒழுங்கற்ற மனதோடு வாழும் காரணத்தினால், ஒழுங்கு என்ற ஒன்றை சொன்னாலே முகம் சுழிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..

ஒழுக்கத்தோடு தீவிரமாக வாழும் மனிதனை உலகம் பெரும்பாலும் ஒதுக்கி வைத்து விடும்..

இல்லாவிட்டால் அவனை பைத்தியம், அல்லது பிழைக்கத்தெரியாதவன் என்ற கணக்கில் சேர்த்து விடுவார்கள்..

மிகுந்த ஒழுக்க உடையனோடு உறவு கொள்ள பலர் தயங்குவார்கள்.. அப்படி உறவு ஏற்படுத்திக் கொண்டாலும். ஒழுக்கம் உள்ளவனை ஒரு வேடிக்கை மனிதனாகவே கருதி பழகி வருவார்கள்..

ஒழுக்கமற்றவனால் கேடுகள் வராமல் இருக்க மட்டும் போதுமான ஒழுக்கத்தை போதிப்பார்கள்.. ஆனால் உயர்வான ஒழுக்கத்தை யாரும் போதிப்பதில்லை..

ஒழுக்கமற்றவன், தன் ஒழுக்கமின்மையை மறைக்க ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு போதித்து தப்பித்து கொள்வார்களே தவிர, தன் அளவில் ஒழுக்கமின்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்...

உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமின்மை ஓரிரு இடத்தில் இருந்தும் அதில் பலப்பட்டும் மரணத்தை தழுவி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்..

ஒழுக்கமின்மைக்கும் அழிவிற்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கிறது.. மிக மிக திடமாக இருக்கிறது.. பின்னி பிணைந்து இருக்கிறது.. பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு வடிவம்.. அதனால் அதன் ஆற்றலும் ஓர் மிக உயர்ந்த ஒழுங்கு வடிவமாக உள்ளது.. அதில் மிக சிறு ஒழுங்கின்மை வந்தாலும், மிக பெரிய பிரளயம் வந்து விடும்.. அதன் ஒழுங்கு தன்மையால் மட்டுமே உலகம் இன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது...

பிரபஞ்ச பேராற்றல் மிகவும் துல்லிதமான ஒழுங்கு தன்மையில் இருக்கிறது.. அந்த பேராற்றலில் மிக சிறு மாற்றம் ஏற்பட்டாலும். பல சூரிய மண்டலங்கள் எரிந்து சாம்பலாகி விடும்... அந்த பேராற்றலால் தான் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்று வாழ்கின்றன...

ஒழுங்கு தன்மை வாய்ந்த பேராற்றலில் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்றது என்னவோ உன்மைதான்.. ஆனால் அந்த உயிர் இனங்கள் ஒழுங்கு நிலையான பேராற்றலை அண்டி வாழாமல் ஒழுங்கு தன்மை அற்ற செயல் பாடு உடைய படைக்கப் பட்டவைகளை அண்டி வாழ தொடங்கியதே பெரும் தவறாய் போய் உயிர் நிலை சிதைந்து மரணத்தையும் அழிவையும் பெற்றது..

ஆம்.. உயிர்கள் படைத்ததின் ஒழுங்கு நிலை சாராமல் தன்னோடு படைக்கப் பட்டவைகளின் தொடர்பால் ஒழுக்கமின்மையை சார்ந்து சார்ந்து சீர் குழைந்து போய் கொண்டு இருக்கின்றன..

ஒழுங்கின்மையின் முடிவே மரணம்.. இதுவே முடிவான சத்தியம்... முடிவான முடிந்த உண்மை..

ஒழுங்கின் வடிவமாக உள்ள பேரண்ட பேராற்றலையும், பேரறிவையும் பெற வேண்டும் எனில் அதன் ஒழுங்கு தன்மைக்கு ஒரு உயிர் தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுது, அந்த உயிர் பேராற்றலையும் பேரறிவினையும் பெறும் பாக்கியத்தையும் பெற முடிகிறது..

ஆனால் உலகம் ஒழுங்கமின்மையிலிருந்து மீண்டும் மீண்டும் ஒழுக்க மின்மையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறது..

ஆறறிவு படைத்த உயிர்கள் அறிவு குறைந்து குறைந்து கடைசியில் ஓரறிவினையும் இழந்து அறிவே அற்ற நிலையில் கல்லாகி மண்ணாகி போகிறான்..

ஒழுங்கற்ற தன்மையை பிடித்துக் கொள்ள மிக மிக எளிதாக உள்ள நிலையில் ஒழுங்கு நிலை நோக்கி நகருவதற்கு மனிதனுக்கு இயலாமல் உள்ளது..

எல்லா உண்மை உபதேசங்களையும் கற்று அதில் பொய்மையை புகுத்துவதே மனிதனுடைய வேலையாக உள்ளது..

இன்றைய நிலையில் உண்மை தனித்து விடப் பட்டு இருக்கிறது.. அதனை அடையாளம் கண்டு கொள்ள எவரும் இல்லை போல் தோன்றுகிறது..

அதனை ஆன்மீகமும், பக்தியோகம் போன்ற அனைத்து யோகங்களும், இன்று மனித இனத்தால் பொய்மை கலக்கப் பட்டு, பலனற்று போய் கொண்டு இருக்கிறது..

இதனை ஒரு மனிதன் தன்னை ஒழுங்கு நிலைக்கு திரும்பும் போது மட்டுமே அத்தனையும் பொய் என உணர தொடங்கும் பொழுது ஞானம் அடைய தொடங்குகிறான்..

அந்த ஞானத்தில் பொய்மையை அடையாளம் கண்டு உண்மையை நோக்கி நகரத் தொடங்குகிறான்...

உண்மை ஒழுங்கு தன்மையின் முழு வடிவம் என உணர தொடங்கி ஒழுங்கினை கடைபிடிக்க தொடங்குகிறான்.. அவனே சித்தன்..

சித் என்றால் பொய்மையையும் உண்மையையும் அறிந்து கொண்ட உண்மை விளக்கம் பெறல் என்பதாகும்..

சத் சித் ஆனந்தம் என்பதை வள்ளலார், இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை அனுபவமாக சொல்லி இருக்கிறார்..

இதில் சித் என்பது விளக்கம் பெறல் என்பதாகும்.. பொய்மை உண்மையின் முழு விளக்கம் பெற்றவனே சித்தன்..

இப்படியான சித்தன் பொய்மையிலிருந்து விலகி இருக்க தொடங்குவதால், பொய்மை உலகம் அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை..

சித்தனை ஒரு நாளும் மனிதன் கண்டு பிடிக்க முடியாது..

சித்தர் தரிசனம் காண ஏதேதோ செய்கின்ற மனிதன், அத்தனையும் ஒழுங்கு தன்மை அற்றவை ஆதலால் ஒருநாளும் உண்மை சித்தனை காணவே முடியாது..

ஆனால் அவன் கண்டதாக அனுபவ பட்டதெல்லாம் என்ன வென்றால் பொய்மையிலே உழன்று மாண்ட மனிதனின் ஆவியே..

இன்று ஆவியுடன் பேசும் மனிதர்கள் உண்டு, ஆனால் உண்மை வடிவான இறைவனுடன் பேசி உண்மையான தீர்வு தருபவர்கள் எவரும் இல்லை..

அப்படியே தந்தாலும் அதனை கேட்பவர்கள் எவரும் இல்லை..

காரணம் பொய்மையாளர்களுக்கு பொய்மை தவிர வேறு ஒன்றும் புரிவதில்லை...

உண்மை விளக்கமான சித்தை பெற்றவர்களே சித்தர் என முடிவுடன் அந்த ஒழுங்கு தன்மை பெற உகந்த இடம் எது வென அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

தமிழர் பெருமைகள் உலகறியட்டும்...


அமைதியான மனதை அடைய என்ன வழி?


தியானம் தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது விடக்கா என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன்.

பாலி மொழியில் டக்கா என்றால் தர்க்கம் எனப்படும். விடக்கா என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும்.

அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம்.

இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது.

பிரமிட் தியானம் இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை ஆனாபானா சதி என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த விடக்கா என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் ஆனா என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. அபானா என்றால் வெளியே விடும் முச்சு. சதி என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை...

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது.

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.

தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான்.

இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே...

சிறுபான்மை மக்களை கொலை செய்தால் ரிவார்ட் மற்றும் அரசு பதவிகளை பெறலாம் இந்துத்துவா வெறியர்களின் ஆட்சியில்...


சோமாலியாவில், பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது...


சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் (Mogadishu) சஃபாரி விடுதி அருகே கேம்5 சந்திப்பில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில், அந்த விடுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

கட்டட இடிபாடுகள் மற்றும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் இதில் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பலர் அப்பாவிக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, யாரும் நுழைய முடியாவண்ணம் தடை ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால், பலியானோர் எண்ணிக்ரக மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுவரை, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்...