25/03/2018

குற்றம் 23 – இலுமினாட்டி அரசியல்...


சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களை நான் பொறுமையாக கவனித்து வருகிறேன், அதற்கு ஒரே காரணம் உலகை ஆளும் இலுமினாட்டிகள் தங்களது ரகசியங்களை தற்போதைக்கு திரைப்படங்கள் மூலமே பரிமாறிக் கொள்கிறார்கள்.

தற்சமையம் இலுமினாட்டிகளின் பார்வை தமிழர்கள் மீது தான் உள்ளது என்பதை சமீபத்திய தமிழக அரசியல், பிரச்சனைகள் மூலம் அறியலாம்.

தமிழ் திரைத்துறை தற்சமையம் நிறைய இலுமினாட்டிகளின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

அதில் ஒன்று தான் இந்த குற்றம் 23.

இந்தப்படம் முழுக்க முழுக்க இலுமினாட்டிகளின் திரைக்கதை தான் , தயாரிப்பும் அவர்களே , தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டுமே வெள்ளை குதிரைகளை இலட்சனையாக கொண்டுள்ளன.

ஜெயலலிதா கட்டிய குதிரை சிலை , மற்றும் தமிழ்நாடு குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் இலட்சனை என்ன என்பதையும் இங்கே பொருத்தி பாருங்கள். எல்லாம் வெள்ளை குதிரை தான்.. ஆம் குதிரை வணிகத்தின் சின்னம்..

சரி படத்திற்கு வருவோம், கதாநாயகனின் முதல் காட்சியில் அவன் அணிந்து வரும் சட்டையில் G என்ற ஆங்கில எழுத்து உள்ளது , இது இலுமினாட்டிகளின் எடுபுடி வேலைகளை செய்யும் ப்ரீ மேசன்களின் சின்னம்.  சரி இது ஒரு எதார்த்தமான ஒன்று என்று எடுத்துக் கொள்வோம்...

படத்தின் இடைவெளியில் கதாநாயகனின் ஒரு கண்ணை மட்டும் காட்டி முடிப்பது , பேப்பர் வெயிட் என்ற பெயரில் இலுமினாட்டிகளின் பிரமிட் (pyramid)  சின்னத்தை வேண்டும் என்றே காட்டுவது என பல இலுமினாட்டி அடையாளங்கள் இந்த படத்தில் உள்ளது...

மற்றும் படத்தின் வில்லனுக்கு நீல கண் , தமிழகத்தில் யாருக்குமே அமையாத ஒரு மரபியல் கூறு .... நீலகண் கொண்ட வில்லன்..

சரி படத்தின் பெயருக்கு வருவோமே .. இந்த 23 என்பது இலுமினட்டிகளுக்கு ஒரு வேண்டப்பட்ட எண்.. இது மனித கிரோமோசோம்களின் எண்ணிக்கையை குறித்தாலும் , இந்த படத்திற்கு இந்த பெயர் வைக்க இன்னும் நிறைய தொடர்பு உண்டு. உலக அளவில் 23 என்ற எண்ணில் பெயர்கொண்டு நிறைய திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இல்லுமினாட்டிகளின் ஒரு மாபெரும் சதித்திட்டமான 911 தாக்குதல் 2001 ஆம் ஆண்டு நடந்தது , 9+11+2+0+0+1= 23 , உலக புவி மையஅச்சு 23 டிகிரி தான்.. இன்னும் பல.. இவைகள் 23 ஐ ஒரு முக்கிய எண் ஆக்குகிறது , எனிக்மா 23 (enigma 23) என்று இணையத்தில் தேடி பாருங்கள் உங்களுக்கே இந்த எண்ணின் ரகசியங்கள் புரியவரும்.

தமிழகத்தில்  உள்ள அணைத்து ஆண்களையும் , ஆண்மையற்றவர்களாக மாற்றிவிட்டு , குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் அப்படியே பெத்துக்கிட்டாலும் அது உன் குழந்தையாக  இருக்க நாங்க விட மாட்டோம், உனக்கு குழந்தை வேணும்னா போய் தத்து எடுத்துக்கோ .. இவ்வளவு தான் இந்த படத்தில் இலுமினாட்டி தமிழக ஆண்களுக்கு சொல்லும் மறைமுக உளவியல் கருத்து..

பெண்ணே உனக்கு குழந்தை இல்லைனா யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க , உனக்கு குழந்தை பெத்துக்க ஆண் தேவையில்லை ,உனக்கு எப்படி பார்த்தாலும் அது வாரிசு தானே ?

அதனால் குழந்தை இல்லை என்று வருத்தப்பட வேண்டாம் , எப்படியும் குழந்தை வேண்டும் என்றால் அப்பன் யாருன்னு தெரியாத குழந்தைய பெத்துக்கோ .. இவ்ளோ தான் தமிழக பெண்களுக்கு இப்படம் சொல்லும் மறைமுக உளவியல் கருத்து .

மற்றும் குழந்தை வளர்ப்பு என்பது ஏதோ மிகக் கடினமான செயல் போல படத்தில் இரண்டு மூன்று இடங்களில் வழிந்து சொல்லப்படுகிறது , இதுவும் ஒரு உளவியல் தாக்குதல் .. மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வரனுமாம் ..

இவர்கள் தமிழ் நாட்டில் மட்டும் மது கடைகளை அரசாங்கத்தை வைத்து திறக்க விட்டார்களோ , எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக கொடுத்தார்களோ .... அப்போவே தெரியும் தமிழக ஆண்களை ஆண்மையற்றவர்களாக மாற்ற திட்டம் தீட்டிவிட்டார்கள் என்று.

இயற்கையில் ஒரு உயிரின் அடிப்படை நோக்கம் தனது மரபை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துதல் ஆகும்.

அதற்க்கு ஒரு சில நிபந்தனைகளோடு இயற்கை வளிமையான மரபுகளை மட்டுமே அடுத்தத் தலைமுறைக்கு கடத்தும் , இதற்கு பெயர் இயற்க்கை தேர்வு  (natural selection ).

இயற்கைதேர்வுக்கு முரணாக ஒரு சில பண்புகளை மட்டுமே செயற்கையாக கடத்தி அடுத்தத் தலைமுறையை உருவாக்குதல் தேர்ந்தெடுத்த வளர்ப்பு  (selective breeding).

அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் மனிதன் பயன்படுத்தும் அத்துணை வீட்டு விளங்குகளும் இவ்வாரான தேர்ந்தெடுத்த வளர்ப்பு  மூலம் உருவாக்கப்பட்டதே..

இவ்வாறு உருவாக்கப்பட்ட விளங்குகள் மனிதனின் துணை இன்றி மடிந்துவிடும்.
காரணம் அவைகள் மனிதன் உருவாக்கிய அடிமை இனங்கள்.

இப்போ மனிதனையே தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் உருவாக்க திட்டமிட்டு நடைமுறை படுத்தியும் வருகிறார்கள் செயற்கை கருத்தரிப்புமுறை மூலம்.

இதனால் உருவாகும் அடுத்தத் தலைமுறை விடுதலை சிந்தனை அற்ற அடிமை இனமாக உருவாக்கப்படுவார்கள்.

மனிதனின் மரபணு (genome) முழுமையாக கண்டறியப்பட்டாகி விட்டது, இதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடல்கூறு , மன கூறு இரண்டையுமே தீர்மானிக்க முடியும். உடம்பு சரி மனம் எப்படி என்கிறீர்களா ?

உலகில் பல வகை நாய்கள் உண்டு அதில் வேட்டைக்கு , கோவத்துக்கு , துனிவுக்கு , மோப்பசக்திக்கு , அன்புக்கு , அறிவுக்கு என்று பல்வேறு வகைகள் தனித்தனியாக மனிதன் முன்பே உருவாக்கி உள்ளான் . இதுவும் தேர்ந்தெடுத்த வளர்ப்பு மூலம் தான்.

இதே முறை மனிதர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படும். அதற்கு பெயர் யூஜெனிக்ஸ் (Eugenics), மேலும் தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடவும் .

இதன்மூலம் போர்வீரன், அறிவாளி , கூலி , எஜமானன் என்று நான்கு விதமான மனித குணங்கள் கொண்ட விடுதலை உணர்வற்ற மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்கை இருக்காது .. எல்லாம் சமூக வாழ்க்கை மட்டும் தான்.

இன்னும் நிறைய அபாயங்கள் இதனுள் அடக்கம். இவர்கள் அனைவரையுமே ஒரே ஒரு குடும்பம் (bloodline) ஆளும் .  ஒரு நவீன அறிவியல் வர்ணாஸ்ரமம்..

இவை எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்த முதலில் இயற்கைத் தேர்வை நிறுத்த வேண்டும் , அதற்கு முதல் ஆண்களை மலடாக்க வேண்டும் . குடும்ப வாழ்வியலை சிதைக்க வேண்டும் , அதற்கு பெண்ணியம் பேச வேண்டும் , ஆணுக்கு பெண் எதிரி என்ற சிந்தனையை பெண்ணிற்கு புகுத்த வேண்டும் .இப்படி அவர்கள் இலட்சியத்தை அடைய நிறைய படிநிலைகள் உண்டு..

தமிழர்களை இந்த இயற்கை தான் காக்க வேண்டும்.

தமிழக ஆண்களே மது குடிப்பதை முதலில் நிறுத்தவும் . சிந்திக்க ஆரம்பிக்கவும்.. போர் காலம் நெருங்கி விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.