25/03/2018

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே...

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...

அதிமுக ஊழல் அரசே... இச்சட்டத்தை எப்போது கொண்டு வருவாய்..?


ஊட்டி மோயாற்றின் தண்ணீர் காப்போம்...


பிரபஞ்ச இரகசியம் - நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்...



நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும்..

அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும்..

எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான். 

உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள்.

உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.

நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள்.

அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள். 

உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும்.

உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம் பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும்.

அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள்.

ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்து விட்டு நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.

அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...

கார்பரேட் வியாபார இரகசியம்...


நாட்டில் வேற பிரச்சினையே இல்லையா?என்று நினைக்கும் நண்பர்களுக்காகவே இந்த பதிவு....


சில வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம்  மானூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தை தூர் வார வேண்டி ஒரு போராட்டம் நடந்தது. ஊரே குடும்பத்துடன் குளத்தில் குடியேறி பத்து நாட்களுக்கு மேல் ஒரு பெரிய போராட்டம் நடத்தினர்.பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய குளம் அது.மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட போராட்டம் அது.

இப்போது பெய்த புயல் மழையில் அந்த குளம் நிரம்பி தழும்பும் என்று நினைப்பீர்கள்.ஆனால் சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.
பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வதாரமான ஒரு குளத்தை ஏன் இந்த மக்களால் மீட்டெடுக்க முடியவில்லை ?

விவசாயம் காக்க முடிந்த அளவு உதவி செய்வோம் விவசாய நண்பர்களுக்கு...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


மனமும் நோயும்...


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரி செய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதே போல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும் போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது. உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர். ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள்...

தமிழா விழித்துக்கொள்...


பிரம்மத்தை நோக்கி - 1...


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம் தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

இனி செய்தித்தாள்களை வாங்காதீர்கள்...


திருச்சியை அதிரவைத்த மக்கள் அதிகாரம் அமைப்பினரின் போராட்டம்...


நெடுவாசல் முதல் காவிரி வரை துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 10.30 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணன், பாடகர் கோவன், அவரது குழுவினர் லதா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையில் திருச்சி ஒத்தகடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, பறை இசை முழங்க ஊர்வலமாக திருச்சி தபால் நிலையம் நோக்கி வந்தனர்.

இந்தப் போராட்டத்தால், தபால் நிலையம் முழுவதும் பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியை காப்போம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை என முழங்கியபடி, கோவன் பாடல் பாட, உற்சாகமாக வந்த ஊர்வலத்தில், குழந்தைகள்,பள்ளி சிறுவர்கள், சிவப்பு நிறக்கொடியை தூக்கிப் பிடித்தபடியும், உணர்ச்சி பொங்க கோஷங்கள் எழுப்பினர். மேலும் காய்ந்த ஓலைகள், பயிர்களைத் தாங்கியபடி வந்தனர். போலீஸ் கைது செய்வோம் என்றும், போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்புங்கள் எனப் போராட்டக்காரர்களுக்கு நெருக்கடிக் கொடுத்தனர். அதைக் கண்டு கோபம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,தலைமை அறிவிக்கும்வரை கலைந்து செல்லக்கூடாது. அப்படியே சாலையில் உட்காருங்கள் எனக் கூற மொத்தக் கூட்டமும் அப்படியே சாலையில் அமர்ந்தது.

தொடர்ந்து,குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே. நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு ஆணையம் அமைத்தார்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். கொளுத்தும் வெயிலில் அமர்ந்துகொண்டு போராட்டம் தொடர்ந்தது.

கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் ராஜு...

காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்கின்றன. தமிழகத்தை நாசக்காடாக்கிடவே சூழ்ச்சி செய்து, காவிரியைத் தடுத்து வைத்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்படியான போராட்டங்கள் வலுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீர் பங்கீடு செய்யவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, மோடி அரசு மற்றும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. சட்டத்தை நாடாளுமன்றம் உள்ளிட்டோரும் மதிக்கவில்லை. ஆனால் காவிரிக்காகவும், தமிழரின் உரிமைக்காகவும் கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக்கொண்டு போராடும் நம்மிடம் வந்து, போலீஸார் சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆனால் மக்கள் தெருவில் இறங்கி, கோட்டை வரை போராடினார்கள். அப்படியான போராட்டங்கள் இப்போதும் தொடரவேண்டும். காவிரி, நெடுவாசல் பிரச்னைகளில் தொடர்ந்து மத்திய அரசு மிதிக்கிறது. தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள். நாங்கள் ஸ்டாலினுக்கு சொல்ல விரும்புகிறோம். தமிழக நலனில் அக்கறையிருந்தால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்வது இருக்கட்டும், நீங்கள் சட்டமன்றத்துக்குள் சென்று எதையும் சாதிக்க முடியவில்லையே. தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யுங்கள். அப்படியாவது தமிழக உரிமைகளைக் காப்பாற்றுவோம் என்று முழங்கினார்.

அதைத் தொடர்ந்தது, பாடகர் கோவன் குழுவினர், ரதயாத்திரைக்கு எதிராகவும், காவிரிக்காகவும் எழுதப்பட்ட பாடல்களை பாடினர். போராட்டம் தொடர்ந்துகொண்டே போக, போலீஸார் டென்சன் ஆனார்கள். திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்தார். அதனையடுத்து போலீஸார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக 1200-க்கும் மேற்பட்டவர்களை, இருபதுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் ஏற்றிய போலீஸார், திருச்சி மாநகரில் உள்ள ஆறு மண்டபங்களில் அவர்களைத் தங்க வைத்தனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர், காவிரிக்காக நடத்திய போராட்டம் திருச்சியில் பெரும்பதற்றத்தை உண்டாக்கியது...

தமிழக ஊடகங்கள் எல்லாம் கார்பரேட் விபச்சார புரோகர்கள்...


நல்லூர் சுவாமி ஞானப் பாத தாசர்...


இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழிகளின் தோற்றத்திற்கானச் சான்றுகள் தமிழில் தான் கிட்டும்...

ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்...


சிலப்பதிகாரம்: சிலம்பு என்பது மகளிர்அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)

மணிமேகலை: ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)..

குண்டலகேசி: குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)..

வளையாபதி:  வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)..

சீவகசிந்தாமணி:  சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)...

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம்...


தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம்..

மொழி என்பது மனித வளர்ச்சியின் விரிவில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகைமொழியும் புரியாதவர்களுக்கு தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு உருவங்களைக் கீறியே புரியவைத்தான்.

அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். தமிழ் இலக்கணநூலான “யாப்பெருங்கல விருத்தியும்” படவெழுத்தை அதாவது உருவெழுத்தைப் பற்றிக் கூறுகின்றது.

பண்டைய தமிழர் எழுதிய உருவங்களைக் கொண்டு அவற்றின் பண்பு கெடாது சங்ககாலத்திற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் எழுத்தின் வரிவடிவங்களை உருவாக்கினர். அவ்வரிவடிவங்கள் அவர்களின் எண்ணக் கருத்துக்களை மிகஇலகுவாக எழுத உதவின.

அந்த வரிவடிவங்கள் ஒலிவடிவத்தையும் பெற்றிருந்தன. சங்ககாலப்புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என்று அவ்வரிவடிவங்களை வரையறுத்தனர். அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை ஒலிஎழுத்துக்கள் என்றும் நம் முன்னோர்கள் அழைத்திருக்கின்றனர்.

அவ்வுண்மையை கி.பி 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல் “மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து” எனச்சொல்வதால் நாம் அறியலாம். இதிலே வரும் “அணுத்திரள் ஒலி எழுத்து” எனும் சொற்பிரயோகம் கிடைத்தற்கரியதொன்றாகும்.

இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. அதாவது தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கிறது. தமிழருக்கு அறிவியல் தெரியுமா? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று.

இடிமுழக்கம், பெய்யும்மழை, வீசும்காற்று, சீறும் பாம்பு, கூவும்குயிலென உலகில் எத்தனையோ வகையான ஒலிகள் இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமேயானால் இந்த எல்லாவித ஒலிகளையும் நாம் வேறுபடுத்திக் கேட்பதற்கு அணுத்திரள்களே காரணமாகும்.

காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வின் போது அணுத்திரள்களின் அசைவினால் ஒலியலைகள் தோன்றுகின்றன. இந்த ஒலியலைகளில் உருவாகும் மிகநுண்ணிய வித்தியாசங்களால் நாம் வெவ்வேறுவகையான ஒலிகளைக் கேட்க முடிகின்றது. மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒலிவேறுபாட்டிற்கு முக்கிய காரணமாயிருப்பது அணுத்திரள்களேயாகும்.

மேலே குறிப்பிட்டவை போன்ற இயற்கை ஒலிகளோ அன்றேல் பட்டாசு வெடித்தல், கை தட்டல் போன்ற செயற்கை ஒலிகளோ இன்றும் அறிவியல் மூலம் மொழியாக்கப்படவில்லை.

நன்னூல் சொல்வது போல் மொழிக்கு முதற்காரணமாக இருப்பது எழுத்துக்களின் ஒலியே. அந்த எழுத்துக்களின் ஒலிக்குக் காரணம் அணுத்திரளே. அதாவது அணுக்கூட்டத்தின் சேர்க்கையால் எழுத்தின் ஒலி உண்டாகி அவற்றின் சேர்க்கையால் மொழி பிறக்கின்றது.

இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே, இன்னெரு சூத்திரத்தில் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என தமிழ் எழுத்தின் வடிவம் பற்றிக் கூறுகின்றது. பண்டைக்கால (தொல்லை) வடிவத்துடனேயே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச் சொல்வதால் எழுத்துக்கு வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் பழைமையானது என்பது பெறப்படும்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை “உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலையி பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய….” எனக் கூறியுள்ளார். எழுத்துக்கள் யாவுமே தொப்பூழில் இருந்து உண்டாகும் காற்றில் தோன்றி தலையிலும் தொண்டையிலும் நெஞ்சிலும் நின்று பல், இதழ், அண்ணம், நாக்கு போன்ற உறுப்போடு உறுப்பு சேர்வதால் பிறக்குமாம். தொடர்ந்து உயிரெழுத்துக்களின் பிறப்புப்பற்றிக் கூறுமிடத்தில் “அவ்வழி பன்னீருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலே சொன்னபடி அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னிரெண்டு உயிரெழுத்தும் தொண்டையில் நின்ற காற்றால் ஒலியைப் பெறுகின்றதாம். இவ்விதம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலிஎழுத்துக்களின் வாயிலாக மிகவிரிவாக தொல்காப்பியம் கூறுகின்றது.

ஒலியெழுத்து வரியெழுத்தாக மாறிய பின்னர் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் “ΛΛΛ” இந்த உருவெழுத்தானது இப்படி வரியெழுத்தாக மாறி பலப் பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் “∆” என்னும் எழுத்தாக வந்துள்ளது.

குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவை கருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதினர். இப்படி களிமண்தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வது மிகக்கடினமான காரியமாக இருந்தது. தமிழர்களின் கல்வியறிவு மேலும் மேலும் வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. அத்துடன் கல்வியறிவு அரசன் தொடக்கம் சாதாரண குடிமகன் வரை பெரும் நகரமாயினும் குக்கிராமமாயினும் எங்குமே பரவியிருந்தது. இந்த உண்மையை சங்ககாலப் புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களால் அறியலாம்.

இவ்வாறு தமிழர்கள் கல்வியில் மிகஉன்னத நிலை அடைந்ததால் தாம் எழுதியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சங்கப் புலவர்களின் அவைக்கும், அரசசபைகளுக்கும் எடுத்துச்சென்று பரிசுபெற ஏதுவாக பனை ஓலையில் எழுதத் தொடங்கினர். நாம் புத்தகங்களை எடுத்துச் செல்வது போல் அவர்கள் ஓலைச் சுவடிகளை எடுத்துச் சென்றார்கள்.

களிமண்தட்டு, செம்புத்தகடு, போன்றவற்றில் கோணல்களாகவும் சதுரங்களாகவும் எழுதிய வரியெழுத்தை பனை யோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓலை கிழிந்தது. பனைஓலை மிக இலகுவாகக் கிடைத்தபோதும் அதில் எழுதுவது மிகக்கடினமாக இருப்பதைக் கண்டனர்.

எழுதப்படும் பொருளைப் பொறுத்தும் எழுத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர். பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றவாறு எழுத்தை மாற்றி அமைத்தனர். அப்படி அவர்கள் மாற்றியமைத்த எழுத்தை நாம் வட்டெழுத்து என அழைக்கின்றோம். பண்டைய தமிழர்கள் அவ்எழுத்தை கி பி 2ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை எழுதி வந்துள்ளனர். அதற்கான கல்வெட்டாதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. பண்டைய நாணயங்கள் நடுக்கற்கள், பானையோடுகள், ஏட்டுச்சுவடிகள், கோயிற்சுவர்கள் யாவற்றிலும் இவ்வட்டெழுத்து காணப்படுகின்றது.

கிரே என்வர் மாலைதீவின் வட்டெழுத்தை பண்டைய தமிழரின் வட்டெழுத்தை தழுவிய அல்லது சிறிது மாற்றியமைக்கப்பட்ட எழுத்து எனக்கூறியுள்ளார்.

பண்டைய தமிழ் வட்டெழுத்தின் தாக்கத்தை மாலைதீவு மட்டும் அல்லாமல் பர்மா, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, யாவா போன்ற உலகின் பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் காணலாம்.

வட்டெழுத்தின் காலத்திற்கு முன்பிருந்தே சங்கத்தமிழர் தாம் எழுதிய எழுத்தை இரண்டு வகையாகப் பிரித்து பெயரிட்டு அழைத்தனர்

1. கோலெழுத்து
2. கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். அதாவது வண்ணமையில் தோய்த்த தூரிகை, எழுதுகோல் போன்றவற்றைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மேலோ எழுதுவதை கோலெழுத்து என்றழைத்தனர்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை “எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல்” எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம்.

கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்து. (கண் என்பதற்கு குழி என்ற கருத்தும் இருக்கின்றது.)

ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்கள் என்றும் கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. “வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம் தானே.. அதுபோல் அன்றும் எழுதியிருக்கிறார்கள்...

மாற வேண்டியது நாம் தான்...


1956க்கு முன் வந்தவர்களை எல்லாம் தமிழ் தேசியர்களாகக் கருத வேண்டுமாம்...


சிலர் தமிழ் தேசியம் என்ற பெயரில் இயங்குபவர்கள் சொல்கிறார்கள்.

சரி 1956க்கு முன் சென்னை மாகாணப் பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் வலுக்கட்டாயமாக ஆந்திராவிலும் கர்நாடகவிலும் கேரளாவிலும்  மாநிலப் பிரிவினை என்பதன் பேரால் ஆந்திரர்களாகவும் கன்னடர்களாகவும் மலையாளிகளாகவும் மாற்றப்பட்டு விட்டார்களே..

இதற்கு நவீன தமிழ் தேசியர்களின் பதில் என்ன?

நாட்டு நடப்பு தெரிய தான் செய்தித்தாள்களை வாங்குகிறோம்.. ஆனால் இன்று அவர்கள் அதை திரித்து தான் கூறுகிறார்கள்...


அவர்களின் செய்தித்தாள்களை புறக்கணிப்போம். அதை வாங்குதலை தவிருங்கள்...

இன்னமும் இந்த விபச்சார செய்தித்தாள் மற்றும் ஊடகங்களை நம்பி முட்டாளாகவே இருக்கப் போகிறீர்களா.?


விவசாயிகள் போராட்டம் ஆரம்பம்...


10,000 விவசாயிகள் திரண்டு கீழப்பழுவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்.. மருதையாற்றின் குறுக்கே அணைகட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடக்கோரி 25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தும் கண்டு கொள்ளாததால் 50000  ஏக்கர் நிலப்பரப்பில் பாசனம் பெறும் விவசாயிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும் மாபெரும் சாலைமறியல்..

கோரிக்கைகள்...

இந்த திட்டம் தொடர்பாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் கடந்த 23/03/2018 அன்று விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த திட்டம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இந்த திட்டம் குறித்து பயன்பெறும் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தண்டோரா மூலம் தகவல் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் மற்றும் செய்தி நாளிதழில் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

தலைமை.

தங்க சண்முக சுந்தரம்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவனர், தலைவர்.

முன்னிலை.

மூ.மணியன்,
அரியலூர் மாவட்ட தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
பி.பிச்சைப்பிள்ளை
அரியலூர் மாவட்ட து.தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
கு.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட து.தலைவர்.
தங்க. தர்மராஜன்,
மாவட்ட தலைவர்,
டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு
அம்பேத்கர் வழியன்
விவசாயிகள் சங்கம்.
மா.தங்கராசு, மாவட்ட தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
இராமச்சந்திரன், கிராம கமிட்டி தலைவர்,
தே.தெ.ந.இ.விவசாயிகள் சங்கம்.
தங்க சரவணன், மாநில செயலாளர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
பஞ்சநாத கணபதி, மாவட்ட செயலாளர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
தங்க. ஜெயபாலன் அரியலூர் மாவட்ட து.செயலாளர், தே.மு.தி.க.
மு.வரதராஜன், பொருளாளர், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
தங்கமலை மாவட்ட செ.கு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
ஜெயபால் மா.து.செயலாளர்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.
துரை.வைத்தியநாதன், கரும்பு விவசாயிகள் சங்க மா.து.தலைவர்

இவண்:
அனைத்து விவசாயிகள் சங்கம்...

திருட்டு விபச்சார ஊடகங்களே நம் முதல் எதிரி...


எகிப்து நாட்டு தாலமி (கி.பி.119 இல்) தனது பூகோள நூலில்...


தமிழர் நாகரிகமே உலகில் சிறந்த நாகரிகம். தமிழர்கள் வடநாட்டு சந்திரகுப்தர் காலத்திலேயே கிரேக்க மன்னர்களோடு கடல் வாணிபம் செய்தனர். முசிறி, தொண்டி போன்ற துறைமுகங்களில் நேரில் கண்டறிந்தேன்...

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?


முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவது தான் கெளரவம்..

ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table).... இது சரியா தவறா?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது.

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது...

மாற்றம் என்பது நம்மிடம் இருந்தே தொடங்குவோம்...


உணவே மருந்து...


அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து...

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்... இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .

இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால் நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர் பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....

நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, சுண்ணாம்புச்சத்து, பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும், தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்.....

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்... உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு...

ஆழ்மனம்.. வெளிமனம்...


மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு.

கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி, தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்ன தான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியான நிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது.

எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல் தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக் கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக் கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.

தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்.

நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும்.

நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள்...

நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

இந்த ஓநாய்கள் தான் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் மூலம் ரத்தம் குடிப்பவைகள்...


ஸ்டெர்லைட் ஆலையை குஜராத்  கட்ச் துறைமுகத்தின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?

எங்கோ கிடைக்கும் தாமிரதாதுவை எம் தூத்துகுடி துறைமுகத்தில் கொண்டு வந்து எம் குடிநீர் கொண்டு அலசி( பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை) அந்த தண்ணீரையும் மண் கழிவுகளையும் (1 டன் தாமிரம் எடுக்க 10 டன் கழிவு உண்டாகும்) கந்தக ஆக்ஸைடையும் காட்மியம் போரான் கந்தக அமிலத்தையும் கடலிலும் நிலத்திலும் கொட்டி எங்கள் நிலத்தை கழிப்பறை ஆக்கிவிட்டு லண்டன் மாநகரில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த விஷக்கிருமிகளை விரட்டியடிக்கும் வரை ஓயக்கூடாது.. நம் போராட்டம்...

வீறு கொண்டு எழுவோம்... நாளை நம் வீட்டின் அருகே ஒரு அனில் அகர்வால் முளைக்கலாம்...


தமிழ்த் தேசியம் என்றால் என்ன..?


மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது.

உதாரணமாக, அல்சீ(ஜீ)ரியாவில் இருந்து இந்தோனேசி(ஷி)யா வரை உள்ள முசு(ஸ்)லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம்.

உருது மொழி பேசுபவர்கள் பாகிசு(ஸ்)தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முசு(ஸ்)லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல.

ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது.

ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான். மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரசியா, யப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஆனால், யப்பானியர்கள் யப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம்.

இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.

தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது.

நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை.

இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம்.

தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்...

இப்போ தூத்துகுடி மாவட்டத்துல நச்சு ஆலை ஸ்டெர்லைட்டுக்கு எதிரா இதான்டா நடந்துட்டு இருக்கு...


தமிழர் நாம் தமிழர் நிலத்தை காப்போம்...

வேம்பு மருத்துவ நன்மைகள்...


வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்
கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப
எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்
வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப
எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர்.

சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று
விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம்
பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக
சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.

காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்...

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

மருத்துவப் பண்புகள்...

இலை..

1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ - பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம் - தோல் நோய் தீரும்.

விதை...

1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

நெய்...

1)துஷ்ட புண்கள் தீரும்.

2)ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை...

1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

பிசின் - மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள...

பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில்
சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல்
பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப்
பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம்..

என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல்
உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது...

சென்னையில் போதையில் நடுரோட்டில் ஓர் காவல் அதிகாரி... மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போல...


திருட்டு திராவிடத்தை ஒழிப்போம்...


தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ ,
கன்னடர்களோ,
மலையாளிகளோ என்றுமே
தங்களை திராவிடர்கள் என
அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்று கொண்டதும் இல்லை..

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

சிந்தனை செய்ய ஆரம்பியுங்கள்...


அமித்ஷா பொய் பேசுவது அவர்களின் சுபாவத்தை காட்டுகிறது - ஆந்திர முதல்வர் பதிலடி...


அந்திர முதல்வர் தங்களது கூட்டணியிலிருந்து விலகியது ஒரு தலைபட்சமானது எனவும். தெலுங்கு தேசம் கட்சி பொய் கூறுவதாகவும் அமித்ஷா கூறியிருந்த நிலையில் அவருக்கு ஆந்திர முதல்வர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்...

நம்முடைய அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான சரியான தருணம்.. அடையாளமில்லாமல் வாருங்கள், நம் அடையாளத்தை மீட்டெடுப்போம்...


கென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது...


குறிப்பாக 1850 களில் காலத்தில் பிரித்தானிய அரசால் பனிக்கமர்த்திய தமிழர்கள்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும்...


தமிழ் தேசியம் என்பது தமிழர் நாட்டை தமிழன் ஆள்வது மட்டுமே அல்ல..


தமிழர் நாட்டை தமிழன் ஆண்டாலும் தமிழன் இந்தியத்தின் அடிமை தான் என்பதை மறவாதீர்கள்..

தமிழனுக்கான தனி தமிழர் நாடு உருவாக்குவது என்பதே உண்மையான தமிழ் தேசியம்...

நமது அதிகாரத்தின் வலிமையை காட்ட வேண்டிய தருணம்.. புறப்படுங்கள் தூத்துக்குடி மக்களுக்காக...


குற்றம் 23 – இலுமினாட்டி அரசியல்...


சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களை நான் பொறுமையாக கவனித்து வருகிறேன், அதற்கு ஒரே காரணம் உலகை ஆளும் இலுமினாட்டிகள் தங்களது ரகசியங்களை தற்போதைக்கு திரைப்படங்கள் மூலமே பரிமாறிக் கொள்கிறார்கள்.

தற்சமையம் இலுமினாட்டிகளின் பார்வை தமிழர்கள் மீது தான் உள்ளது என்பதை சமீபத்திய தமிழக அரசியல், பிரச்சனைகள் மூலம் அறியலாம்.

தமிழ் திரைத்துறை தற்சமையம் நிறைய இலுமினாட்டிகளின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

அதில் ஒன்று தான் இந்த குற்றம் 23.

இந்தப்படம் முழுக்க முழுக்க இலுமினாட்டிகளின் திரைக்கதை தான் , தயாரிப்பும் அவர்களே , தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டுமே வெள்ளை குதிரைகளை இலட்சனையாக கொண்டுள்ளன.

ஜெயலலிதா கட்டிய குதிரை சிலை , மற்றும் தமிழ்நாடு குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் இலட்சனை என்ன என்பதையும் இங்கே பொருத்தி பாருங்கள். எல்லாம் வெள்ளை குதிரை தான்.. ஆம் குதிரை வணிகத்தின் சின்னம்..

சரி படத்திற்கு வருவோம், கதாநாயகனின் முதல் காட்சியில் அவன் அணிந்து வரும் சட்டையில் G என்ற ஆங்கில எழுத்து உள்ளது , இது இலுமினாட்டிகளின் எடுபுடி வேலைகளை செய்யும் ப்ரீ மேசன்களின் சின்னம்.  சரி இது ஒரு எதார்த்தமான ஒன்று என்று எடுத்துக் கொள்வோம்...

படத்தின் இடைவெளியில் கதாநாயகனின் ஒரு கண்ணை மட்டும் காட்டி முடிப்பது , பேப்பர் வெயிட் என்ற பெயரில் இலுமினாட்டிகளின் பிரமிட் (pyramid)  சின்னத்தை வேண்டும் என்றே காட்டுவது என பல இலுமினாட்டி அடையாளங்கள் இந்த படத்தில் உள்ளது...

மற்றும் படத்தின் வில்லனுக்கு நீல கண் , தமிழகத்தில் யாருக்குமே அமையாத ஒரு மரபியல் கூறு .... நீலகண் கொண்ட வில்லன்..

சரி படத்தின் பெயருக்கு வருவோமே .. இந்த 23 என்பது இலுமினட்டிகளுக்கு ஒரு வேண்டப்பட்ட எண்.. இது மனித கிரோமோசோம்களின் எண்ணிக்கையை குறித்தாலும் , இந்த படத்திற்கு இந்த பெயர் வைக்க இன்னும் நிறைய தொடர்பு உண்டு. உலக அளவில் 23 என்ற எண்ணில் பெயர்கொண்டு நிறைய திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இல்லுமினாட்டிகளின் ஒரு மாபெரும் சதித்திட்டமான 911 தாக்குதல் 2001 ஆம் ஆண்டு நடந்தது , 9+11+2+0+0+1= 23 , உலக புவி மையஅச்சு 23 டிகிரி தான்.. இன்னும் பல.. இவைகள் 23 ஐ ஒரு முக்கிய எண் ஆக்குகிறது , எனிக்மா 23 (enigma 23) என்று இணையத்தில் தேடி பாருங்கள் உங்களுக்கே இந்த எண்ணின் ரகசியங்கள் புரியவரும்.

தமிழகத்தில்  உள்ள அணைத்து ஆண்களையும் , ஆண்மையற்றவர்களாக மாற்றிவிட்டு , குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் அப்படியே பெத்துக்கிட்டாலும் அது உன் குழந்தையாக  இருக்க நாங்க விட மாட்டோம், உனக்கு குழந்தை வேணும்னா போய் தத்து எடுத்துக்கோ .. இவ்வளவு தான் இந்த படத்தில் இலுமினாட்டி தமிழக ஆண்களுக்கு சொல்லும் மறைமுக உளவியல் கருத்து..

பெண்ணே உனக்கு குழந்தை இல்லைனா யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க , உனக்கு குழந்தை பெத்துக்க ஆண் தேவையில்லை ,உனக்கு எப்படி பார்த்தாலும் அது வாரிசு தானே ?

அதனால் குழந்தை இல்லை என்று வருத்தப்பட வேண்டாம் , எப்படியும் குழந்தை வேண்டும் என்றால் அப்பன் யாருன்னு தெரியாத குழந்தைய பெத்துக்கோ .. இவ்ளோ தான் தமிழக பெண்களுக்கு இப்படம் சொல்லும் மறைமுக உளவியல் கருத்து .

மற்றும் குழந்தை வளர்ப்பு என்பது ஏதோ மிகக் கடினமான செயல் போல படத்தில் இரண்டு மூன்று இடங்களில் வழிந்து சொல்லப்படுகிறது , இதுவும் ஒரு உளவியல் தாக்குதல் .. மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வரனுமாம் ..

இவர்கள் தமிழ் நாட்டில் மட்டும் மது கடைகளை அரசாங்கத்தை வைத்து திறக்க விட்டார்களோ , எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக கொடுத்தார்களோ .... அப்போவே தெரியும் தமிழக ஆண்களை ஆண்மையற்றவர்களாக மாற்ற திட்டம் தீட்டிவிட்டார்கள் என்று.

இயற்கையில் ஒரு உயிரின் அடிப்படை நோக்கம் தனது மரபை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துதல் ஆகும்.

அதற்க்கு ஒரு சில நிபந்தனைகளோடு இயற்கை வளிமையான மரபுகளை மட்டுமே அடுத்தத் தலைமுறைக்கு கடத்தும் , இதற்கு பெயர் இயற்க்கை தேர்வு  (natural selection ).

இயற்கைதேர்வுக்கு முரணாக ஒரு சில பண்புகளை மட்டுமே செயற்கையாக கடத்தி அடுத்தத் தலைமுறையை உருவாக்குதல் தேர்ந்தெடுத்த வளர்ப்பு  (selective breeding).

அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் மனிதன் பயன்படுத்தும் அத்துணை வீட்டு விளங்குகளும் இவ்வாரான தேர்ந்தெடுத்த வளர்ப்பு  மூலம் உருவாக்கப்பட்டதே..

இவ்வாறு உருவாக்கப்பட்ட விளங்குகள் மனிதனின் துணை இன்றி மடிந்துவிடும்.
காரணம் அவைகள் மனிதன் உருவாக்கிய அடிமை இனங்கள்.

இப்போ மனிதனையே தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் உருவாக்க திட்டமிட்டு நடைமுறை படுத்தியும் வருகிறார்கள் செயற்கை கருத்தரிப்புமுறை மூலம்.

இதனால் உருவாகும் அடுத்தத் தலைமுறை விடுதலை சிந்தனை அற்ற அடிமை இனமாக உருவாக்கப்படுவார்கள்.

மனிதனின் மரபணு (genome) முழுமையாக கண்டறியப்பட்டாகி விட்டது, இதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடல்கூறு , மன கூறு இரண்டையுமே தீர்மானிக்க முடியும். உடம்பு சரி மனம் எப்படி என்கிறீர்களா ?

உலகில் பல வகை நாய்கள் உண்டு அதில் வேட்டைக்கு , கோவத்துக்கு , துனிவுக்கு , மோப்பசக்திக்கு , அன்புக்கு , அறிவுக்கு என்று பல்வேறு வகைகள் தனித்தனியாக மனிதன் முன்பே உருவாக்கி உள்ளான் . இதுவும் தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் தான்.

இதே முறை மனிதர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படும். அதற்கு பெயர் யூஜெனிக்ஸ் (Eugenics), மேலும் தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடவும் .

இதன்மூலம் போர்வீரன், அறிவாளி , கூலி , எஜமானன் என்று நான்கு விதமான மனித குணங்கள் கொண்ட விடுதலை உணர்வற்ற மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்கை இருக்காது .. எல்லாம் சமூக வாழ்க்கை மட்டும் தான்.

இன்னும் நிறைய அபாயங்கள் இதனுள் அடக்கம். இவர்கள் அனைவரையுமே ஒரே ஒரு குடும்பம் (bloodline) ஆளும் .  ஒரு நவீன அறிவியல் வர்ணாஸ்ரமம்..

இவை எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்த முதலில் இயற்கைத் தேர்வை நிறுத்த வேண்டும் , அதற்கு முதல் ஆண்களை மலடாக்க வேண்டும் . குடும்ப வாழ்வியலை சிதைக்க வேண்டும் , அதற்கு பெண்ணியம் பேச வேண்டும் , ஆணுக்கு பெண் எதிரி என்ற சிந்தனையை பெண்ணிற்கு புகுத்த வேண்டும் .இப்படி அவர்கள் இலட்சியத்தை அடைய நிறைய படிநிலைகள் உண்டு..

தமிழர்களை இந்த இயற்கை தான் காக்க வேண்டும்.

தமிழக ஆண்களே மது குடிப்பதை முதலில் நிறுத்தவும் . சிந்திக்க ஆரம்பிக்கவும்.. போர் காலம் நெருங்கி விட்டது...

தூத்துக்குடி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்...


பழந்தமிழர் அளவைகள்...


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்).

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்...

திருட்டு விபச்சார ஊடகங்களே மக்களின் முதல் எதிரி என்பதை புரிந்துக்கொள்...


இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல.. துருக்கி.. ஆய்வில் கண்டுபிடிப்பு...


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும். அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது. கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது. அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா' என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும் போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும் வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்' (Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின் மொழியில் 'மதேரி' (Materi) எனவும் அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் வேர்ச்சொல் 'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து பிறந்தவை.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக் குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன் மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).

இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது.

உதாரணம்: 'UPPER' எனும் ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.

மேலும், தமிழுடன் ஒப்பிடும் போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ் மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது.

எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

இந்த கண்டுபிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்...

திமுக கோடி கோடியாய் கொள்ளை அடித்து எத்தனை தீவுகள் வாங்கினாலும்...


தொண்டர்களின் கோமனத்தில் இருக்கும் காசை புடுங்காமல் விடமாட்டார்கள்.... வசூல் வேட்டை...

சீசெல்சு தீவில் தமிழர்கள்....


சீசெல்சு தீவு, கிழக்காப்பிரிக்காவில் உள்ள மொம்பாசாவிற்கு 1000 மைல் கிழக்கிலும்; மடகாஸ்கருக்கு ஆறு நூறு மைல் வடகிழக்கிலும் 92 தீவுகள் அடங்கிய கூட்டமாகும். இது இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நிலப்பரப்பு 171 சதுர மைல்களாகும். மாகித் தீவின் பரப்பளவு மட்டும் 57 சதுர மைல். எந்த இடத்திலும் இத்தீவின் அகலம் ஐந்து மைல்களுக்கு மேல் இல்லை. மாகியில்தான் சீசெல்சின் தலைநகரம் விட்டோரியா உள்ளது.

தமிழர் குடியேறிய வரலாறு...

புதுச்சேரியிலிருந்து இத்தீவுக்குத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். 1770 ஆம் ஆண்டு 28 பேர்கள் சென்ற முதல் குடியேற்றக் குழுவில் 15 வெள்ளையர், 7 கறுப்பரான அடிமைகள், 5 தமிழர் சென்றதாக க. சச்சிதானந்தம் கூறுகிறார். அவர்கள் வருமாறு: ஆச்சாரி, முத்தையா, குமார்மீனாட்சி, கோவிந்தன், தொமினிக்.

1783-84 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக வந்து குடியேறினர். பெரும்பாலோர் மொரீசியஸ், ரியூனியன் வழியாகவும், சிலர் நேராக புதுச்சேரித் துறைமுகத்தின் வழியாகவும் சீசெல்சுத் தீவுக்கு வந்து குடியேறினர். தஞ்சாவூர், சிதம்பரம், மாயவரம், காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி புதுச்சேரி வழியாக சீசெல்சு தீவுக்கு வந்தார்கள்.

1810-ஆம் ஆண்டு இத்தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிலும் தமிழர்கள் பெருமளவில் வந்தனர்.

தமிழரின் இன்றைய நிலை...

சீசெல்சில் இன்றுள்ள மொத்த மக்களுள் இந்தியர் எனக் கணிக்கப்படுவோர் 5 விழுக்காட்டினர் மட்டுமே. இவர்களுள் 10-15 குஜராத்திக் குடும்பங்களைத் தவிர எஞ்சியவர் யாவரும் தமிழர்களே. சுமார் 7500 தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறலாம்.

ஆனாலும் தமிழ்ப் பெயர்கள் தாங்கிய சீசெல்சு மக்களின் தொகை 30 விழுக்காடு வரை இருக்கலாம்; சுமார் 17,000 திருமணங்கள் சீசெல்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 770 திருமணங்கள் தமிழ்ப் பெயர் உடைய மண மகனையோ, மணமகளையோ கொண்டன என்கிறார் க. சச்சிதானந்தம்.

சமயம்...

தமிழர்கள் வீடுகளிலேயே வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். 1984-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் நாள் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் இருக்கும் குவன்சி தெருவில் ஒவ்வொரு ஞாயிறும் காலை 8 மணிக்கும், மாலை 7 மணிக்கும் வழிபாட்டு முறைக் கூட்டம் கூடும். ஞாயிறு காலையிலும், விசேச நாட்களிலும் விநாயகர், நடராசர் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப்படும்.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, திருவிளக்குப் பூசை, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கந்தசஷ்டி, திருவெம்பாவை நாள், தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ்ப்புத்தாண்டு முதலியவற்றை இச்சங்கம் கொண்டாடுகிறது. 1985-ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக நிலம் இச்சங்கத்தினால் வாங்கப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள்...

தமிழர்கள் சீசெல்சு சென்ற காலத்தில் பெண்களை அழைத்துச் செல்லாததால் ஆப்ரிக்க பெண்களையே தமிழர்கள் மணந்தனர். அதனால் மொழியை இழக்க வழி ஏற்பட்டது. இருந்தாலும் தமிழர் என்பதற்கடையாளமாக இருப்பது சாதி பெயர்தான். ஆசாரி, செட்டி, பிள்ளை, நாயக்கன், படையாட்சி என்ற சாதி வால்கள் இல்லாத தமிழர் எண்ணிக்கை குறைவு.

இவர்களில் பிள்ளை, செட்டி இரண்டும் மிகவும் புழக்கத்தில் உள்ளன. சாதிப் பெயரல்லாத தமிழரை ஆப்ரிக்கராகவோ, பிரஞ்சுக்காரராகவோ கருதுவார்கள். வெள்ளைக்கார குடும்பங்கள் கூட தம் மூதாதைத் தமிழரின் சாதிப் பெயர் பெருமையைப் பேசி மெய் சிலிப்பார்கள் என்கிறார் க. சச்சிதானந்தம்.

சீசெல்சு தமிழ் சைவ, வைணவக் குடும்பங்களில் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகள் அனைத்தும் கத்தோலிக்க முறையிலேயே நடத்தப்படுகின்றன.

வீடு...

சீசெல்சு தமிழர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள சிற்றூர்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடிசை மிகவும் எளிமையானவை; பனை ஓலை வேய்ந்த கூரைகளை உடையவை. உள்ளும் புறமும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.

உணவு...

நம் நாட்டில் உள்ள காய்கறிகள் எல்லாம் மாகியில் கிடைக்கின்றன. அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நிறையப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு குடிசையைச் சுற்றிலும் பெரும்பாலும் தோட்டம் உண்டு. இத்தோட்டத்தில் காய்கறிகள் பயிராகின்றன. இறைச்சிக்காகப் பன்றிகளையும், கோழிகளையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிறைய வளர்க்கின்றனர்.

செய்தித் தொடர்பு...

வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலிபரப்புகள் உண்டு. சீசெல்சு இந்துக் கோயில் சங்கத்தின் உறுப்பினர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் சீசெல்சின் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களை வீடியோவில் கண்டு வருகின்றனர்.

தமிழ்மொழியின் நிலை...

இந்துக் கோயில் சங்கத்தால் தமிழ்மொழி வகுப்புகள் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் 11 மணி வரை நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் இல்லை. தமிழும் பேசுவது குறைந்து கிரியோலே வீட்டு மொழியாகி உள்ளது. மு.நடேசன், பழனி, சோதி மாணிக்கம் போன்றவர்கள் தமிழினிமையுடன் கவிதை எழுதி வருகின்றனர்.

அமைப்பு...

இத்தீவிலுள்ள பெரும் அமைப்பு இந்துக்கோயில் சங்கமாகும். இது சமயம், பண்பாடு, மொழி, கலை நிகழ்ச்சிகளை இங்குள்ள தமிழர்களிடம் வளர்த்து வருகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் கிளை இங்குள்ளது. அதில் ஜி.எம்.ஆர். பிள்ளை, கண்ணா படையாச்சி முதலியோர் உள்ளனர்.

தமிழர் சாதனைகள்...

1789-இல் ரியூனியனிலிருந்து அரசு சார்பில் வந்தவர்-இராமலிங்கம். இவரைப் போன்றவர்கள் அரசு நிருவாகத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தீவு, சுதந்திரம் பெற்ற பிறகு அமைத்த ஆட்சியில் 1977 ஆம் ஆண்டு திரு. செட்டி என்பவர் அமைச்சராக இருந்துள்ளார்.

வணிகம், தொழில் புரிவோர் விபரம்...

1864-75 காலக்கட்டத்தில் திரு. நாயக்கன் என்பவர் விக்டோரியா நகரத்தின் பெரும்பகுதி நிலவுரிமையாளரானார். வணிக முன்னோடியான இவருக்குப்பின் திரு.கந்தசாமி, திரு.பிள்ளை, ஆகியோர் சிறப்பாக வணிகத்தில் விளங்குகின்றனர். சீசெல்சு தீவில் உள்ள வியாபார நிறுவனங்கள் தமிழர் பெயரிலேயே இருக்கின்றன.

குறிப்பாக தஞ்சையில் இருந்து சென்ற நாயுடு, பிள்ளை, படையாட்சி, செட்டி முதலியவர்கள் வசம் வணிக நிறுவனங்கள் உள்ளன. எல்லா கிராமத்திலும் தமிழரால் நடத்தப்படும் கடை இருக்கும். துணி ஏற்றுமதி, இறக்குமதி, வியாபாரம், உணவு, வீட்டுப் பாவனைப்பொருள்கள் வியாபாரம் தமிழரால் செய்யப்படுகின்றன. மாகித் தீவில் உள்ள மிகப் பெரிய வணிகக் கடையை வைத்து நடத்துபவர் ஒரு தமிழரே ஆவார்.

முருகன் ஸ்டோர், பாலன் ஸ்டோர்ஸ், ஸ்வாமி ஸ்டோர்ஸ், சேகர் ஸ்டோர்ஸ், மோகன் இந்து ஷாப்பிங் சென்டர், சக்தி ஸ்டூடியோ போன்ற பெயருடைய கடைகளை விக்டோரியாவிலும் பிற ஊர்களிலும் காணலாம்.

ஏர் இந்தியா விமானம் சீசெல்சு வழியாக மொரீசியசு செல்வதால், தமிழ் வியாபாரிகள் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். பல பொருள்களைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து விற்பனை செய்கின்றனர்.

1974-81 காலகட்டத்தில் சீசெல்சு வந்த தமிழர்கள் அனைவரும் தொழில் நுணுக்கப் பணியாளர்கள். இவர்கள் இங்கு தொழில்துறை, தொழில் நுட்பத்துறை, மேலாண்மை, நிர்வாகம், எழுத்தர், பொறியியல் போன்ற துறையில் பணியாற்றி வருகின்றனர்...

அதிகாரத்தின் காதில் எங்கள் புரட்சி குரல் ஒலிக்கட்டும்... மூடு ஸ்டெர்லைட் ஆலையை...


கறிவேப்பிலை ஆச்சரியமூட்டும் தகவல்கள்...


கறிவேப்பிலை இருவகைப்படும். நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக ்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட...

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய...

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்...