16/10/2017

சோமாலியாவில், பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது...


சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் (Mogadishu) சஃபாரி விடுதி அருகே கேம்5 சந்திப்பில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில், அந்த விடுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

கட்டட இடிபாடுகள் மற்றும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் இதில் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பலர் அப்பாவிக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, யாரும் நுழைய முடியாவண்ணம் தடை ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால், பலியானோர் எண்ணிக்ரக மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுவரை, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.