25/03/2018

நாட்டில் வேற பிரச்சினையே இல்லையா?என்று நினைக்கும் நண்பர்களுக்காகவே இந்த பதிவு....


சில வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம்  மானூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தை தூர் வார வேண்டி ஒரு போராட்டம் நடந்தது. ஊரே குடும்பத்துடன் குளத்தில் குடியேறி பத்து நாட்களுக்கு மேல் ஒரு பெரிய போராட்டம் நடத்தினர்.பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய குளம் அது.மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட போராட்டம் அது.

இப்போது பெய்த புயல் மழையில் அந்த குளம் நிரம்பி தழும்பும் என்று நினைப்பீர்கள்.ஆனால் சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.
பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வதாரமான ஒரு குளத்தை ஏன் இந்த மக்களால் மீட்டெடுக்க முடியவில்லை ?

விவசாயம் காக்க முடிந்த அளவு உதவி செய்வோம் விவசாய நண்பர்களுக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.